ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாட்டின் ஆளுநர் R.N ரவி ஒரு நாள் சுற்றுப்பயணமாக வருகையை முன்னிட்டு ஆளுநருக்கு எதிராக பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு மற்றும் தமிழக மக்கள் முன்னணி சார்பில் பெரியார் பேரவையின் தலைவர் நாகேசுவரன் தலைமையில் இனங்களின் இறையாண்மைக்கான இளைஞர் மாணவர் இயக்கம் மாநில ஒருங்கிணைப்பாளர் பாவெல் முன்னிலையில் கருப்புக்கொடி காட்டி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.தமிழக மக்கள் முன்னணி மணிமாறன், பெரியார் பேரவையின் காளிதாஸ் செல்வம், வரதன், நித்திஷ், சாம் செல்வராசு ஆகியோர் கண்டன கோஷம் எழுப்பினார். ஆளுநர் ரவியே தமிழ்நாட்டை விட்டு வெளியேறு , மாநிலங்களுக்கு ஆளுநர்களே தேவையில்லை , ஆளுநர் என்கிற அதிகார அமைப்பை ஒழித்துக் கட்டுவோம், உள்ளிட்ட கோசங்களை எழுப்பினர். மேலும் அவர்கள் கூறுகையில் :- அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து தொடர்ச்சியாக தமிழ்நாட்டிற்கு எதிராக, தமிழ்நாட்டின் உரிமைகளுக்கு எதிராக பேசியும் செயல்பட்டும் வருகிறார். சமீப காலமாக பல்கலைக்கழகங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் செல்லும் போது வள்ளலார் சனாதனத்தின் உச்ச நட்சத்திரம் என்றும், தமிழ்நாட்டை தமிழ்நாடு என்று சொல்லாமல் தமிழகம் என்பதே சரி என்றும், தமிழ்நாடு அரசே ஏற்க மறுக்கிற தேசிய கல்விக் கொள்கையை அனைவரும் ஏற்க வேண்டும் என்றும், தமிழ்நாட்டை ராமஜென்ம பூமி என்றும் உண்மைக்கு புறம்பாக பேசுவதோடு தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றி மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் கடத்துகிறார் என்றும், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களாட்சிக்கும், சட்டத்திற்கு விரோதமாகவும் தனி அரசாங்கத்தை நடத்த நினைக்கும் ஆளுனரின் இச்செயல்கள் தமிழ்நாட்டு மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்திக்கொண்டே இருக்கிறது என்றனார். இப்போராட்டத்தில் சிவகங்கை திராவிடர் விடுதலைக் கழகம் மாவட்டச் செயலாளர் பெரியார் முத்து ,ஆதித்தமிழர் கட்சி மண்டலச் செயலாளர் க .பாஸ்கரன், மக்கள் அதிகாரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆனந்தன், ஆதித்தமிழர் மாவட்ட செயலாளர் உதயகுமார் , இனங்களின் இறையாண்மைக்கான இளைஞர் மாணவர் இயக்கம் தமிழ்மாறன் , செங்கொடி , தமிழக மக்கள் முன்னணி இலங்கேசுவரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கண்டனத்தை தெரிவித்தனர். போராட்டத்தில் கலந்து கொண்ட அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
Category:
உலக செய்திகள்
நெல்லை மாவட்டம்
பாபநாசம் : உச்சநீர்மட்டம் : 143.00 அடி, நீர் இருப்பு : 142.30 அடி, கொள்ளளவு: 5451.00 மி.க.அடி, நீர் வரத்து : 698.773 கன அடி, வெளியேற்றம் : 1504.75 கன அடி.
சேர்வலாறு : உச்சநீர்மட்டம் : 156.00 அடி, நீர் இருப்பு : 147.34 அடி, கொள்ளளவு: 1083.59 மி.க.அடி.
மணிமுத்தாறு : உச்சநீர்மட்டம்: 118.00 அடி, நீர் இருப்பு : 117.57 அடி, கொள்ளளவு: 5468.00 மி.க.அடி, நீர் வரத்து : 515.00 கனஅடி, வெளியேற்றம் : 370.00 கனஅடி.
வடக்கு பச்சையாறு: உச்சநீர்மட்டம்: 50.00 அடி, நீர் இருப்பு: 49.20 அடி, கொள்ளளவு: 442.00 மி.க.அடி, நீர் வரத்து: NIL, வெளியேற்றம்: NIL.
நம்பியாறு: உச்சநீர்மட்டம்: 22.96 அடி, நீர் இருப்பு: 22.96 அடி, கொள்ளளவு: 82.17 மி.க.அடி, நீர்வரத்து: 26.00 கனஅடி, வெளியேற்றம்: 26.00 கனஅடி.
கொடுமுடியாறு: உச்சநீர்மட்டம்: 52.50 அடி, நீர் இருப்பு: 30.25 அடி, கொள்ளளவு: 45.14 மி.க.அடி, நீர்வரத்து: 19.00 கனஅடி வெளியேற்றம்: 40.00 கனஅடி.
மழை அளவு நிலவரம்: ஏதும் இல்லை..
தென்காசி மாவட்டம்
கடனா : உச்சநீர்மட்டம் : 85.00 அடி, நீர் இருப்பு : 84.90 அடி, கொள்ளளவு: 334.37 மி.க.அடி, நீர் வரத்து : 16.00 கன அடி, வெளியேற்றம் : 30.00 கன அடி.
ராம நதி : உச்ச நீர்மட்டம் : 84.00 அடி, நீர் இருப்பு : 83.75 அடி, கொள்ளளவு: 118.38 மி.க.அடி, நீர்வரத்து : 3.00 மி.க.அடி, வெளியேற்றம் : 30.00 மி.க.அடி.
கருப்பா நதி : உச்சநீர்மட்டம்: 72.00 அடி, நீர் இருப்பு : 70.21 அடி, கொள்ளளவு: 112.85 மி.க.அடி, நீர் வரத்து : 5.00 கன அடி, வெளியேற்றம் : 25.00 கன அடி.
குண்டாறு: உச்சநீர்மட்டம்: 36.10 அடி, நீர் இருப்பு: 36.10 அடி, கொள்ளளவு: 18.43 மி.க.அடி, நீர் வரத்து: 13.00 கன அடி, வெளியேற்றம்: 13.00 கன அடி.
அடவிநயினார்: உச்ச நீர்மட்டம்: 132.22 அடி, நீர் இருப்பு: 114.25 அடி, கொள்ளளவு: 129.58 மி.க.அடி, நீர் வரத்து : 7.00 கன அடி, வெளியேற்றம்: 25.00 கன அடி.
மழை அளவு விபரம் ஏதும் இல்லை..
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தென்காசி மாவட்டத்தில் என்எம்எம்எஸ் (NMMS) தேசிய திறனறி மாதிரி தேர்வு; சிறப்பிடம் பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கல்..
written by Abubakker Sithik
பள்ளி கல்வித்துறை, தென்காசி மாவட்ட மைய நூலகம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து தென்காசி மாவட்ட அளவில் எட்டாம் வகுப்பு பயின்று வரும் பள்ளி மாணவ செல்வங்களுக்கு இலவச பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக மாவட்ட அளவில் இரண்டாவது இலவச மாதிரி தேர்வு தென்காசி மஞ்சம்மாள் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. தென்காசி, கடையநல்லூர், புளியங்குடி, சங்கரன்கோவில், ஆலங்குளம், செங்கோட்டை, வாசுதேவநல்லூர், சிவகிரி, ஆலங்குளம், இலஞ்சி உள்ளிட்ட பல பகுதிகளை சேர்ந்த 640 பள்ளி மாணவச் செல்வங்கள் இத்தேர்வினில் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். உதவித்தொகை வழங்கப்படுவதற்கான மாதிரி தேர்வாக இத்தேர்வு இருப்பதால் அரசு பள்ளியில் பயின்று வரும் மாணவர் செல்வங்கள் ஆர்வமுடன் அதிக அளவில் தேர்வில் கலந்து கொண்டனர். தென்காசி மாவட்ட மைய நூலகம் மூலம் கடந்த பல ஆண்டுகளாக இது போன்ற இலவச பயிற்சி மாதிரி தேர்வுகள் மூலம் ஆண்டுதோறும் அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் உதவித்தொகை பெற்றுவருவது நம் மாவட்டத்திற்கும் தென்காசி நூலகத்திற்கும் பெருமை சேர்க்கும் நிகழ்வாகும்.
மேலும், இத்தேர்வு நிறைவுற்றதும் அறிவியல் இயக்கம் சார்பில் சமத்துவ பொங்கல் விழா நகர்மன்ற தலைவர் சாதிர் தலைமையில், துணைத்தலைவர் கேஎன்எல் சுப்பையா, ஐக்கிய நல கூட்டமைப்பு தலைவர் வி.டி.எஸ்.ஆர் நிறுவனர் முகம்மது இஸ்மாயில், தேசிய பசுமைப்படை மாவட்ட செயலாளர் பேராசிரியர் விஜயலட்சுமி, அருட்தந்தை போஸ்கோ ஜெயசீலன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. நிகழ்வில் மாதிரி தேர்வில் 100 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று சிறப்பிடம் பெற்ற 40 மாணவ செல்வங்களுக்கு பரிசு வழங்கி பாராட்டப்பட்டது. ஏற்பாடுகளை வட்டார கல்வி அலுவலர் இளமுருகன் மாரியப்பன், அறிவியல் இயக்க சுரேஷ்குமார், முதல் நிலை நூலகர் முனியப்பன், ஆய்வாளர் சண்முகசுந்தரம், நூலகர்கள் பிரமநாயகம், சுந்தர், ஜூலியாராஜ செல்வி, நிஹ்மதுனிஸா, ஆசிரியர்கள் கற்பகம், செண்பககுமார், இஸ்மாயில், வின்சென்ட், செந்தில் ஒலிவாவா, ஸ்டெல்லா, வாசகர் வட்ட குழந்தைஜேசு, முருகேசன், அறிவியல் இயக்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தென்காசி மாவட்டத்தில் காவலர்களின் குடும்பங்களுக்கான பொங்கல் விளையாட்டு போட்டிகள்; மாவட்ட எஸ்.பி துவக்கி வைத்து பரிசுகளை வழங்கினார்..
