வேடசந்தூர் அருகே ராஜகோபாலபுத்தில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய ஆரம்பள்ளியில் ஜாக்டோ -ஜியோ போரட்டத்தில் ஈடுபட்டு பனியிடைநீக்கம் செய்யப்பட்ட தலைமை ஆசிரியர் தியாகராஜன் என்பவரை மீண்டும் இதே பள்ளியில் பணியில் அமர்த்தக்கோரி பள்ளிமாணவ, மாணவிகளை பெற்றோர்கள் பள்ளிக்கு அனுப்பாமல் புறக்கணித்தனர். அதனால் 187 மாணவ மாணவிகள் படிக்கும் பள்ளியில் 6பேர் மட்டும் வந்தனர்.
Category:
செய்திகள்
இராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே சூரன்காட்டு வலசையைச் சேர்ந்த சேது சம்பத் மகள் பிரீத்தி. இவர் மண்டபம் மறவர் தெருவைச் சேர்ந்த பழனிவாசகம் என்பவரிடம் தனது சொந்த தேவைகளுக்காக கடந்த 2016 ஜன.20 ஆம் தேதி ரூ.2.30 லட்சம் கடன் வாங்கினார். 4 மாதத்திற்குள் பணத்தை திரும்ப கொடுத்து விடுவதாகவும் உறுதியளித்தார். ஓராண்டுக்கு மேலாகியும் பணத்தை பிரீத்தி திரும்ப செலுத்தவில்லை. மீண்டும் 3 மாதம் அவகாசம் கேட்டு கடந்த 28.07.2017 அன்று பிரீத்தி பத்திரம் எழுதி கொடுத்தார். 3 மாதம் கழித்தும் செலுத்தாததால் நேரிலும், செல்போனில் தொடர்பு கொண்டு பல முறை கேட்டு, தான் எதிர்பார்த்த பணம் கிடைக்கவில்லை என கூறி நாட்களை கடத்தி வந்தார்.
இது குறித்து மண்டபம் போலீசில் பழனிவாசகம் புகார் அளித்தார். இதன்படி ரூ.1.15 லட்சம் வீதம், 30.11.18 ல் ஒரு தவணை, 30.5.19ல் மற்றொரு தவணையாக ரூ.2.30 லட்சத்தை செலுத்தி விடுவதாக 24.8.18 ல் உறுதிமொழி எழுதி கொடுத்தார். முதல் தவணை காலம் முடிந்த பிறகும் எவ்வித தொகையும் பிரீத்தி கொடுக்காமல் ஏமாற்றி வந்தார். இதையடுத்து 17.12.18ல் நேரில் சென்று கேட்ட பழனிவாசகத்திற்கு பிரீத்தி மிரட்டல் விடுத்தாக மண்டபம் போலீசில் புகார் கொடுத்தார். புகாரை ஏற்றுக்கொண்ட போலீசார் பிரீத்தி மீது நடவடிக்கை எடுக்கவில்லை.
இது குறித்து ராமநாதபுரம் எஸ்.பி., அலுவலகத்தில் பழனிவாசகம் சில மாதங்களுக்கு முன் புகார் கொடுத்தார். எஸ்.பி., அறிவுத்தியும் பிரீத்தி மீது மண்டபம் போலீசில் நடவடிக்கை இல்லை. இது தொடர்பாக ராமேஸ்வரம் ஜே.எம்., கோர்ட்டில் பழனிவாசகம் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்ற உத்தரவுப்படி பிரீத்தி மீது மண்டபம் போலீசார் 420 பிரிவு படி மோசடி வழக்கு பதிவு செய்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா உத்தரவுப்படி, ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள 55 ஆண்கள், 8 பெண்கள் என 63 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் வரும்15.02.2019 தேதி முதல் 21.02. 2019 ஆம் தேதி வரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், சீதக்காதி – சேதுபதி விளையாட்டு அரங்கம் பின்புறமுள்ள மாவட்ட ஊர்க்காவல் படை அலுவலகத்தில் இலவசமாக வழங்கப்படும்.
