திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தனியார் மண்டபத்தில் செங்கம் நகர இரண்டு சக்கர வாகன பழுது நீக்குவோர் நலச் சங்கத்தின் துவக்க விழா தலைவர் சையது பாரூக் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது செயலாளர் ஜெகதீசன் அனைவரையும் வரவேற்று பேசினார். செங்கம் அனைத்து வணிகர் சங்க செயலாளர் சுப்பிரமணி, பொருளாளர் ஆசை முஷிர் , சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் மெஹபூப் பாஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர். துவக்க விழாவில் சிறப்பு விருந்தினராக இரண்டு சக்கர வாகன பழுது நீக்குவோர் கூட்டமைப்பில் மாநில பொதுச்செயலாளர் காரைக்குடி சக்தி மற்றும் மாநில பொருளாளர் திருநாவுக்கரசு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சங்கத்தின் செயல்பாடுகள், குறித்தும் வளர்ச்சி குறித்தும் விளக்கமாக பேசினார். அவர்கள் பேசுகையில் சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் ஒற்றுமையாக இருந்து சங்கத்தை வலுப்படுத்த வேண்டும் திருவண்ணாமலை நகர இரு சக்கர வாகன பழுது பார்ப்போர் நலச் சங்க நிர்வாகிகள், புதிய வாகன விற்பனையாளர்கள், வாகன உதிரிப்பாகங்கள் விற்பனையாளர்கள், லேத் பட்டறை உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். திருவண்ணாமலை மாவட்ட தலைவர் ரமேஷ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். சங்க உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை, மூன்றிலிருந்து ஐந்து லட்சம் வரை வரை விபத்து காப்பீடு, அரசு அனைத்து வகையான சலுகைகள், உதவித்தொகை குறித்து விளக்கமாக கூறப்பட்டுள்ளது. விழாவில் பாரதப் பிரதமர் திறன் மேம்பாட்டு கழகத்தின் சார்பில் தேர்வு எழுதியவர்களுக்கு சங்கத்தின் தலைவர் பாரூக் சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்.200க்கும் மேற்பட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர் முன்னாள் சங்க நிர்வாகி பாலசுப்பிரமணி நன்றி கூறினார்
Category:
செய்திகள்
ராமநாதபுரத்தில் நடந்தஆசிரியர் தின விழாவில் 2 தலைமை ஆசிரியை, ஒரு தலைமை ஆசிரியை உள்பட 9 பேருக்கு கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி)கே.ஜே.பிரவீன் குமார், டாக்டர். ராதாகிருஷ்ணன்விருதுவழங்கினார்.
ராமநாதபுரத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடந்த ஆசிரியர் தின விழாவில் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர்காதர்பாட்சாமுத்துராமலிங்கம்,பரமக்குடிசட்டமன்றஉறுப்பினர்செ.முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 2021-ஆம் ஆண்டிற்கான டாக்டர் ராதாகிருஷ்ணன்விருதை, பாம்பன் அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர்ரவி, ராமநாதபுரம் ராஜா மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் (வரலாறு)சந்தான கிருஷ்ணன்,திருவாடானை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் (அறிவியல்)ஆல்பர்ட் மனோகரன்,பரமக்குடி (கலையூர் அரசு உயர்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியைநிர்மலாதேவி,மண்டபம் ஊராட்சி ஒன்றியம் வாணி நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்பரமேஸ்வரன்,
திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம் சுமைதாங்கி தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியைடார்த்தி கரோலின்,திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம் புதூர் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்செங்கோல் திரவியம்,
திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம் க.கொடிக்குளம் தொடக்கப்பள்ளிதலைமைஆசிரியைமுனீஸ்வரி,ராமநாதபுரம் புனித சூசையப்பர் தொடக்கப் பள்ளி இடைநிலை ஆசிரியர் ஆரோக்கிய பன்னீர்செல்வம் ஆகியோருக்கு கல்வி துறையின் பாராட்டு சான்று, வெள்ளி பதக்கம் மற்றும் ரூ.10 ஆயிரத்திற்கான காசோலை ஆகியவற்றைகூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி)கே.ஜே.பிரவீன் குமார் வழங்கி னார். மேலும் பயனாளிகள் பேருக்கு ரூ.64.50 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) வழங்கினார். முதன்மை கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி, மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனமுதல்வர் மு.புனிதம், மாவட்ட கல்வி அலுவலர்கள்கோ.முத்துசாமி,(ராமநாதபுரம்)மு.முருகம்மாள், (மண்டபம்) மு.சேதுராமு, (பரமக்குடி) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கீழக்கரையில் யோகா போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா…
by ஆசிரியர்
written by ஆசிரியர்
தென்மண்டல அளவிலான யோகா போட்டியில் கலந்துகொண்டு வெற்றிபெற்ற கீழக்கரையை சேர்ந்த குழந்தைகளுக்கு பரிசளிப்பு விழா தட்டான் தோப்பு தெருவை சேர்ந்த காளிதாஸ் ஏற்பாட்டில் நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக கீழக்கரை ரோட்டரி சங்க தலைவர் மூர் அசனுதீன், போலீஸ் பொதுமக்கள் நல்லுறவு சங்க தலைவர் அருள் ஆடும் பெருமாள், பொறியாளர் முரளி, வழக்கறிஞர் காளீஸ்வரன், ரியல் எஸ்டேட் செல்வவிநாயகம், கலந்துகொண்டு வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசளித்தனர். யோகா அகாடமியின் பயிற்சி ஆசிரியர் நாகூர் கனி விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தான் பயின்ற பள்ளியில் தலைமை ஆசிரியரிடம் பிரம்படி கொடுத்த வாழ்த்து பெற்ற முன்னாள் மாணவர்கள்.மதுரை செல்லூர் அருகே உள்ளது மனோகரா நடுநிலைப் பள்ளி. இது அரசு உதவி பெறும் பள்ளியாகும். இந்தப் பள்ளியில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக தலைமை ஆசிரியராக பணிபுரிந்தவர் பால் ஜெயக்குமார்.அவரது நீண்ட நெடுங்கால கல்வி சேவையை பாராட்டும் வகைமில் அவரிடம் பயின்ற முன்னாள் மாணவர்கள் சங்கரபாண்டியன் அபூபக்கர் சித்திக் அலெக்ஸ் சரவணன் ஆனந்த் கார்த்திக் தினேஷ் ஆகியோர் தங்களது ஆசிரியருக்கு கேடயம் மற்றும் சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றனர்.இதுகுறித்து சமூக ஆர்வலர் சங்கரபாண்டியன் கூறுகையில், மாணவர்கள் தவறு செய்தால் ஆசிரியர்கள் கையில் வைத்திருக்கும் பிரம்பு கொண்டு தண்டிப்பார்கள். ஆனால் இப்போதெல்லாம் மனித உரிமை குழந்தைகள் உரிமை என பேசுகின்ற நிலை வந்துவிட்டது. அப்போதிருந்து ஆசிரியர்கள் மாணவர்கள் சிறந்து விளங்க வேண்டும் என்ற நோக்கத்தில் கண்டிப்பு காட்டினார்கள். இன்று எங்களது முன்னாள் தலைமை ஆசிரியரை சந்தித்தபோது கையோடு நாங்கள் கொண்டு சென்ற பிரம்பால் அடி வாங்கி மகிழ்ச்சி அடைந்தோம். ஏனெனில் ஆசிரியர்களின் கண்டிப்பு தான் மாணவர்களை உயர் நிலைக்குக் கொண்டு செல்லும் என்பதை நாங்கள் முழுவதுமாக உணர்ந்து இருக்கிறோம்.முன்பெல்லாம் மதுரை கோரிப்பாளையம் அருகே உள்ள மூங்கில் கடைத்தெருவில் வாத்தியார் பிரம்பு என்றே விற்பனையாகும். இன்றைக்கு அந்த பிரம்பு விற்பனை நலிந்து போய் வாங்குவதற்கு ஆளின்றி கிடப்பதாக மூங்கில் கடைக்காரர்கள் எங்களிடம் சொல்லி வருத்தப்பட்டனர். உங்களைப் போன்ற அந்தகால மாணவர்களை நல்வழிப் படுத்திய பிரம்புக்கும் நாங்கள் செய்த மரியாதையாக கருதுகிறோம் என்றார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
வ உ சி 150-வது பிறந்த நாளை முன்னிட்டு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு அன்னதானம்.
