வாணியம்பாடி. செப்.13 – திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே திம்மாம்பேட்டை அடுத்த புல்லூர் ஊராட்சி பள்ளத்தூர் ஆரம்ப பள்ளி சுற்றுசுவரில் வரையப்பட்டிருந்த டாக்டர் அம்பேத்கார் புகைப்படத்தை கருப்புமை பூசி யாரே அவமரியாதை செய்து இருந்தனர். விரைந்து சென்ற காவல்துறையினர் கருப்பு மையை நீக்கி தற்போது புதுவண்ணம் பூசப்பட்டது. இதுகுறித்து புகாரின்பேரில் மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
Category:
செய்திகள்
பல நட்சத்திர (Delta Orionis) நிறமாலையை ஆராய்ந்த போது விண்மீன்களிடை ஊடகம் இருப்பதை கண்டறிந்த யோகான்னசு பிரான்சு ஹார்ட்மேன் நினைவு தினம் இன்று (செப்டம்பர் 13,1936).
by mohan
written by mohan
யோகான்னசு பிரான்சு ஹார்ட்மேன் ஜனவரி 11, 1865ல் ஜெர்மனியில் பிறந்தார். ஹார்ட்மேன் ஒரு ஜெர்மானிய இயற்பியலாளரும் வானியலாளரும் ஆவார். 1904ல் பல நட்சத்திர டெல்ட்டா ஓரியானிசின் (Delta Orionis) நிறமாலையை ஆராய்ந்த போது கால்சியம் வரிகளைத் தவிர மற்ற அனைத்து வரிகளும் இடம்பெயர்வதைக் கண்டார். இது விண்மீன்களிடை ஊடகம் ஒன்று நிலவுவதைக் குறிக்கிறது எனக் கூறினார்.
அர்ஜென்டினாவின் லா பிளாட்டா வானியல் ஆய்வகத்தின் இயக்குநராக நவம்பர் 1922 முதல் மே 1934வரை இருந்தார். அப்போது இவர் வானியற்பியலில் வான்காணகப் பணிகளை வழிநடத்தினார். இவர் மூன்று சிறுகோள்களைக் கண்டுபிடித்தார். சிறுகோள்கள் 965 ஆஞ்செலிகா (நவம்பர் 4, 1921), 1029 லா பிலாத்தா (ஏப்ரல் 28, 1924), 1254 எர்ஃபோர்டியா (மே 10, 1932) ஆகிய மூன்று சிறுகோள்களைக் கண்டுபிடித்தார். இலீப்சிக் பல்கலைக்கழகத்தில் நிலா மறைப்புகளைப் (சந்திர கிரகணம்) பற்றி ஆய்வு செய்து லீப்ஜிக் பல்கலைக்கழகத்தில் 1891ல் முனைவர் பட்டம் பெற்றார்.
ஓரியனின் பெல்ட்டின் மூன்று நட்சத்திரங்களில் மேற்கு திசையில் மிண்டகா உள்ளது. இது வானத்தில் பிரகாசமான நட்சத்திரங்களில் ஒன்றான கண்ணுக்கு எளிதில் தெரியும், இது பழங்காலத்திலிருந்தே அறியப்படுகிறது.1900 ஆம் ஆண்டில் பாரிஸ் ஆய்வகத்தில் ஹென்றி-அலெக்ஸாண்ட்ரே டெஸ்லாண்ட்ரெஸ் எடுத்த ரேடியல் திசைவேக அளவீடுகள், மின்தாக்கா ஒரு மாறுபட்ட ரேடியல் திசைவேகத்தைக் கொண்டிருப்பதைக் காட்டியது. எனவே இது ஒரு ஸ்பெக்ட்ரோஸ்கோபிக் பைனரி ஆகும்.
1904 ஆம் ஆண்டில் போட்ஸ்டாம் ஆய்வகத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத் தகடுகளைப் பயன்படுத்தி ஜோகன்னஸ் ஃபிரான்ஸ் ஹார்ட்மேன் சுற்றுப்பாதை காலம் 5.7 நாட்கள் என்பதைக் காட்டியபோது, அவரது ஆரம்ப சுற்றுப்பாதை கால மதிப்பீடு 1.92 நாட்கள் எனக் காட்டப்பட்டது. நட்சத்திர நிறமாலையில் 393.4 நானோமீட்டரில் உள்ள கால்சியம் K வரி நட்சத்திரத்தின் சுற்றுப்பாதை இயக்கம் காரணமாக கோடுகளின் குறிப்பிட்ட இடப்பெயர்வுகளில் பங்கெடுக்கவில்லை என்பதையும் ஹார்ட்மேன் கவனித்தார். மேலும் மிண்டகாவுக்கு பார்வை வரிசையில் ஒரு மேகம் கால்சியம் இருப்பதைக் கண்டறிந்தது. இது விண்மீன் ஊடகத்தின் முதல் கண்டறிதல் ஆகும்.
விண்மீன்களிடை ஊடகம் இருப்பதை கண்டறிந்த யோகான்னசு பிரான்சு ஹார்ட்மேன் செப்டம்பர் 13,1936ல் தனது 71வது அகவையில் கோட்டிங்கன் ஜெர்மனியில் இவ்வுலகை விட்டு பிரிந்தார். சந்திரனின் வெகு தொலைவில் உள்ள சந்திர பள்ளம் ஹார்ட்மேன் குழிப்பள்ளம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. தொலைநோக்கியைக் குவியவிக்கும் கருவி ஒன்று ஆர்ட்மேன் மறை என்று பெயரிடப்பட்டுள்ளது
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
செங்கத்தில் மத்திய அரசை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் .
by mohan
written by mohan
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் புதிய பேருந்து நிலையம் அருகில் கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் தாலுக்கா செயலாளர் இலட்சுமணன் தலைமை நடைபெற்றதுதிரிபுரா மாநிலத்தில் பல்வேறு இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகங்கள் தீயிட்டுக் கொளுத்தியும் முன்னணி கட்சி தலைவர்களை கடுமையாக தாக்கியுள்ளனரஇதில் தாக்குதல் நடத்திய குண்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோஷங்கள் எழுப்பினர்…இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயற்குழு உறுப்பினர் தோழர் வீரபத்திரன் கலந்துகொண்டு கண்டன உரை ஆற்றினார்கள்.புரட்சி நடராஜன்,விவசாய சங்கம் தாலுக்கா செயலாளர் காமராஜ்,டைஃபி தாலுக்கா செயலாளர் சி.எம்.பிரகாஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றினார்கள்…
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
உசிலம்பட்டி பகுதியில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்ப்பட்டதால் பொதுமக்கள் திருப்பி அனுப்பபட்டனர்.
