இராமநாதபுரத்தில் புதிய பேருந்து நிலையம் அருகே மத்திய, மாநில எஸ்சி.எஸ்டி அரசு ஊழியர்கள் மற்றும் மக்கள் கூட்டமைப்பு சார்பில் இந்திய அரசியல் சாசனத்தின் தந்தை பாரதரத்னா பாபாசாகிப் டாக்டர் பி.ஆர். அம்பேத்கார் அவர்களின் 134 வது பிறந்தநாள் விழா மாவட்ட தலைவர் கர்ணன், மாவட்ட செயலாளர் சேக்கிழார் ஆகியோர் தலைமையில் டாக்டர் அம்பேத்கார் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.அதனைத் தொடர்ந்து வருகை புரிந்த பொதுமக்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினர்.மேலும் இந்நிகழ்ச்சியில் மாநில துணை செயலாளர் பாலச்சந்திரன்,மாவட்ட பொருளாளர் பாபு, செய்தி தொடர்பாளர் தங்கவேல்,மாவட்ட மருத்துவ அணி செயலாளர் டாக்டர். பிரசாத் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளரும் சமூக சேவகருமான டாக்டர்.மாடசாமி மற்றும் இதர அமைப்பு பொறுப்பாளர்களும், அனைத்து கட்சி பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்களும் திரளாக கலந்து கொண்டு டாக்டர். அம்பேத்கார் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தனர்.
Category:
நூல்கள்
பகுதி -3
இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!
பகுதி -3
கப்ளிசேட்
உஸ்மானிய பேரரசு -39
( கி.பி.1299-1922)
“யெனிச்சாரி”
என்றால் துருக்கியில் புதிய சிப்பாய்கள் என்ற பொருள் படுகிற படைப்பிரிவு முதலாவது முராத் காலத்தில் மன்னர்களின் மெய்க்காவல் படையாக உருவாக்கப்பட்டது.
இந்த படைப்பிரிவு பொதுவாக கிறிஸ்தவத்
திலிருந்து
முஸ்லீம்களாக மாறிய வீரர்களுக்கு
ஆன்மீக மற்றும் பலவகையான பயிற்சிகள் அளிக்கப்பட்டு உருவாக்கப்பட்டது.
இது முதலாம் முராத் அவர்களால் உருவாக்கப்பட்டது.
இவர்களுக்கு பலவகையான சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டன.
இவர்கள் திருமணம் செய்வது தடை செய்யப்பட்டது.
மிகவும் ஒழுக்கமான அர்ப்பணிப்புள்ள வீரர்களாக திகழ்ந்தனர்.
உஸ்மானிய பேரரசின் இந்தப்படைப்பிரிவு
உருவாக்கப்பட்ட 200
ஆண்டுகளில் உஸ்மானிய பேரரசின் வெற்றிக்கு முழு காரணமாக இருந்தது.
இந்தப் பிரிவில்,
பிந்தைய காலங்களில்
முஸ்லீம் வீரர்களும் சேர்க்கப்பட்டனர்.
1574 ஆம்ஆண்டு 20,000 வீரர்களுடன் இருந்த இது 1826 ஆம் ஆண்டில் 1,35,000 வீரர்களாக உயர்ந்தது.
நாளடைவில் இவர்கள் கட்டுக்கோப்புகள் தளர்ந்து பேரரசிற்கே அபாயமாக மாறினர்.
இதனால் இரண்டாவது முஹம்மது இந்தபடைப்பிரிவை
முழுவதும் கலைத்தார்.
இதுபோன்ற விசுவாசமான படைப்பிரிவு திசைமாறியதால் கலைக்கப்பட்டது
உஸ்மானிய ராணுவத்திற்கு பேரிழப்பாகும்.
கி.பி 1299 ஆம்ஆண்டு சிறிய நிலப்பரப்பில் உருவாக்கப்பட்ட உஸ்மானிய அரசு
முதலில் புருஷா என்ற நகரை தலைநகராகக் கொண்டும் பிறகு காண்ஸ்டாண்டிநோபிள்
(இஸ்தான்புல்)நகரை
தலைநகராகக் கொண்டும்
1922 ஆம் ஆண்டு வரை ஏறக்குறைய
600 ஆண்டுகளுக்கு
மேலாக ஆட்சி செய்து,
15மற்றும் 16 ஆம் நூற்றாண்டுகளில் உலகின் பெரும் வல்லரசாகவும், இஸ்லாமியர்களின்
தலைமை பீடமாகவும்(கிலாபத்)
விளங்கியது.
36 மன்னர்கள் ஆட்சி செய்த உஸ்மானிய பேரரசு வலுவாகவும்,
இறுதி நூற்றாண்டுகளில்
வலுகுன்றியும் இருந்தது.
இறுதியில் முஸ்லீம்களாலேயே
இப்பேரரசு சிதைக்கப்பட்டது.
ஐரோப்பாவின் எழுச்சியும்,
முஸ்லீம்களிடையே
ஏற்பட்ட கொள்கை குழப்பங்களும்,
பிளவுகளும்,
வழக்கமான அரண்மனை, சொகுசு வாழ்க்கை,குடும்ப சண்டைகள்,
நிர்வாக சீர்கேடுகள் என வலு குன்றிய உஸ்மானிய பேரரசை
ஐரோப்பியர்களின்
சூழ்ச்சிகள் அழித்தது.
1839 களில் உருவாக்கப்பட்ட Tanzimat (டான்ஸிமாட்)
என்ற சிந்தனைகள்
நவீன மயமாக்கல் என்ற கருத்தியலில் உருவாக்கப்பட்டது.
ஐரோப்பிய நாடுகளில் படித்துவிட்டு அங்கு மூளை சலவை செய்யப்பட்டு வந்த முஸ்லீம்கள்,
ஐரோப்பாவின் எழுச்சி மற்றும் சூழ்ச்சிகளால் வலுகுன்றி இருந்த துருக்கியில் புதிய
பிரிட்டிஷ் மற்றும்
பிரான்ஸ் நாட்டின்
கல்வி மற்றும் சிவில் சட்டங்களை அமல் படுத்த வேண்டும் என்றும், ஷரியத் சட்டங்கள் பயனளிக்காது எனவும் பரிந்துரை செய்தனர்.
ஐரோப்பாவில் படித்து விட்டு வந்த பல “பாஷாக்கள்” இதனையே வலியுறுத்தினர்.
பள்ளி மற்றும் கல்லூரிகளை தனியார்
மயப்படுத்துவது,
பிரிட்டிஷ் மற்றும் பிரான்சின் கல்வி திட்டங்கள்,
இராணுவ உடைகளை மாற்றுவது,
புதிய பார்லிமென்ட்
சிஸ்டம், எல்லா மதமக்களையும்
இராணுவத்தில் அவசியம் இணைப்பது,
வட்டி அடிப்படையிலான வங்கிகள், பங்குவர்த்தகம்,
வட்டிப்பொருளாதாரம்
மற்றும் தாராளமான ஓரினச்சேர்க்கை,
பிரான்ஸ் நாட்டின் சிவில் சட்டம்,
இவைகளை துருக்கியில் அமல்படுத்தினால்
நவீன ஆயுதங்கள்
மற்றும் பொருளாதார உதவிகளை வழங்குவோம் என ஐரோப்பா வலியுறுத்தியது.
