திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த மேல்வில்வராயநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மக்களை தேடி இந்திய மருத்துவம் சார்பில் மூலிகை தாவர கன்றுகள் வழங்கும் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.இவ்விழாவில் மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் கஸ்தூரி ஆலோசனைப்படி. மேல்வில்வராயநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஹோமியோபதி மருத்துவர் கே. பார்த்திபன் தலைமையில் பொதுமக்களுக்கு மூலிகை தாவர கன்றுகள் வழங்கியும் கொரோனா தொற்றிலிருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்ள அனைத்து பொதுமக்களும் வெளியே செல்லும் போது முககவசம் அணிய வேண்டும் என்றும் அனைத்து பொது மக்களுக்கு முகக்கவசம் வழங்கினார் நோய் எதிர்ப்பு சக்தி உடைய ஹோமியோபதி மருந்து ஆர்சனிகம் ஆல்பம் பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார் மருத்துவ அலுவலர் பார்த்திபன், மேலும் இந்நிகழ்ச்சியில் மேல்வில்வராயநல்லூர் மருத்துவமனையில் மூலிகை மரக்கன்றுகளை நடும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது பின்னர் பொதுமக்களுக்கு ஹோமியோபதி மருத்துவத்தை பற்றி எடுத்துரைத்தார் மேலும் உடன் சுகாதார ஆய்வாளர் நடராஜன், சுகாதார பணியாளர் முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர் இந்நிகழ்ச்சி சமூக இடைவெளியுடன் முகக்கவசம் அணிந்து அனைவரும் பங்கேற்றனர்
Category:
செய்திகள்
வெறி நாய்களை விரைந்து அப்புறப்படுத்த வேண்டும்; கடையநல்லூர் நகராட்சிக்கு எஸ்டிபிஐ கட்சி கோரிக்கை..
by mohan
written by mohan
கடையநல்லூர் பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தும் வெறிநாய்களை விரைந்து அப்புறப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென எஸ்டிபிஐ கட்சி சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம் கடையநல்லூர் ரஹ்மானியபுரம் மேற்கு பகுதியில் வெறி நாய்களின் தொல்லை அதிகமாக உள்ளது. இந்நிலையில், 02.09.21 வியாழக்கிழமை மதியம் 3 மணியளவில் 7 வயது சிறுவனை வெறிநாய்களின் கூட்டம் திடீரென கடித்து காட்டு பகுதிக்கு இழுந்து சென்றுள்ளது. அங்கிருந்த மாடு மேய்க்கும் நபர் அந்த வெறி நாய்களின் கூட்டத்தை விரட்டியடித்து சிறுவனை காப்பாற்றினார். பின்பு கடையநல்லூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு மேல் சிகிச்சைக்கு தென்காசி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. வெறிநாய்களின் தொல்லையால் மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். எனவே பொது மக்கள் நலன் கருதி வெறி நாய்களை அப்புறபடுத்த வேண்டும் என நகராட்சி நிர்வாகத்தை SDPI கட்சி ரஹ்மானியபுரம் கிளை வலியுறுத்தியுள்ளது. மேலும் பலமுறை எஸ்டிபிஐ சார்பில் மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. இந்நிலை தொடரும் பட்சத்தில் விரைவில் வெறி நாய்களை அப்புறப்படுத்த கோரி எஸ்டிபிஐ கட்சி சார்பில் நகராட்சியை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என கடையநல்லூர் எஸ்டிபிஐ ரஹ்மானியபுரம் கிளை அறிவித்துள்ளது.
செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
அரசு மருத்துவமனையில் லிப்ட்டில் சிக்கிய நோயாளிகள். பத்திரமாக மீட்ட தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர்
by mohan
written by mohan
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பிரசவ வார்டில் நேற்று மாலை சுமார் 13 பேர் லிப்டில் பயணித்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக லிப்ட் பழுதாகி கதவை திறக்க முடியாமல் போனது. இதனால் பயந்துபோன நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்களும் உடனடியாக தல்லாகுளம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த தல்லாகுளம் தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக போராடி லிப்ட்டில் சிக்கிய 13 பேரை பத்திரமாக மீட்டனர் .இதனால் அரசு மருத்துவமனையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பரபரப்பு. லிப்ட் நின்றது காரணம் குறித்து தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆராய்ந்து வருகிறார்கள். எனினும் தீயணைப்பு துறையில் துரிதமான செயல்பாட்டினால் 13 பேர் எந்த விதமான பாதிப்பும் இல்லாமல் மீட்கப்பட்டனர்
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
