வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த ஆந்திர எல்லையான கிறிஸ்தியான்பேட்டையில் தமிழ்நாடு காவல்துறை போதை பொருள் குறித்த விழிப்புணர்வு குறித்து தமிழகம் வரும் பொதுமக்களுக்கு நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது.வேலூர் போதை பொருள் நுண்ணறிவு பிரிவு டி.எஸ்.பி.ஏ.டி. ராமச்சந்திரன் வழங்கினார்போதை பொருள் குறித்து தகவல் கிடைத்தால் 9344789429 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்று அவர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.
Category:
செய்திகள்
குறுக்கீட்டு விளைவின் அடிப்படையில் வண்ணப் புகைப்படங்கள் எடுக்கலாம் என உலகிற்கு செயல்படுத்தி காட்டிய, இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற காபிரியேல் லிப்மன் நினைவு தினம் இன்று (ஜூலை 13, 1921).
by mohan
written by mohan
காபிரியேல் லிப்மன் (Gabriel Lippmann) ஆகஸ்ட் 16,1845ல் பிரெஞ்சு-யூதத் தம்பதிகளுக்கு மகனாக லக்சம்பர்க்கில் உள்ள ஹாலரிக் என்ற ஊரில் பிறந்தார். இவர் பிறந்த பின் இவருடைய குடும்பம் பாரிசில் குடியேறியது. இவர் சிறு வயதில் வீட்டில் இருந்த படியே தன்னுடைய ஆரம்பக்க் கல்வியைப் பெற்றார். 1858ல் லைசி நெப்போலியன் என்ற இடத்தில் தன்னுடைய படிப்பை ஆரம்பித்த இவர் பத்து வருடங்களுக்குப் பின் நார்மலே என்ற ஊரில் தன்னுடைய மேற்படிப்பைத் தொடர்ந்தார். சிறு வயதில் இவருடைய கல்வி சிறப்பாக அமையவில்லை. கட்டுப்பாடற்ற மாணவராகவும் இருந்தார். தனக்குப் பிடித்த விவரங்களில் மட்டுமே ஆர்வம் செலுத்தினார். அதனால் ஆசிரியர் பயிற்சித் தேர்வில் தோல்வியடைந்தார். ஆனால் ஆர்வம் காட்டிய துறைகளில் அனைவரையும் விட சிறந்து விளங்கினார்.
1873ல் அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட அறிவியல் குழு ஒன்று ஜெர்மனியில் ஆய்வுகள் நடத்தச் சென்றது. அறிவியல் பயிற்றுவிக்கும் முறைகள் பற்றி ஆய்வு நடத்த இவரும் அக்குழுவில் ஒருவராக நியமிக்கப்பட்டார். அப்போது ஹெய்டல்பர்க்கில் வில்ஹெம் குனே, கிர்க்காஃப் என்ற அறிவியல் அறிஞர்களுடனும் பெர்லினில் ஹெல்ம் ஹோல்ட்ஸ் என்ற அறிவியல் அறிஞருடனும் இணைந்து பணியாற்ற வாய்ப்புப் பெற்றார். 1878ல் பாரிசில் அறிவியல் பயிற்றுவிக்கும் ஆசிரியருக்கான தேர்வில் தோல்வியடைந்ததால் தகுதிச் சான்றிதழ் பெறாத போதும் இவருடைய திறமை கருதி சார்போன் பல்கலைக் கழகத்தில் கணித இயற்பியல் பேராசிரியராக அமர்த்தப்பட்டார். மூன்று வருடங்கள் கழித்து ‘ஆய்வியல் இயற்பியல்’ (Experimental Physics) பேராசிரியராக அமர்த்தப்பட்டார். அதன் பிறகு சார்போனுக்கு இடம் பெயர்ந்த லிப்மன் அறிவியல் ஆய்வுக்கூடம் ஒன்றின் இயக்குநராக அமர்த்தப்பட்டார். இவருடைய இறுதிக்காலம் வரை இந்தப் பணியில் நிலையாக இருந்தார்.
லிப்மனின் சுயமாகச் சிந்தித்துச் செயல்படும் ஆற்றல், இயற்பியலில் மின்னியல், வெப்பவியல், வெப்ப இயக்கவியல், ஒளியியல், ஒளிப்பட வேதியியல் ஆகியவற்றில் பல புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்குவதற்கு உதவியது. இயற்பியலில் பல பிரிவுகளைல் பயன்படுத்தப்பட்டு வந்த பல திட்ட அளவுக் கருவிகளின் புனைதிறன் மற்றும் சீர்திருத்தங்களுக்கு இவர் காரணமாக இருந்தார். உடலியல் பேராசிரியர் வில்லெம் குனே என்பவர் இவருக்கு ஓர் ஆய்வினைச் செய்து காண்பித்தார். ஒரு துளி பாதரசத்தை வைத்து அதன் மேல் நீர்த்த கந்தக அமிலத்தை சிறிதளவு விட்டார். ஒரு சிறிய மெல்லிய இரும்புக்கம்பியால் பாதரசத்தைத் தொட்ட போது அது சற்று சுருங்கி விரிந்தது. இந்த ஆய்வைக் கவனித்த லிப்மன் இதற்கான விளக்கத்தை அளித்தார். பாதரசத்திற்கும் அமிலத்திற்கும் இடையே கம்பியைச் செலுத்தும் போது மிகச் சிறிய அளவு மின்னோட்டம் அந்தக் கம்பியில் ஏற்படுகிறது என்றும் அதன் காரணமாக அது சுருங்குகிறது. கம்பியை எடுத்ததும் மின்னோட்டம் இல்லாததால் அது பழைய நிலைக்கு விரிகிறது என்றும் கண்டறிந்தார்.
