இராமநாதபுரத்தில் புதிய பேருந்து நிலையம் அருகே மத்திய, மாநில எஸ்சி.எஸ்டி அரசு ஊழியர்கள் மற்றும் மக்கள் கூட்டமைப்பு சார்பில் இந்திய அரசியல் சாசனத்தின் தந்தை பாரதரத்னா பாபாசாகிப் டாக்டர் பி.ஆர். அம்பேத்கார் அவர்களின் 134 வது பிறந்தநாள் விழா மாவட்ட தலைவர் கர்ணன், மாவட்ட செயலாளர் சேக்கிழார் ஆகியோர் தலைமையில் டாக்டர் அம்பேத்கார் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.அதனைத் தொடர்ந்து வருகை புரிந்த பொதுமக்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினர்.மேலும் இந்நிகழ்ச்சியில் மாநில துணை செயலாளர் பாலச்சந்திரன்,மாவட்ட பொருளாளர் பாபு, செய்தி தொடர்பாளர் தங்கவேல்,மாவட்ட மருத்துவ அணி செயலாளர் டாக்டர். பிரசாத் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளரும் சமூக சேவகருமான டாக்டர்.மாடசாமி மற்றும் இதர அமைப்பு பொறுப்பாளர்களும், அனைத்து கட்சி பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்களும் திரளாக கலந்து கொண்டு டாக்டர். அம்பேத்கார் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தனர்.
Category:
சட்டம்
அரசு ஊழியர்களின் அலட்சியத்தால் 50 ஆயிரம் குழந்தைகளின் கல்விக் கனவு பறிப்பு
by mohan
written by mohan
RTE இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களை ஏழை குழந்தைகளுக்கு இலவசமாக வழங்க வேண்டும். RTE சட்டத்தின் மூலமாக தனியார் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எல்கேஜி முதல் எட்டாம் வகுப்பு வரை கட்டணம் செலுத்த வேண்டாம்.நடப்பாண்டிற்கான இலவச மாணவர் சேர்க்கை கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி முதல் தொடங்கி மே 18 – ஆம் தேதி வரை நடைபெற்றது.இந்த சட்டத்தின் கீழ் விண்ணப்பிப்பதற்காக rte.tnschools.gov.in என்ற இணையதளத்தை தமிழக பள்ளிக்கல்வித் துறைஅறிவித்ததன் அடிப்படையில் தமிழகத்தில் உள்ள 1.21 லட்சம் இடங்களை நிரப்புவதற்கு 1.07 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர் (பத்திரிக்கை செய்தி)இந்த நிலையில் RTE இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறுவதில் நிறைய குளறுபடிகள் நடப்பதாக புகார்கள் எழுந்தன.
புகார்களை நிவர்த்தி செய்வதற்காக ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, மாநிலத் திட்ட இயக்குநரகத்தால் 14417 என்ற இலவச தொலைபேசி என்னும் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியும் அறிவித்திருந்தது.நாம் வெல்ஃபேர் கட்சியின் சார்பாக RTE கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தை மக்களிடத்தில் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்பதற்காக ஒரு மாதகாலம் முகாம்களை நடத்தி அதன்மூலம் பல மனுக்களை பெற்று இருந்தோம்., அரசின் இணையதளம் சரியாக இயங்காததால் பல குழந்தைகளின் விண்ணப்பங்கள் முழுமையாக பதிவேற்றம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.
இணையதள பிரச்சனையை சரி செய்வதற்காக பள்ளி கல்வித்துறை அறிவித்திருந்த 14417 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டால் அதுவும் இயங்கவில்லை, [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பினால் அதற்கும் பதில் இல்லை., பள்ளிக் கல்வித்துறை அறிவித்திருந்த கால அவகாசம் நிறைவு பெற்றது, பள்ளிகளும் திறந்தன. RTE சட்டத்தில் விண்ணப்பிக்க இயலாத பல தாய்மார்கள் தங்கள் தாலியை கூட அடகு வைத்து தனது குழந்தைகளை பள்ளியில் சேர்த்துள்ளனர்.டிஜிட்டல் இந்தியாவில் பள்ளிக்கல்வி துறையின் இணையதளம் இவ்வளவு படுமோசமாக செயல்படுவதை தமிழக மக்களிடத்தில் அம்பலப்படுத்த வேண்டும் என்பதற்காக தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் (RTI) கீழ் இரண்டு கேள்விகளை முன் வைத்தோம் .
1.பள்ளிக் கல்வித்துறை அறிவித்திருந்த 14417 என்ற இலவச தொலைபேசி எண்ணிற்கு 18.4.19 முதல் 18.5.19 வரையிலான காலகட்டத்தில் எத்தனை அழைப்புகள் வந்தன., அதற்கு தந்த பதில்கள், கால் ஹிஸ்டரி குறித்த தகவலை அளிக்குமாறு கோரப்பட்டுள்ளது .
[email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 18.4.19 முதல் 18.5.19 வரையிலான காலகட்டத்தில் எத்தனை மின்னஞ்சல் வந்தன அதற்கு என்ன பதில் வழங்கப்பட்டது என்ற விவரத்தைக் கேட்டிருந்தோம்.
நமது RTI மனுவிற்கு பதிலளித்த பொது தகவல் அலுவலர் முதல் கேள்விக்கான பதிலை பள்ளிக் கல்வி இயக்குனரகத்தில் பெற்றுக்கொள்ளும் படியும், இரண்டாவது கேள்விக்கு 1687 மின்னஞ்சல்கள் வந்துள்ளதாகவும் அதற்கு தொலைபேசி வாயிலாக பதில் அளிக்கப்பட்டதாகவும் தெரிவித்திருந்தார்.தொலைபேசியில் தொடர்பு கொண்டாலே பதிலளிக்காது அரசு ஊழியர்கள் மின்னஞ்சலுக்கு தொலைபேசியில் பதிலளித்தார்களா….??? என்று ஆச்சரியத்துடன் மீண்டும் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் பிரிவு 2J வின் கீழ் அந்த 1687 மின்னஞ்சல்களையும் சம்பந்தப்பட்ட அரசு ஊழியரின் கணினியில் ஆய்வு செய்ய வேண்டி விண்ணப்பித்து இருந்தோம்.நமது விண்ணப்பத்தை ஏற்று கொண்ட பொது தகவல் அலுவலர் கடந்த 23.7.2019 அன்று காலை 11 மணிக்கு மாநில திட்ட இயக்குனரகம், இரண்டாவது தளம், அறை எண் 204க்கு வரும்படி அழைப்பு விடுத்திருந்தார்.
ஆய்வின் துவக்கமாக 1687 மின்னஞ்சல்களையும் நமக்கு ஃபார்வர்ட் செய்துகொண்டு அதில் 100 மின்னஞ்சல்களை பிரின்ட் எடுத்து ஆய்வு செய்தால் அதில் பல மின்னஞ்சல்களுக்கு தொலைபேசி எண்னே இல்லை.தொலைபேசி எண் இல்லாதவர்களுக்கு எப்படி சார் தொலைபேசியில் பதில் அளித்திர்கள் என்று கேள்வி எழுப்பியவுடன், தான் சிக்கிக் கொண்டதை உணர்ந்த அந்த அரசு ஊழியர் தனது உதவிக்கு டெக்னிகல் டீமிலிருந்து ஒருவரை அழைத்துக் கொண்டார் வந்தவர் “ரொம்ப நல்லவரா இருந்ததனால்”
இணைய பிரச்சனையை ஓரிரு நாட்களில் சரி செய்து விட்டோம் முழுமையாக கல்வி பெறும் உரிமைச் சட்டத்தில் மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள் என்று கூறி தன்னுடைய மடிக்கணினியை திறந்து காட்டினார்.வாலண்டியராக வந்து ஒருவர் வண்டியில் ஏறுகிறாரே என்ற சந்தேகத்துடன் அவரின் மடிக்கணினியை பார்க்கும் போதுதான் நமக்கு கிடைத்தது அந்த அதிர்ச்சித் தகவல் 1.21 லட்சம் இடங்களில் LKG-ல் 66,839 இடங்களும். முதல் வகுப்பில் 1460 மட்டுமே நிரப்பப்பட்டுள்ளதை காட்டியது மடிக்கணினி.மக்களில் வரிப்பணத்தில் லட்சங்களில் சம்பளம் வாங்கிக்கொண்டு குளிர்சாதன அறைகளில் அமர்ந்து கொண்டு பணி நேரங்களில் பணி செய்யாமல் எந்த உணவகத்தில் எந்த தாலி நன்றாக இருக்கும் என்று பேசிக் கொண்டிருக்கக் கூடிய அரசு ஊழியர்களால் ஏற்பட்ட இழப்பு 50 ஆயிரம் குழந்தைகளுக்கு கிடைத்திருக்க வேண்டிய இலவச கல்வி கிடைக்காமல் போனது .
நடந்த இந்த குற்றத்திற்க்கு பொறுப்பாளரான நிர்வாக அலுவலர் ரங்கநாதனை சந்தித்து ஏன் சார் இப்படி பொய் சொல்றீங்க என்று கேட்டதற்கு ஒரு நிமிடம் கூட நின்று நமக்கு பதில் தர முடியாமல் உடனடியாக அங்கிருந்து ஓடிவிட்டார் ரங்கநாதன்.தாங்கள் என்ன தவறு செய்தாலும் கேட்பதற்கு ஆளில்லை என்கின்ற மன தைரியத்தில் இருக்கும் இத்தகைய அரசு ஊழியர்களை தொடர்ந்து கேள்விகேட்க…! பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நீதி கிடைக்க…! போராட்டத்தை முன்னெடுக்க…! உங்களின் முழுமையான ஆதரவு தேவை என்று வெல்ஃபேர் கட்சியின் மாநில் செயலாளர் ம.முகமது கவுஸ் தெரிவித்துளார் .
ம. முகமது கவுஸ்
9003018656
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
*பட்டா*
ஒரு நிலம் இன்னார் பெயரில் உள்ளது என்பதை குறிக்கும் வகையில் வருவாய்துறை அளிக்கும் சான்றிதழ்.
*சிட்டா*
குறிப்பிட்ட நிலத்தின் பரப்பளவு அதன் பயன்பாடு, யாருடைய கட்டுபாட்டில் உள்ளது என்பது தொடர்பான விவரங்கள் அடங்கிய வருவாய்த்துறை ஆவணம்.
*அடங்கல்*
நிலத்தின் பரப்பு, பயன்பாடு, கிராமத்தின் மொத்த நிலத்தில் இது எந்த பகுதயில் உள்ளது என்ற விவரங்கள் அடங்கிய வருவாய்த்துறை ஆவணம்.
*கிராம நத்தம்*
ஒவ்வொரு கிராமத்திலும் குடியிருப்பு பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிலம்.
*கிராம தானம்*
கிராமத்தின் பொது பயன்பாட்டுக்காக நிலத்தை ஒதுக்குவது.
தேவதானம்: கோவில் பயன்பாட்டுக்காக குறிப்பிட்ட நிலத்தை தானமாக அளித்தல்.
*இனாம்தார்*
பொது நோக்கத்துக்காக தனது நிலத்தை இலவசமாக அளித்தவரை குறிக்க பயன்படுத்தும் சொல்.
*விஸ்தீரணம்*
நிலத்தின் பரப்பளவு. எல்லைகளை குறிப்பது.