குற்றச் செயல்கள் குறித்து தென்காசி காவல் ஆய்வாளர் இளைஞர்களிடேயே விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தென்காசி மாவட்டம், தென்காசி காவல் எல்லைக்குட்பட்ட வாய்க்கால் பாலம் பகுதியில் காவல் ஆய்வாளர் பாலமுருகன் அப்பகுதியிலுள்ள இளைஞர்களிடம் காவல்துறை உங்கள் நண்பன் எனவும், உங்கள் நண்பனுக்கு உதவும் விதமாக குற்றங்கள் நடைபெறாமல் தடுப்பதற்கு இளைஞர்கள் காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும், உங்கள் பகுதியில் யாரேனும் சட்டவிரோதமான செயல்களில் ஈடுபட்டாலோ அல்லது சந்தேகம் பாடும்படி யாரேனும் சுற்றி திரிந்தாலும் தயங்காமல் காவல் துறையினரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும், இளைஞர்களுக்கும் காவல்துறைக்கும் இடையே நல்லுணர்வை ஏற்படுத்தும் விதமாக விழிப்புணர்வை ஏற்படுத்தினார். மேலும் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் IPS உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் பொதுமக்களுக்கு கொரோனா குறித்து தென்காசி மாவட்ட காவல்துறையினர் தொடர் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.இதே போல் செங்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சார்பு ஆய்வாளர் கோபால் தலைமையிலான காவல்துறையினர் கொரோனா மற்றும் முகக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
செய்தியாளர்
அபுபக்கர்சித்தி
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திருநெல்வேலி அரசு அருகாட்சியகத்தில் நெல்லையின் வரலாற்றை விளக்கும் வகையில் “நெல்லை தின விழா” நிகழ்ச்சி நடைபெற்றது. ஆங்கிலேயர்களால் திருநெல்வேலி ஜில்லா 1791, செப்டம்பர் 1 ஆம் தேதி துவங்கப்பட்டது. இந்த தினத்தை முன்னிட்டு நெல்லை அரசு அருங்காட்சியகமும் சென்னை வாழ் நெல்லை மக்கள் நல சங்கமும் இணைந்து அரசு அருங்காட்சியகத்தின் திறந்த வெளி கலையரங்கத்தில் சிறப்பான வரலாற்று நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த விழாவிற்கு திருநெல்வேலி காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணன் ஐபிஎஸ் தலைமை தாங்கி உரையாற்றினார். நெல்லை அருங்காட்சியகத்தின் மாவட்ட காப்பாட்சியர் சிவ. சத்தியவள்ளி முன்னிலை வகித்து உரையாற்றினார். விழாவில் வரலாற்றில் நெல்லை என்ற தலைப்பில் பேச்சரங்கம் நடைபெற்றது. அதில் எழுத்தாளரும், மாவட்ட கலை அமைப்பின் துணைச் செயலாளருமான இரா. நாறும்பூநாதன் பங்கேற்று நெல்லைச் சீமையின் வரலாற்று நிகழ்வுகளைக் கண் முன் காட்டுவது போல் விளக்கி பேசினார்.
அதில் குளோரிந்தா சர்ச், ரேனியஸ் ஐயர், கோபாலசுவாமி வரலாறு, பாளையங்கோட்டையின் கோட்டை வரலாறு என ஊரின் ஒவ்வொரு மூலையைப் பற்றிய வரலாறுகளை சுவை பட எடுத்துரைத்தார். அடுத்ததாக பேசிய எழுத்தாளரும், வரலாற்று ஆய்வாளருமான முத்தாலாங்குறிச்சி காமராசு பொதிகை மலை அனுபவங்கள், பேக்லாண்டு, மடப்பைய போன்ற வட்டார வழக்கு சொற்களின் உண்மை வரலாறுகள், ஆதிச்சநல்லூர் அகழாய்வுகள் போன்ற பல்வேறு வரலாற்று நிகழ்வுகளைப் பதிவு செய்தார். நிகழ்ச்சியில் பங்கு பெற்ற சிறப்பு விருந்தினர்களான முனைவர். கட்டளை கைலாசம், எழுத்தாளர். எம். எம். தீன், அக்சஸ் ஆனந்த், ஹரி பிரதான், அஜித் சாய் ஆகியோருக்கு காவல் கண்காணிப்பாளர் நினைவுப் பரிசை வழங்கினார். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சென்னை வாழ் நெல்லை மக்கள் நலச் சங்கத்தின் தலைவர் வழக்கறிஞர் சைமன் ஜெயக்குமார் மற்றும் செயலாளர் பொறியாளர் சங்கர் மணி ஆகியோர் செய்திருந்தனர்.
செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கீழை நியூஸ் செய்தி தளத்தில் வெளியிட்ட சில மணி நேரத்திலேயே கம்பி வேலி அகற்றிய அதிரடி தாசில்தார்.
by mohan
written by mohan
மதுரை மாவட்டம் மேற்கு தாலுகாவுக்கு உட்பட்ட கீழ மாத்தூர் கிராமத்திலுள்ள புல்லூத்து பிரிவு அஷ்டலட்சுமி நகர் கீழமாத்தூர் கண்மாயில் இருந்து விவசாய நிலத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லும் வாய்க்காலை ஒரு சிலர் ஆக்கிரமித்து கம்பி வேலிகள் மற்றும் தகரம் கொண்டு அடைத்து வைத்திருந்தனர் இதுகுறித்து நமது கிழை நியூஸ் இணையதள செய்தி தளத்தில் நேற்று செய்தியாக வெளியிட்டு இருந்தோம் இதன் அடிப்படையில் அதிரடியாய் களமிறங்கிய மதுரை மேற்கு ஒன்றிய தாசில்தார் கிருஷ்ணன் மற்றும் கிராம நிர்வாக அதிகாரிகள் சம்பவ இடத்தை ஆய்வு செய்து ஆக்கிரமிப்பு பகுதிகளை முற்றிலுமாக அகற்றினர் மேலும் கண்மாயில் இருந்து விவசாய நிலத்திற்கு நீர் செல்லும் வகையில் வாய்க்காலை தூர் வார பொதுப்பணித் துறைக்கு பரிந்துரை கடிதம் அனுப்பி வைத்துள்ளார் அதிரடியாக களம் இறங்கிய மேற்கு ஒன்றிய அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் வெகுவாக பாராட்டினர் மேலும் செய்தி வெளியீடு ஒரே நாளில் தீர்வு காண கீழை நியூஸ் இணையதள செய்தி தளத்திற்கும் பொதுமக்கள் நன்றியைத் தெரிவித்தனர் செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ஒத்தக்கடையில் புதிதாக திறக்கப்பட்டுள்ள மன்னார் வளைகுடா மீன்கள் 1 ரூபாய்க்கு 1 கிலோ கடல் மீன்திறப்பு விழா சலுகை.