by mohan
written by mohan
குறைந்திருந்த கொரோனா பரவலின் தாக்கம் தமிழகத்தில் மீண்டும் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து அரசு கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் தீவிரம் காட்டி வருகின்றது.இதன்படி இன்று தமிழகத்தில் இன்று சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.மதுரை மாவட்டம் உசிலம்பட்டிப் பகுதியிலுள்ள அனைத்து பள்ளிகள் கல்லூரிகள் சுகாதார மையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.பொதுமக்கள் காலை முதலே ஆர்வத்துடன் வந்து கொரோனா தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.ஆனால் பல இடங்களில் கொரோனா தடுப்பூசி குறைந்த அளவே வந்துள்ளதால் தடுப்பூசி விரைவில் தீர்ந்து விட்டன.உசிலம்பட்டி மேலப்புதூர் முத்துப்பாண்டிபட்டி மாதரை ஆகிய கிராமங்களி;ல தடுப்பூசி போடவந்தவர்கள் திருப்பி அனுப்பபட்டனர்.இதனால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.ஒவ்வொரு சிற்ப்பு முகாமிலும் 60 முதல் 70 நபர்கள் வரை தடுப்பூசி செலுத்தப்பட்டதாகவும் மற்றவர்கள் திருப்பி அனுப்பபட்டதாகவும் கூறப்படுகிறது.ஒரு சில முகாம்களில் தடுப்பூசி மீண்டும் கொண்டு வரப்படும் எனக் கூறியதால் பொதுமக்கள் காத்துக்கிடந்தனர்.
உசிலை சிந்தனியா
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
வேலம்மாள் பொறியியல் கல்லூரி மற்றும் வேலம்மாள் பள்ளியில் நீட் தேர்விற்காக பெற்றோருடன் வந்த மாணவர்கள்.
by mohan
written by mohan
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா திருப்பரங்குன்றம் அருகே உள்ள விரகனூர் வேலம்மாள் பொறியியல் கல்லூரி மற்றும்வேலம்மாள் வித்யாலயா பள்ளியில்நீட் தேர்வுக்கான தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது .பல்வேறு ஊர்களில் இருந்து வந்த மாணவர்கள், மாணவிகள் காலை 8 மணி முதல் பள்ளி மற்றும் பொறியியல் கல்லூரிக்கு வந்தனர்.ஆனால் காலை 11.30 மணி முதல் தேர்வு எழுதும் மையத்திற்குள் அனுமதி என்பதால் அவர்கள் வெளியிலேயே காத்து இருக்க வைக்கப்பட்டனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா திருப்பரங்குன்றம் அருகே உள்ள ஏர்குடி அச்சம்பத்து ஊராட்சியில் கொரான இல்லாத மதுரை உருவாக்குவோம் என்ற திட்டத்தின் கீழ் சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்றது.இதில் திருப்பரங்குன்றம் வட்டார மருத்துவர் சிவக்குமார் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் தங்கசாமி மற்றும் அச்சம்பத்து ஊராட்சிமன்ற தலைவர் முத்துலட்சுமி இருளப்பன், துணைத்தலைவர் வனிதா சுரேந்திரன் மற்றும் சுகாதாரத்துறை ஊழியர்கள் கலந்து கொண்டனர் இதில் 200க்கும் மேற்பட்டோர் களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.முன்னதாக தடுப்பூசி போட வந்தவர்களுக்கு சாமியானா பந்தல் அமைத்து சமூக இடைவெளியுடன் தடுப்பூசி போடப்பட்டது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இன்று ஒரே நாளில் இரண்டு லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு அமைச்சர் பேட்டி.
by mohan
written by mohan
கிராமங்களில் விழிப்புணர்வு இல்லாததால், இலக்கு எட்டப்படும் என கேள்வி.கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம், மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது.இந்த சிறப்பு முகாமில் ,2 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடுவது என இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.இன்று காலை, மதுரை மாவட்டம் கடச்சநேந்தல் பகுதியில் உள்ள சிறப்பு முகாமில், வணிகவரித் துறை மற்றும் பத்திரப்பதிவு அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார் .பின்னர், செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் மூன்றாவது அலை வருவதற்கு முன்னதாகவே, கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்று வருகிறது .இன்று ஒரு நாள் மட்டும் இரண்டு லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.மதுரை மாவட்டத்தில் நடைபெறும் பணிகளை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் ஆய்வு செய்கிறார். தடுப்பூசி போடுவது குறித்து ஊடகங்கள் வாயிலாகவும் விளம்பரங்கள் அதிகாரிகள் மூலமாக செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இரண்டாவது அலை வரும் பொழுது மிகப் பெரிய பாதிப்பு ஏற்படுவது போல சித்தரிக்கப்பட்டது. அதனை உடனடியாக பத்து நாட்களுக்குள் முழுவதுமாக கட்டுப்படுத்தப்பட்டது. அதில் மாவட்ட நிர்வாகம் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்ததன் விளைவாக பாதிப்புகள் குறைந்தது. அதைப்போல, தற்போது 3-வது மூன்றாவது அலை வருவதாக கூறப்படுவதை தடுக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.அது முழுவதுமாக கட்டுப்படுத்தப்படும்.மதுரை மாவட்டத்தைப் பொறுத்தவரையில் இதுவரையில் பதினோரு லட்சம் பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. இன்று 2 லட்சம் பேருக்கு தடுப்பூசி முகாம் தடுப்பூசி போடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. என்றார் கிராமப்புறங்களில், பொது மக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லை பூசி போடு மையங்களில் வெறிச்சோடிக் கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என செய்தியாளர் கேள்விக்கு பதில் அளித்த போது, கிராமப்புறங்களில் முழுவதுமாக விளம்பரப் படுத்தப்பட்டுள்ளது ஆனாலும், பொதுமக்களில் வராது என்ற அச்சம் குறைந்துள்ளதால், மக்களிடம் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பஞ்சாயத்துகள் மூலமாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.கிராமங்களில், முழுநேரமாக அதிகாரிகள் மற்றும் அரசு பிரதிநிதிகள் மூலமாக தடுப்பூசி போடுவதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். கொரோனா தடுப்பூசி தடுப்பு ஊசி போடாதவர்களை வீடு தேடி சென்று தடுப்பூசி போடப்படும் என்றார். கிராமப்புறங்களில் மூன்றாவது அலை குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாததால், தடுப்பூசி மையங்களில் பொதுமக்கள் இல்லாத நிலைதான் உள்ளது. எனவே மதுரை மாவட்ட நிர்வாகத்தின் இலக்கு நிறைவேறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதுஎன்றார் மூர்த்தி.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் “தடுப்பூசி” தட்டுபாடு! பொது மக்கள் அவதி.!