written by Abubakker Sithik
தென்காசி மாவட்டத்தில் காவலர்களின் குடும்பங்களுக்கான பொங்கல் விளையாட்டு போட்டிகள் நடந்தது. மாவட்ட எஸ்.பி. போட்டிகளை துவக்கி வைத்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ் குமார் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் அனைத்து உட்கோட்டங்கள் மற்றும் ஆயுதப்படை காவல்துறையினர் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் கலந்து கொண்ட பொங்கல் விளையாட்டு போட்டிகள் சிறப்பாக நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நிகழ்ச்சியை துவங்கி வைத்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ஆபத்தான நிலையில் உள்ள பாலங்களுக்கு பாதுகாப்பு சுவர்களை ஏற்படுத்த வேண்டும்; நெல்லை மாவட்ட பொதுஜன பொது நல சங்கம் வலியுறுத்தல்..
written by Abubakker Sithik
நெல்லையில் ஆபத்தை ஏற்படுத்த காரணமாக இருக்கும் பாலங்களுக்கும் பாதுகாப்பு சுவர்களை ஏற்படுத்த வேண்டும் என நெல்லை மாவட்ட பொதுஜன பொது நலச் சங்கம் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இது பற்றிய கோரிக்கை மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கடந்த மாதம் பெய்த கனமழை வெள்ளத்தின் காரணமாக நெல்லை டவுண் வேணுவன குமாரர் கோயில் தெரு, சற்று தூரத்திலுள்ள பெரிய தெரு ஆகிய இரண்டு பாலங்களின் பாதுகாப்பு சுவர்கள் இடிந்து விழுந்து விட்டது. பள்ளிக்கு சென்று வரும் மாணவ மாணவியர்கள், வயதானவர்கள், கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் மற்றும் வாகனங்களில் செல்லக்கூடியவர்கள் அனைவரும் இந்த பாலங்களை கடந்து செல்வது பாதுகாப்பற்றதாக உள்ளது. ஆதலால் இந்த இரு பாலங்களுக்கும் பாதுகாப்பு சுவர்களை விரைவாக ஏற்படுத்தி பொது மக்களின் அச்சத்தை போக்கிட ஆவன செய்திட வேண்டும். அதுவரை இந்த பாலங்களில் சுவர்கள் இல்லாததை அடையாளப்படுத்தும் வகையில் தடுப்புகளை வைத்திட வேண்டும் என நெல்லை மாவட்ட பொதுஜன பொது நலச் சங்கத்தின் தலைவர் எம். முஹம்மது அய்யூப் கேட்டுக்கொண்டுள்ளார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
புள்ளி மான்களை வேட்டையாடிய இருவருக்கு 1 லட்சம் அபராதம்; வனத்துறை அதிரடி நடவடிக்கை..
written by Abubakker Sithik
உள்ளார் கிராமத்திற்கு மேற்கே உள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் புள்ளி மான்களை வேட்டையாடிய இருவருக்கு வனத்துறையினர் ரூ 1 லட்சம் அபராதம் விதித்தனர். இது குறித்து வனத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தென்காசி மாவட்டம் சிவகிரி பகுதியில் காவல் துறையினர் ஜன. 08 செவ்வாய் கிழமை இரவு 11.30 மணியளவில் ரோந்துப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது சிவகிரி காந்தாரியம்மன் கோவில் அருகே வெகு நேரமாக சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த கார் ஒன்றினை சோதனை செய்ததில் காரின் உள்ளே மூன்று மான் கொம்புகள் இருந்தன. இந்நிலையில் சிவகிரி காவல் துறையினர் ஜன 09 காலை சுமார் 11.00 மணியளவில் சிவகிரி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதை தொடர்ந்து கார் மற்றும் மூன்று மான் கொம்புகள் சிவகிரி வனத்துறை வசம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து சிவகிரி வனச்சரக அலுவலர் இரா. மௌனிகா தலைமையில், சிவகிரி வடக்குப்பிரிவு வனவர் அசோக்குமார், மற்றும் வனப் பணியாளர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சிவகிரி தாலுகா வாசுதேவநல்லூர் பெத்திராஜ் தெருவைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் கிருஷ்ணகுமார் (24), மற்றும் வாசுதேவநல்லூர் களஞ்சியம் தெருவைச் சேர்ந்த பொன்ராஜ் மகன் தியாகு (24) ஆகிய இரண்டு நபர்களும் 01.01.2024 ஆம் தேதி உள்ளார் கிராமத்திற்கு மேற்கே உள்ள பாதுகாக்கப்பட்ட காட்டுப் பகுதியில் புள்ளிமானை வேட்டையாடிய குற்றம் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் மான் கொம்புகள் வைத்திருந்த குற்றம் உறுதி செய்யப்பட்டு சிவகிரி வனச்சரக அலுவலகத்தில் வைத்து வனஉயிரின குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு மாவட்ட வனஅலுவலர் மற்றும் வன உயிரினக் காப்பாளர் முருகன் உத்தரவின் பேரில் நபர் 1-க்கு ரூ 50,000 வீதம் 2 நபர்களுக்கு ரூ.1,00,000 (ஒரு லட்சம்) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தென்காசி தலைமை மருத்துவமனையில் சமத்துவ பொங்கல் விழா; மருத்துவர்கள் அனைத்து பணியாளர்கள் பங்கேற்பு..
written by Abubakker Sithik
தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவர்கள் மற்றும் அனைத்து பணியாளர்களும் இணைந்து சமத்துவ பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் தென்காசி மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் நலப் பணிகள் மருத்துவர். பிரேமலதா சிறப்பு விருந்தினராக கலந்து சிறப்பித்தார். மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர். இரா. ஜெஸ்லின் தலைமையில், உறைவிட மருத்துவர் செல்வபாலா, பல் மருத்துவர் லதா மற்றும் மூத்த மருத்துவர்களின் ஏற்பாட்டில் சமத்துவ பொங்கல் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியில் இணை இயக்குனர் நலப் பணிகள் அலுவலக நிர்வாக அலுவலர் ஆறுமுகம் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர். இணை இயக்குனர் நலப்பணிகள், மருத்துவமனை கண்காணிப்பாளர், உறைவிட மருத்துவர், நிர்வாக அலுவலர், மூத்த மருத்துவர்கள், செவிலிய கண்காணிப்பாளர்கள், மருந்தாளுனர்கள், ஆய்வக நுட்புணர்கள், இணை இயக்குனர் அலுவலக பணியாளர்கள், செவிலியர்கள் மற்றும் இதர பணியாளர்கள் என சுமார் 350 பேர் கலந்து கொண்டு பொங்கலிட்டு விழாவினை சிறப்பித்தனர். விழாவில் (ART Center) கூட்டு மருந்து சிகிச்சை மையத்தில் பணியாற்றும் பணியாளர்கள், NGO பணியாளர்கள் மற்றும் நோயாளிகளும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் சுமார் 30 பேருக்கு மருத்துவமனை நிர்வாகம் சார்பாக காய்கறிகள் நிறைந்த பொங்கல் பரிசு பைகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து பொங்கல் விளையாட்டுப் போட்டிகள் அனைத்து பணியாளர்களுக்கும் நடத்தப்பட்டது. அதில் மருத்துவமனை கண்காணிப்பாளர் முதல் அனைத்து மருத்துவர்கள், பணியாளர்களும் கலந்து கொண்டு ஆர்வமுடன் விளையாடினர். விளையாட்டு நிறைவு பெற்ற பின் மதியம் அறுசுவை உணவும், பொங்கலும் அனைவருக்கும் வழங்கப்பட்டது. 2024 பொங்கலின் சிறப்பு அம்சமாக தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையிலும் இணை இயக்குனர் நலப்பணிகள் அலுவலகத்திலும் பணிபுரியும் அனைத்து பணியாளர்களுக்கும் காய்கறிகள் நிறைந்த பொங்கல் பரிசு பைகள், மருத்துவமனை நிர்வாகத்தின் சார்பாக இணை இயக்குனர் நலப்பணிகள் மூலம் வழங்கப்பட்டது. இணை இயக்குனர் மருத்துவர் பிரேமலதா, நிர்வாக அலுவலர் ஆறுமுகம் மற்றும் மருத்துவமனை கண்காணிப்பாளர் மரு. இரா. ஜெஸ்லின் ஆகியோர் சமத்துவ பொங்கலின் சிறப்புகளை மேற்கோள்காட்டி அனைவருக்கும் பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர். மருத்துவமனை நிர்வாகம் சார்பாக, போட்டியில் வெற்றி பெற்ற வெற்றியாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் ஜெஸ்லின் சமத்துவ பொங்கல் நிகழ்ச்சியில் கலந்து சிறப்பித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தென்காசி மாவட்ட திமுக செயற்குழு கூட்டத்தில் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம்..
written by Abubakker Sithik
தென்காசியில் நடந்த திமுக செயற்குழு கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் இலஞ்சி ட்ரிஸ்ஸில் ஹோட்டலில் மாவட்ட அவைத் தலைவர் சுந்தரமகாலிங்கம் தலைமையில் நடைபெற்றது. தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் வே. ஜெயபாலன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். இந்த கூட்டத்தில் மாவட்டத் துணை செயலாளர்கள் தமிழ்ச்செல்வன், கென்னடி, கனிமொழி, மாவட்ட பொருளாளர் ஷெரிப், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் செல்லத்துரை, முத்துப்பாண்டி, சேக்தாவூது, ஜேசுராஜன், ஆறுமுகச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி தென்காசி தெற்கு மாவட்டம் முழுவதும் திமுக கொடியேற்றி இனிப்புகள் வழங்குவது, சேலம் இளைஞரணி மாநாட்டிற்கு அதிகமானோர் கலந்து கொள்வது, தென்காசி மாவட்டத்திற்கு வெள்ள நிவாரணம் ரூ. 1000 மற்றும் பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பரிசுத்தொகுப்புடன் ரூ. 1000 வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள் ரஹீம், அருள், சமுத்திர பாண்டியன், ராஜேஸ்வரன், கதிர்வேல் முருகன், தமிழ்செல்வி, ரவிச்சந்திரன் மாநில விவசாய அணி துணைச் செயலாளர் அப்துல் காதர், ஒன்றிய செயலாளர்கள் செல்லத்துரை, சிவன் பாண்டியன், அன்பழகன், திவான் ஒலி, சீனித்துரை, மாரி, வண்ணமுத்து, அழகு சுந்தரம், ஜெயக்குமார், மகேஷ் மாயவன், சுரேஷ், நகரச் செயலாளர்கள் சாதீர், வெங்கடேசன், அணி அமைப்பாளர் கிருஷ்ணராஜ், இசக்கிபாண்டியன், மாவட்ட அரங்க ஆர்வலர்கள், துணைத் தலைவர் சுப்பையா, ரமேஷ், சங்கீதா சுதாகர், திவ்யா மணிகண்டன், முத்துகுமார், இஞ்சி இஸ்மாயில், கோமதி நாயகம், முருகன், பொன்செல்வன் பேரூர் செயலாலர்கள் சுடலை, சங்கர் (எ)குட்டி, லெட்சுமணன், பண்டாரம், முத்தையா, தங்கப்பா, ராஜராஜன், சிதம்பரம், வெள்ளத்துரை, புதூர் கோபால், அழகேசன், முத்து, ஜெகதீசன், நெல்சன், மாவட்ட சார்பு அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், மக்கள் பிரதிநிதிகள், ஒன்றிய நகர பேரூர் நிர்வாகிகள் மற்றும் திமுகவினர் பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ஊத்துமலை பகுதி மனுநீதி நாள் முகாமில் நலத்திட்ட உதவிகள்; தென்காசி மாவட்ட கலெக்டர் வழங்கினார்..
