செய்தி வி.காளமேகம் மற்றும் கனகராஜ்
மதுரை மாவட்டம்
செய்தி வி.காளமேகம் மற்றும் கனகராஜ்
மதுரை மாவட்டம்
உசிலம்பட்டி நகராட்சி கமிஷனர் சுப்பையா இவ்வாறு இன்று பணி முடிந்து இரவு 9 மணியளவில் ஜிப்பில் ஏற வரும்போது இரண்டு நபர்கள் கமிஷனர் சுப்பையாவை கையை இறுக்கிப் பிடித்துக்கொண்டு சரமாரியான அடியும் கத்தியை காட்டி மிரட்டியும் உள்ளனர். சம்பவங்களுடன் உசிலம்பட்டி நகர் காவல் நிலையத்தில் நகராட்சி அலுவலகம் கமிஷனா சுப்பையா புகார்செய்ய வந்துள்ளார். இதனால் உசிலம்பட்டியில் பரபரப்பாக உள்ளது.
தமிழக பள்ளிக்கல்வி துறை சார்பில் ராமநாதபுரம், மண்டபம் கல்வி மாவட்ட ஜூனியர் ரெட் கிராஸ் ஜூனியர்களுக்கான கற்றல் பயிற்சி முகாம் நிறைவு விழா முத்துப்பேட்டை ஜோசப் மேல்நிலைப்பள்ளியில் இன்று (21/02/2019) நடந்தது. ராமநாதபுரம் கல்வி மாவட்ட ஜேஆர்சி கன்வீனர் ரமேஷ் வரவேற்றார்.
சிறந்த ஜூனியர்களுக்கு ராமநாதபுரம் சரக காவல் துறை துணைத் தலைவர் என்.காமினி பரிசு வழங்கினார். அவர் பேசுகையில், ராமநாதபுரம் மாவட்டத்தை நல்லிணக்கத்திற்கு எடுத்துக் காட்டாக திகழ்கிறது. ராமநாதபுரம் மாவட்டம் பற்றி பிற மாவட்டத்தினரின் தவறான எண்ணம் தற்போது முற்றிலும் மாறி விட்டது. ரெகுநாதபுரத்தில் இந்துக்கள், பெரிய பட்டினத்தில் முஸ்லிம்கள், முத்துப்பேட்டையில் கிறிஸ்தவர்கள் வசித்தாலும் ஒருமைப்பாடுடன் இணக்கமாக உள்ளனர். இங்கு பணியாற்றுவதில் பெருமிதம் அடைகிறேன். ஜூனியர் ரெட் கிராஸ் கற்றல் பயிற்சி பெற்ற மாணவர்கள் வருங்கால இளைய சமுதாயம் சிறப்பாக அமையும். மாணவர்கள் கிடைக்கும் நேரங்களில் புத்தகம் வாசிப்பு பழக்கத்தை அதிகப்படுத்தி கொள்ள வேண்டும். பொது அறிவு தொடர்பான புத்தகங்களை துணை கொண்டால் அரசு வேலைக்கான போட்டி தேர்வுகளுக்கு பெரிதும் உதவும் என்றார்.
துணை சேர்மன் சண்முக ராஜேஸ்வரன், கோபி, துணைத் தலைவர் ஜெயக்குமார், ராமநாதபுரம் ராயல் என்பீல்டு நிறுவன நிர்வாக இயக்குநர் முருகன் முரளி பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதன்மை கல்வி அலுவலர் முருகன், ராமநாதபுரம், மண்டபம் கல்வி மாவட்ட அலுவலர்கள் பிரேம், பாலதண்டாயுதபாணி, அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் எஸ்.டேவிட் மோசஸ் (இரு மேனி), எஸ்.ஜோ விக்டோரினா டயஸ் (வண்ணாங் குண்டு), ஒய்.யுனைசி (ரெகுநாதபுரம் ), சித்தார் கோட்டை முகமதியா மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பி.ஹைதர் அலி
ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். ஜேஆர்சி மாநில பயிற்றுநர் கோவிந்தராஜ் கல்வி மாவட்ட கன்வீனர்கள் பிரபாகரன், தமிழ்ச்செல்வன், சின்ராஜ், பால சுப்பிரமணிய பாரதி ஆகியோர் பயிற்சி அளித்தனர். மாநில பயிற்றுநர்கள் பாலமுருகன், ஜீவா, பொருளாளர் குழந்தைசாமி முகாமை ஒருங்கிணைத்தனர். முத்துப்பேட்டை புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளி ஜேஆர் சி கவுன்சலர் பிரான்சிஸ் பிரபாகரன் நன்றி கூறினார்.
