கீழக்கரை செய்திகள்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
உசிலம்பட்டி அருகே பாப்பிநாயக்கன்பட்டியில் குடும்பதகறாரில் குடிபோதையில் தந்தையை கொன்ற மகன் தமிழ்பாண்டி (35) தலைமறைவானார். டி.ராமநாதபுரம் போலீசார் விசாரனை செய்து வருகின்றனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பாப்பிநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் கருத்தப்பாண்டி (65).இவரது மகன் தமிழ்பாண்டி (35). கூலித்தொழிலாலியான கருத்தப்பாண்டி அவரது மனைவி லதாவுக்கும் தமிழ்பாண்டிக்கும் தகராறு ஏற்பட்டு லதா கணவரை பிரிந்து சென்று விட்டார். இதனால் தனியாக வசித்து வந்த தமிழ்பாண்டி அடிக்கடி தனது தந்தையிடம் குடிபோதையில் தனது மனைவியிடம் சேர்த்து வைக்கக்கோரி தகறாரில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் நேற்று வழக்கம் போல் மதுபோதையில் குடித்துவிட்டு கருத்தப்பாண்டியிடம் தகறாரில் ஈடுபட்டதை தொடர்ந்து நெஞ்சில் அடித்து தாக்கியுள்ளார். அதில் கருத்தப்பாண்டி சம்பவஇடத்திலேயே பலியானார். தகவலறிந்த எழுமலை போலீசார் சம்பவஇடத்திற்கு சென்று கருத்தப்பாண்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமணைக்கு அனுப்பிவைத்தனர். டி.ராமநாதபுரம் போலீசார் விசாரணையில் தலைமறைவான தமிழ்பாண்டியை வலைவீசி தேடிவருகின்றனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பணிகள் முடியும் தருவாயில் உள்ள அம்மைய நாயக்கனூர் காவலர்கள் குடியிருப்பை உடனே திறக்க காவல்துறையினர் எதிர்பார்ப்பு!..
திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே அம்மைய நாயக்கனூர் காவல் நிலையத்தில் ஆய்வாளர் சுரேஷ் குமார் தலைமையில் 5 சார்பு ஆய்வாளர்கள் மற்றும் 18க்கும் மேற்பட்ட காவலர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் தங்குவதற்கு காவலர் குடியிருப்புகள் கட்ட 3 கோடியே 54 லட்சம் அரசு ஒதுக்கீடு செய்தது அதன்படி அம்மைய நாயக்கனூர் காவல்நிலையம் கட்டிடம் அருகிலேயே குடியிருப்புகள் கட்டிடம் கட்டும் பணி கடந்த 2017ஆம் ஆண்டு தொடங்கி கட்டிட பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. எனவே அதனை விரைவில் திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வந்து பணிச்சுமைகளை குறைக்க வேண்டும் என்பது அங்கே பணிபுரியும் காவலர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
செய்தி:- ஜெ.அஸ்கர்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
வேலூர் மத்திய சிறையில் போலீசார் திடீர் சோதனை. வேலூர் மத்திய சிறையில் கைதிகளிடம் கஞ்சா, பீடி, சிகரெட், செல்போன் ஆகியவை பயன்படுத்துவதாக வந்த தகவலை அடுத்து டிஎஸ்பி பாலசுப்பிரமணி தலைமையில் சோதனை .
வேலூரிலிருந்து கே, எம்.வாரியார்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கடந்த ஆண்டு இதே நாளில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ராஜகோபுரம் அருகே தீ விபத்து ஏற்பட்டு பல கடைகள் எரிந்து சேதமானது, புராதான சின்னங்கள் பல அழிந்து போனது. ஆனால் ஒரு வருடம் கடந்தும் இன்னும் ராஜகோபுரம் பகுதியை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவில்லை.
இதனால் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் மிகுந்த வேதனையில் உள்ளார்கள். மதுரை மக்கள் மட்டுமல்லாது வெளி மாநிலம், வெளி நாடுகளிலிருந்து வரும் பக்தர்களும் ராஜகோபுரம் வழியாக சென்று சாமி தரிசனம் செய்வதை தடுத்து இருப்பதால் மிகுந்த வேதனைக்கு உள்ளாகிறார்கள். விரைந்து பணிகளை முடித்து ராஜகோபுரம் பகுதியை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டுமென பொதுமக்களும், பக்தர்களும் கோரிக்கை வைக்கிறார்கள். மதுரை மட்டுமல்லாது அனைத்து மக்களுமே மீனாட்சி அம்மன் கோவில் தீ விபத்தை துயர நாட்களாகத்தான் எண்ணுகிறார்கள்.
செய்தி வி. காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இந்திய அளவிலான வளர்ச்சி இராமநாதபுரம் மாவட்டம் 2ம் இடம் நித்தி ஆயோக் முதன்மை ஆலோசகர் பாராட்டு..