*ஷரத்து*.
பிரிவு.
*இலாகா*
துறை.
*கிரயம்*
நிலத்தை ஒருவருக்கு விற்பனை செய்வதை ஆவணபடுத்துதல்.
*வில்லங்க சான்று*
ஒருநிலத்தை ஒருவருக்கு விற்பனை செய்த அதன் உரிமையாளர், அதனை மறைத்துவிட்டு, அதே நிலத்தை வேறு ஒருவருக்கு விற்பனை செய்வது மோசடி. இந்த விவரத்தை அறிந்து கொள்ள உதவும் பதிவுத்துறை ஆவணம்.
*புல எண்*
நில அளவை எண்.
*இறங்குரிமை*
வாரிசுரிமை.
*தாய்பத்திரம்*
ஒரு குறிப்பிட்ட நிலம், இப்போதைய உரிமையாளருக்கு முன்னர் யாரிடம் இருந்தது என்பதை அறிய உதவும் முந்தய பரிவர்த்தன ஆவணங்கள்.
*ஏற்றது ஆற்றுதல்*
குறித்தவகை பொறுப்பை நிறைவற்றுவதற்கு உறுதி அளித்தல்.
*அனுபவ பாத்தியம்*
நிலத்தை பயன்படுதிகொள்ளும் உரிமை.
*சுவாதீனம் ஒப்படைப்பு*
நிலத்தின் மீதான உரிமையை ஒப்படைத்தல்.
ஜமாபந்தி: வருவாய் தீர்வாயம்.
*நன்செய்நிலம்*
அதிக பாசன வசதி கொண்டநிலம்.
*புன்செய்நிலம்*
பாசன தேவைக்கு மழையை நம்பியுள்ள நிலம்.
*குத்தகை*
ஒரு நிலத்தை பயன்படுத்தும் உரிமையை குறிப்பிட்ட காலத்துக்கு சில நிபந்தனைகளுடன் அளிப்பது அல்லது பெறுவது.
தொகுப்பு
மூத்த நிருபர்
கீழை செய்திகள்
அ.சா.அலாவுதீன்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
அறிவோம் சட்டம்- கிரைய பத்திரம் பதியும் போது கவனிக்க வேண்டிய 16 விஷயங்கள்!..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
அறிவோம் சட்டம்- கிரைய பத்திரம் பதியும் போது கவனிக்க வேண்டிய 16 விஷயங்கள்!..
1. ஒரு நிலத்தை ஒரு நபரிடமிருந்து விலை கொடுத்து வாங்கி உங்கள் பெயருக்கு மாற்றி கொள்வதற்கு போடப்படும் ஆவணம் தான் கிரயப் பத்திரம் ஆகும்.
2. மேற்படி கிரயப்பத்திரம் முத்திரை தாள்களில் எழுதப்பட்டு சார்பதிவகத்தில் சாட்சிகள் முன்னிலையில் பதியப்படுவது தான் கிரயப் பத்திர பதிவு ஆகும்.
3. எழுதி கொடுப்பவரின் பெயரும் & இன்சியலும், அவரின் அடையாள அட்டை, பட்டா . மின் இணைப்பு, முன் பத்திரம் மற்றும் இதர ஆவணங்களில் உள்ளது போலவே பத்திரத்தில் எழுதப்பட்டுள்ளதா என பார்க்க வேண்டும்.
4. எழுதி கொடுப்பவர், ஏற்கனவே முன் வாங்கிய கிரயப்பத்திரத்தில் உள்ள அவரின் முகவரியும், தற்போது இருக்கும் முகவரியும் ஒன்றா என்று பார்க்க வேண்டும். இரண்டும் வேறு வேறு முகவரி என்றால் இரண்டு முகவரியும் இப்போது எழுதுகிற கிரைய பத்திரத்தில் காட்ட வேண்டும்.
5. கிரயம் எழுதி வாங்குபவரும் தன்னுடைய பெயர் , இன்சியல், முகவரி ஆகியவை அடையாள அட்டையுடன் பொருந்தும்படி பிழையில்லாமல் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.
6. கிரயம் எழுதி கொடுப்பவருக்கு சொத்து எப்படி வந்தது,
• அவர் வேறு நபரிடம் கிரயம் வாங்கி இருக்கலாம்.
• அவருடைய பெற்றோர்கள் மற்றும் குடும்பத்தாரிடம், இருந்து செட்டில்மெண்ட், பாகபிரிவினை, விடுதலைப் பத்திரம் மூலம் அடைந்து இருக்கலாம்.
• உயில் , தானம் மூலம் கிடைத்து இருக்கலாம்.
• பொது ஏலம், நீதிமன்ற தீர்வுகள் மூலம் கிடைத்து இருக்கலாம்.
• பூர்வீகமாக பட்டா படி பாத்தியப்பட்டு வந்து இருக்கலாம். அதனை கிரயம் எழுதி கொடுப்பவர் தெளிவாக ஆவண எண் விவரத்துடன் மேற்படி சொத்து எனக்கு கிடைத்தது என்று சொல்லி இருக்க வேண்டும்.
7. கிரயம் எழுதி கொடுப்பவருக்கு, யார் மூலம் சொத்து வந்தது என எழுதுவது மட்டும் இல்லாமல் அவருக்கு முன் கிரயம் பெற்றவருக்கு யார் மூலம் சொத்து வந்தது என்று நதிமூலம் ரிஷிமூலம், பார்த்து அணைத்து லிங்க் டாகுமென்ட்யையும் வாரலாறாக தற்போதைய கிரைய பத்திரத்தில் எழுதுவது மிக சிறப்பானது ஆகும்.
8. கிரயம் நிச்சயித்த உண்மை தொகை எழுத வாய்ப்பு இருந்தால் தெளிவாக எழுதுங்கள் (அல்லது) வழிகாட்டி மதிப்பு தொகை எழுதினாலும் எழுதுங்கள். எவ்வளவு பணம் அக்ரிமெண்ட் போடும்போது கொடுக்கப்பட்டது, எவ்வளவு பணம் காசோலையாக கொடுக்கப்பட்டது, எவ்வளவு பணம் வங்கி கணக்கில் கட்டப்பட்டது, எவ்வளவு பணம் ரொக்கமாக கொடுக்கப்படுகிறது, என தெளிவாக குறிப்பிட வேண்டும்.
9. கிரயம் எழுதி கொடுப்பவர், எழுதி வாங்குபவருக்கு கீழ்க்கண்ட உறுதி மொழிகளை கட்டாயம் கொடுத்து இருக்க வேண்டும்.
1.தானம்
2. அடமானம்
3. முன் கிரயம்
4. முன் அக்ரிமெண்ட்,
5. உயில்
6. செட்டில்மெண்ட்,
7. கோர்ட் அல்லது கொலாட்ரல் செக்யூரிட்டி,
8. ரெவின்யூ அட்டாச்மெண்ட்
9. வாரிசு பின் தொடர்ச்சி,
1௦. மைனர் வியாஜ்ஜியங்கள்.
11. பதிவு பெறாத பத்திரங்கள் மூலம் எழுதும் பாத்திய கோரல்கள்,
12.சொத்து ஜப்தி,
13.சொத்து ஜாமீன்,
14.பைசலுக்காக சர்க்கார் கடன்கள்,
15.வங்கி கடன்கள்,
16.தனியார் கடன்கள்,
17.சொத்து சம்மந்தமான வாரிசு உரிமை ,
18.சிவில், கிரிமினல் வழக்குகள்,
19.சர்க்கார் நில ஆர்ஜிதம்,
20.நிலகட்டுப்பாடு ,
21.அரசு நில எடுப்பு முன் மொழிவு நோட்டீஸ்,
22.நில உச்ச வரம்பு கட்டுப்பாடு,
23.பத்திரப்பதிவு சட்டம் 47(a) சட்டத்தின் கீழ் சொத்து இல்லை
24. இதில் சொல்லாத பிற வில்லங்கங்கள் இல்லை
போன்ற உறுதி மொழிகளை வில்லங்கம் இல்லை என்று கண்டிப்பாக உறுதி அளித்து இருக்க வேண்டும்.
1௦. சர்க்கார் வரி வகைகள் முழுவதும் கட்டியாயிற்று, சொத்து சம்மந்தமான அசல் நகல் ஆவணங்களை ஒப்படைத்து விட்டேன். எதிர்காலத்தில் பிழை இருந்தால் அல்லது வேறு ஏதாவது பத்திரம் இந்த சொத்து பற்றி எழுதி கொடுக்க சொன்னால் கைமாறு எதிர்பார்க்காமல் எழுதி கொடுக்கின்றேன் என்று கிரைய பத்திரத்தில் உறுதி அளித்து இருக்க வேண்டும்.
11. சொத்து விவரத்தில் மிக தெளிவாக மாவட்டம், வட்டம், கிராமம் புல எண், உட்பட அனைத்தையும் தெளிவாக குறிப்பிட்டு இருக்க வேண்டும். தெருவோ, கதவு எண்ணோ இருந்தால் நிச்சயம் குறிப்பிட்டு இருக்க வேண்டும். மின் இணைப்பு இருந்தால் மின் இணைப்பு எண், நிலத்தின் பட்டா எண், புதிய சர்வே எண், பழைய சர்வே எண், பட்டா படி சர்வே எண். தெளிவாக எழுதிருக்க வேண்டும்.
12. இடத்தின் அளவு நாட்டு வழக்கு முறையிலும் , பிரிட்டிஸ் அளவு முறையிலும், மெட்ரிக் அளவு முறையிலும் தெளிவுடன் எழுதி இருக்க வேண்டும். மெட்ரிக் அளவு முறையில் எழுதி இருந்தால் பட்டா மாற்றத்திற்கு உதவியாக இருக்கும் .
13. கிரைய சொத்தை சுற்றி இருக்கும் நான்கு பக்கங்களில் இருக்கின்ற சொத்துக்களை சிறு அளவு பிழை இல்லாமல் அடையாள படுத்த வேண்டும். நான்கு பக்கங்களில் இருக்கின்ற நீள அகல அளவுகளை தெளிவுடன் குறிப்பிட்டு இருக்க வேண்டும்.
14. பத்திரத்தின் எல்லா பக்கங்களிலும் எழுதி கொடுப்பவர் கையொப்பம் இட்டு இருக்கிறார்களா என்று சோதனையிட வேண்டும். எழுதி கொடுப்பவர் தரப்பின் சாட்சிகள், பெயர் & முகவரியுடன் கையொப்பம் இட்டு இருக்கிறார்களா என்று சரிபார்க்க வேண்டும்.
15. தேவையான பட்டா, வரைபடம், அடையாள அட்டை நகல்கள் பத்திரத்துடன் இணைக்கப்பட்டுள்ளதா , அதில் எழுதி கொடுப்பவர் கையொப்பம் இட்டு இருக்கிறார்களா என்று பார்க்க வேண்டும்.
16. முத்திரைத்தாள்கள் சரியாக வாங்கி இருக்கிறோமோ, பதிவுக்கட்டணம் DD சரியாக எடுத்துள்ளதா, ஆவண எழுத்தர் அல்லது வக்கீல் , ஆவணம் தயாரித்தவர் என்று கையொப்பம் இட்டு இருக்கிறார்களா என்று பார்க்க வேண்டும்.
