ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பேருந்து நிலையம் அருகில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி தலைமையில் தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு தொடர்பாக இதுவரை தமிழக முதல்வர் 35 கடிதங்களை மத்திய அரசுக்கு அனுப்பியும் எந்த பலனும் இல்லை என்றும் மீனவர்கள் மீது அக்கறை இல்லாத பாஜக அரசு 2024 வீட்டுக்கு அனுப்பப்படும் என்றும் கோசமிட்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்எஸ் பாரதி செய்தியாளர்களிடம் கூறுகையில் : எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கடந்த ஒரு மாதத்தில் இலங்கை கடற்படையால் தமிழகத்தைச் சேர்ந்த சுமார் 80க்கும் மேற்பட்ட மீனவர்கள் கைது செய்யப்பட்டு வருவதுடன் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்கள் மட்டுமே இலங்கை நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்படும் நிலையில் மீனவர்களின் வாழ்வாதாரமான பல லட்ச ரூபாய் மதிப்பிலான படகுகள் இலங்கை அரசுடைமையாக்கபட்டு வருவதை கண்டித்தும், இலங்கை அரசின் கைது நடவடிக்கையை மத்திய அரசு கண்டுகொள்ளாமல் மவுனம் காத்து வருவதை கண்டித்தும் மீனவர் கைது தொடர்பாக இதுவரை 35 முறை மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதியும் எந்த விதமான நடவடிக்கை இதுவரை எடுக்காமல் மத்திய அரசு மவுனம் காத்து வருகிறது என்றும் தெரிவித்தார். மாவட்ட திமுக கட்சியின் மாவட்ட பிரதிநிதிகள் ஒன்றியம் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Category:
செய்திகள்
பிரபல ஹெர்போ கேர் மருத்துவர் நவீன் பாலாஜி உடல் நலம் குன்றி, சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு..
by Askar
written by Askar
பிரபல ஹெர்போ கேர் மருத்துவர் நவீன் பாலாஜி உடல் நலம் குன்றி, சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு..
ஹெர்போ கேர் மருத்துவமனை நிறுவனரும், அதன் தலைவரான டாக்டர் நவீன் பாலாஜி உடல்நல குறைவு ஏற்பட்டு ஈரோட்டில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சையில் எவ்விதமான முன்னேற்றமும் ஏற்படாத காரணத்தால் கேரளாவுக்கு சென்று சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அனைவரோடு நெருங்கிய நட்புடன் இருந்து வந்த டாக்டர் நவீன் பாலாஜி, சமூக நல்லிணக்கத்திற்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்தும், நிகழ்ச்சிகளை நடத்தியும் வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திண்டுக்கல்லில் உள்ள தபால் நிலையங்களில் நாளை முதல் (12/02/2024) தங்க பத்திரம் விற்பனை தொடக்கம்..
by Askar
written by Askar
திண்டுக்கல்லில் உள்ள தபால் நிலையங்களில் நாளை முதல் (12/02/2024) தங்க பத்திரம் விற்பனை தொடக்கம்..
திண்டுக்கல் அஞ்சல் கோட்டத்தில் உள்ள அனைத்து தபால் நிலையங்களில் தங்க பத்திரம் விற்பனை நாளை தொடங்குகிறது. இந்திய அஞ்சல் துறை, ரிசர்வ் வங்கியுடன் இணைந்து குறிப்பிட்ட தேதிகளில் தங்க பத்திரம் விற்பனை செய்து வருகிறது. இந்த மாதத்திற்கான தங்க பத்திரம் விற்பனை நாளை துவங்கி வரும் 16ம் தேதி வரை நடக்கிறது. ஒரு கிராம் தங்க பத்திரத்தின் விலை ரூ.6263. இதன்மூலம் ஒருவர் 1 கிராம் முதல் 4 கிலோ வரை தங்க பத்திரங்களை வாங்கி கொள்ளலாம். தங்க பத்திரத்தின் முதலீட்டு காலமான 8 ஆண்டுகளின் இறுதியில் அன்றைய தேதியில் உள்ள மதிப்பில் தங்க பத்திரங்களை பணமாக மாற்றி கொள்ளலாம். இதன் மூலம் செய்யப்படும் முதலீட்டுக்கு ரிசர்வ் வங்கியின் மூலமாக 2.5 சதவீதம் வட்டி கணக்கிடப்பட்டு 6 மாதங்களுக்கு ஒரு முறை முதலீட்டாளர்களுக்கு வங்கிக்கணக்கில் செலுத்தப்படும்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சென்னையில் கல்லூரிகளுக்கிடையிலான நட்சத்திரக் கலைவிழா நடிகர்கள் பங்கேற்பு ..
by Askar
written by Askar
சென்னையில் கல்லூரிகளுக்கிடையிலான நட்சத்திரக் கலைவிழா நடிகர்கள் பங்கேற்பு ..
சென்னை, சைதாப்பேட்டை, அன்னை வேளாங்கண்ணி மகளிர் கல்லூரியில் ASTRAL2K24
எனும் தலைப்பில் கல்லூரிகளுக்கிடையிலான
கலைவிழா இருநாட்கள் நடைபெற்றன. இவ்விழாவினை கல்விக் குழுமத்தின் நிறுவனர் டாக்டர் ச. தேவராஜ், துணைநிறுவனர் டாக்டர் டெல்பின் தேவராஜ், செயலர் முனைவர்
தே. தேவ் ஆனந்த் இணைச் செயலர் டாக்டர் தேஸ்ரீதேவி தேவ் ஆனந்த், கல்லூரி முதல்வர் முனைவர் த.விமலா ஆகியோர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர். சிறப்பு விருந்தினராக பிக் பாஸ் சீசன் 7 போட்டியாளர்
தொலைக்காட்சி மற்றும் திரைப்பட நடிகர் விஷ்ணு விஜய்
நடன இயக்குநர் மணிச்சந்ரா ஆகியோர் கலந்து கொண்டு
மாணவ மாணவிகளுடன்
நடனம் ஆடி மகிழ்ந்தார்
பின்பு மாணவிகளுடன் பேசிய விஷ்ணு ஒவ்வொரு மாணவிகளும் பல்வேறு திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் உங்களுக்கு என்று ஒரு லட்சியத்தை வைத்துக் கொண்டு
வாழ்க்கையில் வெற்றி பெற
வேண்டும் என்றனர்.
விழாவின் முதல் நாளான பல்வேறு விதமான உள்ளரங்க போட்டிகள் நடத்தப்பட்டது அதற்கு நடுவர்களாக பல்துறை வல்லுநர்களும் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித்ததுடன் வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுத்தனர்.