ஹெய்டல்பர்க்கில் இவர் ஆய்வுகள் நடத்தியபோது, நுண்புழைத்தன்மைக்கும், மின்சாரத்திற்குமுள்ள தொடர்புகளைப் பற்றி ஆராய்ந்தார். மிக நுண்மையான, மிகச் சிறப்புபெற்ற ‘நுண்புழை மின்னழுத்த மானி’ ஒன்றை உருவாக்கினார். இது மிகக் குறைவான மின்னழுத்தத்தை அளக்க உதவியது. அதனால் இது இதயத்துடிப்பை வரை படமாக அளவிடும் (Electro Cardio Graph) கருவியில் பயன்பட்டது. வெப்ப இயக்கவியல் ஆய்வுகளை மேற்கொண்ட லிப்மன் எந்த ஒரு வெப்ப இயக்க முறைக்கும், மீள்செயல் முறையும் உண்டு என்பதையும் அவ்வாறு மீள் செயல் முறை நடைபெறும் போது உண்டாகும் மாற்ற அளவைக் கணக்கிடப் பொதுவான தேற்றம் ஒன்றை லிப்மன் உருவாக்கினார். 1886ல் ஒளிப்படங்களை உருவாக்குவது பற்றிய ஆய்வுகளில் ஈடுபட்டார். அதிலும் வண்ணப் புகைப்படங்களை எப்படி உருவாக்குவது என்று ஆராய்ந்தார். ஆனால் அதில் பல சிக்கல்கள் ஏற்பட்டதால் அதில் அவரால் வெற்றி பெற முடியவில்லை. ஆனாலும் தளராமல் மிகவும் பொறுமையாக ஆய்வுகளைத் தொடர்ந்து செய்து ஒளியின் நிறங்களைக் கொண்டு குறுக்கீட்டு விளைவு முறையில் வண்ணப் புகைப்படங்களை உருவாக்க முடியும் என நிரூபித்தார். இதை அறிவியல் சங்கத்திற்கு 1893ல் முறையாக அறிவித்தார். தன்னால் எடுக்கப்பட்ட புகைப் படங்களையும் வழங்கினார். 1894ல் தன்னுடைய ஆய்வு முழுவதையும் ஆய்வுக்கட்டுரையாகத் தொகுத்து வெளியிட்டார்.
1895ல் ஒளிப்படங்களைப் பதிவு செய்யும் போது அவை தாமே நிர்ணயித்துக்கொள்கின்ற கால அளவிற்கான சமன்பாட்டை நீக்குவதற்கு ஒரு முறையை உருவக்கினார். இவர் கண்டுபிடித்த முறையில் வண்ணப்படம் எடுப்பது சிறப்பு என்றாலும் அதற்கான ஒளியை எடுத்துக்கொள்ளும் நேரம் (Exposure Time) அதிகமாக இருந்தது. ஊசல் கடிகாரம் ஒழுங்கற முறையில் இயங்குவதைத் தவிர்ப்பதற்கு ஒரு முறையை உருவாக்கினர். வானவியலில் கொயலோஸ்டாட் என்ற கருவியைக் கண்டறிந்தார். ஒரு நட்சத்திரத்தையும் அதைச் சுற்றியுள்ள நட்சத்திரத்தையும் புவியின் சுழற்சியினால் மாறுதல் ஏற்படாதவாறு அசைவற்ற நிலையில் அவற்றை ஒளிப்படமாக எடுக்க இக்கருவி உதவியது. வானத்தைப் புகைப்படம் எடுக்கும்போது, தானாகவே அதில் தீர்க்க ரேகை பதியும்படி ஒரு கருவியை இவர் வடிவமைத்தார். தந்தி அலைகளைப் பயன்படுத்தி நில நடுக்கத்தைப் பதிவு செய்வதோடு அது எவ்வாறு பரவிச் செல்கிறது என்பதையும் இவர் கண்டுபிடித்த கருவி பதிவு செய்தது.
சார்போனில் இவர் பணியாற்றிய போது அங்கு பயின்ற மேரி கியூரிக்கு இவர் ஆலோசகரகவும் செயல்பட்டார். தன்னுடைய ஆய்வகத்தை பயன்படுத்த அவருக்கு அனுமதி அளித்தார். பியர் கியூரி இவருடைய சிறந்த மாணவராக விளங்கிய போது மேரிக்கு, பியர் கியூரியை அறிமுகம் செய்து வைத்ததும் இவர்தான். இவர் ஆய்வு செய்துவந்த ‘படிக மின்னழுத்த ஆய்வினைத்’ தான் பியர் கியூரி தொடர்ந்து செய்து வெற்றி பெற்றார். பாரிஸிலுள்ள அறிவியல் சங்கத்தில்தான் இவருடைய ஆய்வு முடிவுகள் கட்டுரைகளாக அளிக்கப்பட்டன. வண்ணப் படம் எடுப்பது பற்றிய இவருடைய ஆய்வுக்கு 1908 ஆம் ஆண்டு நோபல் பரிசு கிடைத்தது. ஜெர்மனியில் பல்வேறு அறிவியல் ஆய்வுக் கட்டுரைகளை பிரெஞ்சு நாட்டுப் பத்திரிக்கைகளில் மொழி பெயர்த்து வெளியிட்டார். 1886ல் பாரிஸ் அறிவியல் சங்கத்தில் உறுப்பினரானார். 1912ல் அதன் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். தீர்க்கரேகைக் குழுவில் உறுப்பினராயிருந்தார். லண்டனில் உள்ள ராயல் கழகம் இவரை அயல்நாட்டு உறுப்பினராக அமர்த்தியது.
வெள்ளொளியில் அடங்கிய பல்வேறு நிறங்களைப் பயன்படுத்தி வண்ணப் புகைப்படங்கள் எடுக்கலாம் என உலகிற்கு அறிவித்து அதை செயல்படுத்தியும் காட்டிய காபிரியேல் லிப்மன் ஜூலை 13, 1921ல் தனது 75வது வயதில் வட அமெரிக்காவிற்கு ஒரு குழுவினருடன் கப்பலில் பயணம் சென்று கனடா விலிருந்து பிரான்ஸ் திரும்பும்போது எதிர் பாராமல் இவ்வுலகை விட்டு பிரிந்தார். இவருடைய மதிப்பைப் போற்றும் வகையில் அஞ்சல் தலைகள் வெளியிடப்பட்டன.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பல கதிர்வீச்சு இரும விண்மீன்களைக் கண்டறிந்த ரஷ்ய வானியலாளர் அரிசுடார்க் அப்பொல்லொனோவிச் பெலோபோல்சுகி பிறந்த தினம் இன்று (ஜூலை 13, 1854).
by mohan
written by mohan
அரிசுடார்க் அப்பொல்லொனோவிச் பெலோபோல்சுகி (Aristarkh Apollonovich Belopolsky) ஜூலை 13, 1854ல் மாஸ்கோவில் பிறந்தார். ஆனால் இவரது தந்தையின் முன்னோர்கள் செர்பிய நகரமான பெலோபோல்யேவை சேர்ந்தவர்கள் ஆவர். பெலோபோல்சுகி 1876ல் மாஸ்கோ பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். 1878ல் மாஸ்கோ வான்காணகத்தில் பியோதோர் அலெக்சாந்திரோவிச் பிரெதிக்கின் அவர்களின் உதவியாளராகப் பணியில் சேர்ந்தார். பின்னர், புல்கோவ் வான்காணகத்தில் 1888ல் பணியாளராக வேலையில் சேர்ந்தார். இவர் கதிர்நிரலியலில் பணிபுரிந்து, பல கதிர்வீச்சு இரும விண்மீன்களைக் கண்டறிந்தார். இவற்றில் இவர் கண்டுபிடித்த காச்டர் B என்பது 2.92 ஒளிநாட்கள் தொலைவில் உள்ள ஒரு கட்புல இரும விண்மீனாகும். இது இரட்டை (ஜெமினி) விண்மீன்களில் ஒன்று. மேலும் இது பீட்டா ஜெமினோரம் எனவும் அழைக்கப்படுகிறது.
