வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கொதிகலன் தீ மூட்டும் நிகழ்ச்சியில் நிர்வாகக்குழுத் தலைவர் ஆனந்தன். நிர்வாக இயக்குநர் (MD) சங்கர் மாவட்ட மாநகர செயலாளர் SRK அப்பு துணைத் தலைவர் அப்துல்லாCE0 முனிசாமி, ஒன்றிய செயலாளர் சுபாஷ் உள்ளிட்ட பலர் சர்க்கரை ஆலைகொதிகலன் தீ மூட்டும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்
Category:
மாவட்ட செய்திகள்
மதுரை.டிச.12. மதுரை சித்திரக்கார தெருவில் வாலிபரின் உடல் பிணமாக மீட்கப்பட்டது சாவுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.மதுரை சித்ரா கார தெருவில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவரின் பிணம் கண்டுபிடிக்கப்பட்டது .இதுகுறித்து சுகாதார ஆய்வாளர் திருப்பதி கொடுத்த புகாரின் பேரில் விளக்குத்தூண் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த வாலிபரின் பிரேதத்தை கைப்பற்றி சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை அண்ணாநகரை சேர்ந்தவர் ஆன்ட்ரு ஆரோக்கிய ஆனந்த் 36.இவருக்கு 2008 திருமணம் நடந்தது .மன அழுத்த நோயால்இவர் அவதிப்பட்டு வந்தார்.அதற்கான சிகிச்சையும் பெற்று வந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்தபோது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து அண்ணாநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை பெத்தானியாபுரம் பகுதியை சேர்ந்தவர் வேலாயுதம்,இவர் அதே பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார்,இந்த நிலையில் இவருக்கும் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த அஞ்சனா தேவிக்கும் திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் ஒரு ஆண் குழந்தை உள்ளது,இந்த நிலையில் அவ்வப்போது கணவர் மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது,இன்று நள்ளிரவில் வீட்டில் அனைவரும் தூங்கிக்கொண்டிருந்த போது பணி முடித்து வீட்டிற்கு வந்த கணவர் அசந்து உறங்கி கொண்டு இருந்த மனைவி அஞ்சனாதேவியின் தலையில் வீட்டிலிருந்த கிரைண்டர் கல்லை தூக்கி மகன் கண் முன்னாலே மனைவி தலையில் போட்டு கொடூரமாக கொலை செய்துள்ளார்,மனைவி அஞ்சனாதேவி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்,தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கரிமேடு காவல்துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர், கணவர் வேலாயுதத்தை கைது செய்து காவல் துறையினர் அவரிடம் விசாரணை நடத்திவருகிறார்கள், கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக கணவன் மனைவி தூங்கும்பொழுது கிரைண்டர் கல்லை போட்டு கொடூரமாக கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை மாவட்டம் சோழவந்தான் பிரசித்தி பெற்ற அருள்மிகு பிரளய நாதர் உடனுறை பிரளய நாயகி அம்மன் ஆலயத்தில் 2020 ஆம் ஆண்டில் நிருதி சனி மகா பிரதோஷ விழா நடைபெற்றது. நந்தி பகவானுக்கும், சிவபெருமானுக்கும் ரவிச்சந்திர பட்டர் பரசுராம சிவாச்சாரியார் உள்ளிட்டோர் பால் ,தயிர், வெண்ணெய், நெய் உட்பட வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்தனர்தொடர்ந்து அம்மன் உடன் உரையுடன் வாகனத்தில் கோவிலுக்குள் கிரிவலம் வந்தனர். பக்தர்கள் நமச்சிவாயம் நமச்சிவாயம் என்று முழங்கினர். தொடர்ந்து தீபாராதனை காட்டப்பட்டு பிரசாதம் அன்னதானம் வழங்கப்பட்டது பக்தர்கள் முக கவசம் அணிந்து பங்கேற்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை தொழிலதிபர் எம் .வி.எம் மணி முத்தையா, கலைவாணி பள்ளி நிர்வாகி வள்ளிமயில், கலைவாணி பள்ளி தாளாளர் எம். மருதுபாண்டியன், உள்ளிட்டோர் செய்திருந்தனர் திருக்கோவில் நிர்வாக அதிகாரி இளஞ்செழியன், ஆலய பணியாளர்கள் பூபதி ,கவிதா, வசந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சோழவந்தான் காவல் ஆய்வாளர் வசந்தி தலைமையில் போலீசார் பாதுகாப்பில் இருந்தனர். இதேபோல திருவேடகம் ஏடகநாதர் சமேத ஏலவார்குழலி அம்மன் கோவிலிலும் சனி மகா பிரதோஷம் நடைபெற்றது. பேட்டை அருணாச்சலேஸ்வரர் கோயில், தென்கரை மூலநாத சுவாமி கோவில், மன்னாடிமங்கலம் அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் உள்ளிட்ட பல்வேறு சிவாலயங்களில் சனி மஹா பிரதோஷம் நடைபெற்றது.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
டிசம்பர் 13 மற்றும் 14 ஆம் தேதிகளில் நிகழும் அதிசயம் – எரிகற்கள் மழையாய் பொழியும்.