written by Abubakker Sithik
ஊத்துமலை கிராம பகுதியில் நடந்த மனுநீதி நாள் முகாமில் 59 பயனாளிகளுக்கு ரூ. 2,44,975 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் துரை. ரவிச்சந்திரன் வழங்கினார். தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் வட்டத்திற்கு உட்பட்ட ஊத்துமலை கிராமத்தில் சாந்த மரகதம் மஹாலில் மாவட்ட ஆட்சித்தலைவர் துரை. இரவிச்சந்திரன் தலைமையில் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பழனிநாடார் முன்னிலையில் 11.01.2024 அன்று மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. இம்முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் பேசியதாவது, தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க ஒவ்வொரு மாதமும் மனுநீதிநாள் முகாம் நடைபெற்று வருகிறது. இம்முகாமில் கடைக்கோடியில் உள்ள பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கண்டறிந்து இம்முகாம் மூலம் வழங்கப்படுகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் பல்வேறு எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி மக்களின் தேவைகளை பூர்த்தி செய்து வருகிறார். முன்னாள் அமைச்சர் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு பல்வேறு பொதுமக்களுக்கு பட்டாக்கள் வழங்கப்பட்டது. பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1000 வழங்கப்பட்டுள்ளது. இதுபோல பல எண்ணற்ற நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது. தமிழ்நாடு அரசின் அனைத்து திட்டங்களும் பொதுமக்களுக்கு சென்றடைய வேண்டும் என்பதே அரசின் நோக்கமாகும். எனவே பொதுமக்கள் அனைவரும் அனைத்து திட்டங்களையும் பயன்படுத்தி பயன்பெற வேண்டும் என தெரிவித்தார்.
இம்முகாமில் வருவாய்த் துறையின் மூலம் 4 பயனாளிகளுக்கு பட்டா மாற்றத்திற்கான ஆணையிணையும், சமூக பாதுகாப்பு திட்டத்தின் மூலம் 2 பயனாளிகளுக்கு மாற்றுத்திறனாளி உதவித் தொகைக்கான ஆணையினையும், 2 பயனாளிகளுக்கு விதவை உதவித் தொகைக்கான ஆணையினையும், 2 பயனாளிகளுக்கு முதியோர் உதவித் தொகைக்கான ஆணையினையும், குடிமைப்பொருள் வழங்கல் துறையின் மூலம் 15 பயனாளிகளுக்கு குடும்ப அட்டை நகல்களையும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மூலம் 10 பயனாளிகளுக்கு தூய்மை பணியாளர் நலவாரிய அட்டைகளையும், தாட்கோ மூலம் 9 பயனாளிகளுக்கு நலவாரிய அட்டைகளையும், வேளாண்மைத் துறையின் மூலம் வேளாண்மை இயந்திரமாக்கும் துணை இயக்கத் திட்டத்தின் கீழ் 2 பயனாளிகளுக்கு ரூ.68,000 மதிப்பிலான சுழற் கலப்பைகளையும், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 5 பயனாளிகளுக்கு ரூ.10,375 மதிப்பிலான மின்விசை தெளிப்பானையும், நெல்லுக்குப்பின் உழுந்து திட்டத்தின் கீழ் 2 பயனாளிகளுக்கு ரூ.2,000 மதிப்பிலான 20 கிலோ உழுந்தினையும், தோட்டக் கலைத்துறை மூலம் தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ் 1 பயனாளிக்கு தக்காளி நாற்றுகளும், 1 பயனாளிக்கு பூச்சி ஊட்டச்சத்து மேலாண்மையும், 1 பயனாளிக்கு கொய்யா பரக்கும் விரிவாக்கும் என மொத்தம் 3 பயனாளிகளுக்கு ரூ. 13,600 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும், மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்தறை மூலம் 3 கர்ப்பிணி தாய்மார்களுக்கு சஞ்வீவி பெட்டகத்தினையும் என மொத்தம் ரூ. 2,44,975 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் துரை. இரவிச்சந்திரன் வழங்கினார்.
முன்னதாக மனுநீதி நாள் முகாமில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மூலம் தமிழ்நாடு அரசின் திட்டங்கள் குறித்த கண்காட்சியினையும், தோட்டக்கலை துறை வேளாண்மை துறை, மற்றும் பல்வேறு துறைகளின் மூலம் அரசு திட்டங்கள் குறித்து பொது மக்கள் அறிந்து கொண்டு பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியினையும் மாவட்ட ஆட்சித் தலைவர், தென்காசி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டார்கள். இந்நிகழ்ச்சியில் தென்காசி வருவாய் கோட்டாட்சியர் லாவண்யா, ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் திவ்யாமணிகண்டன், வீரகேரளம்புதூர் வட்டாட்சியர் அழகப்பராஜா, தனித்துணை ஆட்சியர் (சமூகபாதுகாப்பு திட்டம்) தெய்வ குருவம்மாள், வேளாண்மைத்துறை இணை இயக்குநர் பத்மாவதி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி நல அலுவலர் முருகானந்தம், ஒன்றிய கவுன்சிலர்கள் முரளிராஜ், மலர்க்கொடி, ஊத்துமலை ஊராட்சிமன்றத் தலைவர் (பொ) பிச்சம்மாள், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) ரா.ராமசுப்பிரமணியன் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் பொது மக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!
பகுதி -1
கப்ளிசேட்
உமையாக்களின் பேரரசு-6
(கி.பி.661-750)
உமைய்யா அவர்களுக்கு யஜீத் மற்றும் அபூசுஃபியான் என்ற இரண்டு மகன்கள் இருந்தனர்.
அப்துல் முத்தலீப் குடும்பத்தினருக்கும்உமைய்யா குடும்பத்தினருக்கும்
இடையே இருந்த பனிப்போர் தொடர்ந்தது.
பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹிவ ஸல்லம்
அவர்கள் ஹிஜ்ரி எட்டாம் ஆண்டு மக்காவை வெற்றி கொண்டபோது ,
யஜீத், அபூசுஃபியான்
அவரது மனைவி ஹிந்தா இவர்களது மகன் முஆவியா (ரலி)
ஆகியோர் இஸ்லாத்தை ஏற்றனர்.
இஸ்லாத்தை ஏற்கும் போது முஆவியா (ரலி) அவர்களுக்கு 26 வயது என்று கூறப்படுகிறது.
இவர்களின் முழுக்குடும்பமும்
இஸ்லாத்தை ஏற்றபிறகு இரு பங்காளி குடும்பங்களுக்
கிடையே
நிலவிவந்த பனிப்போர் முடிவுற்றது.
அபூபக்கர் (ரலி) அவர்களின் காலத்தில் முஆவியா (ரலி) அவர்களின் சகோதரர் யஜீத் அவர்களின் தலைமையில் சிரியாவிற்கு ஒரு படை அனுப்பப்பட்டது.
அதில் முஆவியா (ரலி)அவர்களும் ஒரு வீரராக சிரியா சென்றார்கள்.
அபூபக்கர் (ரலி) மரணத்திற்கு பிறகு உமர் (ரலி) கலீபாவாக பதவி ஏற்றார்கள்.
சிரியாவில் யஜீதும் மரணமடைய உமர்(ரலி) அவர்கள்
முஆவியா (ரலி) அவர்களை சிரியாவில் உள்ள டமாஸ்கஸ் பகுதிக்கு கவர்னராக நியமித்தார்கள்.
அப்போது சிரியா டமாஸ்கஸ்,ஹிம்மஸ்,
பாலஸ்தீனம் என்று மூன்று பகுதிகளாக இருந்தது.
உமர்(ரலி) அவர்கள் மரணித்த போது பதவியேற்ற உதுமான் (ரலி) அவர்களும், முஆவியா (ரலி) அவர்களும் உமைய்யா குடும்பத்தை சேர்ந்த மிக நெருங்கிய உறவினர்கள்.
முஆவியா (ரலி) அவர்களின் திறமையை அறிந்த உதுமான்(ரலி) அவர்கள் முழு சிரியா என்ற பெரிய நிலப்பரப்பிற்கு முஆவியா (ரலி) அவர்களையே கவர்னராக நியமித்தார்கள்.
கவர்னராக மிகச்சிறப்பாக பணியாற்றி மக்களிடையே நன்மதிப்பை
பெற்று சிறப்பாக நிர்வாகத்தை நடத்தினார்.
பொதுவாக குலபாயே ராஷீதீன்கள் என்றழைக்கப்பட்ட
அபூபக்கர் (ரலி)
உமர்(ரலி) உதுமான் (ரலி)அலி(ரலி) இவர்களின் முப்பது ஆண்டுகால ஆட்சி இஸ்லாமிய கலீபாக்களின் ஆட்சி என்றும், இஸ்லாமிய முழுவழிமுறை
களோடு
நடைபெற்ற ஆட்சி என்றும் வரலாறு கூறுகிறது.
கலீபாக்கள் மிக எளிமையாக வாழ்ந்தார்கள்.
பைத்துல்
மாலிலிருந்து
(இஸ்லாமிய அரசின் பொது கருவூலம்)
இவர்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டது.
இவர்கள் இவர்களுக்கென தனிப்பட்ட காவலர்களை வைத்து கொள்ளவில்லை.
அப்துல்லாஹ் இப்னு சபா என்ற யூதன் இஸ்லாத்தை
வீழ்த்தவேண்டும் என்ற நோக்கத்தில்
உதுமான் (ரலி) அவர்களின் காலத்தில் முஸ்லீமாக மாறினான்.
அலி(ரலி) அவர்களுக்கு கிடைக்க வேண்டிய கிலாபத்தை உதுமான் (ரலி) தடுத்துதான் கலீபாவாக ஆகி விட்டார் என்று கட்டுக்கதைகளை உருவாக்கினான்.
