மதுரை மாவட்டத்தின் மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் பிரபல டீ தூள், மற்றும் பெருங்காயம், பல்பொடி. மூக்குப் பொடி உள்ளிட்ட நிறுவனங்களின் பெயரில் போலியாக தயாரிக்கப்பட்ட பொருட்கள் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டு வருவதாக தொடர்ந்து புகார் எழுந்தது, இந்த நிலையில் தனியார் நிறுவனத்தின் மேலாளர் முகமது அப்துல் என்பவருக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி மதுரை புது ராமநாதபுரம் பகுதியில் உள்ள தனியார் குடோனில் சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்துள்ளது,அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற மேலாளர் தனிப்படை காவல்துறையினர் உதவி உடன் அதிரடி சோதனை செய்தபோது பிரபல நிறுவனங்களின் பெயரில் மூட்டை மூட்டையாக டீ தூள் மற்றும் காப்பி பொடி,பல் பொடி பெருங்காயம் மூக்குப்பொடி உள்ளிட்ட பொருட்கள் இருப்பது தெரிய வந்தது, அதனைத் தொடர்ந்து உற்பத்தி செய்வதற்காக வைத்திருந்த 6 இயந்திரங்கள் மற்றும் பெருட்களை பறிமுதல் செய்த காவல்துறையினர் போலியாக பொருட்கள் உற்பத்தி செய்த அதே பகுதியை சேர்ந்த சௌந்தரபாண்டியன் என்ற குடோனில் உரிமையாளரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
Category:
செய்திகள்
திருப்பரங்குன்றம் அருகே வயிற்று வலியால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட 17 வயது சிறுமி ; உடலைக் கைப்பற்றி ஆஸ்டின்பட்டி போலீசார் விசாரணை.
by mohan
written by mohan
மதுரை திருப்பரங்குன்றம் தேவி நகர் பகுதியில் வசித்து வருபவர் ரவி இவரது ஒரே மகளான 17 வயதுடைய அங்காள ஈஸ்வரி சில தினங்களாக மாதாந்திர வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.இந்தநிலையில் நேற்று காலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அங்காள ஈஸ்வரி சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதைக்கண்ட சிறுமியின் பெற்றோர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர் ஆனால் மருத்துவர் ஏற்கனவே சிறுமி இறந்துவிட்டதாக கூறினார்.இதனையடுத்து தகவலறிந்து வந்த ஆஸ்டின்பட்டி போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசியல் ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.தொடர்ந்து இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தனக்கன்குளத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 7 பவுன் தங்கம்,அரை கிலோ வெள்ளி மற்றும் 40 ஆயிரம் கொள்ளைபோலீசார் மர்ம நபர்களுக்கு வலைவீச்சு.
by mohan
written by mohan
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா தனக்கன்குளம் பி.ஆர்.சி காலனி சேர்ந்த காமராஜ் இவர் சென்ற மாதம் 26 ஆம் தேதி தனது வீட்டை பூட்டி விட்டு வேலூரில் உள்ள அவரது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார்.இதனை நோட்டமிட்ட மர்ம நபர் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 7 பவுன் தங்கம், அரை கிலோ வெள்ளி மற்றும் 39,700 ரூபாய் பணத்தை திருடிச் சென்றுள்ளார்.இந்த நிலையில் நேற்று மாலை 5 மணி அளவில் காமராஜ் வீட்டில் வந்து பார்த்த போது பின்பக்க கதவு உடைத்து பீரோவில் இருந்த தங்கம் மற்றும் வெள்ளி பணம் உள்ளிட்ட பொருட்களை திருடிச் சென்றது தெரியவந்தது.இதுகுறித்து திருநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திருப்பரங்குன்றம் அருகே வில்லாபுரம் மீனாட்சி நகர் பகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் காங்கிரஸ் வட்டாரத் தலைவர் கண்ணன் மற்றும் உள்ளூர் அமினேஷன் நாடார் உறவின்முறை சங்க நிர்வாகிகள் இணைந்து பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர் மேலும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர் வட்டாரத் தலைவர் கண்ணன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்…செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி யின், 30வதுஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவப்படத்திற்கு விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் ப.மாணிக்கம் தாகூர் அவர்கள் மதுரை திருநகர் அலுவலகத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவு தினத்தை தீவிர வாத எதிர்ப்பு தினமாக அனுஷ்டிக்கப்பட்டது.மேலும் பொதுமக்களுக்கும் முககவசம் அனைவருக்கும் வழங்கப்பட்டது மேலும் காங்கிரஸ் கட்சியினர் அனைவரும் உறுதி மொழி எடுக்கப்பட்டது.சுகாதார பணியாளர்கள் பணியை பாராட்டி விருதுநகர் எம்.பி அவர்கள் மதிய உணவு, மற்றும் முககவசமும் வழங்கப்பட்டது.உடன் மதுரை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் பாண்டியன் மற்றும் பழனிக்குமார்,மாநில செயலாளர்கள் மகேந்திரன் ஜெய்ஹிந்துபுரம் முருகன் சரவணபகவான் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ஹலோ திருவண்ணாமலை – பொதுமக்களிடம் பெரும் வரவேற்பு உள்ளது;மாவட்ட காவல்துறை தகவல்