by mohan
written by mohan
உலகம் முழுவதிலும் வருகின்ற டிசம்பர் 13 மற்றும் 14 ஆம் தேதிகளில் எரிகற்கள் மழையாய் பொழியும் என வானிலை நிபுணர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.உலகின் ஒவ்வொரு வருடமும் பல்வேறு அதிசயங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அவ்வாறு நடக்கும் அதிசயங்களை விஞ்ஞானிகள் முன்கூட்டியே மக்களுக்கு அறிவித்து வருகிறார்கள். எந்த நாளில் எப்படிப்பட்ட அதிசயம் நிகழும் என்பது முன்கூட்டியே பொதுமக்களுக்கு தெரியவருகிறது. அதனால் அந்த அதிசயம் ஏற்படும் நாளில் மக்கள் அதனை தவறவிடாமல் கண்டு களிக்கிறார்கள். அதன்படி வால்நட்சத்திரங்கள் விட்டுச்செல்லும் தூசி மண்டலத்தின் வழியாக செல்வதால் டிசம்பர் 13 மற்றும் 17ம் தேதிகளில் எரிகற்கள் மழையாய் பொழியும் என வானிலை நிபுணர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.அதிகபட்சமாக ஒரு மணி நேரத்தில் 150 எரி நட்சத்திரங்கள் விழும் என்றும், உலகம் முழுவதும் இந்த காட்சி தெரியும் எனவும் தெரிவித்துள்ளனர். ஆனால் ஒளி மாசு நிறைந்த நகர்புறங்களில் இந்த காட்சியை ஓரளவு தான் காண முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.Source By: Seithisolai
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தமிழகத்தில் வரப்போகும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பல்வேறு கட்சிகள் பல யுத்திகளை பின்பற்றி வருகின்றனர், இதன் தொடர்ச்சியாக கீழக்கரையில் திமுக கட்சியின் அரசியல் மீட்பு திட்டமான தமிழகம் மீட்போம் எனும் திட்டத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் நடத்தி வருகிறார்.இந்நிலையில் இராமநாதபுரம் மாவட்ட திமுகவினரோடு காணொளிகாட்சி மூலம் உரை நிகழ்த்தினார்.
இந்நிகழ்ச்சி கீழக்கரை உசைனியா திருமண மஹாலில் இன்று (12/12/2020) நடைபெற்றது. இதில் காணொலி காட்சி மூலமாக உரையாற்றிய மு க ஸ்டாலின் இராமநாதபுரம் மாவட்டத்திற்கு கலைஞர் முதல்வராக இருந்தபோது கொண்டு வந்த திட்டங்களை பற்றி மீண்டும் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுகொண்டு வரப் போகிற திட்டங்களைப் பற்றியும் பேசினார்.
மேலும் இந்நிகழ்ச்சி கீழக்கரை நகர் செயலாளர் பஷீர் அகமது தலைமையிலும், வழக்கறிஞர் ஹமீது சுல்தான் முன்னிலையிலும் நடைபெற்றது. இதில் நகர் அவைத்தலைவர் மணிகண்டன், துணைச்செயலாளர் ஜமால் பாரூக், கென்னடி, நகர் மாணவரணி செயலாளர் இப்திகார் ஹசன், திமுக பிரமுகர் சதக் இலியாஸ், கெஜி, முன்னாள் நகர் மன்ற துணைத்தலைவர் ஹாஜா முகைதீன், மாவட்ட பிரதிநிதி மரைக்கா,மக்கள் டீம் காதர்,முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் சாகுல் ஹமீது, 500 பிளாட் பகுருதீன், மரகபா சித்திக், தகவல் நுட்பபிரிவு அமைப்பாளர் முகம்மது ஹாஜா சுஐபு,பயாஸ், நைம் உட்பட ஏராளமான நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
நாட்டின் பல்வேறு பகுதிகளில்பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா தலைவர்கள் மற்றும் அலுவலகங்களில் RSS -ன் தூண்டுதலின் பெயரில் திட்டமிட்டு அமலாக்கத் துறை மூலம் நடத்தப்பட்ட சோதனையினை கண்டித்துபாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில்11 – 12-2020 மாலை 4-00 மணியளவில் வெள்ளிக்கிழமை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.NPR ,NRCயை புறக்கணிக்க பாப்புலர் ஃப்ரண்ட் அழைப்பு கொடுத்ததும்,RSSன் செயல் திட்டத்திற்குதொடர்ச்சியாக பாப்புலர் ஃப்ரண்ட் குரல் கொடுப்பதன் காரணமாக பாப்புலர் ஃப்ரண்ட் இன்று குறி வைக்கப்பட்டுள்ளது.