16
மதுரை திருப்பரங்குன்றம் தேவி நகர் பகுதியில் வசித்து வருபவர் ரவி இவரது ஒரே மகளான 17 வயதுடைய அங்காள ஈஸ்வரி சில தினங்களாக மாதாந்திர வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.இந்தநிலையில் நேற்று காலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அங்காள ஈஸ்வரி சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதைக்கண்ட சிறுமியின் பெற்றோர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர் ஆனால் மருத்துவர் ஏற்கனவே சிறுமி இறந்துவிட்டதாக கூறினார்.இதனையடுத்து தகவலறிந்து வந்த ஆஸ்டின்பட்டி போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசியல் ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.தொடர்ந்து இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.