23. 02. 2019, 24 .02 .2019 தேதிகளில் காலை 09:00 மணிக்கு இராமநாதபுரம் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் ஊர்காவல் படை வீரர் தேர்வு செய்யும் பணி நடைபெற உள்ளது . இதில் கலந்து கொள்பவர்கள் நல்ல ஆரோக்கியமான உடல் தகுதி உடையவராக இருக்க வேண்டும். பொது சேவையில் விருப்பம் உள்ளவர்களாக இருக்க வேண்டும். ராமநாதபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வசிப்பவராக இருக்க வேண்டும். விளையாட்டு வீரர்கள், தேசிய மாணவர் படை (என்.சி.சி), நாட்டு நலப்பணி திட்டம் (என்.எஸ்.எஸ்) மற்றும் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருப்போருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். வயது 18 வயதுக்கு மேல் 50 வயதிற்குள் நல்ல உடற் தகுதி பெற்றவராக இருக்க வேண்டும். பத்தாம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.
பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் 21.02.2019 தேதி மாலை 05:00 மணிக்கு முன், மாவட்ட ஊர்க்காவல் படை அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். ஆதார் அட்டை, ரேஷன் கார்டு. மாற்று சான்றிதழ், இரண்டு போட்டோ (பாஸ்போர்ட் சைஸ்) , மதிப்பெண் பட்டியல் அசல் சான்று தேர்வு மையத்திற்கு கொண்டு வரவேண்டும். ஊர்க்காவல் படை வீரராக தேர்வு செய்யப்படுபடுவோருக்கு காவல் துை மூலம் 45 நாள் பயிற்சி அளிக்கப்படும். மாதத்திற்கு 5 நாள் மட்டும் பணி வழங்கப்படும். பணிபுரிந்து நாளுக்கு ரூ.560 வீதம் 5 நாட்களுக்கு மாதம் ரூ.2800 ஊதியம் வழங்கப்படும்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
லோன் மேளா பற்றிய முறையான அறிவிப்பு இல்லாததால் .. பெருவாரியான பகுதியில் மக்கள்
by ஆசிரியர்
written by ஆசிரியர்
தமிழக அரசால் இன்று (13/02/2019) லோன் மேளா அறிவித்துள்ள நிலையில், பல பகுதிகளில் பொதுமக்களுக்கு முறையான அறிவிப்பு இல்லாததால் செய்தி மக்களுக்கு சென்றடையவில்லை.
உதாரணமாக உத்தமபாளையம் ஒன்றிய அலுவலகத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை மினர் நல அலுவலர், திருமதி, சாந்தி தலைமையில், லோன் மேலா நடப்பது விபரம் தெரியாததால் பொது மக்கள் அதிக அளவில் கொள்ளவில்லை.
இது சம்பந்தமாக துணை ஆட்சியரிடம் கேட்டபோது, அரசு குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டுமே கடன் வழங்க முடிவு செய்துள்ளோம், அதனால் பொதுமக்களுக்கு தண்டோரா மூலம் தெரிவிக்க வில்லை எனத் தெரிவித்தார், அரசு அனைவருக்காகவும் தான், ஆனால் இது போன்ற செயல்களால் தகுதியானவர்களுக்கு கிடைக்க வாய்ப்பில்லாமல் போய் விடுகிறது. இதற்கு மாவட்ட ஆட்சித் தலைவர்கள், அனைத்தும் பயனாளிகளும் பயன் பெறும் வகையில் தெரியப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வருத்தத்துடன் தெரிவிக்கின்றனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பாலக்கோடு பாப்பாரப்பட்டி மற்றும் மாரண்டஹள்ளி பேரூராட்சியில் தொடர்ந்து பிளாஸ்டிக் பயன்பாடு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை…
by ஆசிரியர்
written by ஆசிரியர்
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பேரூராட்சியில் தங்கு தடையின்றி பிளாஸ்டிக் பைகள் விற்பனை நடைபெற்று வருவது பொதுமக்கள் மத்தியில் பெறும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசு ஜனவரி 1முதல் பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யும், பொதுமக்கள் பயன்படுத்தவும் தடை விதித்தது. இதையடுத்து பேரூராட்சி நிர்வாகம் பல்வேறு வகையான விழிப்புணர்வு பேரணி மற்றும் பிரச்சாரங்களை மேற்கொண்டது. ஒரு மாதம் கடந்த நிலையில் வழக்கம்போல் பிரபலமான துணிக்கடை, மளிகை கடை, பேக்கரி, காய்கறி கடை, பால்விற்பனை நிலையம், மதுகடை பார், தாபா ஓட்டல்கள் என அனைத்து பகுதிகளிலும் தங்கு தடையின்றி பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டில் உள்ளது.
