வேலூர் அடுத்த அரியூர் ஸ்ரீபுரத்தில் உள்ள லட்சுமிநாராயணி பொற்கோவில் 14-ம் ஆண்டு விழாவை முன்னிட்டு ஸ்ரீ சூக்த அஷ்டலட்சுமி ஹோம் நேற்று நடந்தது.காலையில் கோ, கஜ,அஷ்வபூஜையும், பின்பு மகாலட்சுமி மூலமந்திர ஹோமம் மகா ஆர்த்திபிறகு சக்தி அம்மா ஸ்ரீ சூக்த அஷ்டலட்சுமி ஹோமத்தை நடத்தினார்.பின்பு அபிஷேகம் நடந்தது.
Category:
மாவட்ட செய்திகள்
செங்கம் காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையில் விநாயகர் சிலை தயாரிப்பு தொழிலாளர்களுடன் ஆலோசனை கூட்டம்.
by mohan
written by mohan
தமிழகத்தில் கொரோனாவால் கடந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியன்று சிலை அமைப்பது குறித்து தமிழக அரசு நோய்த்தொற்று காரணமாக தடை விதித்திருந்தது இந்நிலையில் தமிழகத்தில் மேலும் 2 வாரம் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் அடுத்த மாதம் 10ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது இதன் அடிப்படையில் செங்கம் காவல் துணை கண்காணிப்பாளர் சின்னராஜ் தலைமையில் செங்கம் காவல் நிலையத்தில் விநாயகர் சிலை தயாரிப்பு தொழிலாளர்களிடம் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது அப்போது மூன்றாவது அலைக்காண வாய்ப்பு இருந்து வருவதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துவரும் நிலையில் அடுத்த மாதம் பத்தாம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளதால் இதனால் விநாயகர் சிலை தயாரிப்பு தொழிலாளர்கள் சிலைகளை விற்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு உத்தரவிற்கு கட்டுப்பட வேண்டும் என ஆலோசிக்கப்பட்டது அப்போது சிலை தயாரிப்பு தொழிலாளர்கள் கடந்த ஆண்டு ஏற்ப்பட்ட கொரோனாவால் செய்து வைக்கப்பட்ட விநாயகர் சிலை முழுவதும் விற்கப்படாமல் கடன் சுமையில் இருந்து வருவதாகவும் அடுத்த மாதம் விநாயகர் சதுர்த்தி விழாவில் விநாயகர் சிலைகளை விற்பதற்கு அனுமதி வழங்க மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அனுமதி பெற்று தர வேண்டுமென ஆலோசனை கூட்டத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர் கோரிக்கையின் அடிப்படையில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரிடம் தங்களது கோரிக்கை மனுக்களை கொடுத்து நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக காவல் துணை கண்காணிப்பாளர் சின்னராஜ் தெரிவித்தார்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
உசிலம்பட்டி கண்மாய் சீரமைப்பு பணியில் 58 கிராம இளைஞர் குழுவினர் ஈடுபட்டனர்.
by mohan
written by mohan
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேருந்து நிலையம் அருகில் சுமார் 60 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. கடந்த வருடம் இந்த கண்மாயை சீரமைத்து ஆழப்படுத்தும் பணியில் 58 கிராம இளைஞர் குழுவினர் ஈடுபட்டனர், இந்நிலையில் தற்போது சீமைக்கருவேல மரங்கள் மீண்டும் வளர்ந்து உள்ளதாக தகவல் கிடைத்தது.இதனையடுத்து 58 கிராம இளைஞர் குழுவினர் செளந்திர பாண்டியன் தலைமையில் நீர்பிடிப்பு பகுதிகளில் உள்ள சிறுசிறு கருவேல மரங்களை வேரோடு பிடுங்கி உப்புக் கரைசல் தண்ணீரை அதில் ஊற்றி அம்மரங்கள் அளிக்கப்பட்டது , இவர்களுடன் சமூக ஆர்வலர் ராஜக்காபட்டி பால்ராஜ் மற்றும் அக்னி சிறகுகள் அறக்கட்டளை இளைஞர்கள் இணைந்து சீரமைப்பு இப்பணியில் ஈடுபட்டனர்.
உசிலை சிந்தனியா
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பாரம்பரியமிக்க தமிழ் பெயர்களை அழிக்க முயற்சிக்கிறது ஒன்றிய அரசு மற்றும் ரயில்வே நிர்வாகம் .