by mohan
written by mohan
மதுரை மாவட்டம் ஒத்தக்கடையில் மதுரை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் புதிதாக அமைந்துள்ள மன்னார் வளைகுடா மீன்கள் விற்பனையகம்.இங்கு மீன்கள் கடலில் இருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறதுபுதிதாக துவக்கப்பட்டுள்ள இந்த மீன்கள் விற்பனையகத்தில் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் உரிமையாளரும் வழக்கறிஞருமான திருமுருகன் புது யுக்தியை எடுத்துள்ளார்.அதாவது பகுதியாக இன்று ஒரு நாள் மட்டும் முதலில் வரும் 100 வாடிக்கையாளர்களுக்கு ஒரு கிலோ எந்த வகையான மீன்கள் வாங்கினாலும் ஒரு ரூபாய்க்கு விற்கப்படும் என்று அறிவித்துள்ளார்,அதன்படி காலையில் திறக்கப்பட்ட மீன் கடையில் சுற்றுப்புற பகுதியில் இருந்து பொதுமக்கள் ஏராளமானோர் ஆர்வமுடன் குவிந்தனர்,உரிமையாளரும் வழக்கறிஞருமான திருமுருகன் தலைமையில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டஇயக்குனர் கிட்டு குத்துவிளக்கேற்றி திறந்து வைத்து முதல் விற்பனையை துவக்கி வைத்தார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
விநாயகர் சதுர்த்தி விழா நடத்த தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை ஆர்ப்பாட்டம் .
by mohan
written by mohan
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் சொக்கர் கோவில் வளாகம் முன்பு நகர இந்து முன்னணி தலைவர் சஞ்சீவி தலைமையில் இந்து முன்னணி இயக்கத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் ஆண்டுதோறும் விமரிசையாக கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி விழாவை நடத்த தமிழக அரசு உத்தரவு வழங்க வேண்டும் .தமிழக அரசு தடை விதித்துள்ளதால் இந்துக்கள் மத்தியில் தமிழக அரசு மீது அவநம்பிக்கை ஏற்பட்டுள்ளது ஆகையால் விநாயகர் சதுர்த்தி திருவிழாவை நடத்த அனுமதி அளிக்க வேண்டும்என சொக்கர் மீனாட்சி அம்மனை கூட்டு வழிபட்டு செய்து தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும் எனவும் .விநாயகர் சதுர்த்தி திருவிழாவிற்கு அனுமதி வழங்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பி கூட்டு வழிபாட்டில் ஈடுபட்டு தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்..
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
போலி பத்திரம் குறித்த புது சட்டம் வரலாறு காணாத மாற்றம். -வணிகவரித்துறை பதிவுத்துறைஅமைச்சர் மூர்த்தி பேட்டி.
by mohan
written by mohan
சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த தமிழக வணிகவரி மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில்:போலி பத்திரம் பதிவு புதிய சட்டம் குறித்த கேள்விக்கு:போலி பத்திரம் தயாரிப்பவர்களுக்கு 3 ஆண்டு வரை சிறை தண்டனை. மற்றும் பத்திரப்பதிவை ரத்து செய்யும் அதிகாரத்தை பத்திரப்பதிவு துறையிலேயே செய்வதற்கு அமல் படுத்தியுள்ளோம்.மேலும் அதற்கு உடந்தையாக இருப்பவர்களுக்கு 7 ஆண்டு வரை சிறை தண்டனை கிடைக்கும். கடந்த ஆட்சியில்செய்யப்பட்ட போலி பத்திரங்கள், ஆள்மாறாட்டங்கள், அரசுக்கு சொந்தமான நிலங்கள், வக்பு வாரியம் என போலியாக பதிவு செய்துள்ளார்கள் என்பதால் புதிய சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.கடந்த வாரம் வரை புதிதாக கடன் பெறுபவர்கள் நேரில் சென்று பதிய வேண்டும் ஆனால் தற்போது ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம்.மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டம் எப்போது முடிக்கப்படும் என்ற கேள்விக்கு:தற்போதுள்ள அமைச்சர் அதை ஆய்வு செய்து விரைவாக முடிக்க சொல்லியுள்ளார்.பத்திரப் பதிவுத் துறையில் இது வரலாறு காணாத மாற்றம். இதுவரை புதிதாக சொத்துக்கள் வாங்கியவர்கள், சொத்துக்களை விட்டு வெளிநாட்டில் தங்கியிருப்பவர்களை ஏமாற்றும் தவறுகள் இனிமேல் நடைபெறாமல் இருப்பதற்கு புதிய சட்டத்தை தாக்கல் செய்துள்ளோம். இந்த புதிய சட்டத்தை பொருத்தவரை ஆளுநர், ஜனாதிபதி வரை சென்று இரண்டு மூன்று மாதங்களில் அமலுக்கு வரும் என்றார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கால்வாயில் ஆண் பிணம் கொலையா தற்கொலையா அல்லது விபத்தா போலீசார் தீவிர விசாரணை .