மூத்த நிருபர்
கீழை நியூஸ்
அ.சா.அலாவுதீன்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
துணை நிலை ஆளுநரின் அதிகாரம் என்ன? உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் நகல் இணைப்புடன்…
by ஆசிரியர்
written by ஆசிரியர்
டெல்லி துணை நிலை ஆளுநர் தன்னிச்சையாக முடிவெடுக்க அதிகாரம் கிடையாது என உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
டெல்லி துணை நிலை ஆளுநருக்கு இருக்க கூடிய அதிகாரங்கள் என்ன என்ன என்பது குறித்தும் உச்சநீதிமன்றம் விரிவான தீர்ப்பினை வழங்கியுள்ளது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட டெல்லி அரசின் முடிவுகளில் துணை நிலை ஆளுநர் தலையிட அதிகாரம் உள்ளதா என்பதை விளக்க கோரி டெல்லி அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. முன்னதாக டெல்லி நிர்வாகத்தில் துணை நிலை ஆளுநருக்கே முழு அதிகாரம் உள்ளது என டெல்லி உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது.
இந்த வழக்கை கடந்த நவம்பர் மாதம் 2 ஆம் தேதி முதல் தொடர்சியாக 15 நாட்கள் விசாரித்த தலைமை நீதிபதி தீபக் மிஷ்ரா, ஏ கே சிக்ரி, கன்வில்கர், சந்திரசூட், ஆசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு கடந்த டிசம் 6 ஆம் தேதி தீர்ப்பினை ஒத்திவைத்தது. தேசிய தலைநகர் சட்டப்பிரிவு 239 ஏ ஏ படி துணை நிலை ஆளுநரின் அதிகார வரம்புகளை நிர்ணயிக்க கோரிய இந்த மனு மீது தான் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது.
டெல்லி அரசின் வீட்டிற்கே சென்று ரேஷன் பொருட்களை வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல நல திட்டங்களுக்கு துணை நிலை ஆளுநர் பைஜால் அனுமதி வழங்கால் முட்டுகட்டையாக இருந்தார். இதனையடுத்தே நீதிமன்றத்தை நாடியது டெல்லி அரசு. மேலும் டெல்லி அதிகாரிகளையும் பணி செய்யவிடாமல் துணை நிலை ஆளுநர் தடுப்பதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. இனி இந்த தீர்ப்பின் முக்கிய அம்சங்களை பார்க்கலாம்…
தீர்ப்பின் உண்மை நகலை பார்வையிட கீழே க்ளிக் செய்யவும் ..
தலைமை நீதிபதி தீபக் மிஷ்ரா, சந்திரசூட், அசோக் பூஷன் ஆகியோர் தனிதனியாக தீர்ப்பு வழங்கினர். மற்ற இருவரும் தலைமை நீதிபதியின் தீர்ப்பில் கையொப்பம் இட்டனர்.
ஆளுநருக்கான அதிகார வரம்பு அரசியல்சாசனத்தை மதிக்கும்படியே இருக்க வேண்டும் என தீபக் மிஷ்ரா தீர்பப்பை எழுதியுள்ளார். மேலும் துணை நிலை ஆளுநருக்கு தன்னிச்சையாக முடிவெடுக்க அதிகாரம் கிடையாது என திட்டவட்டமாக கூறினார்.
டெல்லியின் அதிகாரத்தை நிர்ணயிக்கும் அரசியல்சாசன பிரிவு 239ஏ ஏ பின் அம்சங்களை விளக்கிய தலைமை நீதிபதி, டெல்லிக்கு மற்ற மாநிலங்களுக்கு இருப்பது போன்று மாநில அதிகாரம் கிடையாது எனவும், துணைநிலை மாநில ஆளுநர் போன்றவர் அல்ல எனவும் விளக்கப்பட்டது.
மக்கள் நல திட்டங்கள் துணை நிலை ஆளுநரால் தாமதமானாலும், அரசால் தாமதமானாலும் பொறுப்பேற்க வேண்டியது இருவருமே.
டெல்லியின் துணை நிலை ஆளுநர் மத்திய அரசு சட்டப்பேரவை விவகாரங்களில் தலையிடக்கூடாது அதேபோல் எடுக்கப்படும் முடிவுகள் குறித்து மாநில அரசு துணை நிலை ஆளுநருக்கு தெரிவிக்க வேண்டும் எனவும் விளக்கப்பட்டது.
உச்சநீதிமன்றத்தின் 9 தீர்ப்புகள் படி டெல்லி அரசுக்கு மற்ற மாநிலங்களுக்கு இருப்பது போல அதிகாரங்கள் கிடையாது, எனினும் அரசியல்சாசனத்தை மதிக்கும்படியே நிர்வாகங்களின் செயல்பாடுகள் இருக்க வேண்டும் எனவும் தீபக் மிஷ்ரா கூறினார்
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் முடிவுகளின் மீது துணை நிலை ஆளுநர் மதிப்பளிக்க வேண்டும் என கூறிய தலமை நீதிபதி மக்கள் நல முடிவுகளுக்கு துணை நிலை ஆளுநர் ஒரபோதும் முட்டுகட்டை இடக்கூடாது என தெரிவித்தார்.
துணை நிலை ஆளுநர் அரசியல் சாசனத்திற்கு அப்பாற்பட்டு முழு சுதந்திரமாக, தன்னிச்சை முடிவுகளை எடுக்க முடியாது எனவும் மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைக்கமாக செயல்படுவதே சாலச்சிறந்ததாக இருக்கும் எனவும் தீபக் மிஷ்ரா தீர்ப்பு எழுதினார்.
அரசியல் சாசனத்தை மதிக்காமல், துணைநிலை ஆளுநர் தன்னிச்சையாக செயல்பட முடியாது, அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர்களின் ஆலோசனையையுல் பெற்று எல்லா முடிவுகளையும் எடுக்க வேண்டும்.
பின்னர் தனது தீர்ப்பை வாசித்த நீதிபதி சந்திரசூட், இங்கு யாரும் நான் தான் தலைவர் என்ற நிலை கிடையாது, இருவரும் ஒற்றுமையோடு செயல்பட வேண்டும், மாநிலத்துக்கான முழு அதிகாரம் மக்களால் தேர்த்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கே உள்ளது , ஆனால் டெல்லி சிறப்பு அந்தஸ்தில் உள்ளதால் அதிகாரம் அமைச்சரவை, துணை நிலை ஆளுநருக்கும் இருதரப்பினரிடையே உள்ளது என தீர்ப்பு வழங்கினார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றத்தின் முடிவுகளில் அனைத்து விசயங்களிலும் துணைநிலை ஆளுநரின் தலையீடு இருக்கக்கூடாது, அதிகார வரம்பு மீறல் இருக்கும் சில விசயங்களில் மட்டுமே தலையிடலாம்.
மக்களுக்கு பதில் சொல்லவேண்டியது , மக்களால் தேர்தெடுக்கப்பட்ட அமைச்சரவை சகாக்கள் தான் , அதனை உணர்ந்து துணை நிலை ஆளுநர் செயல்பட வேண்டும் என தீர்பெழுதிய நீதிபதி சந்திரசூட் துணைநிலை ஆளுநர் அரசின் நடவடிக்கைகளை தடுக்க நினைக்கக்கூடாது, அவர் அரசுக்கு உதவிகரமாக இருக்க வேண்டும் எனவும் விளக்கினார்.
ஆளுநரோ, முதல்வரோ தன்னை தன்னாதிகாரம் கொண்டவராக நினைத்துக்கொள்ள கூடாது, அனைவரும் அரசியல் சாசனத்திற்கு கட்டுப்பட்டவர்கள்பென்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்: என்று தீர்ப்பு வழங்கினார் நீதிபதி அசோக் பூஷண்.
அனைத்து நீதிபதிகளும் டெல்லி மாநில அரசுக்கே அதிக அதிகாரம் உள்ளது என தீர்ப்பு வழங்கியதால் டெல்லி உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு ரத்து செய்யப்பட்டது.
டெல்லியின் காவல்துறை, நிர்வாக அதிகாரிகள் மாற்றம், பொது அமைதி, ஆகியவை மட்டுமே மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வருகிறது, இதில் தலையிடும் வகையில் மாநில அரசு செயல்பட்டால் மட்டுமே துணை நிலை ஆளுநர் தலையிட வேண்டும், குடியரசு தலைவர் கவனத்திற்கும் ஒப்புதலுக்கும் கொண்டு செல்ல வேண்டும், மற்றப்படி மக்கள் நல திட்ட அனுமதிக்க துணை நிலை ஆளுநரே சொந்தமாக அனுமதி வழங்கலாம் எனவும் தீர்ப்பு வழங்கப்பட்டது.
இந்த தீர்ப்பு துணை நிலை ஆளுநருக்கு பின்னடைவாகவும், டெல்லி அரசுக்கு மிகப்பெரிய வெற்றியாகவும் பார்க்கப்படுகிறது. துணை நிலை ஆளுநர் மாநில அரசின் முடிவுகளுக்கு முட்டுக்கட்டையிடாமல் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறியிருப்பது டெல்லி துணை ஆளுநர் மட்டும் இன்றி புதுச்சேரி உள்ளிட்ட மற்ற துணை நிலை ஆளுநர்களும் எப்படி செயல்பட வேண்டும் என்பதையும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
அறிந்து கொள்வோம் சட்டம் – மன அழுத்தத்தை காரணம் காட்டி ராஜினாமா கடிதம் திரும்ப பெற முடியுமா?…
by ஆசிரியர்
written by ஆசிரியர்
ஓர் அரசு ஊழியர் பணியிலிருந்து விலகுவதாக (Resignation Letter) ஒரு கடிதத்தை பின்னர், அந்தக் கடிதத்தை பணிச்சுமையால் ஏற்பட்ட மன அழுத்தத்தின் காரணமாக கொடுத்து விட்டதாக கூறி திரும்பப் பெற முடியுமா??, ஒரு வழக்கு விபரம் கீழே..
பரமேஸ்வரி என்பவர் நாகப்பட்டினம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளராக 18.6.2008 ஆம் தேதி பணியில் நியமனம் செய்யப்பட்டார். அதன்பிறகு பல இடங்களுக்கு பணிமாறுதல் 5.8.2013 ஆம் தேதி ஒரு பணி விலகல் கடிதத்தை மாவட்ட நீதிபதியிடம் கொடுத்தார். அந்த கடிதத்தை மாவட்ட நீதிபதி 12.8.2013 ஆம் தேதி ஏற்றுக் கொண்டார். பின்னர் பரமேஸ்வரி தான் கொடுத்த பணி விலகல் கடிதத்தை பணிச்சுமை காரணமாக கொடுத்து விட்டதாகவும், அந்த கடிதத்தில் திரும்ப பெற்றுக் கொள்வதாகவும் 1.10.2013 ஆம் தேதி ஒரு மனுவை அதே மாவட்ட நீதிபதியிடம் அளித்தார். ஆனால் மாவட்ட நீதிபதி அதை ஏற்றுக் கொள்ள மறுத்து பணி விலகல் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக கூறிவிட்டார்.