சமீபத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஹதாயத்துல்லாஹ் துபை வருகை தந்திருந்தார். அச்சமயத்தில் மரியாதை நிமித்தமாக தமிழ்நாட்டை சார்ந்த பல்வேறு முக்கிய நபர்களை சந்தித்தார்.
இதன் தொடர்ச்சியாக ஹிதாயதுல்லாஹ், அலைன் மோட்டார்ஸ் நிர்வாக இயக்குநர் ஜஃபர் கமாலை சந்தித்தார். அச்சந்திப்பின் போது அவருடன் அமீரக காங்கிரஸ் கமிட்டி பொருளாளர் கீழை ஜமீல், நவ்ஃபல் ஆகியோர் உடனிருந்தனர்.
இராமநாதபுரம் மாவட்டத்தில் டிஜிட்டல் பேனர்கள், விளம்பரப் பலகைகள், தட்டி போர்டுகள் வைப்பதை ஒழுங்குபடுத்த அரசியல் கட்சி பிரமுகர்கள், அலுவலர்கள் சிறப்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் தலைமையில் நடந்தது. அரசியல் மற்றும் இதர நிகழ்ச்சிகள் தொடர்பாக டிஜிட்டல் பேனர்கள், விளம்பர பலகைகள், தட்டி போர்டுகள் வைக்க விரும்புவோர் அரசு விதித்துள்ள சில நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என தமிழக அரசாணை , சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
சாலையின் இரு புறங்கள், சாலை விளிம்புகள், பிளாட்பார நடைபாதைகள், பெருஞ்சாலைகள், இதர சாலைகளில் வைக்கக் கூடாது. இத்தகைய இடங்களில் டிஜிட்டல் பேனர்கள், விளம்பரப் பலகைகள், தட்டி போர்டுகளை வைப்பதால் கவனம் சிதறல் மட்டுமின்றி பாதசாரிகள் பாதிக்கும் சூழ்நிலை உருவாகும். டிஜிட்டல் பேனர்கள், விளம்பரப் பலகைகள் மற்றும் தட்டிபோர்டுகள் வைக்க அனுமதி கோருவோர் படிவம் 1-ஐ பூர்த்தி செய்து டிஜிட்டல் பேனர்கள், விளம்பர பலகைகள், தட்டி போர்டுகள் வைக்கப்படும் நோக்கம், அளவுகளுடன் வைக்கப்படும் இடம் தனி நபர் அல்லது கட்டடமாக இருப்பின் கட்டட உரிமையாளர் ஒப்புதல் கடிதம், அதன் வாசகங்கள் , அதில் இடம் பெறும் படங்களுடன் சம்பந்தப்பட்ட பகுதி காவல் துணை கண்காணிப்பாளர், காவல் ஆய்வாளர் தடையின்மைச் சான்று மற்றும் ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சியில் அனுமதிக் கட்டணம் செலுத்தி (கட்டப்படும் கட்டணங்கள் திருப்பி தரப்பட மாட்டாது)
அதற்கான அசல் சலானுடன் மாவட்ட ஆட்சியருக்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக விண்ணப்பிக்க வேண்டும். பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு தாமதமின்றி அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். தாமதமாக வரப் பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள் முன்பாகவோ சாலை திருப்பங்கள், சாலை சந்திப்புகளில் அறிவிப்பு செய்யப்பட்ட நினைவுச் சின்னங்கள், சிலைகள் முன், முக்கிய சுற்றுலா தலங்களில் டிஜிட்டல் பேனர்கள், விளம்பரத் தட்டிகள் மற்றும் பிளக்ஸ் போர்டுகள் வைக்க அனுமதி இல்லை. அனுமதி பெற்று வைக்கப்படும் டிஜிட்டல் பேனர்கள், விளம்பர பலகைகள், தட்டி போர்டுகளின் அடியில் மாவட்ட ஆட்சியரின் அனுமதி எண் இன்றி வைக்கப்படும் டிஜிட்டல் பேனர்கள், விளம்பர பலகைகள், தட்டி போர்டுகள் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பு மூலம் உடனே அகற்றப்படும். விதிமுறைகளுக்கு உட்படாமல் இருப்பின் அனுமதி ரத்து செய்யப்படும். அனுமதிபடி வைக்கப்படும். பேனர்களை அனுமதி காலம் முடிவடைந்தவுடன் உடனே அகற்ற வேண்டும். மீறி வைப்பவர்கள் மீது குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் கொ.வீர ராகவ ராவ் தெரிவித்தார்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் மீனா, மாவட்ட வருவாய் அலுவலர் சி.முத்துமாரி, பரமக்குடி சார் ஆட்சியர் விஷ்ணுசந்திரன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கோ. அண்ணா துரை உட்பட அனைத்து துறை அரசு அலுவலர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
.
அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவுறுத்தல் அடிப்படையில் அதன் பொறுப்பாளர் வெற்றிவேல் எம்.எல்.ஏ தலைமையில் அக்கட்சியின் மாநில மாவட்ட நிர்வாகிகள் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைமையகத்திற்கு இன்று(20.02.19) மாலை வருகை தந்தனர்.
அவர்களை இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் எஸ் எம் பாக்கர் துணை தலைவர் முஹம்மது முனீர் பொது செயலாளர் முஹம்மது சித்திக் பொருளாலர் பிர்தெளஸ் துணை பொது செயலாளர் முஹம்மது ஷிப்லி மக்கள் ரிப்போர்ட் முதன்மை ஆசிரியர் சையது இக்பால் மாநில செயலாளர் அபுபைசல் ஆகியோர் வர வேற்றனர்.
பின்னர் டிடிவி தினகரன் கூறிய அடிப்படையில் வெற்றி வேல் அவர்கள் INTJ நிர்வாகிகள் இடத்தில் நீங்கள் அம்மா காலத்தில் இருந்தே அதிமுக கூட்டணியில் இருந்தீர்கள் போன பாராளுமன்ற தேர்தலில் முஸ்லிம் கட்சிகள் ஆதரவு அளிக்காத போது நீங்கள் மட்டுமே ஆதரவு கொடுத்திர்கள்.
தினகரன் அவர்கள் ஆர் கே நகரில் போட்டியிட்ட போது எங்களுக்கு பக்க பலமாக நீங்கள் மட்டுமே உடன் இருந்தீர்கள். முஸ்லிம்களுக்கு எப்போதும் உறுதுணையாக அமமுக இருக்கும் பாஜக உடன் எப்போதும் எந்த சூழ்நிலையையும் கூட்டணி வைக்க மாட்டோம்
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் அமமுகவிற்கு இந்திய தவ்ஹீத் ஜமாஅத் ஆதரவு அளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
வெற்றி வேல் மற்றும் வந்த சகோதரர்களுக்கு இஸ்லாமிய நூல்கள் திர்குர்ஆன் வழங்க பட்டது.