by mohan
written by mohan
தமிழகத்தில் ஓடக்கூடிய ரயில்கள் அனைத்திலும் பாரம்பரிய சேரன் சோழன் பாண்டியன் மற்றும் முத்து நகர் நெல்லை போன்ற தமிழ் பெயர்கள் ரயில்கள் இயக்கப்பட்டு வந்தது இந்த நிலையில் கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது அப்போது நாடு முழுவதும் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டு பின்னர் சிறப்பு ரயில் என்று அறிவிக்கப்பட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டது இதுநாள்வரையில் அந்த ரயில்களின் பெயர் மாற்றப்படவில்லை இந்த நிலையில் இன்று மதுரையில் பயணி ஒருவர் முன்பதிவு படிவத்தில் பாண்டியன் எக்ஸ்பிரஸ் என்று எழுதி கணினி முன் பதிவு அலுவலகம் முன் பதிவு செய்வதற்காக படிவத்தைக் கொடுத்து உள்ளார் அப்போது முன் பதிவு செய்யும் அதிகாரி பாண்டியன் எக்ஸ்பிரஸ் என்கின்ற ரயில் இப்பொழுது இயக்கப்படவில்லை எண்ணை எழுதிக் கொடுங்கள் என்று கேட்டுள்ளார் அப்பொழுது என்ன செய்வது என்று தெரியாமல் இணையத்தில் சென்று புறப்படும் நேரத்தை கணக்கு வண்டி என்னை அதில் பாண்டியன் எக்ஸ்பிரஸ் என்னும் தமிழ் பாரம்பரியம் மிக்க பெயரை அளித்து கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என பயணி வேதனையுடன் தெரிவித்தார் சமூக ஆர்வலர் ஒருவர் கூறுகையில் தமிழ் பாரம்பரிய மிக்க பெயர்களை இப்பொழுது வருங்கால சந்ததிகள் மறந்து வருகின்றனர் தமிழகத்திலிருந்து வெளிமாநிலங்களுக்கு இயக்கப்படும் ரயில்களுக்கு குருவாயூர் எக்ஸ்பிரஸ் கொல்லம் எக்ஸ்பிரஸ் என்று அதற்கு ஒன்றிய அரசு ரயில்வே நிர்வாகம் அம்மாநில பாரம்பரிய பெயர்களை வைத்து ரயில்களை இயக்குகிறது ஆனால் தமிழகத்தில் தமிழை அழிக்க முயற்சிக்கிறது என்று குற்றம் சாட்டுகின்றனர் இதுபோன்று முன்பதிவு டிக்கெட்டில் ஆங்கிலம் மற்றும் இந்தியில் செல்லும் ஊர்கள் பெயர் இடம்பெற்றுள்ளது முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டில் தமிழில் ஒரு வார்த்தை கூட இல்லாதது மிகுந்த வேதனை அளிக்கிறது தொடர்ந்து தமிழை மற்றும் அதன் பாரம்பரியத்தை அழிக்கும் முயற்சியில் வருங்கால சந்ததியினர் தெரிந்து விடக்கூடாது என்ற நோக்கத்திலேயே செயல்படுவதாகவும் இதுபோன்று தொடர்ந்து செயல்பட்டால் மிகப் பெரிய போராட்டங்கள் வெடிக்கும் என சமூக ஆர்வலர்கள் தமிழ் ஆர்வலர்களும் எச்சரிக்கை விடுக்கின்றனர் உடனடியாக தமிழகத்தில் இயங்கும் அனைத்து ரயில்களும் ஏற்கனவே இயக்கப்பட்ட தமிழ் பெயர்களை வைத்தே ரயில்கள் இயக்கப்பட வேண்டும் கோரிக்கை விடுக்கின்றனர்..
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திருப்பத்தூர் மாவட்டம திருப்பத்தூர் அடுத்த வெங்களாபுரம் அருகே உள்ள ராஜமங்கலம் ஏரியில் அனுமதியின்றி மண் கடத்தி வந்து அதை விளைநிலங்களில் கொட்டிரியல் எஸ்டேட்டாக நிலத்தை மாற்றி விற்பனை செய்ய ஏரி மண் கடத்தியது தெரியவந்தது. இதனையெடுத்து நள்ளிரவில் சோதனை செய்த திருப்பத்தூர் எஸ்.பி.சிபி சக்கரவர்த்தி ஒரு ஜேசிபி 2 டிப்பர் லாரிகளை பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்தனர்.
கே.எம். வாரியார்
வேலூர்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த மாதகடப்பா பகுதியில் உள்ள மலைப்பகுதியில் கள்ள சாராயம் காய்ச்சிய விஜயன், சூரியா, வேலு சிவாஜி,செல்லப்பா ஆகிய 5 பேர் கைதுசுமார் 500 லிட்டர் கள்ள சாராயம் அழிப்பு கிராமிய போலீசார் நடவடிக்கை
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
வாசுதேவநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்கான உள்ளாட்சி தேர்தல் ஆலோசனை கூட்டம் புளியங்குடி நகர எஸ்டிபிஐ கட்சி சார்பில் கல்வத் நாயகம் தைக்காவில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக தென்காசி மாவட்டத்தின் புதிய மாவட்ட தலைவர் யாசர் கான் கலந்து கொண்டார். முக்கிய இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட பொதுச்செயலாளர் ஷேக் சிந்தா மதார், தென்காசி மாவட்டச் செயலாளர்கள் சிக்கந்தர், சர்தார், இம்ரான் கான், வாசுதேவநல்லூர் தொகுதியின் துணைத் தலைவர் அஹமது, தொகுதி செயலாளர் ஜார்ஜ், புளியங்குடி நகர நிர்வாகிகள் மற்றும் கிளை நிர்வாகிகள், வாசுதேவநல்லூர் நகர நிர்வாகிகள் மற்றும் கிளை நிர்வாகிகள், பாம்பு கோயில் நகர நிர்வாகிகள் மற்றும் கிளை நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் புளியங்குடி எஸ்டிபிஐ கட்சியின் சார்பாக வருகின்ற உள்ளாட்சித் தேர்தலில் ( 10,12,17,18,21,22,23,25,29,31,30,32 ) ஆகிய 12 வார்டுகளில் போட்டியிடுவது என்றும், புளியங்குடியில் அதிகமான கிளைகளை தொடங்குவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மேலப்பாளையம் அரசு மருத்துவமனையில் சுற்றித்திரியும் வெறி நாய்களை அப்புறப்படுத்த தமுமுக மமக கோரிக்கை..
