
மதுரை தல்லாகுளத்தில் மனைவி இறந்ந சோகத்தில் கணவர் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.மதுரை தபால்தந்தி நகர் மயில் நகரை சேர்ந்தவர் ஜெயபாண்டி 77.இவர் மனைவி சில மாதங்களுக்குமுன் இறந்துவிட்டார்.இதனால், மனைவி இறந்த சோகத்தில் இருந்தவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இது குறித்து, தல்லாகுளம் போலீசார் வழக்குப் பதிவு சய்து விசாரித்து வருகின்றனர்.
மதுரை எஸ்.எஸ்.காலனியில் தாயுடன் சண்டை போட்டுக்கொண்டு மகன் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.மதுரை பொன்மேனி குயவர் தெருவைச் சேர்ந்தவர் ,கணேசன் 27.இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது.இதை தாய் கண்டித்துள்ளார்.இதனால், தாயுடன் சண்டை போட்டுக்கொண்ட கணேசன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இது குறித்து, எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.