இந்நிகழ்ச்சியில் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவிகள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
உழைக்கும் மகளிர் சங்கம் மற்றும் இந்திய மகளிர் கூட்டுறவு இணைப்பு மையம் பங்கு பெறும் மகளிருக்கான நியூயார்க் ஐநா தலைமையகத்திலிருந்து காணொளி காட்சி மூலம சர்வதேச மகளிர் நலன் ஆர்வலர்களின் 62வது அமர்வு கூட்டம்..
by Askar
written by Askar
உழைக்கும் மகளிர் சங்கம் மற்றும் இந்திய மகளிர் கூட்டுறவு இணைப்பு மையம் பங்கு பெறும்
மகளிருக்கான நியூயார்க் ஐநா தலைமையகத்திலிருந்து காணொளி காட்சி மூலம சர்வதேச மகளிர் நலன் ஆர்வலர்களின் 62வது அமர்வு கூட்டம்..
இந்த அமர்வில் சென்னையிலிருந்து உழைக்கும் மகளிர் சங்கத் தலைவர் நந்தினி ஆசாத் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
அவரது உரையில் .
உலக மக்கள் தொகையில் சரி பாதியாக இருக்கும் மகளிருக்கு அதற்கான உரிமைகள் கிடைப்பதில்லை.
பொருளாதரததிலும் , விவசாய தொழில் செய்வதிலும் , குடும்ப சொத்துகளை பெறுவதிலும் பாராபட்சம் காட்டப்படுகிறது..
தொழில் முனைவோராக சுயசார்புடன்
விளங்கும் குடும்ப தலைவிகள் இணையர்கள் தாக்குதல், அடித்தல் , நற்பெயருக்கு களங்கம் விளைவித்தல் போன்ற வன்கொடுமைகளுக்கு ஆளாகிறார்கள்.
அது போன்ற கடினமான நேரத்தில் தன் பிள்ளைகளை கொண்டு தடுத்தல் , தாக்கும் போது இடைமறிப்பது போன்ற செயல்களால் ஆண்கள் மனரீதியாக வன்கொடுமை செய்யும மன நிலையிலிருந்து மாறுவார்கள்.
இதன் மூலமாக குடும்ப வன்முறை ஒழிந்து அமைதி நிலவும அதே போன்று வங்கி முகவர்களின் செயல்பாடுகள் வன்கொடுமைக்கு நிகராகவே உள்ளது.. அதற்கான தீர்வுகள் எட்டபட வேண்டும்.
சமூக மேம்பாட்டுக்கான 62 வது ஆணையம் அமர்வு கூட்டம்யூஎன் தலைமையகமான நியூயார்க்கில் இருந்து இது நடைபெறுகிறது சென்னையில் அமர்வில் உழைக்கும் மகளிர் சங்கம் இந்திய மகளிர் கூட்டுறவு இணைப்பு மையம் தலைவர் நந்தினி ஆசாத் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
இந்நிகழ்வில் விவசாயத்தில் பெண்களுக்கான பங்கு சமத்துவமாக இல்லை நில உரிமை மற்றும் நிதி கையாளுதல் , வேலைவாய்ப்பில் , ஊதியம் வழங்குவதில் பாராபட்சம் காட்டப்படுகிறது என்று அவர் பேசினார்.
மேலும் இந்நிகழ்வில் தென்னிந்தியா தழுவிய தொழில் முனைவோர்களில் சிறந்து விளங்கும் 9 மகளிருக்கு ஜெயா அருணாச்சலம் விருதுகள் வழங்கும் அறிவிப்பை
நந்தினி ஆசாத் வெளியிட்டார்.
விருது பெற்றவர்களில் காய்கறிப் பணியாளர்கள் விவசாயிகள் நாட்டு சுட்டு தயாரிப்பாளர்கள் தரையை சுத்தம் செய்பவர்கள் கையில்நாலு மாநிலங்களில் 270 வர்த்தகங்களில் 6,20,000 உறுப்பினர்களை கொண்டுள்ளது இந்த கூட்டுறவு தலைவர்களுக்கு டாக்டர் நந்தினி ஆசாத் மூலம் பாலின வன்முறையுடன் நிதி சேர்க்கையை ஒருங்கிணைக்க அதாவது மைக்ரோ பைனான்ஸில் பாலின அடிப்படையிலான வன்முறை தயாரிப்புடன் ஒருங்கிணைக்கும் ஒரு தெளிவான அழைப்பை வெளிப்படுத்துகிறது.
நெல்சன்- சென்னை
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கியான்வாபி பள்ளிவாசலில் பூஜை செய்ய அனுமதித்ததை கண்டித்து; சென்னை உயர்நீதிமன்றம் முற்றுகை போராட்டம்! 500 க்கும் மேற்பட்ட மஜகவினர் கைது..
by Askar
written by Askar
கியான்வாபி பள்ளிவாசலில் பூஜை செய்ய அனுமதித்ததை கண்டித்து; சென்னை உயர்நீதிமன்றம் முற்றுகை போராட்டம்! 500 க்கும் மேற்பட்ட மஜகவினர் கைது..
பலநூறு ஆண்டுகளாக இஸ்லாமிய மக்கள் தொழுகை நடத்தி வந்த உத்திரபிரதேச மாநிலம் வாரணாசியில் அமைந்துள்ள ஞானவாபி பள்ளிவாசலை பூஜைக்கு திறந்து விட்டு அநியாயத் தீர்ப்பு வழங்கிய வாரணாசி நீதிமன்ற தீர்ப்பை கண்டித்தும், வழிபாட்டுத் தலங்கள் சட்டம் 1991-ஐ பாதுகாக்க வலியுறுத்தியும், இன்று 10.02.2024 சென்னை உயர்நீதிமன்றம் முற்றுகை போராட்டம் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் நடைபெற்றது.
முற்றுகை போராட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது தலைமையில் அவைத் தலைவர் சம்சுதீன் நாசிர் உமரி கண்டன முழக்கங்களை எழுப்ப 500-க்கும் மேற்பட்ட மஜகவினர் உயர்நீதி மன்றத்தை முற்றுகையிட புறப்பட்ட போது காவல்துறை கைது செய்தனர்.
