தென்காசியில் நடந்த திமுக செயற்குழு கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் இலஞ்சி ட்ரிஸ்ஸில் ஹோட்டலில் மாவட்ட அவைத் தலைவர் சுந்தரமகாலிங்கம் தலைமையில் நடைபெற்றது. தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் வே. ஜெயபாலன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். இந்த கூட்டத்தில் மாவட்டத் துணை செயலாளர்கள் தமிழ்ச்செல்வன், கென்னடி, கனிமொழி, மாவட்ட பொருளாளர் ஷெரிப், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் செல்லத்துரை, முத்துப்பாண்டி, சேக்தாவூது, ஜேசுராஜன், ஆறுமுகச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி தென்காசி தெற்கு மாவட்டம் முழுவதும் திமுக கொடியேற்றி இனிப்புகள் வழங்குவது, சேலம் இளைஞரணி மாநாட்டிற்கு அதிகமானோர் கலந்து கொள்வது, தென்காசி மாவட்டத்திற்கு வெள்ள நிவாரணம் ரூ. 1000 மற்றும் பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பரிசுத்தொகுப்புடன் ரூ. 1000 வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள் ரஹீம், அருள், சமுத்திர பாண்டியன், ராஜேஸ்வரன், கதிர்வேல் முருகன், தமிழ்செல்வி, ரவிச்சந்திரன் மாநில விவசாய அணி துணைச் செயலாளர் அப்துல் காதர், ஒன்றிய செயலாளர்கள் செல்லத்துரை, சிவன் பாண்டியன், அன்பழகன், திவான் ஒலி, சீனித்துரை, மாரி, வண்ணமுத்து, அழகு சுந்தரம், ஜெயக்குமார், மகேஷ் மாயவன், சுரேஷ், நகரச் செயலாளர்கள் சாதீர், வெங்கடேசன், அணி அமைப்பாளர் கிருஷ்ணராஜ், இசக்கிபாண்டியன், மாவட்ட அரங்க ஆர்வலர்கள், துணைத் தலைவர் சுப்பையா, ரமேஷ், சங்கீதா சுதாகர், திவ்யா மணிகண்டன், முத்துகுமார், இஞ்சி இஸ்மாயில், கோமதி நாயகம், முருகன், பொன்செல்வன் பேரூர் செயலாலர்கள் சுடலை, சங்கர் (எ)குட்டி, லெட்சுமணன், பண்டாரம், முத்தையா, தங்கப்பா, ராஜராஜன், சிதம்பரம், வெள்ளத்துரை, புதூர் கோபால், அழகேசன், முத்து, ஜெகதீசன், நெல்சன், மாவட்ட சார்பு அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், மக்கள் பிரதிநிதிகள், ஒன்றிய நகர பேரூர் நிர்வாகிகள் மற்றும் திமுகவினர் பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.