இராமநாதபுரம் மாவட்டம் நித்தி ஆயோக் திட்டத்தின் கீழ் மகளிர் சுய உதவிக்குழுவினருக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு ராமேஸ்வரத்தில் நடந்தது. இந்நிகழ்வை மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீர ராகவ ராவ் துவக்கி வைத்தார்.
இராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பேய்க்கரும்பில் அமைந்துள்ள அப்துல்கலாம் தேசிய நினைவகம் அருகே பல்நோக்கு புயல் பாதுகாப்பு மைய கட்டடத்தில் பி.என்.பணிக்கர் பவுண்டேஷன் கேரளா, குடிமை சமூகப்பணி கூட்டமைப்பு, இந்தியா மற்றும் குடிமை சமூகப்பணி கூட்டமைப்பு தமிழ்நாடு ஆகியவை ஒருங்கிணைந்து நடத்திய வளர்ச்சியை எதிர்நோக்கும் மாவட்டங்களுக்கான மேம்பாட்டு திட்டங்களின் கீழ் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கினை மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீர ராகவ ராவ் தலைமையேற்று தொடக்கி வைத்தார். நித்தி ஆயோக் முதன்மை ஆலோசகர் ராகேஷ்ரஞ்சன் கலந்து கொண்டு திட்ட விளக்கவுரையாற்றினார்.
இக்கருத்தரங்கினை துவக்கி வைத்து மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பேசியதாவது: மத்திய அரசு இந்திய அளவில் வளர்ச்சியை எதிர்நோக்கும் மாவட்டங்களாக மொத்தம் 117 மாவட்டங்களை தேர்வு செய்து, அம்மாவட்டங்களில் சுகாதார மேம்பாடு, வேளாண்மை மற்றும் நீர்ப்பாசன மேம்பாடு, கல்வி வளர்ச்சி, தொழில்திறன் மேம்பாடு மற்றும் அடிப்படை உட்கட்டமைப்பு மேம்பாடு ஆகியவற்றை அடிப்படை காரணிகளாகக் கொண்டு மக்கள் நலனுக்காக மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தி வரும் அரசு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்திடும் வகையில் தர நிர்ணயம் செய்து கண்காணித்து வருகிறது. மக்களின் வாழ்க்கைத் தரத்தினையும், வாழ்வாதாரத்தையும் மேம்படுத்துவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
இத்திட்டத்தின் கீழ் அக்டோபர்-2018 வரை தர நிர்ணயத்தின்படி நமது இராமநாதபுரம் மாவட்டமானது இந்திய அளவில் தேர்வு செய்யப்பட்ட 117 மாவட்டங்களில் 2-ம் இடத்தில் உள்ளது. இதற்கு மாவட்ட மக்களின் ஒத்துழைப்பும், திட்டங்களை சிறப்பாக செயல்படுத்திய அரசுத்துறை அலுவலர்களின் செயல்பாடும் முக்கிய காரணமாகும். தமிழகஅரசு மகளிர் சுய உதவிக் குழுக்களின் செயல்பாட்டை ஊக்கும் வகையில் அரசு மானியத்துடன் பல்வேறு கடனுதவிகள் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள மகளிர் சுய உதவிக்குழுவினர் கடல்பாசி தயாரித்தல், பனை ஓலைகளை பயன்படுத்தி பல்வேறு உபயோகப் பொருட்கள் தயாரித்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். முருங்கை,முண்டு மிளகாய் போன்ற பயிர்களை வளர்த்து அதனை மதிப்புக்கூட்டு செய்து சந்தைப்படுத்துவதன் மூலம் மகளிர் சுய உதவிக்குழுவினர் அதிக லாபம் பெறலாம். வேளாண் துறை, தோட்டக்கலைத்துறை ஒருங்கிணைப்பில் மக்கள் பங்களிப்போடு மாவட்டம் முழுமைக்கும் ஒரு லட்சம் முருங்கை மரக்கன்றுகள் நடப்படும். இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்துள்ள பி.என்.பணிக்கர் பவுண்டேஷன் குழுவினர் முருங்கை மரம் மூலம் கிடைக்கப்பெறும் பொருட்களை மதிப்புக்கூட்டு செய்து சந்தைப்படுத்த தயாராகவுள்ளனர். இந்த வாய்ப்பை மகளிர் சுய உதவிக் குழுவினர், வேளாண் மக்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என பேசினார்.