by mohan
written by mohan
நாகமலை புதுக்கோட்டை தேனி மெயின் ரோட்டில் உள்ள நிலையூர் கால்வாயில் ஆண் சடலம் கிடப்பதாக நாகமலை புதுக்கோட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சமயநல்லூர் டிஎஸ்பி பாலசுந்தரம், நாகமலை புதுக்கோட்டை இன்ஸ்பெக்டர் சிவகுமார் ஆகியோர் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் சடலமாக கிடந்தவர் விருதுநகர் மாவட்டம் சிவகாசி தாலுகாவை சேர்ந்த நாரணாபுரம் பொட்டல் பகுதியைச் சேர்ந்த சுப்பையா மகன் மகேஸ்வரன் (எ) விக்னேஷ் (38). பழைய பேப்பர்களை சேகரித்து விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார். மேலும் இவருக்கு இரு மனைவிகள் உள்ளதாகவும் மனைவிகள் இருவரையும பிரிந்து நாகமலை புதுக்கோட்டை அருகே கீழேமாத்தூரில் தனி வீடு எடுத்து தங்கி பழைய பேப்பர் சேகரித்து விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வந்தவர் கடந்த 29 ம் தேதி சிவகாசிக்கு சென்ற நிலையில் நேற்று காலை கழுத்து மற்றும் உடலில் பல இடங்களில் காயங்களுடன் மர்மமான முறையில்நிலையூர் கால்வாயில் சடலமாக கிடந்தார். சடலத்தை கைப்பற்றிய நாகமலை புதுக்கோட்டை போலீசார் பிரேத பரிசோதனைக்கு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மைக்ரோவேவ் இன்ஜினியரிங் துறையில் ஆராய்ச்சி செய்த, இந்தியாவின் முதல் பெண் அறிவியலாளர், ராஜேஸ்வரி சாட்டர்ஜி நினைவு தினம் இன்று (செப்டம்பர் 03,2010).
by mohan
written by mohan
ராஜேஸ்வரி சாட்டர்ஜி ஜனவரி 24, 1922ல் கர்நாடகாவில் பிறந்தார். மைசூரிலிருந்து வந்த முதல் பெண் பட்டதாரிகளில் ஒருவரான அவரது பாட்டி கமலாம தசப்பாவால் நிறுவப்பட்ட ஒரு “சிறப்பு ஆங்கிலப் பள்ளியில்” தனது முதன்மை கல்வியைப் பெற்றார். கல்வித் துறையில் (குறிப்பாக விதவைகள்) மிகவும் தீவிரமாக செயல்பட்டவர். பள்ளி இறுதிப் போட்டிகளுக்குப் பிறகு, வரலாற்றை எடுக்க ஆசைப்பட்டார். ஆனால் இறுதியில் இயற்பியல் மற்றும் கணிதத்தைத் தேர்ந்தெடுத்தார். அவர் பெங்களூரு மத்திய கல்லூரியில் பயின்றார். கணிதத்தில் பி.எஸ்சி (ஹான்ஸ்) மற்றும் எம்.எஸ்சி பட்டங்களைப் பெற்றார். இந்த இரண்டு தேர்வுகளிலும் மைசூர் பல்கலைக்கழகத்தில் முதல் இடத்தைப் பிடித்தார். அவர் மம்மாடி கிருஷ்ணராஜா வோடியார் விருதையும், எம்.டி. பி.எஸ்.சி மற்றும் எம்.எஸ்சி தேர்வுகளில் சிறப்பாக செயல்பாடுகளுக்கு முறையே நாராயண ஐயங்கார் பரிசு மற்றும் வால்டர்ஸ் நினைவு பரிசு பெற்றார்.
1943 ஆம் ஆண்டில், தனது எம்.எஸ்சிக்குப் பிறகு, மின் தொழில்நுட்பத் துறையில் தகவல் தொடர்புத் துறையில் ஆராய்ச்சி மாணவராக, பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தில் (ஐ.ஐ.எஸ்.சி) சேர்ந்தார். ராஜேஸ்வரி சாட்டர்ஜி சி.வி.ராமன் அவருக்கு கீழ் வேலை செய்ய விரும்பினார். ராஜேஸ்வரி இயற்பியலில் பட்டம் இல்லை என்று கூறி ராமன் மறுத்துவிட்டதாக சில வட்டாரங்கள் கூறுகின்றன. மற்றவர்கள் அவர் பெண் மாணவர்களைப் பெறுவதற்கான யோசனையை விரும்பவில்லை என்று கூறுகிறார்கள். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, பிரிட்டிஷாரிடமிருந்து இந்தியர்களுக்கு அதிகாரத்தை மாற்ற இந்தியாவில் ஒரு இடைக்கால அரசாங்கம் அமைக்கப்பட்டது. இது பிரகாசமான இளம் விஞ்ஞானிகளுக்கு வெளிநாடுகளில் கல்வி கற்க உதவித்தொகை வழங்கியது. எலக்ட்ரானிக்ஸ் துறையிலும் அதன் பயன்பாடுகளிலும் அத்தகைய ஒரு உதவித்தொகைக்கு அவர் விண்ணப்பித்தார். மேலும் 1946 ஆம் ஆண்டில், டெல்லி அரசாங்கத்தால் அவர் “பிரகாசமான மாணவராக” தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் உயர் படிப்பைத் தொடர வெளிநாடு செல்ல உதவித்தொகை வழங்கப்பட்டது.