மேலும் அன்றைய முக்கிய தேவைகளான ரயில்வே,தபால் நிலைய உருவாக்கங்கள்,
இன்ஜின்கள் ஆகியவற்றை ஐரோப்பா துருக்கிக்கு வழங்க
பல நிபந்தனைகளை
விதித்தது.
ரஷ்யாவுடன் துருக்கியின் போர்,
அரபுலகில் அப்துல் அஜீஸ் படைகளோடு போர் என ராணுவ தளவாடங்களுக்காக
துருக்கி இவற்றை நடைமுறை படுத்த ஒப்புக்கொண்டது.
துருக்கியில் அப்போது இளம் துருக்கியர்கள் என்ற
நவீனத்துவத்தை தூக்கிப்பிடித்து தேசியவாதம் (Nationalism) பேசுகிற
அணி உருவானது.
இதில் ராணுவத்தில்
பணிபுரிந்த முஸ்தபா கமால் பாட்சா இந்த அணியை முன்னெடுக்க இஸ்லாமிய கிலாபத்
தனது இறுதி காலத்தை அடைந்தது.
வரலாறு படைக்க வரலாற்றை தொடர்ந்து வாசிப்போம்..!
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!
பகுதி -3
கப்ளிசேட்
உஸ்மானிய பேரரசு -38
( கி.பி.1299-1922)
துருக்கி உஸ்மானிய கிலாபத்தின் பல பகுதிகள் சிதறிப் போயின.
பல பகுதிகளை ஐரோப்பிய நாடுகள் பிடித்து கொண்டன.
வியன்னா,
ஆஸ்திரியா,
சைபீரியா போன்ற நாடுகளை ஐரோப்பிய படைகள் பிடித்து கொண்டன.
இங்கிலாந்து,
பிரான்ஸ்,
போர்த்துகீசியர்கள்
என ஐரோப்பிய நாடுகளின் வெற்றிகளும், எல்லைகளும், விரிவடைந்தது.
இதனால் உஸ்மானிய பேரரசின் எல்லைகள் குறுகிக் கொண்டே வந்தன.
1495 ஆம் ஆண்டோடு ஸ்பெயினில் கூண்டோடு ஒழித்துக்கட்டப்பட்ட
இஸ்லாம், அங்கு ஒரு முஸ்லிம் கூட இல்லாத அளவிற்கு ஒழிக்கப்பட்டனர்.
இஸ்லாமிய ஸ்பெயின்தான் ஐரோப்பியாவின்
அறிவு வெளிச்சமாக திகழ்ந்தது.
இருண்ட ஐரோப்பிய
நாடுகளுக்கு ஸ்பெயின் இஸ்லாமிய ஆட்சியே
அறிவு வெளிச்சம் பாய்ச்சியது.
மிகச்சிறப்பாக ஆட்சி செய்த அப்துல்ரகுமான் அவர்கள் தனது மனைவி ஜோஹ்ரா பெயரில் கட்டிய அரண்மனை உலகப்புகழ் பெற்றது.
கல்வி நிலையங்கள்,
கல்லூரிகள், மருத்துவமனைகள்,
நீதி பரிபாலனம்,
ஆட்சியில் அரசியலமைப்பு சட்டங்கள் என நிர்வாகத்தை ஐரோப்பிய நாடுகளுக்கு கற்றுக் கொடுத்தது.
தெருவிளக்குகள்,
குப்பைத் தொட்டிகள்,
பொது கழிவறைகள்,
பொது குளியலறைகள்
என சாதாரண மனிதருக்கான தேவைகளையும்
பூர்த்தி செய்த இஸ்லாமிய ஸ்பெயின் ஆட்சி அற்புதமானது.
ஸ்பெயினில் இருந்து வெளியேற்றப்பட்ட
யூதர்கள் துருக்கி,கொச்சி போன்ற பகுதிகளில் குடியேறினர்.
முஸ்லீம்களும் மொராக்கோ,துருக்கி என பல பகுதிகளில் குடியேறினர்.
கி.பி 1100-1400 காலகட்டங்களில்
ஐரோப்பிய மாணவர்கள் மொராக்கோ, ஸ்பெயின்,பாக்தாத் ஆகிய நகரங்களில் இருந்த மிகச்சிறந்த முஸ்லீம்களின் பல்கலை
கழகங்களில் அரபியில் பயின்றனர்.
அவர்கள் கற்ற நூல்களை லத்தீன் மொழியில் மொழி பெயர்த்தனர்.
அவைகள் இங்கிலாந்து, ஸ்பெயின், பிரான்ஸில் மாணவர்களுக்கு
போதிக்கப்பட்டன.
சிலுவைப்
போர்களுக்காக
முஸ்லீம் பகுதிகளில் வந்த கிறிஸ்தவ வீரர்கள் ஏராளமான
புத்தகங்களை தங்களுடன் அள்ளிச்சென்றனர்.
அந்த நூல்களை தங்களது தாய் மொழிகளில் மொழிபெயர்த்து அதிலிருந்த ஏராளமான தகவல்களை தெரிந்து கொண்டனர்.
அந்த அறிவு பொக்கிசங்கள்
கல்வி கூடங்களில்
பாடங்களாக வைக்கப்பட்டு மாணவர்களுக்கு போதிக்கப்பட்டன.
ஐரோப்பாவின் பல கண்டு
பிடிப்புகளுக்கும்,
மறுமலர்ச்சிக்கும்
இந்த முஸ்லீம்களின் நூல்கள் பெரும் வழிகாட்டிகளாக திகழ்ந்தன.
உஸ்மானிய மன்னர்களின் சொகுசு வாழ்க்கைகள்,
நிர்வாக சீர்கேடுகள்
உஸ்மானிய மன்னர்களின் குடும்ப சண்டைகள்,
ஷியா ,சன்னி சண்டைகள்
கொள்கை முரண்பாடுகள்,
கொள்கை குழப்பங்கள் என உஸ்மானிய அரசு
சரிவுக்குள்ளாகி
மிகப்பெரிய பொருளாதார நெருக்கடிகளை சந்தித்தது.
1840 ஆம் ஆண்டுகளில் உஸ்மானிய பேரரசின் செலவுகளுக்கும்,
பேரரசின் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கவும் ஐரோப்பியாவிடம் கையேந்தி வட்டிக்கு கடன் வாங்கும் நிலைக்கு உஸ்மானிய பேரரசு சீரழிந்து போனது.
இதன் உச்சபட்ச கேலிக்கூத்தாக, நாட்டை நிர்வகிக்க வட்டிக்கு கடன் வாங்கலாம் என்று உலமாக்கள்
தீர்ப்பளித்தனர்.
உஸ்மானிய பேரரசின் வீழ்ச்சிக்கு வேறு பல
காரணங்களையும்
அறிந்து கொள்வோம்.
வரலாறு படைக்க வரலாற்றை தொடர்ந்து வாசிப்போம்..!
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!