பெலோபோல்சுகி கருவிகள் செய்வதில் வல்லவர். இவர் 1900ல் கதிர்நிரல்களின் டாப்பிளர் பெயர்ச்சியை அளக்கும் கருவியமைப்பை உருவாக்கினார். இவர் தொலைவில் உள்ள வான்பொருட்களின் சுழற்சி வீதத்தை அளக்க, ஒளியியல் டாப்பிளர் பெயர்ச்சிமுறையின் பயன்பாட்டை அறிமுகப் படுத்தினார். இவர் வியாழனின் நடுவரையானது, உயர் அகலாங்குகளைவிட வேகமாக இயங்குவதைக் கண்டறிந்தார். மேலும் காரிக்கோளின் வலயங்கள் திண்மம்போல. ஒருங்கே சுற்றுவதில்லை எனவும் அதனால் அவை தனித்த சிறுசிறு பொருட்களால் ஆகியவை என்பதையும் நிறுவினார்.
அக்காலத்தில் வெள்ளியின் ஒரு நாளுக்கான பொழுதைக் கணக்கிட முடியாமல் திணறினர். இவர் 1990 இல் 24 மணிநேரம் எனவும் 1911 இல் 35 மணிநேரம் எனவும் முன்மொழிந்தார். இவர் அசுகார் பாக்லந்தின் நல்ல நண்பர். அவர் 1916ல் இறந்த்தும் புல்கோவ் வான்காணகத்தின் இயக்குநரானார். என்றாலும் அதன் நிறுவாகச் சுமையை விரும்பாததால் அப்பதவியை விட்டு 1918ல் விலகினார். நிலவில் ஒரு குழிப்பள்ளம் இவர் பெயரால் பெலோபோல்சுகி குழிப்பள்ளம் எனவும், ஒரு சிறுகோள் 1004 பெலோபோல்சுகியா எனவும் வழங்குகின்றன.
பல கதிர்வீச்சு இரும விண்மீன்களைக் கண்டறிந்த ரஷ்ய வானியலாளர் அரிசுடார்க் அப்பொல்லொனோவிச் பெலோபோல்சுகி மே 16, 1934ல் தனது 79வது வயதில் ரஷ்யவில் இவ்வுலகை விட்டு பிரிந்தார். இவருடைய மதிப்பைப் போற்றும் வகையில் அஞ்சல் தலைகள் வெளியிடப்பட்டன. பெயரிட்டு வழங்கும் உருசிய அறிவியல் கல்விக்கழகத்தின் பல விருதுகளில் ஒன்று இவரது பெயரால் அழைக்கப்படுகிறது.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பரமனந்தல் கிராமத்தில் மரம் நடும் விழா செங்கம் காவல் துணை கண்காணிப்பாளர் சரவணகுமரன் தொடங்கிவைத்தார்.
by mohan
written by mohan
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த பரமனந்தல் கிராமத்தில் பாப்பாத்தி அம்மாள் கிருஷ்ணன் நினைவு அறக்கட்டளை சார்பில் மரம் நடும் விழா ரீடு தொண்டு நிறுவன இயக்குனர் வழக்கறிஞர் பிகே தனஞ்ஜெயன் தலைமையில் நடைபெற்றது மேல்செங்கம் காவல் ஆய்வாளர் செங்குட்டுவன் எல்ஐசி பல்லுயிர் பாதுகாப்பு தலைவர் தெய்வசிகாமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர் நிகழ்ச்சியின் முன்னதாக ஊராட்சி மன்ற தலைவர் கே.இராமநாதன் அனைவரையும் வரவேற்று பேசினார் இந்த அறக்கட்டளை 5 லட்சம் மரக்கன்றுகள் நடுவதை உறுதி ஏற்றுக்கொண்டு தொடக்க நிகழ்வாக பரமனந்தல் கிராமத்தில் உள்ள நீர்நிலைகள் மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களில் முதல்கட்டமாக 2021 மரக்கன்று நடும் திட்டத்தை செங்கம் காவல் துணை கண்காணிப்பாளர் கே.சரவணகுமரன் தொடங்கி வைத்து பேசுகையில்;மரங்கள் மனித சமுதாயத்துக்கு பல்வேறு பலன்களை அளிக்கின்றன. மரங்கள் மற்றும் மரங்கள் அடர்ந்த காடுகள் மனிதன் சுவாசிக்க உதவும் ஆக்ஸிஜன் என்கிற பிராணவாயுவை உற்பத்தி செய்யும் மையமாகத் திகழ்கின்றன. இளைய தலைமுறையினர் சமூக ஆர்வலர் என அனைவரும் மரங்களை நட்டு சமூகத்தை காக்க முன்வர வேண்டும் என்று பேசினார். பின்னர் பரமனந்தல் ஏரி பகுதியில் 1000 பனை விதைகளை செங்கம் காவல் துணை கண்காணிப்பாளர் சரவணகுமரன் மற்றும் மேல்செங்கம் காவல் ஆய்வாளர் செங்குட்டுவன் ரீடு தொண்டு நிறுவன இயக்குனர் தனஞ்ஜெயன் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் ராமநாதன் ஆகியோர் வீசினர்
விழாவில் பி.கே.ஏழுமலை , எஸ்.இமயவர்மன் ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொண்டனர் நிகழ்ச்சியில் பரமனந்தல் கிராமத்தைச் சேர்ந்த முருகன், ராஜன், விஜயகுமார், குமரேசன், பிச்சாண்டி, கிராம பொதுமக்கள், தன்னார்வலர்கள் ,வன ஆர்வலர்கள் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர் நிகழ்ச்சியின் இறுதியில் ரீடு தொண்டு நிறுவன பொறுப்பாளர் பி.கே.சேட்டு நன்றி கூறினார்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மேல்சோழங்குப்பம் கிராமத்தில் தடுப்பூசி முகாம் துவக்கி வைத்தார் ஊராட்சி மன்ற தலைவர் புவனேஸ்வரி புகழேந்தி .