by mohan
written by mohan
வாட்ஸ் அப்பில் புகார் அளிக்கும் ஹலோ திருவண்ணாமலை போலீஸ் திட்டத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்து இருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளதுஇது சம்பந்தமாக திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில் கூறியிருப்பதாவது திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன் குமார் ரெட்டி திருவண்ணாமலை மாவட்ட பொதுமக்களின் நலன் கருதி கொண்டு கடந்த 17 2021 அன்று பொதுமக்கள் தங்கள் இருப்பிடத்தில் இருந்தபடியே காவல்துறையை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு மற்றும் வாட்ஸ்அப் வாயிலாக குறுஞ்செய்திகள் மூலம் புகார் அளிக்கும் வகையில் திருவண்ணாமலை போலீஸ் 9988 857 666 என்ற சிறப்பு காவல் கட்டுப்பாட்டு அறை எண்னை தொடங்கி வைத்தார்.இந்த சிறப்பு காவல் கட்டுப்பாட்டு அறை எண் திருவண்ணாமலை மாவட்ட பொது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் கடந்த 17.6.2021 அன்று முதல் பொதுமக்களிடமிருந்து தொலைபேசி அழைப்புக்கள் மற்றும் குறுஞ்செய்திகள் வாயிலாக புகார் பெறப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது அந்த வகையில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் குரல் அழைப்பு மற்றும் வாட்ஸ்அப் குறுஞ்செய்தி வாயிலாக மொத்தம் 791 புகார்கள் பெறப்பட்டு அவற்றில் 753 புகார்கள் மீது உடனடி விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்து முடிக்கப்பட்டுள்ளது மேலும் கடந்த 23.6.2001 அன்று வாட்ஸ்அப் குறுஞ்செய்தி வழியாகப் பெறப்பட்ட புகாரினை அடுத்து திருவண்ணாமலை நகர உட்கோட்டம் மங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மயானகுளம் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கு நடக்கவிருந்த குழந்தைத் திருமணம் காவல்துறையினர் மற்றும் சமூக நலத்துறை அலுவலர்கள் விரைந்து சென்று தடுத்து நிறுத்தி நடவடிக்கை எடுத்துள்ளனர்மேலும் சட்டவிரோதமாக நடக்கும் குற்றங்கள் தொடர்பாக புகார்கள் பெறப்பட்டு அதன் பேரில் 14 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது இவ்வாறு திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
வேலூர் மாவட்டத்தில் அனைத்து காவல்நிலைய செயல்பாடுகளை மாவட்ட காவல்கண்காணிப்பாளருக்கு தகவல் சொல்லவேண்டும் என்பது எஸ்.பி. தனிப்பிரிவு காவலர்களின் கடமை.ஆனால் தனிப்பிரிவு காவலர்கள் சட்டவிரோத செயல்களில் ஈடுப்படுவோர்களிடம் கூட்டணி அமைத்து செயல்பட்டு கொள்ளையடித்து வந்தனர்.கட்டப்பஞ்சாயத்து, சாராயமாமூல், திருடர்கள், கொள்ளையர்களின் மாமூல்களில் திளைத்தவர்களை மாற்ற வேலூர் சரக டிஐஜி பாபு உத்தரவுப்படிஎஸ்.பி.செல்வக்குமார் 22 எஸ்.பி. தனிப்பிரிவு காவலர்களை மாற்றி உத்தரவிட்டார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா விரகனூர் பகுதியில் வசித்து வருபவர் சுப்பிரமணியபிள்ளை இவரது மனைவி பூமயில் (வயது 85) இறந்த பூ மயிலுக்கு கதிரேசன் செந்தில் ரேவதி தமிழச்சி என இரண்டு மகன்கள் இரண்டு மகள்கள் உள்ளனர்.கூட்டுக் குடும்பமாக வசித்து வரும் வீட்டில் நேற்று இரவு செந்தில் குடிபோதையில் பூ மயிலின் கழுத்தில் துண்டை வைத்து நெருக்கிக் கொலை செய்ததாக கூறப்படுகிறது.செந்திலுக்கு குடிப்பழக்கத்தால் அடிக்கடி வீட்டில் குடிபோதையில் அடிக்கடி தகராறு செய்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில் நேற்று இரவு குடிபோதையில் தகராறு செய்து பூ மயிலை துண்டால் நெரித்து கொலை செய்ததாக கூறப்படுகிறது.இது குறித்து பொலிஸாருக்கு அளித்த தகவலின்பேரில் சிலைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சோழவந்தான் ஜெனகை நாராயணபெருமாள் கோவில் வளாகத்தில் ஆபத்தான நிலையில் தென்னைமரங்கள் விபத்து நடக்கும் முன்பு நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை.