இப்போராட்டத்தில் இளைஞர் அணி மாநில செயலாளர் அன்வர் பாஷா, மனிதநேய தொழிற்சங்க மாநில தலைவர் ரஹிம் என்ற அன்வர், துணைச் செயலாளர் கண்டோன்மெண்ட் அப்துல் சமது, தகவல், தகவல் தொழில் நுட்ப அணி மாநில துணைச் செயலாளர் சிக்கந்தர் பாட்சா , மத்திய சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் அமீர் அப்பாஸ், மத்திய சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் ஷாகுல் ஹமீது, வடசென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் தாரிக் முகமது, வடசென்னை மேற்கு மாவட்ட செயலாளர் முஹம்மது இஸ்மாயில், தென் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் அபுபக்கர், திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர் பதுரூதீன், தென் சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் அப்துல் கைய்யும், தென் சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் காசிம், தலைமை செயற்குழு உறுப்பினர் யூசுப் உள்ளிட்ட மாவட்ட, நகர கிளை நிர்வாகிகள் கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
நெல்சன்- சென்னை
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சிறை கைதிகள் படிக்க இலவசமாக புத்தகங்கள் வழங்கிய செங்கோட்டை நூலக புரவலர்; வாசகர் வட்டத்தினர் பாராட்டு..
written by Abubakker Sithik
சிறை கைதிகள் படிப்பதற்கு இலவசமாக புத்தகங்கள் வழங்கிய செங்கோட்டை நூலக புரவலர்; வாசகர் வட்டத்தினர் பாராட்டு..
செங்கோட்டை நூலக புரவலர் அகஸ்டியன் சிறை கைதிகள் படிப்பதற்கு 154 புத்தகங்களை இலவசமாக வழங்கினார். நெல்லை புத்தகக் கண்காட்சியில் சிறை கைதிகள் படிப்பதற்கு இலவசமாக புத்தகங்கள் வழங்கும் பெட்டியில், செங்கோட்டை நூலக புரவலர் மற்றும் சமூக நலத்துறை கண்காணிப்பாளருமான ஸ்ரீஅகஸ்டியன் தனது மகளுடன் சென்று ரூ. 14,500 மதிப்பிலான 154 புத்தகங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் முன்னிலையில் வழங்கினார். சிறை கைதிகளுக்கு 154 புத்தகங்கள் பரிசளித்துள்ள செங்கோட்டை நூலக புரவலரை வாசகர் வட்டத்தினர் மற்றும் அரங்கில் இருந்த அனைவரும் பாராட்டினர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தேர்தல் முடிவுகள் அறிவிப்பதில் இழுபறி! நீயா நானா என போட்டி போடும் கட்சிகள்.போராட்ட களத்தில் பாகிஸ்தான்..
by Askar
written by Askar
பாகிஸ்தானில் கடந்த வியாழக்கிழமை பொதுத்தேர்தல் நடைபெற்றது. தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்த உடன் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும் முதல் சுற்று முடிவில் இம்ரான் கான் கட்சி அதிக இடங்களில் முன்னிலைப் பெற்றதாக கூறப்படுகிறது.அதேவேளையில் முடிவுகளை தேர்தல் ஆணையம் அறிவிக்காமல் காலம் தாழ்த்தியது. இதனால் நவாஸ் ஷெரீப்புக்கு ஆதரவாக தேர்தல் முடிவுகள் மாற்றப்படுவதாக இம்ரான் கான் கட்சியினர் குற்றம்சாட்டினர்.அதன்பின் வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணிக்கு முதற்கட்ட தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதன்பின் மெல்ல மெல்ல முடிவுகள் அறிவிக்கப்பட்டு வந்தன. இன்னும் 8 தொகுதிகளுக்கு முடிவுகள் அறிவிக்கப்படவில்லை.இந்த நிலையில் முடிவுகள் தாமதமாக அறிவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று இம்ரான் கான் கட்சியினர் நாடு தழுவிய போராட்டம் நடத்துகின்றனர்.இம்ரான கான், நவாஸ் ஷெரீப் ஆகியோர் தாங்கள்தான் வெற்றி பெற்றுள்ளோம் என மாறிமாறி அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.இதற்கிடையே நவாஸ் ஷெரீப் கட்சி, பிலாவால் பூட்டோ கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைக்க முயற்சி மேற்கொள்ளவதாக தகவல் வெளியாகியுள்ளது.அதேவேளையில் சிறுசிறு கட்சிகளுடன் கூட்டணி அமைத்து இம்ரான் கான் கட்சி ஆட்சியமைக்க முயற்சித்து வருகிறது. நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) 73 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பிலாவால் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி 54 இடங்களில் வெள்ளி பெற்றுள்ளது. ஏற்கனவே பொருளாதார சிக்கலில் தவித்து வரும் பாகிஸ்தான், தற்போது எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில் ஸ்திரதன்மையான ஆட்சி அமைப்பதில் தவித்து வருகிறது. இம்ரான் கான் கட்சியின் ஆதரவு பெற்ற சுயேட்சை வேட்பாளர்கள் 93 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். மற்ற சிறுசிறு கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் 36 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.266 தொகுதிகளை கொண்ட பாகிஸ்தானில் ஆட்சியமைக்க 134 இடங்கள் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!
பகுதி -2
கப்ளிசேட்
அப்பாஸிய பேரரசு-7
(கி.பி 750-1258)
அன்றைய அரசர்கள்
பல காரணங்களால்
பல திருமணங்களை செய்தனர்.
பாதுஷா ஹாரூன் அர்ரஷீத் அவர்கள்
முதல் மனைவியாக ஒரு அரேபிய பெண்ணை திருமணம் செய்து இருந்தார்.
இரண்டாவது மனைவியாக ஒரு பாரசீக பெண்ணை திருமணம் செய்து இருந்தார்.
இதுபோன்ற பல திருமணங்களுக்கு
பலமான அரசியல் காரணங்களும் இருந்தன.
பேரரசர் தனது இறுதி காலத்தில் தனது மூன்று மகன்களையும் வாரிசுகளாக நியமித்துவிட்டு மரணமடைந்தார்.
அதில் முதல் மனைவியான அரேபிய பெண்ணிற்கு மகனாக பிறந்தவர் அமீன் அவர்கள்.
இரண்டாவது மனைவியான பாரசீகப்
பெண்ணிற்கு பிறந்தவர் அல் மாஃமூன் ஆவார்.
அடுத்த மன்னர்களை தேர்ந்தெடுப்பதில் பிரச்சினைகள் வந்து பேரரசு சிதையக்கூடாது என்பதாலேயே தனது செல்வாக்குள்ள மூன்றுமகன்களையும்
அடுத்தடுத்த அரசர்களாக நியமித்து அதனை உத்திரவாக கஃபா ஆலயத்தில் தொங்கவிடச்
செய்தார்.
அதன்படி மன்னராக அமீன் பொறுப்பேற்றார்.
