ராமநாதபுரம் மாவட்டம் உத்திரகோசமங்கையில் மங்களநாதர் மங்களீஸ்வரி ஆலயம் பாண்டியர்களால் கட்டப்பட்டு இங்குள்ள சுவர்களில் மீன் சின்னம் பொறிக்கப்பட்டிருப்பதும் ஒவ்வொரு தூண்களிலும் சிற்பத்தால் பாண்டியர்களின் ரகசியம் புதைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.இந்த நிலையில் ஆண்டுதோறும் சித்திரை பெருவிழா பத்து நாட்கள் கொண்டாடப்படுவது வழக்கம்.இந்த ஆலயத்தில் உலகத்திலேயே எந்த முருகனுக்கும் இல்லாத ஒரு தனி சிறப்பு முருகப்பெருமானுக்கு முன்பு வெள்ளை யானை இருப்பதே ஆகும் இந்திரன் மகளான தெய்வானையை மணம் முடித்த முருகப்பெருமானுக்கு இங்குதான் இந்திரன் சீதனமாக வெள்ளை யானையை வழங்கியதாக சொல்லப்படுகிறது. அதனை கொண்டாடும் விதமாக தேவலோக மரபினரான தேவேந்திர குல வேளாளர் மக்கள் பத்தாம் நாள் விழாவை பல்வேறு கலை நிகழ்ச்சிகளோடும், வானவேடிக்கையுடனும் கொண்டாடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். மேலும் இந்த மண்டகப்படியில் விடிய விடிய அன்னதானம் வழங்கப்படுவது மற்றொருபுரம் பாரம்பரிய கலையான பரதம், மல்லர் கம்பம், மல்லர் கயிறு, சிலம்பம், உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளோடு கொண்டாடப்பட்டது. முன்னதாக 101 தேவேந்திர குல வேளாளர் கிராம மக்களுக்கு பல்வேறு திவ்ய திரவியங்களால் அபிஷேக கோலத்தில் மூலவருடன் பஞ்ச மூர்த்திகள் காட்சியளிப்பார் பின்னர் தேவேந்திரகுல வேளாளர் மகாசபை தலைவர் அழகர்சாமி பாண்டியனுக்கு பரிவட்டம் கட்டி முதலுரிமையும் வழங்கப்படுகிறது. இதனை தொடர்ந்து 101 தேவேந்திர குல வேளாளர் கிராம தலைவர்களுக்கும் பரிவட்டம் ஆனது கட்டப்படுகிறது. இதனை அடுத்து மங்களநாதர் மகளேஸ்வரி பஞ்சமூர்த்திகளுடன் ரிஷப வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். அப்போது சங்கு நாதங்கள்,மங்கள இசை முழங்க,வழி நெடுகிலும் தீப ஆராதனை காண்பித்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.
Category:
விளையாட்டு செய்திகள்
கே.எல். ராகுல் அதிரடியால் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணிக்கு எதிராக லக்னோ அணி அபார வெற்றி..
by Askar
written by Askar
17-வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 34-வது லீக் ஆட்டத்தில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் ஆடின. இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரகானே மற்றும் ரச்சின் ரவீந்திரா ஆகியோர் களம் இறங்கினர். ரச்சின் ரவீந்திரா ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார். அடுத்து வந்த கேப்டன் கெய்க்வாட் 17 ரன்களில் அவுட் ஆனார். இதையடுத்து ரகானேவுடன் ரவீந்திர ஜடேஜா ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். ரகானே 36 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். இதையடுத்து களம் இறங்கிய ஷிவம் துபே 3 ரன், இம்பேக்ட் வீரர் சமீர் ரிஸ்வி 1 ரன் எடுத்து அவுட் ஆகினர்.
இதையடுத்து ஜடேஜாவுடன் மொயீன் அலி ஜோடி சேர்ந்தார். ஒருபுறம் நிலைத்து நின்று ஆடிய ஜடேஜா 34 பந்தில் அரைசதம் அடித்தார். மறுமுனையில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய மொயீன் அலி 20 பந்தில் 30 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார். தொடர்ந்து களமிறங்கிய தோனி, 9 பந்துகளில் 28 ரன்கள் எடுத்தார்.
இறுதியில் சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்தது. ஜடேஜா 57 ரன்களுடனும் தோனி 28 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இதையடுத்து 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ அணி களமிறங்கியது. அந்த அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய குயின்டன் டி காக் மற்றும் கேப்டன் கே.எல். ராகுல் இருவரும் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். இருவரும் அரைசதம் கடந்த நிலையில், குயின்டன் டி காக் 54 ரன்களிலும், கே.எல்.ராகுல் 82 ரன்களிலும் அவுட் ஆகினர்.
இந்த நிலையில் 19 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு லக்னோ அணி 180 ரன்கள் எடுத்து இலக்கை கடந்தது. நிக்கோலஸ் பூரான் 23 ரன்களுடனும் மார்கஸ் ஸ்டோனிஸ் 8 ரன்களுடனும் அவுட்டாகாமல் களத்தில் இருந்தனர். இதையடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தி லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அபார வெற்றி பெற்றது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
லக்னோ சூப்பர் ஜெயன்ட்சை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அபார வெற்றி..
by Askar
written by Askar
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 17வது சீசனில் இன்று நடைபெற்ற 28வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதையடுத்து, லக்னோ தொடக்க வீரர்களாக கேப்டன் கேஎல் ராகுல், குவிண்டன் டிகாக் களமிறங்கினர். டிகாக் 10 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த தீபக் ஹூடா 8 ரன்னிலும், கேப்டன் ராகுல் 39 ரன்னிலும் அவுட் ஆகினர்.
அடுத்துவந்த வீரர்கள் அனைவரும் கொல்கத்தா பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். பொறுப்புடன் ஆடிய நிகோலஸ் பூரன் 2 பவுண்டரிகள், 4 சிக்சர்கள் உள்பட 45 ரன்கள் குவித்தார்.
இறுதியில் லக்னோ 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்கள் எடுத்தது. கொல்கத்தா தரப்பில் மிச்சேல் ஸ்டாக் 2 விக்கெட்டுகளையும், வைபவ், சுனில் நரைன், வருண் சக்ரவர்த்தி, ரசல் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா தொடக்க வீரர்களாக சுனில் நரைன், பிலிப் சால்ட் களமிறங்கினர். நரைன் 6 ரன்னில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். அடுத்துவந்த ரகுவன்சி 7 ரன்னில் ஆட்டமிழந்தார்.