பாப்புலர் ஃப்ரண்ட் மீது திட்டமிட்டு பழி சுமத்தும் RSS, பிஜேபியை இன்னும் வீரியம் கொண்டு மக்கள் சக்தியோடு பாப்புலர் ஃப்ரண்ட் எதிர்கொள்ளும் என்பதை இந்த ஆர்ப்பாட்டத்தின் மூலம் அறியத்தருகிறோம்.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பாப்புலர் ஃப்ரண்ட் கிருஷ்ணகிரி மாவட்ட தலைவர் F.#முஹம்மத்_கலில் தலைமை தாங்கினார். பாப்புலர் ஃப்ரண்ட் மாவட்ட செயலாளர் ஏஜாஸ்,B. அப்துல் கலீம்,G. முஹம்மது பாரூக் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள்SDPI கட்சியின் மாவட்ட பொதுசெயலாளர் ஷபியுல்லா, மாவட்ட பொருளாளர் சௌத் அஹமத், மாவட்ட துணைத் தலைவர் ஷாநவாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பாப்புலர் ஃப்ரண்ட் மாநில பேச்சாளர் A.சலாமத், விடுதலை சிறுத்தை கட்சியின் ஓசூர் தொகுதி செயலாளர் ராமச்சந்திரன், SDPI கட்சி மாவட்ட தலைவர் H.அஸ்கர் அலி, தமுமுகவின் மாவட்ட துணைத்தலைவர் A.ஜாகிர் ஆலம், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் அலெக்சாண்டர், தமிழ் தேசிய குடியரசு இயக்க தோழர் ராமமூர்த்தி,IUML மாவட்ட பொருப்பாளர் Y.இலியாஸ்,ராஸிக் தவ்ஹீத் ஜமாஅத்,ஆகியோர் கண்டன உரையாற்றினர் இறுதியாக பாப்புலர் ஃப்ரண்ட் மாவட்ட செயற்குழு உறுப்பினர் A.சையது அமீன் நன்றி உரையாற்றினார்.இந்த ஆர்ப்பாட்டத்தில்,பாப்புலர் ஃப்ரண்ட் இயக்க சகோதரர்கள்,
SDPI, வி.சி.க ,த.மு.மு.க,முஸ்லீம் லீக், தமிழ் தேசிய குடியரசு இயக்கம் உள்ளிட்ட கட்சி மற்றும் இயக்க நிர்வாகிகள் ,ஜமாத்தார்கள் உட்படமேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு கண்டன கோஷம் எழுப்பினர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தாடி வைத்தவன் எல்லாம் பாரதி ஆகிவிட முடியாது பாரதியாரை புகழ்ந்த பிரதமர் மோடியை விமர்ச்சித்து சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் பேட்டி
by mohan
written by mohan
மதுரை விமான நிலையத்திற்கு சென்னை செல்வதற்காக வருகை தந்த சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் செய்தியாளரை சந்தித்து பேசும்போது ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்தால் திமுகவிற்கு பாதிப்பு ஏற்படும் என எச்.ராஜா பேசியது குறித்த கேள்விக்கு ரஜினிகாந்த் என்னுடைய நண்பர் அரசியல்வாதியாக அவர் என்ன முடிவெடுக்கிறார் என்று யாருக்கும் தெரியாது. அரசியல் கட்சி ஆரம்பிப்பது என்பது பற்றி சொல்லியிருக்கிறார் கட்சி ஆரம்பித்தால் அந்த கட்சியின் வடிவம், உறுப்பினர்கள், நிர்வாகிகள் என்பது பற்றி நிலைப்பாடு இல்லாத கட்சியை பற்றி விமர்சனம் செய்ய முடியாது. நீட் தேர்வு பற்றிய அந்த கட்சி நிலைப்பாடு, விவசாயிகள் போராட்டம் விவசாய மசோதாவிற்கு ஆதரிக்கிறார்களா.? தமிழக மக்களின் பிரச்னைகளுக்கு ஆதரவு தெரிவிக்காத கட்சியின் நிலைப்பாட்டை அக்கட்சியை பற்றி கூற முடியாது பிறக்கின்ற குழந்தை நின்று அது என்ன பேசுது என்று தெரிந்த பின்பு தான் பேச முடியும். என்னை பொருத்தவரை நிலைப்பாட்டுடன் திமுக, காங்கிரஸ் கூட்டணிதான் 2021 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறும். இந்த போட்டி என்பது திமுக, அதிமுகவிற்கு மட்டும்தான் மற்றவர்கள் எல்லாம் ஒரு ஸ்பாய்லர் ஆக தான் இருக்கலாமே தவிர வெற்றிபெற வாய்ப்பில்லை.