by mohan
written by mohan
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த மேல்சோழங்குப்பம் கிராமத்தில் கொரோனா தடுப்பூசி முகாமை துவக்கி வைத்தார் ஊராட்சி மன்ற தலைவர் புவனேஸ்வரி புகழேந்தி இம்முகாம் கலசப்பாக்கம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கௌதம்ராம் உத்தரவின் பேரில் மருத்துவ அலுவலர் டாக்டர் தேன்மொழி தலைமையிலான மருத்துவக் குழுவினர் செவிலியர்கள் கீர்ஜா,மீனா,குமாரி பங்கேற்று பொதுமக்களை பரிசோதனை செய்தனார் பின்னர் மருத்துவ அலுவலர் கூறுகையில் கர்பினி தாய்மார்களும் பாலூட்டும் தாய்மார்களும் தடுப்பு ஊசி செலுத்தி கொள்வதால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்றும் எவ்வித அச்சமும் இன்றி தாமாக முன்வந்து ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்திக் கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்தினார் பின்னர் 150 மேற்பட்ட பொதுமக்கள் ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்தி கொள்ள முன்வந்தார்கள் உடன் மேல்சோழங்குப்பம் ஊராட்சி மன்ற துணை தலைவர் லட்சுமி கார்த்திகேயன் ஊராட்சி செயலாளர் சசிகலா சிவகுமார் கலந்து கொண்டனார்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த கீழ்பாலூர் கிராமத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் ஊராட்சி மன்ற தலைவர் ஏழுமலை தலைமையில் நடைபெற்றது முன்னிலையாக முன்னால் ஒன்றிய குழு உறுப்பினர்கள் கோபாலகிருஷ்ணன் சாரங்கபாணி ஊராட்சி செயலாளர் அண்ணாமலை ஊராட்சி மன்ற துணை தலைவர் திவாகர் பங்கேற்றனார்இம்முகாம் கலசப்பாக்கம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கௌதம்ராம் உத்தரவின்பேரில் மருத்துவ அலுவலர் டாக்டர் விக்னேஷ் தலைமையிலான மருத்துவக் குழு செவிலியர்கள் காந்திமதி மல்லிகா சுபா கலந்து கொண்டு பொதுமக்களை பரிசோதனை செய்து தடுப்பூசி வழங்கினார் இதில் 200 மேற்பட்ட பொதுமக்கள் எவ்வித அச்சமும் இன்றி தாமாக முன்வந்து தடுப்பூசி செலுத்தி கொண்டனார்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கீழக்கரையில் பெணகளுக்கான தடுப்பூசி முகாமில் ஆர்வத்துடன் கலந்து கொண்ட 300க்கும் மேற்பட்ட பெண்மணிகள்…
by ஆசிரியர்
written by ஆசிரியர்
12/07/2021 அன்று கீழக்கரை பழைய மீன் கடை அருகிலுள்ள சேரான் தெருவில் இருக்கும் இப்ராகிம் கிட்டங்கியில் ராமநாதபுரம் தொகுதி எம் எல் ஏ காதர் பாட்சா முத்துராமலிங்கம் அறிவுறுத்தலின்படி பெண்களுக்கான இலவச கொரனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது.
இம்முகாமை திருப்புல்லாணி வட்டார மருத்துவர் ராசீக்தீன் மற்றும் நகர் திமுக இளைஞரணி அமைப்பாளர் வழக்கறிஞர் V.S ஹமீது சுல்தான் முன்னிலையில் கீழக்கரையை சேர்ந்த பெண் வழக்கறிஞர் M. நாதியா ஹனிபா துவக்கிவைத்தார்.
இந்த தடுப்பூசி முகாமில் 300க்கும் மேற்பட்ட பெண்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டு தடுப்பூசியை பெற்றுக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் நகர் திமுக பிரமுகர்கள் இப்திகார் ஹசன், நசுருதீன், மீரான், எபன் , நயிம், பயாஸ் மற்றும் பலர் கலந்து கொண்டு தேவையான உதவிகளை செய்தனர். மேலும சிகிச்சை அளித்த மருத்துவ பணியாளர்களுக்கும் மருத்துவர்களுக்கும் பொதுமக்களுக்கும் அறக்கட்டளை சேர்மன் N.முகம்மது ஹனிபா நன்றி கூறினார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த வேப்பூர் பைபாஸ் சாலையில் லாரியும் டூவிலரும் முந்த முயன்ற தகராறில் ஆந்திரமடைந்த லாரி டிரைவர்தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஆற்காடு நாதமுனி தெருவை சேர்ந்த மணிகண்டனை (28)யும்ஆற்காடு தோப்பு கானா பகுதியை சேர்ந்த அருண் (21) என்பவரையும் சரமாரியாக வெட்டியுள்ளார்.இதில் பலத்த காயம் அடைந்த மணிகண்டன்பரி தாபமாக உயிரிழந்தார்.படுகாயம் அடைந்த அருணை வாலாஜா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து உள்ளனர்.இதுகுறித்து தகவல் அறிந்த ராணிப்பேட்டை எஸ்.பி.ஓம்பிரகாஷ் மீனா சம்பவ இடத்தை பார்வையிட்டார்.ஆற்காடு நகர காவல்துறையினர் வழக்குபதிவு செய்து கொலையாளியை வலை வீசி தேடி வருகின்றனர்.முன் விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததா? என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகின்றது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தமிழகத்தில் மிகவும் பிற்பட்டோருக்கு 20 சதவீதம் இட ஒதுக்கீட்டில் மாற்றம் கூடாது: சமூக நீதி அமைப்பினர் கோரிக்கை:
by mohan
written by mohan
மதுரையில் மிகவும் பிற்பட்டோர்,ஒடுக்கப்பட்டசமூகங்களின் சமூகநீதி கூட்டமைப்பு சார்பில், பத்திரிக்கையாளர் சந்திப்பில் 10.5% வன்னியர்களுக்கு ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, அறிஞர் குழு மூலம் ஆய்வு செய்து எல்லா சமூகங்களுக்கும் உரிய இட ஒதுக்கீடு இடத்திலும் கிடைத்திடும் வகையில் வகுப்புவாரித் தொகுப்பு இட ஒதுக்கீட்டு முறையை வகுத்துச் செயல்படும்வரை முறை எம்.பி.சி. 20% இட ஒதுக்கீட்டைச் சட்டத்தில் எந்த மாற்றத்தையும் செய்ய கூடாது என்று அரசை வலியுறுத்துவது என்றும் , பொது வெளியில் நடைபெறும் பொய் பிரசாரங்களை முறியடித்து, அனைத்து மக்களுக்குமான சமூக நீதியை காக்க பாடுபடுவது என்றும்,
10.5% அநீதியானது என்பதை விளக்க விரைவில், தமிழக முதல்வரை நேரில் சந்தித்து முறையிடுவது என்றும், ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது. நிகழ்ச்சியில், பல்வேறு அமைப்பின் நிர்வாகிகள் பங்கேற்றனர். பின்னர், கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாசிம் பீவி மகளிர் கல்லூரி பின்புறத்தில் மரம் முறிந்து மின் கம்பியின் மீது விழும் நிலை உள்ளதால் அம்மரத்தை அகற்றும் பணி தற்போது நடைபெறும் அதனால் இன்று 12.7.2021 கீழக்கரையை தவிர்த்து சுற்றியுள்ள கிராமங்களில் 2 மணி நேரம் 10.00 முதல் 12.00 வரை மின் தடை ஏற்படும் என்று கீழக்கரை மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை தல்லாகுளத்தில் மனைவி இறந்ந சோகத்தில் கணவர் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.மதுரை தபால்தந்தி நகர் மயில் நகரை சேர்ந்தவர் ஜெயபாண்டி 77.இவர் மனைவி சில மாதங்களுக்குமுன் இறந்துவிட்டார்.இதனால், மனைவி இறந்த சோகத்தில் இருந்தவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இது குறித்து, தல்லாகுளம் போலீசார் வழக்குப் பதிவு சய்து விசாரித்து வருகின்றனர்.