கச்சத்தீவு புனித அந்தோணியர் திருவிழா செல்லவுள்ள யாத்திரிகர்கள் பாதுகாப்பு தொடர்பான ஒருங்கிணைப்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர் கொ.வீர ராகவ ராவ் தலைமையில் கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலயத்தில் நடைபெறவுள்ள திருவிழாவில் கலந்து கொள்வதற்காக செல்லவுள்ள யாத்திரிகர்களை பாதுகாப்பாக அனுப்பி திரும்ப அழைத்து வருதல் தொடர்பான ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் மீனா முன்னிலை வகித்தார். மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் தெரிவித்ததாவது: கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலயத்தில் 15.03.2019, 16.03.2019 தேதிகளில் நடைபெறவுள்ள திருவிழாவில் கலந்து கொள்வதற்காக செல்லும் யாத்திரிகர்கள் அனைவரும், கச்சத்தீவு யாத்திரைக்கான ஒருங்கிணைப்பாளரின் தலைமையின் கீழ் மட்டுமே செல்ல அனுமதி உண்டு. இராமநாதபுரம், சிவகங்கை மாவட்டம் தவிர பிற மாவட்டங்களில் இருந்து கச்சத்தீவு விழாவிற்கு செல்ல விண்ணப்பிக்கும் நபர்கள் சம்பந்தப்பட்ட காவல் கண்காணிப்பாளரிடமிருந்து தடையின்மைச் சான்று (Noc) பெற்று சமர்ப்பிக்க வேண்டும். பாலித்தின் பைகள் மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்கள் படகுகளில் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை. கச்சத்தீவு யாத்திரைக்காக பயன்படுத்தப்படவுள்ள படகுகளின் உரிமம் மற்றும் காப்பீடு குறித்த விபரங்களை மீன் வளத்துறை அலுவலர்கள் ஆய்வு செய்து உறுதி செய்ய வேண்டும். அவசர சூழ்நிலைக்கு ஏற்றவாறு யாத்திரிகர்கள் புறப்படும் இடத்தில் மருத்துவ குழுவினர் தயார் நிலையில் இருப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். யாத்திரிகர்கள் செல்லும் ஒவ்வொரு படகிலும் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையில் மட்டுமே யாத்திரிகர்கள் செல்வதை உறுதி செய்ய வேண்டும். யாத்திரைக்கு தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளை காவல் துறை இந்திய கடலோர பாதுகாப்பு படை, இந்திய கப்பற்படை, சுங்கத்துறை மற்றும் உளவுத்துறை பணியகம் சார்ந்த அலுவலர்கள் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீர ராகவ ராவ்தெரிவித்தார்.
மாவட்ட வருவாய் அலுவலர் சி.முத்துமாரி, பரமக்குடி சார் ஆட்சியர் பி.விஷ்ணுசந்திரன், ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் ஆர்.சுமன், சுகாதார நலப்பணிகள் இணை இயக்குநர் பி.முல்லைக்கொடி, மீன்வளத்துறை துணை இயக்குநர் காத்தவராயன் உள்பட அரசு அலுவலர்கள், கச்சத்தீவு யாத்திரைக்குழு ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
யாழ்ப்பாணத்தில் இலங்கை ரூ. 250 மில்லியன் செலவில் தகவல் தொழில்நுட்ப மேம்பாட்டு தகவல் வர்த்தக மையம் அமைக்க இந்தியா, இலங்கை இடையே இன்று (21.02.2019) புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இலங்கை பிரதமர் ரணில் விக்கிரம சிங்கே / அபிவிருத்தி உத்திகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர், பிரதி அமைச்சர்களான மாலிக் சமரவிக்ர, நளின் பண்டார ஜயமஹா, பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, ஏற்றுமதி அபிவிருத்தி சபை தலைவர் இந்திர மல்வத்த, இலங்கை அரசு மூத்த அதிகாரிகள் முன்னிலையில் இந்திய தூதுவர் தரண்ஜித் சிங் சந்து, அபிவிருத்தி உத்திகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சக செயலாளர் கொடிகார முன்னிலையில் இந்த ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது.
இலங்கை அரசு மேற்கொள்ளும் மக்கள் நலன்சார் அபிவிருத்தி திட்டங்களுக்கு இந்திய அரசு வழங்கும் உதவிகளின் வரிசையில் இத்திட்டம் ஒன்று. இந்த வர்த்தக மையமானது வட மாகாணத்தில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் மற்றும் பிற தொழில்சார் சேவைகளுக்கான வாய்ப்பை அதிகரிக்கவும், மேம்படுத்தவும் உதவும் . இந்திய அரசு அபிவிருத்தி மற்றும் புனர் நிர்மாணம் மற்றும் மீள்குடியேற்றத்தை மேம்படுத்தும் முகமாக வட மாகாணத்தில் 46 ஆயிரம் வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்திய அரசு நிதி உதவியில் இம்மாகாணத்தில் 1990 அவசர நோயாளர் காவு வண்டி சேவை தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்திய அரசின் நிதியில் இலங்கையில் தற்போது நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களான யாழ் கலாச்சார மையம், 27 பாட சாலை கட்டடங்கள், 3 ஆயிரம் மழை நீர் சேகரிப்பு தொகுதிகள், 600 வீடுகளை கொண்ட 25 மாதிரி கிராமங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
இந்திய அரசின் நிதி பங்களிப்பில் இலங்கை முழுவதும் 70க்கும் மேற்பட்ட மக்கள் நலன் சார் அபிவிருத்தி திட்டங்கள் ஏற்க வே நிறைவேற்றப்பட்ட நிலையில் தற்போது 20 அபிவிருத்தி திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்திய அரசு இலங்கைக்கான 3 பில்லியன் அமெரிக்க டாலர் உதவியில் 560 மில்லியன் அமெரிக்க டாலர் நிதி மானியமாக வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு கிராமத்தில் வசித்து வந்த கணவன் செல்வராஜ் என்பவருக்கும் இவரது மனைவி சசிகலா என்பவருக்கும் இடையே தகராறு இருந்து வந்ததாக தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த செல்வராஜ் மனைவி மற்றும் மகளை அரிவாளால் வெட்டியதால் சம்பவ இடத்திலேயே மனைவி சசிகலா உயிரிழந்தார் மகள் பூவிதா என்பவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட செல்வராஜை தாடிக்கொம்பு போலீசார் தேடி வருகின்றனர்.