பின்னர், கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யருடன் ஜோடி சேர்ந்த பிலிப் சால்ட் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதிரடியாக ஆடிய சால்ட் அரைசதம் கடந்தார். இறுதியில் கொல்கத்தா 15.4 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் லக்னோ சூப்பர் ஜெயன்ட்சை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அபார வெற்றிபெற்றது.
கொல்கத்தா தரப்பில் சிறப்பாக ஆடிய பிலிப் சால்ட் 89 ரன்களுடனும், கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் 38 ரன்களுடனும் இறுதிவரை களத்தில் இருந்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் பஞ்சாப் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது ஐதராபாத் அணி..
by Askar
written by Askar
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் மாநிலம் முல்லாப்பூரில் நடைபெற்ற 23-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் – ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி, ஐதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்தது. அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய டிராவிஸ் ஹெட் 21 ரன்களும், அபிஷேக் சர்மா 16 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய மார்க்ரம் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் வந்த நிதிஷ் ரெட்டி, அதிரடி காட்டினார். சிறப்பாக விளையாடி அரைசதமடித்த அவர், 64 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அப்துல் சமத் 25 ரன்கள் எடுத்தார். இறுதியில் ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்துள்ளது. பஞ்சாப் தரப்பில் அர்ஷ்தீப் சிங் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனை தொடர்ந்து 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி பேட்டிங் செய்தது.
தொடக்க வீரர்களாக ஷிகர் தவான் , பேர்ஸ்டோ ஆகியோர் களமிறங்கினர். தொடக்கத்தில் பஞ்சாப் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அந்த அணியில் பேர்ஸ்டோ ரன் எதுவும் எடுக்காமலும் , பிரப்சிம்ரன் சிங் 4 ரன்களும் , தவான் 14 ரன்களும் எடுத்து ,ஆட்டமிழந்தனர்.
பின்னர் சாம் கரன் , ஷிகந்தர் ராசா ஆகியோர் நிலைத்து ஆடி ரன்கள் குவித்தனர். அணியின் ஸ்கோரை 58ரன்னாக இருந்தபோது சாம் கரன் 29ரன்களில் வெளியேறினார். தொடர்ந்து ஷிகந்தர் ராசா 28 ரன்களில் ஆட்டமிழந்தார்.
பின்னர் களமிறங்கிய ஷசாங் சிங் , அஷுதோஷ் சர்மா இருவரும் அதிரடி காட்டினர். கடைசி ஓவரில் 29 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் பஞ்சாப் அணியால் 26 ரன்கள் மட்டும் எடுக்க முடிந்தது. ஷசாங் சிங் 25 பந்துகளில் 46 ரன்களும் , அஷுதோஷ் சர்மா 12 பந்துகளில் 28 ரன்களும் எடுத்தனர். இதனால் 2 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் திரில் வெற்றி பெற்றது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இன்றைய ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில், கொல்கத்தாவை வீழ்த்தி சென்னை அணி அபார வெற்றி..
by Askar
written by Askar
ஐபிஎல் தொடரின் 22-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், முன்னாள் சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற சென்னை கொல்கத்தா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.அதன்படி களமிறங்கிய கொல்கத்தா அணியில் சால்ட் முதல் பந்தில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். இருந்தாலும் அதன்பிறகு சுனில் நரைன் – அங்கிரிஷ் ரகுவன்ஷி அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர். இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 56 ரன்கள் சேர்த்தது. அதனை தொடர்ந்து வந்த வீரர்கள் தடுமாற்றத்துடன் விளையாடினர். இதனால் 20 ஓவர் முடிவில் கொல்கத்தா அணி 9 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்கள் மட்டுமே எடுத்தது. சிஎஸ்கே தரப்பில் ஜடேஜா, தேஷ்பாண்டே ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.இதனை தொடர்ந்து சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர்களாக ரச்சின் ரவீந்திரா- ருதுராஜ் களமிறங்கினர். ரச்சின் 15 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மிட்செல் ருதுராஜ் உடன் ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர். பொறுப்புடன் விளையாடிய ருதுராஜ், சிஎஸ்கே அணியின் கேப்டனாக தனது முதல் அரை சதத்தை பதிவு செய்தார்.நிதானமாக விளையாடிய மிட்செல் 25 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த துபே அவரது பாணியில் அதிரடியாக விளையாடினார். அவர் 28 ரன்னில் அவுட் ஆனார். அடுத்ததாக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த டோனி களமிறங்கினார். ஆனால் சிக்சர் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 1 ரன்கள் மட்டுமே எடுத்தார்.இறுதியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 17.4 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கொல்கத்தா அணி தரப்பில் வைபவ் அரோரா 2 விக்கெட்டும், சுனில் நைரன், வருண் சக்கரவர்த்தி தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இன்று நடைபெற்ற ஐபிஎல் இரண்டாவது ஆட்டத்தில் குஜராத்தை இலகுவாக வீழ்த்தியது லக்னோ அணி..
by Askar
written by Askar
ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் கே.எல். ராகுல் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் டி காக் 6 ரன்களிலும், அடுத்ததாக களமிறங்கிய படிக்கல் 7 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். பின்னர் கேப்டன் கே.எல். ராகுலுடன் ஜோடி சேர்ந்த மார்கஸ் ஸ்டோய்னிஸ் நிதானமாக விளையாடி அணிக்கு ரன்களை சேர்த்தனர். இதனால் ஸ்கோர் மந்தமாகவே நகர்ந்தது.
இவர்களில் கே.எல். ராகுல் 33 ரன்களிலும், ஸ்டோய்னிஸ் 58 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இறுதி கட்டத்தில் பூரன் அதிரடியாக விளையாடி அணி கவுரமான நிலையை எட்ட உதவினார். பின்னர் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் லக்னோ 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்தது. குஜராத் தரப்பில் அதிகபட்சமாக நல்கண்டே மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதனையடுத்து 164 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணியின் சார்பில் சாய் சுதர்ஷன் மற்றும் கேப்டன் சுப்மன் கில் ஆகியோர் களமிறங்கினர். நிதானமாக ஆடத் தொடங்கிய இந்த ஜோடியில் சுப்மன் கில் 19 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய கேன் வில்லியம்சன் 1 ரன்னில் வெளியேற, மறுமுனையில் ரன் சேர்க்க போராடிய சாய் சுதர்ஷன் 31 ரன்களும், ஷரத் 2 ரன்னும், தர்ஷன் நல்கண்டே 12 ரன்களும், விஜய் சங்கர் 17 ரன்களும், ரஷித் கான் (0) ரன் ஏதும் எடுக்காமலும், உமேஷ் யாதவ் 2 ரன்னும் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.