அலி(ரலி) அவர்கள் மீது மிகுந்த மரியாதை இருப்பதாக நடித்து
இஸ்லாத்திற்குள் கொள்கை குழப்பங்களை ஏற்படுத்தினான்.
பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹிவ ஸல்லம் அவர்களும் அவர்களுக்கு பிறகு அலி(ரலி) அவர்களும் அதனை தொடர்ந்து அவர்களின் பரம்பரையில் 12 இமாம்கள் என்றும் குழப்பத்தை ஏற்படுத்தி ஷியா பிரிவு (அலி(ரலி)அவர்களை பின்பற்றுபவர்கள்)
என உருவாக்கினான்.
இதனால் ஏற்பட்ட நிகழ்வுகளும்,
அதன் தாக்கங்களும்
இஸ்லாமிய உலகில் இன்றுவரை தொடர்கிறது.
வரலாறு படைக்க வரலாற்றை தொடர்ந்து வாசிப்போம்..!
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
விமன் இந்தியா (WIM) மூவ்மென்ட் மாவட்டத் தலைவர் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு வாழ்த்து செய்தி
by Baker BAker
written by Baker BAker
இராமநாதபுரம் மாவட்டம் (WIM) விமன் இந்தியா மூவ்மென்ட் கிழக்கு மாவட்டம் தலைவர் ரம்ஜான் பேகம் பி.காம் செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது : பில்கிஸ் பானு வழக்கு -11 கொடுங் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து உரிய தண்டனை வழங்கவேண்டும். பில்கிஸ் பானு பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளை விடுவிக்க குஜராத் அரசுக்கு அதிகாரம் இல்லை பலஉண்மைகளை மறைத்து மோசடி மூலம் குஜராத் அரசால் விடுதலை செய்வதற்காக உத்தரவுகள் பெறப்பட்டுள்ளன 11 பேரை விடுவித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்படுகிறது . இந்த அதிரடியானஉச்சநீதிமன்ற தீர்ப்பை விமன் இந்தியா மூவ்மெண்ட் வரவேற்கிறது. பல வருடங்களுக்கு மேலாக நீதி வேண்டிசட்டம் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது . உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு சற்று ஆறுதல் அளிக்கிறது 11 கொடுங் குற்றவாளிகளை உடனடியாக கைதுசெய்து உரிய தண்டனையை காவல்துறையும் நீதிதுறையும் வழங்க வேண்டும் என விமன் இந்தியா மூவ்மெண்ட் வலியுறுத்துகிறது . காலம் கடந்து வந்த இந்த தீர்ப்பு பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்கிறது. இறுதியாக நீதியே வெல்லும் என்று இந்த தீர்ப்பு நிரூபிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகளுக்கான விழிப்புணர்வு பேரணி.. வீடியோ செய்தி..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று (10.01.2024) தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் 6வது தேசிய அளவிலான கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகளுக்கான விழிப்புணர்வு பேரணி மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரன் தலைமையில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் காந்தி முன்னிலையில் கொடியசைத்து தூங்கி வைத்தனர். இப்பேரணியில் மாவட்ட காவல்துறை காவலர்கள் இருசக்கர வாகனத்தில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஆர்வமூட்டும் வகையிலும் ராமநாதபுரம் நகர் முழுவதும் அணிவகுப்போடு பேரணியாக வலம் வந்தனர்.
இதில் மாவட்ட விளையாட்டு அலுவலர் தினேஷ் குமார் ஆயுதப்படை ஆய்வாளர் சிவா ஆயுதப்படை சார்பு ஆய்வாளர்கள் சுனில் குமார் , தாசன் , ராஜு , துரை ,ராதா கிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
நமது நாட்டிற்கு பெருமையை தேடித்தந்த இயற்பியல் பேராசிரியர் மருத்துவர். செந்தில்குமார்..
by Askar
written by Askar
நமது நாட்டிற்கு பெருமையை தேடித்தந்த இயற்பியல் பேராசிரியர் மருத்துவர். செந்தில்குமார்..
மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் உதவி இயற்பியல் பேராசிரியராக பணிபுரியும் மருத்துவர்.செந்தில்குமார்
கதிரியக்க பாதுகாப்பு கவச உடை கண்டுபிடிப்பை பாராட்டி இந்திய அரசு காப்புரிமை வழங்கி சிறப்பித்துள்ளது இதை கேள்விப்பட்ட மதுரை கலாம் சமூக நல அறக்கட்டளை நிறுவனர் சேவா ரத்னா. Dr. ஆ. மாயகிருஷ்ணன் மதுரை ராஜாஜி மருத்துவமனை முதல்வர் .Dr இரத்தினவேல் தலைமையில் மருத்துவர் செந்தில்குமார் அவர்களுக்கு பாராட்டி சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கி சிறப்பித்தார்கள் . மேலும் மருத்துவர் செந்தில்குமார் இதுவரை 40க்கும் மேற்பட்ட கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்துள்ளார் என்பது மதுரை ராஜாஜி மருத்துவமனையின் மருத்துவர்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது என்பதே சரியாகும், மருத்துவமனை முதல்வர் ரத்தினவேல் செந்தில்குமார் தொடர்ந்து ஊக்கமும் ஆதரவும் அளித்து வருகிறார். தமிழகத்திலேயே இரண்டாவது பெரிய மருத்துவமனையாக கருதப்படும் நமது ராஜாஜி மருத்துவமனைக்கு பெருமை சேர்த்து வரும் முதல்வர் அவர்களுக்கும் மருத்துவர் செந்தில்குமார் அவர்களுக்கும் கலாம் சமூக நல அறக்கட்டளை சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்தோம், இந்நிகழ்வில் திருமங்கலம் சமூக ஆர்வலர் கார்த்திக் மற்றும் ஸ்ரீதரன் கலந்து கொண்டனர்..
செய்தியாளர், வி.காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!
பகுதி -1
கப்ளிசேட்
உமையாக்களின் பேரரசு-3
(கி.பி.661-750)*
கப்பல் சிரியாவின் டமாஸ்கஸை நோக்கி
சீரான வேகத்தில் ஓடத் துவங்கியது.
ரோமாபுரி பேரரசின் அமைச்சரும் அவரின் பாதுகாவலர்களும் திகைத்துப் போயினர்.
கடற்கரையிலிருந்த அமைச்சரின் பாதுகாப்பு வீரர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
ரோமப்பேரரசின் அமைச்சர்கள் மிகுந்த ஆடம்பரமான வாழ்க்கை வாழ்ந்தனர்.
ரோம சக்கரவர்த்தி ஏராளமான வரிகளை குடிமக்கள் மீது விதித்து இருந்தார்.
அமைச்சர்களுக்கு பெரிய மாளிகைகள்,
பாதுகாப்பு வீரர்கள் என ஏராளமான சலுகைகள் இருந்தன.
அமைச்சர்களும் ஊழலில் திளைத்து போய் இருந்தனர்.
இவர்களை போப் அவர்கள் மட்டுமே கட்டுப்படுத்த முடியும் என்று சூழலில்,
தங்களை வெல்லவே முடியாது மக்கள் அனைவரும் தங்களின் அடிமைகள் என்று மிகுந்த செருக்குடன் இருந்தனர்.
இந்த நிலையில் தான் தங்கள் கண்ணெதிரே அமைச்சரின் கடத்தல்
நடந்ததை அவர்களால் நம்பமுடியவில்லை.
சக்கரவர்த்திக்கு செய்தி பறந்தது.
சக்கரவர்த்தி கொதித்து போனார்.
அமைச்சரை மீட்க கப்பல்படையை உடனடியாக அனுப்பினார்.
அமைச்சரை அழைத்துவந்த கப்பலிலிருந்த முஸ்லீம் வீரர்கள், அமைச்சரை பாதுகாப்பாக ஆனாலும் சுதந்திரமாக கப்பலில் உலவ விட்டனர்.
ரோமவீரர்களின் மது அருந்துதல் ,நடனம், விபச்சாரம்
போன்ற பொழுது
போக்குகளை அதுவரை படைப்பிரிவுகளில்
பார்த்து வந்த ரோம அமைச்சருக்கு,
முஸ்லீம் வீரர்களின் கட்டுப்பாடுகளும்,
ஒழுக்கங்களும்,
ஐந்துநேரம் இறைவனை தொழும் தொழுகைகளும், மனதை கவர்ந்தன.
ரோம பேரரசின் அமைச்சர், கலீபா முஆவியா (ரலி) அவர்கள் முன்பு அழைத்து வரப்பட்டார்
அவருக்கு ஓய்வும்,
நல்ல தங்குமிடமும் சுவையான உணவுகளும்,
சரியான உடையும், கலீபாவின்
உத்தரவுப்படி
வழங்கப்பட்டு இருந்தது.
கலீபாவின் சபைக்கு
அந்த அமைச்சரிடம் அடிவாங்கிய நபித்தோழர் அழைத்து வரப்பட்டார்.
அவரிடம் உங்களை எந்த அளவு அமைச்சர் அடித்தாரோ அதே அளவு அமைச்சரை அடிக்க கலீபா உத்தரவிட்டார்கள்.
கலீபா அவர்கள் தனது மக்களிடமும், அவரிடம் பணிபுரியும் ஊழியர்களிடத்திலும் வைத்திருந்த பிரியத்தையும் நம்பிக்கையையும் பார்த்து வியப்புற்ற தோழர் அமைச்சரை மன்னித்து விடுவதாக அறிவித்தார்.
கலீபா முஆவியா (ரலி)
அவர்கள் தனது வீரருக்காக எடுத்த முயற்சியையும்,
கப்பலில் வரும்போது,
முஸ்லீம் வீரர்களின்
நடத்தையையும்,
நேரில் பார்த்து ஆச்சரியமடைந்த அந்த ரோம
சாம்ராஜ்ஜியத்தின்
அமைச்சர், தன்னிடம் அடிவாங்கிய தோழர் தன்னை
மன்னிப்பதாக கூறியதும்,
இந்த அழகிய நடைமுறைகளை இதயத்தில் ஏற்று அவர் முஸ்லீமாக மாறினார்.
வரலாறு படைக்க வரலாற்றை தொடர்ந்து வாசிப்போம்..!