ராஜேஸ்வரி சாட்டர்ஜி அமெரிக்காவில் ஆன் ஆர்பர், மிச்சிகன் பல்கலைக்கழகத்தில், மேலும் படிக்கத் தேர்வு செய்தார். 1950 களில் இந்தியப் பெண்கள் உயர் கல்வியைத் தொடர வெளிநாடு செல்வது மிகவும் கடினமாக இருந்தது. ஆனால் சாட்டர்ஜி அவ்வாறு செய்ய உறுதியாக இருந்தார். ஜூலை 1947ல், இந்தியாவின் சுதந்திரத்திற்கு ஒரு மாதத்திற்கு முன்னர், எஸ்.எஸ். மரைன் ஆடெர் என்ற மாற்றப்பட்ட துருப்பு கப்பலில் அமெரிக்காவிற்கு தனது பயணத்தைத் தொடங்கினார். 30 நாட்களுக்குப் பிறகு அங்கு சென்றார். அமெரிக்காவில், அவர் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் அனுமதிக்கப்பட்டு, மின் பொறியியல் துறையிலிருந்து முதுகலைப் பட்டம் பெற்றார். பின்னர் அவர் இந்திய அரசாங்கத்துடன் வைத்திருந்த ஒப்பந்தத்தின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, வாஷிங்டன் டி.சி.யில் உள்ள தேசிய பணியகங்களில் ரேடியோ அதிர்வெண் அளவீடுகள் பிரிவில் எட்டு மாத நடைமுறை பயிற்சி பெற்றார். பயிற்சி முடிந்ததும் அவர் மீண்டும் மிச்சிகன் பல்கலைக்கழகம் சென்றார். 1949ல் பார்பர் உதவித்தொகையைப் பெற்று தனது படிப்பை மீண்டும் தொடங்கினார். 1953ன் ஆரம்பத்தில் பேராசிரியர் வில்லியம் கோல்ட் டோவின் வழிகாட்டுதலின் கீழ் தனது ஆய்வுக் கட்டுரையை வெற்றிகரமாக முடித்து பி.எச்.டி பட்டத்தைப் பெற்றார்.
1953 ஆம் ஆண்டில், தனது பிஎச்டி பட்டம் பெற்ற பிறகு, அவர் இந்தியாவுக்குத் திரும்பி, ஐ.ஐ.எஸ்.சி மின் தொடர்பு பொறியியல் துறையில் ஆசிரிய உறுப்பினரானார். பின்னர் அவர் “மின்காந்தக் கோட்பாடு, எலக்ட்ரான் குழாய் சுற்றுகள், நுண்ணலை தொழில்நுட்பம் மற்றும் வானொலி பொறியியல்” ஆகியவற்றைக் கற்பித்ததார். அதே ஆண்டில், அதே கல்லூரியின் ஆசிரிய உறுப்பினராக இருந்த சிசிர் குமார் சாட்டர்ஜியை மணந்தார். திருமணத்திற்குப் பிறகு, ராஜேஸ்வரி சாட்டர்ஜியும் அவரது கணவரும் ஒரு மைக்ரோவேவ் ஆராய்ச்சி ஆய்வகத்தை உருவாக்கி, மைக்ரோவேவ் இன்ஜினியரிங் துறையில் ஆராய்ச்சியைத் தொடங்கினர். இது இந்தியாவில் முதல் ஆராய்ச்சி ஆய்வகம். அதே காலகட்டத்தில், மின் தொடர்பு பொறியியல் துறையின் தலைவர் பதவிக்கு சாட்டர்ஜி தேர்ந்தெடுக்கப்பட்டார். தனது வாழ்நாளில், அவர் 20 பிஎச்டி மாணவர்களுக்கு வழிகாட்டினார். 100 க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை எழுதினார், மேலும் ஏழு புத்தகங்களை எழுதினார்.