by mohan
written by mohan
மேலப்பாளையம் அரசு மருத்துவமனையில் சுற்றித்திரியும் வெறி நாய்களை அப்புறப்படுத்த கோரி நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் தமுமுக மனிதநேய மக்கள் கட்சியினர் நேரில் மனு அளித்தனர். நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் அரசு மருத்துவமனையில் தஞ்சம் புகுந்திருக்கும் வெறிநாய்களால் மருத்துவ மனைக்கு வரும் நோயாளிகளிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. மேலும் இரவு நேரங்களில் உள் நோயாளிகள், கர்ப்பிணி பெண்கள் தூங்குவதற்கு முடியவில்லை. வெறி நாய்களால் பச்சிளம் குழந்தைகளுக்கு ஏதேனும் ஆபத்து வந்து விடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.எனவே அரசு மருத்துவ மனையில் சுற்றித் திரியும் வெறிநாய்களை அப்புறப்படுத்த வேண்டும் என தமுமுக மமக மாவட்ட துணை தலைவர் தேயிலை மைதீன் , மாவட்ட துணை செயலாளர் அ.காஜா ,ஐபிபி மாவட்ட செயலாளர் K.A.ஞானியார், வடக்கு பகுதி தலைவர் குதா முகம்மது, மமக செயலாளர் K.K. அப்துல் அஜிஸ், தமுமுக செயலாளர் துபை ஜபருல்லாஹ், பொருளாளர் காயங் கட்டி மீரான், 38 வது வார்டு பொறுப்பாளர் கல்ஸ் மைதீன் பிள்ளை ஆகியோர் நேரில் சென்று மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தனியார் கல்லூரியில் கட்டண உயர்வை கண்டித்து sfi மாணவர் அமைப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
by mohan
written by mohan
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா நாகமலை புதுக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் கல்விக் கட்டணம் அதிகமாக வசூலிப்பதாக கண்டித்து sfi மாணவர் அமைப்பு சார்பில் மாநில செயலாளர் மாரியப்பன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் பெண் உள்பட 30- மாணவர்கள் கலந்து கொண்டனர்எஸ்ஆப் மாநிலச் செயலாளர் மாரியப்பன் கூறுகையில் 700 ரூபாய் கடனுக்காக 7000 ரூபாய் வசூலிக்கும் கல்லூரி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் சட்டமன்ற உறுப்பினராக உள்ள கல்லூரி செயலாளர் அரசு விதிமுறைகளை மீறி செயல்படுவதால் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், மதுரை மாவட்டத்தில் சுற்றுவட்டாரப் பகுதிகளான சோழவந்தான், வாடிப்பட்டி , திருமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.இன்று காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. மாலை 4 மணி அளவில், மதுரை நகர் பகுதிகளான பழங்காநத்தம், பெரியார் நிலையம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அரை மணி நேரத்திற்கு மேலாக நல்ல மழை பெய்தது. அண்ணாநகர், கோமதிபுரம், மேலமடை, கருப்பாயூரணி, வண்டியூர், யாகப்பநகர் பகுதிகளில் சாரல் மழை பெய்தது.கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்த நிலையில், தற்போது பெய்து வரும் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுபோன்றுதிருப்பரங்குன்றம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளான திருநகர் தனக்கங்குளம் பெருங்குடி விமான நிலையம் வில்லாபுரம் அவனிடம் பகுதிகளில் பரவலாக மழைமதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளான திருநகர் திருப்பரங்குன்றம் தனக்கங்குளம் பெருங்குடி விமான நிலையம் அவனியாபுரம் வில்லாபுரம் சிந்தாமணி பகுதிகளில் கடந்த அரை மணி நேரமாக மழை பெய்தது
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை ஆதீனத்தில் 293- வது மடாதிபதி பதவியேற்பு:மதுரை :மதுரை ஆதீனத்தில், 293-வது மடாதிபதியாக ஞானசம்பந்த தேசிய பரமாச்சாரிய சுவாமிகள் திங்கள்கிழமை பொறுப்பேற்றார்.மதுரை ஆதின மடத்தில் மறைந்த ஆதினகர்த்தர் அருணகிரிநாதரின் 500 கிலோ எடையுள்ள பளிங்கு சிலை பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.உடல்நலக்குறைவு காரணமாக, கடந்த சில நாட்களுக்கு முன், காலமான மதுரை ஆதீனத்தின் 292வது பீடாதிபதியான ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த தேசிக பரமாச்சார்ய சுவாமிகளின் உடல் மதுரை முனிச்சாலை பகுதியில் உள்ள ஆதினத்திற்கு சொந்தமாக இடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.இந்த நிலையில்பொதுமக்கள் ஏராளமானோர் மறைந்த மதுரை ஆதினத்திற்கு அஞ்சலி செலுத்தினர்.தற்போது, மறைந்த ஆதினத்தின் பளிங்கு சிலை மக்களின் அஞ்சலிக்காக மடத்தில் வைக்கப்பட்டது.இதனை, ஏராளமான பொது மக்களும், பக்தர்களும் பார்த்து சென்றனர். இந் நிலையில்,மதுரை புதிய ஆதீனமாக,மதுரை ஆதினத்தில் 293-வது மடாதிபதியான ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த, தேசிய பரமாச்சாரிய சுவாமிகள், திங்கள்கிழமை பொறுப்பேற்றார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மாட்டுத்தாவணியிலிருந்து- தென்காசி மாவட்டம், கடைய நல்லூருக்கு காய்கறி ஏற்றி வேன் சென்று கொண்டிருந்தது.