by mohan
written by mohan
தமிழகத்தில் கொரோனா மூன்றாவது அலையை தடுக்கும் விதமாக தமிழகம் முழுவதும் இன்று மாபெரும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. அந்தந்த பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என்று 40 ஆயிரம் மையங்களில் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. இந்த மையங்கள் மூலமாக 18 வயதிற்கு மேற்பட்ட 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.பல மாவட்டங்களில் தடுப்பூசி செலுத்தும் நபர்களுக்கு குலுக்கல் முறையில் வித்தியாசமான பரிசுகளும் கொடுக்கப்படும் என அறிவிப்பு செய்யப்பட்டது.இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு சிறப்பு முகாம்களில் தடுப்பூசி போடுவதற்காக மக்கள் அலை மோதினர்.ஆனால் ஒவ்வொரு முகாம்களிலிலும் அதிகபட்சமாக 55 ஊசிகள் மட்டுமே கையிருப்பு வைத்திருந்தனர்.ஆகையால் தடுப்பூசி விரைவில் தீர்ந்து விட்ட நிலையில் ஆர்வமுடன் வருகை தந்த பொதுமக்கள் மத்தியில் மாபெரும் அதிருப்தியை உருவாக்கியது.இது சம்பந்தமாக பொதுமக்கள் கூறியதாவது;மிகுந்த ஆர்வமுடன் குடும்பம் குடும்பமாக வந்து தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்று முகாமுக்கு வந்திருந்தோம் ஆனால் சிறிது நேரத்திலேயே தடுப்பூசி தீர்ந்து விட்டது கொஞ்ச நேரம் காத்திருங்கள் வந்து விடும் என கூறினார்கள். ஆனால் கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம் ஆகிவிட்டது இன்னும் சரியான முறையில் பதில் கிடைக்கவில்லை ஆகையால் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உடனடியாக தட்டுபாடு ஏற்பட்டுள்ள முகாம்களுக்கு தடுப்பூசி கிடைக்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம் என கூறியுள்ளனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பாரதியின் திருமண நாள் அரசு விழாவாக அறிவிக்கப்படும்; நம்பிக்கை தெரிவித்த தென்காசி எம்எல்ஏ.
by mohan
written by mohan
சுரண்டை காங்கிரஸ் அலுவலகத்தில் பாரதியார் நினைவு தின நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தென்காசி எம்எல்ஏ பழனி நாடார் பாரதியார் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.பின்னர் அவர் பேசுகையில், பாரதியார் செல்லம்மாள் திருமண நாள் அரசு விழாவாக அறிவிக்கப்படும்.தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் நடவடிக்கை மேற்கொள்வார் என நம்பிக்கை தெரிவித்தார். தென்காசி எம்எல்ஏ தென்காசி மாவட்டம் சுரண்டை நகர காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் பாரதியார் நினைவு தின விழா நடந்தது. விழாவிற்கு சுரண்டை நகர காங்கிரஸ் தலைவர் எஸ்கேடி ஜெயபால் தலைமை வகித்தார். விழாவில் தென்காசி எம்எல்ஏவும் தென்காசி மாவட்ட காங்கிரஸ் தலைவருமாகிய எஸ். பழனி நாடார் அலங்கரிப்பட்ட பாரதியார் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து பேசிய எம்எல்ஏ தமிழக முதல்வர் ஸ்டாலின் தேசிய தலைவர்களின் நினைவுகளை போற்றும் வகையில் செயல்பட்டு வருகிறார். பாட்டு கவிஞர் பாரதியார் செல்லம்மாள் திருமண நாளை அரசு விழாவாக அறிவித்து செல்லம்மாள் வீடு அமைந்துள்ள கடையத்தில் அதனை கொண்டாட வேண்டும். கடையத்தில் பாரதியார் சிலை அமைக்க தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று அமைப்பதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். பாரதியார் சிலையை கடையத்தில் விரைவில் அமைக்கவும் தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் வலியுறுத்துவேன். முதல்வர் அதனை ஏற்பாடு செய்வார் என நம்பிக்கை தெரிவித்தார். இந்த விழாவில் மாநில பேச்சாளர் ஆலடி சங்கரையா பழனி நாடார், பால் (எ) சண்முகவேல், மேலநீலீதநல்லூர் வட்டார தலைவர் முருகையா, சமுத்திரம், ஊடக பிரிவு சிங்கராஜ், இளைஞர் காங்கிரஸ் அமுதா சந்திரன், தபேந்திரன், சிறுபான்மை காங்கிரஸ் சாலமோன், கந்தையா மகளிர் காங்கிரஸ் சேர்மகனி, தேவி, சமுத்திர பாண்டி, டுவின்ஸ் கோபால், தாயார் தோப்பு ராமர், கேடிஆர் மகாராஜா, பிரபாகரன், தெய்வேந்திரன், செல்வம், அரவிந்த், ஆட்டோ செல்வராஜ், கோயில் பிச்சை, மகேந்திரன், அருணாசலம், விஜயன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் இன்று (12/09/2021) நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக கீழக்கரையில் 18 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது.