பணி விலகல் கடிதம் கொடுத்தால் தமிழ்நாடு சார் நிலைப் பணியாளர்கள் பணி விதிகளின் விதி 41(A) ன்படி 90 நாட்கள் வரை மாவட்ட நீதிபதி காத்திருக்க வேண்டும், ஆனால் அவ்வாறு காத்திருக்காமல் தனது பணி விலகல் கடிதத்தை அவசர அவசரமாக ஏற்றுக் கொண்டது சட்டப்படி தவறானது என்றும் தனக்கு சட்டம் வழங்கியுள்ள 90 நாட்கள் கால அவகாசம் வழங்கப்படவில்லை அதனால் தனது உரிமை பாதிக்கப்பட்டுள்ளது என்று கோரியும் தனக்கு மீண்டும் வேலை வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு ரிட் மனு தாக்கல் செய்தார்.
பரமேஸ்வரி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பணிச்சுமையால் தான் பரமேஸ்வரி பணி விலகல் கடிதத்தை கொடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதாகவும், இருந்தபோதிலும் பணி விலகல் கடிதம் கொடுத்து 90 நாட்கள் முடிவடைவதற்குள் அவருடைய பணி விலகல் கடிதத்தை இரத்து செய்யுமாறு கோரி ஒரு மனுவை மாவட்ட நீதிபதியிடம் பரமேஸ்வரி தாக்கல் செய்திருந்ததாகவும் ஆனால் அந்த மனுவை பரிசீலிப்பதற்கு முன்பாகவே மாவட்ட நீதிபதி பரமேஸ்வரியின் பணி விலகல் ஏற்கப்பட்டு விட்டதாக கூறியது தவறு என்றும் பரமேஸ்வரி பணியிலிருந்து விலக மனதார நினைக்கவில்லை என்றும் தமிழ்நாடு சார் நிலைப் பணியாளர்கள் விதிகளில் கண்ட விதி 41(A) ன்படி பணி விலகல் கடிதம் கொடுக்கப்பட்ட நாளிலிருந்து 90 நாட்கள் காத்திருப்பு காலம் உள்ள நிலையில் பரமேஸ்வரியின் பணி விலகல் கடிதத்தை மாவட்ட நீதிபதி அவசர அவசரமாக ஏற்றுக் கொண்டது சட்டப்படி தவறு என்று வாதிட்டார்.
மாவட்ட நீதிபதி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஒரு பணி விலகல் கடிதம் கொடுக்கப்பட்டு அந்த கடிதம் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில், அந்த பணி விலகல் கடிதத்தை திரும்ப பெறுவது என்ற பேச்சுக்கே விதி 41(A)(b) ன்படி வாய்ப்பில்லை என்று வாதிட்டார்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள்….
தமிழ்நாடு சார் நிலை பணியாளர்கள் விதிகளின் விதி 41(A) மூன்று காரணிகளை உள்ளடக்கியது.
1. 3 மாதங்களுக்கு குறைவில்லாமல் பணி விலகல் குறித்து ஓர் அறிவிப்பை அரசு ஊழியர் கொடுக்க வேண்டும்.
2. அதனை வேலை அளித்த அதிகாரமுடைய நபர் ஏற்க வேண்டும்.
3. அளிக்கப்பட்ட பணி விலகல் அறிவிப்பை திரும்பப் பெறுதல் குறித்து விதி 41(A)(a)ல் கூறப்பட்டுள்ளது.
பணி விலகல் கடிதத்தை ஏற்றுக் கொள்வது குறித்து தகுதி பெற்ற அதிகாரி குறிப்பிட்ட கால அவகாசம் அளித்து, அந்தப் பணி விலகல் கடிதத்தை ஏற்றுக் கொண்டது அல்லது நிராகரித்தது குறித்து காரணங்களை குறிப்பிட்டு ஓர் உத்தரவினை பிறப்பிக்க வேண்டும்.
அதிகாரம் பெற்ற நபர் பணி விலகல் கடிதத்தை குறித்து எந்தவொரு உத்தரவையும் அறிவிப்பு காலத்திற்குள் பிறப்பிக்கவில்லை என்றால் விதி 41(A)(c) ன்படி அந்தக் கடிதம் ஏற்றுக் கொண்டதாக கருதப்படும். இந்த வகையில் அந்த விதியிலுள்ள கூறுகள் அரசு ஊழியருக்கு சாதகமாக அமைந்துள்ளது. பணி விலகல் அறிவிப்பு கொடுக்கப்பட்டதற்கு பின்னர் அந்தப் பணி விலகல் அறிவிப்பின் மீது ஓர் உத்தரவை பிறப்பிப்பதற்கு காலதாமதம் ஏற்பட்டாலும், அது தன்னுடைய பணியை விட்டு விலகுவதாக அறிவிப்பு கொடுத்த அரசு ஊழியரை பாதிக்காது.
உச்சநீதிமன்றம் ” பஞ்சாப் நேஷனல் வங்கி Vs P. K. மெட்டல் (1989-SUPP-2-SCC-175)” என்ற வழக்கில், பணி விலகல் கடிதம் 3 மாதங்களுக்கு பின்னரே நடைமுறைக்கு வரும். அதற்கு முன்பாக ஊழியரை பணியிலிருந்து விலகும்படி அதிகாரி வற்புறுத்தக்கூடாது என்று தீர்ப்பு கூறியுள்ளது.
பணி விலகல் அறிவிப்பு கொடுத்த பின்னர் 90 நாட்களுக்குள் அதனை திரும்பப் பெற அரசு ஊழியர்களுக்கு உரிமை உள்ளது. இந்த உரிமையை விதி 41(A)(b) எந்த விதத்திலும் பாதிக்காது என்று கூறி பரமேஸ்வரிக்கு மீண்டும் வேலையை வழங்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
W. P. No – 19361/2014
Dt – 16.6.2016
G. பரமேஸ்வரி Vs பதிவாளர், சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் பலர்
2016-5-CTC-161
தொகுப்பு அ.சா.அலாவுதீன்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சட்டம் படிக்க ஆசையா ..? சட்டக் கல்லூரிகளில் சேர இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
by keelai
written by keelai
தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டக் கல்லூரிகளிலும் இந்த கல்வியாண்டு 2018 – 2019 மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் இன்று (28.05.2018) முதல் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த ஆண்டு முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
அதே போல் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கும் சட்டக் கல்லூரிகளில் நடத்தப்படும் 3 ஆண்டு மற்றும் 5 ஆண்டு சட்டப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் வினியோகம் செய்யப்படுகிறது.
தமிழகத்தில் உள்ள 10 சட்டக் கல்லூரிகளில் நேரில் சென்று பெற்றுக்கொள்ளலாம். நேரில் செல்ல முடியாதவர்கள் அஞ்சல் மூலம் பெற்றுக் கொள்ளவும் வசதி செய்யப்பட்டுள்ளது. இது தவிர ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் வசதியை தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகம் இந்த ஆண்டு முதல் அறிமுகம் செய்துள்ளது.
5 ஆண்டு சட்டப் படிப்பு (ஹானர்ஸ்) இன்று முதல் ஜூன் 18ம் தேதி வரையும், 5 ஆண்டு சட்டப் படிப்பு ஜூன் 1ம் தேதி முதல் ஜூன் 29ம் தேதி வரையும், 3 ஆண்டு சட்டப் படிப்பு (ஹானர்ஸ்), 3 ஆண்டு சட்டப் படிப்பு ஜூன் 27ம் தேதி முதல் ஜூலை 27ம் தேதி வரையும், பெற்றுக் கொள்ளலாம். ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க விரும்பும் மாணவ மாணவியர் கீழ் வரும் லிங்கை சொடுக்கி விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க : http://tndalu.ac.in
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில் இன்று முதல் தனியார் பள்ளியில் விண்ணப்பிக்க அழைப்பு
by keelai
written by keelai
இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, சிறுபான்மையற்ற தனியார் பள்ளிகள், எல்.கே.ஜி., அல்லது ஒன்றாம் வகுப்பில், 25 சதவீத இடங்களில், கல்வி கட்டணமின்றி, மாணவர்களை சேர்க்க வேண்டும். இந்த மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு கடந்த 2017 ஆம் ஆண்டு முதல், ‘ஆன்லைன்’ முறைக்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு, இன்று துவங்கியுள்ளது. தங்கள் பிள்ளைகளை இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் பிரகாரம் தனியார் பள்ளிகளில் சேர்க்க மே, 18க்குள் விண்ணப்பங்களை பதிவு செய்ய வேண்டும். மாணவர்களின் பெற்றோர், அரசு தேர்வுத் துறையின், http://www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில், தங்கள் விபரங்களை பதிவு செய்ய, வசதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் கிராமப்புற மாணவர்களுக்கு, அந்தந்த பகுதி தனியார் பள்ளிகள், வட்டார வள மையங்கள், கல்வித் துறை அலுவலகங்களில், விண்ணப்பம் பதிவு செய்யும் வசதிகள் செய்யப்பட்டுள்ளது என, பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.
பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை, தனியார் பள்ளிகளில் எவ்வித கட்டணமும் இல்லாமல் வகுப்பில் சேர்க்க கீழ் வரும் தமிழக அரசின் பள்ளி கல்வித் துறை மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகம் இணைய தளத்தில் விண்ணப்பிக்க கிளிக் செய்யவும்.
http://tnmatricschools.com/rte/rtehome.aspx
http://tnmatricschools.com/rte/rtehome.aspx
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
‘மார்ச் 25’ – கீழை நியூஸ் கீழக்கரை சட்டப் போராளிகள் நடத்தும் ‘தகவல் அறியும் உரிமை சட்டம்’ பயிற்சி வகுப்பு – நீங்கள் முன் பதிவு செய்து விட்டீர்களா..?
by keelai
written by keelai
தகவல் அறியும் உரிமைச் சட்டம் – 2005 மூலமாக எந்த ஒரு அரசாங்க அதிகாரியிடமிருந்தும், நமக்கு தேவைப்படும் தகவலை அரசு அலுவலங்கள் மற்றும் அரசு உதவிபெரும் அலுவலங்களில் இருந்து பெற்றுக்கொள்ளலாம் என்பது நம்மில் இன்னும் எத்தனை பேருக்குத் தெரியும்..?
ஊழலை தடுத்து நிறுத்துவதற்கும், ஆளப்படுகிறவர்களுக்கு பொறுப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், நிர்வாகத்தின் ஒளிவு மறைவின்மையை வெளிப்படுத்துவதற்காகவும் இந்த சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த சட்டத்தின்படி அனைத்து குடிமகன்களும் தகவல் பெறும் உரிமை உடையவராவர். எந்த குடிமகன்களும் தகவல் கேட்கலாம். காரணங்கள் கூறத் தேவையில்லை. எந்த ஒரு பொது அலுவலகத்திலும் கேட்கலாம். அரசு நிறுவனங்கள், அரசு உதவி பெறும் நிறுவனங்கள், தன்னாட்சி நிறுவனங்கள் ஆகியவை இதில் அடங்கும்.
அரசு நிர்வாகத்தின் எந்த வகையான புள்ளி விவரங்களையும் மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது போன்ற விவரங்களை கேட்கலாம். தகவல் கேட்கும் நமக்கு 30 நாட்களுக்குள் தகவல் அளிக்கப்பட்டாக வேண்டும். இந்த சட்டம் மூலம் தகவல் அளிக்கத் தவறும் அதிகாரிகளுக்கு நாள் ஒன்றுக்கு ரூ 250 வீதம் ரூ 25,000 வரை அபராதம் விதிக்க தமிழ்நாடு தகவல் ஆணையத்திற்கு அதிகாரம் உண்டு.
