இராமநாதபுரத்தில் புதிய பேருந்து நிலையம் அருகே மத்திய, மாநில எஸ்சி.எஸ்டி அரசு ஊழியர்கள் மற்றும் மக்கள் கூட்டமைப்பு சார்பில் இந்திய அரசியல் சாசனத்தின் தந்தை பாரதரத்னா பாபாசாகிப் டாக்டர் பி.ஆர். அம்பேத்கார் அவர்களின் 134 வது பிறந்தநாள் விழா மாவட்ட தலைவர் கர்ணன், மாவட்ட செயலாளர் சேக்கிழார் ஆகியோர் தலைமையில் டாக்டர் அம்பேத்கார் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.அதனைத் தொடர்ந்து வருகை புரிந்த பொதுமக்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினர்.மேலும் இந்நிகழ்ச்சியில் மாநில துணை செயலாளர் பாலச்சந்திரன்,மாவட்ட பொருளாளர் பாபு, செய்தி தொடர்பாளர் தங்கவேல்,மாவட்ட மருத்துவ அணி செயலாளர் டாக்டர். பிரசாத் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளரும் சமூக சேவகருமான டாக்டர்.மாடசாமி மற்றும் இதர அமைப்பு பொறுப்பாளர்களும், அனைத்து கட்சி பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்களும் திரளாக கலந்து கொண்டு டாக்டர். அம்பேத்கார் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தனர்.
Category:
சட்டம்
துபாயில் நாய்க்கு பூனையை இரையாக்கியவர் கைது – 10,000 திர்ஹம் வரை அபராதம்
by Mohamed
written by Mohamed
ஐக்கிய அரபு அமீரகத்தை சர்ந்த ஒருவர் தன் வளர்ப்பு நாய்க்கு உயிருள்ள பூனையை உணவளித்ததை வீடியோ காட்சிகளாக பதிவு செய்து சமூக வலை தளத்தில் பதியேற்றம் செய்தவர் கைது செய்யப்பட்டார்.
பூனையை உயிரோடு கூண்டில் அடைத்து தன் வளர்ப்பு நாய்களுக்கு உணவளித்ததை நண்பர்கள் படம் பிடித்தது போல் இடம் பெற்ற காட்சிகளை படம்பிடித்து சமூக வலைதளங்களில் பரப்பியது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது.
இதைத் தொடர்ந்து அமீரக இணைய குற்றவியல் துறை (Cyber Crime Department ) துபாய் காவல் துறை உதவியுடன் விசாரனை செய்து குற்றத்தில் சம்பந்தப்பட்ட நபரையும், வீடியோ எடுக்க உதவியாக இருந்த இருவரையும் காவல்துறை கைது செய்தது.
இது போன்ற காட்டு மிராண்டித்தனமான செயல்களை இஸ்லாம் மார்க்கம் அனுமதிக்கவில்லை என்றும் மிருகங்களிடத்தில் அன்பும், பரிவும் காட்ட வேண்டும் என்றும் அமீரக அதிகாரி அல் மன்சூரி அவர்கள் தெரிவித்துள்ளார்.
சட்டப்பிரிவு 432 இன் கீழ், மிருகங்களை சித்திரவதை செய்யும் குற்றங்களுக்காக துபாயில் நாய்க்கு பூனையை இரையாக்கியவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் மேலும் 10,000 திர்ஹம் வரை அபராதம் வழங்கப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இனி அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் ஓ.பி அடிக்க முடியாது – ஏப்ரல் 1 முதல் பயோமெட்ரிக் வருகை பதிவு அறிமுகம்
by keelai
written by keelai
தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் அரசு மருத்துவர்களுக்கு எதிர்வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் ‘பயோமெட்ரிக்’ வருகைப் பதிவை கட்டாயம் செயல்படுத்தப்பட வேண்டும் என்று அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் சுகாதாரத் துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
மருத்துவமனைக்கு டாக்டர்களின் தாமத வருகை, வருகைப் பதிவேட்டில் போலி கையெழுத்திடுதல், வேலை நேரத்தில் ஓ.பி அடித்தல் உள்ளிட்ட பிரச்னைகளை சுட்டிக்காட்டி, செய்தி ஊடகங்கள் தொடர்ந்து செய்தி வெளியிட்டு வந்தனர். அதனை அடிப்படையாக கொண்டு சமூக ஆர்வலர்கள் உயர் நீதிமன்ற மதுரை கிளையில், பொது நல வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ‘அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், நான்கு மாதங்களில், பயோமெட்ரிக் வருகைப் பதிவு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும்’ என, கடந்த ஜனவரி மாதம் உத்தரவிட்டு இருந்தது.
இந்நிலையில் உயர் நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தும் விதமாக, எதிர்வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அரசு மருத்துவமனைகளில், டாக்டர்களுக்கு பயோமெட்ரிக் வருகைப் பதிவை கட்டாயமாக்கும்படி, சுகாதாரத் துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இதனால் அரசு மருத்துவர்கள் இனி இன்னும் சிறப்பாக தங்கள் பணிகளை செம்மையாக செய்வார்கள் என்று எதிர்பார்க்கலாம்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தகவல் அறியும் உரிமை சட்டம் சம்பந்தமான தகவல்களை விரிவாக அறிந்து கொள்ள கீழே உள்ள புத்தகத்தை நீங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்….
RTI ACT – 2005 – Tamil – R.PRAKASH B.Sc.M.L. For Public Use (Tamilnadu)
You must be logged in to post a comment.