இம்முகாமெ சதக்கத்துல் ஜாரியா நடுநிலைப் பள்ளியில் சிறப்பு முகாமை துணை ஆட்சியாளர் அன்னம்மாள் தொடங்கி வைத்தார். இதில் கீழக்கரை தாலுகா தாசில்தார் முருகேசன், தேர்தல் பிரிவு துணை தாசில்தார் கோகுல்நாத், வருவாய் ஆய்வாளர் பார்கவி, கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் பல தொண்டு நிறுவன உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை மாவட்டம்,சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட, நரியம்பட்டி கிராமத்தில் பேச்சியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இவ்விழாவை முன்னிட்டு, இரண்டு நாள் யாக வேள்வி நடைபெற்று, இதைத் தொடர்ந்து, நேற்று காலை பெரிய சம்பாதி பிள்ளை பழி கொடுத்த நல்ல பிள்ளை தேவரின் ஏழு வீட்டு வகையறாக்கள் முன்னிலையில், சோழவந்தான் பிரசாத் சர்மா தலைமையில் புனித நீர் குடங்கள் மேளதாளத்துடன் கோவிலை வலம் வந்தனர்.கோவில் கோபுர விமானத்தில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது . பேச்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று மகா அபிஷேகம் நடந்தது. எட்டூர கிராம கமிட்டி தலைவர் ஜெயபால், ஊராட்சி மன்றத் தலைவர் கலியுகநாதன், முன்னாள் ஒன்றியக் கவுன்சிலர் விக்டோரியா பூர்வலிங்கம் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.அன்னதானம் வழங்கப்பட்டது.விக்கிரமங்கலம் ஊராட்சி சுகாதாரப் பணிகள் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகள் ஏழு வீட்டு வகையறாக்கள் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இம்மானுவேல் சேகர் நினைவு தினத்தையொட்டி திமுக சார்பில் உருவப்படத்திற்கு அஞ்சலி.
by mohan
written by mohan
மதுரை மாவட்டம் திருமங்கலம் திமுக தெற்கு மாவட்டம் சார்பில் தெற்கு மாவட்ட செயலாளர் மு.மணிமாறன் மற்றும் நகர செயலாளர் மூ.சி. சோ. முருகன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முத்துராமலிங்கம் கப்பலூர் சந்திரன் திருப்பரங்குன்றம் செல்வம் செயற்குழு உறுப்பினர் சிவமுருகன் நகர இளைஞரணி முத்துக்குமார் தொழில் நுட்ப அணி பாச பிரபு ஆகியோர் கலந்து இன்று இம்மானுவேல் சேகர் நினைவு தினத்தையொட்டி உருவப்படத்திற்கு அஞ்சலி செய்து மேலும் பாரதியார் நினைவு தினத்தை முன்னிட்டு அவருடைய உருவப்படத்திற்கு மாலை மரியாதை செய்து அஞ்சலி செலுத்தினர்..
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பாரதியார் நூற்றாண்டு விழாவை முன்னிட்டுஅவரது திரு உருவச் சிலைக்கு அமைச்சர், ஆட்சியர் மரியாதை செலுத்தினர்.மகாகவி பாரதியார் அவர்களின் நூற்றாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இன்று நாடு முழுவதும் அவரது பிறந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.மதுரையில் பாரதியார் ஆசிரியராக பணியாற்றிய சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் உள்ள அவரது திருஉருவச் சிலைக்கு வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர், மாநகராட்சி ஆணையாளர் கார்த்திகேயன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மகாகவி பாரதியார் பிறந்த நாளை நூற்றாண்டு விழாவாக அறிவித்து 37 லட்சம் புத்தகம் வழங்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த தமிழக பாஜக தலைவர்.
by mohan
written by mohan
தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்ட ரவி அவர்கள் நியமனத்தில் எந்தவித உள்நோக்கமும் இல்லை இதற்கு முன்னதாக பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகள் ஆளுநராக பணிபுரிந்துள்ளனர்பாஜக தலைவர் அண்ணாமலைஇம்மானுவேல் சேகரன் நினைவு தினத்திற்கு அஞ்சலி செலுத்திய சென்னையில் இருந்து மதுரை வந்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மதுரை மாநிலத்தில் செய்தியாளர் சந்திப்புஇன்று முக்கிய தலைவர்களின் நினைவு நாள்மகாகவி பாரதியார் மற்றும் இம்மானுவேல் சேகரன் நினைவு நாள் கொண்டாடப்படுகிறது இதற்காக மத்திய நிதியமைச்சர் நாளை ஓட்டப்பிடாரம் செல்கிறார் அதேபோல் இன்று மத்திய இணையமைச்சர் முருகன் மற்றும் நான் ஆகியோர் இமானுவேல்சேகரன் நினைவு தினத்திற்கு செல்கிறோம்சிஐஏ வேளாண்மை சட்டத்திற்கு எதிராக தமிழகசட்டமன்றத்தில்த்தில் நிறைவேற்றியது குறித்து கேள்விக்குவேளாண்மை சட்டங்கள் குறித்து யாரும் இதுவரை பாதிப்படைந்த கூறவில்லை தமிழகத்தில் மண்டி வைத்து யாகம் செய்கின்றனர் கேரளாவில் அந்த மாதிரி எதுவும் கிடையாது பீகாரில் மண்டி வியாபாரம் செய்கின்றார்கள் ஆகவே அவர்கள் பாதிப்படைகிறார்கள் என்பதற்காக வேளாண்மை சட்டங்களை எதிர்க்கிறார்கள் இதுகுறித்து யாரும் பாதிப்படைந்து என்று முதல்வரும் கூறுகிறாராஇதேபோல் சிஐஏ சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த எந்தவித முகாந்திரமும் இல்லை ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் வங்காள தேசம் போன்ற நாடுகளில் 2014இல் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே பொருந்தும் குறிப்பாக அங்கு சிறுபான்மை இனத்தவர்களுக்கு மட்டுமே இது பொருந்தும் இதில் எந்த முஸ்லிம் யாரும் பாதிக்கப்பட்டார்கள் என்று கூற முடியுமாதமிழக ஆளுநராக பொறுப்பேற்றுள்ள ரவி அவர்கள் குறித்த கேள்விக்குகாங்கிரஸ் தலைவர் அழகிரி அவர்கள் என்ன கூறுவதென்று தெரியாமல் கூறுகின்றார் இதற்கு முன்னதாக பல்வேறு மாநிலங்களில் ஐஏஎஸ் ஐபிஎஸ் ஆக பணி புரிந்தவர்கள் ஆளுநராக பதவி ஏற்றுள்ளனர் கிரண்பேடியார் முதல்வராக இருக்கும் நிதீஷ் குமார் ஐஏஎஸ் தான்.ரவி அவர்கள் பீகாரில் பிறந்து கேரளாவில் ஐபிஎஸ் அதிகாரியாக பணிபுரிந்து பின்னர் ஓய்வுபின் நாகாலாந்து மாநிலத்தில் ஆளுநராக பணியாற்றியவர் தமிழக கவர்னராக இருந்த பன்வாரிலால் புரோகித் 5 ஆண்டு பணி முடிந்தபின் ரவி அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார் இதற்கு எந்தவித அரசியல் உள்நோக்கமும் கிடையாதுஅதிமுக பாஜகவுடன் உறவுகள் எப்படி உள்ளது உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி குறித்த கேள்விக்குஅதிமுகவுடன் பாஜக உறவு அண்ணன் தம்பி போல் உள்ளது தற்பொழுது கூட முன்னாள் துணை முதல்வர் ஓபிஎஸ் அவர்களின் இல்லத்திற்கு சென்று அவரது மனைவி இறந்த துக்க விசயம் கேள்விப்பட்டு மத்திய இணையமைச்சர் வேல்முருகன் சென்று வந்துள்ளார்தேர்தல் தேதி அறிவிக்கப்படும் அதன் பின்னர் பேசலாம் ஆனாலும் அதிமுக பாஜக உறவு அண்ணன் தம்பி போல் தொடர்கிறது என அண்ணாமலை கூறினார்..