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தின் உலக முதலீட்டாளர்கள் மாநாடு !
by Baker BAker
written by Baker BAker
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தின் உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024-ஐ தொடங்கி வைத்ததை இன்று (07.01.2024) மாவட்ட ஆட்சித்தலைவர் பா. விஷ்ணு சந்திரன் மற்றும் தொழில் முனைவோர்கள் இணைந்து காணொலிக்காட்சி மூலம் பார்வையிட்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ராமநாதபுரம் மாவட்டத்தில் போகலூர் சத்திரக்குடி போன்ற ஊர்களில் உள்ள கடைகளை உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் மரு.விஜயகுமார் தலைமையில் ஆய்வு நடைபெற்றது. இந்த ஆய்வில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளுக்கு 25,000 ரூ அபராதம் விதிக்கப்பட்டு அபராதமும் 15 நாட்கள் கடைகள் மூடப்பட்டது. மேலும் இரண்டாவது முறையாக புகையிலை விற்று பிடிபட்டால் 50000 ஆயிரம் அபராதமும் 30 நாட்கள் கடையினை மூடப்படும் என்றும் மூன்றாவது முறையாக பிடிபட்டால் 100000 அபதாரம் 90 நாட்கள் கடையினை மூடப்படும் என்றும் அந்தக் கடையில் உணவு பாதுகாப்புத் துறையின் மூலம் வழங்கப்பட்ட உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் கடை உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதில் உணவு பாதுகாப்பு அலுவலர் செந்தில்குமார் மற்றும் காவல்துறை சுகாதாரத்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!
என்ற வரலாற்று புதினத் தொடர் 1300 ஆண்டுகால இஸ்லாமிய ஆட்சிகளை,
வரலாற்றை,
கலாச்சாரத்தை
பேசும் தொடர்..!
இஸ்லாமிய சிம்மாசனங்கள்…!
பகுதி-1
கப்ளிசேட்!
உமையாக்களின் பேரரசு-1
(கி.பி.661-750)
மத்திய தரைக்கடல்
அலைகளின் ஆர்ப்பரிப்பு இல்லாமல் அமைதியாக இருந்தது.அன்று வானத்தில் நிலா வளரத் தொடங்கியிருந்தது.
நட்சத்திரங்களின் கண்சிமிட்டலில் வானம் வசீகரமாக மின்னியது.
கப்பல்களின் வெளிச்சங்களால்
அந்தப்பகுதி ஒளிக்கோளமாக காட்சி அளித்தது.
உமைய்யா முஸ்லீம் ஆட்சியாளர்களால்
உலகில் ஏராளமான நன்மைகள் ஏற்படப்போவதை அது முன்னறிவிப்பதாக இருந்தது.
மத்திய தரைக்கடலில்
முஸ்லீம்களின் கடற்படை பிரமாண்டமான கப்பல்களுடன்
அணிவகுத்து
சென்றது.
நூற்றுக்கு மேற்பட்ட கப்பல்கள் அணிவகுத்து சென்றன.
பலவகையான கப்பல்கள் முஸ்லீம்களின் கடற்படை வலிமையை பறைசாற்றுகிறது.
கப்பல்படைகளின் மையப்பகுதியில் அந்த பிரமாண்டமான இரண்டடுக்கு கப்பல் விர்ரென நீரை கிழித்துக்கொண்டு மிதந்து சென்றது.
கப்பலின் உச்சியில்
முஸ்லீம் ஆட்சியாளர்களான
உமைய்யாக்களின் கொடி காற்றில் படபடத்து பறந்தது.
கப்பலின் முதல் தளத்தில் முன்வலது பகுதியில் இருந்த
அந்த பெரிய அறையில் இரவுத்தொழுகை நடைபெற்றுக் கொண்டிருந்தது.
முஆவியா (ரலி) அவர்களின் நம்பிக்கைக்குரிய
தளபதி உக்பத் இப்னு நாபீ அவர்கள் இமாமாக தனது படைத்
தலைவர்களுக்கு
தொழுகை நடத்திக் கொண்டிருந்தார்.
நூறு கப்பல்களின் தளபதிகளும் உபதளபதிகளும் தளபதியின் கப்பலுக்கு வருகைதந்து இருந்தனர்.
ஆப்பிரிக்க,
ஐரோப்பிய நாடுகளை வெற்றிகொண்டு இறுதியாக அட்லாண்டிக் கடல் வரை சென்று இஸ்லாமியர்களின்
கொடியை ஏற்றவேண்டும் என்று
மிகுந்த திட்டமிடலோடு
பயணிக்கிறது
அந்தப் படை.
அன்று இரவு ஆலோசனைகள் நடைபெறப்போகிறது.
அதில் முக்கிய போர் திட்டங்களை
வியூகங்களை கலந்துபேசி இறுதியில் தளபதி உக்பா அவர்களின் முடிவுப்படி திட்டங்கள்
செயல்படுத்தப்படும்.
இறைச்சியின் மணங்கள் காற்றில் மிதந்து வருகிறது.
இருப்பினும் எளிமையான உணவுகள்.
இறைச்சி மட்டுமே அந்த உணவில் ஆடம்பரம்.
முதல் தளத்தின் வெளிப்பகுதியில்
விரிக்கப்பட்டிருந்த
சாதாரண விரிப்புகளில்
தளபதிகளும் உபதளபதிகளும் அமர்ந்து கொண்டனர்.
தொழுகை முடித்து இறுதியாக வந்த தளபதி உக்பத் இப்னு நாபீ என்ற உக்பா அவர்கள் தளபதிகளுக்கு தங்கள் கைகளாலேயே பரிமாறினார்கள்.
இறுதியாக முழங்காலிட்டு இஸ்லாமிய மரபுப்படி அமர்ந்து உணவை அருந்தி முடித்து இறைவனுக்கு நன்றி செலுத்திவிட்டு,
ஆலோசனைக்கூட்டம் நடைபெறும் கூடத்திற்குள் நுழைந்தார்.
ஆலோசனை கூடத்தில் ஜன்னல்கள் வழியாக தூரத்தில் சிறிதாக தெரிந்த வெளிச்சப் புள்ளிகள் சிறிது நேரத்தில் வெளிச்சம்
பெரிதாக..அது ஒரு கப்பல் படை அணிவகுப்பு என்று புரிந்து போனது..
திடீரென நெருப்புபொறிகள்
முஸ்லீம்களின் கப்பல்களை நோக்கி பறந்து வந்தன.
வரலாறு படைக்க வரலாற்றை தொடர்ந்து வாசிப்போம்..!
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
முதல் ஹைட்ரஜன் குண்டு வெடிப்பு ஆய்வினை நடத்திய, இந்திய அணுக்கரு உலையின் தந்தை, பத்மஸ்ரீ இராஜா இராமண்ணா நினைவு தினம் இன்று (செப்டம்பர் 24, 2004).
by ஆசிரியர்
written by ஆசிரியர்
இராஜா இராமண்ணா (Raja Ramanna) ஜனவரி 28, 1925ல் கர்நாடகா மாநிலத்தில் தும்கூரில் பிறந்தார். தந்தையார் பெயர் பி.ராமண்ணா நீதியரசாரப் பணியாற்றி வந்தார். தாயார் ருக்மணியம்மா. இவர் நல்ல அறிவாளியாகவும், கவிதை இயற்றுதல், மின்கருவிகளைப் பழுது பார்த்தல் ஆகியவற்றில் திறம் பெற்றவராகவும் இருந்தார். இராமண்ணாவின் வாழ்க்கையில் பெற்றோருக்கு அடுத்து இவரை ஈர்த்தவர் இவருடைய தாயின் சகோதரி இராஜம்மா ஆவார். பள்ளி ஆசிரியராகப் பணியாற்றிய அவர் கதைகள் புராணக் கதைகள், காப்பியக் கதைகள் ஆகியவற்றை இராமண்ணாவுக்குச் சொல்லி அவரின் அறிவு வளர்ச்சிக்கும் வழிகோலினார். இராமண்ணாவின் பெயரிலுள்ள இராஜா என்பது இராஜம்மா என்ற பெயரின் பகுதியாகும். இராமண்ணாவின் தொடக்கக் கல்வி மைசூரில் அமைந்தது. இவரின் குடும்பம் பெங்களூருக்குக் குடிபெயர்ந்ததால் அங்கு பிஷப் காட்டன் பள்ளியில் சேர்ந்து கல்வியைத் தொடர்ந்தார். இது ஆதரவற்ற ஆங்கிலோ இந்தியக் குழந்தைகளுக்கான பள்ளியாகும்.
சிறுவயதிலேயே இசையில் ஆர்வம் காட்டியதுடன் அதை முறையாகவும் பயின்றார். ஆங்கில வழிப்பள்ளியில் பயின்றதால் மேலைநாட்டுச் சங்கீதமும் இவரை ஈர்த்தது. பள்ளிப்படிப்பு முடிந்ததும், பெங்களூருவில் உள்ள புனித ஜோசப் கல்லூரியில் இன்டர் மீடியட் படிப்பை முடித்தார். பின்னர் சென்னையில் உள்ள தாம்பரம் கிறித்துவக் கல்லூரியில் மேற்படிப்பிற்காகச் சேர்ந்தார். அங்கு இயற்பியல் இளநிலை அறிவியல் பட்டம் பெற்றார். விஞ்ஞானப் பட்டம் பெற்ற பின், டாடா கல்வி உதவித் தொகை பெற்று இங்கிலாந்து சென்று லண்டனிலுள்ள அரசர் கல்லூரியில் சேர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டார். அணுக்கரு இயற்பியல் (Nuclear Physics), அணுவுலை இயற்பியல் (Reactor Physics), வடிவமைப்பு, மேற்கத்திய இசை, வேதாந்தம் ஆகியவற்றைச் சிறப்புப் பாடங்களாகப் பயின்றார். 1948ல் முனைவர் பட்டத்தையும், ராயல் இசைப் பள்ளியின் L.R.S.M பட்டயப் படிப்பையும் (Licentiate in Royal School of Music) பெற்றுக் கொண்டு இந்தியா வந்து சேர்ந்தார்.
இராமண்ணா கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும்போதே இந்திய அணுவியலறிஞர் ஹோமி ஜஹாங்கீர் பாபா மீது மதிப்பு கொண்டிருந்தார். 1944 ஆம் ஆண்டு இரண்டாம் உலகப் போரின் விளைவாக இந்தியாவில் தங்கியிருந்த திரித்துவ இசைக்கல்லூரியின் தேர்வாளர் முனைவர் ஆல்பிரெட் மிஸ்டோவ்ஸ்கி என்பவர் மூலம் பாபாவைச் சந்திக்கும் வாய்ப்பும் இவருக்குக் கிடைத்தது. மற்றொரு முறை பாபா லண்டன் சென்றிருந்த போது அங்கு கல்வி பயின்றுகொண்டிருந்த இராமண்ணா அவரை மீண்டும் சந்தித்தார். அப்போது பாபா இந்திய அணு ஆற்றல் நிகழ்வுகளுக்குத் தொட்டிலாய் விளங்கிய அடிப்படை ஆய்வுக்கான டாடா பயிற்சி நிறுவனத்தில் (TIFR-Tata Institute of Fundamental Research) சேர்ந்து பணியாற்ற இவருக்கு ஒரு வாய்ப்பு வழங்கினார். டிசம்பர் 1, 1949ல் இராமண்ணா அப்பணியில் அமர்ந்தார். மும்பையில் கும்பாலா குன்று என்ற இடத்தில் அமைந்திருந்த அந்நிறுவனம் அப்போதுதான் யாட்கிளப் பகுதிக்கு மாறி, புதிய கட்டடப் பணிகள் நடைபெற்று வந்தன.