மதுரை எஸ்.எஸ்.காலனியில் தாயுடன் சண்டை போட்டுக்கொண்டு மகன் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.மதுரை பொன்மேனி குயவர் தெருவைச் சேர்ந்தவர் ,கணேசன் 27.இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது.இதை தாய் கண்டித்துள்ளார்.இதனால், தாயுடன் சண்டை போட்டுக்கொண்ட கணேசன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இது குறித்து, எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மாவட்ட ஆட்சியரை அறக்கட்டளை நிறுவனர் வழிகாட்டி மணிகண்டன் மற்றும் சமூக ஆர்வலர் அசோக்குமார் ஆகியோர் சந்தித்தனர்.தங்கள் மனு குறித்து வழிகாட்டி மணிகண்டன் கூறுகையில்: “தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் அனைத்து மாவட்டத்திலும் அந்தந்த ஆட்சியர் தலைமையில் ஆறு பேர் கொண்ட பசுமை குழு ஏற்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி மதுரை மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் பசுமை குழுவை விரைவில் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் மனுவாக வழங்கப்பட்டது.அந்த குழுவில் பசுமை பணி மற்றும் இயற்கை நலன் சார்ந்த தகுதி வாய்ந்த வல்லுநர்கள் மற்றும் தொடர் பசுமை பணி மற்றும் மரங்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் ஆர்வலர்களையும் உறுப்பினர்களாக தேர்வு செய்ய வேண்டும்.
அரசு அலுவலகங்கள் மற்றும் பொது இடங்களில் மரங்கள் வளர்ப்பதை ஊக்கப்படுத்துவதோடு ஏற்கனவே வளர்ந்து பயன்தரும் மரங்களை பாதுகாக்க உரிய வழிமுறைகள் ஏற்படுத்த வேண்டும்.உள்கட்டமைப்பு வசதிகளுக்கு மரங்கள் இடையூராக இருக்கும் பட்சத்தில் அவற்றை வேரோடு எடுத்து மாற்று இடத்தில் பாதுகாப்பாக நடவு செய்யும் வகையில் நவீன இயந்திர வண்டிகள் வாங்கப்பட வேண்டும்..மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில்கீழ் வைகைநதி கரையோரம் அமைக்கப்பட்டுள்ள சாலைகள் மற்றும் மீனாட்சி அம்மன் கோவில் அருகே நான்கு மாசிவீதி சாலைகளிலும் மரக்கன்றுகள் வைத்து பராமரிக்க வழிவகை செய்ய வேண்டும்.மேற்கண்ட அனைத்து கோரிக்கைகளையும் அமைக்கப்படும் பசுமை குழுவின் செயல்திட்டத்தில் இனைத்துக்கொள்ள வேண்டும் என்றும் வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது” என்றார்மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் அனைத்து கோரிக்கைகளையும் விரைவில் நிறைவேற்ற ஆவன செய்வதாக உறுதியளித்தார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
வேலன் நகர் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட சாலையை யூனியன் சேர்மன் நடுப்பட்டி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார் .
by mohan
written by mohan
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஒன்றியத்துக்கு உட்பட்ட வேலாயுதபுரம் அருகே வேலன் நகர் பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன இந்த பகுதியில் தார்சாலை அமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்து இந்த நிலையில் பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று 40 லட்ச ரூபாய் மதிப்பிலான தார் சாலையை யூனியன் சேர்மன் சிங்கராஜ் சேர்மன் கற்பகராஜ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தார் சாலையை ரிப்பன் வெட்டி யூனியன் சேர்மன் சிங்கராஜ் திறந்துவைத்தார் இதையடுத்து அப்பகுதி பொதுமக்கள் தங்கள் பகுதியில் வாறுகால் வசதி ரேஷன் கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும் என கோரிக்கை வைத்தனர் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட சேர்மன் விரைவில் இந்த பணிகள் செய்து தரப்படும் என வாக்குறுதி அளித்தார் இந்த நிகழ்ச்சியில் வார்டு உறுப்பினர்கள் பஞ்சாயத்து உறுப்பினர் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்..