திருமங்கலம் ராஜபாளையம் மெயின் ரோடு, ஆலம்பட்டி அருகில் நிலை தடுமாறி வேன், அதிகாலைமரத்தின் மீது மோதியது.இந்த விபத்தில், வேன் டிரைவர் காயமடைந்தார். மேலும், கிளீனர் முருகையா வயது 60. சம்பவ இடத்தில் இறந்து விட்டார். இறந்தவரை, திருமங்கலம் தீயணைப்பு நிலைய பணியாளர் சேர்ந்து மீட்டு, ஹைவே பெட்ரோல் சார்பு ஆய்வாளர் அய்யணனிடம், நிலைய தீயணைப்பு அலுவலர் ஜெ ஜெயராணி தலைமையில், தீயணைப்பு வீரர்கள் ஓப்படைத்தனர்.இது குறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்
. .செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை மாவட்டம் மாடக்குளம் கிராமம் பகுதியில் அமைந்துள்ள மாடக்குளம் கண்மாய் மதுரை மாநகரின் நகர்ப் பகுதியில் அமைந்துள்ள மிகப்பெரிய கண்மாய் மாடக்குளம் கண்மாய் சுமார் 3. 4 கிலோ மீட்டர் அளவிற்கு நிலத்தடி ஆதாரமாக விளங்குகிறது வருவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர் இந்த நிலையில் மாடக்குளம் கண்மாய் இலிருந்து தேவையின்றி அதிக அளவு நீர் வெளியேற்று வதாகவும் இதனால் மாடக்குளம் பெரியார் நகர் விகேபி நகர் மருதுபாண்டியர் நகர் பழங்காநத்தம் எல்லிஸ் நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு நிலத்தடி மற்றும் குடிநீர் ஆதாரமாக விளங்கிய வருவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர் இந்த நிலையில் மாடக்குளம் பெரியார் நகர் விகேபி நகர் பழங்காநத்தம் உள்ளிட்ட பகுதிகளில் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுக்கும் வகையில் மருதுபாண்டியர் நகர் குடியிருப்பு நல சங்கத்தின் சார்பாக அப்பகுதி முழுவதும் நோட்டீஸ் அடித்து ஒட்டி உள்ளார்கள்
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தமிழகம், கர்நாடகா, ஆந்திர மாநிலங்களில் கொரானா பாதிப்பு காரணமாக கடந்த ஏப்ரல் 27-ம் தேதி முதல் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.நேற்று, 22-ம் தேதி நள்ளிரவு முதல் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களிடையே பஸ் போக்குவாத்து துவங்கியது. 3 மாநிலங்களிக்கு இடையே போக்குவரத்து துவங்கியதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
கே.எம். வாரியார்
வேலூர்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார்.சட்டசபை தேர்தலில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் வெற்றி பெற்று முதல்வராக வேண்டும் என்று தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய ஆலயங்களில் சென்று வேண்டுதல் வைத்திருந்தார் துர்கா ஸ்டாலின். திருவண்ணாமலையில் கிரிவலம் வந்து வேண்டிக்கொண்டார். திருச்செந்தூர் முதல் திருவள்ளூர் வரையிலும் உள்ள ஆலயங்களில் இறைவனிடம் வேண்டுதல் வைத்திருக்கிறார் துர்கா.தன்னுடைய கணவர் வெற்றி பெற்று முதல்வராக வேண்டும் என்ற நேர்த்திக்கடன் நிறைவேறியதால் மகிழ்ச்சியடைந்திருக்கும் துர்கா ஸ்டாலின் தற்போது கொரோனா தளர்வுகள் அமலில் உள்ள போதே கோவில்களுக்கு சென்று வேண்டுதலை நிறைவேற்றி இறைவனுக்கு நன்றி செலுத்தி வருகிறார்.இந்நிலையில் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் மற்றும் மகள் செந்தாமரை சபரீசன் உள்ளிட்டோர் சாமி தரிசனம் செய்தனர். துர்கா ஸ்டாலினுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சாலை மறியலுக்காக தாலுகா அலுவலகம் முன்பு திரண்ட பொதுமக்கள்; வீ.கே.புதூரில் பரபரப்பு..
by mohan
written by mohan
வீரகேரளம்புதூரில் தாலுகா அலுவலகம் முன்பு அரசு மருத்துவமனை கட்டிடம் கட்ட கோரிக்கை விடுத்து சாலை மறியலுக்காக பொதுமக்கள் திடீரென திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அதிகாரிகளின் சமாதான பேச்சு வார்த்தையை தொடர்ந்து மக்கள் கலைந்து சென்றனர். தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூரில் இயங்கிவந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கடந்த ஆட்சியின் போது, அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டு,புதிய கட்டடங்கள் கட்ட நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டது. ஆனால் மருத்துவமனைக்கான இடம் தேர்வு செய்யப்படாத நிலையில் நிதி ஒதுக்கீடு பெறப்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது. எனவே பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று தாலுகா அலுவலகம் அருகிலேயே புதிய மருத்துவமனைக்கான கட்டிடம் கட்டுவதற்கு உரிய ஏற்பாடுகளை உடனடியாக செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்து அனைத்து சமுதாய பொது மக்களின் சார்பில் வீரகேரளம்புதூர் தாலுகா அலுவலகம் முன்பாக சாலை மறியல் போராட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நேற்று காலை வீரகேரளம்புதூரில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. ஆட்டோக்கள் ஓடவில்லை. 