திமுக, காங்கிரட்ஸ், மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் கொள்கை இல்லாத கட்சி என்று அமைச்சர் செல்லூர் ராஜு பேசியது குறித்த கேள்விக்கு அந்தந்த கட்சி என்ன கொள்கை என்று அந்தக் கட்சியின் செயலாளர்கள் சொல்வார்கள். எங்களுடைய கட்சியின் கொள்கை பற்றி தெளிவாக விளக்க நான் தயாராக உள்ளேன். அமைச்சர் செல்லூர் ராஜு சொல்லும் இடத்திற்கு வர தயாராக இருக்கிறேன். தொலைக்காட்சியில் காண்பித்தால் விவாதம் நடக்கும்.2-ஜி ஊழல் குறித்து ஆ.ராசா மீது அதிமுகவினர் தொடர்ந்து பேசிவருவது குறித்த கேள்விக்கு
2-ஜி என்பது பொய்யான பூதம், பூதத்தை கிளப்பினார்கள் அந்த பூதம் புதைக்கப்பட்டது மீண்டும் அந்த பூதத்தை கிளப்புகிறார்கள் அந்த பூதம் இல்லை அது ஒரு மாயை 2-ஜி வழக்கை ஒரு பொய் வழக்கு அந்த பொய்வழக்கில் ராஜா, கனிமொழி ஆகியோர் வெற்றி பெற்றுவிட்டார்கள் அது புதைக்கப்பட்டு முடிக்கப்பட்ட விஷயம். அதிமுகவினர் ஆ ராசா விடம் விவாதம் மேற்கொண்டால் மண்ணைகவ்வுவார்கள்._ பாரத் பந்த் முற்றிலும் தோல்வி என பாஜக தலைவர் எல்.முருகன் குறித்த கேள்விக்கு_அவருக்கு வெற்றி என்றால் வேலி யாத்திரை என்று அவர் கண்ணுக்குத் தெரியும், பாரத் பந்த் அவருக்கு தோல்வி என தெரிகிறது.
வாரணாசிக்கு – பாரதிக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என மோடி பேசியது குறித்த கேள்விக்கு மோடி பேசியது என்ன என்று எனக்கு தெரியவில்லை. தாடி வைத்தவன் எல்லாம் பாரதி ஆகிவிட முடியாது.தேர்தலில் காங்கிரசுக்கு குறைந்த இடங்கள் ஒதுக்கப்பட உள்ளதாக.? செய்திகள் கூறியது குறித்த கேள்விக்கு கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் அங்கம் வகிக்கின்றன என்பது கூட்டணி ஆலோசனைகளுக்கு பின்னர் தீர்மானிக்கப்படும். சார்வே எடுத்திருக்கிறோம் எந்தஎந்த சீட்டுகளில் நாங்கள் நின்றாலும் அதில் வெற்றி பெறுவோம் எனக்கு உறுதியாக இருக்கிறோம். தேர்தலில் வெற்றி பெற்று தமிழகத்தில் ஆட்சி மாற்றம் இருக்கும் திமுக தலைமையில் ஆட்சி மாற்றம் அமையும்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
வன்னியர்களுக்கு அரசு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 20 சதவீத இட ஒதுக்கீடு போராட்டத்தின் இரண்டாம் கட்ட போராட்டம் குறித்து சிறப்பு ஆலோசனைக் கூட்டம் ராமநாதபுரம் மாவட்டம் பாட்டாளி மக்கள் கட்சியின் (கிழக்கு) சிறப்பு ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் ஹக்கீம் தலைமையில் மாநில துணை பொதுச்செயலாளர் தளபதி ராஜ்குமார், மாநில துணைத்தலைவர் சகுபர் சாதிக் மற்றும் மாவட்ட தலைவர் ஜீவா முன்னிலையில் நடைபெற்றது. கடலாடி ஒன்றிய செயலாளர் இருளாண்டி வரவேற்றார். இக்கூட்டத்தில் பாமக., தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய அமைச்சர் எ.கே.மூர்த்தி, இணை பொதுச் செயலாளர் இசக்கி அண்ணாச்சி, புதுச்சேரி மாநில பொறுப்பாளர் தன்ராஜ் ஆகியோர் காணொளி வாயிலாக ஆலோசனை வழங்கினார்.