by mohan
written by mohan
கப்பலோட்டிய தமிழன் செக்கிழுத்த செம்மல் ஏழை எளிய மக்களின் சட்டப் போராட்டத்திற்கு உறுதுணையாக இருந்தவர் சுதந்திரப் போராட்டத்தின் கதாநாயகன் கொத்தடிமை க்கு எதிராக களம் கண்டு தொழிலாளர்களுக்கு உறுதுணையாக இருந்து பல்வேறு தமிழ் நூல்களை எழுதி பாரதியார்,முகைதீன் பிள்ளை ஆகியோரின் பாசத்திற்குரிய தேசிய விடுதலைப் போராட்ட வீரர் வ.உசிதம்பரனார் 150-வது பிறந்தநாள் விழா இன்று சிறப்பாக கொண்டாடப்படுகிறது.மேலும் ,தமிழக அரசு அவரது பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாட அறிவித்துள்ளது.அதனைத் தொடர்ந்து ,இன்று அவரது 150வது பிறந்தநாள் நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.அதன் ஒரு பகுதியாக, மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஒன்றியத்துக் குட்பட்ட சிந்தாமணி, சின்ன அனுப்பானடியில், அனைத்து பிள்ளைமார் சங்க கூட்டமைப்பு சார்பாக தலைவர் ராமசுப்பிரமணியன் மற்றும் மாரியப்பன் தலைமையில் வ. உ. சிதம்பரனார் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.அதனைத் தொடர்ந்து, 1000-க்கும் மேற்பட்ட ஏழை எளிய பொதுமக்களுக்கு இனிப்பு உள்ளிட்ட உணவு வழங்கப்பட்டது.அதைத் தொடர்ந்து, இளைஞர்கள் இரு சக்கர வாகனத்தில் பேரணியாக ஊர்வலம் சென்றனர்.இந் நிகழ்ச்சியில், செயலாளர் ரவி பொருளாளர் லோகநாதன் திரவியம் மற்றும் அருணாச்சலம் ஆறுமுகம் மகாலிங்கம் பரமசிவம் உள்ளிட்ட அனைத்து பிள்ளைமார் சங்க கூட்டமைப்பு நிர்வாகிகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். …இதேபோன்று …வ உ சி 150ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு திமுக மதுரை தெற்கு மாவட்டம் சார்பில் முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா முன்னிலையில் மதுரை மாவட்டம் திமுக தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முத்துராமலிங்கம் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர் சிவமுருகன் திருமங்கலம் நகர செயலாளர் முருகன் ஐடி பிரிவு பிரபு இளைஞரணி முத்துக்குமார் உட்பட கலந்துகொண்டு வ உ சியின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திருமங்கலத்தில் உள்ளாட்சி மன்றத் தேர்தல் குறித்து மக்களை சந்தித்து ஆலோசனைக் கூட்டம் .
by mohan
written by mohan
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ளாட்சி மன்றத் தேர்தல் குறித்து மக்களை சந்தித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் மாரிச்செல்வம் தலைமை தாங்கினார் ஆலோசனை கூட்டத்திற்கு பின்பு தேசிய சிறுபான்மை பிரிவு செயலாளர் வேலூர் இப்ராஹிம் செய்தியாளரிடம் கூறியதாவதுபாரதிய ஜனதா கட்சி மதுரை மாவட்டத்தின் சார்பாக வருகிற உள்ளாட்சி மன்ற தேர்தலில் மக்கள் கணிசமாக இருக்கக்கூடிய பகுதிகளில் மக்களின் மனநிலையை தவறான நிலையில் திமுகவின் பொய் பிரச்சாரத்தை முறியடிப்பதற்கான ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினோம் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாத ஆட்சிதான் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது திமுக நீட் தேர்விற்கு விலக்கு அளிப்போம் என்று வாக்குறுதி அளித்துவிட்டு அப்பாவி மாணவர்களின் குடும்பத்தார்களையும் ஏமாற்றிக் கொண்டிருக்கும் திமுக அரசு இவர்கள் ஆட்சிக்கு வந்து நூறு நாள் ஆகியும் அது சம்பந்தமாக எந்த ஒரு நிலையும் எடுக்காமல் மக்களை ஏமாற்றுவதற்காக புதிய சட்டத்தை கொண்டு வருவோம் நாங்கள் ஜனாதிபதி சந்தித்து சரியான முறையில் முறையீடு செய்வோம் என்று அடுத்த ஏமாற்று வித்தை காட்டுகிறார்கள் திமுக என்பது பொய்யும் அராஜகம் கட்சி என்பது மக்களுக்கு தெளிவாக தெரிகிறது மத்திய அரசின் கொள்கை நிலைப்பாட்டினை எதிர்க்கக்கூடிய தொடர் பிரச்சாரத்தை ஏற்படுத்தி வருகிறார்கள் சட்டமன்றத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் கொஞ்சம் கூட சட்டத்தை படித்து பார்த்தும் என்று கூட தெரியாமல் மத்திய அரசு நிலங்களை தனியாருக்கு விற்பனை செய்கிறது என்று கூறுகிறார். பத்திரிக்கையாளர் மற்றும் சட்டமன்றத்தில் கூறுவது ஜனநாயக முறையில் ஆட்சி செய்யவில்லை மக்களை திசை திருப்புகிற வகையில் மக்களை தவறான முறையில் வழிநடத்துகிறார் என்று தெள்ளத் தெளிவாக தெரிகிறது.பிரதமர் மோடி அவர்கள் சரியான முறையில் வழிநடத்திக் கொண்டிருக்கிறார் தேசம் பாதுகாப்பாக முன்னேறிக் கொண்டிருக்கிறது திமுகவின் தொடர் பொய் பிரச்சாரங்களை வருகிற உள்ளாட்சி மன்ற தேர்தலில் மக்களுக்கு தெளிவுபடுத்தி இந்த திமுக என்ற அராஜக ஆட்சியை தமிழகத்தில் வேரோடு மண்ணோடு தூக்கி எறிவது பாஜகவின் நிலைப்பாடு அதற்காக பிரச்சாரம் செய்கிறோம்வருகிற 10-ஆம் தேதி அன்று பல்வேறு இந்து அமைப்புகள் விநாயகர் சதுர்த்தியை விழாவிற்கு குறிப்பாக வழிபடுவதற்கான சிலை வைப்பதற்கான ஆயத்தப் பணிகளை ஈடுபட்டுக்கொண்டிருந்தை தடுப்பதற்காக காவல்துறையினர் இந்து மதத்தினரின் நம்பிக்கையையும் வழிபாட்டு முறைகளையும் சீரழிக்க வேண்டும் எண்ணத்தோடு திமுகவின் கைப்பாவையாக காவல்துறை செயல்பட்டுக்கொண்டிருக்கிறது காவல்துறை மீது எங்களுக்கு மரியாதை உள்ளது காவல்துறை அரசின் கைப்பாவையாக இருக்கக்கூடாது சாராயக் கடையில் தள்ளுமுள்ளு ஏற்படுகிறது பல கோடி ரூபாய் அரசுக்கு வருமானம் தரக்கூடிய ஒரே காரணத்திற்காக மக்களின் உயிரை பற்றி கவலைப்படாமல் மிகக்கேவலமாக பெண்களின் தாலியை பறிக்கக்கூடிய அரசாக திமுக இருந்து கொண்டு இவர்கள் விநாயகர் சதுர்த்தியை தடுப்பதற்காக என்ன யோக்கியதை இருக்கிறது கொரோனா வழிமுறைகளை பின்பற்றி வழிபாடுகளை நடத்துவோம் என பல இந்து அமைப்புகள் சொல்லியும் கூட காவல்துறை வைத்து அடக்கு முறையை கையாள்வது திமுக அரசு மத நம்பிக்கையை கொச்சைப்படுத்துவது கடவுள் மறுப்பு கொள்கை யார் சொல்கிறார்கள் அவருக்கு சாதகமாக உள்ளது இந்து அமைப்புகள் நடத்தக்கூடிய சதுர்த்தி விழாவில் பெரும்பாலான கிறிஸ்தவர்கள் முஸ்லிம்கள் கலந்து கொள்வார்கள் பாஜக சமூகத்தின் நல்லிணக்கத்தை மிகச் சிறந்த முறையில் எடுத்துக்காட்டுகிறதுபேட்டி வேலூர் இப்ராஹிம் பாஜக தேசிய சிறுபான்மை பிரிவு செயலாளர்..