பிளாஸ்டிக் பொருட்கள் முற்றிலும் ஒளிக்கும் நோக்கில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால் அரசு அதிகாரிகள் மெத்த போக்கினால் மீண்டும் புத்துணர்வு பெறும் பிளாஸ்டிக்.
இதுகுறித்து பொதுமக்கள் தெரிவிப்பது பாலக்கோடு மற்றும் மாரண்டஹள்ளி பகுதியில் உள்ள பிரபலமான துணிக்கடை, மளிகை கடை, பேக்கரி போன்ற இடங்களில் பொருட்கள் வாங்கினால் கடை உரிமையாளர் துணி கை பைகளை வைத்திருந்தாலும் கட்டாயப்படுத்தி பிளாஸ்டிக் பைகளை கொடுப்பதாகவும், துணிகடையில் உள்ளாடைகளை வாங்கும் போது பிளாஸ்டிக் பைகளை கொடுப்பதும் பிளாஸ்டிக் பைகள் வோண்டாம் என்றால் பொருட்கள் தருவதில்லை எனவும் பேரூராட்சி அதிகாரிகள் பெயரளவில் சோதனைகள் செய்வதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொண்டு பிளாஷ்டிக் பதுங்கி விற்பனை செய்வோர் மீது நடவடிக்கை எடுக்கவும் முற்றிலும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
காரைக்கால் பகுதியில் கட்டுப்படுத்த முடியாத அளவில் பெருகி வரும் வெறி நாய்கள்.. வீடியோ..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
காரைக்காலில் மாவட்டம் முழுவதும் ஏராளமான வெறிநாய்கள் சுற்றித்திரிந்து வந்தன. இதனை கட்டுப்படுத்தவும் அவற்றை பிடிக்கவும் பல்வேறு சமூக நல அமைப்புகள் காரைக்கால் நகராட்சிக்கு கோரிக்கை விடுத்தன. அவர்களின் கோரிக்கை மனுவை ஏற்று காரைக்கால் நகராட்சி நிர்வாகம் ஏராளமான வெறி நாய்களை பிடித்தது. ஆனால் புளுகிராஸ் அமைப்பு தலையிட்டு நாய்களை பிடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து நகராட்சி நிர்வாகத்தினர் பிடித்து வைத்திருந்த வெறிநாய்களை மீண்டும் தெருவில் விட்டுவிட்டனர். இதனால் மீண்டும் வெறிநாய்கள் காரைக்கால் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் சுற்றித்திரிந்து வருகின்றன. இந்த நாய்கள் காண்பவரை எல்லாம் கடித்து குதறி வருகின்றன.
இந்நிலையில் காரைக்கால் நேரு நகரை சேர்ந்த 4 பேரையும் கொத்தலம்பேட் பகுதியைச் சேர்ந்த ஹரிஸ்டன், தெனுஷ்கா ஆகிய சிறுவர், சிறுமி உட்பட 3 பேரையும் வெறிநாய்கள் இன்று மாலை கடித்து குதறியுள்ளன. இவர்கள் அனைவரும் ஒரே நாளில் ஒரே நேரத்தில் காரைக்கால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வந்தனர். ஆனால் காரைக்கால் அரசு மருத்துவமனையில் வெறிநாய் கடிக்கு மருந்துகள் இல்லை என்பதால் நான்கு பேர் காரைக்கால் அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்று வெளி மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளை தேடி சென்றனர்.