பகுதி -3
கப்ளிசேட்
உஸ்மானிய பேரரசு -37
( கி.பி 1299-1922)
அரபு உலகிலிருந்து
தொடர்ந்து வந்த குறைகள் அழுத்தங்களால்,
அப்துல் வஹாப் அவர்களை பிடிக்க, உஸ்மானிய படை அனுப்பப்பட்டது.
இதனையறிந்த அப்துல் வஹாப் அவர்கள் வுயானாவிலிருந்து
ரியாத் அருகிலுள்ள திரியா என்ற பகுதிக்கு சென்றுவிட்டார்.
திரியாவின் அன்றைய ஆட்சியாளர் இப்னு சவுத் அவர்களின்
மகன் அப்துல் அஜீஸ் அவர்கள் அப்துல் வஹாப் அவர்களின் மாணவராக இருந்தார்.
ஆகவே ஒரே கொள்கைகளில் இருந்ததால் தங்களது நாட்டில்வந்து தங்கிக் கொள்ளுமாறு
அப்துல் வஹாப் அவர்களை அப்துல் அஜீஸ் அவர்கள் அழைத்து தங்க வைத்தார்.
அப்போது இப்னு சவுத் அவர்களுக்கும்
அப்துல் வஹாப் அவர்களுக்கும் கி .பி 1744 ஆம்ஆண்டு ஒரு ஒப்பந்தம் போடப்பட்டது.
அதில் இப்னு சவுத்
அவர்கள் அப்துல் வஹாப் அவர்களின் மார்க்கம் சம்பந்தமான செயல்களுக்கு ஆதரவு அளிப்பது என்றும்,
அப்துல் வஹாப் அவர்கள் இப்னு சவுத் அவர்களின் ஆட்சி சம்பந்தமான செயல்களில் ஆதரிப்பது என்பதும் ஒப்பந்தத்தின் முக்கிய செய்தியாகும்.
ஷிர்க் என்று மார்க்கத்தின் பல விசயங்களை கடுமையாக எதிர்த்த அப்துல் வஹாப் அவர்கள் கி.பி 1792 ஆம்ஆண்டு மரணமடைந்தார்.
அவரின் சிந்தனைகளே
இன்று “வஹாபியிஸம்”
என்று அழைக்கப்படுகிறது.
இப்னு சவுத் ராணுவத்திற்கும்
உஸ்மானிய படைகளுக்கும் இடையே சண்டைகள் நடந்து கொண்டே இருந்தன.
சவுத் இராணுவத்தின்
படைத்தலைவர் சிறை பிடிக்கப்பட்டு,
அவருக்கு
துருக்கியில் வைத்து மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.
தோல்வியடைந்த மன்னர் சவுத் குடும்பத்தினர் 74 பேர் குவைத்தில் ஆட்சியில் இருந்த சபா குடும்பத்தினரிடம்
தஞ்சம் அடைந்தனர்.
ஈராக் குவைத்தை ஆக்ரமித்த போது
அதனுடைய சபா மன்னர் குடும்பத்திற்கு சவூதி அரேபியா அரசாங்கம்
அடைக்கலம் கொடுத்தது பழைய பிணைப்புகளின் காரணமே என்பதையும் நாம் அறிய வேண்டும்.
கி.பி 1921 ஆம் அப்துல் அஜீஸ் அவர்கள் சிறிய படையுடன் வந்து சண்டையிட்டு மக்கா மற்றும் மதினா நகரங்களை கைப்பற்றினார்.
அரபுலகத்தின் அந்த குறிப்பிட்ட பகுதிகளை பிடித்து
தனது சவுத் குடும்பத்தை அடையாளப்படுத்தும் விதமாக
“சவுதி அரேபியா” என்றும் பெயர் சூட்டினார்.
இதன் பிறகு சவுதியில் உள்ள கப்ருகள் இடித்து தரைமட்டமாக்கப்
பட்டன.
1924 ஆம் ஆண்டு மதினாவின் பக்கி கபர்ஸ்தானில் இருந்த கப்ருகளின்
அடையாளங்கள்
கட்டிடங்கள் அனைத்தும் இடித்து தரைமட்டமாக்கப்
பட்டன.
இன்றளவும் அப்துல் அஜீஸ் குடும்பத்தினர்களின்
ஆட்சியில் சவுதி அரேபியா இருக்கிறது.
அப்துல் வஹாப் அவர்களுடன் ஏற்பட்ட பிணைப்பால் இன்று வரை வஹாபியிஸ கோட்பாடுகளை சவுதி அரசாங்கம் கடைபிடிக்கிறது.
மிக நீண்ட நாட்களாக
மக்கா, மதினா இரண்டு புனிதத் தலங்களும்
துருக்கியின் கட்டுப்பாட்டில் இருந்தன.
பிறகு சவுதி மன்னரின் குடும்ப ஆட்சியின் கீழ் இன்றைய புனிதத் தலங்கள் வந்தன.
இதற்கான இமாம்கள் நியமனம், பாதுகாப்பு,
நிர்வாகம், செலவுகள் அனைத்தும் சவுதி அரசாங்கமே செய்கிறது.
அரேபிய பகுதிகளில் இருந்து வெளியேறிய
உஸ்மானிய பேரரசு
பிறகான பல காரணங்களால்
வீழ்ச்சியை நோக்கி பயணித்தது.
வரலாறு படைக்க வரலாற்றை தொடர்ந்து வாசிப்போம்..!
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!
பகுதி -3
கப்ளிசேட்
உஸ்மானிய பேரரசு -36
(கி.பி 1299-1922)
உஸ்மானிய கிலாபத் முழு முஸ்லீம்உலகிற்கே
தலைமைத்துவமாக
கருதப்பட்டது.
உஸ்மானிய மன்னர்களின் ஆட்சிகளும் மிகச்சிறப்பாகவே
இருந்தது.
இஸ்லாமிய கோட்பாடுகளோடு
மனிதநேயமிக்க
சமய நல்லிணக்கம்,
சமூக ஒற்றுமை,
சம நீதி, என எல்லா மத மக்களையும்
ஒன்றாகவே கருதும்
மகத்தான ஆட்சிகளாக இருந்தன.
அன்றைய உலகின் மிகப்பெரிய பேரரசாகவும்
ராணுவம்,
உருவாக்கம்,
பல அறிவியல் கண்டுபிடிப்புகள்
என எல்லாவற்றிலும் முன்னோடியாக திகழ்ந்தது.
உச்சகட்ட நிலைக்குப்பிறகு
உஸ்மானிய பேரரசு
சரிவுகளை,
வீழ்ச்சிகளை சந்திக்க ஆரம்பித்தது.
சூஃபியிஸ கருத்துக்கள் மிகைத்தது.
பல கொள்கை குழப்பங்கள் உருவானது.
இதனால் உஸ்மானிய பேரரசில் அரசியல் பிளவுகள் ஏற்பட்டது.
மிகப்பெரிய பகுதியான எகிப்து உஸ்மானிய கிலாபத்திலிருந்து விலகியது.
உஸ்மானிய பேரரசு பலம் குன்ற ஆரம்பித்தது.
இதனை பயன்படுத்திக் கொண்ட ஐரோப்பிய நாடுகள் உஸ்மானிய பேரரசின் பகுதிகளை ஆக்ரமிக்கத்
துவங்கின.