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தமிழர்களின் தொன்மை நாகரிகத்தைப் பறை சாற்ற அடுத்த கட்டமாக அகழாய்வு நடத்துவதற்கு 3 இடங்களை தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளோம் தொல்லியல் துறை அமைச்சர் பேட்டி.
by mohan
written by mohan
சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்த தமிழக தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார் அப்போது கூறியதாவது:-பொங்கல் விழா சென்னையில் நடைபெறுவது போல் மற்ற மாவட்டங்களுக்கு நடை பெறுவதற்கு வழிவகை செய்யப்படுமா என்ற கேள்விக்குபொங்கல் விழா சென்னையில் 6 இடங்களில் நடத்த உள்ளோம், இணையதளங்கள் வழியாகவும் நடத்தவுள்ளதாக இருக்கிறோம் எனக் கூறினார்.சூழ்நிலைகளைப் பொறுத்து மற்ற மாவட்டங்களில் பொங்கல் விழா நடத்துவது குறித்து முதல்வரிடம் ஆலோசனை செய்து நடத்துவதற்கு வழிவகை செய்வோம் என்றார்.கீழடியில் அகழாய்வு முடிக்கப்பட உள்ள நிலையில் அடுத்த கட்ட கலந்தாய்வு நடத்துவது குறித்த கேள்விக்கு.அடுத்த கட்டமாக அகழாய்வு நடத்துவதற்கு சில இடங்களை தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளோம் விருதுநகர் மாவட்டத்தில் வெம்பக்கோட்டை, திருநெல்வேலி மாவட்டத்தில் துளுக்கற்பட்டி, தர்மபுரி மாவட்டத்தில் பெரும்பாலை உள்ளிட்ட இடங்களில் அகல் ஆய்வு செய்வதற்காக தேர்வு செய்யப்பட்டு உள்ளோம் என்றார்.அதைத்தவிர தாமிரபரணி ஆற்றின் வழியிலே இருக்கக் கூடிய இடங்களில் முதல் கட்டமாக களஆய்வுகளை மேற்கொள்ள இந்த ஆண்டு அறிவிப்புகளை செய்திருக்கிறோம் என்றார்.தொடர்ந்து இந்தியாவிலேயே ஐந்து கோடி ரூபாய்க்கு அகழாய்வை பாதுகாப்பதற்காக தமிழக முதலமைச்சர் வழங்கியுள்ளதாக கூறினார்.தமிழ் மொழியின் தொன்மையை நிறுவுவதற்கும், அறிவுப்பூர்வமான சான்றுகளை தருவதற்கு தமிழக அரசு நிச்சயமாக உருவாக்கும்.கீழடி அருங்காட்சியம் அமைப்பதற்கான செயல்பாடு குறித்த கேள்விக்குகீழடியின் அருங்காட்சியம் பணிகள் 12 கோடி செலவில், 34 ஆயிரம் சதுரடியில் கீழடி அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு வருகிறது என்றார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திருமங்கலம் தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் திருப்பரங்குன்றம் கிழக்கு ஒன்றிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக முன்னாள் ஒன்றிய செயலாளர் ஆலங்குளம் செல்வம் தலைமையில் சுமார் 200 பேர் அமமுக கட்சியில் இருந்து விலகி திமுகவில் முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் முன்னிலையில் திமுக வில் இணைந்தனர் இதில் முன்னால் எம் எல் ஏ முத்துராமலிங்கம் மாநில பொதுகுழு உறுப்பினர் சிவமுருகன் திருமங்கலம் நகர செயலாளர் முருகன் திமுக மா.வ.து அமைப்பளர் தங்கச்சாமி மற்றும் ஐ டி பிரிவு பிரபு சேடபட்டி முத்து உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தமிழக அரசின் சிறந்த நல்லாசிரியர்களுக்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கும் நிகழ்ச்சி.
by mohan
written by mohan
நல்லாசிரியர் விருது பெற்றவர்கள் தங்களது விருது தொகையினை நிவாரண நிதி மற்றும் கீழடி செலவின நிதிக்கு அளிப்பது மிகவும் பெருமையாக உள்ளது என மதுரை பாராளமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன்,மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் பெருமிதம்.மதுரை மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலக கூட்ட அரங்கில் மதுரை மாவட்ட கலெக்டர் அணிஷ் சேகர் தலைமையில் நடைபெறும் நிகழ்ச்சியில் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளை சேர்ந்த 13 சிறந்த நல்லாசிரியர்களுக்கான டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது வழங்கப்பட்டது.நிகழ்வில் மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், மதுரை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. மு.பூமிநாதன் ஆகியோர் பங்கேற்றனர்.மதுரை மாவட்டத்தை சேர்ந்த 13 ஆசிரிய , ஆசிரியைகளுக்கு டாக்டர் இராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.விருது பெற்ற 13ஆசிரிய, ஆசிரியைகளில் மதுரை லெட்சுமிபுரம் டி.வி.எஸ் ஆரம்ப பள்ளி தலைமை ஆசிரியை ஜெயந்தி, மதுரை முக்குலத்தோர் நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியை பரமேஸ்வரி உள்ளிட்ட 5 ஆசிரியைகள், மதுரை தபால் தந்தி நகர் புனித மைக்கேல் மேல்நிலை பள்ளி முதல்வர் மதிவதனன் உள்ளிட்ட 4 ஆசிரியர்கள் மொத்தம் 9 ஆசிரிய, ஆசிரியைகள் தங்களுடைய விருது தொகையான (10000×9) ரூபாய் 90 ஆயிரத்தை கொரோனா நிவாரண நிதியாக வழங்கினார்கள்.மதுரை பொய்கை கரைப்பட்டி அரசு உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் அருள்ராஜ் தனது விருது தொகை ௹பாய் 10 ஆயிரத்தை கீழடி அகழ்வாராய்ச்சி செலவுகளுக்கான நிதிக்காகமதுரை பாராளுமன்ற உறுப்பின் சு.வெங்கடேசன், மதுரை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. மு.பூமிநாதன், மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் ஆகியோர் முன்னிலையில் வழங்கினார்கள்.மதுரை மாவட்டத்தை சேர்ந்த 13 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டுள்ளது, ஆசிரியர்கள் சமுதாயத்திற்கு எடுத்துக்காட்டாக இருப்பவர்கள் அவர்களில் 9 நபர்கள் முதலமைச்சர் நிவாரண நிதிக்காக தங்களது நிதியை திரும்ப கொடுத்துள்ளார்கள் . இது ஒரு முன் மாதிரி மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் பேட்டி அளித்துள்ளார்இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன்நல்லாசிரியர் விருது பெறுகின்ற 13 நபர்களுக்கு அன்பான வாழ்த்துக்கள் ஆசிரியர்கள் என்றைக்குமே முன்னுதாரணமாக இருக்கிறார்கள் என்பதற்கு சான்றாக விருது தொகையான 10 ஆயிரம் ரூபாயை ஒன்பது ஆசிரியர்கள் முதல்வர் நிவாரண நிதிக்காக வழங்கியுள்ளார்கள் இது ஒரு முன்மாதிரியான செயல் இந்த செயலுக்கு வாழ்த்துக்கள் எனவும்இந்தியாவிலேயே அகழாய்வு பணிக்கு தொல்லியல் துறைக்கு இத்தனை கோடி ஒதுக்கி இருக்கிற அரசாக மாநில அரசாக தமிழக அரசு இருக்கிறது, நேற்றைய தினம் சட்டப்பேரவையை தொல்லியல் துறை சார்ந்த செயல்பாடு தமிழகம் வளர்ச்சி பண்பாட்டுக்கு புதிய உத்வேகத்தை வழங்கியிருக்கிறது தமிழக அரசுக்கு பணிவான அன்பான நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார்.
செய்தியாளர் காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
நவீன அணுக் கோட்பாடு, அணு எடை குறித்த பட்டியலை முதன்முதலில் வெளியிட்ட ஜான் டால்ட்டன் பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 6, 1766).
by mohan
written by mohan
ஜான் டால்ட்டன் (John Dalton) செப்டம்பர் 6, 1766 இங்கிலாந்தின் கம்பர்லேண்டில் உள்ள காக்கர்மவுத் அருகே ஈகிள்ஸ்பீல்டில் இருந்து ஒரு குவாக்கர் குடும்பத்தில் பிறந்தார். அவரது தந்தை ஒரு நெசவாளர். அவர் தனது ஆரம்ப கல்வியை தனது தந்தையிடமிருந்தும், அருகிலுள்ள கிராமமான பார்ட்ஷா ஹாலில் ஒரு தனியார் பள்ளியை நடத்தி வந்த குவாக்கர் ஜான் பிளெட்சரிடமிருந்தும் பெற்றார். டால்டனின் குடும்பம் அவரை நீண்ட காலமாக ஆதரிக்க முடியாத அளவுக்கு மோசமாக இருந்தது. மேலும் அவர் தனது பத்து வயதிலிருந்தே, பணக்கார உள்ளூர் குவாக்கர் எலிஹு ராபின்சனின் சேவையில் தனது வாழ்க்கையில் சம்பாதிக்கத் தொடங்கினார். 1800ம் ஆண்டு, தனது 34-ஆம் வயதில், மான்செஸ்டர் இலக்கிய தத்துவக் கழகத்துக்குச் செயலர் ஆனார். அங்கே, அதற்கு அடுத்த ஆண்டு, வளிமங்களின் கூறுகள், வெற்றிடத்திலும், வளிமண்டலத்திலும், வெவ்வேறு வெப்பநிலையில் நீராவி மற்றும் பிற வளிமங்களின் அழுத்தம், போன்றவை பற்றிய தனது முக்கிய ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டார்.