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தனியார் இ- சேவை மூலமாக பிறப்பு, இறப்பு, இருப்பிடம், வருமானம் உள்ளிட்ட பல்வேறுசான்றிதழ்களை வழங்கப்பட்டு வருகிறது. இதற்கென அரசு நிர்ணகிக்கப்பட்ட தொகை சான்றிதழுக்கு ஏற்றார் போல் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.இந்தநிலையில் இ-சேவை மைய நிர்வாகிகளை அரசு அதிகாரிகள் பலருக்கு லஞ்சம் வாங்க ஒரு கருவியாக பயன்படுத்துகின்றனர் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.மதுரை பழங்காநத்தம் பகுதியை சேர்ந்த சாய் கிருஷ்ணன் என்பவருக்கு வாரிசு சான்றிதழ் தேவைப்பட்டதும் அவர் இணையதளம் மூலமாகவே வாரிசு சான்றிதழுக்கு விண்ணப்பிக்க முயற்சி செய்து மதுரை பழங்காநத்தம் பத்திர பதிவு அலுவலகம் எதிரே உள்ள தனியார் இ-சேவை மையத்திற்கு சென்று உள்ளார்.அப்போது அங்கு பணியில் இருந்த பெண் ஒருவர் உடனடியாக வாரிசுசான்றிதழ் வேண்டுமென்றால் அதற்காக ரூ 3500 லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று கேட்டு உள்ளார். அதற்கு சாய் கிருஷ்ணன் அந்த பணத்தை கொடுத்து உள்ளார்.இருந்தபோதிலும் வாரிசு சான்றிதழ் வழங்குவதில் இ சேவை மைய அதிகாரி கால தாமதம் ஏற்படுத்தியதாகத் தெரிகிறது.இந்த நிலையில் சாய் கிருஷ்ணன் இ-சேவை மைய பெண்ணிடம் வாக்குவாதம் செய்து உள்ளார்.அப்போது மேற்கண்ட இரண்டு பேர் இடையேயான வாக்குவாதத்தை அங்கு உள்ள ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத் தளத்தில் பரவ விட்டு உள்ளார். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் நமது கீழை நியூஸ் செய்தித் தளத்தில் திருப்பரங்குன்றம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இ-சேவை மையத்தில் சரியான முறையில் இன்டர்நெட் வேலை செய்யவில்லை என குற்றச்சாட்டு எழுந்து உள்ளது தனியாருக்கு இ சேவை மையத்திற்கு ஆதரவாக செயல்படுவதாகவும் என செய்தி வெளியிட்டிருந்தோம் அருகே உள்ள தனியார் இ-சேவை மையத்தில் பதிவு செய்து உள்ளே கொண்டு வாருங்கள் என பொதுமக்கள் குற்றம் சாட்டுகிறார் என செய்தி பதிவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
வாடிப்பட்டி அருகே நேற்று திருமணம் நடக்க விருந்த நிலையில், தகராறு செய்த மணமகனை வெட்டிக்கொலை செய்த லோடுமேன் தந்தை கைது செய்யப்பட்டார்.மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே அய்யனகவுண்டன்பட்டியை சேர்ந்தவர் இளங்கோவன்( 49)லோடுமேன். இவருக்கு ராணி(45)என்றமனைவியும் சுபாஸ்(22),பிரதீப்(20)ஆகிய 2மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். இதில் பிரதீப் ஆடு வளர்த்துக் கொண்டு லோடுமேன் வேலையும் செய்து வந்தார்.நேற்று (11ந்தேதி) பிரதீபிற்கும் அவரது உறவினர் பெண்ணிற்கும் திருமணம் நடத்த பெற்றோர்களால் முடிவுசெய்து திருமணவேலைகள் நடந்து வந்தது. இந்நிலையில் பிரதீப் நேற்று மாலை மது குடித்துவிட்டு வீட்டில் வந்து நண்பர்களுக்கு மதுவிருந்து வைக்கவேண்டும் அதற்கு பணம் கேட்டு தந்தை இளங்கோவனிடம் தகராறு செய்துள்ளார்.அதற்கு இளங்கோவேன் பணம் தரமுடியாது, குடிக்ககூடாது, இன்று திருமணத்தை வைத்துக் கொண்டு இப்படி நடக்ககூடாது என்று கூறியுள்ளார்.நீ பணம் தரவில்லை என்றால் நான் திருமணம் செய்யமாட்டேன் என்று கூற இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு அதுமுற்றியதில் கைகலப்பானது.அப்போது ஆத்திரமடைந்த பிரதீப் அங்கிருந்த கோடாலியை எடுத்து இளங்கோவனை வெட்டமுயன்றார்.அதை இளங்கோவன் பறித்து கைபிடியில் திருப்பி அடிக்கமுயன்ற போது எதிர்பாராதவிதமாக பிரதீப் கழுத்தில் கோடாலியால் வெட்டியதில் ரத்த வெள்ளத்தில் பிரதீப் பிணமானார்.இது சம்மந்தமாக வாடிப்பட்டி போலீஸ்இன்ஸ்பெக்டர் ராதாமகேஷ் வழக்குபதிவு செய்து லோடுமேன் தந்தை இளங்கோவனை கைது செய்து விசாரணைசெய்து வருகிறார்.திருமணம் நடக்கவேண்டிய மணவீடு பிணவீடாய் மாறியது உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
வலிமை அப்டேட்டாய் அஜித் ரசிகர்கள் 5 நிமிடத்திற்குள் பேனர் அடித்து பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
by mohan
written by mohan
நீண்ட எதிர்பார்ப்புக்கு பிறகு நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் வலிமை படத்திற்கான அப்டேட் இன்று மாலை 6 மணி அளவில் Motion Poster வெளியான நிலையில் படத்தின் அஜித்தின் போட்டோவை மதுரையில் உள்ள அவரது ரசிகர்கள் 5 நிமிடத்தில் பேனர் அடித்து பட்டாசுகள் வெடித்து உற்ச்சாகமாக கொண்டாடி இருசக்கர வாகனத்தில் வலிமை பட போஸ்டரை அவரது ரசிகர்கள் பிடித்துகொண்டு ஊர்வலமாக செல்லும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் ஆடி முளைகொட்டு உற்சவம் இன்று வாஸ்து பூஜையுடன் தொடங்கியது. திங்கள் கிழமை காலை 10: 05 மணி முதல் 10:29 மணிக்குள் கன்னியா லக்கனத்தில், கொடியேற்றத்துடன் பத்து நாட்கள் விழா நடைபெறும்.வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே மீனாட்சி அம்மன் சன்னதியில் உள்ள கொடி மரத்தில் கொடி ஏற்றப்படும்.இந்த விழாக்கான ஏற்பாடுகளை,ஆலய தக்கார் கருமுத்து தி. கண்ணன், இணை ஆணையாளர் செல்லத்துரை மற்றும் ஆலயப் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கூகுளின் முதன்மை செயல் அலுவலர் சுந்தர் பிச்சை (பிச்சை சுந்தரராசன்) பிறந்த தினம் இன்று (ஜூலை 12, 1972).
by mohan
written by mohan
சுந்தர் பிச்சை என்று அறியப்படும் பிச்சை சுந்தரராசன் ஜூலை 12, 1972ல், இந்தியாவின் தமிழ்நாட்டின் மதுரையில் பிறந்தார். இவரது தந்தை ரகுநாத பிச்சை மற்றும் தாயார் லட்சுமி ஆவார். அவரது தாயார் ஒரு ஸ்டெனோகிராஃபர் மற்றும் அவரது தந்தை ரெகுநாதா பிச்சாய் பிரிட்டிஷ் கூட்டு நிறுவனமான ஜி.இ.சி.யில் மின் பொறியாளராக இருந்தார். அவரது தந்தைக்கு மின்சாரக் கூறுகளை உற்பத்தி செய்யும் ஒரு உற்பத்தி ஆலையும் இருந்தது. பிச்சை சென்னையின் அசோக் நகரில் இரண்டு அறைகள் கொண்ட ஒரு குடியிருப்பில் வளர்ந்தார். பிச்சை சென்னையில் உள்ள சவகர் வித்தியாலயா பள்ளியில் பத்தாம் வகுப்பும், வனவாணி பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பும் படித்தார். பிறகு ஐ.ஐ.டி கரக்பூரில் உலோகப் பொறியியல் பயின்ற இவர், ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில், பொருளறிவியல் பட்டம் பெற்றார். பின்னர் வார்ட்டன் மேலாண்மைப் பள்ளியில் மேலாண்மைப் பட்டம் பெற்றார். அங்கு அவர் முறையே சைபல் அறிஞர் மற்றும் பால்மர் அறிஞர் என்று பெயரிடப்பட்டார்.