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை மாநகராட்சிவைகை ஆற்றின் கரைகளில் சங்க பூங்காமதுரை நாடாளுமன்ற உறுப்பினர் தகவல்.
by mohan
written by mohan
மதுரை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வைகை ஆற்றின் இருகரைகளிலும் நடைபெற்று வரும் சாலை விரிவாக்கப்பணிகள், பூங்கா அமைக்கும் பணிகள், தடுப்பு சுவர் கட்டும் பணிகள் உள்ளிட்ட பணிகளை ஆணையாளர் மரு.கா.ப.கார்த்திகேயன், தலைமையில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர்சு.வெங்கடேசன் ஆய்வு மேற்கொண்டார்.நாடாளுமன்ற உறுப்பினர், தெரிவித்ததாவது :மதுரை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வைகை ஆற்றின் இருகரைகளிலும் அமைக்கப்பட்டு வரும் சாலை பணிகள் ஆய்வு மேற்கொள்ளப் பட்டுள்ளது. குறிப்பாக, வருகின்ற 17.09.2021 ஸ்மார்ட் சிட்டியின் ஆலேசானைக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. அதற்கு முன்பாக நடைபெற்று வரும் பணிகளை கள ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.வைகை ஆற்றின் கரைகளில் இரண்டு இடங்களில் பூங்காக்கள் அமைப்பதற்கு திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.இந்த பூங்காவில், சங்க இலக்கியத்தில் பரிபாடலை கொண்டு ஒன்பது பாடல்களை அடிப்படையாக கொண்டு சங்க பூங்காவாக அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மதுரையின் வரலாற்றை குறிக்கும் ஓவியங்கள் வரைவதற்கு இடவசதி உள்ள இடங்களில் சங்க இலக்கிய ஓவியங்கள் வரைவதற்கும் மதுரையின் பாரம்பரியத்தை நினைவுகூறும் வகையில் இந்த பூங்கா அமைக்கப்படும். அதே போல, பூங்காவில் உள்பகுதியில் உடற்பயிற்சி கூடம் அமைப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. இப்பகுதியின் இளைஞர்களின் வசதிக்காக இந்த உடற்பயிற்சி கூடம் அமைக்கப்பட உள்ளது.மேலும், நடைபயிற்சி, சைக்கிளிங், செல்வதற்கும் மற்றும் வண்ண விளக்குகள் அமைப்பது தொடர்பாகவும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், வைகை ஆற்றின் கழிவுநீர் கலப்பதை தடுப்பதற்காக கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.இதனால், கழிவுநீர் கலப்பது முற்றிலும் தடுக்கப்படும் என்றார்.அதனைத் தொடர்ந்து, வைகை ஆற்றின் இருகரைகளில் நடைபெற்று பணிகள், கள்ளழகர்; எழுந்தருளும் ஆண்டாள்புரம் பகுதிகள், குருவிக்காரன் சாலை உயர்மட்ட பாலப் பணிகள் மற்றும் தெப்பக்குளம் பகுதிகளில் உள்ள பூங்காக்கள் பராமரிப்பு பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின் போது, நகரப்பொறியாளர் (பொ)சுகந்தி, செயற் பொறியாளர்கள்அரசு,கருப்பாத்தாள்,சேகர், உதவி செயற்பொறியாளர்ஆரோக்கியசேவியர்,முருகேசபாண்டியன், மக்கள் தொடர்பு அலுவலர்மகேஸ்வரன், உதவிப் பொறியாளர்கள் உட்பட மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை விராட்டிபத்து பகுதியை சேர்ந்தவர் கணேசன் என்பவர் எச். எம். எஸ் காலனி புதுவாழ்வு நகரில் வாட்ச்மேனாக வேலை பார்த்து வருகிறார். அங்கு தனியார் சித்தா மருத்துவமனை கட்டுமானத்திற்காக ஜல்லி, மணல் கொட்டப்பட்டுள்ளது. இது பக்கத்து வீடு வரை பரவியதால் பக்கத்து வீட்டில் வசிக்கும் ஆசாரிகணேசன் வாகனங்களை நிறுத்த முடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.இந்தநிலையில், ஆசாரி கணேசன் மகன் அருண் பிரகாஷ் என்பவர் வாட்ச்மேனாக வேலை பார்த்து வரும் கணேசனிடம் வந்து எங்கள் வீட்டு வாசல் வரை ஏன் ஜல்லி மணல் கொட்டுக்கிறீர்கள், எனக் கேட்டு இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.இதில் ஆத்திரம் அடைந்த அருண் பிரகாஷ் காவலாளியை கீழே தள்ளி தாக்கியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து காவலாளி கணேசன் இதுதொடர்பாக தனது மகன் கௌதமிடம் செல்போன் மூலம் நடந்தவற்றை கூறியுள்ளார்.இதையடுத்து கௌதம், மாட்டுத்தாவணி காய்கறி மார்க்கெட்டில் லோடுமேன் வேலை பார்க்கும் கரிமேடு பகுதியில் உள்ள கண்மாய்க்கரை முனியாண்டி கோவில் தெருவைச் சேர்ந்த செல்லப்பாண்டி மகன் விக்னேஷ் (வயது 22) என்பவர் உள்ளிட்ட சிலரை தனக்கு துணைக்காக சம்பவ இடத்துக்கு வந்து தனது தந்தையை தாக்கியது சம்பந்தமாக தகராறில் ஈடுபட்டுள்ளார்.இதில், ஆத்திரம் அடைந்த அருண் பிரகாஷ் வீட்டில் இருந்த கத்தியால்விக்னேஷ் – ஐசரமாரியாக குத்தியதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.சிகிச்சை பலனின்றி விக்னேஷ் பரிதாபமாக இறந்து விட்டார்.இதுகுறித்து, மதுரை எஸ் எஸ் காலனி போலீசார் வழக்குப் பதிவு செய்து அருண்பிரகாஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
விஜயகாந்த் பூரண நலம் பெற வேண்டி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு விளக்கு பூஜை .