இருப்பினும் தனது முழு படைகளையும்
தனது திறமையான மகன் அல்-மாஃமூனிடமே
ஒப்படைக்க தலைமை ஆலோசகர் பத்லு இப்னு ராபிஆ அவர்களுக்கு மன்னர்
ஹாரூன் அர்ரஷீத் உத்திரவிட்டு இருந்தார்.
அல்-மஃமூனின் தலைமை ஆலோசகராக பத்லு இப்னு சஹல் என்பவர் இருந்தார்.
இவர்கள் இருவருக்கும் ஒருவருக்கு ஒருவரை பிடிக்காது.
ஆகவே மன்னர் ஹாரூன் அர்ரஷீத் அவர்களின் உத்தரவுப்படி,
பத்லுஇப்னு ராபிஆ அவர்கள் படைகளை மஃமூனிடம் ஒப்படைக்காமல்
அமீனை ஆதரித்தார்.
ஒருகட்டத்தில் அமீனை ஓரம் கட்டிவிட்டு தனது மகனை மன்னராக நியமிக்க பத்லுஇப்னு
ராபீஆ முயற்சித்தார்.
இந்த முயற்சி தோல்வியில் முடிந்தது.
அல் மாஃமூன் அவர்கள் படைகளை திரட்டி தனது சகோதரர் அமீனுக்கு எதிராக போர்தொடுத்தார்.
மஃமூனின் தளபதி தாஹிர் இப்னு ஹுசைன் அவர்களின் அதிரடித்தாக்குதலை
சமாளிக்க முடியாமல் தோல்வி அடைந்த அமீன் இறுதியில் கொல்லப்பட்டார்.
பதவிகளுக்காக சகோதரர் சண்டைகள்
எல்லா பேரரசுகளிலும் நடந்தது.
அரசு,பதவி, அரண்மனை,
அந்தப்புறம், அழகான பெண்கள்,ஆடம்பரம்
போன்ற சொகுசுகள் நியாயங்களை புறக்கணித்து சண்டையிட்டாவது ஆட்சியை கைப்பற்ற தூண்டியது.
இவற்றுக்கெல்லாம்
மேலாக ஆட்சிப்
பொறுப்பேற்றால்
அவர்களின் வாரிசுகள் ஆட்சியை தொடர முடியும் என்ற ஆசைகளும் மன்னர்களை தூண்டியது.
ஐந்து ஆண்டுகள் ஆட்சி புரிந்த அமீனின் ஆட்சியில் குறிப்பிடத்தக்க நிகழ்வுகள் ஏதுமில்லை.
மன்னராக அல்-மஃமூன் பதவி ஏற்றார்.
அல்- மஃமூன் பதவி ஏற்றபோது மெர்வ் நகரமே விழாக்கோலமாக இருந்தது.
பாரசீக பெண்ணின் மகனான அல் மஃமூன் அவர்கள் பாரசீகப்பகுதியான
மெர்வ் நகரை மிகவும் நேசித்தார்.
மெர்வ் நகரம் சிறப்பாக கட்டமைக்கப்பட்டு
இருந்தது.
ஒரு தலைநகரப் போல மெர்வ் நகரின் கட்டிடங்களும்,
சாலைகளும்,
நீருற்றுக்களும்
வடிவமைக்கப்பட்டு
இருந்தது.
மன்னர் அல் மஃமூன் பதவியேற்ற தினத்தில் மெர்வ் நகர மக்கள் அனைவருக்கும் உணவு பரிமாறப்பட்டது.
பாரசீகப்பெண்ணின் மகனான பிறந்த அல் மாஃமூன் அவர்களுக்கு பாரசீக தளபதிகளின் ஆதரவு
அதிகம் இருந்ததால்
படை மிக வலுவாக இருந்தது.
அல்-மஃமூன் சிறந்த ஆட்சியாளராக இருந்தாலும் இவர் முஃதஸிலா கொள்கையை ஆதரித்தார்.
இது மக்களிடையே அதிருப்தியையும், குழப்பங்களையும், ஏற்படுத்தியது.
வரலாறு படைக்க வரலாற்றை தொடர்ந்து வாசிப்போம்..!
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சுரண்டை காமராஜர் கலை கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட முகாம்; சீருடைகள் வழங்கல்
written by Abubakker Sithik
சுரண்டை காமராஜர் அரசு கலை கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட முகாமில் மாணவ மாணவியர்களுக்கு சீருடைகள் வழங்கல்..
சுரண்டை காமராஜர் அரசு கலை கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட முகாமில் மாணவ மாணவியர்களுக்கு சீருடைகள் வழங்கப்பட்டது. தென்காசி மாவட்டம் சுரண்டை காமராஜர் அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட அணி எண் 201 சார்பில் சுரண்டை ஆலடிப்பட்டி சமுதாய நலக்கூடத்தில் முகாம் நடைபெற்று வருகிறது. இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் சிறு சேமிப்பு குறித்து கருத்தரங்கம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் நகர் மன்ற உறுப்பினர் செல்வி, பேராசிரியர்கள் ஸ்டீபன் டேவிஸ், பிரான்சிஸ் ஆபிரகாம், சித்திரக் கனி, அண்ணாமலை, ஹரிஹரசுதன், அமிர்தராஜ், தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி சீனியர் மேலாளர் மகாராஜன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். தொடர்ந்து அதே கல்லூரியில் படித்த மாணவியும் முனைவர் பட்ட ஆராய்ச்சி படிப்பு மாணவியுமான அனுஷா கண்ணன் சிறப்புரையாற்றினார்.
தொடர்ந்து சுரண்டை காமராஜர் அறக்கட்டளை கௌரவ தலைவரும், தொழிலதிபருமான எஸ்.வி. கணேசன் சார்பில் சுரண்டை காமராஜர் அறக்கட்டளை நிர்வாகிகள் ஏ.கே.எஸ். ஜெயக்குமார், ஆர்.வி. ராமர், கே.டி. பாலன், ப. ரவிக்குமார் ஆகியோர் நாட்டு நலப் பணி திட்ட மாணவ மாணவியர்களுக்கு சீருடைகள் வழங்கினர். விழா ஏற்பாடுகளை நாட்டு நலப்பணி திட்ட அணி எண் 201 ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் கிருஷ்ணகுமார் செய்திருந்தார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தென்காசி தலைமை மருத்துவ மனையில் குடற்புழு நீக்கத்திற்கு மாத்திரைகள் வழங்கும் முகாம்..
