![](https://i0.wp.com/keelainews.com/wp-content/uploads/2024/05/1000972928-large.jpg?resize=1024%2C580&ssl=1)
![](https://i0.wp.com/keelainews.com/wp-content/uploads/2024/05/1000972927-large.jpg?resize=1024%2C580&ssl=1)
சிவகங்கை மாவட்டம் செவ்வூர் அருகே சிவன் ஊர் கிராமத்தில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் ஸ்பேஸ் எக்ஸ்போ டி 24 நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் கே ஆர் பெரிய கருப்பன் கலந்துகொண்டு அறிவியல் கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிட்டார். பூமிகோள்களில் இருந்து விண்வெளியை பார்க்கும் விதமாகவும், செவ்வாய் மற்றும் சந்திரன் நிலப்பரப்பிலிருந்து பூமியை பார்க்கும் விதமாக காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. தொடர்ந்து மாணவ மாணவிகள் பொதுமக்கள் டெலஸ்கோப் மூலம் விண்வெளியில் கோள்கள் எவ்வாறு உள்ளது என செயல்முறை விளக்கம் காண்பிக்கப்பட்டது. விண்வெளி மற்றும் கோள்களை பாட புத்தகத்தில் படிப்பது மட்டும் அதைவிட விண்வெளி கண்காட்சியில் பங்கேற்று அதை செயல்படுத்தி பார்க்கும் பொழுது எளிதாக புரிந்து கொள்ள முடிகிறது என மாணவ மாணவிகள் தெரிவித்தனர்இவ் விண்வெளி கண்காட்சியை மாணவ மாணவிகளே செய்திருந்தனர் என்பது குறிப்பிடதக்கத்து.
You must be logged in to post a comment.