விவசாயிகளின் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்த தமிழ் விவசாயிகள் சங்கம் தற்போது அரசியல் களத்திலும் தனது பங்களிப்பை செய்துள்ளது.
அந்த வகையில் தூத்துக்குடி பாராளுமன்றத் தொகுதி மற்றும் விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் நடைபெறவிருக்கும் சட்டமன்ற இடைத்தேர்தலில் விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் சாத்தூர் ஆகிய தொகுதிகளில் தமிழ் விவசாயிகள் சங்கமும் களம் இறங்குகிறது.
இதில் முதல் கட்டமாக விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியில் தமிழ் விவசாயிகள் சங்கத்தின் சார்பில் வேட்பாளராக டி.எஸ் நடராஜன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
விவசாயிகள் அனைவரும் ஒருமித்த குரலுடன் விவசாயிகள் ஓட்டுக்கள் வீணாகாமல் தமிழ் விவசாயிகள் சங்கத்தின் விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதியில் வேட்பாளராக போட்டியிடும் டி எஸ் நடராஜன் அவர்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றும்,விவசாயியை சட்டமன்றத்துக்கு அனுப்ப ஒற்றுமையுடன் அணி திரள வேண்டும் எனவும் தமிழ் விவசாயிகள் சங்கம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
செய்தியாளர்:- அபுபக்கர்சித்திக்
அல் மத்ரஸத்துர் ராழியா (இஸ்லாமிய கல்விச் சங்கத்தின் கீழ் இயங்கும் மத்ரஸா) சார்பாக மரணித்தவர்களின் உடலை பதமாக வைக்கும் வகையில் குளிர் சாதன பெட்டி வாங்கப்பட்டுள்ளது.
இப்பெட்டி நேற்று (20/02-2019) முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக மின்ஹாஜியார் பள்ளியில் வைக்கப்பட்டுள்ளது. தேவையுடையவர்கள் கீழே உள்ள எண்களில் தொடர்பு கொண்டு பயன்பெறராம். மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கடற்கரை பள்ளியில் இந்த மதரசா சார்பாக இவ்வசதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தொடர்புக்கு :-
1. மின்ஹாஜ் பள்ளி:-
9791741708 / 9677803881 / 9442543310
2. கடற்கரை பள்ளி:-
9791741708 / 8122410415 / 9942065575
கடந்த ஞாயிற்றுக்கிழமை 18/2/2019 அன்று கோவையில் அமைந்துள்ள ஹிந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கலாம் மாணவர்கள் விழிப்புணர்வு இயக்கம் நடத்திய விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் பல துறைகளில் சிறந்து விளங்கும் நபர்களுக்கு கலாம் கனவுகள் 2019 விருதானது வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் WILL MEDAL OF WORLD RECORDS நிறுவனர் தலைவர் கலைவாணி, முதன்மைச் செயலர் தஹ்மிதா பானு,கீழக்கரை கிளாசிஃபைட் நிறுவனர் தலைவர் S.K.V.ஷேக் ஜெய்னுலாபுத்தீன் ,கீழக்கரையை சேர்ந்த சிறுவன் ஹஷ்வ ப்ரணவ் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் சென்னையை சேர்ந்த சிறுவன் மஹ்மூது அக்ரம் 400 மொழிகளில் பேச எழுத மற்றும் தட்டச்சு செய்யும் தன் திறமைக்காக will medal of world recordsல் தன் சாதனையைப் பதிவு செய்தார். அதற்கான அங்கீகாரச் சான்றிதழ் விழா மேடையில் வில் மெடல்ஸ் நிறுவனர் தலைவர் கலைவாணி முதன்மைச்செயலர் தஹ்மிதா பானு, நிர்வாக ஆலோசகர் S.K.V. ஷேக் ஜெய்னுலாபுத்தீன், கலாம் மாணவர்கள் விழிப்புணர்வு இயக்கத்தினுடைய தலைவர் கவிதா சந்திரன் மாநில தலைவர் செல்வராஜ் ஆகியோர் சிறுவன் அக்ரமிற்கு வழங்கினார்.