நித்தி ஆயோக் முதன்மை ஆலோசகர் ராகேஷ் ரஞ்சன்
பேசியதாவது: மத்திய அரசு திட்டத்தின் கீழ் தேசிய அளவில் தேர்வு செய்யப்பட்டுள்ள 117 மாவட்டங்களில் பல்வேறு காரணிகளின் அடிப்படையில் 2018 அக்டோபர் வரை தர நிர்ணயத்தில் ராமநாதபுரம் மாவட்டம் இந்திய அளவில் 2-வது இடத்திலுள்ளது பாராட்டுக்குரியது. மக்கள் மற்றும் அரசுத்துறை அலுவலர்களின் செயல்பாட்டின் மூலம் இதனை முதன்மை மாவட்டமாக உயர்த்த வேண்டும். இராமநாதபுரம் மாவட்டமானது குடிநீர் பற்றாக்குறை ஏற்படக்கூடிய வறட்சி மாவட்டம் என்பதை கருத்தில் கொண்டு மாவட்டத்தில் மக்களுக்கு சீரான குடிநீர் வழங்க மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மக்களின் வளமான வாழ்விற்கு உகந்த சூழ்நிலையை ஏற்படுத்த ஏதுவாக தமிழக அரசு ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களின்பயன்பாட்டிற்கு முற்றிலுமாக தடை விதித்து அறிவித்துள்ளது. இது மிகவும் பாராட்டக்கூடிய வரவேற்கத்தக்க அறிவிப்பாகும். பொதுமக்கள் இந்த தடை அறிவிப்பை முழுமையாக பின்பற்ற வேண்டும் என பேசினார்.
மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீர ராகவ ராவ், நித்தி ஆயோக் முதன்மை ஆலோசகர் ராகேஷ் ரஞ்சன் ஆகியோர் பல்வேறு அரசுத்துறைகள் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் மக்கள் நலத்திட்டங்கள் விழிப்புணர்வு கண்காட்சி அரங்கைபார்வையிட்டனர். ஆந்திரப்பிரதேசம் அரசு அறிவியல் நகரம் திட்ட துணைத்தலைவர் கிருஷ்ணாராவ் அப்பசானி, மாவட்ட வருவாய் அலுவலர் சி.முத்துமாரி, மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர் த.ஹெட்சி லீமா அமலினி, இராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் ஆர்.சுமன், பி.என்.பணிக்கர் பவுண்டேஷன் துணைத்தலைவர் என்.பாலகோபால், வேளாண் வல்லுநர் கமலாசனன் பிள்ளை, மத்திய அரசு புள்ளியியல் அதிகாரி டாக்டர் விக்னேஷ் சொர்ணமோகன், பொது இ-சேவை மையங்களின் மாநில தலைமை அலுவலர் வினோத்குறியகோஸ்,ஊர் பிரதிநிதி நான்சி உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
செய்தி:- முருகன், இராமநாதபுரம்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
நிலக்கோட்டையில் திமுக சார்பில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்ட கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்கள் கேள்வியால் தினறிய நிர்வாகிகள்….வீடியோ செய்தி..
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே உள்ள பழையவத்தலகுண்டில் திமுக சார்பில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது இதில் உதயநிதி ஸ்டாலின், மாநிலப் துனைப்பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமி, சட்டமன்ற கொறடா சக்ரபாணி, மற்றும் பழனி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டார்.
கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்கள் தொடர் கேள்விகளால் உதயநிதி ஸ்டாலின் உட்பட திமுக நிர்வாகிகள் தினறினர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதியில் நிலக்கோட்டை தனி -தொகுதி என்பதால் திமுக தொடர்ந்து புரக் கணிப்பதாகவும் பல முறை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தும் மாநிலப் துணைப் பொதுச் செயலாளரின் தாய் கிராமத்திலே எந்த வித அடிப்படை வசதியும் செய்து தரப்படவில்லை என்றும்
மிக அருகிளே மஞ்சளார் அணை மற்றும் வைகை ஆறு ஓடியும் பல வருடங்களாக குடி தண்ணீர் இன்றி தவிப்பதாகவும், கூலி விவசாயி ஏழை பெண் ஒருவரின் இடத்தை திமுக பிரமுகரே அபகரிப்பதாகவும் கூறினர்.
மேலும் தாழ்த்தபட்டோர் பட்டியலில் உள்ள தேவேந்திரகுல வேலாளர்களில் நெடுநாள் கோரிக்கையான பட்டியல் வெளியேற்றத் திற்கு எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் குரல் கொடுக்கவில்லை எனவும் பொதுமக்கள் குற்றச்சாட்டு வைத்தனர். அதேபோல் இந்த கிராம சபைக் கூட்டத்தில் திமுக நிர்வாகிகளிடம் மட்டுமே பேச மைக் வழங்கப்பட்டது.
மேலும் பொதுமக்கள் கேள்விகள் கேட்க வாய்ப்பளிக்காததால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் மத்தியில் கூச்சல் குளப்பம் ஏற்பட்டு களைந்து சென்றனர்.