சிறுவர், சிறுமி உட்பட 3 பேர் மட்டும் ரெத்த காயங்களுடன் காரைக்கால் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். வெறி நாய்கள் கடித்து ஒரே நேரத்தில் 7 பேருக்கு காரைக்கால் அரசு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்ட சம்பவம் காரைக்காலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெருக்களில் சுற்றி திரியும் வெறிநாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் மீண்டும் காரைக்கால் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
உச்சநீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்றக்கோரி கோவில்பட்டியில் பிஏசிஎல் முதலீட்டாளர்கள் மற்றும் முகவர்கள், சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம் ..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
இந்தியாவில் 30 ஆண்டுகளாக செயல்பட்ட பிஏசிஎல் நிறுவனம் கடந்த 4 ஆண்டுகளாக இயங்காததால், இதன் 300 கிளைகளும் மூடப்பட்டுள்ளன. இதனால் 5 கோடி பாலிசிதாரர்கள் கட்டிய ரூ.55 ஆயிரம் கோடி பணம் முடக்கப்பட்டுள்ளது. கடந்த 2.2.2016-ல் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி 6 மாதத்துக்குள் நீதிபதி லோதா கமிட்டி மூலம் பிஏசிஎல் சொத்துகளை விற்று பணமாக்கி பாலிசிதாரர்களுக்கு வழங்க உத்தரவு பிறப்பித்தது.
ஆனால், 36 மாத காலம் கடந்த பின்பும் பணம் வழங்கப்படாததை கண்டித்தும், பாலிசிதாரர்களுக்கு உடனடியாக பணம் வழங்க கோரியும் கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையம் அருகே பிஏசிஎல் முதலீட்டாளர்கள் மற்றும் முகவர்கள் சார்பில் தர்ணா போராட்டம் நடந்தது.
சி.ஐ.டி.யு. மாவட்ட துணை தலைவர் எஸ்.மோகன்ராஜ் தலைமை வகித்தார். கோவில்பட்டி நகராட்சி தினசரி சந்தை தலைவர் என்.முத்துராஜ் தர்ணா போராட்டத்தை தொடங்கி வைத்தார். பிஏசிஎல் களப்பணியாளர்கள் சங்க மாநில துணை தலைவர் என்.ஜோதி. மார்க்சிஸ்ட் நகர செயலாளர் ஆர்.முருகன், மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.கிருஷ்ணவேணி, மாதர் சங்க மாவட்ட பொருளாளர் ஆர்.விஜயலட்சுமி ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
தர்ணா போராட்டத்தில் முதலீட்டாளர்கள், முகவர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கோவில்பட்டி நகராட்சி பகுதியில் காலணி தைக்கும் தொழிலாளிகளுக்கு, காலணி தைப்பதற்கான இடம் வழக்க வேண்டும் என சமூக நீதி கூட்டமைப்பினர் நகராட்சியில் மனு வழங்கினர்.
கோவில்பட்டி நகராட்சி அலுவலகத்துக்கு சமூக நீதி கூட்டமைப்பு தலைவர் ஏ.மேரி ஷீலா, செயலாளர் ஆம்ஸ்ட்ராங் தலைமையில் ஏராளமானோர் வந்து, ஆணையாளரிடம் மனு வழங்கினர்.
மனுவில், கோவில்பட்டி நகரில் சுமார் 50-க்கும் மேற்பட்ட அருந்ததியர் இனத்தை சேர்ந்த காலணி தைக்கும் தொழிலாளிகள் உள்ளனர். இவர்கள், மக்கள் அதிகம் கூடும் பேருந்து நிலையம், ரயில் நிலையம் மற்றும் வங்கிகள், அரசு அலுவலகங்கள் பகுதியிலேயே தொழில் செய்து வருகின்றனர். இவர்கள் தொழில் செய்யும் இடங்களில் மேற்கூடாரம் கிடையாது. சாலையோரம் அமர்ந்து மழையிலும், வெயிலிலும் துன்பப்பட்டு வருகின்றனர். மேலும், தொழிலுக்கு உரிய கருவிகள் கூட அவர்களிடமில்லை.
தாழ்த்தப்பட்ட மற்றும் வறுமை கோட்டுக்கும் கீழ் உள்ள இந்த தொழிலாளர்களுக்கு கோவில்பட்டி நகராட்சி நிர்வாகம் நல்வழி செய்து கொடுத்தால், தினசரி வாழ்க்கையை சிரமமின்றி வாழும் நிலையில் உள்ளனர். எனவே, காலணி (செருப்பு)தைக்கும் தொழிலாளிகளுக்கு உரிய தொழில் கருவிகள் கிடைக்கவும், அவர்கள் வாடகையின்றி பேருந்து உள்ளிட்ட பகுதிகளில் இடம் ஒதுக்கி தொழில் செய்ய நிழலகம் அமைத்து கொடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என தெரிவித்துள்ளனர்.