by mohan
written by mohan
மதுரை மாவட்டம் சோழவந்தான் இந்து அறநிலைய ஆட்சித் துறைக்கு சொந்தமான, ஜெனக நாராயணபெருமாள் கோவில் வளாகத்தில் தென்னை மரங்கள் உள்பட இங்குள்ள மரங்கள் மிகவும் பழமை வாய்ந்தது. இந்த மரங்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த கனமழைக்கு பழுது அடைந்து பொதுமக்கள் குடியிருக்கும் பகுதியில் கூரை மேல் விழுந்தது. இதில், அந்தப் பகுதியில் குடியிருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். மேலும், கூரையின் மேல் பகுதியில் மின்சார வயர்கள் செல்வதால், மரங்கள் மின்சார வயர் மீது விழுந்து பெரும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக அந்த பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர். இதுகுறித்து, இப் பகுதியில் உள்ள பொதுமக்கள் சம்பந்தப்பட்ட கோவில் நிர்வாகத்திடம் புகார் கொடுத்துள்ளனர். இதுகுறித்து, கோவில் நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், பொது மக்கள் இப்பகுதியில் அச்சத்தில் நடமாடுகிறார்கள். கோவில் வளாகத்தில் உள்ள பட்டுப்போன தென்னை மரங்கள் முறிந்து விழுந்தால், அருகில் செல்லக் கூடிய உயர் அழுத்த மின் வயர் மீது விழுந்து ஆபத்தை விளைவிக்க கூடிய நிலையில் உள்ளது. இது மட்டுமல்லாது, அந்த தெருவில் நடந்து செல்லக்கூடிய பொதுமக்கள் மீது மரம் விழுந்து ஆபத்து விளைவிக்கக்கூடிய நிலையில் உள்ளதாக இப்பகுதி சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர். ஆகையால், கோவில் நிர்வாகம் துரித நடவடிக்கை எடுத்து ஆபத்தான பட்டுப்போன தென்னை மரங்களை அகற்ற வேண்டும் என்று கூறுகின்றனர்.இது குறித்து சமூக ஆர்வலர் நாராயணன் கூறும்போது, எங்கள் தெருவில் வசிக்கக்கூடிய மக்கள் மற்றும் இந்த தெருவில் நடக்கக் கூடிய பொது மக்களும் இந்த பட்டுப்போன தென்னை மரங்கள் குறித்து ஜனக நாராயணப்பெருமாள் கோவில் செயல் அலுவலரிடம், பட்டுப்போன தென்னை மரங்களை அப்புறப்படுத்த புகார் மனு கொடுத்துள்ளோம். எந்தவித நடவடிக்கை எடுக்காததால், இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கோவில் அலுவலகத்துக்குச் சென்று நேரடியாக செயல் அலுவலரிடம் தெரிவித்தும், கோவில் நிர்வாகம் இதை பற்றி கண்டுகொள்ளவில்லையாம். ஆகையால், பட்டுப்போன தென்னை மரங்களால் பொது மக்களுக்கு ஏற்படக்கூடிய ஆபத்துகளுக்கு கோவில் நிர்வாகமே பொறுப்பு ஏற்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர்பி.மூர்த்தி தலைமையில் பூமி பூஜை நடைபெற்றது.மதுரை மாநகராட்சி மாட்டுத்தாவணி பிரஸ் காலனியில் மின் மற்றும் எரிவாயு மயானம் அமைப்பதற்கான பூமி பூஜையை மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.அனீஷ்சேகர்,மாநகராட்சி ஆணையாளர் மரு.கா.ப.கார்த்திகேயன், ஆகியோர் முன்னிலையில், மாண்புமிகு வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர்பி.மூர்த்தி தலைமையில் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில்அமைச்சர்பேசியதாவது:தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் சார்பில் சுமார் ரூ.1 கோடி மதிப்பீட்டில் பிரஸ் காலனியில் நவீன மின் மயானம் அமைப்பதற்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது. இப் பகுதிவாழ் மக்களுக்கு மிக முக்கிய தேவையாக இந்த மயானம் இருக்கும்.