written by Abubakker Sithik
தென்காசியில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் முகாம்
தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் தேசிய குடற்புழு நீக்க நாளை முன்னிட்டு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் முகாம் சனிக்கிழமை நடந்தது. இம்முகாமினை மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜெஸ்லின் தொடங்கி வைத்து குடல் புழுக்களின் தாக்கம் பற்றியும் அதன் பின்விளைவு பற்றியும் எடுத்துக் கூறி குடற்புழு நீக்க மாத்திரைகளை எடுத்துக் கொள்வதின் அவசியம் குறித்தும் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் மத்தியில் விளக்கி கூறினார். தென்காசி மருத்துவமனை குழந்தைகள் பிரிவின் தலைவர் மருத்துவர். கீதா குடல் புழுக்களின் பாதிப்பு மற்றும் அதனை நீக்கும் வழிமுறைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார். நிகழ்வில், 19 வயதிற்கு கீழ் உள்ள மாணவ மாணவிகள் ஆர்வமுடன் குடற்புழு நீக்க மாத்திரைகளை பெற்றுச் சென்றனர். தென்காசி மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள் பணியாளர்கள், பொதுமக்கள் மற்றும் மாணவா்களுடன் சேர்ந்து குடற்புழு நீக்க உறுதி மொழியை எடுத்துக் கொண்டனர். நிகழ்ச்சியில் உறைவிட மருத்துவர் செல்வபாலா, குழந்தைகள் நல மூத்த மருத்துவர் எஸ்.எஸ் ராஜேஷ்,மகேஷ், அன்ன பேபி, முஸம்மில் செவிலியர் மற்றும் பணியாளர்கள் அனைவரும் கலந்து சிறப்பித்தனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கூட்டுறவு பண்டக சாலையின் புதிய பல்பொருள் அங்காடி; தென்காசி கலெக்டர் திறந்து வைத்தார்..
written by Abubakker Sithik
தென்காசி மாவட்டம் மேலகரம் பேரூராட்சி பகுதியில் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையின் புதிய பல்பொருள் அங்காடியை (சூப்பர் மார்க்கெட்) மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே. கமல் கிஷோர் திறந்து வைத்தார்.
தென்காசி மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையின் புதிய பல்பொருள் அங்காடியை (சூப்பர் மார்க்கெட்) மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர், திறந்து வைத்து பார்வையிட்டு தென்காசி மாவட்ட கூட்டுறவு நிறுவனங்கள் தயாரிக்கும் தென்றல் தேங்காய் எண்ணெய், வசந்தம் பினாயில் ஆகியவற்றின் விற்பனையை தொடங்கி வைத்தார்.
பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தெரிவித்ததாவது, தென்காசி மாவட்டத்தில் கூட்டுறவுத் துறை மூலம் விவசாயிகள் பயன்பெறும் வகையில் பயிர்க்கடன், கால்நடை பராமரிப்புக் கடன், சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கடன், மாற்றுத்திறனாளி கடன், மகளிர் சுய உதவிக் கடன், நகைக்கடன் ஆகியவை வழங்கப்படுகின்றன. கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் 20 சதவீத தள்ளுபடி விலையில் மருந்துகள் விற்பனை செய்யும் கூட்டுறவு மருத்துவ கடை ஆலங்குளம், சங்கரன்கோவில் மற்றும் தென்காசி போன்ற இடங்களில் நடத்தப்படுகிறது.
சாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், பட்டா மாறுதல் போன்ற சேவைகளை வழங்கும் 80 பொது சேவை மையங்கள் மாவட்டம் முழுவதும் நடத்தப்படுகின்றன. கூட்டுறவு சங்கங்கள் மூலம் பல்பொருள் அங்காடிகள் திறக்கப்பட்டு தனியார் கடைகளை விட குறைந்த விலையில் அனைத்துப் பொருட்களும் தரமாக விற்பனை செய்யப்படுகின்றது. தென்காசி மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை மூலம் முதலமைச்சரின் காலை உணவு திட்டம், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை விடுதிகள், திருக்கோவில் அன்னதான திட்டம் மற்றும் அம்மா உணவகங்களுக்கு தென்காசி மாவட்டம் முழுவதும் மளிகை பொருட்கள் விநியோகம் செய்யப்படுகிறது.
மேலகரத்தில் உள்ள பாரதி நகரில் பொதிகை சூப்பர் மார்க்கெட் (பல்பொருள் அங்காடி) இப்பண்டக சாலையின் மூலம் திறக்கப்பட்டுள்ளது. இங்கு வீட்டு உபயோகத்திற்கு தேவையான அனைத்து பொருட்களும் குறைந்த விலையில் உயர்தரத்துடன் கிடைக்கின்றன. மேலும் சிறப்பினமாக கூட்டுறவுத் துறையின் தனித்துவமான தயாரிப்புகளான மசாலா, நயம் செக்கு எண்ணெய் வகைகள் மற்றும் கொல்லிமலை காப்பி தூள் விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து, எனவே, பொதுமக்கள் அனைவரும் இந்த கூட்டுறவு பல்பொருள் அங்காடியில் குறைந்த விலையில் வீட்டிற்குத் தேவையான உபயோகப் பொருட்களை வாங்கி பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தெரிவித்தார்.
மேலும் மேலகரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை பார்வையிட்டு 2 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ 5.80 லட்சம், 21 உறுப்பினர்களுக்கு ரூ. 13.57 லட்சம் பயிர் கடன்கள் மற்றும் 12 உறுப்பினர்களுக்கு ரூ. 5.04 லட்சம் கால்நடை பராமரிப்பு கடன்கள் என மொத்தம் 59 உறுப்பினர்களுக்கு ரூ 2441 லட்சம் அளவில் கடன்களை மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் நரசிம்மன், சரக துணைப்பதிவாளர் செல்வி. திவ்யா, கூட்டுறவு சார்பதிவாளர்கள் ரமேஷ்பாபு. ராஜ், கோபிநாத், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய செயலாட்சியர் மாரியப்பன், மேலகரம் பேரூராட்சி செயல் அலுவலர் அமானுல்லா, மேலகரம் பேரூராட்சி துணைத் தலைவர் ஜீவானந்தம் உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) ரா.ராமசுப்பிரமணியன், கூட்டுறவு சங்கங்களின் பணியாளர்கள் மாரியப்பன், மாணிக்கம்., நைனா முகமது, துரைராஜ், ரெங்கராஜ், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
விருவீடு காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் மற்றும் முதல் நிலை காவலருக்கு பொன்னாடை போர்த்தி பண முடிப்பு கொடுத்து கவுரவம்..
by Askar
written by Askar
விருவீடு காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் மற்றும் முதல் நிலை காவலருக்கு பொன்னாடை போர்த்தி பண முடிப்பு கொடுத்து கவுரவம்..
