16
மதுரை, வண்டியூர், யாகப்பா நகர், ஸ்டெல்லா நகரில் வசித்து வரும் ஜாகீர் உசேன் என்பவருடைய மகன் சுபேர்அலி, வயது 20/2019 என்பவர் மதுரை மாநகரில் கொலை மற்றும் கொலை முயற்சி வழக்கிலும், மதுரை அனுப்பானடி பொன்னுபிள்ளை தோப்பில் வசித்து வரும் பாலமுருகன் என்பவருடைய மகன் பாலகணேஷ், வயது 18/2019 என்பவரும் சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு வந்ததால் இருவரின் சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. டேவிட்சன் தேவாசீர்வாதம்.IPS,. உத்தரவுப்படி இன்று (12.02.2019) இருவரும் “குண்டர்” தடுப்பு சட்டத்தின் கீழ் புதுக்கோட்டை பார்ஸ்டல் பள்ளி மற்றும் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனர்.
செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.