இதில் ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட துணை தலைவர் க.தமிழரசன், ஐ.என்.டி.யு.சி. மாவட்ட பொதுச்செயலாளர் ஆர்.ராஜசேகர், ஐந்தாம் தூண் அமைப்பு நிறுவனர் அ.சங்கரலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் மாற்று கட்சியினர் அம முக வின் மதுரை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ஐ.மகேந்திரன் முன்னிலையில் உசிலம்பட்டி அருகே மாதரை கிராமத்தினர் கருப்பையா தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் அமமுக கட்சியில் இணைந்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலை பேரையம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முத்துப்பாண்டி வயது 38 கிணற்றில் தவறி விழுந்த கோழியை எடுப்பதற்கு அருகில் இருந்த தென்னை மரத்தில் கயிறு கட்டி முத்துப்பாண்டி இறங்கியுள்ளார்.
அக்கோழியை எடுத்து மீண்டும் மேலே வரும்போது கயிறு அறுந்து தவறி விழுந்ததில் முத்துப்பாண்டி தலையில் படுகாயமடைந்துள்ளார். உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் கொண்டு சென்றபோது உயிரிழந்துள்ளார. இச்சம்பவம் குறித்து முத்துப்பாண்டி மனைவி வி.செல்வி ஏழுமலை காவல்நிலையத்தில் புகார் செய்துள்ளார் போலீசார் சம்பவம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேளி சாலையில் உள்ள நக்கலப் பட்டி கிராமத்தில் காதல் தோல்வி காரணமாக போலீஸ் தற்கொலை செய்து கொண்டார். உசிலம்பட்டி அருகே நக்கலப் பட்டி கிராமத்தைச் சேர்ந்த வனராஜா மகன் சதீஷ் வயது 27 இவர் பழனி பட்டாலியன் பிரிவில் போலீஸ் வேலை செய்து வந்தார். இவருக்கும் மற்றொரு பெண்ணுக்கும் காதல் இருந்து வந்தது இதற்கு சதீஷின் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர் இதனால் மனமுடைந்த சதீஷ் நேற்று வீட்டில் தனியாக இருந்த போது போர்வையால் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
தகவலறிந்த குடும்பத்தினர் போலீசுக்கு புகார் செய்து சதீஷின் உடல் உசிலம்பட்டியில் மருத்துவமனையில் கொண்டு சென்றனர் சம்பவம் குறித்து உசிலம்பட்டி தாலுகா போலீஸ் விசாரணை செய்து வருகின்றனார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பள்ளிகொண்டான் ஸ்ரீரங்கநாத சம்மத உத்திர நாத சுவாமி ரதசப்தமி உற்சவ விழா…
by ஆசிரியர்
written by ஆசிரியர்
வேலூர் மாவட்டம் பள்ளி கொண்டாரங்கநாத சுவாமி கோவிலில் ரதசப்தமி உற்சவ விழா முன்னிட்டு சூரிய பிரபை வாகனம், அனுமந்த வாகனம், கருட சேவை சந்திர பிரபை வாகை த்தில் சுவாமி திருவீதியுலா நிகழ்ச்சி நடந்தது.
இந்நிகழ்ச்சியின் ஏற்பாட்டை செயல் அலுவலர் வடிவேல் துரை தக்கர் ராமுவேல் கோயில் ஊழியர்கள் பொதுமக்கள் செய்து இருந்தனர்.
வேலூரிலிருந்து கே.எம்.வாரியார்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
வேலூர் மாவட்டம் ரத்தினகிரி நந்தியாலம் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் ஒருவன் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளான்.
இது குறித்து தகவல் அறிந்த ரத்தினகிரி போலீசார் விசாரணை செய்ததில் வேலூர் சைதாப்பேட்டையை சேர்ந்த தமிழரசன் (26) என்று தெரிய வந்தது. படுகொலை செய்யப் பட்ட தமிழரசன் மீது கொலை, கொள்ளை சம்மந்தமாக பல வழக்குகள் நிலுவையில் உள்ளது.