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டு சாலை மறியலுக்கு தாலுகா அலுவலகம் முன்பாக குவிந்தனர். இவர்களிடம் ஆலங்குளம் டிஎஸ்பி பொன்னிவளவன் பேச்சுவார்த்தை நடத்தினார். தொடர்ந்து தாலுகா அலுவலகத்தில் தென்காசி ஆர்டிஓ ராமச்சந்திரன் தலைமையில் சமாதான கூட்டம் நடந்தது. இதில் உடனடியாக அரசு மருத்துவமனைக்கான புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். சமாதான கூட்டத்தில் ஆலங்குளம் டிஎஸ்பி பொன்னிவளவன், வீரகேரளம்புதூர் தாசில்தார் வெங்கடேஷ், சுரண்டை இன்ஸ்பெக்டர் சுரேஷ், வீரகேரளம்புதூர் நவநீத கிருஷ்ணசுவாமி திருக்கோயில் நிர்வாகி சுசிலா ராணி, தென்காசி மக்கள் நல்வாழ்வு துறை இணை இயக்குனர் வட்டார சுகாதார அலுவலர் ராஜ்குமார், வீரகேரளம்புதூர் கம்யூனிஸ்ட் சங்கரன், சேனைத்தலைவர் சமுதாய தலைவர் நயினார், தேவர் சமுதாய தலைவர் பரசுராமன், கிறிஸ்தவ சமுதாய தலைவர் ஆரோக்கியசாமி, இஸ்லாமிய சமுதாய தலைவர் முஹம்மது மீரான்,முன்னாள் தாசில்தார் ஆவுடையப்பன் உட்பட அனைத்து சமுதாய நாட்டாமைகள் மற்றும் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள், ஆட்டோ ஓட்டுனர், விவசாயிகள், பீடி தொழிலாளர்கள், கட்டுமான தொழிலாளர்கள் சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
புகழ் வாய்ந்த நடைமுறை இயந்திரங்களின் கார்னோட்வின் நான்கு-நிலை-சுழற்சி கண்டறிந்த நிக்கலாஸ் லெனார்ட் சாடி கார்னோட் நினைவு தினம் இன்று (ஆகஸ்ட் 24, 1832)
by mohan
written by mohan
நிக்கலாஸ் லெனார்ட் சாடி கார்னோட் (Nicolas Leonard Sadi Carnot) ஜூன் 1, 1796ல் பாரிஸில் அறிவியல் மற்றும் அரசியல் இரண்டிலும் வேறுபடுத்தப்பட்ட ஒரு குடும்பத்தில் பிறந்தார். பிரபல கணிதவியலாளர், இராணுவ பொறியியலாளர் மற்றும் பிரெஞ்சு புரட்சிகர இராணுவத்தின் தலைவரான லாசரே கார்னோட்டின் முதல் மகன் ஆவார். அவர் தமக்கு ஈரானில் இருக்கும் சிராசில் உள்ள சாடி என்னும் பெர்சியக் கவிஞரின் மேல் இருந்த மதிப்பால் தம் மகனுக்கு சாடி என்னும் பெயரைத் தந்தார். சாடி கார்னோ பிறந்த சிறிது காலத்துக்குள்ளேயே, லாசரெ கார்னோ அவர்கள் வெளிநாட்டில் தலைமறைவாக இருக்க நேர்ந்தது. ஆனால் பின்னர் நெப்போலியன் ஆட்சிக்கு வந்த பின் இவர் நெப்போலியனின் அரசில் போர்த்துறைக்கு அமைச்சராய் வந்து சேர்ந்தார். எனினும், அவ்வேலையில் அவர் நிலைக்காமல், விலகி விட்டார். இதனால் தன் மகனுக்கு பாடம் சொல்லிக்கொடுக்க வசதியாக இருந்தது.
சாடி கார்னோ 1812ல் ஈக்கோலே பாலிடெக்னிக் என்னும் உயர் கல்வி நிறுவனத்தில் கல்வி பயின்றார். 1814ல் கல்வியை முடித்துவிட்டு வந்த பின், பிரெஞ்சுப் படையில் சேர்ந்து பெரும்பாலும் அதிலேயே இருந்தார். இவருக்கு போதிய பதவி உயர்வுகள் தாராவிட்டாலும், இவர் பல அறிவியற் சொற்பொழிவுகளுக்குச் சென்றும், புகழ் பெற்ற அறிவியல் அறிஞர்களோடு ஆழ உரையாடியும் தம் அறிவை செழுமைப்படுத்தி வந்தார். அக்காலத்தில், சாடி கார்னோவிற்கு முதன்மையான கேள்வி, எப்படி நீராவி எந்திரத்தை திறன் மிகுந்ததாகச் செய்வது என்பதுதான். அக்காலத்தில், ஆங்கிலேயர்கள் இந்த நீராவி எந்திரத்தில் பெரும் முன்னேற்றம் அடைந்து இருந்தனர். பிரான்சு நாட்டில் அவ்வாறு இல்லாமலும், நீராவி எந்திரங்களை இறக்குமதி செய்து கொண்டும் இருந்தனர். எனவே இவர் ஆய்வுகள் செய்து 1824-ல் தீயின் இயக்கு விசையைப் பற்றிய எண்ணங்கள் என்னும் ஒரு சிறு நூலை வெளியிட்டார். அது இன்றளவும் போற்றப்படுகின்றது.
பிரெஞ்சு இராணுவத்தின் பொறியாளர்களின் படையில் அதிகாரியாக ஆனார். அவரது தந்தை லாசரே “நூறு நாட்களில்” நெப்போலியனின் உள்துறை அமைச்சராக பணியாற்றினார். 1815ல் நெப்போலியனின் இறுதி தோல்விக்குப் பிறகு லாசரே நாடுகடத்தப்பட்டார். லூயிஸ் XVIII இன் மீட்டெடுக்கப்பட்ட போர்பன் முடியாட்சியின் கீழ் இராணுவத்தில் சாடியின் நிலை பெருகிய முறையில் கடினமாகிவிட்டது. சாடி கார்னோட் வெவ்வேறு இடங்களுக்கு அனுப்பப்பட்டார். அவர் கோட்டைகளை ஆய்வு செய்தார், திட்டங்களை கண்காணித்தார் மற்றும் பல அறிக்கைகளை எழுதினார். அவரது பரிந்துரைகள் புறக்கணிக்கப்பட்டன. செப்டம்பர் 15, 1818 அன்று, ராயல் கார்ப்ஸ் ஆஃப் ஸ்டாஃப் மற்றும் பொது ஊழியர்களின் சேவைக்கான ஸ்கூல் ஆப் அப்ளிகேஷனின் நுழைவுத் தேர்வுக்குத் தயாராவதற்கு அவர் ஆறு மாத விடுப்பு எடுத்தார்.