1982 ஆம் ஆண்டில் ஐ.ஐ.எஸ்.சி.யில் இருந்து ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, இந்திய மகளிர் ஆய்வுகளுக்கான சங்கம் உள்ளிட்ட சமூக திட்டங்களில் பணியாற்றினார். இந்தியாவின் முதல் பெண் அறிவியலாளர். இவர் நுண்ணலை மற்றும் உணர் பொறியியல் முன்னோடியாக திகழ்ந்தவர். இந்திய அறிவியல் கழகத்தின் முதல் பெண் பேராசிரியரான இவர், அக்கழகத்தின் மின் தொடர்பு பொறியியல் துறையின் தலைவராக ஓய்வு பெற்றார். மைக்ரோவேவ் இன்ஜினியரிங் துறையில் ஆராய்ச்சி செய்த ராஜேஸ்வரி சாட்டர்ஜி, செப்டம்பர் 03,2010ல் தனது 88வது அகவையில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
வேலூர் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி காட்பாடி பகுதியில் உள்ள ரேசன்கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.காட்பாடி காந்திநகரில் உள்ள தொன் போஸ்கோ மேல்நிலைப்பள்ளியில் சுகாதார பணிகள் மற்றும் தடுப்பூசி குறித்து ஆய்வு செய்தார்.பிரம்மபுரம் ரேசன்கடையில் ஆய்வு மேற்கொண்ட டிஆர்ஓ ராமமூர்த்தி புகார் பதிவேடுகளை கட்டாயம் வைக்கவேண்டும் என்று அறிவுறித்தினார்.ஆய்வின்போது காட்பாடி வட்ட வழங்கல் அலுவலர் சுகுமாறன் உடன் இருந்தார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தமிழக அரசு உத்தரவுப்படி, மதுரை மாவட்டத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டு, 9, 10, 11, 12, பள்ளி மாணவ, மாணவியர்கள் புதன்கிழமை ஆர்வத்துடன் பள்ளிக்கு வந்தனர்.பள்ளி வாசல்களில், கைகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, முகக் கவசத்துடன் அனுமதிக்கப்பட்டனர். மேலும், பள்ளி வகுப்பறைகளில் 20 பேர் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். முகக் கவசம் அணியாத மாணவ, மாணவிகளுக்கு பள்ளியின் சார்பில், முகக் கவசம் வழங்கப்பட்டது.முன்னதாக, மதுரை செனாய் நகர் இளங்கோ மேல்நிலைப் பள்ளியில், வகுப்பறைகளில், கிருமி நாசினி தெளிக்கும் பணியினை, மதுரை மாநகராட்சி ஆணையாளர் கார்த்திகேயன் பார்வையிட்டார். இதேபோன்று.. பள்ளிக்கு ஆர்வத்துடன் செல்லும் மாணவிகள்:மதுரை:தமிழக அரசு உத்தரவுப்படி, மதுரை மாவட்டத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டு, 9, 10, 11, 12, பள்ளி மாணவ, மாணவியர்கள் புதன்கிழமை ஆர்வத்துடன் பள்ளிக்கு வந்தனர்.பள்ளி வாசல்களில், கைகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, முகக் கவசத்துடன் அனுமதிக்கப்பட்டனர். மேலும், பள்ளி வகுப்பறைகளில் 20 பேர் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். முகக் கவசம் அணியாத மாணவ, மாணவிகளுக்கு பள்ளியின் சார்பில், முகக் கவசம் வழங்கப்பட்டது.முன்னதாக, மதுரை செனாய் நகர் இளங்கோ மேல்நிலைப் பள்ளியில், வகுப்பறைகளில், கிருமி நாசினி தெளிக்கும் பணியினை, மதுரை மாநகராட்சி ஆணையாளர்கார்த்திகேயன்பார்வையிட்டார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ஊராட்சிதலைவர்கள்மற்றும் அலுவலர்களுக்கான கொரான சிறப்பு தடுப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது.
by mohan
written by mohan
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகாவிற்குடபட்டஊராட்சி தலைவர்கள்.மற்றும் அலுவலர்களுக்கான சிறப்பு கொரான தடுப்பு முகாம் பயிற்சி நடைபெற்றது.திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் பிரேம் ராஜன் .வட்டார வளர்ச்சி அலுவலர் உதயகுமார்.திருப்பரங்குன்றம் வட்டார மருத்துவர் டாக்டர் சிவகுமார்.வட்டார மேற்பார்வையாளர் தங்கசாமி மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் ஆண்டனி ஜெயக்குமார் மற்றும் 38 ஊராட்சிமன்ற தலைவர்கள் அலுவலர்களூக்கானகொரான சிறப்பு பயிற்சி முகாமில் 60க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.இதன் மூலம் திருப்பரங்குன்றம் பகுதியிலுள்ள ஒவ்வொரு ஊராட்சியிலும் அனைவருக்கும் தடுப்பூசி போடும் திட்டத்தின் மூலம் செயல்படுத்த அறிவுறுத்தப்பட்டது.18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடும் திட்டத்தின் மூலம் கொரானாதொற்று இல்லாத ஊராட்சியாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது..
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை நகரில் இருந்து திருமங்கலம் நோக்கி செல்ல கூடிய அனைத்து பேருந்துகளும் திருநகர் ஒன்றாவது பேருந்து நிறுத்தத்தில் வேண்டும் என நீதிமன்ற உத்தரவு பெற்றபின் மாவட்ட ஆட்சியாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார் அதையும் மீறி சில அரசு பேருந்து ஓட்டுனர்கள் திரு நகர் 1-வது பேருந்து நிறுத்தத்தில் நிற்பது இல்லை இன்று காலை 9/20 அளவில் பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து திருமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்தTN58N1539 என்கின்ற அரசு பேருந்து திருமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்தது நகர் 1-வது பேருந்து நிறுத்தத்தில் பயணிகள் பேருந்தை நிறுத்த கையை காட்டியுள்ளார்கள் எனினும் ஓட்டுனர் அலட்சியமாக பேருந்தைப் வேகமாக இயற்றியதாக பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர் மேலும் பேருந்தில் அதிகப்படியாக 5லிருந்து 8 பேர் மட்டுமே பயணித்ததாக ஏன் பேருந்து நிறுத்த வில்லை அரசாங்கத்திற்கு அதிக அளவில் பணம் வருகிறதா இல்லை போக்குவரத்து கழகம் வசூல் ஆகக் கூடாது என்ற எண்ணத்தில் பேருந்து ஓட்டுனர் இயக்குகிறாரா என சந்தேகம் எழுகிறது எனவே சம்பந்தப்பட்ட ஓட்டுநர் மீது போக்குவரத்து கழகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அனைத்து போக்குவரத்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் ஒன்றாவது பேருந்து நிலையத்தில் மட்டுமல்லாது அனைத்து பேருந்து நிறுத்தத்திலும் பேருந்தை நிறுத்தி செல்ல வேண்டும் எனவும் பள்ளி செல்லும் மாணவ மாணவிகள் மிகவும் சிரமப்பட இருப்பதால் இதனை கருத்தில் கொண்டு போக்குவரத்து நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பயணிகளின் கோரிக்கையாக உள்ளது நடவடிக்கை எடுக்குமா போக்குவரத்து நிர்வாகம்..