0 -100 °C (32 – 212 °F) இடைவெளியில் பல புள்ளிகளில் நீராவியின் அழுத்தத்தைக் குறித்து ஆய்வுசெய்த டால்ட்டன், மேலும் பல வித நீர்மங்களின் ஆவியழுத்தத்தையும் கவனித்து, சமமான வெப்பநிலை மாற்றத்தில், எல்லா நீர்மங்களின் ஆவியழுத்தமும் சமமாக இருக்கும் என்னும் கோட்பாட்டை முன்வைக்கிறார். டால்ட்டனின் கண்டுபிடிப்புகளிலேயே முதன்மையாகக் கருதப்படுவது வேதியலில் அணுக் கோட்பாடு என்பது தான். இருப்பினும், அவரது பெயரோடு ஆழப்பதிந்துவிட்ட கோட்பாடு எனினும், அத்தொடர்பு முழுதும் தெளிவாகப் புரிந்துகொள்ளப்படவில்லை. டால்ட்டனின் அணுக்கோட்பாட்டின் முக்கிய அம்சங்களாவன: தனிமங்கள் அனைத்தும் அணு என்னும் மிகச்சிறு துகள்களால் ஆனவை. ஒரு குறிப்பிட்ட தனிமத்தின் அணுக்கள் அனைத்தும் அச்சாக ஒரே அளவு, நிறை, பண்புகளைக் கொண்டிருக்கும். வெவ்வேறு தனிமங்களின் அணுக்கள் இவற்றிலிருந்து வேறுபட்டிருக்கும்.
அணுவை உருவாக்க முடியாது, அழிக்க முடியாது, துளைத்துப் பிரிக்கவும் முடியாது. வெவ்வேறு தனிமங்களின் அணுக்கள் முழுவெண் விகிதத்தில் கலந்து வேதிச் சேர்மம் ஆக மாறும். வேதிவினைகளில், அணுக்கள் ஒன்று சேர்ந்தோ, பிரிந்தோ, மாற்றியமைக்கப்பட்டோ விளங்கும். அணு எடைக்கான முதல் பட்டியலை வெளியிட்டார் டால்ட்டன். அதில் ஹைட்ரஜன், ஆக்சிஜன், நைட்ரஜன், கார்பன், கந்தகம், பாஸ்பரஸ் ஆகிய ஆறு தனிமங்கள் இடம்பெற்றிருந்தன. ஹட்ரஜன் அணுவிற்கு எடை 1 என்ற அனுமானத்தில் இருந்து இது கட்டமைக்கப்பட்டிருந்தது. முதன்முதலில் இதனை எவ்வாறு கண்டறிந்தார் என்பது குறித்த அதிக விவரங்கள் இல்லை. ஆனால் அவருடைய ஆய்வுக்கூடக் குறிப்பேட்டில், 1803 ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் ஆறாம் தேதி நீர், அம்மோனியா, கார்பன் டையாகசைடு ஆகிவற்றைப் பற்றிய ஆய்வையொட்டி பல அணுக்களின் எடையை கொண்ட ஒரு பட்டியல் இருக்கிறது.
அணுக் கோட்பாடு (1808) பற்றிய தனது முதல் விரிவாக்கப்பட்ட விவாதத்தில், டால்டன் கூடுதல் (சர்ச்சைக்குரிய) “மிகப் பெரிய எளிமையின் விதி” யை முன்மொழிந்தார். இந்த விதியை சுயாதீனமாக உறுதிப்படுத்த முடியவில்லை. ஆனால் சில எளிய மூலக்கூறுகளுக்கான சூத்திரங்களை முன்மொழிய இதுபோன்ற சில அனுமானங்கள் அவசியமாக இருந்தன. அதன் அடிப்படையில் அணு எடைகளின் கணக்கீடு சார்ந்து இந்த விதி இரண்டு வெவ்வேறு உறுப்புகளின் அணுக்கள் ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் உருவாக்கும் நீர் அல்லது ஹைட்ரஜன் மற்றும் நைட்ரஜன் உருவாக்கும் அம்மோனியா போன்ற ஒரே ஒரு கலவையை மட்டுமே உருவாக்குகின்றன. அந்த சேர்மத்தின் மூலக்கூறுகள் ஒவ்வொரு தனிமத்தின் ஒரு அணுவையும் கொண்டதாக கருதப்படும். அப்போது அறியப்பட்ட கார்பனின் இரண்டு ஆக்சைடுகள் அல்லது நைட்ரஜனின் மூன்று ஆக்சைடுகள் போன்ற பல விகிதங்களில் இணைந்த கூறுகளுக்கு, அவற்றின் சேர்க்கைகள் சாத்தியமான எளிமையானவை என்று கருதப்பட்டது. எடுத்துக்காட்டாக, இதுபோன்ற இரண்டு சேர்க்கைகள் தெரிந்தால், ஒன்று ஒவ்வொரு தனிமத்தின் அணுவையும் கொண்டிருக்க வேண்டும், மற்றொன்று ஒரு தனிமத்தின் ஒரு அணுவையும் மற்றொன்றின் இரண்டு அணுக்களையும் கொண்டிருக்க வேண்டும்.
இது இயற்கையின் எளிமை மீதான நம்பிக்கையிலிருந்து பெறப்பட்ட ஒரு அனுமானமாகும். ஒவ்வொரு தனிமத்தின் எத்தனை அணுக்கள் ஒன்றிணைந்து மூலக்கூறுகளை உருவாக்குகின்றன என்பதைக் கண்டறிய எந்த ஆதாரமும் விஞ்ஞானிகளுக்கு கிடைக்கவில்லை. ஆனால் இது அல்லது வேறு ஏதேனும் ஒரு விதி எந்தவொரு தொடக்கக் கோட்பாட்டிற்கும் முற்றிலும் அவசியமானது. ஏனென்றால் அணு எடைகளைக் கணக்கிடுவதற்கு ஒருவருக்கு ஒரு மூலக்கூறு சூத்திரம் தேவைப்பட்டது. டால்டனின் “மிகப் பெரிய எளிமை விதி”, தண்ணீருக்கான சூத்திரம் OH என்றும் அம்மோனியா NH என்றும், நமது நவீன புரிதலில் (H2O, NH3) இருந்து முற்றிலும் மாறுபட்டது என்றும் அவர் கருதினார். மறுபுறம், அவரது எளிமை விதி கார்பனின் இரண்டு ஆக்சைடுகளுக்கு (CO மற்றும் CO2) சரியான நவீன சூத்திரங்களை முன்மொழிய வழிவகுத்தது. டால்டனின் அணுக் கோட்பாட்டின் மையத்தில் நிச்சயமற்ற தன்மை இருந்தபோதிலும், கோட்பாட்டின் கொள்கைகள் தப்பிப்பிழைத்தன.