by mohan
written by mohan
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் தளவாய்புரம் அடுத்து உள்ள புனல்வேலி கிராமத்தில் தேமுதிக மாவட்ட செயலாளர் காஜா ஷெரிப் தலைமையில் கேப்டன் விஜயகாந்த் பூரண நலம் பெற வேண்டி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன இதில் ஒரு பகுதியாக 108 விளக்கு பூஜையும் நடைபெற்றன விளக்கு பூஜையில் கலந்து கொண்டார்கள் கேப்டன் விஜயகாந்த் பூரண நலம் பெற்று தீவிர அரசியலில் ஈடுபட வேண்டும் என பிரார்த்தனை செய்தனர் இந்த நிகழ்வில் தேமுதிக நலிவடைந்த தொண்டர்களுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டு கேப்டன் விரைவில் நலம் பெற்று வீடு திரும்ப பிரார்த்தனையில் ஈடுபட்டனர்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
செயற்கை முறையில் புதிய கதிரியக்கத் தனிமங்களை கண்டறிந்து நோபல் பரிசு வென்ற, மேரி கியூரி மகள் ஐரீன் ஜோலியட் கியூரி பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 12, 1897).
by mohan
written by mohan
ஐரீன் ஜோலியட் கியூரி (Irene Joliot-Curie) செப்டம்பர் 12, 1897ல் பிரான்சின் பாரிஸில் பிறந்தார். புகழ்பெற்ற நோபல் தம்பதிகளான மேரி கியூரி மற்றும் பியரி கியூரியின் மகளும் பிரெஞ்சு அறிவியலாளரும் ஆவார். 1906 ஆம் ஆண்டில், ஐரீன் கணிதத்தில் திறமையானவர் என்பது தெளிவாகத் தெரிந்தது. மேலும் அவரது தாயார் பொதுப் பள்ளிக்கு பதிலாக அதில் கவனம் செலுத்தத் தேர்ந்தெடுத்தார். மேரி பல புகழ்பெற்ற பிரெஞ்சு அறிஞர்களுடன் சேர்ந்து, முக்கிய பிரெஞ்சு இயற்பியலாளர் பால் லாங்கேவின் உட்பட கூட்டுறவு ஒன்றை உருவாக்கினார். இதில் பிரான்சில் மிகவும் புகழ்பெற்ற கல்வியாளர்களின் குழந்தைகளாக இருந்த ஒன்பது மாணவர்களின் தனிப்பட்ட கூட்டமும் இருந்தது. ஒவ்வொன்றும் ஒருவருக்கொருவர் அந்தந்த வீடுகளில் கல்வி கற்பதற்கு பங்களித்தன. கூட்டுறவு பாடத்திட்டம் மாறுபட்டது மற்றும் அறிவியல் மற்றும் விஞ்ஞான ஆராய்ச்சியின் கொள்கைகளை மட்டுமல்லாமல் சீன மற்றும் சிற்பம் போன்ற மாறுபட்ட பாடங்களையும் உள்ளடக்கியது. சுய வெளிப்பாடு மற்றும் விளையாட்டுக்கு அதிக முக்கியத்துவம் அளித்தது. ஐரீன் இந்த சூழலில் சுமார் இரண்டு ஆண்டுகள் படித்தார்.
ஐரீன் பதிமூன்று வயதில் இருந்தபோது, அத்தை ப்ரொன்யா (மேரியின் சகோதரி) உடன் கோடைகாலத்தை கழிக்க ஐரேன் மற்றும் அவரது சகோதரி ஆவ் போலந்திற்கு அனுப்பப்பட்டனர். ஐரீனின் கல்வி மிகவும் கடுமையானது. அந்த இடைவெளியின் ஒவ்வொரு நாளும் அவளுக்கு ஒரு ஜெர்மன் மற்றும் முக்கோணவியல் பாடம் இருந்தது. 1914 வரை மத்திய பாரிஸில் உள்ள கொலேஜ் செவிக்னேயில் உயர்நிலைப் பள்ளிக்குச் செல்வதன் மூலம் ஐரீன் மீண்டும் ஒரு மரபுவழி கற்றல் சூழலில் நுழைந்தார். பின்னர் அவர் சோர்போனில் உள்ள அறிவியல் பீடத்திற்குச் சென்றார். 1916 ஆம் ஆண்டு வரை உலகப் போரினால் தனது ஆய்வுகள் தடைபட்டபோது தனது இளங்கலை முடித்தார். ஐரீன் தனது தாயார் மேரி கியூரிக்கு உதவியாளராக உதவுவதற்காக கல்லூரியில் ஒரு நர்சிங் படிப்பை எடுத்தார். அவர் தனது தாயை ஒதுக்கி போர்க்களத்தில் ஒரு செவிலியர் ரேடியோகிராஃபராக தனது பணியைத் தொடங்கினார். ஆனால் சில மாதங்களுக்குப் பிறகு அவர் பெல்ஜியத்தில் ஒரு கதிரியக்க வசதியில் தனியாக இருந்தார்.