செய்தி:- ராஜா, நிலக்கோட்டை
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திண்டுக்கல் மாவட்டம, நிலக்கோட்டையில் நிலக்கோட்டை காவல் நிலையம்,, திண்டுக்கல் பார்வதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களும் இணைந்து இருசக்கர வாகனத்தில் செல்வோர் தலைக்கவசம் அணிவது குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இப்பேரணியை நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கரேஸ்வரன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். பேரணி நிலக்கோட்டை மீனாட்சிபுரத்தில் தொடங்கி, துரைச்சாமிபுரம், நிலக்கோட்டை பஸ் நிலையம், மாரியம்மன் கோயில், நிலக்கோட்டை அரசு மருத்துவமனை இருசக்கர வாகனத்தில் மாணவர்கள் தலைக்கவசம் அணிந்த படி வரிசையாக சென்றதால் பொதுமக்கள் பார்த்தனர். இதில் கல்லூரி செயலர் ஸ்ரீதர், கல்லூரி முதல்வர் சுகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
வத்தலக்குண்டு டி. எஸ். எல். மஹாலில் நடைபெற்ற அய்யன் திருவள்ளுவர் திறன் போட்டிகள் – நிலக்கோட்டை சௌராஷ்டிரா நடுநிலைப் பள்ளி மாணவ மாணவிகள் சாதனை…
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டுவில் பல்வேறு தாலுக்காவைச்சேர்ந்த பள்ளி மாணவ மாணவிகளுக்கு அய்யன் திருவள்ளுவர் திறன் போட்டிகள் நடைபெற்றது இப்போட்டியில் வழக்கம் போல நிலக்கோட்டை சௌராஷ்டிரா நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ஹேமலதா பேச்சுப்போட்டியில் முதலிடமும், ஓவியப்போட்டியில் எட்டாம் வகுப்பு மாணவி ரேஷ்மா தேவி முதலிடமும், கட்டுரைப் போட்டியில் எட்டாம் வகுப்பு மாணவி சரோஜினி இரண்டாம் இடமும், சந்தோஷ் மூன்றாம் இடமும், குறள் ஒப்புவித்தலில் இரண்டாம் வகுப்பு மாணவி ரித்திகாஶ்ரீ முதலிடமும் பெற்று தமது பள்ளிக்கு பெறுமை சேர்த்தனர்.மாணவ மாணவிகளுடன் ஆசிரியர் சுந்தரபாண்டியன் ஆசிரியைகள் ராஜி மற்றும் லட்சுமி உடனிருந்தனர்.
மாவட்ட அளவிலான நடக்கும் போட்டிகளில் பங்கெடுத்து தொடர்ந்து பல்வேறு சாதனைகள் படைத்து வரும் மாணவ மாணவிகளையும் அவர்களுக்கு பயிற்சி அளித்து வரும் ஆசிரிய ஆசிரியைகளையும் பள்ளியின் தலைமை ஆசிரியர் விஜயகுமார் மற்றும் தாளாளர் சுதாகரன் அவர்கள் பாராட்டி மகிழ்ச்சி தெரிவித்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
நிலக்கோட்டை அருகே உள்ள கொடைரோடு பகுதியில் நிர் நிலைகள் ஆக்கிரமிப்பு …
நிலக்கோட்டை அருகே உள்ள கொடைரோடு பகுதியில் நீர் நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டதாக வந்த புகாரை அடுத்து அப்பகுதியில் மாவட்ட கலெக்டர் வினய் ஆய்வு செய்தார்.
நிலக்கோட்டை தாலுகா கொடைரோடு கொடைரோடு ஆகிய பகுதிகள் சிறுமலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. இப்பகுதியில் உள்ள ஓடை கண்மாய் ஆகியவற்றின் மூலம் ஏராளமான ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வந்தன. சிறுமலையில் மழைப்பொழிவு இருக்கும் போது இந்த நீர் நிலைகளுக்கு தண்ணீர் வராது அதிகரித்து காணப்படும்.
ஆனால் இப்பகுதியில் உள்ள நிர் வரத்து பாதை மற்றும் ஓடைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் தண்ணிர் வரத்து இல்லாமல் விவசாயம் கடுமையாக பாதிக்கப் பட்டது. இது குறித்து விவசாயிகள் அதிகாரிகளிடம் தொடர்ந்து புகர் அளித்து வந்தனர் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட போதும் மீண்டும் அதே இடத்தில் முளைக்கத் தொடங்கியதால் தண்ணீர் வருவ தில் சிக்கல் ஏற்பட்டது.மாவட்ட கலெக்டர் வினய் அப்பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார் சிறுமலையாறு நீர் தேக்கம். தலிஓடை உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டார் மேலும் கொடைரோட்டில் உள்ள அண்ணா சமுத்திரம் கண்மாயை நேரில் பார்வையிட்டு தண்ணீர் வரத்து குறித்து கேட்டறிந்தார் நீர்வரத்து பாதையை ஆக்கிரமித்தவர்களை உடனடியாக அங்கிருந்து அப்புறப்படுத்த உத்தரவிட்டார் மேலும் நீர் நிலைகளை ஆக்கிரமிப்பு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தார்
ஆய்வின் போது நிலக்கோட்டை வட்டார வளர்ச்சி ஆணையாளர்கள் செல்வராஜ் மலரவன் நிலக்கோட்டை வட்டாட்சியர் நவநீதகிருஷ்ணன் துணை வட்டாட்சியருக்குமணி வருவாய் ஆய்வாளர் செல்வி கிராம நிர்வாக அலுவலர் சுமதி அம்மைய நாயக்கனூர் பேரூராட்சி செயல் அலுவலர் மத்தியாஸ் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
வத்தலக்குண்டுவில் இந்து மகாசபைக்கு எதிர்ப்பு தெரிவித்து எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம்…
காந்தி நினைவு நாளான அன்று உ.பியில் இந்து மகா சபா தேசிய பொது செயலாளர் பூஜா சகான் மகாத்மா காந்தி உருவப்படத்தை துப்பாக்கியால் சுட்டும்,சுட்டு கொன்ற நாதுராம் கோட்சேவிற்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பியதையும் கண்டித்து இந்து மகாசபைக்கு எதிர்ப்பு தெரிவித்து எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதில் காந்தியை சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சேவின் உருவ பொம்மையை எரித்து கோஷங்களை எழுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியது.