1794 ஆம் ஆண்டில், மான்செஸ்டருக்கு வந்த சிறிது நேரத்திலேயே, டால்டன் மான்செஸ்டர் இலக்கிய மற்றும் தத்துவ சங்கத்தின் “லிட் & பில்” உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சில வாரங்களுக்குப் பிறகு அவர் தனது முதல் கட்டுரையை “வண்ணங்களின் பார்வை தொடர்பான அசாதாரண உண்மைகள்”, இதில் கண் பார்வையின் திரவ ஊடகத்தின் நிறமாற்றம் காரணமாக வண்ண உணர்வின் பற்றாக்குறை ஏற்பட்டது என்று அவர் குறிப்பிட்டார். அவரும் அவரது சகோதரரும் வண்ண குருடர்களாக இருந்ததால், இந்த நிலை பரம்பரை பரம்பரையாக இருக்க வேண்டும் என்பதை அவர் உணர்ந்தார். நவீன அணுக் கோட்பாட்டை முன்வைத்ததற்கும், நிறக்குருடு பற்றிய ஆய்வினாலும், வளிமங்கள், நீர்மங்கள் பற்றிய ஆய்வினாலும் நன்கு அறியப்பட்ட ஜான் டால்ட்டன் ஜுலை 27, 1844ல் தனது 77வது அகவையில் மான்செஸ்டர், லங்காஷயர், இங்கிலாந்தில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி,திருச்சி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திருவண்ணாமலை ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபத்தில் தமிழ் அரங்கில் ஆசிரியர் தினவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது இவ்விழாவில் மகிழம் தமிழ் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜெயபிரகாஷ் அவர்கள் வரவேற்புரை வழங்கினார் மேலும் முருகையன் கல்வி குழுமத்தின் தலைவர் மற்றும் மகிழம் தமிழ் சங்கத்தின் தலைவரும் சீனி கார்த்திகேயன் முன்னிலை வகித்தார் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எதிரொலி ராமன் அவர்களும் மூத்த பத்திரிகையாளர் முருகேஷ் அவர்களும் மூத்த பத்திரிகையாளர் சித்தார்த்தன் அவர்களும் பாரத் கல்லூரியின் முதல்வர் முனைவர் ராமு அவர்களும் வழக்கறிஞர் பாசறை பாபு அவர்களும் சிறப்பு விருந்தினர்களா கலந்து கொண்டு ஓய்வு பெற்ற மூத்த ஆசிரியர்களை கௌரவம் செய்தனர் அதில் சண்முகா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் கல்விப்புல முதன்மையர் பேராசிரியர் அழ உடையப்பன், நகராட்சி துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் அருணாசலம் சு வாளா வெட்டி முன்னாள் தலைமையாசிரியர் அமராவதி முருகையன் மகளிர் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் தமிழ்ச்செல்வி அவர்களை நல்ஆசிரியர்கள் விருது வழங்கி கௌரவப்படுத்திநார்கள் மேலும் இவ்விழாவின் முடிவில் வழக்கறிஞர் சுரேஷ் நன்றியுரை கூறினார் இவ்விழாவில் பல்வேறு ஆசிரியர்கள் பேராசிரியர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்கள்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ராஜக்காபட்டி பகுதியை பசுமை நகரமாக மாற்றும் முயற்சியில் ஊராட்சி மன்ற தலைவர்
by mohan
written by mohan
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ராஜக்காபட்டி ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் சித்ரா பால்ராஜ். ,இவர் தனது பகுதியில் பசுமை நகரமாக மாற்றும் முயற்சியில் இன்று 200க்கும் மேற்பட்ட மா பலா, வேம்பு, அரசமரம். உள்ளிட்ட மரங்களை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் ராஜக்காபட்டி பகுதியில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் கண்ணன் தலைமையில் ஊராட்சி மன்ற தலைவர் சித்ரா பால்ராஜ் முன்னிலையில் ராஜக்காபட்டி ஊராட்சி பகுதிகளில் 200க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டது.
நிகழ்ச்சியில் 58 கிராம இளைஞா்கள் குழுவைச் சோ்ந்த சௌந்தரபாண்டியன் மற்றும் ஊராட்சி துணைத்தலைவர் ஜெயப்பிரியா முன்னாள் துணைத்தலைவர் மருதபாண்டி முன்னாள் பொறுப்புத் தலைவர் பார்த்தசாரதி மற்றும் கிராம மக்கள் பலர் கலந்துகொண்டு மரக்கன்றுகள் நட்டனர்.கிராமத்தை சோலை வனமாக மாற்றும் நோக்கில் பசுமையை நோக்கி ராஜக்காபட்டி ஊராட்சி மன்ற தலைவர் செயல்பட்டு வருவது பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.
உசிலை சிந்தனியா
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் கண்தான விழிப்புணர்வு போட்டிகள்-பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்பு..
by mohan
written by mohan
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் அமைந்துள்ள அரசு அருங்காட்சியகத்தில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு கண்தான விழிப்புணர்வு போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டியினை நெல்லை அரசு அருங்காட்சியகம், திருநெல்வேலி ஸ்டார் ரோட்டரி கழகம் மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்தினர். பள்ளி மாணவ மாணவிகளுக்கு கண் தானத்தின் முக்கியத்துவத்தை தெரிவிக்கும் விதமாக ஓவியப்போட்டி, வாசகம் எழுதும் போட்டி மற்றும் கட்டுரைப் போட்டி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் நெல்லை அரசு அருங்காட்சியக மாவட்ட காப்பாட்சியர் சிவ.சத்திய பள்ளி தலைமை வகித்தார். ரோட்டரி வருங்கால ஆளுநர் முத்தையா பிள்ளை போட்டிகளை துவக்கி வைத்தார். அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவர். அனிதா வேணுகோபால், உதவி ஆளுநர் ரேமண்ட், பாட்ரிக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருநெல்வேலி ஸ்டார் ரோட்டரி கழகத்தின் உறுப்பினர்கள் அனைவரும் இதில் கலந்து கொண்டனர். இப்போட்டிகளில் ஏராளமான மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.இதில் வெற்றி பெற்றவர்களுக்கு வரும் புதன் கிழமை அரவிந்த் கண் மருத்துவமனை வளாகத்தில் நடைபெறும் சிறப்பு நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவரால் பரிசுகள் வழங்கப்பட உள்ளன.
செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
வாழ்க்கை என்ற பாடத்தைக் கற்றுத்தந்து, வழிகாட்டியாக விளங்கும் ஆசிரியர்கள் (ஆசிரியர் தினம்) – பாரத ரத்னா டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 5, 1888).
by mohan
written by mohan
ஒரு நல்ல ஆசிரியராக தமது இறுதி காலம் வரை வாழ்ந்துக் காட்டி, மாபெரும் தத்துவமேதையாக விளங்கிய டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 05 ஆம் நாளை ஒவ்வொரு வருடமும் ஆசிரியர் திருநாளாக இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒழுக்கம், பண்பு, ஆற்றல், ஊக்கம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி, வாழ்க்கை, பொது அறிவு என அனைத்தையும் மாணவர்களுக்கு சிறந்த முறையில் கற்பித்து, ஒரு உண்மையான வழிகாட்டியாக விளங்குபவர்கள் ஆசிரியர்கள். அப்படிபட்ட ஆசிரியர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில், செப்டம்பர் 05 நாளை ‘ஆசிரியர் தினமாக’ கொண்டாடுகிறோம். வாழ்க்கை என்ற பாடத்தைக் கற்றுத்தந்து, மாணவர்களுக்கு உண்மையான வழிகாட்டியாக விளங்கி, ஒவ்வொரு மாணவர்களையும், சிறந்த மனிதர்களாக்குவது ஆசிரியர்கள் தான். அத்தகைய எழுச்சிமிக்க மாணவர்களை ஒரு சிறந்த ஆசிரியரால் தான் உருவாக்க முடியும்.ஆசிரியர் பணி என்பது வெறும் கல்வியை மட்டும் போதிப்பது இல்லை. ஒழுக்கம், பண்பு, ஆன்மீகம், பொது அறிவு என அனைத்தையும் மாணவர்களுக்கு எடுத்துக்கூறி, அவர்களை சிறந்த மனிதர்களாக்கும் உன்னதப் பணியாகும். அப்படிப்பட்ட தெய்வீகமானப் பணியை மாணவர்களுக்கு அளிக்க, தன்னலமற்ற, தியாக மனப்பான்மை கொண்டவராக இருந்தால் மட்டும் போதாது. கற்பிக்கும் தொழிலை நேசிப்பவராகவும் இருக்க வேண்டும். அவர்கள் தான் உண்மையான ஆசிரியர்கள். தன்னுடைய வாழ்வில் ஆசிரியர் பணியை புனிதமாகக் கருதி, பிற ஆசிரியர்களுக்கு முன்மாதிரியாக, ஒரு நல்ல ஆசிரியரால் எவ்வளவு தூரம் பயன்பட முடியும் என்பதை தமது இறுதி காலம் வரை வாழ்ந்துக் காட்டி, ஒரு மாபெரும் தத்துவமேதையாக உலகிற்குத் தன்னை வெளிப்படுத்திய டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 05 ஆம் நாளை, இந்தியாவில் 1962 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.