துருக்கி வலுவிழந்து பொருளாதார பற்றாக்குறையால் தடுமாறியது.
இதற்கான காரணங்களை இன்றைய முஸ்லீம்கள் அறிந்து கொள்ளவேண்டும்.
இஸ்லாமிய கொள்கைகளை வைத்தே
முஸ்லீம்கள் தங்களுக்கிடையே சண்டைகள் போட்டுக்கொண்டு பிரிவினைகளை ஏற்படுத்திக் கொண்டனர்.
கி.பி 1700 ஆண்டுகளில் ஏற்பட்ட கொள்கை குழப்பங்களால் முஸ்லீம் மக்களிடையே நிறைய கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டன.
சவுதி அரேபியாவின்
வுயானா என்ற பகுதியில் கி.பி 1703 ஆம் ஆண்டு அப்துல் வஹாப் பிறந்தார்.
இவர் மதினாவில் உயர்கல்வி பயின்றார்.
இவருக்கு இந்திய உஸ்தாத் ஒருவரே ஆசிரியராகவும் இருந்தார்.
அதே கி.பி 1703 ஆம்ஆண்டு மிகப்பெரிய மார்க்க புரட்சியாளர் என்று கூறப்படும் ஷாவலியுல்லாஹ் அவர்கள் இந்தியாவில் பிறந்தார்கள்.
இவர் இந்தியாவில் இஸ்லாமிய உலகின் மிகப்பெரிய மார்க்க புரட்சியாளராக கருதப்படுகிறார்.
அப்துல் வஹாப் அவர்களும்,
ஷாவலியுல்லாஹ் அவர்களும் மதினாவில் ஒன்றாக படித்ததாகக்
கூறப்படுகிறது.
ஷா வலியுல்லாஹ் அவர்கள் இந்தியாவில் தங்கள் மார்க்க பணிகளை சிறப்பாக செய்தார்கள்.
அப்துல்வஹாப் அவர்கள் ஜியாரத்
மற்றும் அன்றைய இஸ்லாமிய உலகின் சில பழக்கவழக்கங்களை
கூடாது என்றும் அது இறைவனுக்கு இணை வைத்தல் என்றும் கூறினார்.
இதனால் பலகப்ருகளின் மேல் கட்டப்பட்டிருந்த அடையாளங்கள் இடிக்கப்பட்டன.
தர்ஹா வழிபாடுகள்
போன்றவற்றை கடுமையாக அப்துல்வஹாப் எதிர்த்தார்.
இதனால் அரபுலகில் பிரச்சினைகள் ஏற்பட்டன.
அரேபிய மக்கள் இதனை உஸ்மானிய கலீபாவிற்கு தெரியப்படுத்தினர்.
இது உஸ்மானிய பேரரசுக்கு பெரும் பிரச்சனையாக மாறியது.
வரலாறு படைக்க வரலாற்றை தொடர்ந்து வாசிப்போம்..!
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!
பகுதி -1
கப்ளிசேட்
உமையாக்களின் பேரரசு -7
(கி.பி.661-750)
எகிப்து,ஏமன் பகுதிகளில் அப்துல்லா இப்னு சபா தனது கொள்கை குழப்ப பிரச்சாரத்திற்கு ஆட்களை திரட்டினான்.
பொதுவாக மெய்க்காவலர்கள் இல்லாத கலீபா உதுமான் (ரலி) அவர்களின்
வீட்டை இந்த குழப்பவாதிகளும்,
மதினாவிலிருந்த
அவர்களை பிடிக்காத சிலரும்
ஒன்று சேர்ந்து முற்றுகை இட்டார்கள்.
மதினாவில் அதிகமானோர் மக்காநகருக்கு சென்றிருந்த சமயத்தை சரியாக தேர்வு செய்து, பயன்படுத்திக் கொண்டது இந்த குழப்பவாதிகளின் படை.
கலீபா உதுமான் (ரலி)
அவர்களின் வீட்டிற்கு தண்ணீர்,உணவு போன்ற அத்தியாவசியப் பொருட்களை செல்லவிடாமல் தடுத்தனர்.
முதுமை அடைந்திருந்த அவர்களை, இறுதியில் சுவர் ஏறிக் குதித்து வீட்டின் உள்ளே சென்ற குழப்பவாதிகளின் படை அவர்கள் குர்ஆன் ஓதிய நிலையிலேயே வெட்டி கொலை செய்தார்கள்.
தடுத்த அவர்களின் மனைவியின் விரல்களும் துண்டானதாக கூறப்படுகிறது.
அவைகளை ஒரு பெட்டியில் வைத்து சிரியாவின் தலைநகர் டமாஸ்கசுக்கு அனுப்பப்பட்டது.
மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்பு அது புதைக்கப்பட்டது.
இப்போது மதினாவில் பெரிய குழப்பம் ஏற்பட்டது.
அரபுலகமே செய்தியறிந்து அதிர்ந்து போனது.
அந்த இக்கட்டான சூழலில் அலி(ரலி) அவர்கள் கலீபாவாக பதவி ஏற்றார்கள்.
அவர்களை சிரியாவின் கவர்னராக இருந்த முஆவியா (ரலி) அவர்கள் ஏற்கவில்லை.
தனது உறவினரான
கலீபா உதுமான் (ரலி)
அவர்களை கொலை செய்தவர்களை உடனடியாக கண்டுபிடித்து கடுமையான தண்டனை வழங்கவேண்டும் என்று முஆவியா (ரலி) அவர்கள் கூறினார்கள்.
கொஞ்சம் குழப்பங்கள் குறைந்து ஆட்சி நிலையான பிறகு குற்றவாளிகளை கண்டுபிடித்து தண்டனை வழங்கலாம் என்று அலி(ரலி) அவர்கள் கூறியதை முஆவியா (ரலி) அவர்கள் ஏற்றுக் கொள்ள வில்லை.
ஆகவே அலி(ரலி) அவர்களை முஆவியா (ரலி) அவர்கள் கலீபாவாக ஏற்றுக்
கொள்ளவில்லை.
மதினா மற்றும் இதர இஸ்லாமிய பிரதேசங்களில் அலி(ரலி) அவர்களின் ஆட்சியும்,
சிரியா, பாலஸ்தீனம் போன்ற பகுதிகளில்
முஆவியா (ரலி) அவர்களின் ஆட்சியுமாக முதன்முதலில் இஸ்லாமிய ஆட்சிப்பீடம் இரண்டாக பிரிந்தது.
இருபது ஆண்டுகள்
கவர்னராக
முஆவியா (ரலி) அவர்கள் சிறப்பாக நிர்வாகம் செய்ததால், அந்தப்பகுதியின் முழு ஆதரவும் முஆவியா (ரலி) அவர்களுக்கே இருந்தது.
நிர்வாக வசதிக்காக மதினாவிலிருந்து தங்கள் தலைநகரை கூபா (இன்றைய ஈராக் பகுதி) அலி(ரலி) அவர்கள் மாற்றினார்கள்.
அங்கு அவர்களுக்கு ஆதரவு அதிகம் இருப்பதாக வந்த செய்தியால் இஸ்லாமிய ஆட்சியின் தலைநகர் முதன்முதலாக மாறியது.