செய்தி:- ஜெ.அஸ்கர்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
வெளியூர் படகுகள் மண்டபம் கடல் கரையில் தங்கு தளம் அமைத்து மீன்பிடிக்க தடை விதித்து மீனவர் நலச்சங்கங்கள் தீர்மானம்..
வெளியூர் படகுகள் மண்டபம் கடல் கரையில் தங்கு தளம் அமைத்து மீன்பிடிக்க தடை விதித்து மீனவர் நலச்சங்கங்கள் தீர்மானம் நிறைவேற்றியது. மேலும் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் அறிவித்துள்ளனர்.
இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் வட கடல் பகுதியாக கோயில்வாடி கடற்கரையில் தங்கச்சிமடம் , பாம்பன் விசைப்படகு மீனவர்கள் தங்கு தளம் அமைத்து வாரம் 3 முறை பிடித்து வருகின்றனர். இந்நிலையில் கடல் வளத்தை பாதிக்கும் இரட்டை வலை மீன்பிடியை முற்றிலும் தடுக்க வேண்டும் என மண்டபம் மீனவர் நலச் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மீன்வளத் துறை அதிகாரிகள் உடந்தையால் இரட்டை வலை மீன்பிடி மண்டபம் கடல் பகுதிகளில் தொடர்கிறது . இந்நிலையில் ஜன., 24 ஆம் தேதி இரட்டை வலை மீன்பிடி விவகாரம் தொடர்பாக மீன் வளத்துறை அதிகாரிகளில் ரோந்து செல்ல கோயில்வாடியைச் சேர்ந்த முருகேசன் என்பவர் படகு கொடுத்து உதவினார். இதனால் இரட்டை வலை விசைப்படகு உரிமையாளர்களுக்கும், (வெளியூர்காரர்கள்) கோயில்வாடி பகுதி மீனவர்களுக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் நிலவியது.
இது தொடர்பாக மண்டபம் பகுதி மீனவர்கள் , தங்களை தொழில் செய்ய விடாமல் தடுத்து தகராறு செய்வதால் மீன் பிடியை தொடர பாதுகாப்பு கோரி ராமேஸ்வரம் காவல் துணை கண்காணிப்பாளரிடம் வெளியூர் (பாம்பன், தங்கச்சிமடம்) விசைப்படகு உரிமையாளர்கள் புகார் கொடுத்தனர். இது குறித்து சமரச பேச்சு வார்த்தை நடத்த மண்டபம், பாம்பன், தங்கச்சிமடம் விசைப்படகு உரிமையாளர்கள், மீனவர்கள் ராமநாதபுரம் மீன்வளத் துறை துணை இயக்குநர் அலுவலகம் அழைக்கப்பட்டனர். அங்கு குறைந்த எண்ணிக்கையில் சென்ற மண்டபம் மீனவர்களை , பாம்பன், தங்கச்சிமடம் பகுதி மீனவர்கள் தாக்க முயன்றனர். இதனால் சமரச கூட்டம் ரத்து செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் நிரந்தர தீர்வு காணுவது தொடர்பாக மண்டபம் அனைத்து மீனவர் நலச்சங்கங்கள், வர்த்தக சங்கம், அனைத்து கட்சி பிரதிநிதிகள் ஆலோசனை மண்டபம் வட கடற்கரையில் நடந்தது. கூட்டத்திற்கு மண்டபம் பேரூராட்சி முன்னாள் தலைவர் எம்.கே.கே.தங்க மரைக்காயர் தலைமை வகித்தார். விசைப்படகு உரிமையாளர் இக்பால் மரைக்காயர், மத்திய சங்கத் தலைவர் சிகேஎம்சி கணபதி, முன்னாள் கவுன்சிலர் மா.மைதீன், திமுக நகர் செயலாளர் டி.ராஜா முன்னிலை வகித்தனர். இரட்டை வலை மீன்பிடிக்கு உடந்தையாக செயல்படும் மீன்வளத் துறை அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்ய வேண்டும். மண்டபத்தில் தங்கு தளம் அமைத்து மீன்பிடியில் ஈடுபடும் மண்டபம் முகவரியில்லா விசைப்படகுகள் தங்கள் சொந்த ஊர் கொண்டு செல்ல வேண்டும், விசைப்படகு உரிமையாளர்கள் முத்துகுமார், கே.