தகவல் அறியும் உரிமை சட்டம் வாயிலாக பொது மக்கள் எவ்வாறு அரசு அலுவலகங்களுக்கு முறையாக விண்ணப்பித்து தகவல் பெறலாம்,? அதற்கு உரிய வழிமுறைகள் என்ன.? என்பது குறித்தும், இந்த சட்டத்தின் முக்கியத்துவம் மற்றும் மேல்முறையீடு குறித்து தகுந்த விளக்கத்துடன் பயிற்சி அளிக்கும் விதமாக கீழை நியூஸ் நிர்வாகத்தின் கீழக்கரை சட்டப் போராளிகள் இயக்கம் சார்பாக தகவல் அறியும் உரிமை சட்டம் பயிற்சி வகுப்பு எதிர்வரும் ‘மார்ச் 25′ ஞாயிற்றுக் கிழமை அன்று இரவு 7.30 மணி முதல் 10 மணி வரை சினர்ஜி இன்டர்நெஷனல் இன்ஸ்டிடியூட் அரங்கத்தில் நடைபெற உள்ளது.
தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்து வழக்கறிஞர். முஹம்மது சாலிஹ் ஹுசைன் பயிற்சி அளிக்க இருக்கிறார். இந்த பயிற்சி வகுப்பில் பங்கேற்று பயனடைய விரும்புபவர்கள் கீழ் வரும் அலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு விரைந்து உங்கள் பெயரை முன் பதிவு செய்து கொள்ளுங்கள்.
முன் பதிவு செய்ய தொடர்பு கொள்க : 9791742074
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கீழக்கரை செய்திகள்கீழக்கரை மக்கள் களம்சட்டப்போராளிகள்சட்டம்சந்திப்புசெய்திகள்தகவல் அறியும் உரிமைச் சட்டம்நிகழ்வுகள்
‘நாங்க… நூறு பேரு’ – கீழக்கரை சட்டப் போராளிகளின் சந்திப்பு நிகழ்ச்சி
by keelai
written by keelai
கீழக்கரை நகரின் முக்கிய பிரச்சனைகளுக்கு சட்ட ரீதியில் ஜனநாயக வழியில் தீர்வு காண்பதற்காக ‘கீழக்கரை சட்டப் போராளிகள்’ என்கிற பெயரில் வாட்சப் குழுமம் கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் 6 ஆம் தேதி கீழை நியூஸ் நிர்வாகத்தினரால் துவங்கப்பட்டது.
இந்த தளம் வாயிலாக அரசு சார்ந்த உள்ளூர் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வினை ஏற்படுத்தும் வகையில் தகவல் அறியும் உரிமை சட்டம் விண்ணப்ப பயிற்சி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ஆன்லைன் பெட்டிஷன், தமிழக முதலமைச்சரின் தனிப்பிரிவு ஆன்லைன் பெட்டிஷன், ஒருங்கிணைந்த மத்திய மாநில அரசு துறையினருக்கான ஆன்லைன் பெட்டிஷன், RTI ஆன்லைன் பெட்டிஷன் போன்ற அத்தியாவசிய பெட்டிஷன் செய்வதற்கான ஆன்லைன் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.
இது போன்ற ஆக்கபூர்வ செயல்பாடுகள் மூலமாக வெளிநாட்டில் வசிக்கும் கீழக்கரை நண்பர்களும் ஆன்லைன் மூலம் வெளிநாட்டில் இருந்தபடியே உள்ளூர் பிரச்சனைகளுக்காக குரல் கொடுத்து தொடர் முயற்சிகளில் ஈடுபடுவதன் மூலம் நம் மக்களுக்கு கிடைக்க வேண்டிய அடிப்படை உரிமைகளை பெற முடிகிறது.
குறிப்பாக நகராட்சி, அரசு பொது மருத்துவமனை, மின்சார வாரியம், தாலுகா அலுவலம் உள்ளிட்ட அரசுத் துறை அலுவலகங்களின் மூலம் பொது மக்களுக்கு கிடைக்க வேண்டிய நலத் திட்டங்கள், நகர்ப்புற வளர்ச்சி மற்றும் மேம்பாட்டு அத்தியாவசிய பணிகள் உள்ளிட்ட செயல்பாடுகளை நூறு சதவீதம் நம் மக்களுக்கு இலஞ்ச லாவண்ய ஊழல்களுக்கு அப்பாற்பட்டு தங்கு தடையின்றி கிடைப்பதற்கான முயற்சிகளை நூறு சட்டப் போராளிகளை உருவாக்கி, அவர்களுக்கு உரிய சட்டப் பயிற்சி அளித்து தொடர்ந்து முன்னெடுத்து வெற்றி கண்டு வருகிறது.
இந்நிலையில் கீழக்கரை சட்டப் போராளிகள் குழுமத்தின் ‘நாங்க… நூறு பேரு’ சந்திப்பு மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி கடந்த வியாழக் கிழமை (08.03.2018) இரவு 7 மணியளவில் ஆலீம் புலவர் பவாஸ் வணிக வளாக கட்டிடத்தில் இயங்கும் சினர்ஜி இன்டர்நெஷனல் இன்ஸ்டிடியூட் அரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கீழக்கரையில் வசிக்கும் ஏராளமான சட்டப் போராளிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்நிகழ்ச்சியினை இஸ்லாமிய கல்வி சங்கத்தின் தலைவர் அல் பையினா அகாடமியின் பேராசிரியர் சட்டப் போராளி ஆலீம் தவ்ஹீத் ஜமாலி கிராத் ஓதி துவங்கி வைத்தார். கிழக்குத் தெரு ஜமாஅத் துணை பொருளாளர் சட்டப் போராளி முஹம்மது அஜிஹர் தலைமையேற்று தலைமை உரை நிகழ்த்தினார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நகர் செயலாளர் சட்டப் போராளி ஹமீது யூசுப் வரவேற்புரை பேசினார். சட்டப் போராளிகள் குழுமத்தின் நிர்வாகி சட்டப் போராளி அப்துர் ரஹ்மான் அறிமுக உரையாற்றினார். சட்டப் போராளிகள் குழுமத்தின் ஒருங்கிணைப்பாளர் முஹம்மது சாலிஹ் ஹுசைன் ”சட்டப் போராளிகள் இது வரை சாதித்து என்ன..? சட்டப் போராளிகளின் தற்போதைய நிலை மற்றும் எதிர்கால திட்டமிடல்” என்கிற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்.
அதனையடுத்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு பெற்ற சட்டப் போராளிகள் ஒருங்கிணைப்பாளருக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து சட்டப் போராளிகளுடனான அறிமுகம், கலந்தாய்வு மற்றும் ஆலோசனை நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பின்வரும் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
1) சங்கப்பதிவுகள் சட்டப்படி ‘கீழக்கரை சட்டப் போராளிகள் இயக்கம்’ என்கிற பெயரில் உரிய முறைப்படி பதிவு செய்து அரசாங்க பதிவு பெற்ற இயக்கமாக உருவாக்குவது.
2) இஸ்லாமிய ஷரியத் சட்டம், இந்திய அரசியலமைப்பு சட்டம், தகவல் அறியும் உரிமை சட்டம், மாவட்ட நகராட்சிகள் சட்டம் உள்ளிட்ட சட்டங்களை சாமானியனும் அறிந்து கொள்ளும் வகையில் சட்ட பயிற்சி வகுப்புகள் நடத்துவது.
3) கீழக்கரை நகரின் பிரச்சனைகளை உடனுக்குடன் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் தமிழக முதலமைச்சரின் தனிப் பிரிவு ஆன்லைன் பெட்டிஷன், மாவட்ட ஆட்சியரின் குறை தீர்க்கும் நாள் பெட்டிசன்கள் உள்ளிட ஆன்லைன் பெட்டிசன்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது.
4)சிறுபான்மையினர் உரிமைகளை நிலை நாட்டும் வகையில் சிறுபான்மையினருக்கான மத்திய மாநில அரசின் நலத் திட்ட உதவிகளை பெறுவதற்கான வழிகாட்டுதல்களை பொதுமக்களுக்கு வழங்குவது.
5) முதியோர், விதவைகள், மாற்றுத்திறனாளிகளுக்கான அரசின் நலத் திட்டங்களை பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது.
6) மாணவர்கள் மத்தியில் சட்டப் படிப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதோடு நல்ல சமுதாயத்திற்கான சிறந்த வழக்கறிஞர்களை உருவாக்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
இந்நிகழ்ச்சியின் நிறைவாக கீழை மர செக்கு நிறுவனத்தின் முதன்மை நிர்வாகி சட்டப் போராளி நூருல் ஜமான் நன்றியுரை பேசினார். சட்டப் போராளிகளின் ‘நாங்க நூறு பேரு’ சந்திப்பு நிகழ்ச்சியினை சட்டப் போராளி முஸம்மில் இபுறாகீம் தொகுத்து வழங்கினார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கீழக்கரை பொதுமக்கள் சார்பாக மதுரை சென்று மறுவரையறை ஆணையரிடம் முறையிட்ட மனுதாரர்கள் – மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தல்
by keelai
written by keelai
கீழக்கரையில் வார்டு மறுவரையறை குளறுபடிகள், கீழக்கரை நகராட்சியின் மக்கள் தொகையில் குளறுபடிகள் உள்ளிட்ட பிரச்சனைகளை முன்னிறுத்தி நூற்றுக்கணக்கான கீழக்கரை பகுதியை சார்ந்த சமூக ஆர்வலர்கள், சட்டப் போராளிகள், அரசியல் கட்சி அமைப்பினர்கள் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியருக்கும், கீழக்கரை நகராட்சி ஆணையருக்கும் ஆட்சேபனை மனுக்களை மின்னஞ்சல் வாயிலாகவும், நேரடியாகவும், பதிவுத் தபால் மூலமும் அளித்து இருந்தனர். இந்நிலையில் மனுக்களை அளித்திருந்த அனைவரும் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெறும் உள்ளாட்சி அமைப்புகளின் வார்டு மறுவரையறை கருத்து கேட்பு கூட்டத்தில் ஆஜராகுமாறு, கீழக்கரை நகராட்சி ஆணையரிடம் இருந்து கையெழுத்திடாத கடிதம் மனுதாரர் அனைவருக்கும் அனுப்பப்பட்டு இருந்தது.
இந்த நல்ல வாய்ப்பினை பயன்படுத்தி கீழக்கரை பொதுமக்களின் ஆட்சேபனையை நேரடியாக தெரிவிக்கும் விதமாக கீழை நியூஸ் கீழக்கரை சட்டப் போராளிகள் சார்பாக 06.02.18 அன்று மதுரையில் நடைபெற்ற கருத்து கேட்பு கூட்டத்தில் கீழக்கரை பொதுமக்கள் சென்று கலந்து கொள்ள வசதியாக வாகன ஏற்பாடு செய்யப்பட்டு சமூக வலைத்தளங்களில் அறிவிப்பு செய்யப்பட்டது. இதனையடுத்து தன்னெழுச்சியாக புறப்பட்ட மனுதாரர்கள் மற்றும் பொதுமக்கள் மதுரை சென்று உள்ளாட்சி அமைப்புகளின் வார்டு மறுவரையறை ஆணையரின் முன்னிலையில் தங்களுடைய ஆட்சேபனை கருத்துக்களை வலுவாக எடுத்து வைத்துள்ளனர்.