இசையில் இவருக்கிருந்த ஆர்வத்தை உணர்ந்த பாபா தங்கும் விடுதியில் இவருக்கு என்று ஓர் அறை இவருடைய பியானோ இசைக்கருவியை வைக்க ஓர் அறை என இரண்டு அடுத்தடுத்த அறையை ஒதுக்கித் தந்தார். விடுதியில் தரைதளம் இவர் ஆய்வுகளை மேற்கொள்வதற்கான ஆய்வறையாக அமைந்தது. இங்கு அணுக்கருப் பிளவு மற்றும்ம் சிதறல் பற்றிய ஆய்வுகளை இவர் மேற்கொண்டார். இவர் சேரும்போது இந்நிறுவனம் தொடங்கி ஐந்தாண்டுகள் ஆகியிருந்தது. அப்பொழுது பாபாவின் காஸ்மிக் கதிர்கள் பற்றிய ஆய்வுகள் உலகப் புகழ் பெற்றிருந்தன. பாபாவின் தூண்டுதலால் தொடங்கப்பட்ட அணுக்கரு ஆய்வுக்குழு குறிப்பிடதக்க வகையில் பணியாற்றிய பெருமையுடையதாகும். தொழில்நுட்ப நடவடிக்கைகளும், அணுஆற்றல் திட்டங்களும் இந்தியாவில் தழைத்தோங்கி வளர இக்குழு மிகவும் கடுமையாக உழைத்தது. இதன் செயல்பாடுகளுக்கு மின்னணுவியல் துறையின் தலைவரான ‘ஏ.எஸ். ராவ்’ அவர்களும் ஒரு காரணமாக விளங்கினார். பல்வேறு இன்னல்களுக்கிடையேயும் இக்குழுவின் ஆய்வுகள் தொடர்ந்து நடந்து வந்தன.
நியூட்ரான், அணுக்கரு, அணுக்கரு உலை இயற்பியல் ஆகிய துறைகளில் இராமண்ணாவின் பங்கு குறிப்பிடத்தக்கது. பாபா அணு ஆய்வு மையத்தில் ஹோமி பாபாவின் தலைமையில் நடைபெற்ற ஆய்வுகளின் போது இராமண்ணா ஓரு இளைய ஆய்வாளராகப் பணியாற்றினார். 1956 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4 ஆம் நாள் முதல் அணுக்கரு உலையான ‘அப்சரா’ இக்குழுவினரால் உருவாக்கப்பட்டது. இதில் நியூட்ரான் பற்றிய ஆய்வுகளை இராமண்ணாவும், கோட்பாட்டு இயற்பியலில் கே.எஸ்.சிங்வியும், மின்னணுத் துறையில் கருவிகள் கண்காணிப்பு, கட்டுப்பாட்டு முறைகள் ஆகியவற்றில் ஏ.எஸ்.ராவும் பங்களித்தனர். அணுக்கரு உலையில் அமைக்கப்படும் எரிபொருளுக்கான துளைகள் அமைப்பு உருவாக்கத்திற்கு எந்திரப் பொறியாளர் வி.டி.கிருஷ்ணன் பொறுப்பேற்றார். இராமண்ணா துடிப்புமிக்க நியூட்ரான் மூலத்தைப் பயன்படுத்தி நீர் மற்றும் பெரிலியம் ஆக்சைடில் அதன் வேகத்தை மட்டுப்படுத்தி நியூட்ரான் விரலைத் திர்மாணித்தார். நியூட்ரான் வெப்பமேற்றலை நவீன முறைகளில் பல்வேறு ஆய்வுகள் மூலம் மேற்கொண்டார். அவ்வாறு செயல்படும்போது உருவாகும் நியூட்ரான் நிறமாலை பற்றியும் ஆய்வுகள் மேற்கொண்டார். இதில் கிடைத்த வெப்ப நியூட்ரான்கள் கற்றை அடிப்படை ஆய்வுகளுக்கு உதவியது.
யுரேனியம்-235ல் அணுக்கருப்பிளவினால் உருவாகும் துணைக்கதிர்வீச்சுகளைப் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டார். அவற்றின் ஆற்றல் மற்றும் கோணங்கள் ஆகியவற்றை அளந்தார். இந்த அளவீடுகள், நியூட்ரான்களின் வெளிப்பாடு, பிளவுத்துகள்களின் சராசரி சுழற்சி போன்றாவற்றைப் பற்றிப் பல தகவல்களை அறிய உதவின. வெப்ப மற்றும் வேக நியூட்ரான்களினால் தூண்டப்பட்ட அணுக்கருப் பிளவில் வெளிவரும் மின்னேற்ற இந்த துகள்கள் அவற்றின் வெளியேற்றம் பற்றிய முக்கியத் தகவல்களை அறிய உதவின. அணுக்கரு ஆய்வுகளில் ஈடுபட்ட இராமண்ணா, இந்த ஆய்வுகளில் தொடர்ந்து ஈடுபட பல இளம் அறிவியலறிஞர்களை உருவாக்குவதில் அதிக ஆர்வம் காட்டினார். அதற்காக 1975ல் இவர் தலைமையில் பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் பயிற்சிப் பள்ளி ஒன்றை ஆரம்பித்தது, இவர் எடுத்த முதல் முக்கியமான முயற்சியாகும். இங்கு பல அறிவியல் அறிஞர்கள் உருவாக்கப்பட்டனர். அவர்கள் அணு ஆற்றல் மற்ரும் விண்வெளி ஆய்வு மையங்கள், பாதுகாப்பு அமைச்சக ஆலோசகர், பல்வேறு ஆய்வகங்களின் இயக்குநர்கள், இந்திய அரசாங்கத்தின் அறிவியல் துறைச் செயலர்கள் என்று இந்திய நாட்டிற்குள் பல்வேறு வகைகளில் பணியாற்றி வந்துள்ளனர்.
1967-68ல் சான்ட பார்பராவில், கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில் பட்டதாரி மாணவர்களுக்கு உதவி ஆசிரியராகவும், 1971-73ல் லாஸ் ஏஞ்சல்சில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பட்டதாரி மாணவர்களுக்கு ஆசிரியராகவும் 1984ல் ஆம்ஸ்டர்டாமில் பயிற்சி ஆசிரியராகவும், 1987ல் சாந்திநிகேதனில் நடைபெற்ற உயர் ஆற்றல் இயற்பியல் குறித்த கோடைக்கலப் பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியராகவும், கணித அறிவியல் பயிற்சி நிறுவனத்தில் வகையீட்டு வடிவஇயல், குவைய எந்திரவியல், குவைய புலக்கோட்பாடு, அடிப்படைத் துகள் இயற்பியல் ஆகியவற்றில் பல வகுப்புகளையும் நடத்தியுள்ளார். சென்னையில் கணிதப் பயிற்சி நிறுவனத்திலும் அவ்வப்போது ஆசிரியராகப் பணிபுரிந்து வகுப்புகள் நடத்தியிருக்கிறார். இந்தியாவிலும் உலகில் உள்ள பலகைக்கழகங்களிலும் வருகைப் பேராசிரியராகவும் பணிபுரிந்துள்ளார். நேரிடையாகவோ அல்லது மறைமுகமாகவோ நமது நாட்டில் பல பயிற்சிக் கல்வி நிறுவனங்கள் உருவாக இவர் காரணமாக இருந்துள்ளார். இந்தூரில் முன்னேறிய தொழில்நுட்பமையம் (முன்னேற்றம் பெற்ற முடுக்கிகளை உருவாக்கும் பணி), முன்னேறிய படிப்புகளுக்கான தேசியப் பயிற்சி சிறுவனம் ஆகியவற்றை டாடாவின் உதவியால் தொடங்கி அதன் இயக்குநராகப் பெங்களூருவில் பொறுப்பேற்றார்.
1972 முதல் 1978 வரை இந்தியத் தொழில்நுட்பப் பயிற்சி நிறுவனத்தின் தலைவராகவும், 1977-78களில் இந்திய தேசிய அறிவியல் கழகத்தின் தலைவராகவும், அனைத்துலக அணுஆற்றல் நிறுவனத்தில் பொது இயக்குநருக்கான ஆலோசனைக் குழுவில் உறுப்பினராகவும் பின்னர் தலைவராகவும், 1986ல் அதன் முப்பதாவது பொது மாநாட்டின் தலைவராகவும் செயல்பட்டார். 1977-79ல் இந்திய அறிவியல் கழகத்தின் துணைத் தலைவராகச் செயல்பட்டார். பாதுகாப்பு ஆய்வு மற்றும் வளர்ச்சி நிறுவனத்தின் பொது இயக்குநராகவும் பணியாற்றினார். மும்பை பாபா அணுசக்தி ஆய்வு மையத்தின் இயக்குநராக 10 ஆண்டுகளுக்கும் (1972-1978, 1981-1983) மேலாகப் பணியாற்றினார். முதல் ஆறாண்டுகளை இராமண்ணாவின் அணுக்கரு விஞ்ஞானச் சாதனைகளின் பொற்காலம் என்று கூறலாம். அப்போதுதான் குறிமொழிப் பெயர் பூண்ட ‘சிரிக்கும் புத்தர்’ (Smiling Buddha) என்னும் முதல் அணுகுண்டு, ரகசிய அணு ஆயுதத் திட்டம் அவரது நேரடிக் கண்காணிப்பில் உருவானது. மே 18, 1974 ஆம் தேதி இராஜஸ்தானிலுள்ள பொக்ரான் பாலைவனத்தில் நிலத்தடி குண்டு வெடிப்பை இந்தியா நிகழ்த்தி உலக நாடுகளை பேரதிர்ச்சியிலும், பெரு வியப்பிலும் ஆழ்த்தியது.