வேலூரிலிருந்து கே.எம்.வாரியார்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு அடுத்த கல்லிச்சேரியை சேர்ந்த விக்கி என்கின்ற விக்னேஷ் (24) என்பவனை குடியாத்தம்மது விலக்கு போலீசார் கள்ளச்சாரா விற்பனையை தொடர்ந்து செய்து வந்ததால் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
வேலூர் எஸ்.பி. பர்வேஷ் குமார் பரிந்துரைப்படி கலெக்டர் ராமன் குண்டர் சட்டத்தில் விக்னேஷை சிறையில் அடைக்கப்பட்டார்.
வேலூரிலிருந்து கே.எம்.வாரியார்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கொலை மற்றும் கொலை முயற்சியில் வழக்கில் ஈடுபட்ட இருவர் மீது “குண்டர்” தடுப்பு சட்டம்…
by ஆசிரியர்
written by ஆசிரியர்
மதுரை, வண்டியூர், யாகப்பா நகர், ஸ்டெல்லா நகரில் வசித்து வரும் ஜாகீர் உசேன் என்பவருடைய மகன் சுபேர்அலி, வயது 20/2019 என்பவர் மதுரை மாநகரில் கொலை மற்றும் கொலை முயற்சி வழக்கிலும், மதுரை அனுப்பானடி பொன்னுபிள்ளை தோப்பில் வசித்து வரும் பாலமுருகன் என்பவருடைய மகன் பாலகணேஷ், வயது 18/2019 என்பவரும் சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு வந்ததால் இருவரின் சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. டேவிட்சன் தேவாசீர்வாதம்.IPS,. உத்தரவுப்படி இன்று (12.02.2019) இருவரும் “குண்டர்” தடுப்பு சட்டத்தின் கீழ் புதுக்கோட்டை பார்ஸ்டல் பள்ளி மற்றும் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனர்.
செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பட்டிவீரன்பட்டி காவல்நிலைய எல்லைகுட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பெண் கைது..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ,கல்வி நிறுவனங்களின் அருகே கஞ்சா விற்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் பட்டிவீரன்பட்டி காவல் ஆய்வாளர் கலைவாணி தலைமையில் போலீசார் ரோந்து பணியை மேற்கொண்டனர். அப்போது பள்ளியின் அருகே சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த ஒரு பெண்ணை அழைத்து விசாரித்தபோது ,அவர் பட்டிவீரன்பட்டி தேவரப்பன் பட்டியைச் சேர்ந்த பாண்டியம்மாள் என்பதும், விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரிய வரவே அவரை கைதுசெய்து ஆயிரத்து 750 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து ,நிலக்கோட்டை சிறையில் அடைத்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி…
by ஆசிரியர்
written by ஆசிரியர்
முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 12.02.19 அன்று 03.00மணி அளவில் வேலைவாய்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியினை வணிகவியல் மற்றும் கணினி பயன்பாட்டியல் துறையைச் சார்ந்த முதலாமாண்டு மாணவி s.ஃபாரீகா பர்வீன் இறைவணக்கத்துடன் தொடங்கி வைத்தார்.
அதனைத் கல்லூரி முதல்வர் Dr. A.R.நாதிரா பானு கமால் பெண்கள் ஏன் வேலைக்கு போகவேண்டும்?? ஏற்பதற்கான முக்கியத்துவத்தையும், சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் நடைபெறும் சிறப்பு பயிற்சி வகுப்புகளை பற்றியும் மாணவிகளுக்கு எடுத்துரைத்து தலைமையுரை ஆற்றினார். அதனைத் தொடர்ந்து சிறப்பு விருந்தினர் M.கருணாகரன், மாவட்ட துணை வேலைவாய்ப்பு அலுவலர், இராமநாதபுரம் மாணவிகளுக்கு இரயில்வே தொடர்பான பணி விபரங்களை சிறப்பாக எடுத்துரைத்து மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில் உரையாற்றினார்.