மாநில இளைஞர் சங்க துணை செயலாளர் தவ அஜீத் சிறப்புரை ஆற்றினார். இக்கூட்டத்தில், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர் சமூகத்திற்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி பாமக., வினர் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 370 கிராம நிர்வாக அலுவலர்களிடம் மனு கொடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.ஒவ்வொரு ஒன்றிய செயலாளரும், ஒவ்வொரு நகர் செயலாளரும் தங்கள் பகுதிக்குட்பட்ட கிராம நிர்வாக அலுவலர்களை வரும் 14ஆம் தேதி பொதுமக்களின் ஆதரவு கையெழுத்துடன் கூடிய படிவம் மற்றும் துண்டு பிரசுரங்களை வழங்க வேண்டும் என ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. க்கூட்டத்தில் ராமநாதபுரம் ஒன்றிய செயலாளர் இஸ்மாயில், ஒன்றியத் தலைவர் சரவணன், திருப்புல்லாணி ஒன்றிய செயலாளர் அற்புதராஜ், தலைவர் சரவணன், மண்டபம் ஒன்றிய செயலாளர் ராவுத்தர் கனி, மண்டபம் ஒன்றிய தலைவர் சரவணமுத்து, மாவட்ட இளைஞர் சங்க செயலாளர் ராஜா, மீனவர் அணி செயலாளர் முருகானந்தம், உழவர் பேரியக்கத் தலைவர் ராஜேந்திரன், கீழக்கரை நகர் செயலாளர் லோகநாதன், கீழக்கரை நகர் தலைவர் லத்தீப், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் ஜெமீல் கான், மாவட்ட அமைப்பு செயலாளர் சதாம் உசேன் மற்றும் அழகேசன் ஆகியோர் கலந்து கொண்டனர். ராமநாதபுரம் நகர் செயலாளர் வெங்கடேசன் நன்றி கூறினார்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பஸ் நிலையத்தில் உள்ள ஐயப்ப ஆலையத்தில் ரஜினிகாந்த் பிறந்த நாள் முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்பு பிரசாத விநியோகம் அன்னதானம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் படையப்பா என்கின்ற எல்.ராஜேந்திரன் தலைமை தாங்கினார். செயலாளர் பிரகாஷ், 1_வது மண்டல செயலாளர் ஜி.மோகன் இணை செயலாளர் பி.ரமேஷ், ராஜா, கேசவன், செல்வம், ஜெகன், சேகர், நந்தகுமார், சீனு, கண்ணன்.ராதாகிருஷ்ணன், பார்த்தீபன், வக்கீல் உதயகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை இயக்கத்தின் சார்பில் மகாகவி பாரதியாரின் 138 வது பிறந்த நாள் விழா
by mohan
written by mohan
மகாகவி பாரதியார் அவர்களின் பிறந்த நாள் விழா சகாயம் வழிகாட்டுதலில் இயங்கும் மக்கள் பாதை இயக்கத்தின் சார்பில் பெருவயல் ஊராட்சி கலையனூர் கிராமத்தின் திண்ணை பள்ளியில் கொண்டாடப்பட்டது.மக்கள் பாதை திண்ணை திட்டத்தின் கீழ் பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவியப் போட்டி நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பள்ளி மாணவ மாணவிகள் கலந்துகொண்டு கவிஞர் பாரதியாரின் திருவுருவப்படத்தை ஓவியமாக வரைந்தனர்.மேலும் மகாகவி பாரதியார் முகமூடி வேடணிந்து பள்ளி மாணவர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.இராமநாதபுரம் மாவட்ட மகளிரணி துணை ஒருங்கிணைப்பாளர் பார்கவி, திண்ணை பள்ளி ஆசிரியைகள் பிரீத்தி, மற்றும் சிவராஜ், முகேஷ் குமார் ஆகியோர் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை போடி அகல ரயில்பாதை திட்டப்பணிகள் நிறைவடைந்த சூழலில் உசிலம்பட்டி முதல் ஆண்டிபட்டி வரை இரண்டாம்கட்டமாக சோதனை ஓட்டம் இன்று நடைபெற்றது.மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் விளையும் ஏலக்காய், கிராம்பு போன்ற நறுமண பொருட்களை பிற மாவட்டங்கள், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காகமதுரை போடி ரயில் சேவை ஆங்கிலேயர் காலத்தில் துவங்கப்பட்டது.மீட்டர் கேஜ் பாதையாக இருந்த இந்த ரயில்பாதையை அகல ரயில்பாதையாக மாற்றும் திட்டத்திற்காக 2008ஆம் ஆண்டு 165 கோடி நிதி ஒதுக்கீடு செய்து 2010 ஆம் ஆண்டு பணிகள் துவங்கப்பட்டது.20க்கும் மேற்பட்ட பெரிய மேம்பாலங்கள், 100க்கும் அதிகமான சிறிய பாலங்கள் அமைக்கும் பணிகள் பத்து ஆண்டுகளாக நடைபெற்று முடிவடைந்து கடந்த ஜனவரி மாதம் முதற்கட்ட சோதனை ஓட்டம் உசிலம்பட்டி வரை நடைபெற்றது.