கல்வி என்பது குழந்தைகளின் ஒட்டு மொத்த ஆளுமைத் திறனை வளர்க்கும் முயற்சி எனலாம். இம்முயற்சியில் ஈடுபடும் ஆசிரியர்களை சமுகமானது மாதா மற்றும் பிதாவைத் தொடர்ந்து அடுத்த நிலையில் தெய்வத்திற்கு மேலாக ஆசிரியர்களைக் கருதும் நிலை இன்றும் காண இயலும். இச்சமூகத்தின் எதிர்பார்ப்பையும் மீறி தன் வகுப்பு மாணவர்கள் மீது அதிக அன்பும், அக்கறையும் கொண்டு அவர்கள் மேம்பட போராடும் ஒவ்வொரு ஆசிரியரும் போர்வீரனே. அதில் வெற்றியோ தோல்வியோ என்ற கேள்விக்கு இடமின்றி, அவர் மேற்கொள்ளும் ஒவ்வொரு முயற்சிக்கு அனைவரும் தலைவணங்குவார்கள் என்பதில் ஐயமில்லை. “எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்” என ஆத்திச்சூடியில் பாடியிருக்கிறார் ஔவையார். ஆசிரியர் என்பவர் இறைவனுக்கு சமமாக பார்க்கப்படுபவர்.ஒரு மாணவனை தன்னம்பிக்கை மிகுந்த மனிதன் ஆக்குவது ஆசிரியர்கள்தான். இப்படி மாணவர்களின் வாழ்வில் ஒரு பெரும் பங்கை வகிப்பதால் தான் ஆசிரியர்கள் என்றும் போற்றப்படுகிறார்கள். ஆசிரியர் தின நன்னாளில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பல பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி எனப் பல்வேறு போட்டிகளை நடத்தி, மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்குவார்கள். மேலும், சிறந்த ஆசிரியர்களை கௌரவிக்கும் வண்ணமாக அவர்களுக்கு விருதுகள் வழங்கி அரசு அவர்களைப் பெருமைப்படுத்தும். மாணவர்களும், அந்நாளில் தங்களுக்குப் பிடித்த ஆசிரியர்களுக்கு அன்பளிப்புகளை வழங்கி, வாழ்த்துக்கள் தெரிவிப்பர். இத்திருநாளில் பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்கள் என இந்தியா முழுவதும் விடுமுறை அளிக்கப்பட்டு ஆசிரியர்களுக்கு மரியாதை தரும் வகையில் சிறப்புகள் செய்யப்பட்டு வருகிறது.சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் செப்டம்பர் 05, 1888ல் திருத்தணி அருகே உள்ள சர்வபள்ளி என்ற இடத்தில் ஒரு ஏழை பிராமண குடும்பத்தில் பிறந்தார். தத்துவத்தை முதற்பாடமாகக் கொண்டு இளங்கலைத் துறையில் பி.ஏ. பட்டமும், பின்னர் முதுகலைத் துறையில் எம்.ஏ. பட்டமும் பெற்றவர். சென்னையில் உள்ள பிரிசிடென்சி கல்லூரியில் உதவி விரிவுரையாளராகத் தன்னுடைய ஆசிரியர் பணியைத் தொடர்ந்த அவர், இந்து மத இலக்கியத் தத்துவங்களான உபநிடதங்கள், பகவத்கீதை, பிரம்மசூத்திரா, மற்றும் சங்கரா, ராமானுஜர், மாதவர், போன்றோரின் வர்ணனைகளையும் கற்றுத் தேர்ந்தார். அதுமட்டுமல்லாமல், புத்தமத மற்றும் ஜெயின் தத்துவங்களையும், மேற்கத்திய சிந்தனையாளர்களான பிளாட்டோ, ப்லோடினஸ், காந்த், பிராட்லி, மற்றும் பெர்க்சன் போன்றோரின் தத்துவங்களையும் கற்று, அதன் சிறப்பைப் பற்றி நமது நாட்டில் எடுத்துரைத்தார். மேலை நாடுகளுக்குச் செல்லாமல், நம் நாட்டிலேயே அனைத்து சித்தாந்தங்களையும் படித்து, ஒரு தத்துவமேதையாகத் உலகிற்குத் தன்னை வெளிப்படுத்தினார்.1918 ஆம் ஆண்டு மைசூர் பல்கலைக்கழகத்தின் தத்துவப் பேராசிரியராகத் தேர்வு செய்யப்பட்ட இவர், 1921ல், கல்கத்தா பல்கலைக்கழகத்தில், தத்துவப் பேராசிரியராகப் பரிந்துரைக்கப்பட்டார். அதன் பிறகு 1923ல், டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் அற்புதப் படைப்பான “இந்திய தத்துவம்” வெளியிடப்பட்டது. இப்புத்தகம், பாரம்பரியத் தத்துவம் இலக்கியத்தின் ஒரு தலைச்சிறந்த படைப்பாகப் போற்றப்பட்டது. இந்துமதத் தத்துவங்கள் பற்றி விரிவுரைகள் வழங்க, ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம், டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு அழைப்பு விடுத்தது. பல மேடைகளில், அவரது சொற்பொழிவுகளை இந்தியா சுதந்திரம் அடைவதற்கு ஒரு ஆயுதமாக பயன்படுத்தினார். மேற்கத்திய சிந்தனையாளர்களின் அனைத்து கூற்றுகளும் பரந்த கலாச்சாரத்தில் இருந்து இறையியல் தாக்கங்கள் சார்புடையதாகவே உள்ளது என்று வாதிட்டார். இந்தியத் தத்துவங்களைத் தரமான கல்வி வாசகங்கள் உதவியுடன் மொழிப்பெயர்த்தால், மேற்கத்திய தரங்களையும் மிஞ்சி விடும் என்றுரைத்தார். இவ்வாறு இந்தியத் தத்துவத்தை, ‘உலக வரைபடத்தில் வைத்த ஒரு மாபெரும் தத்துவஞானி’ என டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களைக் கூறலாம்.1931 ஆம் ஆண்டு, டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்கள், ஆந்திரப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1939 ஆம் ஆண்டு, பெனாரஸ் இந்துமதம் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரானார். 1946ல், அவர் யுனெஸ்கோவின் தூதுவராக நியமிக்கப்பட்டார். சுதந்திரத்திற்குப் பின், 1948ல் டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களை, பல்கலைக்கழகக் கல்வி ஆணையத் தலைவராகுமாறு கேட்டுக்கொண்டது. இந்தியக் கல்வி முறையின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், சிறப்பான கல்வித் திட்டத்தை வடிவமைக்கவும், ராதாகிருஷ்ணன் அவர்களுடைய குழுவின் பரிந்துரைகள் பெரிதும் உதவியது. இயற்கையோடு இயைந்த முறையிலான கல்வியை அவர் என்றும் வரவேற்றார். மனிதனுக்குக் கல்வி பெறும் திறன் இருப்பதுதான் அவனை விலங்கிலிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது என்றார்.கல்வியின் நோக்கம் மனித மனத்தில் ஒளி பாய்ச்சி, அவனுக்குள்ளே இருக்கும் குரங்கு தன்மையை நீக்கி, இதயத்தில் அன்பை வளர்த்து, அனைவற்றிற்கும் மேலாக உயிரோட்டமுள்ள கற்பனைத் திறனை உருவாக்குவதாகும். விஞ்ஞானத்தையும் தொழில் நுட்பத்தையும் மட்டும் கற்பிக்கும் கல்வி ஒரு மனிதனை சிறு தொழில் நுட்பாளனாக உருவாக்குமே தவிர நல்ல மனிதனாக ஆக்காது என்பதை வாதிட்டார். விஞ்ஞானம் அவனுக்கு இயற்கையை வெற்றி கொள்ளவும் பூமியைச் சூறையாடவும் உதவியிருக்கிறது. காற்றில் பறக்கவும் கடலுக்கடியில் நீந்தவும் அவனுக்கு சக்தி அளித்துள்ளது. இவையனைத்தும் மனிதனின் உண்மையான இயல்பு அல்ல. மனிதன் தன்னுடனேயே அமைதியான வாழும் திறனைக் கல்வி அவனுக்கு அளிக்கவில்லை என்று சாடினார்.இந்திய சுதந்திரம் மற்றும் இந்தியக்கல்வி இரண்டிலும் தீவிர அக்கறை கொண்டவராக இருந்தார். மனிதனுடைய வாழ்வு விலங்குகளிடமிருந்து வேறுபட்டுள்ளதை தனது பல்வேறு உரைகளில் எடுத்துரைக்கச் செய்தார். மனிதனை கடவுளின் படைப்பின் மகுடம் என்றும் மனம் போனபோக்கில் செல்லாமல், தான் என்ன செய்ய வேண்டும் என்பதைச் சுதந்திரமாக தெரிவுச்செய்து செயல்படக் கூடியவனாக விளங்க வேண்டும் என்றார். மேலும் அவர் நாம் அனைவருமே வாழ்க்கையின் பொருள் என்னவென்பதையும், வாழ்வின் நோக்கம் என்னவென்பதையும் அறிய வேண்டியவனாகிறோம் என்றும் ஒவ்வொருவரும் வாழ்க்கைக்கான திட்டத்தையும், நோக்கத்தையும் அறிந்து கொள்ளாமல் அமைதி காண இயலாது என்கிறார். உங்களது இலட்சியமும் நம்பிக்கையும் ஒரு கோட்பாட்டில் அமையாவிட்டால், உங்கள் நடத்தை சஞ்சலமடைந்து முயற்சி (சக்தி) வீணாகிவிடும் என்கிறார். அதிலும் கோட்பாட்டில் நம்பிக்கை உறுதிப்படுத்துவதன் மூலம் தான் நடத்தை உருவாகிறது என்பதை திறம்பட உரைக்கிறார்.ஒவ்வொரு மனிதனும் தனித்த வாழ்க்கையன்றி மற்ற மனிதர்களுக்கிடையில்தான் வாழ்கின்றான். இதன் விளைவாக தோன்றியதுதான் நாகரீகம். ஓவ்வொருவரும் இன்பங்களை அனுபவித்து மகிழ்ச்சியுடன் வாழ மற்றவரின் ஒத்துழைப்பும் இணக்கப்பண்பும் அவசியம் என்பதை மேலும் வலியுறுத்துகிறார். கோழைத்தனத்தை வெறுத்து தைரியத்தை ஆதரித்ததோடு; தைரியம் இல்லாமல் எந்த நற்பண்பும் வாழ முடியாது என்றும்; எல்லா அம்சங்களையும் கவனமாகக் கணித்து திட்டமிட்டு தைரியமாக செயல்படுத்த வேண்டும் என்பதே அவரின் தின்னமான கருத்தாக இருந்தது. நாம் எப்போதும் நிகழ்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாது. ஆனால் அணுகுமுறைகளை மாற்றிக் கொள்ள முடியும் என்றார். டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்க்கு 1954 ஆம் ஆண்டு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசுத் துணைத்தலைவரும், இரண்டாவது குடியரசுத் தலைவரும் ஆவார். பாரத ரத்னா டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் ஏப்ரல் 17, 1975ல் தனது 86வது அகவையில் சென்னையில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.என்றென்றும் மாணவர் உலகில் நறுமணம் வீசிட செய்திடும் ஆசிரியர் உலகுக்கு ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்..