இந்த கூட்டத்தில் மறுவரையறை ஆணையரும், மாநிலத் தேர்தல் ஆணையருமான எம்.மாலிக் பெரோஸ்கான் தலைமை வகித்தார். மறுவரையறை ஆணைய உறுப்பினர் செயலர் டி.எஸ்.ராஜசேகர், ஊரக வளர்ச்சித்துறை இயக்குநர் கே.பாஸ்கரன், பேரூராட்சிகளின் இயக்குநர் எஸ்.பழனிசாமி, மாவட்ட கலெக்டர்கள் வீரராகவராவ் (மதுரை), எஸ்.நடராஜன் (ராமநாதபுரம்), என்.வெங்கடாசலம் (தேனி), டி.ஜி.வினய் (திண்டுக்கல்), ஜி.லதா (சிவகங்கை) மற்றும் மேற்குறிபிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் அதகாரிகள் கலந்து கொண்டனர்.
கீழக்கரை நகரில் இருந்து கீழக்கரை சட்டப் போராளிகள் குழுமத்தின் ஒருங்கிணைப்பாளர் சாலிஹ் ஹுசைன் தலைமையில் சட்டப் போராளிகள் ஜாபீர் சுலைமான், முஹம்மது அஜிஹர், தாஜுல் அமீன், அஹமது கபீர், நூருல் ஜமான், பாதுஷா, அல்தாப், மெஹ்மூது ரிபான், முபீத், SDPI கட்சி சார்பில் கீழக்கரை நகர் நிர்வாகி ஹமீது பைசல் தலைமையில் SDPI கட்சி பிரமுகர்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் செயலாளர் ஹமீது யூசுப் தலைமையில் அற்புத குமார் உள்ளிட்ட கட்சி பிரமுகர்கள், திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் முன்னாள் சேர்மன் பஷீர் தலைமையில் கட்சி தொண்டர்கள், நிஷா பவுண்டேசன் சார்பில் நஸ்ருதீன் உள்ளிட்டோர் கீழக்கரை பொது மக்கள் சார்பாக கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை வலிமையாக வைத்துள்ளனர். இக்கூட்டத்தில் பேசிய கீழக்கரை நகரவாசிகள் பின்வரும் குற்றச்சாட்டுக்களையும், கோரிக்கைகளையும் மறுவரையறை ஆணையரின் முன்னிலையில் வைத்துள்ளனர்.
குற்றச்சாட்டுகள்
1. பொதுமக்கள் தங்கள் ஆட்சேபனையை தெரிவிக்க போதுமான கால அவகாசம் தரப்படவில்லை
2. கீழக்கரை நகரில் இருக்கும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு வார்டு மறு வரையறை பட்டியலின் நகல்கள் வழங்கப்படவில்லை
3. கீழக்கரை நகராட்சி நிர்வாகத்தினரால் முறையாக பொது அறிவிப்பு செய்யப்பட வில்லை.
4. தகுதியற்றவர்களை கொண்டு வரையறை செய்யப்பட்டுள்ளதால் வார்டு மறு வரையறை பட்டியலில் ஏகப்பட்ட குளறுபடிகளை செய்துள்ளனர்.
5. வார்டு மறு வரையறை பட்டியலின் அடிப்படையாக இருக்கும் கீழக்கரை மக்கள் தொகையை சட்ட விதிமுறைகளுக்கு முரணாக குறைத்து மதிப்பிட்டு உள்ளனர். ஏறத்தாழ கீழக்கரை பொதுமக்களை காணவில்லை.
6. கீழக்கரை நகராட்சியின் 21 வார்டுகளும் குடியிருப்பு கட்டிடங்களின் அடிப்படையில் மாற்றி அமைக்கப்பட்டு மொத்த வரையறையும் தப்பும் தவறுமாக செய்யப்பட்டுள்ளது.
7. அனைத்து வார்டு பகுதிகளிலும் இயல்பான வாக்குரிமை சதவீதங்கள் துண்டாடப்படும் சூழலை உருவாக்கி உள்ளனர்.
8. கீழக்கரை நகராட்சியில் வசிக்கும் ஒட்டுமொத்த மக்கள் தொகையினரும் ஆதார், ஓட்டுநர் உரிமம், ரேஷன் கார்டு, பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, பான் கார்டு உள்ளிட்ட அனைத்து ஆவணங்களிலும் வார்டு மாற்றம் செய்ய வேண்டிய சூழலில் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாவர்
கோரிக்கைகள் :
1. கீழக்கரை நகராட்சியின் அனைத்து வார்டுகளிலும் முறையற்ற வகையில் மறு வரையறை செய்யப்பட்டுள்ளதால், இந்த மறு வரையறை பட்டியல் முழுவதையும் திரும்ப பெற வேண்டும்
2. கீழக்கரை நகராட்சியின் மக்கள் தொகையை நகராட்சி ஆவணங்களின் அடிப்படையில் சீர்திருத்தம் செய்ய உரிய ஆய்வு மாவட்ட நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட வேண்டும்.
3. சிறப்பு பயிற்சி பெற்ற அதிகாரிகளை கொண்டு , மீண்டும் சட்ட விதிமுறைப்படி சிறப்பு கள ஆய்வுகளை மேற்கொண்டு வார்டு மறு வரையறை பட்டியலை வெளியிட வேண்டும்.
அனைத்து கோரிக்கைகளையும் கேட்டறிந்த உள்ளாட்சி அமைப்புகளின் வார்டு மறுவரையறை ஆணையர், நகராட்சி மண்டல ஆணையர் ஜானகிக்கும், இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் முனைவர் நடராஜனுக்கும், கீழக்கரை நகராட்சி ஆணையாளர் நாராயணனுக்கும் (பொறுப்பு) கீழக்கரை நகராட்சியில் உரிய ஆய்வு செய்து மனுதாரர்களுக்கு தகுந்த பதிலை அளிக்குமாறு பரிந்துரைத்துள்ளனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கீழக்கரை நகராட்சியின் அதிகாரபூர்வ வலைத்தளத்தில், சட்டத்திற்கு புறம்பாக அதிரடியாக திருத்தப்பட்ட நகராட்சி ‘மக்கள் தொகை’ – நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்க ‘சட்டப் போராளிகள்’ முடிவு
by keelai
written by keelai
கீழக்கரை நகராட்சியில் 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பினை அடிப்படையாக கொண்டு, வார்டு மறுவரையறை செய்யப்பட்டுள்ளதாக அறிவித்து இருந்தனர். ஆனால் அவசர கோலத்தில் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டு இருந்த நகராட்சி மறுவரையறை பட்டியலில் குறிப்பிடப்பட்டு இருந்த 2011 ஆம் ஆண்டின் கீழக்கரை மொத்த மக்கள் தொகைக்கும், தகவல் அறியும் உரிமை சட்டம் வாயிலாக கடந்த 2013 ஆம் ஆண்டு பெறப்பட்டிருந்த கீழக்கரை நகராட்சியின் மொத்த மக்கள் தொகைக்கும் ஏறத்தாழ 10000 வித்தியாசம் இருந்தது. ஆனால் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் வாயிலாக பெறப்பட்டு இருந்த கீழக்கரை நகராட்சியின் மொத்த மக்கள் தொகையும், கீழக்கரை நகராட்சியின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் வெளியிடப்பட்டு இருந்த கீழக்கரை நகராட்சியின் 2011 ஆம் ஆண்டின் மக்கள் தொகையும் ஒன்றாக இருந்தது.
இது குறித்து நாம் கீழை நியூஸ் வலைத்தளத்தில், தெளிவான ஆதாரங்களுடன் கடந்த மாதம் செய்தி வெளியிட்டு இருந்தோம். இந்த தகவல்களை ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பார்வையிட்டுள்ளனர். இந்த வேளையில் இன்று மதுரையில் உள்ளாட்சி அமைப்புகளின் வார்டு மறுவரையறை ஆணையத்தின் முன்னிலையில் பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. இதனால் இங்கு ஆட்சேபனை கருத்துக்ளை தெரிவிக்க வரும் மனுதாரர்கள் குளறுபடியான மக்கள் தொகை குறித்து நம்மிடம் கேள்வி கேட்பார்கள் என்கிற அச்சத்தில் நகராட்சி அதிகாரிகள் சட்டத்திற்கு புறம்பாக கீழக்கரை நகராட்சியின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் அதிரடியாக திருத்தம் செய்துள்ளனர்.
நேற்று வரை 2011 ஆம் ஆண்டில் கீழக்கரை நகராட்சின் மொத்த மக்கள் தொகை 47730
இன்றைய தேதியில் சட்டத்திற்கு புறம்பாக கீழக்கரை நகராட்சி அதிகாரிகள் அதிரடியாக திருத்தியுள்ள கீழக்கரை நகராட்சியின் மக்கள் தொகை 38355
இது குறித்து சமூக ஆர்வலர் சட்டப் போராளி முஹம்மது அஜிஹர் கூறுகையில் ”கீழக்கரை நகராட்சியில் இந்த வார்டு மறுவரையறை குறித்து பொதுமக்கள் அனைவரும், அறிந்து கொள்ளும் வகையில் முறையான பொது அறிவிப்பு செய்யவில்லை. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கும் வார்டு மறுவரையறை பட்டியலின் நகல் வழங்கப்படவில்லை. கீழக்கரை நகராட்சி பகுதியில் வாழும் நம் மக்கள் எவருக்கும் தாங்கள் எந்தெந்த வார்டுக்கு மாற்றி இருக்கின்றனர் என்பது கூட தெரியாமல் விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறோம்.
இந்நிலையில் நகராட்சி ஆவணங்களின் படி நகராட்சியின் மொத்த மக்கள் மக்கள் தொகையான 47730 எண்ணிக்கையில் ஏகப்பட்ட குளறுபடிகளை செய்துள்ள கீழக்கரை நகராட்சி அதிகாரிகள், நேற்று வரை, கீழக்கரை நகராட்சியின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் வெளியிடப்பட்டு இருந்த 47730 என்கிற மக்கள் தொகை எண்ணிக்கையை சட்டத்திற்கு புறம்பாக 38355 என்று திருத்தம் செய்துள்ளனர். இதனை சட்டப் போராளிகள் குழுமம் சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம். இது குறித்த அனைத்து ஆவணங்களையும் நீதி மன்றத்தில் தாக்கல் செய்து வழக்கு தொடர்ந்து நீதியை நிலை நாட்டுவோம்.” என்று தெரிவித்தார்.
கீழைநியூஸ் இணையதளத்தில் சில மாதங்களுக்கு முன்பு நாம் வெளியிட்ட செய்தி..
http://keelainews.com/2018/01/05/ward-issue/
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தமிழகத்தில் ‘மக்கள் நீதி மன்றம்’ மூலம் ஒரே நாளில் 83000 வழக்குகள் விசாரணை – 52000 வழக்குகளுக்கு தீர்வு
by keelai
written by keelai
இந்தியா முழுமையும் அனைத்து நீதிமன்றங்களிலும் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கையை விரைவாக முடிவுக்கு கொண்டு வர உச்ச நீதி மன்றத்தின் உத்தரவின்படி இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை, இரண்டாவது சனிக்கிழமை ‘லோக் அதாலத்’ என்கிற பெயரில் ‘மக்கள் நீதிமன்றம்’ நடத்தப்படுகிறது.
