தமிழக அரசால் இன்று (13/02/2019) லோன் மேளா அறிவித்துள்ள நிலையில், பல பகுதிகளில் பொதுமக்களுக்கு முறையான அறிவிப்பு இல்லாததால் செய்தி மக்களுக்கு சென்றடையவில்லை.
உதாரணமாக உத்தமபாளையம் ஒன்றிய அலுவலகத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை மினர் நல அலுவலர், திருமதி, சாந்தி தலைமையில், லோன் மேலா நடப்பது விபரம் தெரியாததால் பொது மக்கள் அதிக அளவில் கொள்ளவில்லை.
இது சம்பந்தமாக துணை ஆட்சியரிடம் கேட்டபோது, அரசு குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டுமே கடன் வழங்க முடிவு செய்துள்ளோம், அதனால் பொதுமக்களுக்கு தண்டோரா மூலம் தெரிவிக்க வில்லை எனத் தெரிவித்தார், அரசு அனைவருக்காகவும் தான், ஆனால் இது போன்ற செயல்களால் தகுதியானவர்களுக்கு கிடைக்க வாய்ப்பில்லாமல் போய் விடுகிறது. இதற்கு மாவட்ட ஆட்சித் தலைவர்கள், அனைத்தும் பயனாளிகளும் பயன் பெறும் வகையில் தெரியப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வருத்தத்துடன் தெரிவிக்கின்றனர்.
You must be logged in to post a comment.