மதுரை மாவட்டத்தில் கொரோனா காலகட்டத்திலும் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் பல்வேறு சிறப்பான பணிகளான ஆயுர்வேதம், சித்தா மருத்துவத்தில் அமெரிக்கன் கல்லூரியில் 100 படுக்கைகள் கொண்ட மருத்துவ படுக்கை வசதிகளை கொண்டு சிகிச்சைக்கு உதவி செய்தார்கள். அதுபோல ,அரசு இராசாசி மருத்துவமனைக்கு ஆக்சிஜன் உற்பத்தி செய்யக்கூடிய இயந்திரங்களை உருவாக்கி கொடுத்தார்கள். கொரோனா மூன்றாவது அலை வருவதை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எல்லா வகையிலும் தமிழ்நாடு அரசு எடுக்கப்பட்டுள்ளது. மதுரையில், ஆக்சிஜன் உற்பத்தி இன்றைக்கு போதுமான அளவிற்கு இருப்பில் உள்ளது.அதேபோல், ஆக்சிஜன் படுக்கை வசதிகளும் தேவையான அளவிற்கு உள்ளது. கடந்த இரண்டு மாத காலத்தில் தூங்கா நகரமான மதுரை மாவட்டத்தில் அனைவரின் ஒத்துழைப்பு மற்றும் பணிகளால்; இன்றைக்கு இறப்பு விகிதம் குறைக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வழிகாட்டுதலின் படி, மதுரை மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி நிர்வாகமும் இணைந்து செயல்பட்டு மாநகர் பகுதிகள், புறநகர் பகுதிகள் என அனைத்து பகுதிகளிலும் கொரோனா தடுப்பூசி பொதுமக்களுக்கு தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா பாதிப்பு குறித்து அதிகமான விழிப்புணர்வு பொதுமக்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது.மதுரை மாவட்டத்தில் கொரோனா மூன்றாவது அலையை எதிர்கொள்ள தேவையான அனைத்து அடிப்படை வசதிகள் முழுமையாக ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றார்.இந்த நிகழ்ச்சியில், சட்டமன்ற உறுப்பினர்பூமிநாதன், மாவட்ட வருவாய் அலுவலர்செந்தில்குமாரி, தமிழ்நாடு தொழில் வர்ததக சங்கத் தலைவர்ஜெகதீசன், முதுநிலைத் தலைவர்ரத்தினவேல், செயலாளர்செல்வம், பொருளாளர்ஸ்ரீதர், துணைத் தலைவர்கள்;தனுஸ்கோடி,பா.ரமேஷ், உதவி செயற்பொறியாளர்மனோகரன், சுகாதார அலுவலர்ராஜ்கண்ணன் உட்பட மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர். வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரைமீனாட்சிபுரம், முல்லை நகர் பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.அப்பகுதி மக்கள் தங்களுடைய வீடுகளை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வீடுகள் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால்,அப்பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.இதையடுத்து அப் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.நீதிமன்ற உத்தரவுப்படி,ஆக்கிரமிப்புக்களை தொடர்ந்து அகற்றப்பட்டு வருவதாக சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.மொத்தம் 500-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிக்கப்படவுள்ளன.இதைக் கண்டித்து அப்பகுதி மக்கள் வீடுகள் முன்பாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனராம்.இந்த வேலையில், மதுரை மாநகராட்சியின், மதுரை மாட்டுத் தாவணி பகுதிகளில் நீர் செல்லும் வாய்க்காலை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டிடங்களையும், அகற்ற ஆர்வம் காட்டவேணும் என, சமூக ஆர்வலர்கள் கோரியுள்ளனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
உச்சிமலை குப்பம் கிராமத்தில் கொரோனா தடுப்பூசி முகாம்; சுகாதார அதிகாரிகள் ஆய்வு.