கூபாவில் அலி(ரலி) அவர்கள் கொல்லப்
படுகிறார்கள்.
அதன் பிறகு அவர்களின் மூத்தமகன் ஹஸன் (ரலி) அவர்கள் ஆட்சிக்கு வருகிறார்கள்.
ஹஸன்(ரலி) அவர்கள் மிக அமைதியான குணம் கொண்டவர்கள்.
இஸ்லாமிய உலகின் பிரிவினையை விரும்பாத அவர்கள்
முஆவியா (ரலி) அவர்களுக்கே ஆட்சியை விட்டுத் தர ஒப்புக் கொண்டார்கள்.
ஆட்சியை முஆவியா (ரலி) அவர்களிடம்
ஒப்படைக்க ஒரு நிபந்தனையும் விதித்தார்கள்.
என்ன நிபந்தனை???
வரலாறு படைக்க வரலாற்றை தொடர்ந்து வாசிப்போம்..!
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!
பகுதி -1
கப்ளிசேட்
உமையாக்களின் பேரரசு-6
(கி.பி.661-750)
உமைய்யா அவர்களுக்கு யஜீத் மற்றும் அபூசுஃபியான் என்ற இரண்டு மகன்கள் இருந்தனர்.
அப்துல் முத்தலீப் குடும்பத்தினருக்கும்உமைய்யா குடும்பத்தினருக்கும்
இடையே இருந்த பனிப்போர் தொடர்ந்தது.
பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹிவ ஸல்லம்
அவர்கள் ஹிஜ்ரி எட்டாம் ஆண்டு மக்காவை வெற்றி கொண்டபோது ,
யஜீத், அபூசுஃபியான்
அவரது மனைவி ஹிந்தா இவர்களது மகன் முஆவியா (ரலி)
ஆகியோர் இஸ்லாத்தை ஏற்றனர்.
இஸ்லாத்தை ஏற்கும் போது முஆவியா (ரலி) அவர்களுக்கு 26 வயது என்று கூறப்படுகிறது.
இவர்களின் முழுக்குடும்பமும்
இஸ்லாத்தை ஏற்றபிறகு இரு பங்காளி குடும்பங்களுக்
கிடையே
நிலவிவந்த பனிப்போர் முடிவுற்றது.
அபூபக்கர் (ரலி) அவர்களின் காலத்தில் முஆவியா (ரலி) அவர்களின் சகோதரர் யஜீத் அவர்களின் தலைமையில் சிரியாவிற்கு ஒரு படை அனுப்பப்பட்டது.
அதில் முஆவியா (ரலி)அவர்களும் ஒரு வீரராக சிரியா சென்றார்கள்.
அபூபக்கர் (ரலி) மரணத்திற்கு பிறகு உமர் (ரலி) கலீபாவாக பதவி ஏற்றார்கள்.
சிரியாவில் யஜீதும் மரணமடைய உமர்(ரலி) அவர்கள்
முஆவியா (ரலி) அவர்களை சிரியாவில் உள்ள டமாஸ்கஸ் பகுதிக்கு கவர்னராக நியமித்தார்கள்.
அப்போது சிரியா டமாஸ்கஸ்,ஹிம்மஸ்,
பாலஸ்தீனம் என்று மூன்று பகுதிகளாக இருந்தது.
உமர்(ரலி) அவர்கள் மரணித்த போது பதவியேற்ற உதுமான் (ரலி) அவர்களும், முஆவியா (ரலி) அவர்களும் உமைய்யா குடும்பத்தை சேர்ந்த மிக நெருங்கிய உறவினர்கள்.
முஆவியா (ரலி) அவர்களின் திறமையை அறிந்த உதுமான்(ரலி) அவர்கள் முழு சிரியா என்ற பெரிய நிலப்பரப்பிற்கு முஆவியா (ரலி) அவர்களையே கவர்னராக நியமித்தார்கள்.
கவர்னராக மிகச்சிறப்பாக பணியாற்றி மக்களிடையே நன்மதிப்பை
பெற்று சிறப்பாக நிர்வாகத்தை நடத்தினார்.
பொதுவாக குலபாயே ராஷீதீன்கள் என்றழைக்கப்பட்ட
அபூபக்கர் (ரலி)
உமர்(ரலி) உதுமான் (ரலி)அலி(ரலி) இவர்களின் முப்பது ஆண்டுகால ஆட்சி இஸ்லாமிய கலீபாக்களின் ஆட்சி என்றும், இஸ்லாமிய முழுவழிமுறை
களோடு
நடைபெற்ற ஆட்சி என்றும் வரலாறு கூறுகிறது.
கலீபாக்கள் மிக எளிமையாக வாழ்ந்தார்கள்.
பைத்துல்
மாலிலிருந்து
(இஸ்லாமிய அரசின் பொது கருவூலம்)
இவர்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டது.
இவர்கள் இவர்களுக்கென தனிப்பட்ட காவலர்களை வைத்து கொள்ளவில்லை.
அப்துல்லாஹ் இப்னு சபா என்ற யூதன் இஸ்லாத்தை
வீழ்த்தவேண்டும் என்ற நோக்கத்தில்
உதுமான் (ரலி) அவர்களின் காலத்தில் முஸ்லீமாக மாறினான்.
அலி(ரலி) அவர்களுக்கு கிடைக்க வேண்டிய கிலாபத்தை உதுமான் (ரலி) தடுத்துதான் கலீபாவாக ஆகி விட்டார் என்று கட்டுக்கதைகளை உருவாக்கினான்.
அலி(ரலி) அவர்கள் மீது மிகுந்த மரியாதை இருப்பதாக நடித்து
இஸ்லாத்திற்குள் கொள்கை குழப்பங்களை ஏற்படுத்தினான்.
பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹிவ ஸல்லம் அவர்களும் அவர்களுக்கு பிறகு அலி(ரலி) அவர்களும் அதனை தொடர்ந்து அவர்களின் பரம்பரையில் 12 இமாம்கள் என்றும் குழப்பத்தை ஏற்படுத்தி ஷியா பிரிவு (அலி(ரலி)அவர்களை பின்பற்றுபவர்கள்)
என உருவாக்கினான்.
இதனால் ஏற்பட்ட நிகழ்வுகளும்,
அதன் தாக்கங்களும்
இஸ்லாமிய உலகில் இன்றுவரை தொடர்கிறது.
வரலாறு படைக்க வரலாற்றை தொடர்ந்து வாசிப்போம்..!
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!
பகுதி -1
கப்ளிசேட்
உமையாக்களின் பேரரசு -2
(கி.பி.661-750)
உமையாக்களின் தலைநகரான சிரியாவின் டமாஸ்கஸ் அருகே வரை ரோமப்பேரரசு விரிந்து பரந்து இருந்தது.
ஆயிரம் வருடங்கள் பாரம்பரியமும்,
ஆடம்பரங்களும்,
சர்வாதிகாரமும், நிறைந்து வழிந்த ரோமப்பேரரசு.
கிறிஸ்தவ மன்னர்களின்
ஆட்சியில் மக்களே அவர்களின் ஆட்சியை வெறுத்த காலம்.