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை கீரைத்துறை காமராஜ புரத்தைச் சேர்ந்தவர் முத்து இவரது 7 வயது மகள் (அனிதா)பெயர் மாற்றப்பட்டுளாளது
..அதே பகுதியில் உனள்ள பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.இந்த நிலையில் சிறுமியின் வீட்டின் அருகே வசித்து வந்த உக்கிரபாண்டி வயது 42 என்பவர் கடந்த 26-ஆம் தேதி சிறுமியை அவரது வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.இதனால் வலியால் அவதிப்பட்டு வந்த சிறுமியை, பெற்றோர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்து வந்தனர்.தொடந்து இது குறித்து மாவட்ட குழந்தைகள் நல குழு உறுப்பினர் சாந்தி மற்றும் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் வீரையா ஆகியோர் திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கீரைத்துறை, காமராஜபுரத்தைச் சேர்ந்த உக்கிரபாண்டியைபோக்ஸோ சட்டத்தில் கைதுசெய்தனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பெங்களூரிலிருந்து மதுரைக்கு கடத்திவரப்பட்ட 292 உயர்ரக மதுபான பாட்டில்கள் பறிமுதல்.
by mohan
written by mohan
மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை பகுதிக்கு பெங்களூரிலிருந்து TN-58 BA-5305 என்ற கன்டெய்னர் லாரியில் மதுபான பாட்டில்கள் கடத்தி வருவதாக நாகமலை புதுக்கோட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது., தகவலின் அடிப்படையில் கண்டைநேர் லாரியானது திண்டுக்கல்-திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த போது துவரிமான் விளக்கு அருகே சம்பந்தப்பட்ட சரக்கு லாரி போலீசார் வழிமறித்து சோதனை செய்தனர்.சோதனை செய்ததன் அடிப்படையில் கன்டெய்னர் லாரியில் 292 உயர் ரக மதுபான பாட்டில்கள் மறைத்து வைத்து கடத்தி வந்தது உறுதியானது., மேலும் கண்டெய்னர் லாரியை ஓட்டி வந்தவர்கள் கரடிக்கல் பகுதியைச் சேர்ந்த பாண்டி என்பவரது மகன் சுரேஷ் (29), பல்கலை நகரைச் சேர்ந்த ராஜா மகன் ராஜேந்திரன் (48) என்பது தெரியவந்தது.இவர்கள் கப்பலூர் தொழிற்பேட்டையில் உற்பத்தி செய்யும் பொருள்களை பெங்களூர்விற்கு கொண்டு சேர்க்கும் பணியில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து பெங்களூருவில் இருந்து வரும்பொழுது அவ்வப்போது மதுபான பாட்டில்களை வாங்கி வந்து கப்பலூர் பகுதிகளில் பிளாக்கில் விற்று வந்தது விசாரணையில் ஒப்புக்கொண்டனர்.இதனை வாடிக்கையாக வைத்து ஓட்டுநர்கள் இருவரும் தற்போது பெங்களூருவிலிருந்து மதுபான பாட்டில்கள் வாங்கி வருவதாக போலீஸாருக்கு வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் ஓட்டுநர்கள் இருவரும் பிடிபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ஊராட்சிகளுக்கு வழங்குவதற்க்காக மாவட்ட நிர்வாகத்தால் வழங்கப்பட்ட மரக்கன்றுகள் வீணாக்கப்படுவதாக புகார் .