by mohan
written by mohan
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த உச்சிமலைகுப்பம் கிராமத்தில் தடுப்பூசி முகாம் ஊராட்சி மன்ற தலைவர் கௌசல்யா ரவி தலைமையில் நடைபெற்றது. ஒன்றிய குழு உறுப்பினர் முருகன் ஊராட்சி மன்ற துணை தலைவர் சசிகலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருவண்ணாமலை மாவட்ட சுகாதாரப் பணிகள் நேர்முக உதவியாளர் ராஜேந்திர குமார் தடுப்பூசி முகாமை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் மேலும் பொதுமக்களிடம் கொரோனா தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். செங்கம் வட்டார மருத்துவ அலுவலர் சுரேஷ் உத்தரவின்பேரில் மருத்துவர் ரூபியா முன்னிலையில் நடைபெற்ற தடுப்பூசி முகாமில் உச்சிமலைகுப்பம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் தாமாக முன்வந்து தடுப்பூசி ஆர்வத்துடன் செலுத்தி கொண்டனர். ஊராட்சி எழுத்தர் சங்கர், வார்டு உறுப்பினர்கள், கிராம நிர்வாக அலுவலர் திருமலை, மற்றும் கிராம பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கும்பகோணம் தீவிபத்து: பலியான குழந்தைகளுக்கு 17 ஆண்டு நினைவஞ்சலி மற்றும் விதைப் பந்துகள் இடும் நிகழ்வு.
by mohan
written by mohan
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி கற்க கசடற கல்விக் குழு சார்பில் கும்பகோணம் தீவிபத்தால் 2004 ல் பலியான 94 பள்ளி குழந்தைகளுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் மாணவர்களின் நினைவாக 94 விதைப் பந்துகள் வந்தவாசி பகுதிகளில் மண்டல துணை வட்டாட்சியர் அகத்தீஸ்வரன், வழக்கறிஞர் இரா. மணி ஆகியோர் தலைமையில் வீசப்பட்டது. மேலும் இந்த நிகழ்வில் குழுவின் செயல் தலைவர் மலர் சாதிக் தலைமை வகித்தார். நிறுவனர் இரா. பாஸ்கரன் வரவேற்றார். ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன், தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்க பொறுப்பாளர் மு. பிரபாகரன், எக்ஸ்னோரா கிளை செயலாளர் கு. சதானந்தன், குழு இயக்குநர் ராகுல், துணைத் தலைவர் பரிதா பானு ஆகியோர் மறைந்த குழந்தைகளின் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். இறுதியில் குழு செயலாளர் மனோஜ்குமார் நன்றி கூறினார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கீழக்கரை – இராமநாதபுரம் நெடுஞ்சாலையில் சுங்க இலாகா அதிகாரிகள் திடீர் சோதனை….
by ஆசிரியர்
written by ஆசிரியர்
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையிலிருந்து ராமநாதபுரம் செல்லும் காஞ்சனகுடி சாலையில் இன்று (16/07/2021) இரவில் திடீரென சுங்க இலாகா கண்காணிப்பாளர் சேகர் தலைமையில் ஆய்வாளர் ரஜினிஸ் குமார் அதிகாரி, தலைமைக் காவலர் சுப்பிரமணி, காவலர் ஷேக்தாவூத் காவலர் ஸ்ரீராஜ் உள்ளிட்டோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
இச்சோதனை பற்றி அதிகாரிகளிடம் விசாரித்த பொழுது “இரவு நேரங்களில் ஈசிஆர் சாலை வழியாக பல கடத்தல் செயல்பாடூகளில் ஈடுபடுவதால , அதை கண்காணிக்க இதைப்போல் தினமும் பல இடங்களில் சோதனை செய்து வருகிறோம்” என கூறினார் .