பின்னர் இறுதிவரை போராடிய ராகுல் தேவாட்டியா 30 ரன்களும், நூர் அகமது 4 ரன்களும் எடுத்து வெளியேறினர். இறுதியில் குஜராத் அணி 18.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 130 ரன்கள் மட்டுமே எடுத்தது. லக்னோ அணியின் சார்பில் சிறப்பாக பந்து வீசிய யாஷ் தாக்கூர் 5 விக்கெட்டுகளும், குர்ணால் பாண்ட்யா 3 விக்கெட்டுகளும் ரவி பிஷ்னோய் மற்றும் நவீன் உல் ஹக் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதன்மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 33 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி வெற்றிபெற்றது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ஐபிஎல் 2024 தொடரின் இன்றைய போட்டியில் டெல்லி அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி..
by Askar
written by Askar
17-வது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா மார்ச் 22 ஆம் தேதி சென்னையில் தொடங்கி மே 26 ஆம் தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. சென்னை, பெங்களூரு, மும்பை, கொல்கத்தா, ஐதராபாத், டெல்லி, பஞ்சாப், குஜராத், லக்னோ, ராஜஸ்தான் ஆகிய 10 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.
ஐபிஎல் 2024ன் 20 வது போட்டியில் இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நேருக்கு நேர் மோதின. வான்கடே மைதானத்தில் இதுவரை நடந்த 112 இந்தியன் டி20 லீக் போட்டிகளில், இரண்டாவதாக பேட்டிங் செய்த அணிகள் 62 முறை வெற்றி பெற்றுள்ளது, இந்த மைதானத்தில் சேஸிங் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இரு அணிகளும் தற்போது புள்ளிகள் பட்டியலில் கடைசியில் பின்தங்கியுள்ள நிலையில், மும்பை 10வது இடத்தையும், டெல்லி 9வது இடத்தையும் பிடித்துள்ளன. இதனால் இந்த போட்டி முக்கிய திருப்புமுனையாக இருக்கும் என எதிர்பாக்கப்படுகிறது.
இந்த நிலையில் இந்த போட்டியில் டாஸ் போடப்பட்டது. டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இதன் மூலம் மும்பை அணி பேட்டிங்கில் களமிறங்கியுள்ளது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் சர்மா மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் களமிறங்கினர். ரோஹித் சர்மா அதிரடியாக விளையாடி பந்துகளை பவுண்ட்ரி மற்றும் சிக்சர்களை பறக்க விட்டார். தனது அதிரடியான ஆட்டத்தால் அவர் அரைசதம் கடப்பார் என எதிர்பாக்கப்பட்ட நிலையில் அக்சர் பட்டேலின் பந்தில் 49ரன்கள் எடுத்து வெளியேறினார்.
இதனைத் தொடர்ந்து விளையாடிய இஷான் கிசான் சூர்யா குமார் யாதவுடன் கைகோர்க்க சூர்ய குமார் டக் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார். இதனைத் தொடர்ந்து அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா நிதானமாக விளையாடி அணியின் ரன் எண்ணிக்கையை அதிகப்படுத்தினர். இதனைத் தொடர்ந்து களமிறங்கிய டிம் டேவிட் மற்றும் ரோமாரியோ ஆகிய இருவரும் தங்களது பங்குக்கு ரன்களை குவித்தனர். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட்களை இழந்து 234 ரன்கள் குவித்தது. இதன் மூலம் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு 235ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து களமிறங்கிய டெல்லி கேப்பிடல்ஸ் அணி நிதானமாக ரன்களை குவிக்க ஆரம்பத்தித்தது. தொடக்க ஆட்டக்காரரான பிரித்விஷா அதிரடியாக விளையாடி 66 ரன்கள் எடுத்த நிலையில் பும்ராவின் பந்துவீச்சில் போல்டானார். இதனைத் தொடர்ந்து களமிறங்கிய வீரர்களும் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்த நிலையில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதன்படி டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் எடுத்து தோல்வியைத் தழுவியது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அபார வெற்றி..
by Askar
written by Askar
ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 19-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இதில் முதலில் விளையாடிய ஆர்சிபி விராட் கோலியின் சதத்தால் (ஆட்டமிழக்காமல் 72 பந்தில் 113 ரன்) 3 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் குவித்தது.பின்னர் 184 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி களம் இறங்கியது. ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஜெய்ஸ்வால் ரன்ஏதும் எடுக்காமல் 2-வது பந்திலேயே ஆட்டமிழந்தார்.அடுத்து பட்லர் உடன் சஞ்சு சாம்சன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி முதலில் நிதானமாக விளையாடியது. அதன்பின் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் ரன்ரேட் 10 என்ற வகையில் ஜெட் வேகத்தில் உயர்ந்தது.பவர்பிளேயில் 1 விக்கெட் இழப்பிற்கு 54 ரன்கள் குவித்தது. 10 ஓவரில் 95 ரன்கள் சேர்த்தது. பட்லர் 30 பந்தில் அரைசதம் அடித்தார். அதனைத் தொடர்ந்து சஞ்சு சாம்சன் 33 பந்தில் அரைசதம் அடித்தார். 15-வது ஓவரின் 4-வது பந்தில் இந்த ஜோடி பிரிந்தது. சிராஜ் பந்தில் சாம்சன் 42 பந்தில் 69 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இந்த ஓவர் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் 2 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் குவித்திருந்தது.அடுத்து வந்த ரியான் பராக் 4 ரன்னிலும், ஜுரேல் 2 ரன்னிலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அடைந்தனர். 5-வது விக்கெட்டுக்கு பட்லர் உடன் ஹெட்மையர் ஜோடி சேர்ந்தார்.இந்த ஜோடி அணியை வெற்றி நோக்கி அழைத்துச் சென்றது. கடைசி ஓவரில் 1 ரன் தேவைப்பட்டது. ஆனால் சிக்ஸ் அடித்து சதம் அடித்ததுடன் அணியை வெற்றி பெற வைத்தார். ராஜஸ்தான் ராயல்ஸ் 19.1 ஓவரில் 189 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.பட்லர் 58 பந்தில் சதம் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த வெற்றியின் மூலம் தொடர்ந்து 4 போட்டிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி பெற்றுள்ளது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
குஜராத் அணிக்கு எதிரான ஆட்டம்! கடைசி ஓவரில் திக், திக், திக்,த்ரில் வெற்றி பெற்றது பஞ்சாப் அணி..
by Askar
written by Askar
17வது ஐபிஎல் தொடரின் 17வது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதிக்கொண்டது. இந்த போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச முடிவு செய்தது. குஜராத் அணி சார்பில் கேன் வில்லியம்சன் களமிறங்கினார். வில்லியம்சன் நடப்பு ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில்தான் களமிறங்கினார். டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச முடிவு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஒவர்கள் முடிவில் 4 விக்கெட்டினை இழந்து 199 ரன்கள் சேர்த்தது. தொடக்க வீரராக களமிறங்கி இறுதி வரை களத்தில் இருந்த குஜராத் கேப்டன் சுப்மன் கில் 48 பந்தில் 6 பவுண்டரி 4 சிக்ஸர் விளாசி 89 ரன்கள் சேர்த்திருந்தார்.
