Home செய்திகள் உசிலம்பட்டியில் குடும்ப தகராறில் தந்தையை கொன்ற மகன்..:

உசிலம்பட்டியில் குடும்ப தகராறில் தந்தையை கொன்ற மகன்..:

by ஆசிரியர்

உசிலம்பட்டி அருகே பாப்பிநாயக்கன்பட்டியில் குடும்பதகறாரில் குடிபோதையில் தந்தையை கொன்ற மகன் தமிழ்பாண்டி (35) தலைமறைவானார். டி.ராமநாதபுரம் போலீசார் விசாரனை செய்து வருகின்றனர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பாப்பிநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் கருத்தப்பாண்டி (65).இவரது மகன் தமிழ்பாண்டி (35). கூலித்தொழிலாலியான கருத்தப்பாண்டி அவரது மனைவி லதாவுக்கும் தமிழ்பாண்டிக்கும் தகராறு ஏற்பட்டு லதா கணவரை பிரிந்து சென்று விட்டார். இதனால் தனியாக வசித்து வந்த தமிழ்பாண்டி அடிக்கடி தனது தந்தையிடம் குடிபோதையில் தனது மனைவியிடம் சேர்த்து வைக்கக்கோரி தகறாரில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் நேற்று வழக்கம் போல் மதுபோதையில் குடித்துவிட்டு கருத்தப்பாண்டியிடம் தகறாரில் ஈடுபட்டதை தொடர்ந்து நெஞ்சில் அடித்து தாக்கியுள்ளார். அதில் கருத்தப்பாண்டி சம்பவஇடத்திலேயே பலியானார். தகவலறிந்த எழுமலை போலீசார் சம்பவஇடத்திற்கு சென்று கருத்தப்பாண்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமணைக்கு அனுப்பிவைத்தனர். டி.ராமநாதபுரம் போலீசார் விசாரணையில் தலைமறைவான தமிழ்பாண்டியை வலைவீசி தேடிவருகின்றனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!