இந்த லோக் அதாலத்தில் இரு தரப்பினரிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி வழக்கை முடிவுக்கு கொண்டு வருவதால், இந்த முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முடியாது. அதே நேரம், வழக்குகளும் நீண்ட காலத்துக்கு இழுத்தடிக்கப்படாமல், விரைவாக முடிவுக்கு வரும்.
இந்நிலையில் நேற்று மாநில சட்டப்பணிகள் ஆணைக் குழு சார்பில் மாநிலம் முழுவதும் லோக்-அதாலத்தில் பணியில் உள்ள மற்றும் பணி ஓய்வு பெற்ற நீதிபதிகள் தலைமையில் மொத்தம் 354 அமர்வுகள் அமைக்கப்பட்டு 83000 வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. அதில் 52 ஆயிரத்து 225 வழக்குகளுக்கு நேற்று ஒரேநாளில் தீர்வு காணப்பட்டு, இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ. 124.33 கோடி இழப்பீடாக வழங்க உத்தரவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வழக்குகள், மோட்டார் வாகன விபத்து வழக்குகள், மின்சாரம், குடிநீர், வருவாய் ஆர்ஜிதம், சொத்து வரி, திருமணம் தொடர்பான குடும்ப நல வழக்குகள், காப்பீடு வழக்குகள், காசோலை மோசடி, விசாரணைக்கு முந்தைய வழக்குகள் என பல்வேறு வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு வருகிறது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், எம்.வி.முரளீதரன், எம்.கோவிந்த ராஜ் ஆகியோர் தலைமையில் 3 அமர்வுகளும், மதுரை உயர் நீதிமன்ற கிளையில் நீதிபதிகள் பி.கோகுல்தாஸ், ஜெ.நிஷாபானு ஆகியோரது தலைமையில் இரு அமர்வுகளும் வழக்குகளை விசாரித்தன.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இனி கைதானால் ரத்த சொந்தங்களின் மொபைலுக்கு SMS வரும் – சைபர் நெட்வொர்க்கில் வெற்றி கண்டு வரும் தமிழக காவல் துறை
by keelai
written by keelai
நீதித்துறை, காவல்துறை, சிறைத்துறை மற்றும் தடயஅறிவியல் ஆகிய துறைகளை சைபர் நெட்வொர்க்கில் ஒருங்கிணைக்கும் புதுவித முயற்சியில் தமிழக காவல் துறை தொடர்ந்து வெற்றி கண்டு வருகிறது. நாடு முழுவதும் குற்றம் மற்றும் குற்றவாளிகளைக் கண்காணிக்கும் ‘CCTNS’ எனப்படும் கிரைம் அண்ட் கிரிமினல் ட்ராக்கிங் நெட் வொர்க் சிஸ்டத்தை அனைத்து மாநிலங்களிலும் செயல்படுத்த மத்திய அரசு ரூ.2 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
தமிழகத்தில் இத்திட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்த ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் உள்ள ஆயிரத்து 500 காவல் நிலையங்களும் ஏற்கெனவே கணினிமயமாக்கப்பட்டு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் கம்ப்யூட்டரில் பதியப்படும் ஆன் லைன் FIR ல் குற்றவாளியின் அனைத்து விவரங்களும் இருக்கும் வகையில் ஒருங்கிணைந்த வலைப் பின்னல் திட்டத்தை தமிழகம் வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது.
இதன்படி இனி யாராவது கைதானால் அடுத்த நிமிடமே அவர்களின் ரத்த உறவுகளுக்கு மொபைலில் குறுஞ்செய்தி அனுப்பப்படும். மேலும், கடந்த பிப்ரவரி 6-ம் தேதி முதல் மாநிலம் முழுவதும் குற்றவாளியின் கைது மற்றும் சரண்டர் விவரம், ஆஜர் மகஜர், நீதிமன்ற காவல் அடைப்பு, இறுதி அறிக்கை, குற்றப்பத்திரிக்கை, ஜாமீன் போன்ற நீதித்துறை தொடர் பான அனைத்து விவரங்களையும் கம்ப்யூட்டரில் பதிவு செய்து, அவற்றை நகல் எடுத்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் உத்தர விடப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழக காவல் துறை சைபர் நெட்வொர்க்கில் மற்ற மாநிலங்களை விட மிக சிறப்பானதொரு வெற்றியை அடைந்திருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
உச்சநீதிமன்ற உத்தரவை அடுத்து கீழக்கரை நெடுஞ்சாலை டாஸ்மாக் மூடல் – ஜனநாயகத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி – மக்கள் நல பாதுகாப்பு கழகம் கருத்து
by keelai
written by keelai
தமிழகம் முழுவதும் உச்சநீதிமன்ற உத்தரவை அடுத்து நெடுஞ்சாலையில் உள்ள 3400 டாஸ்மாக் கடைகளை நடவடிக்கையில் அதிகாரிகள் முடுக்கி விடப்பட்டுள்ளனர். கடலூர் மாவட்டத்தில் 124 மதுக்கடைகள், நெல்லை மாவட்டத்தில் 166 மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. கன்னியாகுமரி மாவட்டத்தில் 33 கடைகள், திருவள்ளூர் மாவட்டத்தில் 75 மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன.
மேலும் தூத்துக்குடியில் நெடுஞ்சாலை ஓரம் இருந்த 84 மதுக்கடைகள் மூடப்பட்டன. இராமநாதபுரம் மாவட்டத்திலும் நெடுஞ்சாலை கடைகள் மூடப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கீழக்கரை – இராமநாதபுரம் நெடுஞ்சாலையில் மின்சார வாரிய அலுவலகம் அருகே அமைந்திருக்கும் டாஸ்மாக் மதுபானக் கடை (கடை எண் : 6983) இன்று இழுத்து மூடப்பட்டுள்ளது.
கடந்த 16.12.2016 அன்று உச்ச நீதிமன்றமும் மார்ச் 31 க்குள் மாநில நெடுஞ்சாலைகளில் இருக்கும் டாஸ்மாக் கடைகளை உடனடியாக அகற்ற ஆணை பிறப்பித்திருந்தது. ஆனால் சம்பந்தப்பட்ட கடைகளுக்கு மூடு விழா நடத்தாமல் டாஸ்மாக் நிர்வாகத்தினர் காலம் தாழ்த்தி வந்தனர். இந்நிலையில் கடந்த வாரம் உச்சநீதி மன்றத்தில் இது சம்பந்தமான வழக்கு விசாரணைக்கு வந்தது. இது குறித்து கடந்த வாரம் நம் தளத்தில் செய்தி வெளியிட்டு இருந்தோம்.
இது குறித்து மக்கள் நல பாதுகாப்பு கழகத்தின் தலைவர் A.M.S தமீமுதீன் கூறுகையில் ”இந்த நெடுஞ்சாலை டாஸ்மாக் கடையில் மது அருந்தும் குடிமகன்களால் அதிகளவில் சாலை விபத்துகள் நடைபெற்று வருவதை சுட்டிக் காட்டி கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து ஜனநாயக ரீதியில் போராடி வருகிறோம். எங்களோடு கை கோர்த்து கீழக்கரை சட்டப் போராளிகள் தளமும் தொடர்ந்து இந்த டாஸ்மாக் கடையை இழுத்து மூட போராடி வந்துள்ளனர்.
அதே போல் பல்வேறு சமூக இயக்கங்களும்த, சமூக அக்கறை கொண்ட நல்லுள்ளங்களும் இதற்காக பெரும் முயற்சி எடுத்தனர். தற்போது உச்ச நீதி மன்ற உத்தரவை அடுத்து இந்த அபாய டாஸ்மாக் கடை மூடப்பட்டுள்ளது உண்மையாகவே ஜனநாயகத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி.” என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
கீழக்கரை இராமநாதபுரம் நெடுஞ்சாலையில் பயணிக்கும் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவித்து வந்த இந்த அபாய நெடுஞ்சாலை டாஸ்மாக் மதுபானக் கடையை இழுத்து மூட உத்தரவிட்டு நீதியை நிலைநாட்டிய மேதகு நீதிவான்களுக்கும், கீழக்கரை சட்டப் போராளிகளுக்கும், மக்கள் நல பாதுகாப்பு கழகத்தினருக்கும், சமூக அமைப்பினருக்கும், நல்லுள்ளம் கொண்ட பொதுநல அக்கறை கொண்டவர்களுக்கும் கீழை நியூஸ் சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறோம்.
மாவட்ட டாஸ்மாக் நிர்வாகத்தினர், மக்கள் நல பாதுகாப்பு கழகத்தினருக்கு கடந்த 20.01.2017 அன்று அனுப்பியிருந்த தகவல்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தகுதியான ஒப்பந்ததாரர்கள் பாதிக்கும் வகையில் தெரு விளக்குகளை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்த அறிவிப்புக்கு ஐகோர்ட்டு தடை உததரவு
by keelai
written by keelai
சென்னை ஐகோர்ட்டில், தியாகராய நகரை சேர்ந்த சி.கார்த்திகேயன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும், எல்.இ.டி. பல்புடன் கூடிய தெருவிளக்குகள் அமைக்க மத்திய அரசு ரூ.329 கோடி ஒதுக்கியுள்ளது. இந்த நிதியை கொண்டு, தமிழகத்தில் உள்ள 31 மாவட்ட ஆட்சியர்களும், 9 லட்சத்து 6 ஆயிரத்து 310 எல்.இ.டி. பல்புடன் கூடிய தெருவிளக்கு ‘செட்டுகளை’ கொள்முதல் செய்ய ஒப்பந்த அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனர்.
இதில் தேவையில்லாத ஒரு நிபந்தனையை விதித்துள்ளனர். இந்த எல்.இ.டி.பல்புடன் கூடிய தெருவிளக்கு செட்டுகளை சென்னை மாநகராட்சியில் உள்ள எலெக்ட்ரிக்கல் பிரிவிடம் ஆய்வு செய்து தரச்சான்றிதழ் பெற்று வரவேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளனர். ஆனால், இந்த ஆய்வை மேற்கொள்ளும் அளவுக்கு மாநகராட்சி எலெக்ட்ரிக்கல் பிரிவில் போதிய உபகரணங்கள் இல்லை.
அரியானாவில் உள்ள தேசிய சோதனை மற்றும் அளவீட்டு பரிசோதனை வாரியம் என்ற மத்திய அரசு நிறுவனம் தான் இதுபோன்ற ஆய்வுகளை மேற்கொள்ள தகுதியான அமைப்பாகும். இந்த அமைப்பிடம் ஒப்பந்ததாரர்கள் பலர் ஏற்கனவே எல்.இ.டி. பல்புடன் கூடிய தெருவிளக்கு செட்டுகளையும் ஆய்வுக்கு கொடுத்து தரச்சான்றிதழ்களை பெற்றுள்ளனர். ஆனால், இதனை மாவட்ட ஆட்சியர்கள் ஏற்பதில்லை. மாநகராட்சி எலெக்ட்ரிக்கல் பிரிவில் தான் இந்த ஆய்வை மேற்கொள்ளவேண்டும் என்று கூறியுள்ளனர்.