சுந்தர் பிச்சை 2004 ஆம் ஆண்டு கூகுள்ல் இணைந்தார். இவர் கூகிள் வாடிக்கையாளர் மென்பொருள் தயாரிப்புகள் தொகுப்பில் முக்கிய பங்கு வகித்தார். தற்போது கூகிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றுகிறார். 2013 ஆம் ஆண்டு மார்ச் 13 ஆம் நாள் ஆன்டி ரூபின் பதவி விலகிய பிறகு ஆண்ட்ராய்டு பிரிவிற்கும் சேர்த்து தலைவரானார். கூகுள் வரைபடம், ஆய்வு, வணிகம், விளம்பரம், ஆண்ட்ராய்டு, குரோம், உள்கட்டமைப்பு, கூகுள் ஆப்ஸ் ஆகியவற்றின் தலைவராக இருந்த இவர், கூகுள் உறவு நிறுவனங்களின் புதிய கூட்டு நிறுவனமான ஆல்பாபெட்டு உருவாக்கம் நிறைவுற்ற பிறகு, கூகுளின் முதன்மைச் செயல் அலுவலராகப் பொறுப்பேற்க உள்ளார். இவரை கூகுளின் முதன்மை செயல் அலுவலராக ஆகத்து 10, 2015 அன்று கூகுள் அறிவித்தது. 2019 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் திகதி முதல் ஆல்பாபெட்டு என்ற நிறுவனத்தின் தலைவர்களாக இருந்த லாரி பேஜ் மற்றும் சேர்ஜி பிரின் ஆகியோர் விலகி இவரை இரண்டு நிருவனங்களுக்கும் ஒரே தலைமை செயல் அதிகாரியாக நியமித்துள்ளார்கள்.
டிசம்பர் 11, 2018 அன்று, கூகுள் தொடர்பான தளங்களில் கூறப்படும், சாத்தியமான அரசியல் சார்பு, சீனாவில் “தணிக்கை செய்யப்பட்ட தேடல் பயன்பாட்டிற்கான” நிறுவனத்தின் கூறப்படும் திட்டங்கள், மற்றும் கூகிள் தொடர்பான அதன் தனியுரிமை நடைமுறைகள் பல விஷயங்கள் குறித்து பிச்சை அமெரிக்க மன்ற நீதித்துறை முன் சாட்சியமளித்தார். கூகிள் பயனர்கள் தங்கள் தரவுகளை சேகரிப்பதில் இருந்து விலகலாம் என்றும், சீனாவில் “தணிக்கை செய்யப்பட்ட தேடுபொறிக்கான தற்போதைய திட்டங்கள் எதுவும் இல்லை” என்றும் அவர் கூறினார். கம்பியின் முன் பிச்சையின் தோற்றத்தை ஒரு “தவறவிட்ட ஒரு பெரிய வாய்ப்பு” என்று வயர்டின் இஸி லாபோவ்ஸ்கி வகைப்படுத்தினார். ஏனெனில், அவர் எழுதியது போல, அதன் உறுப்பினர்கள் “ஒரு பாகுபாடான போரின் எதிர் பக்கங்களை ஒதுக்கிவைத்தனர்”. மேலும் பொதுமக்களுக்கு வழங்கினர். பிச்சை இந்திய அமெரிக்க வாழ் கணினி தொழில்நுட்ப மேலாளர் ஆவார். ராஜஸ்தானின் கோட்டாவைச் சேர்ந்த ரசாயன பொறியியலாளர் அஞ்சலி பிச்சாய், நீ விக்கி என்பவரை மணந்தார். அவர் இந்திய தொழில்நுட்ப நிறுவனமான கரக்பூரில் பிச்சையின் வகுப்பு தோழர். இந்த தம்பதியருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். பிச்சாயின் ஆர்வங்களில் கால்பந்து மற்றும் கிரிக்கெட் ஆகியவை அடங்கும்.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சிறுவயதில் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற மலாலா யூசப்சாய் பிறந்த தினம் இன்று (ஜூலை 12, 1997).
by mohan
written by mohan
மலாலா யூசப்சாய் (Malala Yousafzai) ஜூலை 12, 1997ல் பாக்கிஸ்தானின் வடமேற்கு கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் ஸ்வாட் மாவட்டத்தில், ஒரு கீழ்-நடுத்தர குடும்பத்தில் பிறந்தார். அவர் ஜியாவுதீன் யூசப்சாய் மற்றும் டோர் பெக்காய் யூசப்சாய் ஆகியோரின் மகள். அவரது குடும்பம் யூசுப்சாய் பழங்குடியினத்தைச் சேர்ந்த பஷ்டூன் இனத்தைச் சேர்ந்த சன்னி முஸ்லிம். மருத்துவமனையில் பிறப்பதற்கு குடும்பத்திற்கு போதுமான பணம் இல்லை. இதன் விளைவாக, யூசுப்சாய் அண்டை வீட்டாரின் உதவியுடன் வீட்டில் பிறந்தார். தெற்கு ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த பிரபல பஷ்டூன் கவிஞரும் போர்வீரருமான மைவாண்டின் மலாலாய் என்பவருக்குப் பிறகு அவருக்கு முதல் பெயர் மலாலா (“துயரத்தால் பாதிக்கப்பட்டவர்”) வழங்கப்பட்டது. மிங்கோராவில் உள்ள அவரது வீட்டில், அவர் தனது இரண்டு இளைய சகோதரர்களான குஷால் மற்றும் அடல், அவரது பெற்றோர்களான ஜியாவுதீன் மற்றும் டோர் பெக்காய் மற்றும் இரண்டு செல்ல கோழிகளுடன் வசித்து வந்தார்.
பாஷ்டோ, உருது மற்றும் ஆங்கிலம் ஆகியவற்றில் சரளமாக இருந்த யூசுப்சாய் பெரும்பாலும் அவரது தந்தை ஜியாவுதீன் யூசப்சாய் என்பவரால் கல்வி கற்றார். அவர் ஒரு கவிஞர், பள்ளி உரிமையாளர் மற்றும் ஒரு கல்வி ஆர்வலர், குஷால் பப்ளிக் ஸ்கூல் என்று அழைக்கப்படும் தனியார் பள்ளிகளின் சங்கிலியை நடத்தி வருகிறார். ஒரு நேர்காணலில், யூசப்சாய் ஒருமுறை தான் ஒரு டாக்டராக ஆசைப்பட்டதாகக் கூறினார். ஆனால் பின்னர் அவரது தந்தை ஒரு அரசியல்வாதியாக மாற ஊக்குவித்தார். ஜியாவுதீன் தனது மகளை முற்றிலும் சிறப்பு வாய்ந்ததாகக் குறிப்பிட்டார். அவரது இரு சகோதரர்களும் படுக்கைக்கு அனுப்பப்பட்ட பின்னர் இரவில் எழுந்து அரசியல் பற்றி பேச அனுமதித்தார்.