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உலக மக்கள் தொகை தின உறுதி மொழி ஏற்பு..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை சார்பில் உலக மக்கள் தொகை தின உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி 16.07.21 வெள்ளிக் கிழமை நடைபெற்றது. இதில் அனைத்து செவிலியர்களும் கலந்து கொண்டு மாவட்ட வருவாய் அலுவலர் ஜனணி செளந்தர்யா தலைமையில் உலக மக்கள் தொகை தின உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர். மக்கள் தொகை தின விழிப்புணர்வு ரதத்தை மாவட்ட வருவாய் அலுவலர் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
உலக மக்கள் தொகை தினம் 1989-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் ஜூலை மாதம் 11-ந் தேதி கொண்டாடப்படுகிறது. உலக அளவில் மக்கள் தொகை குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு எடுத்து செல்லும் ஒரு முயற்சியாக இந்த தினம் கடைபிடிக்கப்படுகிறது. அந்த வகையில் தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில் உலக மக்கள் தொகை தினம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம் கொண்டாடப்பட்டது. மக்கள் தொகை தின விழிப்புணர்வு ரதம், மாணவ மாணவிகளுக்கான வரைபட விழிப்புணர்வு போட்டிகள், கருத்தரங்கம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. தென்காசி அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற மக்கள் தொகை தின நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜனணி செளந்தர்யா தலைமையில் சுகாதார பணிகள் இணை இயக்குநர் மரு. நெடுமாறன், மரு. அருணா (சுகாதாரப் பணிகள்), மரு. இரா. ஜெஸ்லின் மாவட்ட தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர், மரு. கே. ஜி. அனிதா பாலின் குடும்ப நல நோடல் ஆபிஸர் ஆகியோர் முன்னிலையில், அனைத்து செவிலியர்களும் “தன்னம்பிக்கை, தற்சார்பு கொண்ட நம்நாட்டு மக்களுக்கு நெருக்கடி சூழலிலும், குடும்பநல திட்ட சேவைகளை வழங்குவதை உறுதி செய்வோம்” என்ற உறுதி மொழியை ஏற்றுக் கொண்டனர். மேலும் வரைபட போட்டி, கருத்தரங்கத்தில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசும் வழங்கப்பட்டது. முன்னதாக மக்கள் தொகை தினத்தை கொண்டாடும் வகையில் தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் 11-07-2021 அன்று அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை நுழைவு வாயிலில் மலர் செடிகள் மரு. இரா. ஜெஸ்லின் தலைமையில் நடப்பட்டது.12-07-2021 அன்று கர்ப்பிணி தாய்மார்களுக்கு குடும்ப நலம் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கு மரு. அனிதா பாலின் தலைமையில் நடைபெற்றது. 13-07-2021 அன்று தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை வளாகத்தில் சுமார் 200 மரக்கன்றுகள் நடப்பட்டது. 14-07-2021 மக்கள் தொகை பெருக்கத்தால் ஏற்படும் விளைவுகள் அதனை தடுக்கும் வழிமுறைகள் பற்றிய வரைபட போட்டி மற்றும் மாவட்ட அளவிலான கருத்தரங்கம், செவிலியர் கல்லூரி மாணவிகளுக்கு மரு. இரா. ஜெஸ்லின், மரு. கே.ஜி. அனிதா பாலின் மற்றும் மரு. எஸ். அகத்தியன் ஆகியோர் தலைமையில் மருத்துவமனை கருத்தரங்கு அரங்கில் நடத்தப்பட்டது. 15-07-2021 கர்ப்பிணி தாய்மார்களுக்கு மக்கள் தொகை பெருக்கத்தால் ஏற்படும் விளைவுகள் அதனை தடுக்கும் வழிமுறைகள் பற்றிய குடும்ப நல விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. 15-07-2021 கீழப்பாவூர் நாடார் மேல்நிலை பள்ளியில் உலக மக்கள் தினத்தை முன்னிட்டு உறுதி மொழி ஏற்பு மற்றும் ரத்த தான முகாமை மரு. இரா. ஜெஸ்லின் துவக்கி வைத்தார். மேலும் தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் அவ்வப் போது நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை முக்கு ரோட்டில் ஐயங்கார் பேக்கரி எதிர்புறத்தில் ரமதான் பஜார் ஃபுட் கோர்ட்டில் ஜுபா 10 ரூபா ஸ்நாக்ஸ் கடை புதிதாக திறக்கப்பட்டது.
இக்கடையில் சிறுதானியங்கள், காய்கறி ஊறுகாய், பேல் பூரி, பானி பூரி, டீ, காபி ஐஸ்கிரீம், பாப்கான் போன்றவை 10 ரூபாய்க்கு விற்கப்படுகின்றன. என கடையின் உரிமையாளர் பாசித் தெரிவித்தார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இயல் நிலைக்கு மாறாக நுண்ணோக்கி (Phase-contrast microscopy) கண்டுபிடித்த, நோபல் பரிசு பெற்ற பிரிட்சு செர்னிக்கி பிறந்த தினம் இன்று (ஜுலை 16, 1888).