முருகேசன், குமார், மாரிமுத்து, நம்புராணி, செல்வராணி, கருப்பசாமி, முருகேசன் உள்பட 10 பேர் மீதான பொய் வழக்கை மீன்வளத் துறை அதிகாரிகள் திரும்ப பெற வேண்டும், மண்டபம் மீனவர்கள், படகு உரிமையாளர்களை தாக்க முயன்ற வெளியூர் ( பாம்பன், தங்கச்சிமடம் )விசைப்படகு உரிமைகள், மீனவர்களின் விரோத போக்கை கண்டித்து காலவரையற்ற வேலை நிறுத்தம் மேற்கொள்வதெவைும், பிப்ரவரி 5 ஆம் தேதி கடை அடைப்பு, உண்ணாவிரதம் இருப்பதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மண்டபம் பேரூராட்சி முன்னாள் துணை சேர்மனும், மண்டபம் ஒன்றிய திமுக மீனவரணி துணை அமைப்பாளருமான எம்.நம்பு ராஜன், மண்டபம் பேரூராட்சி முன்னாள் கவுன்சிலரும், ராமநாதபுரம் மாவட்ட திமுக மீனவரணி துணை அமைப்பாளருமான ஐ.என். பூவேந்திரன், மண்டபம் பேரூராட்சி முன்னாள் துணை சேர்மன் எஸ்.நாகராஐன், மீனவர் சங்க பிரதிநிதிகள் முன்னாள் கவுன்சிலர் பெரி.பாலசுப்ரமணியன், எம்.ஜி.விஜய ரூபன், எம்.ஜாகீர் உசேன், சுல்தான் (என்எஸ்) நைஸ் கிங் எஸ்.நாகராஜன், இந்திய கம்யூ., பிரமுகர் எஸ்.கருப்பையா, முன்னாள் கவுன்சிலர்கள் இ.முபாரக், சி.செல்வராஜ், முனியசாமி, மீனவர் சங்க பிரதிநிதிகள் சி. செல்வகுமார், காதர்முகைதீன், செந்தில், அதிமுக., நகர் தலைவர் எம்.சுப்ரமணியன், காங்., நிர்வாகிகள் ஆர்.ஆறுமுகம், பி.பார்த்திபன், பாஜ., நிர்வாகி எம்.கண்ணன், ஓட்டல் உரிமையாளர் சங்க நிர்வாகி எம்.ராஜூ, திமுக., பிரதிநிதிகள் ஒசீது, சாதிக், தண்டல் முருகானந்தம், செந்திவேல், அமமுக., நகர் செயலாளர் எம்.களஞ்சிய ராஜா, இந்து முன்னணி நகர் செயலர் வி.முத்துராஜ், பாரம்பரிய மீனவர் தொழிலாளர் அணி நிர்வாகி அப்துல் காதர், பாரம்பரிய மீனவர் சங்கம், மண்டபம் மீனவர் சங்கம், தேசிய மீனவர் சங்கம், விசைப்படகு மீனவர் நலச்சங்கம், விசைப்படகு மீனவர் முன்னேற்றச் சங்கம், கடல் தாய் மீனவர் சங்கம், செம்மீன் மீனவர் சங்கப் பிரதிநிதிகள், வர்த்தக சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
செய்தி:- முருகன், இராமநாதபுரம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரி 28 ஆவது பட்டமளிப்பு விழா மற்றும் 8 வது முபல்லிகா சனது விழா..
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரி 28 ஆவது பட்டமளிப்பு விழா மற்றும் 8 வது முபல்லிகா சனது விழா கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் எஸ்.சுமையா வரவேற்றார்.
599 பேருக்கு இளங்கலை பட்டம், 54 பேருக்கு முதுகலை பட்டம், 10 பேருக்கு ஆய்வு நிறைஞர் பட்டங்களை எரச் அண்ட் மெஹ்ரூ மேம்பாட்டு கல்வி மற்றும் மும்பை இந்திய தொழில் நுட்ப ரசாயன பொறியியல் துறை பேராசிரியர் மேம்பாட்டுக் கல்வி தொழில்நுட்ப பேராசிரியர் முனைவர் கண்ணன் எம். மெளட்கல்யா வழங்கினார். அவர் பேசுகையில், மாணவர்கள் மட்டுமல்ல யார் எது செய்தாலும் அதை சரியாக, நேர்த்தியாக செய்ய வேண்டும். கல்வி, தொழில் உள்பட எதுவாக இருந்தாலும் அதில் நம்மால் முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். எந்த வேலையை யார் சிறப்பாக செய்வர் என ஆய்ந்து அப்பணியை ஒப்படைக்கும் அளவிற்கு நீங்கள் (மாணவிகள்) உங்களை தயார்படுத்தி கொள்ள வேண்டும். பட்டப் படிப்புடன் முடிந்தது என கல்விக்கு முற்றுப்புள்ளி வைக்காமல் தொடர்ந்து கற்றுக் கொண்டே இருக்க வேண்டும்.