டாக்டர் ஹோமி ஜெ.பாபா, டாக்டர் விக்ரம் சாராபாய், டாக்டர் ஹோமி என்.சேத்னா ஆகியோருக்குப் பின்பு தலைவராக, அணுசக்திப் பேரவைக்குத் (Atomic Energy Commission) டாக்டர் ராஜா ராமண்ணா 1983ல் தேர்ந்தெடுக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் பணியாற்றினார். 1990ல் வி.பி.சிங் அமைச்சரவையில் பாதுகாப்பு அமைச்சராகப் பணியாற்றியுள்ளார். 1997ல் நாடாளுமன்ற மேலவை உறுப்பினராகப் பணிபுரிந்தார். பெங்களூருவில் உள்ள முன்னேறிய படிப்புகளுக்கான பயிற்சி நிறுவனத்தின் இயக்குநராகவும் செயல்பட்டார். ஜவஹர்லால் நேரு முற்போக்கு விஞ்ஞான ஆய்வு மையம் (Jawaharlal Nehru Centre for Advanced Scientific Research), இந்திய விஞ்ஞானப் பள்ளித் துறை (Indian Academy of Sciences (1977)), மற்றும் இந்தியப் பொறியியல் துறைக்கூடம் (Indian Institute of Technology, Bombay (1972)) ஆகியவற்றின் தலைவராகவும் இராமண்ணா பணியாற்றினார். இவருடைய பணிகளைப் பாராட்டி 1963ல் சாந்தி ஸ்வரூப் பட்னாகர் விருது, 1968ல் குடியரசுத் தலைவரின் பத்மஸ்ரீ விருது, 1973ல் பத்ம விபூஷண் விருது, 1984ல் இந்திய தேசிய அறிவியல் கழகத்தின் மேக்நாத் சாகா பதக்கம், 1985ல் ஓம்பிரகாஷ் பாசின் விருது, 1985-86ல் ஆர். டி. பிர்லா நினைவு விருது, 1996ல் அசுதோஷ் முகர்ஜி தங்கப்பதக்கம் ஆகியவை வழங்கப்பட்டன.
பல்வேறு பல்கலைக் கழகங்கள் இவரைச் சிறப்பிக்கும் வகையில் மதிப்பியல் முனைவர் பட்டம் வழங்கின.இந்தியாவிலும், வெளிநாட்டிலும் இராமண்ணாவின் பல விஞ்ஞான வெளியீடுகள் பதிவாகி யுள்ளன. இந்தியாவின் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு மிகச் சிறப்பாகப் பங்காற்றியவர். எழுச்சியூட்டும் தலைவராகவும் ஒரு சிறந்த நிர்வாகியாகவும் விளங்கியவர். இந்திய அணுக்கரு உலையின் தந்தை இராஜா இராமண்ணா செப்டம்பர் 24, 2004ல் தனது 79வது அகவையில் மும்பையில் மாரடைப்பால் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தொலைத்தொடர்புகளில் ஒளியிழைகளை உருவாக்கி பயன்படுத்திய, அகண்ட அலைவரிசையின் தந்தை, நோபல் பரிசு பெற்ற சர் சார்லசு குன் காவோ நினைவு தினம் இன்று (செப்டம்பர் 23, 2018).
by ஆசிரியர்
written by ஆசிரியர்
சர் சார்லசு குன் காவோ (Sir Charles Kuen Kao) நவம்பர் 4, 1933ல் சீனாவின் சாங்காய நகரில் பிறந்தார். அவரது மூதாதையர் வீடு அருகில் இருக்கும் ஜின்சானில் உள்ளது. இவர் வீட்டில் தனது சகோதரருடன் சீனமும் மற்றும் சாங்காய் சர்வதேச பள்ளியில் ஆங்கிலம் மற்றும் பிரன்சும் படித்தார். காவோவின் குடும்பம் 1948 ஆம் ஆண்டில் ஹாங்காங்கிற்கு குடி பெயர்ந்தது. அங்கு 1952 ஆம் ஆண்டு புனித ஜோசப் கல்லூரியில் உயர்கல்விப் படிப்பும் மற்றும் வூல்விச் பாலிடெக்னிக் கல்லூரியில் (கீரின்விச் பல்கலைகழகம்) மின்சார பொறியியல் பிரிவில் இளங்கலை பட்டம் (BSc) பெற்றார். 1965 ஆம் ஆண்டு ஆராய்ச்சி மாணவராக லண்டன் பல்கலைகழக கல்லூரியில் ஹரால்டு பார்லோ வழிகாட்டுதலில் முனைவர் (PhD) பட்டம் பெற்றார். லண்டன் பல்கலைக்கழக கல்லூரியின் பேராசிரியர் ஹரோல்ட் பார்லோவின் கீழ் வெளிப்புற மாணவராக, இங்கிலாந்தின் ஹார்லோவில் உள்ள ஸ்டாண்டர்ட் டெலிகம்யூனிகேஷன் லேபரேட்டரிஸ் (எஸ்.டி.எல்) (டெலிபோன்களின் ஆராய்ச்சி மையம்) இல் பணிபுரிந்தார்.
1960களில் இங்கிலாந்தை தளமாகக் கொண்ட ஸ்டாண்டர்ட் டெலிகம்யூனிகேஷன் லேபரேட்டரிஸில் (எஸ்.டி.எல்), காவோ மற்றும் அவரது சக ஊழியர்கள் கண்ணாடியிழை ஒளியியலை ஒரு தொலைத் தொடர்பு ஊடகமாக உணர்ந்து கொள்வதில் தங்கள் முன்னோடிப் பணிகளைச் செய்தனர். 1963 ஆம் ஆண்டில், காவோ முதன்முதலில் ஆப்டிகல் கம்யூனிகேஷன்ஸ் ஆராய்ச்சி குழுவில் சேர்ந்தபோது, அந்த நேரத்தில் பின்னணி நிலைமை மற்றும் கிடைக்கக்கூடிய தொழில்நுட்பத்தை சுருக்கமாகவும், சம்பந்தப்பட்ட முக்கிய நபர்களை அடையாளம் காணவும் அவர் குறிப்புகள் செய்தார். இதற்காக அவர் வெவ்வேறு ஃபைபர் உற்பத்தியாளர்களிடமிருந்து மாதிரிகளை சேகரித்தார் மற்றும் மொத்த கண்ணாடிகளின் பண்புகளையும் கவனமாக ஆராய்ந்தார். காவோவின் ஆய்வு முதன்மையாக தன்னைத்தானே நம்பிக் கொண்டது. பொருட்களின் அசுத்தங்கள் அந்த இழைகளின் அதிக ஒளி இழப்புகளை ஏற்படுத்தின. காவோ எஸ்.டி.எல் இல் எலக்ட்ரோ-ஆப்டிக்ஸ் ஆராய்ச்சி குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார். அவர் 1964 டிசம்பரில் எஸ்.டி.எல் இன் கண்ணாடியிழை தொலைத்தொடர்பு திட்டத்தை எடுத்துக் கொண்டார். ஏனெனில் அவரது மேற்பார்வையாளர் கார்போவியாக், ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் (யு.என்.எஸ்.டபிள்யூ) உள்ள மின் பொறியியல் பள்ளியில் தகவல் தொடர்புத் தலைவராகப் புறப்பட்டார்.
காவோ தொலைத்தொடர்புகளில் ஒளியிழைகளை உருவாக்கியதிலும், பயன்படுத்துவதிலும் முன்னோடி ஆவார். 1960களில் மின்னணு தரவை பரிமாற்றுவதற்காக சீரொளியுடன் கண்ணாடியிழைகளை இணைக்க பல்வேறு முறைகளை உருவாக்கினார். இது இணையத்தின் வளர்ச்சிக்கான அடிப்படை தேவையாக அமைந்தது. காவோ அகண்ட அலைவரிசையின் தந்தை என்று அறியப்படுகிறார். கண்ணாடியிழை ஒளியியலின் தந்தை மற்றும் கண்ணாடி இழை தகவல் தொடர்பின் தந்தை என்றும் அழைக்கப்படுகிறார். கோவிற்கு 2009 ஆம் ஆண்டிற்கான இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு அவரது கண்ணாடி இழை தகவல் பரிமாற்றம் குறித்த ஆராய்ச்சிக்காக வழங்கப்பட்டது. தொலைத்தொடர்புகளில் ஒளியிழைகளை உருவாக்கி பயன்படுத்திய, நோபல் பரிசு பெற்ற சர் சார்லசு குன் காவோ செப்டம்பர் 23, 2018ல் தனது 84வது அகவையில் ஆங்காங்கில் உள்ள பிராட்பரி ஹோஸ்பைஸில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மீ கடத்து நிலை (super conductivity) மற்றும் தாழ்ந்த வெப்ப நிலையில் (0K) உள்ள பொருள்களின் பண்புகளை ஆய்வு செய்ததற்காக நோபல் பரிசு பெற்ற ஹெய்க் காமர்லிங் ஆன்ஸ் பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 21, 1853)…
by ஆசிரியர்
written by ஆசிரியர்
ஹெய்க் காமர்லிங் ஆன்ஸ் (Heike Kamerlingh Onnes) செப்டம்பர் 21, 1853ல் நெதர்லாந்தில் உள்ள குரோனின்ஜென் என்ற ஊரில் பிறந்தார். இவர் தந்தை ‘ஹார்ம் காமர்லிங்க் ஆன்ஸ்’ என்ற டச்சு நாட்டுக்காரர். இவர் ஒரு செங்கல் சூளையின் உரிமையாளர். இவருடைய தாயார் ‘அன்னா ஜெர்டினா கொயர்ஸ்’. இவருடைய பெற்றோர் அனைத்து வகையிலும் கண்டிப்பானவர்களாக இருந்ததால் இவரும் இவருடைய சகோதரர்களும் கடின உழைப்பின் வலிமையை உணர்ந்தே வளர்ந்தனர். ‘ஹெய்க் காமர்லிங் ஆன்ஸ்’ 1887ல் ‘மரியாஅட்ரியானா வில்ஹெல்மினா எலிசபெத் பிஸ்லாவெல்ட்’ என்ற மங்கையைத் திருமணம் செய்து கொண்டார். இவர் பிறந்த ஊரிலேயே இருந்த ஹூஜெர்பர்ஜர் உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்து படித்தார். அங்கு மொழிப்பாடம் கற்பிக்கப்படவில்லை. எனவே பள்ளி நேரம் போக, பிற நேரங்களில், அப்பள்ளியின் இயக்குநர், பின்னாளில் வேதியல் பேராசிரியராகப் புகழ்பெற்ற ஜே.எம்.லெய்டன்வான் பெம்மலென் என்பவரிடம், கிரேக்க லத்தீன் மொழிப்பாடங்களைத் தனியே பயின்றார்.