இன்று (21.02.2019)இராமநாதபுரம் மாவட்ட அளவில் நடைபெற்ற இளம் விஞ்ஞானிகளுக்கான தேடுதல் inspire award போட்டியில் மண்டபம் ஒன்றியம் காந்திநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் இரண்டு பரிசுகளை வென்றுள்ளனர்.
மேலும. ஒரு மாணவி அடுத்த கட்டமாக நடைபெற உள்ள மாநில அளவிலான போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகள் 14.02.2019இல் நடத்திய தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர்கள் 43 பேர் உயிரிழந்தனர். இவர்களின் ஆன்மா சாந்தியடைய வேண்டி, இராமநாதபுரம் மாவட்டம் சேதுக்கரை கடலில் சேதுக்கரை வைதிகர்கள் சங்கம் சார்பாக மலர் அஞ்சலி நடைபெற்றது.
பாம்பன் ரயில் தூக்குப்பாலம் திறக்கப்பட்டு தென் கடல் பகுதியில் இருந்து வட கடல் பகுதிக்ரு 5 கப்பல்கள் இன்று (21/02/2019) கடந்து சென்றது.
இராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் மன்னார் வளைகுடா (தெற்கு ) கடல் பகுதியில் இருந்து இந்திய கடலோர பாதுகாப்பு படைக்கு சொந்தமான மூன்று ரோந்து கப்பல்களும் கடந்து மண்டபம் இந்திய கடலோர பாதுகாப்பு படை முகாமிற்கு சென்றன. இதனையடுத்து தூத்துக்குடியில் இருந்து சென்னை சென்ற சரக்கு கப்பல் மற்றும் இழுவை கப்பல் தூக்குப்பாலத்தை கடந்து பாக் ஜலசந்தி (வடக்கு) கடல் பகுதிக்கு சென்றது. ஒன்றன் பின் ஒன்றாக கடந்து சென்ற கப்பல்களை சாலை பாலத்தில் சுற்றுலா பயணிகள் நின்று கண்டு களித்தனர். கடந்து சென்ற இந்திய கடலோர பாதுகாப்பு படைக்கு சொந்தமான ரோந்து கப்பல் சி-431 கால்வாய் பகுதியில் இருந்து விலகி சென்று பாறையில் மோதி சிக்கியது. சில நிமிடங்களில் நீரோட்டத்தால் இழுக்கப்பட்டு கப்பல் கால்வாயில் மீண்டும் சென்றது.
04.12. 2018 அன்று பாம்பன் ரயில் தூக்கு பாலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக மண்டபம் – ராமேஸ்வரம் இடையே ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு தொழில்நுட்ப கோளாறு சீரமைப்பு பணி நடைபெற்றது.இந் நிலையில் பணிகள் முடிவடைந்து முதல் முறையாக பாம்பன் ரயில் தூக்கு பாலம் இன்று 21.02.19 திறக்கப்பட்டு சரக்கு கப்பல்கள் கடந்து சென்றன.
