14
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த வேப்பூர் பைபாஸ் சாலையில் லாரியும் டூவிலரும் முந்த முயன்ற தகராறில் ஆந்திரமடைந்த லாரி டிரைவர்தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஆற்காடு நாதமுனி தெருவை சேர்ந்த மணிகண்டனை (28)யும்ஆற்காடு தோப்பு கானா பகுதியை சேர்ந்த அருண் (21) என்பவரையும் சரமாரியாக வெட்டியுள்ளார்.இதில் பலத்த காயம் அடைந்த மணிகண்டன்பரி தாபமாக உயிரிழந்தார்.படுகாயம் அடைந்த அருணை வாலாஜா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து உள்ளனர்.இதுகுறித்து தகவல் அறிந்த ராணிப்பேட்டை எஸ்.பி.ஓம்பிரகாஷ் மீனா சம்பவ இடத்தை பார்வையிட்டார்.ஆற்காடு நகர காவல்துறையினர் வழக்குபதிவு செய்து கொலையாளியை வலை வீசி தேடி வருகின்றனர்.முன் விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததா? என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகின்றது.
You must be logged in to post a comment.