விருவீடு காவல் நிலையத்தில் சிறப்பு சார்பு ஆய்வாளராக பணியாற்றி வரும் ரபிக்ராஜா தான் பணியாற்றிய அனைத்து காவல் நிலையங்களிலும் சிறப்பாக பணியாற்றி மேலதிகாரிகள் மத்தியில் நன்மதிப்பு பெற்றவர்.
இதற்கு முன்னர் பணியாற்றிய பட்டிவீரன் பட்டி காவல்நிலையத்தில் நீதிமன்ற பணிகளை மிகவும் சிறப்பாக திறம்படச் செய்து வழக்குகளை உரிய முறையில் உரிய நேரத்தில் கையாண்டதற்காக நிலக்கோட்டை காவல் துணைக் கண்காணிப்பாளர் இடத்தில் நன்மதிப்பு பெற்றவர்.
தற்போது பணியாற்றி வரும் விருவீடு காவல்நிலைய எல்லையில் இவரும் முதல் நிலைகாவலர் காளிதாஸ் ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்பொழுது சேடப்பட்டி ஏடி காலனி அருகே சந்தேகத்திற்குரிய வகையில் நின்று கொண்டிருந்த ஆட்டோவை பரிசோதனை செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் பல்வேறு திருட்டு பொருட்கள் உடன் நான்கு நபர்களை உடனடியாக கைது செய்தனர்.
சிறப்பாகவும் வேகமாகவும் செயல்பட்ட சிறப்பு சார்பு ஆய்வாளர் ரபிக்ராஜா மற்றும் முதல் நிலை காவலர் காளிதாஸ் ஆகியோரை உற்சாகப்படுத்தும் விதமாக, விளாம்பட்டி காவல் ஆய்வாளர் சர்மிளா இருவருக்கும் பொன்னாடை போர்த்தி கவுரவித்து பணமுடிப்பையும் பரிசாக வழங்கினார்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சோழவந்தான் எம்விஎம் கலைவாணி மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் அறிவியல் கண்காட்சி ஏராளமான பெற்றோர்கள் பார்வையிட்டனர்..
by Askar
written by Askar
சோழவந்தான் எம்விஎம் கலைவாணி மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் அறிவியல் கண்காட்சி ஏராளமான பெற்றோர்கள் பார்வையிட்டனர்..
சோழவந்தான் எம் வி எம் கலைவாணி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது இதில் பெற்றோர்கள் உட்பட பல்வேறு பள்ளிகளில் இருந்து மாணவ மாணவிகள் இக்கண்காட்சியை கண்டு களித்தனர் இந்த கண்காட்சி நிகழ்ச்சியை எம் வி எம் குழுமத் தலைவர் மணி முத்தையா தலைமை தாங்கி துவக்கி வைத்தார் நிர்வாகி கவுன்சிலர் வள்ளிமயில் முன்னிலை வகித்தார் பள்ளியின் தாளாளர் டாக்டர் மருது பாண்டியன் அறிவியல் கண்காட்சியை குத்து விளக்கு ஏற்றி துவைக்கிவைத்தார் பள்ளி முதல்வர் செல்வம் வரவேற்றார் இந்த அறிவியல் கண்காட்சியை பள்ளி மாணவ மாணவிகள் பெற்றோர்கள் அருகில் உள்ள பள்ளியை சேர்ந்த மாணவ மாணவிகள் கண்டுகளித்தனர் இப்பள்ளி மாணவ மாணவிகள் சிறப்பாக அறிவியல் கண்காட்சியில் தங்களது படைப்புகளை செய்திருந்தனர் பள்ளி தாளாளர் டாக்டர் மருது பாண்டியன் சிறப்பாக செய்திருந்த மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார் பள்ளியின் அனைத்து துறை ஆசிரியை ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர் நிகழ்ச்சி முடிவில் உதவி தலைமை ஆசிரியை தீபா ராகினி நன்றி கூறினார்.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கொரோனா பேரிடரின்போது நிறுத்தப்பட்ட இரயில்களை மீண்டும் இயக்க ரயில்வே அமைச்சரிடம் ராமநாதபுரம் எம்பி மனு..
by Askar
written by Askar
கொரோனா பேரிடரின்போது நிறுத்தப்பட்ட இரயில்களை மீண்டும் இயக்க ரயில்வே அமைச்சரிடம் ராமநாதபுரம் எம்பி மனு..
இராமநாதபுரம், பிப்.10- ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம் இராமநாதபுரம் எம்பி நவாஸ்கனி சந்தித்து
கோரிக்கை மனு அளித்தார். இராமநாதபுரம் மாவட்டம்
தங்கச்சிமடம் ரயில் நிலையத்தை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வந்து ரயில்கள் நின்று செல்ல வேண்டும்.
இராமநாதபுரம், பரமக்குடி, மண்டபம், மற்றும் சூடியூர், சத்திரக்குடி, வாலாந்தரவை, மண்டபம் முகாம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் ரயில்கள் நின்று செல்ல வேண்டும்.
இராமேஸ்வரம் – சென்னை ரயில் பெட்டிகளை புதிய பெட்டிகளாக மாற்ற வேண்டும்.
கொரானோ பொது முடக்கத்திற்க்கு முன் இயக்கப்பட்ட அனைத்து ரயில்களையும் மீண்டும் இயக்க வேண்டும்.
இராமேஸ்வரம் வரை புதிய ரயில்களை இயக்க வேண்டும்
உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பான மனு அளித்தார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளை, வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி திறந்து வைத்தார்..
by Askar
written by Askar
அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளை, வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி திறந்து வைத்தார்..
திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட அவனியாபுரம் பகுதியில் இன்று புதிதாக கட்டி முடிக்கப்பட்ட 64 அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளை தமிழ்நாடு வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் திறந்து வைத்து பயனாளிகளுக்கு குடியிருப்பு ஆணைகள் வழங்கினார் இந்த நிகழ்ச்சியில் மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மதுரை கோட்டம் மூலமாக அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் மதுரை மாவட்டம் மாநகராட்சிக்குட்பட்ட அவனியாபுரம் திட்ட பகுதியில் 64 அடுக்குமாடி குடியிருப்புகள் (G+3) மேம்பாட்டு வசதியுடன் 732.21 லட்சம் செலவில் ஒன்றிய மற்றும் மாநில நிதி ஆதாரங்களுடன் கட்டப்பட்டுள்ளன.