1819 ஆம் ஆண்டில், சாடி பாரிஸில் புதிதாக அமைக்கப்பட்ட பொது ஊழியர்களுக்கு மாற்றப்பட்டார். அவர் இராணுவக் கடமைக்கான அழைப்பில் இருந்தார். ஆனால் அப்போதிருந்து அவர் தனது கவனத்தை தனியார் அறிவுசார் முயற்சிகளுக்கு அர்ப்பணித்தார். மூன்றில் இரண்டு பங்கு ஊதியம் மட்டுமே பெற்றார். கார்னோட் விஞ்ஞானி நிக்கோலா கிளெமெண்ட்டுடன் நட்பு கொண்டிருந்தார். இயற்பியல் மற்றும் வேதியியல் பற்றிய விரிவுரைகளில் கலந்து கொண்டார். நீராவி என்ஜின்களின் செயல்திறனை மேம்படுத்துவதற்கான வரம்பைப் புரிந்துகொள்வதில் அவர் ஆர்வம் காட்டினார். இது அவரை விசாரணைக்கு இட்டுச் சென்றது. 1824ல் வெளியிடப்பட்ட தீய சக்தியின் பிரதிபலிப்புகளாக மாறியது.
வெப்ப இயந்திரங்களின் செயல்பாட்டைப் பற்றி இரண்டு கேள்விகளுக்கு கார்னோட் பதிலளிக்க விரும்பினார். வெப்ப மூலத்திலிருந்து கிடைக்கும் வேலை வரம்பற்றதா? மற்றும் “நீராவியை வேறு சில வேலை திரவம் அல்லது வாயுவுடன் மாற்றுவதன் மூலம் கொள்கையளவில் வெப்ப இயந்திரங்களை மேம்படுத்த முடியுமா?. 1824 ஆம் ஆண்டில் அவருக்கு 27 வயதாக இருந்தபோது ஒரு பிரபலமான படைப்பாக வெளியிடப்பட்ட ஒரு நினைவுக் குறிப்பில் அவர் பதிலளிக்க முயன்றார். நெருப்பின் உந்துதல் சக்தியின் பிரதிபலிப்புகள் என்ற தலைப்பில் இருந்தது. புத்தகம் மிகவும் பிரபலமான முறையில் வெப்ப இயந்திரங்களைப் பற்றிய பரந்த அளவிலான தலைப்புகளை உள்ளடக்கும் நோக்கம் கொண்டது. சமன்பாடுகள் குறைந்தபட்சமாக வைக்கப்பட்டு, எளிய இயற்கணிதம் மற்றும் எண்கணிதத்தை விட சற்று அதிகமாக அழைக்கப்பட்டன. அவ்வப்போது அடிக்குறிப்புகளில் தவிர, சில கால்குலஸை உள்ளடக்கிய சில வாதங்களில் அவர் ஈடுபட்டார்.
வேலை செய்யும் திரவங்கள், நீராவி இயந்திர வடிவமைப்பின் பல்வேறு அம்சங்களின் சிறப்புகள், மற்றும் நடைமுறை இயற்கையின் சாத்தியமான முன்னேற்றங்கள் குறித்து தனது சொந்த சில யோசனைகளையும் அவர் விவாதித்தார். புத்தகத்தின் மிக முக்கியமான பகுதி ஒரு இலட்சியப்படுத்தப்பட்ட இயந்திரத்தின் சுருக்க விளக்கக்காட்சிக்கு அர்ப்பணிக்கப்பட்டது. அவை பொதுவாக அனைத்து வெப்ப இயந்திரங்களுக்கும் பயன்படுத்தப்படும் அடிப்படைக் கொள்கைகளைப் புரிந்துகொள்வதற்கும் தெளிவுபடுத்துவதற்கும் பயன்படுத்தப்படலாம். வெப்ப இயக்கவியலில் கார்னோட் செய்த மிக முக்கியமான பங்களிப்பு, நீராவி இயந்திரத்தின் அத்தியாவசிய அம்சங்களை அவர் சுருக்கமாகக் காட்டியது. அவை அவருடைய நாளில் அறியப்பட்டவை. மிகவும் பொதுவான மற்றும் இலட்சியப்படுத்தப்பட்ட வெப்ப இயந்திரமாக மாற்றப்பட்டன. இதன் விளைவாக ஒரு மாதிரி வெப்ப இயக்கவியல் அமைப்பில் சரியான கணக்கீடுகள் செய்யப்படலாம். மேலும் தற்கால நீராவி இயந்திரத்தின் பல கச்சா அம்சங்களால் அறிமுகப்படுத்தப்பட்ட சிக்கல்களைத் தவிர்த்தது. இயந்திரத்தை இலட்சியமாக்குவதன் மூலம், அவர் தனது அசல் இரண்டு கேள்விகளுக்கு தெளிவான மற்றும் மறுக்கமுடியாத பதில்களைப் பெற முடியும்.
இந்த இலட்சிய இயந்திரத்தின் செயல்திறன் அது செயல்படும் நீர்த்தேக்கங்களின் இரண்டு வெப்பநிலைகளில் மட்டுமே செயல்படுவதாக அவர் காட்டினார். எவ்வாறாயினும், அவர் செயல்பாட்டின் சரியான வடிவத்தை கொடுக்கவில்லை. இது பின்னர் (T1 – T2) / T1 எனக் காட்டப்பட்டது, அங்கு T1 என்பது வெப்பமான நீர்த்தேக்கத்தின் முழுமையான வெப்பநிலையாகும். வேறு எந்த சுழற்சியையும் இயக்கும் எந்த வெப்ப இயந்திரமும் அதே இயக்க வெப்பநிலையைக் கொண்டு மிகவும் திறமையாக இருக்க முடியாது. கார்னோட் சுழற்சி மிகவும் திறமையான சாத்தியமான இயந்திரமாகும். இது உராய்வு இல்லாத (அற்பமான) மற்றும் பிற தற்செயலான வீணான செயல்முறைகளின் காரணமாக மட்டுமல்ல. முக்கிய காரணம் என்னவென்றால், வெவ்வேறு வெப்பநிலையில் இயந்திரத்தின் பகுதிகளுக்கு இடையில் வெப்பத்தை கடத்துவதில்லை என்று கருதுகிறது. வெவ்வேறு வெப்பநிலையில் உடல்களுக்கு இடையில் வெப்பத்தை கடத்துவது ஒரு வீணான மற்றும் மீளமுடியாத செயல் என்பதை கார்னோட் அறிந்திருந்தார். இது வெப்ப இயந்திரம் அதிகபட்ச செயல்திறனை அடைய வேண்டுமானால் அகற்றப்பட வேண்டும். இவருடைய பெரும் புகழ் வாய்ந்த கார்னோவின் நான்கு-நிலை-சுழற்சி என்பது வெப்பத்தால் இயங்கும் எந்திரங்களுக்கு ஒரு கருத்தியல் அடிப்படையாக உள்ளது.