அதன் பின்னர் 200 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு பவர்ப்ளேவில் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி காத்திருந்தது. பவர்ப்ளேவில் தொடக்க வீரர்கள் தங்களது விக்கெட்டினை இழந்தனர். இரண்டாவது ஓவரில் ஷிகர் தவான் ஒரு ரன்னிலும், ஆறாவது ஓவரில் ஜானி பேரிஸ்டோவ் 22 ரன்னில் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார்.
இரண்டு விக்கெட்டுகள் விழுந்தாலும் பவர்ப்ளேவில் பஞ்சாப் அணி 54 ரன்கள் சேர்த்தது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சாம் கரன் 5 ரன்னில் தனது விக்கெட்டினை இழந்து வெளியேற, போட்டியில் குஜராத் அணியின் கரங்கள் மெல்ல மெல்ல உயர்ந்தது. பிரப்சிம்ரன் ஓரளவுக்கு சிறப்பாக விளையார, ஷிகந்தர் ராசா தடுமாறினார். இவர்கள் இருவரும் தங்களது விக்கெட்டினை இழந்த பின்னர், ஆட்டத்தில் சூடுபிடிக்கத் தொடங்கியது.
குறிப்பாக ஷுஷாங்க் சிங் சிறப்பாக விளையாடி தனது பங்களிப்பை அணிக்கு தொடர்ந்து வழங்கி வந்தார். இவர் கிடைத்த பந்துகளை பவுண்டரிக்கும் சிக்ஸருக்கும் விளாசி வந்தார். இவருடன் இணைந்த பஞ்சாப் அணியின் இம்பேக்ட் ப்ளேயர் அஷூதோஷ் சர்மா, ஷுஷாங்க் சிங்கிற்கு ஒத்துழைப்பு தரும் வகையில் விளையாடினார். பொறுப்புடனும் அதிரடியாகவும் விளையாடிய ஷுஷாங்க் சிங் 25 பந்தில் தனது அரைசதத்தினை எட்டினார்.
கடைசி இரண்டு ஓவர்களில் பஞ்சாப் அணியின் வெற்றிக்கு 25 ரன்கள் தேவைப்பட்டது. 19வது ஓவரில் பஞ்சாப் அணி 18 ரன்கள் சேர்த்தது. இதனால் கடைசி ஓவரில் 7 ரன்கள் மட்டும் தேவைப்பட்டது. 20வது ஓவரை வீசிய நல்கண்டே முதல் பந்தில் அஷூதோஷ் சர்மா விக்கெட்டினை கைப்பற்றினார். அடுத்த பந்தை வைய்டாக வீச, பஞ்சாப் அணியின் வெற்றிக்கு 5 பந்துகளில் 6 ரன்கள் தேவைப்பட்டது. இறுதியில் பஞ்சாப் அணி 19.5 ஓவரில் வெற்றி இலக்கை ஒரு பந்தை மீதம் வைத்து எட்டியது குறிப்பிடத்தக்கது..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
டெல்லிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் 106 ரன்கள் வித்தியாசத்தில், கொல்கத்தா அணி இமாலய வெற்றி..
by Askar
written by Askar
ஐபிஎல் தொடரின் 16-வது லீக் போட்டியில் கொல்கத்தா- டெல்லி அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 272 ரன்கள் எடுத்தது.கொல்கத்தா அணியில் அதிகபட்சமாக நரேன் 85 ரன்களும் ரகுவன்ஷி 54 ரன்களும் விளாசினார். இறுதியில் வந்த ரஸல் 46 ரன்களும் ரிங்கு சிங் 26 ரன்களும் எடுத்தனர். டெல்லி அணி தரப்பில் நோர்க்கியா 3 விக்கெட்டும் இஷாந்த் சர்மா 2 விக்கெட்டும் வீழ்தினர்.இதனையடுத்து களமிறங்கிய டெல்லி அணிக்கு தொடக்கமே சோகமாக அமைந்தது. பிரித்வி ஷா 10, மிட்செல் மார்ஷ் 0, அபிஷேக் போரல் 0, டேவிட் வார்னர் 18 என அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர். இதனால் டெல்லி அணி 33 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது.இதனையடுத்து கேப்டன் ரிஷப் பண்ட் – டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடினார். சிறப்பாக ஆடிய இருவரும் அரைசதம் அடித்து நம்பிக்கை அளித்தனர். இந்த நிலையில் சக்கவர்த்தி வீசிய ஓவரில் இருவரும் ஆட்டமிழந்தனர். பண்ட் 55 ரன்களும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 54 ரன்னில் வெளியேறினர்.அதனை தொடர்ந்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினர். இதனால் கொல்கத்தா அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கொல்கத்தா அணி தரப்பில் வருண் சக்கரவர்த்தி 3 விக்கெட்டும் ஸ்டார்க், வைபவ் அரோரா தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் 28 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி அபார வெற்றி..
by Askar
written by Askar
17வது ஐபிஎல் தொடரின் 14வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் லக்னோ அணியும் மோதிகொண்டது. இந்த போட்டி பெங்களூரில் உள்ள சின்னச்சாமி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் லக்னோ அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முதலில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்து வீசுவதாக கூறியது. இதனால் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக டி காக் 51 ரன்களும் இறுதி நேரத்தில் நிக்கோலஸ் பூரன் அதிரடியாக விளையாடி 21 பந்தில் ஒரு பவுண்டரி 5 சிக்ஸர் விளாசி 40 ரன்கள் குவித்திருந்தார்.