கதிரியக்கத்தைப் பயன்படுத்தி உடல்களில் சிறு துண்டுகளை எவ்வாறு கண்டுபிடிப்பது என்று டாக்டர்களுக்குக் கற்றுக் கொடுத்தார். மேலும் உபகரணங்களை எவ்வாறு சரிசெய்வது என்று தானே கற்றுக் கொண்டார். பெல்ஜியத்தில் எக்ஸ்ரே வசதிகளில் உதவி செய்ததற்காக அவர் ஒரு இராணுவ பதக்கத்தைப் பெற்றார். போருக்குப் பிறகு, 1918ல் கணிதம் மற்றும் இயற்பியலில் தனது பட்டப்படிப்பை முடிக்க பாரிஸில் உள்ள சோர்போனுக்கு திரும்பினார். ஐரீன் பின்னர் தனது பெற்றோரால் கட்டப்பட்ட ரேடியம் நிறுவனத்தில் தனது தாயின் உதவியாளராக பணிபுரிந்தார். அவரது முனைவர் பட்ட ஆய்வு பொலோனியத்தின் ஆல்பா சிதைவு, அவரது பெற்றோரால் கண்டுபிடிக்கப்பட்ட உறுப்பு (ரேடியத்துடன் சேர்த்து) மற்றும் மேரியின் பிறந்த நாடான போலந்தின் பெயரிடப்பட்டது. ஐரீன் 1925ல் அறிவியல் மருத்துவரானார்.
1924 ஆம் ஆண்டில் தனது முனைவர் பட்டத்தின் முடிவை நெருங்கியபோது, கதிரியக்க வேதியியல் ஆராய்ச்சிக்குத் தேவையான துல்லியமான ஆய்வக நுட்பங்களை இளம் வேதியியல் பொறியியலாளர் ஃப்ரெடெரிக் ஜோலியட்டுக்கு கற்பிக்க ஐரீன் கியூரியிடம் கேட்கப்பட்டது. பின்னர் அவரை திருமணம் செய்து கொண்டார். 1928 முதல் ஜோலியட்-கியூரி மற்றும் அவரது கணவர் ஃப்ரெடெரிக் ஆகியோர் அணுக்கருக்கள் பற்றிய ஆய்வு முயற்சிகளை இணைத்தனர். 1932 ஆம் ஆண்டில், ஜோலியட்-கியூரி மற்றும் அவரது கணவர் ஃப்ரெடெரிக் ஆகியோர் மேரியின் பொலோனியத்தை முழுமையாக அணுகினர். பாசிட்ரானை அடையாளம் காண காமா கதிர்களைப் பயன்படுத்தி சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அவர்களின் சோதனைகள் பாசிட்ரான் மற்றும் நியூட்ரான் இரண்டையும் அடையாளம் கண்டிருந்தாலும், அவை முடிவுகளின் முக்கியத்துவத்தை விளக்குவதில் தோல்வியுற்றன. கண்டுபிடிப்புகள் பின்னர் முறையே கார்ல் டேவிட் ஆண்டர்சன் மற்றும் ஜேம்ஸ் சாட்விக் ஆகியோரால் கோரப்பட்டன. இந்த கண்டுபிடிப்புகள் உண்மையில் மகத்துவத்தைப் பெற்றிருக்கும், ஜே.ஜே. தாம்சன் 1897ல் எலக்ட்ரானைக் கண்டுபிடித்ததைப் போலவே, அவை இறுதியாக ஜான் டால்டனின் அணுக்களின் மாதிரியை திட கோளத் துகள்களாக மாற்றின.
இருப்பினும், 1933 ஆம் ஆண்டில், நியூட்ரானின் துல்லியமான எடை அளவீட்டை முதன்முதலில் கண்டுபிடித்தவர் ஜோலியட்-கியூரி மற்றும் அவரது கணவர். ஜோலியட்-கியூரிஸ் விஞ்ஞான சமூகத்தில் தங்கள் பெயரைப் பெற தொடர்ந்து முயன்றனர். அவ்வாறு அவர்கள் நடத்திய ஒரு சுவாரஸ்யமான பரிசோதனையிலிருந்து ஒரு புதிய கோட்பாட்டை உருவாக்கினர். அலுமினியத்திற்கு எதிராக ஆல்பா கதிர்களைப் பயன்படுத்துவதற்கான பரிசோதனையின் போது, புரோட்டான்கள் மட்டுமே கண்டறியப்பட்டன. கண்டறிய முடியாத எலக்ட்ரான் மற்றும் பாசிட்ரான் ஜோடியின் அடிப்படையில் புரோட்டான்கள் நியூட்ரான்கள் மற்றும் பாசிட்ரான்களாக மாற்றப்படுவதை அவர்கள் முன்மொழிந்தனர். பின்னர் அக்டோபர் 1933ல், இந்த புதிய கோட்பாடு ஏழாவது சொல்வே மாநாட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. சோல்வே மாநாடு இயற்பியல் மற்றும் வேதியியல் சமூகத்தின் முக்கிய விஞ்ஞானிகளைக் கொண்டிருந்தது. ஐரினும் அவரது கணவரும் தங்கள் கோட்பாட்டையும் முடிவுகளையும் சக விஞ்ஞானிகளுக்கு வழங்கினர். ஆனால் அவர்கள் கலந்துகொண்ட 46 விஞ்ஞானிகளில் பெரும்பாலானவர்களிடமிருந்து விமர்சனங்களைப் பெற்றனர். இருப்பினும் அவர்கள் பின்னர் சர்ச்சைக்குரிய கோட்பாட்டை உருவாக்க முடிந்தது.