ஒவ்வொரு குடியிருப்பும் 334 சதுர அடி கட்டுமான பரப்பில் பல்நோக்கு அறை படுக்கையறை,சமையலறை, குளியலறை மற்றும் கழிவறை வசதியுடன் கட்டப்பட்டுள்ளது.
ஒவ்வொரு குடியிருப்புக்கான மதிப்பீடு 11.44 லட்சம் அதில் பயனாளி பங்கு தொகை ஒரு லட்சம் ஆகும்
இத்திட்ட பகுதியில் கான்கிரீட் சாலை குடிநீர் வசதி, கழிவு நீர் அகற்றும் வசதி, மழைநீர் சேமிப்பு அமைப்பு மற்றும் நிழல் தரும் மரங்கள் போன்ற அடிப்படை மேம்பாட்டு வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன பயனாளிகளால் குடியிருப்பு நலச் சங்கம் அமைக்கப்பட்டு குடியிருப்புகளை நன்முறையில் பராமரிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இத்திட்ட பகுதியில் உள்ள 64 குடியிருப்புகளானது திட்டப்பகுதியில் ஏற்கனவே வசித்த பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அவர்களின் ஒப்புதலுடன் தேர்வு செய்யப்பட்டுள்ளது இதில் 59 பயனாளிகள் தங்களின் முழு பங்களிப்பு தொகையை செலுத்தியுள்ளனர். இத்திட்ட பகுதி மாண்புமிகு வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் அவர்களால் இன்று திறக்கப்பட்டது அதன் தொடர்ச்சியாக பயனாளி பங்களிப்பு தொகை செலுத்தி 59 பயனாளிகளுக்கு குடியிருப்பு ஆணை வழங்கப்பட்டுள்ளது.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தென்காசி நகராட்சி பகுதிகளில் வெறி நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை வேண்டும்; காங்கிரஸ் கவுன்சிலர் வலியுறுத்தல்..
written by Abubakker Sithik
தென்காசி நகராட்சி பகுதிகளில் வெறி நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்; காங்கிரஸ் கவுன்சிலர் வலியுறுத்தல்..
தென்காசி நகராட்சி பகுதிகளில் தொடர்ந்து பொதுமக்களை அச்சுறுத்தி வரும் வெறிநாய்களை கட்டுப்படுத்திட தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தி 20வது வார்டு காங்கிரஸ் கவுன்சிலரும், தென்காசி நகர காங்கிரஸ் துணைத் தலைவருமான M.A. ரஃபீக் நகராட்சி ஆணையாளரிடம் மனு அளித்தார். தென்காசி நகராட்சி பகுதிகளில் தொடர்ந்து அதிகரித்து வரும் வெறி நாய்க்கடியினால் ஏற்படும் பாதிப்பால் பெரியவர்கள், பெண்கள் குழந்தைகள் என அதிகமாக மக்கள் நாள்தோறும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு உடனடியாக விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் நாய்களைப் பிடிக்கவும், கருத்தடை செய்யவும் நடவடிக்கை எடுத்திட வேண்டும் என தென்காசி நகராட்சி ஆணையாளர் ரவி சந்திரனிடம் 20வது வார்டு காங்கிரஸ் கவுன்சிலர் M.A.ரஃபீக் பொதுமக்கள் சார்பில் கோரிக்கை மனு அளித்தார். மனுவை பெற்றுக் கொண்ட ஆணையாளர், பொது சுகாதார பிரிவு அலுவலர் மூலம் (விலங்குகள் கருத்தடை) animal birth control அமைப்பிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அங்கிருந்து மருத்துவர்கள் வரவழைத்து உரிய நடவடிக்கைகளுக்கு ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சோழவந்தானில் இலவச கண் சிகிச்சை முகாம்; ஏராளமானோர் பயனடைந்தனர்..
மதுரை மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் சங்கரா மருத்துவமனை மற்றும் சோழவந்தான் தேங்காய் கடை எஸ் வி எஸ் டி கௌதம ராஜா இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் சோழவந்தான் ஆர் சி பள்ளி அருகில் நடைபெற்றது. முகாமினை பேரூராட்சி துணைத் தலைவர் லதா கண்ணன் பேரூர் துணைச் செயலாளர் ஸ்டாலின் துவக்கி வைத்தனர் முகாமில் பணி நியமனக்குழு ஈஸ்வரி ஸ்டாலின் பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள் முத்து செல்வி சதீஷ் நிஷா கௌதம ராஜா திமுக நிர்வாகிகள் அவைத் தலைவர் தீர்த்தம் முட்டை கடை காளி சுரேஷ் மில்லர் மணிராஜ் சங்கரா கண் மருத்துவமனை மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் சோழவந்தான் பகுதிகளிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வருகை தந்து கண் பரிசோதனை செய்தனர்..
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரியில் ஆதியோகி ரத யாத்திரை!-சேலத்தில் ஈஷாவின் மஹாசிவராத்திரி விழா நேரலைக்கு ஏற்பாடு..
by Askar
written by Askar
தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரியில் ஆதியோகி ரத யாத்திரை!-சேலத்தில் ஈஷாவின் மஹாசிவராத்திரி விழா நேரலைக்கு ஏற்பாடு..
மஹாசிவராத்திரியை முன்னிட்டு கோவை ஈஷா யோக மையத்தில் இருந்து புறப்பட்ட ஆதியோகி ரதம் தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பிப் 11 ஆம் தேதி முதல் பிப்19 ஆம் தேதி வரை வலம் வர உள்ளது. மேலும், கோவை ஈஷா யோக மையத்தில் மார்ச் 8 ஆம் தேதி நடைபெற இருக்கும் மஹாசிவராத்திரி விழாவை சேலத்தில் நேரலையாக ஒளிபரப்பவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு சேலத்தில் இன்று (10-02-2024) நடைபெற்றது. இதில் தென்கைலாய பக்தி பேரவையின் தன்னார்வலர்கள் திரு. ஸ்ரீனிவாசன் மற்றும் திரு. பாலாஜி ஆகியோர் பங்கேற்று பேசியதாவது:
“கோவை ஈஷா யோக மையத்தில் மஹா சிவராத்திரி விழா 30 ஆவது ஆண்டாக மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட இருக்கிறது. இதனை ஒட்டி, தென் கயிலாய பக்தி பேரவை சார்பில், மஹாசிவராத்திரி விழாவிற்கு பக்தர்களுக்கு அழைப்பு விடுக்கும் விதமாக ஆண்டுதோறும் ஆதியோகி ரத யாத்திரை நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டிற்கான ரத யாத்திரை கோவையில் உள்ள ஆதியோகி முன்பு கடந்த ஜனவரி 5ஆம் தேதி தொடங்கியது. 4 ஆதியோகி ரதங்களை உள்ளடக்கிய இந்த யாத்திரையை பேரூர் ஆதீனம் தவத்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார் அவர்கள் தொடங்கி வைத்தார். அங்கிருந்து புறப்பட்ட ஒரு ரதம் பிப் 11 அன்று தர்மபுரி மாவட்டத்தை வந்தடைய இருக்கிறது. பின்னர் அதன் சுற்றுவட்டார பகுதிகளான பாலக்கோடு, காவேரிப்பட்டிணம் பர்கூர், கிருஷ்ணகிரி மற்றும் ஓசூர் ஆகிய இடங்களில் பிப் 19 ஆம் தேதி வரை வலம் வர இருக்கிறது. முன்னதாக, சேலம் மாவட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஜன 18 ஆம் தேதி முதல் ஜன 29 ஆம் தேதி வரை இந்த ரதம் வலம் வந்தது குறிப்பிடத்தக்கது.