by mohan
written by mohan
பிரிட்சு செர்னிக்கி (Frits Zernike) ஜுலை 16, 1888ல் வட மேற்கு ஐரோப்பாவில் அமைந்துள்ள நெதர்லாந்து நாட்டின் தலைநகரான ஆம்ஸ்டர்டம் நகரில், பிறந்தார். தந்தையும் (கார்ல் ஃபிரடெரிக் ஆகஸ்டு செர்னிக்கி), தாயும் “(அன்சி தீபெரின்க்)” கணித ஆசிரியர்களாக அமைந்திருந்த செர்னிக்கிகிக்கு, தனது தந்தையை போலவே இவருக்கும் இயற்கையாகவே இயற்பியலில் ஆர்வம் அதிகரித்திருந்தது. தனது ஆரம்ப பள்ளிப் படிப்பை சொந்த ஊரிலேயே முடித்த பிரிட்சு, பெற்றோருடன் இணைந்து மிகவும் சிக்கலான கணக்குகளுக்கு தீர்வுக் கண்டார். பள்ளியில் வரலாறு, உள்ளிட்ட மற்ற பாடங்களில் அவருக்கு சிறிதும் ஈடுபாடு இல்லை என்றாலும், அறிவியல் பாடங்களில் முதல் மாணவனாக திகழ்ந்தார். ஆம்ஸ்டர்டம் பல்கலைக்கழகத்தில் வேதியியல், கணிதம், மற்றும் இயற்பியல் பயின்ற செர்னிக்கி, நிகழ்தகவு (Probability) கோட்பாடுகள் குறித்த ஆய்வுக் கட்டுரைக்காக 1908ல் தங்கப் பதக்கம் வென்றவர்.1908ம் ஆண்டில், பால்மிளிர்வு (Opalescence) குறித்த விரிவான ஆய்வுக்காக டச்சு அறிவியல் சங்கம் இவருக்கு தங்கப் பதக்கம் அறிவித்தது. அத்தங்கப் பதக்கக்கத்திற்கு பதிலாக, பணமாக பெற்று, அத்தொகையை தனது பரிசோதனைகளுக்கும், முனைவர் பட்ட ஆராய்ச்சிகளுக்கும் செலவிட்டார். பின்னர், ‘கிரானிங்கன்’ பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒருவரது அழைப்பை ஏற்று அவருக்கு உதவியாளராகப் பணியாற்றினார். அங்கு கணித இயற்பியல் விரிவுரையாளராக நியமிக்கப்பட்ட அவர், தொலைநோக்கி கண்ணாடிகளின் பிழைகள் குறித்து ஆராய்ந்தார். சிறுவயது ஓய்வு நேரத்தை பல பரிசோதனைகளுக்கே பயன்படுத்திய செர்னிக்கி, பல இயற்பியல் கருவிகளை தனது சேமிப்பிலிருந்து வாங்கி, பரிசோதித்து அவை குறித்து அறிந்துகொண்டார். கண்ணாடி, கண்ணாடி கற்கள், வண்ணங்கள் குறித்த ஆய்வில் மிகவும் ஆர்வம் கொண்டிருந்த அவர். வண்ணப் புகைப்படக் கள ஆராய்ச்சியிலும் ஈடுபட்டு, அதற்குரிய பண வசதி இல்லாததால், புகைப்பட சோதனைகளுக்குத் தேவையான ஈதரை தானாகவே உருவாக்கிக்கொண்டார். மேலும் தனது ஆராய்ச்சிகள் மூலம் புகைப்பட படப்பெட்டி (கேமரா(Camera), சிறிய வானியல் கண்காணிப்பு கருவி உள்ளிட்டவற்றை உருவாக்கினார்1915ல் ஆம்ஸ்டர்டாம் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற பிரிட்சு, பார்வைத் திறன் பற்றிய ஆய்வுகளில் ஈடுபட்டார். மேலும், நிறமாலை (Spectrum) வரிகள் குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டதோடு, அதன் அடிப்படையில் ‘பேஸ் கான்ட்ராஸ்ட் மைக்ரோஸ்கோப்’ (Phase-contrast microscopy) கருவியை மேம்படுத்தினார். 1933ல் வேஜெனிங்கன் (Wageningen) நகரில் நடந்த இயற்பியல், மருத்துவ மாநாட்டில், ‘பேஸ் கான்ட்ராஸ்ட் மைக்ரோஸ்கோப்’ தொழில்நுட்பத்தை விளக்கிக் கூறிய அவர், அதே முறையை ஒளியியல் வில்லைகளின் (Convex lens) திறனை சோதிக்கவும் பயன்படுத்தினார். மேலும், தன் மாணவர்களுடன் இணைந்து, லென்ஸ் முறைகளின் பிறழ்ச்சிகளால் ஏற்படும் பிரச்சினைக்குத் தீர்வு கண்டார். லண்டன் அரச கழகத்தின் (The Royal Society of London) ராம்ஃபோர்ட் பதக்கம், நெதர்லாந்து கலை, அறிவியலுக்கான றோயல் அகாடமி, ராயல் சொசைட்டி உள்ளிட்ட பல அமைப்புகளின் உறுப்பினராக இருந்துள்ள செர்னிகி, பேஸ் கான்ட்ராஸ்ட் மைக்ரோஸ்கோப் (Phase Contrast Microscope) என்ற மகத்தான கண்டு பிடிப்புக்கு உடனடியாக வரவேற்போ, அங்கீகாரமோ பெற இயலவில்லை.