நிகழ்வின் இறுதியாக ஆங்கிலத் துறைத் தலைவர் K.மெஹருன்னிஷா நன்றியுரை வழங்க இந்நிகழ்வு இனிதே நிறைவுற்றது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
நேற்று 11.02.2019 மதுவிலக்கு அமலாக்கப்பிரிவினர் மதுரை மாநகரில் முக்கிய இடங்களில் ரோந்து செய்தபோது எவ்வித அரசு அனுமதியும் இல்லாமல் மது பாட்டில்கள் விற்பனை செய்த 1) ஜீவா இரத்தினம் 56/19, த/பெ.சுப்பிரமணியன் அருப்புக்கோட்டை ரோடு, வில்லாபுரம், மதுரை 2) முனீஸ்வரன் 53/19, த/பெ.சொக்கலிங்கம், அம்பேத்கார்நகர், பசுமலை, மதுரை, 3) மூர்த்தி 54/19, த/பெ.சிவானந்தம், NMR ரோடு, காமராஜபுரம், மதுரை 4) சுப்பிரமணியன் 59/19, த/பெ.ரெங்கசாமி, வாசுகி தெரு, வில்லாபுரம், மதுரை. 5) பிச்சை பாண்டி 46/19, த/பெ.தங்கசாமி, மாரிப்பிள்ளை தெரு, வில்லாபுரம், மதுரை, 6) சங்கர் 30/19, த/பெ.குபேந்திரன், கொள்ளார் திடல், திருமங்கலம், மதுரை, 7) சௌந்தரராஜன் 32/19, த/பெ.ஜானகிராம், ஹார்விபட்டி, திருமங்கலம், மதுரை, 8) மணிகண்டன் 34/19, த/பெ.முனியசாமி, சொசைட்டி தோப்பு, கீரைத்துறை, மதுரை, 9) ஜின்னா 61/19, த/பெ.மொஹைதீன், மருதுபாண்டியர் தெரு, புதிய மீனாட்சி நகர், மதுரை ஆகிய ஒன்பது நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 101 மது பாட்டில்கள் கைப்பற்றப்பட்டது.
செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
அறுபடை வீடுகளில் முதற்படை வீடான மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் முருகன் கோவில் அருகே உள்ள இரயில்வே மேம்பாலத்தில் குண்டும்,குழியும் ஏற்பட்டு கான்கிரீட் கம்பிகள் வெளியே நீட்டியபடி இருந்ததால் பள்ளத்தில் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்து ஏற்படுவதாகவும் உயிர்பலி ஏற்படும் முன் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்குமாறும் இப்பகுதி மக்களும், சமூக ஆர்வலர்களும் தொடர் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதையடுத்து பல பத்திரிக்கைகளில் சாலையை சீரமைக்க கோரி செய்தி வெளியாகியும் கூட சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலை துறையோ, மாநகராட்சி நிர்வாகமோ செவிசாய்க்கவும்வில்லை, விபத்தை தடுக்க எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில் மக்கள் மீதும், சமுதாயம் மீதும் அக்கறை கொண்ணு மேம்பால சாலை வழியாக பயணிக்கும் ஆயிரக்கணக்கான வாகன ஓட்டிகளின் உயிரை பாதுகாக்கும் வண்ணம் நாம் தமிழர் கட்சியினர் சிமென்ட், சல்லி, மணல் கொண்டு மேம்பால சாலையின் நடுவே ஏற்டபட்ட பள்ளத்த்தில் கான்கிரீட் போட்டு சாலையை சீரமைத்தனர்.
செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
உசிலம்பட்டியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் பாலை நடுரோட்டில் ஊற்றி ஆர்ப்பாட்டம்…
by ஆசிரியர்
written by ஆசிரியர்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி முருகன் கோவில் அருகில் உசிலம்பட்டி பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் பசும்பால் லிட்டருக்கு 35ரூபாயாக உயர்த்தி வழங்கிடு, மாட்டுத்தீவனம் 50 சதவிகிதம் மானியத்தில் வழங்கிடு, குழந்தைகளுக்கு சத்துணவு திட்டத்தில் ஆவின் பாலையும் சேர்த்து வழங்கிடு போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் பசும்பாலை நடுரோட்டில் ஊற்றி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தங்களது கோரிக்கைகளை தமிழக அரசு பரிந்துரை செய்யவில்லை என்றால் அடுத்த கட்ட போராட்டம் நடத்துவோம் என்றனர். இந்த ஆர்ப்பாட்டம் மாநில செயலாளர் முகமது அலி தலைமையில் நடைபெற்றது. இதில் உசிலம்பட்டி பகுதிகளில் உள்ள பால் உற்பத்தியாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.
You must be logged in to post a comment.