13
மகாகவி பாரதியார் அவர்களின் பிறந்த நாள் விழா சகாயம் வழிகாட்டுதலில் இயங்கும் மக்கள் பாதை இயக்கத்தின் சார்பில் பெருவயல் ஊராட்சி கலையனூர் கிராமத்தின் திண்ணை பள்ளியில் கொண்டாடப்பட்டது.மக்கள் பாதை திண்ணை திட்டத்தின் கீழ் பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவியப் போட்டி நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பள்ளி மாணவ மாணவிகள் கலந்துகொண்டு கவிஞர் பாரதியாரின் திருவுருவப்படத்தை ஓவியமாக வரைந்தனர்.மேலும் மகாகவி பாரதியார் முகமூடி வேடணிந்து பள்ளி மாணவர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.இராமநாதபுரம் மாவட்ட மகளிரணி துணை ஒருங்கிணைப்பாளர் பார்கவி, திண்ணை பள்ளி ஆசிரியைகள் பிரீத்தி, மற்றும் சிவராஜ், முகேஷ் குமார் ஆகியோர் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர்.
You must be logged in to post a comment.