ரோமப்பேரரசில் வாழ்ந்த கிறிஸ்தவமக்கள் கூட
இஸ்லாமிய பேரரசின் எல்லைகளுக்குள் வந்து வாழ ஆசைப்பட்ட காலம்.
ரோம சக்கரவர்த்திகளின்
ஆடம்பரங்கள்.
பாதிரிமார்களின்
அழிச்சாட்டியங்கள்
அதிகாரிகளின் லஞ்ச ஊழல்கள் என ரோமப்பேரரசே மக்கள் விரோத செயல்பாடுகளால்
அந்த நாட்டு மக்களாலேயே வெறுக்கப்பட்டது.
இஸ்லாமியர்களின் சிறிய படைகள் ரோமானியர்களின்
பெரும் படைகளை எளிதாக தோற்கடிக்க முடிந்தது.
தங்களின் பேராசைகளால்
ஒரே போரில் எண்பதாயிரம் வீரர்களை
இழந்தது ரோமாபுரி பேரரசு.
அந்தப் போரில் சில இஸ்லாமிய வீரர்கள் சிறைப்பிடிக்கப்பட்டு ரோம
சக்கரவர்த்தியின்
அவைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
சக்கரவர்த்தியை துணிவோடு சந்தித்த இஸ்லாமிய வீரர்களில் ஒரு குரைசி நபித்தோழர்
ரோமசக்கரவர்த்திக்கு இஸ்லாமிய அழைப்பை விடுத்தார்.
இதை பொறுக்காத ரோமப்பேரரசின் அமைச்சர் ஒருவர் எழுந்து வந்து அந்த தோழரின் கன்னத்தில் பளாரென அறைந்தார்.
தோழர் நிலைகுலைந்து போனார்.மிகவும் அவமானமாகவும் உணர்ந்தார்.
இந்த இஸ்லாமிய கைதிகளை விடுவிக்க ஏராளமான
இழப்பீட்டு தொகையை ரோமச்சக்கரவர்த்தி
கோரினார்.
இதனை ஒப்புக்கொண்ட இஸ்லாமிய கலீபா
முஆவியா (ரலி) அவர்கள் இழப்பீட்டு தொகையை வழங்கி கைதிகளை மீட்க செய்தார்கள்.
குரைசி நபித்தோழர்
தனக்கு நேர்ந்த அவமானத்தை கலீபாவிடம் முறையிட்டார்.
கலீபா அவர்கள் தனது தோழருக்கு நடந்த அவமானத்தை
மறக்கவில்லை.
ஒரு கப்பல் வியாபாரியை அழைத்து, அவரிடம் ரோமச்
சக்கரவர்த்திக்கும்
மற்ற அமைச்சர்களுக்கும்
நிறைய பரிசு பொருள்களை கொடுத்தனுப்பி,
அடித்த அந்த அமைச்சருக்கு மட்டும் கொடுக்காமல்
அடுத்த முறை தருகிறேன் என்று கூறிவிட்டு
அவருக்கு என்ன வேண்டும் என்று கேட்டு வந்துவிடுமாறு
ஆலோசனை சொல்லி அனுப்பி வைத்தார்கள்.
ரோமச்
சக்ரவர்த்திக்கும்
மற்ற அமைச்சர்களுக்கும்
பரிசுப் பொருட்களை
கொடுத்துவிட்டு அடித்த அமைச்சருக்கு
மட்டும் உயர்ந்த பரிசுப் பொருளை தங்களுக்கு கொடுக்க கலீபா விரும்புகிறார்.
தங்களுக்கு என்ன வேண்டும் என்று அடித்தஅமைச்சரிடம்
கேட்க, அவர் பலவண்ணங்களில்
ஒரு விரிப்புகேட்க அதனை சிறப்பாக தயார் செய்து அடுத்தமுறை அந்த வியாபாரியிடமே கப்பலில் அனுப்பி வைத்தார் கலீபா
முஆவியா (ரலி) அவர்கள்.
கப்பல் கரையை அடைந்ததும் ஆர்வம் தாங்காமல் கப்பலுக்கே அடித்த அந்தஅமைச்சர் வந்தார்.
அந்த அமைச்சர் கப்பலுக்கு வந்தவுடன் திடீரென கப்பலின் நங்கூரங்கள் எடுக்கப்பட்டு கப்பல் வேகமாக ஓடத்தொடங்கியது.
அமைச்சர் அதிர்ந்து போனார்.
வரலாறு படைக்க வரலாற்றை தொடர்ந்து வாசிப்போம்.!
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!
என்ற வரலாற்று புதினத் தொடர் 1300 ஆண்டுகால இஸ்லாமிய ஆட்சிகளை,
வரலாற்றை,
கலாச்சாரத்தை
பேசும் தொடர்..!
இஸ்லாமிய சிம்மாசனங்கள்…!
பகுதி-1
கப்ளிசேட்!
உமையாக்களின் பேரரசு-1
(கி.பி.661-750)
மத்திய தரைக்கடல்
அலைகளின் ஆர்ப்பரிப்பு இல்லாமல் அமைதியாக இருந்தது.அன்று வானத்தில் நிலா வளரத் தொடங்கியிருந்தது.
நட்சத்திரங்களின் கண்சிமிட்டலில் வானம் வசீகரமாக மின்னியது.
கப்பல்களின் வெளிச்சங்களால்
அந்தப்பகுதி ஒளிக்கோளமாக காட்சி அளித்தது.
உமைய்யா முஸ்லீம் ஆட்சியாளர்களால்
உலகில் ஏராளமான நன்மைகள் ஏற்படப்போவதை அது முன்னறிவிப்பதாக இருந்தது.
மத்திய தரைக்கடலில்
முஸ்லீம்களின் கடற்படை பிரமாண்டமான கப்பல்களுடன்
அணிவகுத்து
சென்றது.
நூற்றுக்கு மேற்பட்ட கப்பல்கள் அணிவகுத்து சென்றன.
பலவகையான கப்பல்கள் முஸ்லீம்களின் கடற்படை வலிமையை பறைசாற்றுகிறது.
கப்பல்படைகளின் மையப்பகுதியில் அந்த பிரமாண்டமான இரண்டடுக்கு கப்பல் விர்ரென நீரை கிழித்துக்கொண்டு மிதந்து சென்றது.
கப்பலின் உச்சியில்
முஸ்லீம் ஆட்சியாளர்களான
உமைய்யாக்களின் கொடி காற்றில் படபடத்து பறந்தது.
கப்பலின் முதல் தளத்தில் முன்வலது பகுதியில் இருந்த
அந்த பெரிய அறையில் இரவுத்தொழுகை நடைபெற்றுக் கொண்டிருந்தது.
முஆவியா (ரலி) அவர்களின் நம்பிக்கைக்குரிய
தளபதி உக்பத் இப்னு நாபீ அவர்கள் இமாமாக தனது படைத்
தலைவர்களுக்கு
தொழுகை நடத்திக் கொண்டிருந்தார்.
நூறு கப்பல்களின் தளபதிகளும் உபதளபதிகளும் தளபதியின் கப்பலுக்கு வருகைதந்து இருந்தனர்.