by mohan
written by mohan
திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 38 கிராம ஊராட்சிகளுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் 10 ஆயிரம் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. இதில் நாவல், அசோக மரம், கடம்ப மரம் உள்ளிட்ட மரக்கன்றுகள் வழஙகப்பட்டது. கிராம ஊராட்சிகளில் உள்ள சாலையோரங்களில் இந்த மரக்கன்றுகளை நட்டு மகாத்மா தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் மூலம் தண்ணீர் ஊற்றி பராமரிக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்ட நிலையில் இந்த மரக்கன்றுகளை முறையாக ஊராட்சிகளுக்கு பிரித்து வழங்காமல் கடந்த ஒரு வாரமாக திருநகரில் உள்ள யூனியன் அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்த மரக்கன்றுகள் தண்ணீர் இல்லாமல் காய்ந்து குப்பை போல் கிடக்கிறது. மேலும் சில மரக்கன்றுகளின் பைகள் கிழிக்கப்பட்டு அதில் இருந்த மண் ஆணையர் அறை முன்பு கொட்டப்பட்டுள்ளது. ஊரட்சிகளுக்கு வழங்கப்பட்ட மரக்கன்றுகளை முறையாக அனைத்து ஊராட்சிகளுக்கும் பிரித்து வழஙகி அதை நட்டு பராமரிக்க வேண்டும் எனவும். மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை மாவட்டம் திருமங்கலம் வட்டார வேளாண்மை உழவர் மையத்தில் விவசாயிகளுக்கான சிறுதானிய சாகுபடி குறித்த விஞ்ஞானிகள் விரிவாக்க பணியாளர்கள் விவசாயிகள் இணைப்பினை வலுப்படுத்தும் வகையில் முகாம் நடைபெற்றது. இம்முகாமில் தலைமை ஏற்று சொர்ண பாரதி ஒருங்கிணைப்பாளர் வட்டார தொழில்நுட்பக் குழு வேளாண்மை உதவி இயக்குனர் மற்றும் முனைவர்உஷாராணி முனைவர் கிருஷ்ணகுமார் மற்றும் சிவானந்தன் முதன்மை நிர்வாக அலுவலர் குறும்பன் ஹேமலதா அலெக்ஸ் பிரிதிவிராஜன் மகாலட்சுமி அக்ரி ஆகியோர் சிறுதானியம் வளர்ப்பு பராமரிப்பு மற்றும் உடல் ஆரோக்கியத்தின் மருத்துவகுண ம் குறித்து திருமங்கலம் தொகுதிக்கு உட்பட்ட விவசாயிகளுக்கு பாரம்பரிய நெல் மற்றும் சிறுதானிய சாகுபடி குறைதீர் முகாம் நடைபெற்றது. இதில் ஆர்வத்துடன் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர். இம்முகாமில் விவசாயிகளின் பார்வைக்காக மாட்டுச் சானத்தால் செய்த பொம்மைகள் உருவப்படங்கள் அதிசய பொருளாக காட்சிக்கு வைக்கப்பட்டது. மேலும் நெல் பயிர்கள் அரிதான பழங்கால பாரம்பரிய சிறுதானியங்களை காட்சிப் பொருளாக வைத்து தானியங்கள் வளர்ப்பு முறைகள் குறித்து அறிவுரைகள் கூறி வளர்ப்பு விதங்கள் பற்றி தெளிவுபடுத்தி குறிப்பாக பூங்கார் அரிசி, சுகப்பிரசவம் ஆகும் குணம், கருப்பு கவுனி அரிசி புற்றுநோய் குறித்த மருத்துவ குணம் கொண்டது, காட்டுயானம் அரிசி, கருத்தக்கார் அரிசி, காலாநமக் அரிசி, மூங்கில் அரிசி அறுபதாம் குறுவை அரிசி, மேலும் போன்ற பழங்கால தானியங்கள் பற்றி முகாம் நடைபெற்றது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
நெற்கட்டும் செவலில் விடுதலை போராட்ட வீரர் பூலித்தேவன் 306-வது பிறந்த தினவிழா..
by mohan
written by mohan
நெற்கட்டும் செவலில் விடுதலை போராட்ட வீரர் மாவீரன் பூலித்தேவன் 306-வது பிறந்த நாளையொட்டி அவரது திருவுருவச் சிலைக்கு தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ச.கோபால சுந்தர ராஜ், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தென்காசி மாவட்டம்,சிவகிரி வட்டம் நெற்கட்டும் செவலில் 01.09.2021 புதன் கிழமை விடுதலை போராட்ட வீரர் பூலித்தேவன் 306-வது பிறந்தநாள் செய்தி மக்கள் தொடர்புத் துறை மூலம் அரசு விழாவாக கொண்டாடப்படுவதையொட்டி, நெற்கட்டும் செவலில் விடுதலைப் போராட்ட வீரர் பூலித்தேவன் திருவுருவச் சிலைக்கு, தமிழக அரசின் சார்பில் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கோபால சுந்தர ராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். சுதந்திர போராட்ட வீரர் பூலித்தேவன் கி.பி 1715-ம் ஆண்டு ஆவணித் திங்கள் 16-ம் நாள் சித்திரபுத்திர தேவர், சிவஞான நாச்சியார் இருவருக்கும் மகனாகப் பிறந்தார். மாவீரன் பூலித்தேவன் அஞ்சா நெஞ்சராகவும், நிகரற்ற போர் வன்மை படைத்தவராகவும், திகழ்ந்து வந்தார். வீரமும் வலிமையும் மட்டுமின்றி அவர் நேர்மையும், பண்பும் நிறைந்தவர்.மேலும்,
தன்மானமும், சுதந்திர வேட்கையும் கொண்டு திகழ்ந்தார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ் எம். குமார், சட்டமன்றஉறுப்பினர்கள் எஸ்.எஸ்.பழனிநாடார் (தென்காசி), ஈ.ராஜா (சங்கரன்கோவில்), மரு.சதன் திருமலைக்குமார் (வாசுதேவநல்லூர்) ஆகியோர் இந்த விழாவில் கலந்து கொண்டு மாவீரன் பூலித்தேவன் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.மேலும் சுதந்திர போராட்ட வீரர் மாமன்னர் பூலித்தேவன்நினைவு மண்டபத்தினை பார்வையிட்டு, பார்வையாளர் பதிவேட்டில் கையெழுத்திட்டனர். இவ்விழாவில் சங்கரன்கோவில் கோட்டாட்சியர் ஹஸ்ரத் பேகம், சிவகிரி வட்டாட்சியர் ஆனந்த், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா.இளவரசி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.