சோழவந்தானில் இலவச கண் சிகிச்சை முகாம்; ஏராளமானோர் பயனடைந்தனர்..
மதுரை மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் சங்கரா மருத்துவமனை மற்றும் சோழவந்தான் தேங்காய் கடை எஸ் வி எஸ் டி கௌதம ராஜா இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் சோழவந்தான் ஆர் சி பள்ளி அருகில் நடைபெற்றது. முகாமினை பேரூராட்சி துணைத் தலைவர் லதா கண்ணன் பேரூர் துணைச் செயலாளர் ஸ்டாலின் துவக்கி வைத்தனர் முகாமில் பணி நியமனக்குழு ஈஸ்வரி ஸ்டாலின் பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள் முத்து செல்வி சதீஷ் நிஷா கௌதம ராஜா திமுக நிர்வாகிகள் அவைத் தலைவர் தீர்த்தம் முட்டை கடை காளி சுரேஷ் மில்லர் மணிராஜ் சங்கரா கண் மருத்துவமனை மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் சோழவந்தான் பகுதிகளிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வருகை தந்து கண் பரிசோதனை செய்தனர்..
செய்தியாளர் வி காளமேகம்
You must be logged in to post a comment.