ஆப்பிரிக்க,
ஐரோப்பிய நாடுகளை வெற்றிகொண்டு இறுதியாக அட்லாண்டிக் கடல் வரை சென்று இஸ்லாமியர்களின்
கொடியை ஏற்றவேண்டும் என்று
மிகுந்த திட்டமிடலோடு
பயணிக்கிறது
அந்தப் படை.
அன்று இரவு ஆலோசனைகள் நடைபெறப்போகிறது.
அதில் முக்கிய போர் திட்டங்களை
வியூகங்களை கலந்துபேசி இறுதியில் தளபதி உக்பா அவர்களின் முடிவுப்படி திட்டங்கள்
செயல்படுத்தப்படும்.
இறைச்சியின் மணங்கள் காற்றில் மிதந்து வருகிறது.
இருப்பினும் எளிமையான உணவுகள்.
இறைச்சி மட்டுமே அந்த உணவில் ஆடம்பரம்.
முதல் தளத்தின் வெளிப்பகுதியில்
விரிக்கப்பட்டிருந்த
சாதாரண விரிப்புகளில்
தளபதிகளும் உபதளபதிகளும் அமர்ந்து கொண்டனர்.
தொழுகை முடித்து இறுதியாக வந்த தளபதி உக்பத் இப்னு நாபீ என்ற உக்பா அவர்கள் தளபதிகளுக்கு தங்கள் கைகளாலேயே பரிமாறினார்கள்.
இறுதியாக முழங்காலிட்டு இஸ்லாமிய மரபுப்படி அமர்ந்து உணவை அருந்தி முடித்து இறைவனுக்கு நன்றி செலுத்திவிட்டு,
ஆலோசனைக்கூட்டம் நடைபெறும் கூடத்திற்குள் நுழைந்தார்.
ஆலோசனை கூடத்தில் ஜன்னல்கள் வழியாக தூரத்தில் சிறிதாக தெரிந்த வெளிச்சப் புள்ளிகள் சிறிது நேரத்தில் வெளிச்சம்
பெரிதாக..அது ஒரு கப்பல் படை அணிவகுப்பு என்று புரிந்து போனது..
திடீரென நெருப்புபொறிகள்
முஸ்லீம்களின் கப்பல்களை நோக்கி பறந்து வந்தன.
வரலாறு படைக்க வரலாற்றை தொடர்ந்து வாசிப்போம்..!
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கீழை பதிப்பகத்தின் முதல் நூலான நூருத்தீன் எழுதிய “மொழிமின்” இன்று மாலை 05.00 மணியளவில் சென்னை 41வது புத்தக கண்காட்சியில் வெளியிடப்படுகிறது. இந்நூலை வெல்ஃபேர் பார்ட்டி தமிழ்நாடு மாநில தலைவர் சிக்கந்தர் வெளியிடுகிறார். இந்நூலின் முதல் பதிப்பை BAPASI செயற்குழு உறுப்பினர் K.ஜலாலுத்தீன் பெற்றுக்கொள்கிறார்.
இந்நிகழ்வு சென்னை 41வது கண்காட்சியில் உள்ள நிலவொளி பதிப்பகம் அரங்கு 13ல் நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சிக்கு கீழை பதிப்பகம் மற்றும் கீழை மீடியா மற்றும் அட்வர்டைஸ்மன்ட் நிறுவனத்தின் இயக்குனர் முஸம்மில் இபுராஹிம் முன்னிலை வகிக்கிறார்.
கீழை பதிப்பகம் நிர்வாகம் அனைவரையும் கலந்து கொள்ள அன்போடு அழைக்கின்றது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கீழை பதிப்பகத்தின் “மொழிமின்” மற்றும் “ஆன்மீக அரசியல்” இன்னும் சில நாட்களில் வெளியீடு..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
கீழை நியூசின் அங்கமான கீழை பதிப்பகத்தின் வெளியீடான வி.எஸ்.முகம்மது அமீன் எழுதிய “ஆன்மீக அரசியல்” மற்றும் நூருத்தீன் எழுதிய “மொழிமின்” புத்தகங்கள் விரைவில் வெளி வர உள்ளது. இன்றைய நவீன அரசியலில் எத்தனை முகங்களில் மக்கள் பார்க்கப்படுகிறார்கள் என்பதை வெளிச்சம் போட்டு காட்ட கூடிய நூலாகும் “ஆன்மீக அரசியல்”.
அதே போல் நவீன உலகில் மனிதன் காலையில் விழித்தது முதல் உறங்கும் வரை வாட்ஸ் அப் முதல் ஃபேஸ் புக் வரை எவ்வாறு ஆட்கொள்ளப்படுகிறான் என்பதை விவரிக்கிறது “மொழிமின்”.
சென்னையில் ஆங்கிலோ இந்தியன் பள்ளி வளாகத்தில் நடந்து வரும் 41வது புத்தக கண்காட்சியில் அன்பான, ஆதரவான நண்பர்கள் மற்றும் வாசகர்களின் ஒத்துழைப்புடன் வெளிவர உள்ளது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கீழக்கரை இளைஞர்களுக்கும், வாலிபால் போட்டிக்கும் எப்பொழுதும் ஒரு ராசியான தொடர்புண்டு. எந்த போட்டிக்கு சென்றாலும் எந்த அளவிளாவது வெற்றி வாகை சூட்டுவார்கள்.
கீழக்கரை கஸ்டம்ஸ் வாலிபால் கிளப் இளைஞர்கள் சமீபத்தில் 24ம் தேதி முத்துப்பேட்டையில் நடந்த போட்டியில் 3ம் இடத்தைப் பெற்று ரூ.6000/-ம் பரிசாக வென்றார்கள், அதுபோல் 25ம் தேதி மக்கள்பாதை திடல் திட்டத்தின் வாலிபால் போட்டியில் 2ம் இடத்தைப் பெற்று ரூ.7000/- பரிசை பெற்றுள்ளார்கள்.
கீழக்க்ரையில் உள்ள பல வாலிபால் சங்கத்தைச் சார்ந்த இளைஞர்கள் மாவட்டத்தில் பல் வேறு இடங்களில் நடக்கும் போட்டிகளில் கலந்து கொண்டு தொடர்ச்சியாக பரிசுகளைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. கீழக்கரையில் உள்ள சமூக அமைப்புகள் ஒன்றினைந்து இளைஞர்கள் வாலிபால் பயிற்சிக்கான நல்ல களத்தை உருவாக்கி கொடுக்கும் பட்சத்தில் இந்திய அளவில் மட்டுமல்லாமல், உலக அளவில் ஜொலிப்பதற்கு வாய்ப்புண்டு.
இன்னும் கீழக்கரை இளைஞர்கள் பல வெற்றிகள் பெற கீழை நியூஸ் உலகம் நிர்வாகம் வாழத்துகிறது..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கீழக்கரையில் முதன்மை பூச்சியியல் வல்லுநர் ஆய்வு.. டெங்கு காய்ச்சல் எதிரொலி..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
கீழக்கரையும், டெங்கு காய்ச்சலும் ஒன்றோடு ஓன்று ஒன்றிணைந்தது போல் பல வருடங்களாகவே நிரந்தர தீர்வு காண முடியாத ஒரு பிரச்சினையாகவே நீடித்து வருகிறது. இப்பிரச்சினையை தொடர்ந்து கீழக்கரையில் முதன்மை பூச்சியியல் வல்லுநர் ஆய்வு மேற்கொண்டார்.