இதையடுத்து களமிறங்கிய பெங்களூரு அணி இந்த போட்டில் வெற்றியைப் பெற்று புள்ளிப்பட்டியலில் முன்னேறிவிடலாம் என்ற மனநிலையில் இலக்கைத் துரத்த ஆரம்பித்தது. இரண்டாவது ஓவரில் இருந்து பவுண்டரிக் கணக்கை தொடங்கிய பெங்களூரு அணிக்கு போட்டியின் 4வது ஓவர் வரை சிறப்பாகவே அமைந்தது. 4வது ஓவர் முடிவில் 36 ரன்களை எடுத்த பெங்களூரு, 5வதுஓவரின் இரண்டாவது பந்தில் முதல் விக்கெட்டினை அதிர்ச்சியுடன் இழந்தது. விராட் கோலி தனது விக்கெட்டினை தமிழ்நாடு வீரர் மணிமாறன் சித்தார்த் பந்தில் 22 ரன்கள் சேர்த்த நிலையில் வெளியேறினார்.
அடுத்த ஓவரில் டூ பிளெசிஸ் ரன் அவுட் ஆக, அதே ஓவரில் மேக்ஸ்வெல் தனது விக்கெட்டினை டக் அவுட் முறையில் மயாங் யாதவ் ஓவரில் வெளியேறினார். 8வது ஓவரில் கேமரூன் க்ரீன் தனது விக்கெட்டினை 9 ரன்னில் இருந்தபோது மயாங்க் யாதவ் பந்தில் க்ளீன் போல்ட் ஆகி வெளியேறினார். இதனால் பெங்களூரு அணி முக்கிய விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.
அதன் பின்னர் இணைந்த அனுஜ் ராவத் மற்றும் ரஜித் படிதார் கூட்டணி நிதானமாக விளையாடி வர, லக்னோ அணி சார்பில் மார்கஸ் ஸ்டாய்னிஸ் 13வது ஓவரினை வீச, அதில் அனுஜ் ராவத் தனது விக்கெட்டினை இழக்க, பெங்களூரு அணிக்கு நெருக்கடி அதிகமானது.
அதன் பின்னர் மயாங்க் யாதவ் பந்தில் படிதார் தனது விக்கெட்டினை இழந்து வெளியேற, அதன் பின்னர் கைகோர்த்த மகிபால் லம்ரோர் மற்றும் தினேஷ் கார்த்திக் இணைந்தனர். இதில் மகிபால் லம்ரோருக்கு அதிக ஸ்ட்ரைக் கிடைக்க அவர் சிக்ஸ்ர்கள் விளாச ஆரம்பித்தார்.
ஆனால் தினேஷ் கார்த்திக் தனது விக்கெட்டினை நவீன் உல்-ஹக் பந்தில் இழந்து வெளியேற, பெங்களூரு அணிக்கு ஒற்றை நம்பிக்கையாக லம்ரோர் மட்டும் இருந்தார். இறுதியில் அவரும் தனது விக்கெட்டினை 18வது ஓவரில் இழக்க போட்டி முழுக்க முழுக்க லக்னோ அணியின் வசம் வந்தது.
இறுதியில் பெங்களூரு அணி 19.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 153 ரன்கள் சேர்த்திருந்தது. இதனால் லக்னோ அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
விபத்தில் இருந்து மீண்டு வந்து முதல் அரைசதம்; சென்னைக்கு எதிராக ரிஷப் பண்ட் சம்பவம்! டெல்லி அபார வெற்றி..
by Askar
written by Askar
ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் இன்று (மார்ச் 31) நடைபெற்ற இரண்டாவது போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங் தேர்வு செய்தது. டெல்லி அணிக்கு பிருத்வி ஷா மற்றும் டேவிட் வார்னர் ஜோடி சிறப்பான துவக்கம் கொடுத்தது. இருவரும் முறையே 43 மற்றும் 52 ரன்களை குவித்தனர். அடுத்த வந்த கேப்டன் ரிஷப் பண்ட் சிறப்பாக ஆடி ரன்களை குவித்து வந்தார். இவருடன் ஆடிய மிட்செல் மார்ஷ் 18 ரன்களிலும், ஸ்டப்ஸ் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். கேப்டன் ரிஷப் பண்ட் 51 ரன்களில் ஆட்டமிழக்க டெல்லி அணி 5 விக்கெட்டுகளை இழந்தது. போட்டி முடிவில் டெல்லி அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 191 ரன்களை குவித்தது. இதையடுத்து 192 ரன்களை இலக்காக துரத்திய சென்னை அணிக்கு துவக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. சென்னை அணியின் துவக்க வீரர்கள் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், ரச்சின் ரவீந்திரா முறையே 1 மற்றும் 2 ரன்களில் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த ரஹானே மற்றும் டேரில் மிட்செல் ஜோடி பொறுப்பாக ஆடி ரன்களை சேர்த்தது. இருவரும் முறையே 45 மற்றும் 34 ரன்களை குவித்து ஆட்டமிழந்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஷிவம் தூபே 18 ரன்களில் ஆட்டமிழந்தார். சமீர் ரிஸ்வி முதல் பந்திலேயே பெவிலியன் திரும்பினார். பிறகு ரவீந்திர ஜடேஜாவுடன் ஜோடி சேர்ந்த எம்.எஸ். டோனி முதல் பந்திலேயே பவுண்டரி விளாசினார். இந்த ஜோடி அதிரடி ரன் குவிப்பில் ஈடுபட்டது. போட்டி முடிவில் சென்னை அணி 6 விக்கெட் இழப்புக்கு 171 ரன்களை குவித்தது. எம்.எஸ். டோனி 37 ரன்களுடனும், ஜடேஜா 21 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்த போட்டியில் சென்னை அணியை வீழ்த்திய டெல்லி அணி முதல் வெற்றியை ருசித்தது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!
பகுதி -3
கப்ளிசேட்
(உஸ்மானிய பேரரசு -30)
(கி.பி 1299-1922)
சுலைமான் அல்கானூனி அவர்கள் இஸ்தான்புல் நகரில் சுலைமானியா மஸ்ஜித் என்ற ஒரு அற்புதமான பள்ளிவாசலை கட்டினார்.
அந்த பள்ளிவாசலின் வளாகத்திற்குள்
ஒரு ஆரம்ப பள்ளிக்கூடம்,
ஒரு மேல்நிலைப்பள்ளி,
ஒருபல்கலைக்கழகம்,
ஒரு மருத்துவமனை
ஒரு
மருத்துவக்கல்லூரி,
வெளியூர்க்காரர்கள்
தங்க ஒரு இலவச தங்குமிடம்,
என்று ஒரு சிறந்த கட்டமைப்பை உருவாக்கினார்.
பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹிவ ஸல்லம் அவர்கள் மஸ்ஜித் நபவி பள்ளிவாசலை
எப்படி கட்டமைத்தார்களோ
அதேபோல சுலைமான் அல்கானூனி அவர்கள் சுலைமானியா மஸ்ஜிதை கட்டமைத்தார்.
சுலைமானியா பள்ளிவாசலில் பணியாற்றும் இமாம்
குர்ஆன்,ஹதீஸ், ஒளியில் புதிய சட்டங்களை பிரித்து அறிந்து உருவாக்குவது,
மற்ற வேதங்களில் அறிவு,
அன்றைய சில உலக மொழிகளில் புலமை,
விஞ்ஞானம், கணிதம், மொழியியல்
இவற்றில் புலமை உடையவராக இருக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தார்.
பேரரசு முழுவதும் இதுபோன்ற தகுதிகளில் ஒரு ஆலிமை கூட தேடிப்பிடிக்க முடியவில்லை.
சுலைமான் அல்கானூனி அவர்கள் இதுபோன்ற
தகுதிகளை உள்ளடக்கிய ஆலிம்களை சுலைமானியா மஸ்ஜிதின் பல்கலைக்கழகத்தில் உருவாக்க ஏற்பாடுகள் செய்தார்.
சட்டங்களை உருவாக்க பேரரசர் சுலைமான் எடுத்த முயற்சி இவருக்கு கானூனி என்ற பட்டத்தை பெற்றுக் கொடுத்தது.
சுலைமான் அல் கானூனி அவர்கள் ஆறு மொழிகளில் புலமை பெற்று இருந்தார்.
சுலைமான் கானூனி அவர்கள் 16 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவின் மிகச்சிறந்த முக்கிய மன்னராக கருதப்பட்டார்.
பேரரசர் சுலைமான் அல் கானூனி அவர்களின் தலைமையில் சென்ற படைகள் ஏராளமான கிறிஸ்தவ கோட்டைகளை கைப்பற்றின.
சுலைமான் அல் கானூனியின் கடற்படை மத்திய தரைக்கடல்,
செங்கடல்,பாரசீக வளைகுடா என எல்லா பகுதிகளிலும் ஆதிக்கம் செலுத்தியது.
சுலைமான் அல்கானூனி அவர்கள் நீதித்துறையில் மாற்றங்களை தனிப்பட்ட முறையில் ஏற்படுத்தினார்.
உஸ்மானிய பாரம்பரியத்தை மீறி சுலைமான் அவர்கள் ஹர்ரெம் சுல்தான்
என்ற கிறிஸ்தவ பெண்ணை மணந்தார்.
ஆனால் அவர் முஸ்லீமாக மாறினார்.அவர் தனது சிவப்பு நிற கூந்தலால் மேற்கு ஐரோப்பாவில் ரோக்ஸெலானா
என்ற பெயரில் பிரபலமானார்.
சுலைமானின் மகனான முஹம்மது பெரியம்மை நோயால் இறந்தார்.
சுலைமானின் மற்றொரு மகனான
முஸ்தபா பேரரசில் குழப்பங்கள் ஏற்படுத்தியதால் மரணதண்டனை விதிக்கப்பட்டு கொல்லப்பட்டார்.
பிறகு மற்றொரு மகனான பயாஸித் பேரரசில் குழப்பங்கள் ஏற்படுத்தவே அவரது நான்கு மகன்களுடன்
தூக்கிலிடப்பட்டார்.
பேரரசின் ஆட்சியில் குழப்பங்களை ஏற்படுத்துபவர்களை
மன்னர்கள் ஒருபோதும் மன்னிப்பதில்லை.
ஆட்சியை சிறப்பாக நிர்வாகம் செய்ய இதுபோன்ற தண்டனைகளை
மன்னர்களும், அவர்களின் சட்டங்களும், ராஜதந்திரங்களாக
நியாயப்படுத்திவிட்டு
கடந்து செல்கின்றன.
மிகச்சிறந்த பேரரசராக வரலாற்றில் அறியப்பட்ட சுலைமான் அல்கானூனி அவர்கள் ஹங்கேரிக்கு படையெடுத்து சென்றபோது அந்த விபரீதம் நிகழ்ந்தது.
வரலாறு படைக்க வரலாற்றை தொடர்ந்து வாசிப்போம்..!
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மும்பைக்கு மரண பயத்தை காட்டிய ஹைதராபாத்; 31 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..
by Askar
written by Askar
மும்பைக்கு மரண பயத்தை காட்டிய ஹைதராபாத்; 31 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..
17வது சீசன் ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் 8வது லீக் போட்டியில் மோதிக்கொண்டது. இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச முடிவு செய்தது. முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 277 ரன்கள் குவித்தது. இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த அணி என்ற சாதனையைப் படைத்துள்ளது. ஹைதராபாத் அணி சார்பில் ஹென்றிச் க்ளாசன் 80 ரன்களும், அபிஷேக் சர்மா 63 ரன்களும், டிராவிஸ் ஹெட் 62 ரன்களும் குவித்திருந்தனர். மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில் பும்ரா மட்டும் 4 ஓவர்கள் வீசி 36 ரன்கள் விட்டுக்கொடுத்திருந்தார்.
இமாலய இலக்கை நோக்கி களம்
அதன் பின்னர் 278 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி மும்பை இந்தியன்ஸ் அணி களமிறங்கியது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ஸ்கோரைப் பார்த்தபோது அதனை மும்பை இந்தியன்ஸ் அணியால் சேஸ் செய்ய முடியுமா அல்லது இந்த இலக்கை நெருங்குமா என்ற கேள்வி வர்ணனையாளர்கள் தொடங்கி ரசிகர்கள் வரை அனைவரது மத்தியிலும் இருந்தது.
மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக இஷான் கிஷன் மற்றும் ரோகித் சர்மா களமிறங்கினர். ரோகித் சர்மாவுக்கு இந்த போட்டி மும்பை இந்தியன்ஸ் அணிக்காக தனது 200வது போட்டியில் விளையாடினார். இருவரும் அதிரடியாகவே ஆட்டத்தை தொடங்கினர். குறிப்பாக சிக்ஸர்களை மாறி மாறி விளாசினர். இதனால் மும்பை அணியின் ரன்ரேட் வேகமாக உயர்ந்தது. இஷான் கிஷன் தனது விக்கெட்டினை 13 பந்தில் 34 ரன்கள் சேர்த்த நிலையில் இழந்து வெளியேறினார். அதையடுத்து ரோகித் சர்மா ஹைதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் பந்தில் தனது விக்கெட்டினை 12 பந்தில் 26 ரன்கள் சேர்த்த நிலையில் இழந்து வெளியேறினார்.
