கடந்த ஆண்டு இதே நாளில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ராஜகோபுரம் அருகே தீ விபத்து ஏற்பட்டு பல கடைகள் எரிந்து சேதமானது, புராதான சின்னங்கள் பல அழிந்து போனது. ஆனால் ஒரு வருடம் கடந்தும் இன்னும் ராஜகோபுரம் பகுதியை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவில்லை.
இதனால் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் மிகுந்த வேதனையில் உள்ளார்கள். மதுரை மக்கள் மட்டுமல்லாது வெளி மாநிலம், வெளி நாடுகளிலிருந்து வரும் பக்தர்களும் ராஜகோபுரம் வழியாக சென்று சாமி தரிசனம் செய்வதை தடுத்து இருப்பதால் மிகுந்த வேதனைக்கு உள்ளாகிறார்கள். விரைந்து பணிகளை முடித்து ராஜகோபுரம் பகுதியை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டுமென பொதுமக்களும், பக்தர்களும் கோரிக்கை வைக்கிறார்கள். மதுரை மட்டுமல்லாது அனைத்து மக்களுமே மீனாட்சி அம்மன் கோவில் தீ விபத்தை துயர நாட்களாகத்தான் எண்ணுகிறார்கள்.
செய்தி வி. காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.