34
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா விரகனூர் பகுதியில் வசித்து வருபவர் சுப்பிரமணியபிள்ளை இவரது மனைவி பூமயில் (வயது 85) இறந்த பூ மயிலுக்கு கதிரேசன் செந்தில் ரேவதி தமிழச்சி என இரண்டு மகன்கள் இரண்டு மகள்கள் உள்ளனர்.கூட்டுக் குடும்பமாக வசித்து வரும் வீட்டில் நேற்று இரவு செந்தில் குடிபோதையில் பூ மயிலின் கழுத்தில் துண்டை வைத்து நெருக்கிக் கொலை செய்ததாக கூறப்படுகிறது.செந்திலுக்கு குடிப்பழக்கத்தால் அடிக்கடி வீட்டில் குடிபோதையில் அடிக்கடி தகராறு செய்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில் நேற்று இரவு குடிபோதையில் தகராறு செய்து பூ மயிலை துண்டால் நெரித்து கொலை செய்ததாக கூறப்படுகிறது.இது குறித்து பொலிஸாருக்கு அளித்த தகவலின்பேரில் சிலைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.