அதன் பின்னர் இணைந்த திலக் வர்மா மற்றும் நமன் தீர் கூட்டணி, ஹைதராபாத் அணிக்கு தொடர்ந்து சவால் அளிக்கும் ஆட்டத்தினை வெளிப்படுத்தி வந்தது. திலக் வர்மா மைதனாத்தில் அனைத்து திசைகளிலும் சிக்ஸர்கள் விளாசி வந்தார். அதேநேரத்தில் நமன் தீர் 200 ஸ்ட்ரைக்ரேட்டில் விளையாடிக்கொண்டு இருந்தார். இவர்கள் கூட்டணியினால் மும்பை இந்தியன்ஸ் அணி 10.3 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டினை இழந்து 150 ரன்கள் சேர்த்தது. அடுத்த பந்தில் நமன் திர் தனது விக்கெட்டினை 30 ரன்கள் சேர்த்த நிலையில் இழந்தார்.
வெற்றி பெற்ற ஹைதராபாத்
அதன் பின்னர் களத்திற்கு வந்த மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா, திலக் வர்மாவுடன் இணைந்து மும்பை அணி இலக்கை எட்ட போராட்டமான ஆட்டத்தினை வெளிப்படுத்தினார். மும்பை இந்தியன்ஸ் அணி 14 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் சேர்த்தது. இதனால் மும்பை அணி வெற்றி பெற 6 ஓவர்களில் 96 ரன்கள் தேவை என்ற இக்கட்டான நிலையில் இருந்தது. அதன் பின்னர் ஆட்டம் மெல்ல மெல்ல ஹைதராபாத் அணியின் கட்டுக்குள் வந்தது.
இறுதியில் மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டினை இழந்து 246 ரன்கள் சேர்த்தது. இதனால் ஹைதராபாத் அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ஐபிஎல் – குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் 63 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி அசத்தல் வெற்றி…
by Askar
written by Askar
நடப்பு ஐபிஎல் தொடரின் 7வது லீக் போட்டியில் சென்னை மற்றும் குஜராத் அணிகள் மோதின. இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் பந்து வீச முடிவு செய்தார். அதன்படி களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்கள் சேர்த்தது. அதன் பின்னர் களமிறங்கிய குஜராத் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் சென்னை அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
207 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய குஜராத் அணிக்கு ஆரம்பம் முதலே சென்னை அணியின் பவுலர்கள் நெருக்கடி கொடுத்தனர். குறிப்பாக ராகுல் சஹாரின் வேகத்தில் குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான சுப்மன் கில் மற்றும் சாஹா ஆகியோர் தங்களது விக்கெட்டினை 8 ரன்கள் மற்றும் 21 ரன்கள் எடுத்த நிலையில் இழந்து வெளியேறினர். பவர்ப்ளேவில் குஜராத் அணி 2 விக்கெட்டுகளை இழந்ததால் பெரும் நெருக்கடியைச் சந்தித்தது.
அதன் பின்னர் கைகோர்த்த தமிழ்நாடு வீரர்களான விஜய் சங்கர் மற்றும் இம்பேக்ட் ப்ளேயர் சாய் சுதர்சன் இருவரும் இணைந்தனர். இருவரும் நிலைமையை ஓரளவுக்கு சமாளித்து குஜராத் அணியை சரிவில் இருந்து மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் சென்னை அணியின் பகுதி நேர பந்து வீச்சாளர் டேரில் மிட்ஷெல் வீசிய 8வது ஓவரில் விஜய் சங்கர் தனது விக்கெட்டினை 12 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட் கீப்பர் தோனியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 42 வயது நிரம்பிய தோனி விஜய் சங்கர் கொடுத்த கேட்சினை பறந்து பிடித்தார்.
முதல் 10 ஓவர்களில் குஜராத் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 80 ரன்கள் சேர்த்திருந்தது. இதனால் அடுத்த 10 ஓவரில் குஜராத் அணியின் வெற்றிக்கு 127 ரன்கள் தேவைப்பட்டது. களத்தில் சாய் சுதர்சனும் டேவிட் மில்லரும் நிதானமான ஆட்டத்தினை வெளிப்படுத்தினர்.
சென்னை அணியின் தேஷ் பாண்டே வீசிய 12வது ஓவரில் டேவிட் மில்லர் தனது விக்கெட்டினை 21 ரன்கள் சேர்த்த நிலையில் வெளியேறினார். அதன் பின்னர் வந்த குஜராத் அணி வீரர்கள் அணியின் தேவையை உணர்ந்து விளையாடததால் மிடில் ஓவரில் குஜராத் அணிக்கு ரன்கள் போதுமானதாக வரவில்லை.
இதனால் குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்கள் மடுமே எடுத்தது. இதனால் சென்னை அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் சென்னை அணியின் சார்பில் தேஷ்பாண்டே, தீபக் சஹார், முஸ்தஃபிகுர் ரஹ்மான் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகள் கைப்பற்றினர். இந்த வெற்றி மூலம் சென்னை அணி புள்ளிப்பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ஆர்.எஸ். மங்கலம் பிரிட்டோ மழலையர் தொடக்கப்பள்ளி பரிசளிப்பு விழா !
by Baker BAker
written by Baker BAker
இராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மங்கலம் பிரிட்டோ மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியில் விளையாட்டு போட்டி நடைபெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா ஆர்.எஸ். மங்களம் கிராம ஜமாத் தலைவர் ஹாஜா நஸ்ருதீன் தலைமை நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் நலச்சங்க மாநில பொது செயலாளர் பூ.சதீஷ் வாழ்த்துரை வழங்கினார், புதுமடம் பூன் நர்சரி பிரைமரி பள்ளி தாளாளர் முகமது மன்சூர் அலி , இராமநாதபுரம் மைஸ் பப்ளிகேஷன் நிறுவனர் முருகேசன், அல் அமீன் பள்ளி தாளாளர் நைமுதீன், இன்ஜினியர் சகுபர், உமர் ஷெரீஃப், தக்வா பள்ளி இமாம் ஜெயினுதீன் , கிராம நிர்வாக அலுவலர் அஜார்தீன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்பித்தனர். விழா ஏற்பாட்டினை பள்ளி தாளாளர் ஹாஜி எஸ் கம்ருதீன் செய்திருந்தார். இறுதியாக பள்ளியின் நிர்வாக இயக்குனர் நஸ்ருதீன் நன்றி உரை ஆற்றினார். இந்நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் , ஜமாத்தார்கள் ,கிராம மக்கள் , மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
உலக செய்திகள்கீழக்கரை செய்திகள்செய்திகள்தேசிய செய்திகள்மாநில செய்திகள்மாவட்ட செய்திகள்விளையாட்டு செய்திகள்
கீழக்கரை சார்ந்தவருக்கு சவுதி அரேபியாவில் பரிசு விழா !