1934 ஆம் ஆண்டில், ஜோலியட்-கியூரிஸ் இறுதியாக விஞ்ஞான வரலாற்றில் தங்களின் இடத்தை முத்திரையிட்ட கண்டுபிடிப்பை மேற்கொண்டார். இயற்கையாக நிகழும் கதிரியக்கக் கூறுகளை தனிமைப்படுத்திய மேரி மற்றும் பியர் கியூரி ஆகியோரின் பணியைக் கட்டியெழுப்பிய ஜோலியட்-க்யூரி, ஒரு உறுப்பை மற்றொன்றாக மாற்றுவதற்கான ரசவாதியின் கனவை உணர்ந்தார். போரனில் இருந்து கதிரியக்க நைட்ரஜனை உருவாக்குதல், அலுமினியத்திலிருந்து பாஸ்பரஸின் கதிரியக்க ஐசோடோப்புகள் மற்றும் மெக்னீசியத்திலிருந்து சிலிக்கான், அலுமினியத்தின் இயற்கையான நிலையான ஐசோடோப்பை ஆல்பா துகள்களுடன் (ஹீலியம்) கதிர்வீச்சு செய்வது பாஸ்பரஸின் நிலையற்ற ஐசோடோப்பை உருவாக்குகிறது. 27Al + 4He → 30P + 1n. இந்த முதல் கண்டுபிடிப்பு முறையாக பாசிட்ரான் உமிழ்வு அல்லது பீட்டா சிதைவு என அழைக்கப்படுகிறது. அங்கு கதிரியக்க கருவில் உள்ள ஒரு புரோட்டான் ஒரு நியூட்ரானாக மாறி ஒரு பாசிட்ரான் மற்றும் எலக்ட்ரான் நியூட்ரினோவை வெளியிடுகிறது.
அதற்குள், மருத்துவத்தில் பயன்படுத்த கதிரியக்க பொருட்களின் பயன்பாடு வளர்ந்து வந்தது. இந்த கண்டுபிடிப்பு கதிரியக்க பொருட்கள் விரைவாகவும், மலிவாகவும், ஏராளமாகவும் உருவாக்க அனுமதித்தது. செயற்கை முறையில் புதிய கதிரியக்கத் தனிமங்களை இவரும் இவரது கணவர் பிரெடரிக் ஜோலியட்-கியூரியும் இணைந்து கண்டறிந்து, 1935ஆம் ஆண்டில் வேதியியலுக்கான நோபல் பரிசினை வென்றனர். இதன்மூலம் இன்றுவரை ஒரு குடும்பத்திலிருந்து மிகக்கூடுதலான நோபல் பரிசு வென்ற பெருமை இவர்களது குடும்பத்திற்கு கிட்டியது. ஜோலியட்-கியூரிக்கு அறிவியல் பீடத்தில் பேராசிரியர் பதவி வழங்கப்பட்டது. நோபல் பரிசு வென்ற, மேரி கியூரி மகள் ஐரீன் ஜோலியட் கியூரி மார்ச் 17, 1956ல், தனது 58வது அகவையில் லுகேமியாவால் பாரிஸில் உள்ள கியூரி மருத்துவமனையில் இவ்வுலகை விட்டு பிரிந்தார். இது பொலோனியம் -210 கதிர்வீச்சு காரணமாக இருக்கலாம்.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து சட்ட விழிப்புணர்வு இயக்கம் தீர்மானம்…..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
கீழக்கரை சட்ட விழிப்புணர்வு இயக்கத்தின் பொதுக் குழு கூட்டம் வடக்குத்தெரு சங்க அலுவலகத்தில் சங்கத்தின் தலைவர் வழக்கறிஞர் முஹம்மது சாலிஹ் ஹூசைன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் துணைத் தலைவர் முஸம்மில் இபுறாகீம், செயலாளர் தாஜுல் அமீன், பொருளாளர் ஜாபிர் சுலைமான், இணைச் செயலாளர் அஹமது மிர்சா, மக்கள் செய்தி தொடர்பாளர் முஹம்மது ஹமீது சல்மான்கான் முன்னிலை வகித்தனர் .
இக்கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள் செய்யது மகமூது ரிஃபான், செய்யது ரசீன் அஹமது, சேகு ஜலாலுதீன், சங்க உறுப்பினர்கள் முஹம்மது அயூப்கான், முஹம்மது அசாருதீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
குடியுரிமை திருத்த சட்டத்தினை இரத்து செய்ய வேண்டுமென்பதை வலியுறுத்தி தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய தமிழக முதல்வருக்கும், தமிழக அரசுக்கும், இந்த தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்த தோழமை கட்சியினருக்கும் நன்றி தெரிவித்தும், கீழக்கரையில் போதைப் பொருள்கள் நடமாட்டத்தை ஒழிக்க, மாவட்ட போதை தடுப்பு துறையினர் துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்றும்,கீழக்கரை தாலுகா அரசு பொது மருத்துவமனைக்கு கூடுதல் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பணியமர்த்தவும், கீழக்கரை காவல் நிலையத்தில் கூடுதல் காவலர்கள் நியமனம் செய்ய வேண்டும் என்றும்,. கீழக்கரை நகராட்சி நிர்வாகத்தின் கைவசம் இருக்கும் முகம்மது காசீம் அப்பா தர்ஹா எதிர்புறம் இருக்கும் பழைய உரக் கிடங்கு இடத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி அமைக்க வேண்டும் என்றும் ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திருவண்ணாமலை மாவட்டத்தில் சிறப்பாகப் பணியாற்றிய 13 ஆசிரிய-ஆசிரியைகள் தமிழக அரசு வழங்கும் நல்லாசிரியா் விருதான டாக்டா் ராதாகிருஷ்ணன் விருதுக்கு தோ்வு செய்யப்பட் விருது வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு செங்கம் அடுத்த குப்பநத்தம் அரசினர் உயர்நிலைப் பள்ளியை சேர்ந்த பட்டதாரி ஆசிரியர் தமிழ் கனி, டாக்டா் ராதாகிருஷ்ணன் விருதுக்கு தோ்வு பாராட்டுச் சான்றிதழ், வெள்ளிப் பதக்கம், ரூ.10 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை வழங்கினாா்மாவட்ட வருவாய் அலுவலா் இரா.முத்துக்குமாரசாமி,கூடுதல் ஆட்சியா் மு.பிரதாப், முதன்மைக் கல்வி அலுவலா் (கூடுதல் பொறுப்பு) கோ.கிருஷ்ணப்பிரியா மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்
You must be logged in to post a comment.