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகரில் பிளக்ஸ் போர்டுகள் உள்ளிட்ட விளம்பர பதாகைகள் வைப்பதில் பின்பற்ற வேண்டிய அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் இன்று (21.02.13) நடந்தது. நகராட்சி ஆணையர் (பொறுப்பு) தனலட்சுமி தலைமை வகித்தார். கீழக்கரை காவல் துணை கண்காணிப்பாளர் முருகேசன் முன்னிலை வகித்தனர்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் அனுமதியின்றி பேனர் வைத்தல். வன்முறையை தூண்டும் வாசகங்கள், அரசு அலுவலங்கள், வழிபாட்டு தலங்கள் முன் எவ்வித விளம்பர பதாகை வைக்கக் கூடாது, இவ்விதிகள் மீறுபவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பேனர்கள் வைக்கும் அரசியல் கட்சிகள் மாவட்ட ஆட்சியரிடம் முன் அனுமதி பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
அக்கூட்டத்தில் மண்டல சிறப்பு தாசில்தார் ஜலால்தீன், போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து மீனாட்சி, துப்புரவு மேற்பார்வையாளர் மனோகரன், நகர கட்டமைப்பு மேற்பார்வையாளர் பார்த்தசாரதி மற்றும் அனைத்து கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
பாரா ஒலிம்பிக் போட்டியில் ஷார்ஜாவில் நடைபெற்ற வட்டு எறிதல் குண்டு எறிதல் ஈட்டி எறிதல் ஆகிய போட்டிகளில் கணேசன் உசிலம்பட்டியைச் சேர்ந்த கணேசன் மூன்றாம் இடம் பிடித்து வெண்கல பதக்கம் பெற்றுள்ளார் இவர்களை உசிலம்பட்டி பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் வரவேற்றனர் மேலும் 3% விளையாட்டு வீரர்களுக்கு இட ஒதுக்கீடு செய்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு நன்றி தெரிவித்தும் மேலும் ஜப்பானில் நடைபெறும் போட்டியில் கலந்துகொள்ள பண உதவி வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார் விளையாட்டு வீரருக்கு வாழ்வாதார பிரச்சினைகள் உள்ளதால் தமிழக முதல்வர் நிதி உதவி செய்யவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா சித்தரேவு கிராமத்தில் வசிக்கும் இப்ராஹீம் என்பவரது மகன் முஜீபுர் ரஹ்மான். மனவளர்ச்சி குன்றிய மாற்றுத் திறனாளியாகிய அவருக்கு வருவாய்த்துறை மூலமாக வழங்கப்படும் உதவித்தொகையை அய்யம்பாளையம் ஸ்டேட் பேங்க் வங்கி நிர்வாகம் முஜீபுர் ரஹ்மானின் வங்கிக்கணக்கில் ஆதார் இணைக்கவில்லை என்கிற ஒரே காரணத்திற்க்காக அவருக்கு வருவாய்த்துறை மூலமாக வழங்கிய உதவித்தொகை பணம் ரூபாய் 7000ஐ பிடித்து வைத்துக்கொண்டு ஆதார் கொடுத்தால்தான் பணத்தை தருவோம் என கூறியது.
அதனை அடுத்து தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் திண்டுக்கல் மாவட்டக்குழுவின் சார்பில் உடனடியாக தலையிட்டு நேரடியாக முஜீபுர் ரஹ்மானின் வீட்டிற்கு சங்கத்தின் மாவட்ட செயலாளர் பகத்சிங் மற்றும் மாவட்டக்குழு உறுப்பினர் வனிதா, ஆத்தூர் ஒன்றிய செயலாளர் ஆறுமுகவள்ளி ஆகியோர்களால் களஆய்வு செய்யப்பட்டு, பின்னர் இப்பிரச்சனை தொடர்பாக மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அனைத்துத்துறை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
உச்சநீதிமன்றம் ஆதாரை கட்டாயப்படுத்தக்கூடாது என பலமுறை உத்தரவிட்டும் ஆதார் இணைக்கவில்லை என்கிற காரணத்திற்க்காக பணம் தர மறுக்கும் SBI வங்கி நிர்வாகத்தை கண்டித்தும், உடனடியாக பணத்தை தராவிட்டால் வங்கியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கை விட்டதன் அடிப்படையிலும், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளின் நேரடி கவனத்திற்கு கொண்டு சென்றதன் அடிப்படையிலும் உடனடியாக வருவாய்த்துறை அதிகாரிகள் தலையிட்டு முதலில் முஜீபுர் ரஹ்மான் கடும் ஊனமுற்ற மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளி என்பதால் அவருக்கு முறைப்படி மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தின் மூலமாக கிடைக்க வேண்டிய உதவித்தொகை ரூபாய் 1500க்கு ஏற்பாடு செய்யப்பட்டு அடுத்த மாதம் முதல் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும், அவருடைய வங்கிக்கணக்கில் உள்ள 7000 ரூபாய் பணத்தையும் இன்று (21.02.19) மாலைக்குள் அவரது குடும்பத்தாரிடம் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதையும் TARATDAC யிடம் தெரிவித்துள்ளார்கள். (இதுவரை 1000 ரூபாய் மட்டுமே முஜீபுர் ரஹ்மான் உதவித்தொகை பெற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது)
இச்சம்பவத்தின் வாயிலாக தமிழக அரசுக்கு TARATDAC மூலம் தெரிவிக்கும் கோரிக்கைகள்:
உச்சநீதிமன்றம் சமூக நலத்திட்டங்களுக்கு ஆதாரை கட்டாயப்படுத்தக் கூடாது என பலமுறை உத்தரவிட்டும் எல்லா இடங்களிலும் ஆதாரை கட்டாயப்படுத்துவது இன்றுவரை தொடர்கதையாக உள்ளது. குறிப்பாக மனவளர்ச்சி குன்றிய மாற்றுத் திறனாளிகளுக்கு ஆதார் எடுக்க முடியாது என நன்றாக தெரிந்திருந்தும் ஆதார் கொண்டுவந்தால்தான் பணத்தை தருவேன் என வங்கி நிர்வாகம் கூறுவது என்பது அப்பட்டமான மனித உரிமை மீறலாகும். எனவே, உடனடியாக அனைத்து வங்கிகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் மாற்றுத் திறனாளிகளுக்கு ஆதாரை கட்டாயப்படுத்தக்கூடாது என்கிற உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்றும்,
கடும் ஊனமுற்றோர், மனவளர்ச்சி குன்றியவர்கள், தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள், தசைசிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் 1500 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு செய்து அதற்க்கான அரசானை வெளியிட்டு பல வருடங்கள் ஆன பிறகும் இவ்வகை ஊனமுற்றோரில் பலர் இன்னும் 1000 ரூபாய் உதவித்தொகை மட்டுமே பெற்றுவருகிறார்கள். எனவே, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 1500 ரூபாய் உதவித்தொகை பெற தகுதியான அனைத்து மாற்றுத்திறனாளிகளையும் கண்டறிந்து அவர்களுக்கான உதவித்தொகை வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமாறும் தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம், திண்டுக்கல் மாவட்டக்குழுவின் சார்பில் P.செல்வநாயகம் – மாவட்ட தலைவர் S.பகத்சிங் – மாவட்ட செயலாளர் ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தியாளர்:-அபுபக்கர்சித்திக்
வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா ஆரிமுத்து மோட்டூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் கல்வி சீர்வரிசையாக நீர் சுத்திகரிப்பு இயந்திரம், சேர்கள் நோட்டு புத்தகம், விளையாட்டு பொருள்களை சீர்வரிசையாக கொடுத்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் மலர் செல்வியிடம் பொதுமக்கள் வழங்கினர்.
வேலூரிலிருந்து கே.எம்.வாரியார்
உத்தமபாளையம், அங்கன்வாடி பணி சார் ஆட்சியரின் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன் மூலம் ஆன்லைன் மூலம் சான்றுகள் பெற விண்ணப்பித்துள்ளவர்கள், சான்றுகள் பெறாவிட்டாலும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளலாம், விண்ணப்பம் செய்துள்ள அனைவருமே தகுதியானவர்கள் தான், ஆனால் தகுதியான பணியாளர்கள் தங்களின் வேலையின் தன்மை அறிந்து செயல்படக்கூடிய, சிறப்புத் தேர்ச்சி பெற்ற பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள், அதனால் மன உளைச்சலோ, தேவையற்ற குழப்பமோ பட வேண்டாம், என ஆலோசணைகளும் வழங்கினார்.
ஒவ்வொரு பகுதிக்கும் 3 பேர் வரை தேர்வு செய்யப்பட்டு அதில் தகுதியானவர்கள் நேர்மையான முறையில் சட்ட விதிகளின்படிதேர்வு செய்யப்படுவார்கள் என சார் ஆட்சியர் வைத்திநாதன் அவர்கள்தெரிவித்தார்.
You must be logged in to post a comment.