மனைவி தலையில் கல்லை போட்டு கொடூரமாக கொலை செய்த கணவர்:

மதுரை பெத்தானியாபுரம் பகுதியை சேர்ந்தவர் வேலாயுதம்,இவர் அதே பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார்,இந்த நிலையில் இவருக்கும் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த அஞ்சனா தேவிக்கும் திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் ஒரு ஆண் குழந்தை உள்ளது,இந்த நிலையில் அவ்வப்போது கணவர் மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது,இன்று நள்ளிரவில் வீட்டில் அனைவரும் தூங்கிக்கொண்டிருந்த போது பணி முடித்து வீட்டிற்கு வந்த கணவர் அசந்து உறங்கி கொண்டு இருந்த மனைவி அஞ்சனாதேவியின் தலையில் வீட்டிலிருந்த கிரைண்டர் கல்லை தூக்கி மகன் கண் முன்னாலே மனைவி தலையில் போட்டு கொடூரமாக கொலை செய்துள்ளார்,மனைவி அஞ்சனாதேவி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்,தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கரிமேடு காவல்துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர், கணவர் வேலாயுதத்தை கைது செய்து காவல் துறையினர் அவரிடம் விசாரணை நடத்திவருகிறார்கள், கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக கணவன் மனைவி தூங்கும்பொழுது கிரைண்டர் கல்லை போட்டு கொடூரமாக கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்