Home செய்திகள் நிலக்கோட்டையில் திமுக சார்பில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்ட கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்கள் கேள்வியால் தினறிய நிர்வாகிகள்….வீடியோ செய்தி..

நிலக்கோட்டையில் திமுக சார்பில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்ட கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்கள் கேள்வியால் தினறிய நிர்வாகிகள்….வீடியோ செய்தி..

by ஆசிரியர்

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே உள்ள பழையவத்தலகுண்டில் திமுக சார்பில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது இதில் உதயநிதி ஸ்டாலின், மாநிலப் துனைப்பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமி, சட்டமன்ற கொறடா சக்ரபாணி, மற்றும் பழனி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டார்.

கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்கள் தொடர் கேள்விகளால் உதயநிதி ஸ்டாலின் உட்பட திமுக நிர்வாகிகள் தினறினர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதியில் நிலக்கோட்டை தனி -தொகுதி என்பதால் திமுக தொடர்ந்து புரக் கணிப்பதாகவும் பல முறை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தும் மாநிலப் துணைப் பொதுச் செயலாளரின் தாய் கிராமத்திலே எந்த வித அடிப்படை வசதியும் செய்து தரப்படவில்லை என்றும்

மிக அருகிளே மஞ்சளார் அணை மற்றும் வைகை ஆறு ஓடியும் பல வருடங்களாக குடி தண்ணீர் இன்றி தவிப்பதாகவும், கூலி விவசாயி ஏழை பெண் ஒருவரின் இடத்தை திமுக பிரமுகரே அபகரிப்பதாகவும் கூறினர்.

மேலும் தாழ்த்தபட்டோர் பட்டியலில் உள்ள தேவேந்திரகுல வேலாளர்களில் நெடுநாள் கோரிக்கையான பட்டியல் வெளியேற்றத் திற்கு எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் குரல் கொடுக்கவில்லை எனவும் பொதுமக்கள் குற்றச்சாட்டு வைத்தனர். அதேபோல் இந்த கிராம சபைக் கூட்டத்தில் திமுக நிர்வாகிகளிடம் மட்டுமே பேச மைக் வழங்கப்பட்டது.

மேலும் பொதுமக்கள் கேள்விகள் கேட்க வாய்ப்பளிக்காததால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் மத்தியில் கூச்சல் குளப்பம் ஏற்பட்டு களைந்து சென்றனர்.

செய்தி:- ராஜா, நிலக்கோட்டை

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!