கடந்த காலங்களில் நேரம் ஒதுக்கி வாசித்தால் மட்டுமே உலக விஷயங்கள் தெரிந்து கொள்ள முடியும் என்ற நிலை தகவல் தொழில்நுட்பம் வியாபித்து விட்ட இக்கால கட்டத்தில் விரல் நுனியில் உலகம் என்றாகி விட்டது. சமூக வலைதளங்களில் எண்ணற்ற தகவல் பரிமாற்றங்கள் நொடிக்கு நொடி வந்த வண்ணம் உள்ளது. நேர மேலாண்மை முக்கியம் என்பதால் எந்த காரியமானலும் குறிப்பிட்ட காலத்தில் செய்து முடித்து விட வேண்டும். இன்றைய இந்தியா மட்டுமல்ல நாளைய இந்தியாவின் வளர்ச்சி இளைஞர்கள் கையில் உள்ளது என்ற முன்னாள் ஜனாதிபதி மறைந்த டாக்டர் ஆபஜெ அப்துல் கலாமின் ஆழ்ந்த நம்பிக்கைக்கேற்ப ஒவ்வொருவரும் சிறந்த இந்திய குடிமகனாக உருவாக வேண்டும். இவ்வாறு பேசினார்.
காலையில் நடந்த 8 வது முபல்லிகா சனது விழாவில் சென்னை அல்ஹ ரமான் தொண்டு அறக்கட்டளை பொதுச் செயலாளர் அல்ஹாஜ் முகமது ரஃபி தலைமை வகித்தார். கடலூர் முபல்லிகா உஷ்தாது முகமதியா நிஸ் வான் மதரஸா ஊக்க பயிற்றுநர் கே.சர்மிளா இஸ்லாமிய மார்க்க உரையாற்றினார். திண்டுக்கல் அல் பைசுல் உலூம் முதல்வர் அஸ்ரஃபில் பயான் மெளலவி கொரி ஏ.எஸ்.எம்.முஹமது ஹரூன் சனது உரையாற்றினார். திண்டுக்கல் அல் பைசுல் உலூம் ஆலிமா ஆசிரியை ஹாஜியானி சமியா பேகம் உறுதிமொழி ஏற்றார். அரபி துறை தலைவர் பேராசிரியை ஜனபா எஸ். நஸீமா பர்வீன் அறிக்கை வாசித்தார். கல் லூரி செயலர் அல்ஹாஜ் காலித் ஏ.கே.புகாரி முன்னிலை வகித்தார். கல்லூரி தாளாளர் டாக்டர் ரஹ்மத்துன்நிசா அப்துர் ரஹ்மான் தலைமை வகித்தார். துணை முதல்வர்கள், தேர்வாணையர், கலை மற்றும் அறிவியல் முதல்வர்கள், துறைத்தலைவர்கள் , பேராசிரியை கள், மாணவிகள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை சீதக்காதி அறக்கட்டளை துணை பொது மேலாளர் ஜனாப் ஷேக் தாவூது கான் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் செய்தனர்.
செய்தி:- முருகன், இராமநாதபுரம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரத்தில் எஸ்டிபிஐ ., ஆர்ப்பாட்டம்..வீடியோ & புகைப்பட தொகுப்பு..
சுட்டுக் கொல்லப்பட்ட காந்தியை மீண்டும் சுட்டுக் கொல்வது சித்தரிப்பு சம்பவத்தை கண்டித்து எஸ்டிபிஐ., சார்பில் இராமநாதபுரம் சந்தை திடலில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இராமநாதபுரம் மாவட்டம எஸ்டிபிஐ., கட்சி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மேற்கு மாவட்ட தலைவர் நூர் ஜியாவுதீன் தலைமை வைத்தார். காந்தியை சுட்டுக் கொலை செய்வது போல் சித்தரித்த இந்து மகாசபை தீவிர செயலை கண்டித்து, இந்து மகா சபை தேசிய பொதுச்செயலாளர் பூஜா சகானை கைது செய்யக் கோரியும், தேசத்தந்தை மகாத்மா காந்தியை இழிவுபடுத்தும் அமைப்புகளை தடை செய்யக் கோரி கோஷம் எழுப்பப்பட்டது. கிழக்கு மாவட்ட தலைவர் அப்துல்வஹாப் வரவேற்றார். கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், தொழிலாளர் அணிமாவட்ட நிர்வாகிகள், மகளிரணி மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். தமிழ் மாநிலச் செயலாளர் அஹமது நவவி, கிழக்கு மாவட்ட பொது செயலாளர் செய்யது இப்ராஹிம், மேற்கு மாவட்ட பொதுச்செயலாளர் முகமது இஸாக், பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா மாவட்ட செயற்குழு உறுப்பினர் முகமது சுலைமான் ஆகியோர் பேசினர் . கிழக்கு மாவட்ட செயலாளர் வண்ணை அஸ்கர், ராமநாதபுரம் நகர் தலைவர் அஜ்மீர் ஷரீப், நகர் செயலாளர் ஜகுபர் சாதிக் உள்பட பலர் பங்கேற்றனர். உருவ பொம்மை எரிக்க முயன்றதால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
செய்தி:- முருகன் , இராமநாதபுரம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அருகே விவசாய நிலத்துக்கு மின் இணைப்பு வழங்க 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய உதவி மின் பொறியாளர் கைது செய்யப்பட்டார்.