முஹம்மது அலி ஜின்னா மற்றும் பிரதமர் பெனாசிர் பூட்டோ ஆகியோரால் ஈர்க்கப்பட்ட யூசுப்சாய் கல்வி உரிமைகளைப் பற்றி பேசத் தொடங்கினார். செப்டம்பர் 2008 முதல், உள்ளூர் பத்திரிகைக் கழகத்தில் பேச அவரது தந்தை பெஷாவருக்கு அழைத்துச் சென்றார். தலிபான்கள் எனது அடிப்படை கல்வி உரிமையை பறிக்க எவ்வளவு தைரியம்? பிராந்தியமெங்கும் செய்தித்தாள்கள் மற்றும் தொலைக்காட்சி சேனல்கள் உள்ளடக்கிய உரையில் யூசப்சாய் தனது பார்வையாளர்களைக் கேட்டார். 2009 ஆம் ஆண்டில், யூசுப்சாய் ஒரு பயிற்சியாளராகவும் பின்னர் போர் மற்றும் அமைதி அறிக்கையிடலுக்கான திறந்த மனது பாக்கிஸ்தான் இளைஞர் திட்டத்தில் ஒரு சக கல்வியாளராகவும் தொடங்கினார். இது பிராந்தியத்தில் உள்ள பள்ளிகளில் பணியாற்றியது, இளைஞர்கள் பத்திரிகை கருவிகள் மூலம் சமூக பிரச்சினைகள் குறித்து ஆக்கபூர்வமான கலந்துரையாடலில் ஈடுபட உதவுகிறது.
மலாலா வசிக்கும் பகுதியில் பெண்கள் பாடசாலை செல்வதற்கான தாலிபானின் தடையை மீறி இவர் பள்ளி சென்றுவந்தார். 2009ஆம் ஆண்டிலேயே இவரது பி.பி.சியின் உருது வலைப்பதிவு ஊடாக தானும் தனது ஊரும் பாக்கித்தானிய தாலிபானால் எவ்வாறு கட்டுப்படுத்தப்பட முயற்சி செய்யப்படுகிறது என்று விவரித்து வந்தார். இருப்பினும் புனைபெயரில் எழுதிவந்தமையால் இவரது அடையாளம் தெரியாதிருந்தது. தொலைக்காட்சி நேர்முகமொன்றில் நேரடியாக தோன்றியதிலிருந்து பரவலாக அறியப்பட்டதுடன் பழைமைவாத தாலிபான்களின் இலக்கிற்கும் ஆளானார். பல விருதுகளைப் பெற்ற மலாலாவிற்கு பாக்கிஸ்தானின் முதல் அமைதிப் பரிசும் வழங்கப்பட்டது.
மலாலாவை அக்டோபர் 9, 2012 அன்று தாலிபான் சுட்டுக் கொல்ல முயன்றது. இவர் படுகாயம் அடைந்ததைத் தொடர்ந்து இதற்கு உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பலத்த கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இவரைச் சுட்ட தீவிரவாதிகள் பற்றி துப்பு கொடுப்பவர்களுக்கு ரூ.1 கோடி பரிசு தரப்படும் என்று கைபர்-பாக்டுன்கவா மாநில அரசு அறிவித்தது. 2014ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது. மிகவும் சிறுவயதில் அமைதி நோபல் பரிசுப் பெற்றவர் இவரேயாவார். உலக அமைதி மற்றும் செழிப்பு அறக்கட்டளையின், “தைரியத்திற்கான விருது” (bravery award) பெற்றார்.
எழுத்தறிவின்மை, ஏழைமை, தீவிரவாதம் ஆகியவற்றுக்கு எதிரான போராட்டத்தில் ஆண்களும் பெண்களும் ஒன்று சேரவேண்டும் என்று அறைகூவல் விடுத்தாள் மலாலா. புத்தகங்களையும், எழுதுகோல்களையும் நாம் கையில் எடுப்போம். இவைதான் நம் போராட்டத்துக்கான ஆயுதங்கள். வாளைவிட எழுதுகோல் வலிமையானது. ஒரு குழந்தை, ஒரு ஆசிரியர், ஒரு புத்தகம், ஒரு எழுதுகோல், இவை போதும் இந்த உலகத்தை முழுமையாக மாற்ற. கல்வி ஒன்றுதான் தீர்வு. கல்விக்குத்தான் முதலிடம். தாலிபன் தீவிரவாதிகளின் கொடுமைக்கு ஆளான ஆயிரக்கணக்கானவர்களில் நானும் ஒருவள் சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் என் நெற்றியின் இடது பக்கத்தில் பாய்ந்த குண்டு, அமைதி, கல்வி, சுபிட்சம் இவற்றைப் பரப்புவதில் எனக்கு உண்டான நெஞ்சுறுதியைக் கொஞ்சமும் குறைக்கவில்லை. இந்த வெறித்தனமான தாக்குதல் என்னிடம் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. மாறாக எனது பயம், பலவீனம், நம்பிக்கையின்மை எல்லாவற்றையும் துரத்தினேன்.
2013 ஆம் ஆண்டு ஜூலை 12ல் மலாலா தனது 16ஆவது பிறந்தநாள் அன்று ஐக்கிய நாடுகள் சபையை தொடர்புகொண்டு உலகம் முழுவதும் உள்ள குழந்தைகள் கல்வி கற்க வேண்டும் என்று கேட்டு கொண்டார். இந்த நிகழ்வை ஐக்கிய நாடுகள் “மலாலா தினம்” என்று குறிப்பிட்டனர். இதுவே தாம் தாக்குதலுக்கு உள்ளான பிறகு அவர் அளித்த முதல் பேட்டி ஆகும்.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ஏர்வாடி தர்காவில் சிறப்பு பிரார்த்தனை கலந்துகொண்ட இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர்..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
இராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்காவில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சந்தனக்கூடு திருவிழா நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக இன்று (11/07/2021) இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் மற்றும் முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்தி, ஏர்வாடி பேரூர் கழக செயலாளர் அமிது அம்ஷா சாயல்குடி ஒன்றிய செயலாளர் ஜெயபால், கமுதி ஒன்றிய செயலாளர் சண்முகம்,கீழக்கரை இளைஞரணி அமைப்பாளர் வழக்கறிஞர் ஹமீது சுல்தான் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டு ஏர்வாடி தர்காவில் சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.
You must be logged in to post a comment.