பொது சுகாதார துறையின் மூலம் கீழக்கரையில் காய்ச்சல்கள் தடுப்பு நடவடிக்கை பணிகள் குறித்த கல ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பருத்திக்காரத்தெரு, வடக்குத்தெரு, கிழக்குத்தெரு ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளில் கள் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களுக்குரிய கொசு தடுப்பு குறித்த அறிவுரைகள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி தீவிர கொசு ஒழிப்பு பணிகள் நகராட்சி பணியாளர்களை கொண்டு நடைபெற்றது.
இப்பணிகளைசென்னை முதன்மை பூச்சியல் வல்லுநர் செல்வராஜ் ஆய்வு செய்தார். உடன் மாவட்ட பூச்சியல் வல்லுநர் உதயகுமார்,கீழக்கரை சுகாதார ஆய்வாளர் திண்ணாயிரமூர்த்தி, இளநிலை பூச்சிகள் வல்லுநர் சேக்தாவூது, டாக்டர் பாரதி, செல்லக்கண்ணு ஆகியோர் சென்றனர்.
மேலும் பொதுமக்கள் கொசு ஒழிப்பு பணிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கிட கேட்டுக் கொள்ளப்பட்டது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
துபாயில் நாய்க்கு பூனையை இரையாக்கியவர் கைது – 10,000 திர்ஹம் வரை அபராதம்
by Mohamed
written by Mohamed
ஐக்கிய அரபு அமீரகத்தை சர்ந்த ஒருவர் தன் வளர்ப்பு நாய்க்கு உயிருள்ள பூனையை உணவளித்ததை வீடியோ காட்சிகளாக பதிவு செய்து சமூக வலை தளத்தில் பதியேற்றம் செய்தவர் கைது செய்யப்பட்டார்.
பூனையை உயிரோடு கூண்டில் அடைத்து தன் வளர்ப்பு நாய்களுக்கு உணவளித்ததை நண்பர்கள் படம் பிடித்தது போல் இடம் பெற்ற காட்சிகளை படம்பிடித்து சமூக வலைதளங்களில் பரப்பியது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது.
இதைத் தொடர்ந்து அமீரக இணைய குற்றவியல் துறை (Cyber Crime Department ) துபாய் காவல் துறை உதவியுடன் விசாரனை செய்து குற்றத்தில் சம்பந்தப்பட்ட நபரையும், வீடியோ எடுக்க உதவியாக இருந்த இருவரையும் காவல்துறை கைது செய்தது.
இது போன்ற காட்டு மிராண்டித்தனமான செயல்களை இஸ்லாம் மார்க்கம் அனுமதிக்கவில்லை என்றும் மிருகங்களிடத்தில் அன்பும், பரிவும் காட்ட வேண்டும் என்றும் அமீரக அதிகாரி அல் மன்சூரி அவர்கள் தெரிவித்துள்ளார்.
சட்டப்பிரிவு 432 இன் கீழ், மிருகங்களை சித்திரவதை செய்யும் குற்றங்களுக்காக துபாயில் நாய்க்கு பூனையை இரையாக்கியவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் மேலும் 10,000 திர்ஹம் வரை அபராதம் வழங்கப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இனி அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் ஓ.பி அடிக்க முடியாது – ஏப்ரல் 1 முதல் பயோமெட்ரிக் வருகை பதிவு அறிமுகம்
by keelai
written by keelai
தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் அரசு மருத்துவர்களுக்கு எதிர்வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் ‘பயோமெட்ரிக்’ வருகைப் பதிவை கட்டாயம் செயல்படுத்தப்பட வேண்டும் என்று அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் சுகாதாரத் துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
மருத்துவமனைக்கு டாக்டர்களின் தாமத வருகை, வருகைப் பதிவேட்டில் போலி கையெழுத்திடுதல், வேலை நேரத்தில் ஓ.பி அடித்தல் உள்ளிட்ட பிரச்னைகளை சுட்டிக்காட்டி, செய்தி ஊடகங்கள் தொடர்ந்து செய்தி வெளியிட்டு வந்தனர். அதனை அடிப்படையாக கொண்டு சமூக ஆர்வலர்கள் உயர் நீதிமன்ற மதுரை கிளையில், பொது நல வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ‘அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், நான்கு மாதங்களில், பயோமெட்ரிக் வருகைப் பதிவு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும்’ என, கடந்த ஜனவரி மாதம் உத்தரவிட்டு இருந்தது.
இந்நிலையில் உயர் நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தும் விதமாக, எதிர்வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அரசு மருத்துவமனைகளில், டாக்டர்களுக்கு பயோமெட்ரிக் வருகைப் பதிவை கட்டாயமாக்கும்படி, சுகாதாரத் துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இதனால் அரசு மருத்துவர்கள் இனி இன்னும் சிறப்பாக தங்கள் பணிகளை செம்மையாக செய்வார்கள் என்று எதிர்பார்க்கலாம்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
எளிய முறையில் அனைவரும் அரபி மொழி கற்று கொள்ள தமிழ் இளைஞரின் முயற்சி..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
இன்று இளைய சமுதாயத்தினர் பலர் வளைகுடா மற்றும் மத்திய கிழக்கு அரபு நாடுகளில் பல் வேறு துறைகளில் பணியாற்றி வருவது அனைவரும் அறிந்த விசயம். நாம் வேலை பார்க்கும் இடத்தில் பேசும் மொழி என்பது மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த குறையை போக்கும் விதமாக தொண்டியைச் சேர்ந்த முஹம்மது ஷாஃபி என்பவர் அரபு மொழியை எளிதாக பேசும் விதமாக *அரபு நாட்டு பேச்சு வழக்கு* எனும் புத்தகத்தை வெளியிட்டுள்ளார்.
இந்தப் புத்தகம் அனைவருக்கும் கிடைக்கும் விதமாக தன் நண்பர்கள் மூலம் சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இந்தியாவில் பல பகுதிகளுக்கு விற்பனை செய்ய முயற்சி எடுத்து வருகிறார். அவருடைய இந்த முயற்சி வெற்றி பெற்று அனைவரும் பயனடைய வாழ்த்துவோம். கீழ்கண்ட இடங்களில் புத்தகங்கள் தற்சமயம் கிடைக்கிறது :-
கீழக்கரையில்:-
சவுதி அரேபியா ஜித்தாவில்:-
சவுதி அரேபியா தம்மாமில்:-
அமீரகம் துபாய் தேராவில்:-
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தகவல் அறியும் உரிமை சட்டம் சம்பந்தமான தகவல்களை விரிவாக அறிந்து கொள்ள கீழே உள்ள புத்தகத்தை நீங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்….
RTI ACT – 2005 – Tamil – R.PRAKASH B.Sc.M.L. For Public Use (Tamilnadu)
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
உங்கள் அன்பு குழந்தைகளுக்கு இஸ்லாம் மார்க்கதை எளிய முறையில் ஆங்கில வழியில் பயிற்றுவிக்க கீழே உள்ள புத்தகத்தை பதிவிறக்கம் செய்யுங்கள்…
You must be logged in to post a comment.