பல ஆண்டுகளுக்குப் பிறகு, 1941ல் இரண்டாம் உலகப் போருக்காக செருமனியில் அதிக எண்ணிக்கையில் ‘ஒளி மாறுபாடு நுண்ணோக்கி’ உற்பத்தி செய்யப்பட்டு, அதன் பின்னர்தான் இவரது புகழ் பரவியது. இறுதிவரை பல்வேறு ஆய்வுகளில் ஈடுபட்ட பிரிட்ஸ் செர்னிகிக்கு 1953ல் இயற்பியலுக்கான நோபல் பரிசு கிடைத்தது. ஒர்ன்ஸ்டீன் செர்னிக்கி சமன்பாடு, செர்னிக்கி பல்லுறுப்புக் கோவைகளாகக் காரணியாக்கம், இயல் நிலை ஒளி மாறுபாடு நுண் நோக்கி, போன்ற பற்பல மூலங்களையும், கருவிகளையும், குறிப்பாக, “பேஸ் கான்ட்ராஸ்ட் மைக்ரோஸ்கோப்” (Phase Contrast Microscope) எனும் ஒளி மாறுபாடு நுண்ணோக்கியையும் கண்டறிந்து, நோபல் பரிசையும் வென்ற பிரிட்சு செர்னிகி மார்ச்சு 10, 1966ல் தனது 77வது அகவையில், நெதர்லாந்தின், அமெர்சுபூர்ட் என்ற மாநகரில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
வேலூர் மாவட்டம் பாலாற்றில் 2 தடுப்பணைகள் கட்டப்படவுள்ளது. அதனை ஆட்சியர் குமாரவேல்பாண்டியன் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.சேண்பாக்கம், செதுவாலை பகுதியில் ஆய்வு மேற்கொண்டார்.உடன் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர்கள் ரமேஷ், குமரன் உதவி செயற்பொறியாளர்கள் விஸ்வநாதன், உதவி பொறியாளர்கள் அம்ரிஷ், பாலாஜி, கீதா உள்ளிட்டோர் இருந்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
அவனியாபுரம் அருகே பாண்டியர் காலத்திய ஆறாம் நூற்றாண்டு பாலாம்பிகை திருக்கோவிலில் ஆனி திருமஞ்சனம் விழா நடைபெற்றது.
by mohan
written by mohan
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரம் பகுதியில் பாண்டிய மன்னர் காலத்தில் கட்டப்பட்ட ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த பால மீனாம்பிகை கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோவில் உள்ளது தற்போது விதிமுறைகளின்படி கோவில்கள் திறக்கப்பட்ட சமூக இடைவெளி பூஜைகள் நடந்து வருகிறது இந்நிலையில் இன்று மாலை மீனாம்பிகை கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் உள்ள நடராஜர் சிவகாமி அம்மாள் வியாக்கிரபாதர் பதஞ்சலி மகரிஷி சிலைகளுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது ஆனி மாதம் நடைபெறும் ஆனித்திருமஞ்சன நிகழ்ச்சியில் பக்தர்கள் இன்று சமூக இடைவெளியுடன் நடைபெற்றது
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ஈச்சனேரி பகுதியிலுள்ள கிணற்றில் இரண்டு நாட்களுக்கு மேலாக மிதந்த ஆண் உடல், போலீசார் விசாரணை .
by mohan
written by mohan
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகாவுக்கு உட்பட்ட மண்டேலா நகரை அடுத்த ஈச்சனேரி பகுதியில் கணேசன் என்பவருக்கு சொந்தமான 5 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலத்தில் உள்ள 50 அடி ஆழ கிணற்றில் அடையாளம் தெரியாத ஆண் உடல் மிதப்பதாக அந்தப் பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டு இருந்தவர் பார்த்து காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார்.அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த பெருங்குடி போலீசார் அந்த உடல் நீரில் மூழ்கி உயிரிழந்து இரண்டு நாட்களுக்கும் மேலாக இருக்கும் என்பதும்.மேலும் இறந்தவர் அவனியாபுரம் அடுத்த வைக்கம் பெரியார் நகரை சேர்ந்த பன்னீர் என்பவரின் மகன் சுரேஷ்(41) திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளது என்பது தெரியவந்தது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.கிணற்றுக்கு அருகே மது பாட்டில்கள் இருந்ததாலும், இறந்தவர் உடையுடன் தண்ணீரில் கிடந்ததால் இவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்து தண்ணீரில் வீசப்பட்டாரா..? என்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.