இந்த நிபந்தனை, தேவையில்லாத முறைகேடுகளை உருவாக்கும். மேலும், இந்த நிபந்தனையினால், தகுதியான ஒப்பந்ததாரர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, இந்த நிபந்தனையை ரத்து செய்யவேண்டும்.” இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி (பொறுப்பு) ஹூலுவாடி ஜி.ரமேஷ், நீதிபதி ஆர்.எம்.டி.டீக்கா ராமன் ஆகியோர், எல்.இ.டி. பல்புகளுடன் கூடிய தெருவிளக்கு செட்டுகளை கொள்முதல் செய்வது தொடர்பான ஒப்பந்த அறிவிப்புக்கு இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கீழக்கரை நகராட்சியில் பொதுமக்களுக்கான விதிமுறைகள் குறித்த அறிவிப்பு வெளியீடு – மீறுவோர் மீது அபராதத்துடன் சட்ட நடவடிக்கை
by keelai
written by keelai
கீழக்கரை நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள தனி நபர் வீடுகள், உணவு விடுதிகள், சிற்றுண்டி சாலைகள், மருத்துவமனைகள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் தூய்மையை மேம்படுத்தி கீழக்கரை நகராட்சியை முன் மாதிரி நகராட்சியாக மாற்றிட திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் மூலம் பல்வேறு சிறப்பு நடவடிக்கைகள் கெற்கொள்ளப்பட்டு வருகிறது.
நகராட்சி திடக் கழிவு மேலாண்மை விதிகள் 2016 ன் படியும், தமிழ் நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டம் 1920 சட்டப் பிரிவுகள் 153, 156, 157, 160 மற்றும் 161 ன் பிரகாரமும் நச்சுக் கழிவுகளையும், அழுகிய கழிவுகளையும், மலக் கழிவுகளையும் சாலைகளில் தூக்கி வீசுபவர்கள் மீது அபராதத்துடன் கூடிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மீன், கோழி, ஆடு, மாடு போன்ற இறைச்சி கடை நடத்துபவர்கள் அதன் கழிவுகளை திறந்த வெளியில் வீசக் கூடாது, பொதுமக்கள் பிளாஸ்டிக் உபயோகத்தை முற்றிலும் கைவிட வேண்டும், கட்டிட இடிபாடுகளை எக்காரணத்தை கொண்டும் ஒப்பந்ததாரர்கள் சாலைகளிலோ, தெருக்களிலோ கொட்ட கூடாது.
நகராட்சி எல்லைக்குள்பிளாஸ்டிக், ரப்பர், டயர் உள்ளிட்ட திடக் கழிவுகளை எரிக்க கூடாது, திருமண நிகழ்ச்சிகளின் போது குப்பைகளை முறையாக கையாள வேண்டும், செப்டிக் டேங்க் கழிவுகளை கழிவு நீர் வாய்க்காளிலோ அல்லது தெருக்களிலோ கொட்டக் கூடாது என்பது உள்ளிட்ட 16 அம்ச நிபந்தனைகளை நகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
நெடுஞ்சாலை டாஸ்மாக் கடைகள் மூடுவது சம்பந்தமாக இன்று உச்ச நீதிமன்றம் விசாரணை – கீழக்கரை நெடுஞ்சாலை டாஸ்மாக் இழுத்து மூட உத்தரவு வருமா..?
by keelai
written by keelai
கீழக்கரை – இராமநாதபுரம் நெடுஞ்சாலையில் மின்சார வாரிய அலுவலகம் அருகே அமைந்திருக்கும் டாஸ்மாக் மதுபானக் கடையால் (கடை எண் : 6983), இந்தப் பகுதியில் அதிகளவில் சாலை விபத்துகள் நடைபெற்று வருகிறது. கடந்த 16.12.2016 அன்று உச்ச நீதிமன்றமும் மார்ச் 31 க்குள் மாநில நெடுசாலைகளில் இருக்கும் டாஸ்மாக் கடைகளை உடனடியாக அகற்ற ஆணை பிறப்பித்துள்ளது.
அதே போல் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி கடந்த ஐந்தாண்டுகளில் ஏராளமான மனுக்களை சமூக ஆர்வலர்கள் பலரும் செய்துள்ளனர். ஆனால் சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலை டாஸ்மாக் கடையை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருவதாக பதில் மட்டுமே அனுப்பப்பட்டு வருகிறது. ஆனால் இது நாள் வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில் உச்ச நீதிமன்றம் நாடு முழுவதும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இருக்கும் அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகளையும் மார்ச் 31 க்குள் மூட அதிரடி தீர்ப்பினை வழங்கியது. ஆனால் உச்ச நீதிமன்ற தீர்ப்பினை மதிக்காமல் கீழக்கரை – இராமநாதபுரம் நெடுஞ்சாலையில் டாஸ்மாக் கடை மூடப்படாமல் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
இதனை சுட்டி காட்டி மக்கள் நல பாதுகாப்பு கழகம், சட்டப் போராளிகள் சார்பாக கடந்த மாதம் கீழக்கரை இராமநாதபுரம் நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் டாஸ்மாக் மதுபான கடையை உச்ச நீதி மன்ற தீர்ப்புக்கு கட்டுப்பட்டு உடனடியாக அகற்ற வேண்டி, உச்ச நீதி மன்ற தீர்ப்பின் நகல் மாவட்ட டாஸ்மாக் மேலாளருக்கு நேரடியாக சென்று வழங்கப்பட்டது.
இந்நிலையில் இன்று 29.03.17 நெடுஞ்சாலை டாஸ்மாக் கடைகள் மூடுவது சம்பந்தமான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. மேதகு நீதிவான்கள் நல்லதொரு தீர்ப்பை எழுதுவார்கள் என சமூக அக்கறை கொண்டவர்கள் காத்திருக்கின்றனர். கீழக்கரை நெடுஞ்சாலை டாஸ்மாக் மூடப்படுமா…? பொறுத்திருந்து பார்ப்போம்…
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
‘அக்டோபர் 23’-ம் தேதிக்கு முன்பு வாங்கிய வீட்டு மனை நிலங்களுக்கு பத்திரப்பதிவு செய்ய தடையில்லை – சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி
by keelai
written by keelai
தமிழகத்தில் விவசாய நிலங்களை வீட்டு மனைகளாக மாற்ற தடை விதிக்கக் கோரி வழக்கறிஞர் ராஜேந்திரன் என்பவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் அங்கீகரிக்கப்படாத வீட்டு மனைகளுக்கான பத்திரப்பதிவுக்கு தடை விதித்தது.
இந்நிலையில் இந்த வழக்கு லைமை நீதிபதி (பொறுப்பு) ஹுலுவாதி ஜி.ரமேஷ் மற்றும் டீக்கா ராமன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் இன்று 28.03.17 விசாரணைக்கு வந்தது. அப்போது விசாரணையை மேற்கொண்ட நீதிபதிகள் தடை உத்தரவை தளர்த்துவதாகக் கூறினர். மேலும் தமிழக அரசு இன்னும் ஒருவாரத்தில் முறையான திட்டத்தை அறிவிக்கவுள்ளதாக உத்தரவாதம் அளித்ததன் பேரில் இந்த தடை தளர்வு செய்வதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
அதாவது அக்டோபர் 23-ம் தேதிக்கு முன் வாங்கிய நிலத்திற்கு பத்திரப்பதிவு செய்யலாம் என்று தடை உத்தரவை தளர்த்தி உத்தரவிட்டனர். ஆனால், அங்கீகரிக்கப்படாத நிலங்களில் புதிய பத்திரப்பதிவை அனுமதிக்க முடியாது என்றும் தெளிவாக குறிப்பிட்டனர். மேலும் பதிவு செய்யப்படும் நிலத்தில் சாலைக்கு 22 அடி இடம் விட வேண்டும் என்ற விதியை எக்காரணத்தை முன்னிட்டும் மீறக்கூடாது என்றும் என்று எச்சரித்தனர்.
மேலும் சாலை, கழிவு நீர் குழாய்கள் பதிக்க போதிய இட வசதி இல்லாத நிலங்களை முறைப்படுத்த போதிய கால அவகாசம் அளித்தும் அங்கீகாரமில்லாத வீட்டு மனைகள் தொடர்பாக அரசின் கொள்கை முடிவை ஏப்ரல் 7-ம் தேதிக்குள் தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.
வழக்கறிஞர் ராஜேந்திரன், தான் மேற்கொண்ட பொதுநல மனுவில், விவசாய விளைநிலங்களை வீட்டு மனைகளாக மாற்ற முறைப்படி அனுமதி கிடையாது. ஆனால் சென்னை உட்பட தமிழகமெங்கும் விளைநிலங்கள் அங்கீகரிக்கப்படாத முறையில் வீட்டு மனைகளாக மாற்றப்பட்டுள்ளன.
இதனால் விளைநிலமும் குறைந்து விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் ஏற்பட்ட வெள்ளப்பாதிப்புக்கு இத்தகைய வீட்டு மனைகளும் காரணம். எனவே முறையற்ற விதத்தில் அங்கீகாரமற்ற நிலங்களில் வீட்டு மனைகளை உருவாக்க தடை விதிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் கோரியிருந்தார். அதே போல அங்கீகாரமில்லாத வீட்டு மனைகளை பதிவு செய்யக் கூடாது என்று பத்திரப்பதிவு துறைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். இதனையடுத்து உயர் நீதிமன்றம் ஏற்கனவே தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
‘சீமைக் கருவேல மரம் நிதி’ என்ற பெயரில் தனி வங்கிக் கணக்கு துவக்கம் – முதல் ஆளாக உயர் நீதிமன்ற நீதிபதி ரூ.10 ஆயிரம் டெபாசிட்
by keelai
written by keelai
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் சீமைக் கருவேல மரங்களை அகற்ற உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஏ.செல்வம் தலைமையிலான அமர்வு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உத்தரவிட்டது. உத்தரவு பிறப்பித்ததோடு நின்றுவிடாமல், கருவேல மரங்கள் அகற்றும் பணியை மாவட்டம் தோறும் நீதிபதிகள் குழு நேரில் ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த வழக்கு சம்பந்தமான விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்ற போது, பெரும்பாலான மாவட்டங்களில் கருவேல மரங்களை அகற்றுவதற்கு போதிய நிதி வசதியில்லை என மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து உயர் நீதிமன்ற மதுரை கிளை வளாகத்தில் உள்ள இந்தியன் வங்கியில் ‘சீமைக் கருவேல மரம் நிதி’ என்ற பெயரில் தனி வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டது.
பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகளில் விதிக்கப்படும் அபராதத் தொகையை இந்த வங்கிக் கணக்கில் செலுத்துமாறு நீதிபதிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே இந்த வங்கிக் கணக்கில் கருவேல மரங்களை அகற்ற உத்தரவிட்ட நீதிபதி ஏ.செல்வம், தனது சொந்தப்பணத்தில் இருந்து ரூ.10 ஆயிரத்தை நேற்று இந்த வங்கி கணக்கில் டெபாசிட் செய்தார்.
நீதிபதி செல்வத்தின் இந்த நல்ல சேவையை தொடர்ந்து பல்வேறு வழக்கறிஞர்களும் கருவேல மர வங்கி கணக்கில் பணம் டெபாசிட் செய்ய முன் வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
Newer Posts
You must be logged in to post a comment.