குறிப்பாக உசிலம்பட்டி அருகே ஆண்டிபட்டி கணவாய் பகுதியில் இரு மலைகளை குடைந்து அகல ரயில்பாதை அமைக்கும் பணி உள்ளிட்ட முக்கிய பணிகள் நிறைவடைந்த சூழலில் இன்று உசிலம்பட்டியிலிருந்து ஆண்டிபட்டி வரை இரண்டாம் கட்டமாக இரயில் இன்சின் சோதனை ஓட்டம் 50 கிலோ மீட்டர் வேகத்தில் இன்சின் உசிலம்பட்டி முதல் ஆண்டிபட்டி வரை சென்றது.21 கிலோ மீட்டர் சென்றுவிட்டு மீண்டும் 90 கிலோமீட்டர் வேகத்தில் உசிலம்பட்டி திரும்பி அகல ரயில்பாதையின் உறுதி தன்மை கண்டறியப்பட்டது.இரு சோதனை ஓட்டங்கள் வெற்றிகரமாக இயக்கப்பட்ட சூழலில் விரைவில் போடி வரை மீதமுள்ள பணிகள் நிறைவுற்று இந்த மதுரை போடி ரயில் சேவை துவங்கும் என எதிர்பாக்கப்படுகிறது.
உசிலை சிந்தனியா
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
நூற்றுக்கணக்கான ஏக்கர் வெங்காய பயிர்கள் தொடர்மழையால் அழுகி சேதம், இன்சூரன்ஸ் கூட இல்லை என்பதால் கண்ணீரில் தத்தளிக்கும் உசிலம்பட்டி விவசாயிகள்.
by mohan
written by mohan
விலை உயர்வை கட்டுப்படுத்த தோட்டக்கலைத்துறை உந்துதலின் அடிப்படையில் பயிரிடபட்ட நூற்றுக்கணக்கான ஏக்கர் வெங்காய பயிர்கள் சமீபத்தில் பெய்த தொடர்மழையால் அழுகி சேதம், இன்சூரன்ஸ் கூட இல்லை என்பதால் கண்ணீரில் தத்தளிக்கும் உசிலம்பட்டி விவசாயிகள்.வெங்காயம் என்றாலே வருடத்திற்கு ஒரு முறை விலை உயர்வால் உலகம் முழுவதும் பிரபலமான ஒரு உணவு பொருளாக உள்ளது. இந்த விலை உயர்வை கட்டுப்படுத்த உற்பத்தியை பெருக்கும் நோக்கில் விவசாயிகளுக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டு மானிய அடிப்படையில் வெங்காயம் வழங்கப்பட்டு பயிரிடப்பட்ட சூழலில்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி, பேரையூர் தாலுகாவிற்குட்பட்ட நூற்றுக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் இந்த திட்டத்தின் மூலம் வெங்காயம் பயிரிட்டுள்ளனர்.குறைந்த நாள் சாகுபடி என்றாலும் தற்போது பருவமடைந்து காய்கள் வைக்கும் தருவாயில் சமீபத்தில் பெய்த தொடர்மழையால் விலை நிலங்களில் மழைநீர் தேங்கி வெங்காய பயிர்கள் அனைத்தும் அழுகி சேதமாகியுள்ளது.குறிப்பாக உசிலம்பட்டி அருகே உள்ள பெருங்காமநல்லூர், நல்லுத்தேவன்பட்டி, பேரையூர், சந்தையூர், பாறைப்பட்டி உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் பயிரிடப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான ஏக்கர் வெங்காய பயிர்கள் இந்த மழை பாதிப்பில் சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.மேலும் தற்போது ஒரு ஏக்கருக்கு 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை செலவு செய்துள்ள நிலையில் அரசு இந்த மழை பாதிப்புகளை ஆய்வு செய்து இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் மதுரை மாவட்டத்தில் வெங்காயத்திற்கு இன்சூரன்ஸ் நிறுவனத்தின் மூலமாக இன்சூரன்ஸ் கூட வழங்கப்படுவதில்லை என்றும் பல்வேறு விவசாய பயிர்களை விட விரைவில் அழுகி விவசாயிகளை நஷ்டமடைய வைக்கும் வெங்காயத்திற்கு இன்சூரன்ஸ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது, மற்ற மாவட்டங்களில் இன்சூரன்ஸ் இருந்தாலும் மதுரை மாவட்டத்தை புறக்கணிப்பது ஏன் என்றும் தமிழக அரசு உரிய ஆய்வு செய்து மழையால் பாதிப்படைந்த வெங்காய பயிர்களுக்கு நிவாரணம் மற்றும் இன்சூரன்ஸ் கிடைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும்.அவ்வாறு செய்தால் மட்டுமே வேளாண்த்துறை மூலம் வழங்கப்படும் அறிவுரைகளுக்கு ஏற்ப பயிரிட்டு லாபம் பார்க்க விவசாயிகள் முன்வருவார்கள் என்றும், அடுத்தடுத்து விவசாயிகள் சோர்வடையாமல் தொடர்ந்து வெங்காயத்தை பயிரிட்ட வழி வகை ஏற்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உசிலை சிந்தனியா
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
உசிலம்பட்டி பேருந்து நிலையம் எதிரே உள்ள பேருந்து நிறுத்ததில் மின்விளக்குகள் இல்லாததால் இரவில் பொதுமக்கள் கடும் அவதி.