கார்னோட் ஓய்வூதியம் இல்லாமல் 1828ல் இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றார். 1832 ஆம் ஆண்டில் காலராவின் தொற்று காரணமாக அவர் ஒரு தனியார் புகலிடத்தில் அடைக்கப்பட்டார். ஆகஸ்ட் 24, 1832ல் தனது 36வது அகவையில் பாரிஸ், பிரான்ஸ்சில் காலரா நோயால் இவ்வுலகை விட்டு பிரிந்தார். காலராவின் தொற்று தன்மை காரணமாக, கார்னோட்டின் பல உடமைகளும் எழுத்துக்களும் அவரது மரணத்திற்குப் பிறகு அவருடன் புதைக்கப்பட்டன. இதன் விளைவாக, அவரது விஞ்ஞான எழுத்துக்களில் சில மட்டுமே எஞ்சியுள்ளன. நெருப்பின் நோக்கம் பற்றிய பிரதிபலிப்புகள் வெளியிடப்பட்ட பிறகு, புத்தகம் விரைவாக அச்சிடப்படவில்லை. சிறிது நேரம் பெறுவது மிகவும் கடினம். கெல்வின், கார்னட்டின் புத்தகத்தின் நகலைப் பெறுவதில் சிரமப்பட்டார். 1890 ஆம் ஆண்டில் புத்தகத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பு ஆர்.எச். தர்ஸ்டன் அவர்களால் வெளியிடப்பட்டது. இந்த பதிப்பு சமீபத்திய தசாப்தங்களில் டோவர் மற்றும் பீட்டர் ஸ்மித் ஆகியோரால் 2005 ஆம் ஆண்டில் டோவரால் மறுபதிப்பு செய்யப்பட்டது. கார்னோட்டின் சில மரணத்திற்குப் பின் கையெழுத்துப் பிரதிகளும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
கார்னோட் தனது புத்தகத்தை நீராவி என்ஜின்களின் உச்சத்தில் வெளியிட்டார். இதன் விளைவாக வெப்பமான நீர்த்தேக்கத்தின் அதிக வெப்பநிலை இருப்பதால், சூப்பர் ஹீட் நீராவியைப் பயன்படுத்தும் நீராவி என்ஜின்கள் ஏன் சிறந்தது என்று அவரது கோட்பாடு விளக்கினார். கார்னோட்டின் கோட்பாடுகள் மற்றும் முயற்சிகள் உடனடியாக நீராவி இயந்திரங்களின் செயல்திறனை மேம்படுத்த உதவவில்லை. தற்போதுள்ள ஒரு நடைமுறை ஏன் மற்றவர்களை விட உயர்ந்தது என்பதை விளக்க அவரது கோட்பாடுகள் உதவின. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் தான் கார்னோட்டின் கருத்துக்கள், அதாவது அதன் வெப்ப நீர்த்தேக்கத்தின் வெப்பநிலை அதிகரித்தால் வெப்ப இயந்திரத்தை மிகவும் திறமையாக உருவாக்க முடியும் என்பது நடைமுறைக்கு வந்தது. எவ்வாறாயினும், கார்னோட்டின் புத்தகம் நடைமுறை இயந்திரங்களின் வடிவமைப்பில் உண்மையான தாக்கத்தை ஏற்படுத்தியது. எடுத்துக்காட்டாக, ருடால்ப் டீசல் டீசல் இயந்திரத்தை வடிவமைக்க கார்னோட்டின் கோட்பாடுகளை பயன்படுத்தியது. இதில் சூடான நீர்த்தேக்கத்தின் வெப்பநிலை நீராவி இயந்திரத்தை விட அதிகமாக உள்ளது. இதன் விளைவாக ஒரு இயந்திரம் அதிக செயல்திறன் கொண்டது.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி,திருச்சி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
வண்ணாங்குண்டு கால்பந்து கிளப் (VFC) சார்பாக மாவட்ட அளவில் நடைபெற்ற 5s கால்பந்து போட்டி நடைபெற்றது.
இப்போட்டியில் முதலிடத்தை சின்னக்கடை கால்பந்து மாஸ்டர் கிளப் அணியினரும், இரண்டாம் இடத்தை பெரியபட்டினம் கால்பந்து அணியினரும், மூன்றாம் இடத்தை குப்பன் வலசை கால்பந்து அணியினரும், நான்காம் இடம் பெற்ற வண்ணாங்குண்டு கால்பந்து அணியினரும் பெற்றனர்.