ரதம் பயணிக்கின்ற ஊர்களில் இருக்கும் பெருமக்கள் இந்த யாத்திரையை வரவேற்று தொடங்கி வைக்கின்றனர். அதனை தொடர்ந்து ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் ஆதியோகி ரதத்திற்கு உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர். கோவைக்கு நேரில் வந்து தரிசிக்க முடியாத மக்கள் அவர்கள் இருக்கும் இடத்தின் அருகிலேயே ஆதியோகியை தரிசித்து அருள் பெறுவதற்கு இந்த ரத யாத்திரை சிறந்த வாய்ப்பாக உள்ளது.
இதோடு, சிவ யாத்திரை என்னும் பாத யாத்திரையையும் சிவாங்கா பக்தர்கள் மேற்கொண்டு வருகின்றனர். தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் இருந்து சிவன் திருவுருவம் தாங்கிய 7 தேர்களை இழுத்தபடி மொத்தம் 7 குழுக்களாக, வருகின்றனர். இந்த யாத்திரை பிப் 23 அன்று சேலத்தை வந்தடைகிறது.
மேலும் கோவை ஈஷா யோக மையத்தில் மஹாசிவாரத்திரி நடக்கும் அதே வேளையில், மற்ற ஊர் மக்களும் பயன்பெறும் வகையில் தமிழகத்தில் மொத்தம் 36 இடங்களில் மஹாசிவராத்திரி நேரலைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் சேலம், கருப்பூர் அரசு இன்ஜினியரிங் கல்லூரிக்கு எதிரே அமைந்துள்ள லிங்க பைரவி கோவிலில் வரும் மார்ச் 8 ஆம் தேதி மாலை 6 மணி முதல் மார்ச் 9ஆம் தேதி அதிகாலை 6 மணி வரையில் ஈஷா மஹாசிவராத்திரி விழா நேரலை செய்யப்பட உள்ளது. மேலும் அன்றைய நாள் இரவு முழுவதும் லிங்க பைரவி கோவில் தரிசனத்திற்காக திறந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு, இதில் பங்கேற்கும் அனைத்து மக்களுக்கும் மஹா அன்னதானமும் வழங்கப்பட இருக்கிறது.
இதை போலவே, தர்மபுரியில் பாரதி புரம், சேலம் மெயின் ரோட்டில் அமைந்துள்ள மதுரபாய் திருமண மண்டபத்திலும், ஓசூரில் ரெயில்வே ஸ்டேஷன் ரோடு, சப் ஜெயில் எதிரில் உள்ள மீரா மஹாலிலும் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திருமங்கலம் அருகே கோயில் உண்டியலில் ஊழல்! கேள்வி கேட்டால் கொலை செய்து விடுவோம் என மிரட்டல்! பரபரப்பு குற்றச்சாட்டு..
by syed abdulla
written by syed abdulla
திருமங்கலம் அருகே கோயில் உண்டியலில் ஊழல்! கேள்வி கேட்டால் கொலை செய்து விடுவோம் என மிரட்டல்! பரபரப்பு குற்றச்சாட்டு..
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே மேல கோட்டை பாரதிநகர் கிராமத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த செருவலிங்க அய்யனார் கோவில் நிதி பணத்தை ஊழல் செய்ததை, எதிர்த்து கேட்டதற்கு கொலை மிரட்டல் விடுத்த கோயில் நிர்வாகஸ்தர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி,மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம்,இக்கோயிலின் வடக்கம்பட்டி மற்றும் புளியம்பட்டி வகையறாவினரை சார்ந்த கர்ணன் என்பவர் அளித்த புகாரின் பேரில், திருமங்கலம் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் விசாரணை மேற்கொண்டு, கோவிலின் செயலாளர் செருவன், பொருளாளர் கணேசன், முன்னாள் பொருளாளர் வேலுச்சாமி, முன்னாள் செயலாளர் சுப்பையா உட்பட ஐந்து பேர் மீது வழக்குப் பதிவு செய்ய வலியுறுத்தியுள்ளனர்.
கடந்த ஆண்டு (2023) இக்கோவிலின் உண்டியலின் பூட்டை உடைத்து , அதிலிருந்த ரூபாய் ஒரு லட்சத்திற்கு மேலான பணத்தை நிர்வாகஸ்தர்கள் கொள்ளை அடித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் , திருமங்கலம் தாலுகா காவல் நிலையத்தில், இது தொடர்பாக ஏற்கனவே புகார் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இக்கோவிலின் கும்பாபிஷேகம் நடத்துவதற்காக, கோவில் நிர்வாகஸ்தர்கள் , கோவில் தலைவர் பெயரின்றி ரசீது தயாரித்து வசூல் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ராஜகோபுரம் கட்டுமான பணிகள் நடைபெறுவதற்காக தல கட்டு வரி என்ற பெயரிலும் என்ற நன்கொடை ரசீது என்ற பெயரிலும் இருவகையான ரசீது புத்தகங்களை தயார் செய்து வசூல் செய்து வருகின்றனர். இதனை எதிர்த்துக் கேட்ட இக்கோயிலின் வடக்கப்பட்டி, புளியம்பட்டி வசையறாவைச் சார்ந்த கர்ணன் என்பவரை கோவில் நிர்வாகஸ்தர்கள் கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக, கர்ணன் மதுரை காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார்.
செய்தியாளர் வி காளமேகம்
You must be logged in to post a comment.