by mohan
written by mohan
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேருந்து நிலையத்தின் எதிரே மதுரை, ராமேஸ்வரம் கன்னியாகுமரி,ராஜபாளையம், திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பயணிகள் இந்த பேருந்து நிறுத்திலிருந்து பேருந்திற்காக காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கொரோனா காலம் என்பதால் இரவு நேரங்களில் குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே அரசு பேருந்துகள் வருவதால் வெகுநேரமாக பேருந்து நிலையத்தில் பயணிகள் காத்திருக்க வேண்டியநிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பேருந்து நிலைய பயணியர் நிழற்குடையில் மின்விளக்குகள் இல்லாததால் பயணிகள், பெண்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.
இரவு நேரம் என்பதால் அந்த பகுதியில் பேருந்துக்கு காத்திருக்கும் பெண்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். மேலும் உசிலம்பட்டி பகுதியில் தொடர் திருட்டு சம்பவம் அதிகரித்து வரும் நிலையில் இரவு நேரம் என்பதால் பெண்கள் அந்த பகுதிகளில் நடமாட முடியவில்லை என வேதனை தெரிவிக்கின்றனர். மேலும் மின்விளக்குகள் இல்லாததால் சமூக விரோத செயல்களும் அதிகம் நடைபெறுதாக குற்றசாட்டு எழுந்துள்ளது. உடனே சம்பந்தப்பட்ட நகராட்சி நிர்வாகம் பயணியர் நிழற்குடை கட்டடிடத்தில் மின்விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உசிலை சிந்தனியா
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
உசிலம்பட்டியில் ரஜினிகாந்த் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு திருமுருகன் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்து உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கம் தேவர் சிலை அருகே பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
நகர செயலாளர் கார்த்திகை சாமி ஒன்றிய செயலாளர் முருகேசன் நகர நிர்வாகி காமராஜ் வட்டாரத் தலைவர் லட்சுமண ராஜன் வட்டார செயலாளர் ஆர்.ஆனந்து இளமாறன் பாஸ்கரன் மற்றும் ரஜினிகாந்த் ரசிகர்கள் கலந்துகொண்டு இனிப்புகள் வழங்கி முருகன் கோவில் முன்பாக பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
உசிலை சிந்தனியா
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சிவகங்கை மாவட்ட ஊராட்சித் தலைவர் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட பொன்மணி பாஸ்கர் வெற்றிபெற்றார்
by mohan
written by mohan
சிவகங்கை மாவட்ட ஊராட்சி தலைவர் தேர்தல் நான்கு முறை ஒத்திவைக்கப்பட்டு நேற்று காலை 11 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் மதுசுதன் ரெட்டி முன்னிலையில் நடைபெற்றது. இதில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் 16 பேர் கலந்து கொண்டு தங்களது வாக்குகளை செலுத்தினர். இதில் அதிமுக சார்பில் பொன்மணி பாஸ்கரன் திமுக சார்பில் நாகனி செந்தில்குமார் போட்டியிட்டனர். பின்னர் வாக்கு எண்ணிக்கையில் அதிமுக-திமுக இருவரும் தலா 8 வாக்குகள் பெற்று சம நிலை பெற்றதால் குலுக்கல் முறையில் தேர்வு நடைபெற்றது. அதிமுக சார்பில் போட்டியிட பொன்மணி பாஸ்கர் வெற்றி பெற்றார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பொன்மணி பாஸ்கர், தமிழக அரசு உதவியுடன் சிவகங்கை மாவட்டத்தை, தமிழகத்தில் மிகச்சிறந்த மாவட்டமாக வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல நடவடிக்கை எடுப்பேன் என தெரிவித்தார்.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராஜபாளையத்தில் கடந்த 7ஆம் தேதி அதிமுக திமுக மோதல். தடியடி சம்பவத்தில் ஈடுபட்ட 4 திமுகவினர் 15 நாள் நீதிமன்ற காவல்
by mohan
written by mohan