தகவல்:- SH.பாசித், வண்ணாங்குண்டு
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தென்காசி மாவட்டத்தில் தொழில் முனைவோருக்கு சிறப்பு கடனுதவி முகாம்;மாவட்ட ஆட்சியர் தகவல்..
by mohan
written by mohan
தென்காசி மாவட்டத்தில் தொழில் முனைவோருக்கான சிறப்பு கடனுதவி முகாம் வருகின்ற 25.08.21 மற்றும் 26.08.21 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது. இந்த கடனுதவி முகாமை தொழில் முனைவோர்கள், தொழிலதிபர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு தென்காசி கலெக்டர் கோபால சுந்தரராஜ் கேட்டுக் கொண்டுள்ளார். தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் பிரிவுகளுக்கு புதிய தொழிற்சாலைகளை நிறுவுவதற்கும் தற்போது இயங்கி கொண்டிருக்கும் தொழிற்சாலைகளை விரிவுபடுத்துவதற்கும், உற்பத்தியை பன்முகப்படுத்துவதற்கும் பல்வேறு சிறப்புத் திட்டங்களின் கீழ் கடனுதவி வழங்கி வருகிறது. புதிய கால கடன் பெறுபவர்கள் 30 கோடி வரை கடனாக பெற்றுக் கொள்ளலாம். நடைமுறை மூலதனமாக ரூ.2 கோடி வரை கடனாக பெற்றுக் கொள்ளலாம். முதல் தலை முறை தொழில் முனைவோர்கள் ரூ.10 இலட்சத்திற்கு மேற்பட்ட ரூ.5 கோடி வரையிலான புதிய உற்பத்தி மற்றும் சேவை தொழில்திட்டங்களை 25% மானியத்துடன் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தில் கடன் பெற்று தொழில் ஆரம்பிக்க புதிய தொழில் முனைவோர் மற்றும் நிறுவன மேம்பாட்டு திட்டம் (NEEDS) என்ற திட்டம் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இத்திட்டத்தில் பயன்பெற பட்டப்படிப்பு பட்டயபடிப்பு அல்லது தொழிற் கல்வி (ஐ.டி.ஐ) ஆகிய ஒன்றில் தேர்ச்சி பெற்று இருத்தல் வேண்டும். தொழில் ஆரம்பிக்க உள்ளோர் தங்களது பங்கு தொகையாக 5% மட்டுமே மூலதனமாக கொண்டு வர வேண்டும். மேலும் 25% மானிய தொகையுடன் 6% வட்டி மானியமும் வழங்கப்படும்.இத் திட்டத்தின் கீழ் தகுதி பெறும் தொழில்களுக்கு தமிழக அரசின் 25% முதலீட்டு மானியம் ரூ. 50 இலட்சம் வரை வழங்கப்படும். இத்திட்டத்தில் விண்ணப்பிக்க தகுதியுடைய தொழில் முனைவோர்கள் www.msmeonline.tn.gov.in/needs என்ற இணைய தளம் வழியாக விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்தில் விண்ணப்பிக்க சிறப்பு முகாம் 25.08.2021 மற்றும் 26.08.2021 அன்று தென்காசியில் உள்ள மாவட்ட தொழில் மையம், திருமலைக்கோவில் சாலை, குத்துக்கல் வலசை, தென்காசி என்ற முகவரியில்தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழக அலுவலர்களால் நடத்தப்படவுள்ளது. முகாமில் கடன் பெறுவதற்கான விண்ணப்பத்தினையும்பெற்றுக் கொள்ளலாம். இந்த சிறப்பு முகாம் காலத்தில் சமர்பிக்கப்படும் கடன்
விண்ணப்பங்களுக்கு ஆய்வு கட்டணத்தில் 50% சலுகை அளிக்கப்படும்.NEEDS திட்டத்தின் கீழ் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்களுக்கு ஆய்வு கட்டணத்தில் முழு விலக்கு அளிக்கப்படுகிறது. மேலும் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் மூலம் கடன் பெற தகுதியுடைய தொழில் முனைவோர்கள் விண்ணப்பங்களை www.tiic.org/application-forms-download/ என்ற இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்து நேரிலோ அல்லது தபால் மூலமாகவே கிளை மேலாளர், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம்,5C,5B சகுந்தலா ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், திருவனந்தபுரம் சாலை, திருநெல்வேலி – 627 003 என்ற முகவரிக்கு அனுப்பலாம். மேலும் இத்திட்டத்தில் விண்ணப்பிப்பது தொடர்பான விளக்கங்களுக்கு 9445023492 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் மூலமும் விளக்கங்களைப் பெறலாம். இந்த வாய்ப்பினை தென்காசி மாவட்டத்திலுள்ள புதிய தொழில்முனைவோர்கள், தொழிலதிபர்கள் பயன்படுத்தி தொழில் திட்டங்களுடன் சிறப்பு முகாமிற்கு வருகை தந்து தொழில் கடன் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் மானிய சேவைகளை பயன்படுத்தி கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கோபால சுந்தர ராஜ் செய்தி குறிப்பில்
தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கலசபாக்கம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
by mohan
written by mohan
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த வீரளூர் அருகே வடகரைநம்மியந்தல் கிராமத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய முனைவர் தொல் திருமாவளவன் MP 59 வது பிறந்தநாளை முன்னிட்டு வடகரைநம்மியந்தல் கிராமத்தில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் பு. செல்வம் ஆலோசனைப்படி ஒன்றிய செயலாளர் சொ.ராஜா வழிகாட்டுதலின் பேரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜெயமூர்த்தி மற்றும் முகாம் செயலாளர் சு. சத்தியகுமார், ஆகியோர் வரவேற்ப்புரை நிகழ்த்தினார் ஒன்றிய அமைப்பாளர் சௌவுந்தரபாண்டியன், ஒன்றிய பொருளாளர் ந. செல்வம் தலைமையில் நடைபெற்றது இந்நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக முற்போக்கு மாணவர் அணி மாவட்ட அமைப்பாளர் தீ. பாண்டியன் மற்றும் விவசாய பாசறை மாவட்ட துணை அமைப்பாளர் செங்குட்டுவன் அவர்களும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி வடகரை நம்மியந்தல் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார் பின்னர் இந்நிகழ்ச்சியில் முகாம் பொருளாளர் ஏகாம்பரம் நன்றியுரை ஆற்றினார் மேலும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி தலைவர் திருமாவளவன் வாழ்க வாழ்க என்ற வீர முழக்கமிட்டனார்
You must be logged in to post a comment.