தென்காசி மாவட்டம், கணக்கப்பிள்ளை வலசை ஊராட்சியில் மகளிர் கூட்டமைப்பின் தொழில் தொகுப்புகள் மூன்றாம் ஆண்டு துவக்க விழா நிகழ்ச்சி நடந்தது. தென்காசி மாவட்டம், தென்காசி ஊராட்சி ஒன்றியம், கணக்கப்பிள்ளை வலசை ஊராட்சியில் ஊராட்சி அளவிலான மகளிர் கூட்டமைப்பு கடந்த 7 ஆண்டுகளாக தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்தச் சங்கத்தில் கணக்கப்பிள்ளை வலசை ஊராட்சிக்கு உட்பட்ட கணக்கப்பிள்ளை வலசை, க.மீனாட்சிபுரம், க.தேன் பொத்தை, க.இராஜபுரம் காலனி, க.திருமலாபுரம் ஆகிய குக்கிரமங்களைச் சார்ந்த பெண்கள் உறுப்பினர்களாகவும், கணக்கப்பிள்ளை வலசை இந்திரா காலனி பகுதியைச் சார்ந்த காளியம்மாள் பேச்சிமுத்து கணக்காளராகவும் செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில், கணக்கப்பிள்ளை வலசை ஊராட்சி அளவிலான கூட்டமைப்பின் சார்பில் கணக்கப்பிள்ளை வலசை பகுதியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வரும் மதிமகள் தையல் அழகு மற்றும் பாத்திர வாடகை நிலையத்தின் மூன்றாவது ஆண்டு துவக்க விழா நேற்று நடைபெற்றது. கணக்கப்பிள்ளை வலசை ஊராட்சி அளவிலான குழு கூட்டமைப்பு மற்றும் கிராம வறுமை ஒழிப்பு சங்க கூட்ட அரங்கில் நடைபெற்ற மூன்றாவது ஆண்டு துவக்க விழா நிகழ்ச்சிக்கு தென்காசி மாவட்ட உதவி திட்ட அலுவலர் சிவக்குமார் தலைமை தாங்கினார். தென்காசி வட்டார இயக்க மேலாளர் எஸ். சுரேஷ் முன்னிலை வகித்தார். கணக்கப்பிள்ளை வலசை ஊராட்சி அளவிலான குழு கூட்டமைப்பின் கணக்காளர் காளியம்மாள் பேச்சிமுத்து அனைவரையும் வரவேற்று பேசினார்.
அதனைத் தொடர்ந்து வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் சரோஜா, மாரியம்மாள், சௌந்தர்யா, கற்பக சீதா, ஆகியோர் ஒன்றிய, மாநில அரசுகள் மூலம் மகளிர் முன்னேற்றத்திற்காக செயல்படுத்தப்படும் திட்டங்களையும், அதனை மகளிர் சுய உதவிக் குழுக்கள் பெரும் வழிமுறைகளையும் விரிவாகவும் விளக்கமாகவும் எடுத்துக் கூறினார்கள். இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பின் உறுப்பினர்கள் தமிழ்ச் செல்வி, அம்பிகா, மணி, அன்னலட்சுமி, பிரசன்னா, சாந்தி, சந்தனமாரி, மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பின் செயலாளர் சுசிலா அனைவருக்கும் நன்றி கூறினார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.