Home நூல்கள்இஸ்லாம் இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

by syed abdulla

இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

பகுதி -1

கப்ளிசேட்

உமையாக்களின் பேரரசு-6 (கி.பி.661-750)

உமைய்யா அவர்களுக்கு யஜீத் மற்றும் அபூசுஃபியான் என்ற இரண்டு மகன்கள் இருந்தனர்.

அப்துல் முத்தலீப் குடும்பத்தினருக்கும்உமைய்யா குடும்பத்தினருக்கும் இடையே இருந்த பனிப்போர் தொடர்ந்தது.

பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹிவ ஸல்லம் அவர்கள் ஹிஜ்ரி எட்டாம் ஆண்டு மக்காவை வெற்றி கொண்டபோது , யஜீத், அபூசுஃபியான் அவரது மனைவி ஹிந்தா இவர்களது மகன் முஆவியா (ரலி) ஆகியோர் இஸ்லாத்தை ஏற்றனர்.

இஸ்லாத்தை ஏற்கும் போது முஆவியா (ரலி) அவர்களுக்கு 26 வயது என்று கூறப்படுகிறது.

இவர்களின் முழுக்குடும்பமும் இஸ்லாத்தை ஏற்றபிறகு இரு பங்காளி குடும்பங்களுக் கிடையே நிலவிவந்த பனிப்போர் முடிவுற்றது.

அபூபக்கர் (ரலி) அவர்களின் காலத்தில் முஆவியா (ரலி) அவர்களின் சகோதரர் யஜீத் அவர்களின் தலைமையில் சிரியாவிற்கு ஒரு படை அனுப்பப்பட்டது.

அதில் முஆவியா (ரலி)அவர்களும் ஒரு வீரராக சிரியா சென்றார்கள்.

அபூபக்கர் (ரலி) மரணத்திற்கு பிறகு உமர் (ரலி) கலீபாவாக பதவி ஏற்றார்கள். சிரியாவில் யஜீதும் மரணமடைய உமர்(ரலி) அவர்கள் முஆவியா (ரலி) அவர்களை சிரியாவில் உள்ள டமாஸ்கஸ் பகுதிக்கு கவர்னராக நியமித்தார்கள்.

அப்போது சிரியா டமாஸ்கஸ்,ஹிம்மஸ், பாலஸ்தீனம் என்று மூன்று பகுதிகளாக இருந்தது.

உமர்(ரலி) அவர்கள் மரணித்த போது பதவியேற்ற உதுமான் (ரலி) அவர்களும், முஆவியா (ரலி) அவர்களும் உமைய்யா குடும்பத்தை சேர்ந்த மிக நெருங்கிய உறவினர்கள்.

முஆவியா (ரலி) அவர்களின் திறமையை அறிந்த உதுமான்(ரலி) அவர்கள் முழு சிரியா என்ற பெரிய நிலப்பரப்பிற்கு முஆவியா (ரலி) அவர்களையே கவர்னராக நியமித்தார்கள்.

கவர்னராக மிகச்சிறப்பாக பணியாற்றி மக்களிடையே நன்மதிப்பை பெற்று சிறப்பாக நிர்வாகத்தை நடத்தினார்.

பொதுவாக குலபாயே ராஷீதீன்கள் என்றழைக்கப்பட்ட அபூபக்கர் (ரலி) உமர்(ரலி) உதுமான் (ரலி)அலி(ரலி) இவர்களின் முப்பது ஆண்டுகால ஆட்சி இஸ்லாமிய கலீபாக்களின் ஆட்சி என்றும், இஸ்லாமிய முழுவழிமுறை களோடு நடைபெற்ற ஆட்சி என்றும் வரலாறு கூறுகிறது.

கலீபாக்கள் மிக எளிமையாக வாழ்ந்தார்கள். பைத்துல் மாலிலிருந்து (இஸ்லாமிய அரசின் பொது கருவூலம்) இவர்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டது.

இவர்கள் இவர்களுக்கென தனிப்பட்ட காவலர்களை வைத்து கொள்ளவில்லை.

அப்துல்லாஹ் இப்னு சபா என்ற யூதன் இஸ்லாத்தை வீழ்த்தவேண்டும் என்ற நோக்கத்தில் உதுமான் (ரலி) அவர்களின் காலத்தில் முஸ்லீமாக மாறினான்.

அலி(ரலி) அவர்களுக்கு கிடைக்க வேண்டிய கிலாபத்தை உதுமான் (ரலி) தடுத்துதான் கலீபாவாக ஆகி‌ விட்டார் என்று கட்டுக்கதைகளை உருவாக்கினான்.

அலி(ரலி) அவர்கள் மீது மிகுந்த மரியாதை இருப்பதாக நடித்து இஸ்லாத்திற்குள் கொள்கை குழப்பங்களை ஏற்படுத்தினான்.

பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹிவ ஸல்லம் அவர்களும் அவர்களுக்கு பிறகு அலி(ரலி) அவர்களும் அதனை தொடர்ந்து அவர்களின் பரம்பரையில் 12 இமாம்கள் என்றும் குழப்பத்தை ஏற்படுத்தி ஷியா பிரிவு (அலி(ரலி)அவர்களை பின்பற்றுபவர்கள்) என உருவாக்கினான்.

இதனால் ஏற்பட்ட நிகழ்வுகளும், அதன் தாக்கங்களும் இஸ்லாமிய உலகில் இன்றுவரை தொடர்கிறது.

வரலாறு படைக்க வரலாற்றை தொடர்ந்து வாசிப்போம்..!

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!