Source By: itstamil, Wikipedia.
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
அணுவியல், இயந்திரவியல் மற்றும் வெப்ப இயக்கவியல் துறைகளில் முக்கிய பங்களிப்புகளைச் செய்த லுட்விக் எட்வர்ட் போல்ட்சுமான் நினைவு தினம் இன்று (செப்டம்பர் 05,1906).
by mohan
written by mohan
லுட்விக் எட்வர்ட் போல்ட்சுமான் (Ludwig Eduard Boltzmann) பிப்ரவரி 20, 1844ல் ஆஸ்திரியா நாட்டில் உள்ள வியென்னாவில் பிறந்தார். இவரின் தந்தை ஒரு வருமான வரி அதிகாரி. தாயும் பாட்டியும் கடிகாரம் விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார்கள். வசதி நிறைந்த போல்ட்சுமானுக்கு ஆசிரியர்கள் வீட்டுக்கே வந்து பாடம் நடத்தினார்கள். இவரது 14 வது வயதில் இவரின் தந்தை காலமாகிவிட்டார். படிப்பு பாதியில் நின்று போனது. இருந்தாலும் தனது 19 வது வயதில் வியன்னா பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பிரிவில் விடுபட்ட கல்லூரி படிப்பைத் தொடர்ந்தார். அன்றைக்கு பிரபலமாக இருந்த இயற்பியல் பேராசிரியர்கள் இவருக்குப் பாடம் எடுத்தார்கள். 1866ல் முனைவர் பட்டம் பெற்றார். பின்னர் கணித இயற்பியலில் ஆழ்ந்த ஆய்வுகளை மேற்கொண்டு சாதித்தார் போல்ட்ஸ்மேன்.அணு மற்றும் அணுத்துகள்கள் மீது தான் போல்ட்சுமேனின் முழு கவனமும் இருந்தது. ‘மேக்சுவெல் போல்ட்சுமேன் பகிர்வு’, ‘மேக்சுவெல் போல்ட்சுமேன் புள்ளிவிவரம்’ ஆகியவை தான் இயந்திரவியலில் அடிப்படைக் கற்களாகத் திகழ்ந்து கொண்டிருகின்றன. போல்ட்ஸ்மேன் கண்டறிந்து அறிவித்த இத்ததகைய விதிகள், குவாண்டம் கோட்பாட்டின் துணையின்றி தன்னிச்சையாகவும் சுலபமாகவும் புள்ளி விவர அடிப்படையிலான இயந்திரவியலை புரிந்து கொள்ள மிகச்சிறந்த சாதனமாக அமைந்தன. வெப்பம் என்றால் என்ன? தட்பவெப்பம் எவ்வாறெல்லாம் ஓரிடத்தில் மாறுபடுகின்றது என்றெல்லாம் வெப்பம் என்பதன் முழு அர்த்தத்தையும் புரிந்து கொள்ள போல்ட்ஸ்மேன் கோட்பாடுகள் அமைந்தன. ‘தெர்மோ டைனமிக்ஸ்’ என்பது இயற்பியலின் ஒரு முக்கிய கூறு. வெப்பம் மற்றும் வெப்பம் கொண்டு செல்வது என்பது பற்றிய படிப்பு.பெட்ரொலை எரிப்பதன் மூலம் ஏற்படும் வெப்பாதால் மோட்டார் வாகனங்கலை இயக்குவது இந்தக் கோட்பாட்டின் அடிப்படை தான். இந்த இயக்கத்தில் ஈடுபடும் வாயுக்களுக்கு ஓடும் அணுக்களைக் கொண்டும் சமன்பாடுகளை நிறுவி வடிவமைத்து விளக்கினார், போல்ட்ஸ்மேன். கணிதத்தின் புள்ளியியல் துணை கொண்டு இயற்பியலின் அணு ஓட்டத்தை அணுகி விளக்கிய முதல் அறிவியலாளர் இவரே. புள்ளியியல் இயந்திரவியல் மற்றும் புள்ளியியல் வெப்ப இயக்கவியல் துறைகளில் பங்களிப்புகளுக்காக அறியப்படுகிறார். நகர்ந்து கொண்டிருக்கும் வளிமங்கள்மீது சீரான ஆய்வுகள் மேற்கொண்டு இந்த இயக்கத்துகான சமன்பாட்டினை வரையறுத்துத் தந்தார். அணுவியல் கோட்பாடு முழுதும் அறியப்படாத கால கட்டத்திலேயே அத்துறைக்கு பல முக்கிய பங்களிப்புகளைச் செய்தார்.1885 ஆம் ஆண்டில் அவர் இம்பீரியல் ஆஸ்திரிய அகாடமி ஆஃப் சயின்ஸில் உறுப்பினரானார். 1887ல் கிராஸ் பல்கலைக்கழகத்தின் தலைவரானார். அவர் 1888 இல் ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆஃப் சயின்ஸின் உறுப்பினராகவும், 1899ல் ராயல் சொசைட்டியின் (ஃபோர்மெம்ஆர்எஸ்) வெளிநாட்டு உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். லுட்விக் எட்வர்ட் போல்ட்ஸ்மான் செப்டம்பர் 05,1906ல் தனது 62வது அகவையில் இத்தாலியில் இவ்வுலகை விட்டு பிரிந்தார். போல்ட்ஸ்மேனின் கோட்பாடுகளுக்கு அவர் உயிருடன் இருக்கும் வரை ஒரு பக்கம் எதிர்ப்பும் இருந்து வந்தது. இதனால் அவர் மோசமான மனபாதிப்புக்குள்ளானார். எரிச்சல் மற்றும் விரக்தியின் உச்சிக்கே சென்று பலமுறை தற்கொலை முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். வாழும் வரை இவரின் அருமையை புரிந்து கொள்ளாதவர்கள் இவரின் மறைவுக்குப் பின் தான் அதனைப் புரிந்து கொண்டார்கள்.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
புளியங்குடி பகுதியில் செல்போன் கடையை உடைத்து திருடிய 3 நபர்கள் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். துரிதமாக செயல்பட்டு கொள்ளையர்களை கைது செய்த புளியங்குடி காவல்துறையை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். தென்காசி மாவட்டம், புளியங்குடி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் முத்துசாமி என்பவருக்கு சொந்தமான செல்போன் கடையை மர்ம நபர்கள் உடைத்து அதிலிருந்து ரூபாய் 10 லட்சம் மதிப்பிலான செல்போன்களை கொள்ளை அடித்ததுடன், மேலும் மற்றொரு கடையிலும் கொள்ளையடிக்க முயற்சித்துள்ளனர். இதனால் அப்பகுதி மக்கள் பீதியில் இருந்து வந்த நிலையில் புளியங்குடி காவல் ஆய்வாளர் ராஜாராம் தலைமையிலான காவலர்கள் மற்றும் தனிப்படையினர் துரிதமாக செயல்பட்டு 24 மணி நேரத்திற்குள் கொள்ளையர்களை சுற்றி வளைத்து கொள்ளையடித்த 3 நபர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.காவலர்களின் இச்செயலை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான நிலத்தை மாநில அரசிடமிருந்து மத்திய அரசுக்கு வகை மாற்றம் செய்வதற்கு ஒன்னே முக்கால் ஆண்டுகள் எடுத்துக் கொண்டார்-நாடாளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன் குற்றச்சாட்டு.