1870ல் குரோனின்ஜென் பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார். இங்கு பயின்ற போது உட்க்ரெட் பல்கலைக் கழகம் நடத்திய கட்டுரைப் போட்டியில் கலந்து கொண்டு ஆவி அடர்த்தி என்பது பற்றி எழுதி முதல் பரிசைப் பெற்றார். அங்கு பட்டம் பெற்ற பின் 1871ல் ஜெர்மனியில் உள்ள ஹெய்டல்பர்க் பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார். அங்கு இவருடைய ஆசிரியர்களாக விளங்கியவர்கள் புன்சன் மற்றும் கிர்க்கார்ப் என்ற அறிவியலறிஞர்கள் ஆவர். ராபர்ட் கிர்க்கார்ப் என்ற ஜெர்மனிய இயற்பியலறிஞரின் தனிப்பட்ட ஆய்வுச் சாலையில் அவருடைய உதவியாளராகவும் காமர்லிங்க் பணி புரிந்தார். தன் சொந்த ஊருக்கு மீண்டும் திரும்பிய பின் அங்குள்ள பல்கலைக் கழகத்தில் 1878ல் முதுகலைப் பட்டமும், பின்னர் 1879ல் முனைவர் பட்டமும் பெற்றார். முனைவர் பட்ட ஆய்வுக்கு இவர் எடுத்துக்கொண்ட தலைப்பு ‘ புவியியல் சுழற்சிக்கான புதிய நிரூபணங்கள் (New proofs for the rotation of the earth) என்பதாகும்.
1878ல் லெப்ட்டில் உள்ள தொழில்நுட்பக் கல்லூரியில் பாஸ்சா என்ற அறிவியல் அறிஞரின் உதவியாளராகச் சேர்ந்தார். அதே நிலையில் 1881-1882 ஆம் ஆண்டுகளில் விரிவுரையாற்றுகின்ற வாய்ப்பும் கிடைக்கப்பெற்றார். இங்கு இயக்கவியல் கொள்கையின் அடிப்படையில் பாய்பொருள்களின் பொதுக் கோட்பாடு (General Theory of the nature of fluids from the perspective of Kinetic theory) என்ற ஆய்வுக் கட்டுரையை தயாரித்தார். பாய்பொருள்களின் பொதுக் கோட்பாட்டை உருவாக்க அவற்றின் பருமனளவு, அழுத்தம், வெப்பநிலை ஆகிய அளவுகளின் சரியான அளவீடுகள் அவசியம் என்பதை உணர்ந்தார். அப்பொழுதுதான் தாழ்ந்த வெப்ப நிலைகளை அறிந்து செயல்படுவதில் ஆர்வம் செலுத்தத் தொடங்கினார். 1882ல் இவருக்கு 29 அகவை இருக்கும்போது லெய்டன் பல்கலைக் கழகத்தில் ஆய்வியல் இயற்பியல் (experimental physics) துறையில் பேராசிரியராகவும், அங்குள்ள ஆய்வுச்சாலையின் இயக்குநராகவும் அமர்த்தப்பட்டார். இங்கு தாழ்ந்த வெப்பநிலைகளைப் பற்றிய ஆய்வுகளை மீண்டும் தொடங்கினார். இதற்கு தாழ்வெப்பநிலையியல் என்று பெயர். கிட்டத்தட்ட 42 ஆண்டுகள் (1882-1923) இதே லெய்டன் ஆய்வுச்சாலையில் தன்னுடைய வாழ்நாளில் பெரும்பகுதியைக் கழித்தார்.
அக்காலத்தில் தாழ்ந்த வெப்பநிலையியல் என்பது புதிய துறையாகும். இவருக்கு முன்பு வாயுக்களைத் தாழ்ந்த வெப்ப நிலையில் திரவமாக்குவது என்பது நடைமுறைப் படுத்தப் படவில்லை. காமர்லிங்க் இந்த ஆய்வினை மேற்கொண்ட போது, பொருளின் அணுத்தன்மையின் முழு ஆய்வுச் சான்றை அறிய விரும்பினார். ஆக்சிஜன், ஹைட்ரஜன், ஹீலியம் முதலிய வாயுக்களை மிக அதிக அளவு தாழ்ந்த வெப்ப நிலைக்கு உட்படுத்தும் ஆய்வை மேற்கொண்டார். இக்கால கட்டத்தில், திரவம் ஆவியாகும் போது அங்கு ஒரு குளிர்ச்சி விளைவு ஏற்படுகிறது என்பதை ஸ்வீடன் நாட்டு அறிவியலறிஞர் ஆர்.பி.ஃபிக்டெட் என்பவர் கண்டறிந்த்தார். அதே வருடத்தில் பிரெஞ்சு இயற்பியலாளர் எல்.பி கெயிட்லெட் என்பவர் அதிக அழுத்தத்திற்கு ஆக்ஸிஜனை உட்படுத்தியபோது அங்கு தாழ்ந்த வெப்ப நிலை உருவானதைக் கண்டறிந்தார். இறுதியாக, ஜே.பி. ஜூல்ஸ் மற்றும் வில்லியம் தாம்சன் (லார்டு கெல்வின்) ஒரு வாயுவை அதிக அழுத்தத்தில் மிகச் சிறிய திறப்பின் வழியே வாயுவின் தன்மைக்கேற்பக் குறிப்பிட்ட அளவு செலுத்தும்போது அதனுடைய வெப்பநிலை குறைவதைக் கண்டறிந்தார். 1895 இல் முனிச்சில் கார்ல் லிண்டே என்பவர் ஜூல்-தாம்சன் விளைவின் அடிப்படையில் வாயுவைத் திரவமாக்கும் கருவியை உருவாககினார்.
பிக்டெட், லிண்டே ஆகியோரின் முறைகளை ஒருங்கிணைத்து காமர்லிங்க் ஒரு புதிய முறையைக் கண்டறிந்தார். இதன் படி மற்ற வாயுக்களைத் திரவமாக்கும் ஆக்சிஜனை, திரவமாக்கும் முறையில் வெற்றிகண்டார். ஒரு மணி நேரத்தில் 14 லிட்டர் அளவு ஆக்சிஜனைத் திரவமாக்கினார். 1904ல் மிகப்பெரிய தாழ்ந்த வெப்பநிலை உருவாக்கத்திற்கான ஆய்வுக்கூடத்தை நிறுவினார். 1908 -ல் ஹாம்ப்சன்-லிண்டே சுழற்சி முறைப்படி ஜூல்- தாம்சன் விளைவைப் பயன்படுத்தி வெப்பநிலையை 1 டிகிரிக்கும் குறைவாக்கும் (-273°) கருவியை வடிவைமைத்தார். இது லெய்டனில் உள்ள ‘பொயர்ஹால் அருங்காட்சியகத்தில்’ வைக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆய்வுகளுக்காக இவருக்கு 1913ல் நோபல் பரிசு வழங்கப்பட்டது. 1911ல் பாதரசம், வெள்ளீயம், காரீயம் போன்ற தூய்மையான உலோகங்களின் மீள்தன்மை பற்றி ஆராய்ந்தார். 4.2 கெல்வின் அளவு வெப்ப நிலையில் மின்தடை சுழியாகும் என்பதை காமர்லிங்க்கும் அவரது உதவியாளர்களும் கண்டறிந்தனர். பாதரசம் இந்தப் புதிய நிலையை அடைந்து அதனுடைய மின் கடத்தும் தன்மை மிகச் சிறப்பாக அமைகிறது. இது மீ கடத்து நிலை (super conductivity) எனக் குறிப்பிடப்பட்டது.
லெய்டன் பல்கலைக் கழகத்தின் தாழ்ந்த வெப்பநிலை ஆய்வுக்கூடத்திற்கு காமர்லிங்க் ஆன்சின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. 1910ல் மத்யூக்கி பதக்கம், 1912ல் ரம்போர்டு பதக்கம் ஆகியவை இவருக்கு வழங்கப்பட்டன. சந்திரனில் உள்ள ஒரு குழிப்பகுதிக்கு இவர் பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஆம்ஸ்டர்டாமின் ராயல் அறிவியல் கழகத்தில் தனது 30 வயதிலேயே இவர் உறுப்பினராக சேர்த்துக் கொள்ளப்பட்டார். அனைத்துலக சங்கம் ஒன்றையும் இவர் நிறுவினார். நெதர்லாந்து அரிமா அணி, நெதர்லாந்து ஆரஞ்சு-நஸ்ஸாவ் அணி, நார்வே புனித ஆலாஃப் அணி, போலந்தின் போலேனியா ரெஸ்டிட்யூபா அணி ஆகியவற்றின் ஆணை அலுவலராகப் பணியாற்றினார். பெர்லின் பல்கலைக் கழகம் மதிப்பியல் முனைவர் பட்டம் அளித்துச் சிறப்பித்தது. பவும்கார்டன் பரிசு, ஃப்ராங்க்ளின் பதக்கம் ஆகியவை வழங்கப்பட்டன.
மாஸ்கோவில் உள்ள அறிவியல் நண்பர்கள் சங்கத்தில் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ரோம், லண்டன் போன்ற அயல்நாட்டு நகரங்களில் அயல்நாட்டு உறுப்பினராகவும் ஸ்டாக்ஹோமில் இயற்பியல் சங்கத்தில் மதிப்பியல் உறுப்பினராகவும் அமர்த்தப்பட்டார். அறிவியல் அறிஞராக இருப்பினும் தன்னுடைய குடும்ப வாழ்க்கையிலும் அதிக கவனம் செலுத்தினார். உதவிகள் தேவைப் பட்டவர்களுக்கு தம்மால் இயன்ற உதவிகளைச் செய்தார். முதல் உலகப் போருக்கு முன்பும், பின்பும் அறிவியலறிஞர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் இடையில் ஏற்பட்ட வேறுபாடுகளைக் களைய உதவினார். தாழ்ந்த வெப்ப நிலையில் (0K) உள்ள பொருள்களின் பண்புகளை ஆய்வு செய்ததற்காக நோபல் பரிசு பெற்ற ஹெய்க் காமர்லிங் ஆன்ஸ் பிப்ரவரி 21, 1926ல் தனது 72வது அகவையில் நெதர்லாந்தில் இவ்வுலகை விட்டு பிரிந்தார். இவரைச் சிறப்பிக்கும் வகையில் அஞ்சல் தலைகள் வெளியிடப்பட்டன.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
செய்தியாளர் வி காளமேகம்
You must be logged in to post a comment.