by Baker BAker
written by Baker BAker
சவுதி அரேபியா ஜித்தா மாநகரில் தமிழர்கள் அதிகமாக வேலை செய்யும் நிர்வணமன அல் ஃபன்னியா (Alfaneyah) கம்பேனியில் விளையாட்டு பேட்டி நடைபெற்று பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி வருடம்தோறும் நடைபெற்று வருகிறது. அதனை தொடர்ந்து இந்த ஆண்டு கீழக்கரை, காயல்பட்டிணம் கடையநல்லூர், லெப்பைகுடி ஊரை சேர்ந்தவர்கள் 6 அணிகளாக கலந்து கொண்டதுடன். வெற்றி பெற்ற மூன்று அணிகளுக்கு வெற்றி கோப்பை, மொடல்கள், மற்றும் ரொக்க பரிசுகளை கம்பேனியின் இயக்குணர் SAS சதக்கத்துல்லா, மேலாளர்கள் சீனி அலி, மஹ்ரூப் அப்துல் காதர், நீயாசுதீன் மற்றும் அஸ்மாவில் ஆகியோர் வழங்கினர்கள்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ராமநாதபுரம் மாவட்டம் வேதாளையில் உள்ள அல் அமீன் மழலையர் பள்ளியில் 30ம்ஆண்டு விழா ரஹ்மத்துல்லா ஆலிம் தலைமையில் முகமது மன்சூர் , அப்துல் ரஷீத் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. பள்ளியின் மாணவ மாணவிகள் தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் கிராத் ஓதி துவங்கினர். பள்ளியின் முதல்வர் ஜெசிமா பேகம் வரவேற்புரை வழங்கினார். பள்ளியில் ஆசிரியர் கனிமொழி ஆண்டறிக்கை வாசித்தார். விழாவில் உச்சிப்புளி சுகாதார ஆய்வாளர் மகேந்திரன் , ராமநாதபுரம் காவல் குற்றப்பிரிவு சார்பு ஆய்வாளர் ஆண்டனி சகாய சேகர் , ராமநாதபுரம் பாம்பே டையிங் நிறுவனர் சையது ஜாபர் அலி , மண்டபம் ஜெயமணி பள்ளி தாளாளர் மற்றும் வழக்கறிஞர் ஜெபத்துரை மற்றும் ஆசீர் ஜாஸ்மின் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வாழ்த்துரைகள் வழங்கினர். அதனைத் தொடர்ந்து சிறந்த மதிப்பெண் பெற்ற பள்ளியின் மாணவ மாணவிகளுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டு இறுதியில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பள்ளியின் ஆசிரியர்கள் மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு கண்டுகளித்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தென்காசி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் சிறப்பு முகாம்; மாவட்ட கலெக்டர் தகவல்..
written by Abubakker Sithik
தென்காசி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் சிறப்பு முகாம்; மாவட்ட கலெக்டர் தகவல்..
தென்காசி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் அறிவித்துள்ளார். இது குறித்த செய்திக் குறிப்பில், தென்காசி மாவட்டத்தில் பல்வேறு அரசுத் துறைகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு செயல்படுத்தப்படும் நலத் திட்டங்களை பெறுவதில் மாற்றுத் திறனாளிகளுக்கு ஏற்படும் சிக்கல்களை களைய சம்மந்தப்பட்ட துறைகளை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது.
அனைத்து வகையான மாற்றுத் திறனாளிகள் அனைவரும் தங்களுக்கு தேவையான உதவிகள் பெற மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், வாக்காளர் அட்டை நகல், புகைப்படம் 5 ஆகியவற்றுடன் விண்ணப்பித்து பயன் பெறலாம் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெறாத மாற்றுத் திறனாளிகள் இம்முகாமில் பெற்று பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே. கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.
முகாம் நடைபெறும் இடம் : இ.சி.ஈ. அரசு மேல் நிலைப்பள்ளி, (புதிய பேருந்து நிலையம் அருகில்) தென்காசி.
நாள் : 02.03.2024, நேரம் : காலை 10.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தென்காசி தலைமை மருத்துவமனைக்கு சிறந்த மருத்துவமனை விருது; மாவட்ட கலெக்டர் வழங்கினார்..
written by Abubakker Sithik
தென்காசி மாவட்டத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், மாநிலத்தில் சிறந்த மருத்துவமனைகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. தென்காசி மாவட்டத்தில், மருத்துவ சேவை, முதலமைச்சர் காப்பீட்டு திட்டம் மற்றும் பிரதான மந்திரி மருத்துவ காப்பீட்டு திட்டம் ஆகிய சேவைகளில் முதல் இடத்தில் சிறந்து விளங்கும் தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு சிறந்த மருத்துவமனைக்கான விருது வழங்கப்பட்டது. விருதினை தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் ஜெஸ்லின், மாவட்ட ஆட்சித் தலைவரிடம் பெற்றுக் கொண்டார். அப்போது இணை இயக்குனர் நலப்பணிகள் மருத்துவர் பிரேமலதா, மாவட்ட எஸ்.பி சுரேஷ்குமார், முக்கிய பிரமுகர்கள் உடனிருந்தனர்.
மேலும், தென்காசி மாவட்டத்தில் முதலமைச்சர் காப்பீடு திட்ட செயல்பாட்டில் இரண்டாவது இடம் பெற்றுள்ள கடையநல்லூர் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கான விருதினை தலைமை மருத்துவர் அனிதா பாலின் பெற்றுக் கொண்டார். தென்காசி மாவட்ட இணை இயக்குனர் நலப்பணிகள் மருத்துவர் பிரேமலதா விருதுகள் பெற்ற மருத்துவமனைகள் மற்றும் தலைமை மருத்துவர்கள், குடியரசு தினவிழாவில் விருதினை பெற்ற மருத்துவர்கள், செவிலியர்கள், அரசு மருத்துவமனை பணியாளர்கள் அனைவரையும் பாராட்டி குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவித்தார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
Newer Posts
You must be logged in to post a comment.