by mohan
written by mohan
டெல்லியில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில்:-மைசூரிலிருந்து தமிழ் கல்வெட்டுகளை தமிழன் கொண்டு வருவது குறித்த கேள்விக்கு-மைசூரில் உள்ள தமிழ் கல்வெட்டுகளை உயர்நீதிமன்ற உத்தரவின்படி விரைவாக தமிழகம் கொண்டுவர உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை இடமாற்றம் செய்யக் கூடிய பிரச்சினை மட்டும் அல்ல அங்கு அந்த கல்வெட்டுக்கள் குறித்து ஆய்வுகள் செய்வதற்கு நடைமுறை சிக்கல்கள் உள்ளன மேலும் தமிழகத்தில் கல்வெட்டு குறித்து படிக்க கூடிய மாணவர்கள் அந்த கல்வெட்டுகளை எளிதில் அணுக இயலவில்லை எனவே இந்த கல்வெட்டுகளில் இடமாற்றம் என்பது சமூக மக்கள் அந்தக் கல்வெட்டில் என்ன இருக்கிறது என்பதை தெரிந்து கொள்வதற்கும் ஒரு வாய்ப்பாக அமையும் கருதுகிறேன் என்றார்.-எய்ம்ஸ் எப்பொழுது முடியும் என்று தெரியாது என்று மத்திய அரசின் அறிவிப்பு குறித்த கேள்விக்கு-மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் நானும், விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் மாணிக் தாகூர் அவர்களும் தொடர்ச்சியாக இதில் தலையிட்டு கொண்டிருக்கிறோம் வருகின்ற நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடப்பதற்கு முன்பாக இது குறித்து தென்மாவட்டங்களின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டு கூட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளோம் எய்ம்ஸ் ஒவ்வொரு பணியையும் தொடர்ச்சியாக கண்காணித்து அவற்றிற்கான அழுத்தத்தை கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் கூறியது போல கடந்த ஆண்டுகளில் மெத்தனம் இருந்ததை நாம் பார்க்கிறோம் இனியும் அது தொடராமல் அரசியல் ரீதியாக அனைத்து அழுத்தத்தையும் கொடுப்போம்.*-மேற்கு தொகுதியில் கலைக்கல்லூரி வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கேட்டுள்ளது குறித்த கேள்விக்கு-.முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் திருப்பரங்குன்றம் பகுதியில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கான நிலத்தை மாநில அரசிடமிருந்து மத்திய அரசுக்கு வகை மாற்றம் செய்வதற்கு ஒன்னே முக்கால் ஆண்டுகள் எடுத்துக் கொண்டனர் மக்கள் மீது எந்த ஒரு அக்கறையும் இல்லாத அரசாகத்தான் கடந்த காலங்களில் இருந்துள்ளனர்.இப்போது மதுரை மேற்குத் தொகுதி க்கு அரசு கல்லூரி வேண்டும் என ஒரு சட்டமன்றஉறுப்பினர் தனது தொகுதிக்காக பேசுவது வரவேற்கத்தக்கது. அதனை தமிழக அரசு படிப்படியாக செய்ய வேண்டும் என நானும் வலியுறுத்துகிறேன்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை மேல அனுப்பானடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் வாலிபர் கொலை .
by mohan
written by mohan
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா ஆப்பனூர் கிராமத்தை சேர்ந்தவர் கலைஞர்நதி.இவருடைய மகன் மகேஸ்வரன் வயது 24, இவர் மதுரை கீழவாசல் பகுதியில் உள்ள பாத்திரக் கடையில் பணிபுரிந்து வருகிறார்.இவர் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஒன்றியத்துக்குட்பட்ட மேல அனுப்பானடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் தனது நண்பர் மாரீஸ்வரன் என்பவருடன் குடியிருந்து வருகிறார்.இந்நிலையில் இவர் தான் தங்கியிருந்த வீட்டில்வந்த மர்ம கும்பல் இரண்டு பேரையும் சரமாரியாக தாக்கி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டது.அதை தொடர்ந்து காலையில் வெகு நேரமாகியும் கதவு திறக்கப்படாததால் அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது மகேஸ்வரன் என்பவர் வெட்டு காயத்துடன் பிணமாக கிடந்தார் மேலும் மாரீஸ்வரன் என்பவர் படுகாயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.இவர்களைக் கண்டதும் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவரை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.தகவல் அறிந்து விரைந்து வந்த கீரைத்துரை காவல் துறையினர் மற்றும் தடயவியல் நிபுணர்கள்பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து கொலைக்கான காரணம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை மாநகராட்சி மற்றும் தேசிய வியாபாரிகள் கூட்டமைப்பு சார்பில், இணைந்து நடத்திய விழிப்புணர்வு நிகழ்ச்சியில் துப்புரவு பணியாளர்களுக்கு கொரோனா நிவாரண பொருட்களை வழங்கினார், மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர். கூட்டமைப்பின் மாநில துணை அமைப்பாளர் மதுரை மாவட்டம் எஸ் கிருஷ்ணமூர்த்தி, மாநில பொருளாளர் விநாயகமூர்த்தி, மாநில மகளிரணி தலைவர் நாகம்மாள், மாநில துணைத் தலைவர் பீட்டர் ஞானசேகரன், மாநில துணைப் பொதுச் செயலர் குமரேசன், மாநில துணைப் பொதுச் செயலர் ராமன், மாநில துணைத் தலைவர் ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராஜபாளையம் பஞ்சு மார்க்கெட் பகுதியில் பஞ்சு மற்றும் கழிவு பஞ்சு விற்பனை மதிப்பு மீதான சந்தை நுழைவு வரியை ரத்து செய்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்த பஞ்சு வியாபாரிகள்.
by mohan
written by mohan
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் நேரு சிலை அருகே பஞ்சு மார்க்கெட் உள்ளது இராஜபாளையத்தில் நூற்பாலைகள் மற்றும் பஞ்சு விற்பனை அதிகமாக நடைபெறுவதால் இந்த பகுதிக்கு பஞ்சு மார்க்கெட்டை என்று அழைக்கப்படுகிறது அந்த அளவுக்கு இங்கு பஞ்சு வியாபாரம் அதிகளவில் நடைபெற்று வருகிறது .இங்கு தமிழகத்தில் விளையக்கூடிய பருத்தி மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பருத்தியை பிறித்து பஞ்சாக மற்றி விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன .பஞ்சு மற்றும் கழிவுப் பஞ்சு விற்பனை மதிப்பு மீது சந்தை நுழைவு வரி 1 % (ஒரு சதவீத ) வரி செலுத்தி வந்த் நிலையில் இன்று சட்டப்பேரவையில் 110 விதியின் படி முதலமைச்சர் மு க ஸ்டாலின் பஞ்சு மற்றும் கழிவுப் பஞ்சு விற்பனை மதிப்பு மீதான சந்தை 1% வரியை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார் .இதையடுத்து தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து விதமாக பந்த மார்க்கெட் நேரு சிலை அருகே அனைத்து பஞ்சு வியாபாரிகள் . வில்லோ ஃபேக்டரி உரிமையாளர்கள் சார்பில் பட்டாசு வெடித்து முதல்வருக்கு நன்றி தெரிவித்துக்கொண்டனர் மேலும் தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் பஞ்சின் மேல் உள்ள ஒரு சதவீத விற்பனை மதிப்பு சந்தை நுழைவு வரியையும் ரத்து செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்..
செய்தியாளர் வி காளமேகம்
You must be logged in to post a comment.