கீழக்கரை லெட்சுமிபுரத்தில் அமைந்துள்ள ஒரு தோப்பில் மின் வயர்கள் திருடிய இருவர் கைது இன்று காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். இத்திருடர்களை புதிதாக பதவியேற்ற காவல் கண்காணிப்பாளர் ரவிசந்திரன் அதிரடி நடவடிக்கையாக கைது செய்துள்ளார்.
இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்கள் பாண்டி வயது 27 மற்றும் செளந்திர பாண்டி வயது 29 ஆகிய இருவரும் திருப்புல்லாணி அருகில் உள்ள தண்டரனேந்தல் பகுதியை சேர்ந்தவர்கள்.
இத்திருடர்களிடமிருந்து ₹. 50,000/- மதிப்புள்ள வயர்கள் மற்றும் பைக் ஒன்றும் கைப்பற்ற பட்டது. இச்சம்பவத்தை கீழக்கரை காவல் ஆய்வாளர் திலகவதி, கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் மற்றும் காவலர்கள் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
You must be logged in to post a comment.