முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி யின், 30வதுஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவப்படத்திற்கு விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் ப.மாணிக்கம் தாகூர் அவர்கள் மதுரை திருநகர் அலுவலகத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவு தினத்தை தீவிர வாத எதிர்ப்பு தினமாக அனுஷ்டிக்கப்பட்டது.மேலும் பொதுமக்களுக்கும் முககவசம் அனைவருக்கும் வழங்கப்பட்டது மேலும் காங்கிரஸ் கட்சியினர் அனைவரும் உறுதி மொழி எடுக்கப்பட்டது.சுகாதார பணியாளர்கள் பணியை பாராட்டி விருதுநகர் எம்.பி அவர்கள் மதிய உணவு, மற்றும் முககவசமும் வழங்கப்பட்டது.உடன் மதுரை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் பாண்டியன் மற்றும் பழனிக்குமார்,மாநில செயலாளர்கள் மகேந்திரன் ஜெய்ஹிந்துபுரம் முருகன் சரவணபகவான் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.