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் கடந்த 7ஆம் தேதி பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கொடும்பாவி எரிப்பு போராட்டத்தில் திமுக வினர் ஈடுபட்டனார்இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக வினர் ஸ்டாலின் உருவ பொம்மையை எரித்தனர் இதனால் அதிமுக திமுகவினரிடையே மோதல் ஏற்பட்டதுஇதில் செருப்பு கற்கல் வீசியதால் போலீசார் தடியடி நடத்தி ட்டத்தை கலைத்தனர் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அதிமுகவை சேர்ந்த 84 பேர் மீதும் திமுக 113 பேர் மீதும் வழக்கு பதிவு செய்தனர்இன்நிலையில் பொது இடங்களில் கூட்டம் கூடியது நோய் பரப்பும் நிலையில் பொதுமக்களுக்கு இடையூறாக செயல்பட்டதாக
திமுகவைச் சேர்ந்த சுந்தர், மணி, சக்திவேல் ரவி ஆகியோர்மீது வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்இந்த நான்கு பேரையும் 15 நாள் ரீமான்ட் செய்து விருதுநகர் சிறையில் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி வெற்றிமணி உத்தரவிட்டதை அடுத்து விருதுநகர் சிறையில் அடைத்தனர்.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு திருப்பரங்குன்றம் கோவிலில் 234 தேங்காய் உடைத்து, இனிப்பு வழங்கி கொண்டாடிய ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள்
by mohan
written by mohan
ரஜினியின் 70 வது பிறந்தநாளை முன்னிட்டும் வருகின்ற 2021 சட்டமன்ற தேர்தலில் ரஜினி ரசிகர் மன்றம் வெற்றிபெற வேண்டி மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் முருகன் கோவில் முன்பு ரசிகர்கள் தேங்காய் உடைத்தும், 1000 லட்டுகள் பொதுமக்களுக்கு வழங்கியும், 234 எலுமிச்சை பழங்கள் மற்றும் 234 வடைகளை மாலையாக கோர்த்து சாமிக்கு சாத்தியும் கோவிலில் வழிபட்டனர்.ரஜினியின் 70-வது பிறந்தநாள் கொண்டாடபடவுள்ளது, இந்நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசத்தை வரவேற்கும் விதமாகவும், அவரது 70-வது பிறந்தநாளை கொண்டாடும் வகையில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ரஜினி ரசிகர்கள் கொண்டாட உள்ளனர். அதன் ஒரு பகுதியாக மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட துணைச் செயலாளர் அழகர்சாமி தலைமையில் 30க்கும் மேற்பட்டோர் திருப்பரங்குன்றம் கோவில் வருகின்ற 2021 சட்டமன்ற தேர்தலில் ரஜினி ரசிகர் மன்றம் வெற்றிபெற வேண்டி 234 தொகுதிகளுக்கும் ஒரு தேங்காய் வீதம் மொத்தம் 234 தேங்காய்கள் திருப்பரங்குன்றம் கோவில் வாசல் முன்பு ரசிகர்கள் உடைத்தும், 1000 லட்டுகளை பொதுமக்களுக்கு வழங்கியும், 234 எலுமிச்சை பழங்கள் மற்றும் 234 வடைகளை மாலையாக கோர்த்து சாமிக்கு சாத்தியும் கோவிலில் வழிபட்டனர். இந்நிகழ்ச்சியில் ஏராளமான ரசிகர்கள் கலந்து கொண்டார்கள்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கொல்லங்கொண்டான் விலக்கு பகுதியில் நெல் மூடைகள் ஏற்றி வந்த லாரி நிலை தடுமாறி மின்கம்பத்தில் மோதி விபத்து.
by mohan
written by mohan
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே கொல்லங்கொண்டான் விலக்கு பகுதியில் தர்மபுரியில் இருந்து தளவாய்புரம் பகுதிக்கு ரைஸ் மில்லுக்கு நெல் மூடைகள் ஏற்றி வந்த லாரி நிலைதடுமாறி மின்கம்பத்தில் மோதி சாலை ஒரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இருப்பினும் அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. தகவலறிந்து வந்த சேத்தூர் ஊரக காவல்துறையினர் விபத்து குறித்து தர்மபுரி பகுதியை சேர்ந்த லாரி ஓட்டுநர் அருள் என்பவரிடம் விசாரனை நடத்தி வருகின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம்
You must be logged in to post a comment.