பிரம்மகுண்டத்தைச் சேர்ந்தவர் அன்பழகன் தனது 4 ஏக்கர் விவசாய நிலத்துக்கு மின் இணைப்பு வழங்க வடபொன்பரப்பி உதவி மின் பொறியாளர் மணிகண்டனை அணுகியுள்ளார். மின் பொறியாளர் மணிகண்டன் இணைப்பு வழங்க 10 ஆயிரம் ரூபாயை லஞ்சமாகக் கேட்கவே, மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறையிடம் அன்பழகன் புகாரளித்தார்.
இதனடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை விவசாயி அன்பழகனிடம் கொடுத்தனிப்பினர் அந்த ரூபாய் நோட்டுக்களை கொடுக்கும்போது மறைந்திருந்த அதிகாரிகள் மின்பொறியாளர் மணிகண்டனை கையும் களவுமாகக் கைது செய்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
அவனியாபுரம் சார்பு ஆய்வாளர் திரு.செல்வகுமார் மற்றும் காவலர்களுடன் ரோந்து பணியில் இருந்தபோது அவனியாபுரம் பைபாஸ் ரோடு சந்திப்பில் அரசு அனுமதியின்றி லாரியில் மணல் ஏற்றிவந்த 1. ஜெகதீசன் 59/19 மற்றும் 2.கருப்பசாமி 51/19 ஆகிய இரண்டு நபர்களையும் கைது செய்து அவர்களிடமிருந்து லாரி மற்றும் மணல் பறிமுதல் செய்யப்பட்டு, இருவரும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர்.
செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை பெரியார் பேருந்து பகுதியில் அனைத்து மகளிர் காவல்நிலையம் (தெற்கு) பெண் காவலர்கள் ரோந்து பணியில் இருந்த போது, பெரியார் பேருந்து நிலையத்தில் சந்தேகப்படும்படியாக நின்றிருந்த பெண்ணை விசாரணை செய்ததில், தேனியில் இருந்து வழி தவறி மதுரைக்கு வந்துவிட்டதாகவும், திரும்ப தேனிக்கு போக தெரியவில்லை எனவும் கூறினார். இதுகுறித்து விசாரணை செய்ததில் மேற்படி பெண் தேனி மாவட்டம் தென் கரை காவல் நிலைய எல்கைக்கு உட்பட்ட முகவரியில் வசித்துவருகிறார் என தெரியவந்தது எனவே மேற்படி பெண்ணை தேனி மாவட்டம் தென் கரை காவல் நிலையத்தில் ஒப்படைக்கபட்டது.
செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழக முன்னாள் பதிவாளர் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்கு…
வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா சேர்க்காட்டில் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் இயங்கி வருகின்றது. இதன் கீழ் வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், ஆகிய மாவட்டத்தில் 120-க்கும் மேற்பட்ட கல்லூரிகள் உள்ளன.
இப்பல்கலைக்கழகத்தில் பதிவாளர் மற்றும் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலராக அசோகன் பணியாற்றி வந்தார். கடந்த 2015-ல் போலி ஆவணம் மூலம் 6 பேரை பல்கலைக்கழகத்தில் பணியில் சேர்த்து உள்ளார். இது தொடர்பாக ஆட்சி மன்ற குழு முன்னாள் உறுப்பினர் இளங்கோவன். சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.
இதனையடுத்து உயர்நீதிமன்ற உத்தரவுபடி வேலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் திருவள்ளுவர் பல்கலைக்கழக முன்னாள் பதிவாளர் அசோகன், போலி பணி ஆணையில் சேர்ந்த ஆனந்த பாபு, எழிலரசி, ஜெயந்தி, விஜயகிருஷ்ணன், தசரதன், அன்பரசன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
வேலூரிலிருந்து கே.எம்.வாரியார்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ஒட்டன்சத்திரத்தில் சாலையோரம் நின்றிருந்தவர் மீது லாரி மோதி விபத்து..
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தாராபுரம் சாலையில் வந்து கொண்டிருந்த சரக்கு லாரி சாலையோரம் நின்று கொண்டிருந்த சிவமணி என்பவரின் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது அந்த லாரியை பின்தொடர்ந்து சென்று மடக்கி பிடித்த பொதுமக்கள் ஒட்டன்சத்திரம் காவல்துறையிடம் ஒப்படைத்தனர். மேலும், காயமடைந்த சிவமணி என்பவர் ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
செய்தி:- ஃபக்ருதீன், திண்டுக்கல்
You must be logged in to post a comment.