மதுரை நாகமலைபுதுக்கோட்டை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற தனது ஆதரவாளர் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்ட முன்னால் முதல்வர் 0. பன்னீர்செல்வம் மணமக்களை வாழ்த்தினார்
செய்திகள்
சோழவந்தான் அருகே மன்னாடிமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் தானம் அறக்கட்டளை சோலை வட்டார களஞ்சியம் மாவட்ட பார்வையிழப்பு சங்க நிதி உதவியுடன் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது ஒன்றிய கவுன்சிலர் ரேகா வீரபாண்டி தலைமை ஆசிரியை பூங்கொடி பேங்க் ஆப் இந்தியா மேலாளர் கனகராஜ் வட்டார ஒருங்கிணைப்பாளர் சுபா நந்தினி ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி முகாமை தொடங்கி வைத்தனர் மதுரை கிராமப்புற மண்டல சுகாதார ஒருங்கிணைப்பாளர் முத்தையா வரவேற்றார் இந்த முகாமில் அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவ குழுவினர் 160 கண் நோயாளிகளுக்கு பரிசோதனை செய்தனர் இதில் 50 பேர் ஆபரேஷனுக்கு தேர்வு செய்து உள்ளனர் 16 நபர்களுக்கு கண் கண்ணாடி வழங்கப்பட்டது சோலை வட்டார களஞ்சியம் பணியாளர் மகாலட்சுமி நன்றி கூறினார்…
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கூடைப்பந்தாட்ட போட்டியில் சோழவந்தான் பள்ளி மாணவர்கள் பதக்கம் வென்று சாதனை..
சோழவந்தான்சி .பி.ஸ்.இ பள்ளிகளுக்கு இடையேயான மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டிகள் மதுரை வேத வித்யாஷ்ரம் சி.பி.ஸ்.இ பள்ளியில் நடைபெற்றது. இதில் மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே அமைந்துள்ள கல்வி சர்வதேச பொதுப்பள்ளி மாணவர்கள் 17 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் பங்கு பெற்று தங்க பதக்கம் வெற்றி பெற்றன. வெற்றி பெற்ற மாணவர்கள், கைப்பந்து பயிற்சியாளர் அருண்குமார் ஆகியோர்களை பள்ளி நிர்வாகம், பள்ளி முதல்வர், ஆசிரியர் மற்றும் மாணவர்கள் பாராட்டி தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
துபாயிலிருந்து மதுரை வந்த பயணிக்கு மயக்கம் ஏற்பட்டதில் முதலுதவி செய்து மருத்துவமனைக்கு அனுப்பிய மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள்..
திருச்சிராப்பள்ளி மாவட்டம் துறையூர் கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் மகன் கோவிந்தராஜன் வயது 45 இவ்வாறு துபாயில் வேலை பார்த்து வருகிறார் இன்று காலை துபாயில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தவர் மதுரை விமான நிலையத்தில் மயக்கம் ஏற்பட்டு உயர்த்து கொட்டியது இதனை அடுத்து பயணிகள் கூறியதின் பேரில் விமான நிலையத்தில் உள்ள ஊழியர்கள் மற்றும் மத்திய தொழிற்பனை வீரர்கள் அவருக்கு முதலுதவி செய்து ஆம்புலன்ஸ் மூலம் மதுரை வேலம்மாள் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் துபாயில் இருந்து மதுரை வந்த பயணி மயக்கம் ஏற்பட்டு தவித்த நிலையில் விமான நிலைய ஊழியர்கள் மற்றும் மத்திய தொழிற்சாலை வீரர்கள் முதலுதவி செய்தது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது…
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தொகுதி மக்களிடம் செயல்பாட்டு அறிக்கையை வழங்கிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்..
மதுரை: மதுரை மத்திய சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வார்டு 50 சிம்மக்கல் பகுதியில் கடந்த 6 மாத காலத்திற்கான தமது செயல்பாட்டு அறிக்கையை, தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும்,தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சருமான முனைவர் பழனிவேல் தியாகராஜன் வழங்கினார். இந்த நிகழ்வில், மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன் வசந்த், மண்டலத்த லைவர் பாண்டிச்செல்வி, மாமன்ற உறுப்பினர் இந்திரா காந்தி,திமுக வட்ட செயலாளர் ராஜேந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கடந்த 2016 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட போது, தொகுதி மக்களிடம் அளித்த வாக்குறுதியின் படி சட்டமன்ற உறுப்பினராக தனது செயல்பாட்டை ஒவ்வொரு ஆறு மாதத்திற்கு ஒருமுறையும் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தொகுதி மக்களிடம் சமர்ப்பித்து வருகிறார்.
அதன்படி, மதுரை சிம்மக்கல், அண்ணாமலை திரை அரங்கம் அருகே திருமலைராயர் படித்துறை, எல் என் பி அக்ரஹாரம், தைக்கால் தெரு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த செப்டம்பர் 2022 முதல் மே 2023 உள்ளிட்ட 6 மாதத்திற்கான செயல்பாட்டு அறிக்கையை வீதி வீதியாக சென்று தொகுதி மக்களை நேரில் சந்தித்து வழங்கினார் .
அப்போது , தொகுதி மக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பாம்பனில் தமுமுக சார்பில் மருத்துவம் முகாமில் கல்வி நலத்திட்ட உதவி..
இராமநாதபுரம், செப்.10- தமுமுக 29ஆம் ஆண்டை முன்னிட்டு மருத்துவ சேவை அணி, மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை, ராமநாதபுரம் ஆரோக்யா மருத்துவமனை சார்பில இலவச கண், பொது மருத்துவ முகாம் நடந்தது. தமுமுக மாவட்ட பொருளாளர் ஹமீது சபிக் தலைமை வகித்தார். அப்துல்லாஹ் என்பவருக்கு இருதய சிகிச்சை மருத்துவ உதவியாக ரூ.20 ஆயிரம்| மண்டபம் ஹமீது என்பவருக்கு உயர் கல்வி உதவி தொகை ரூ. 5 ஆயிரம் என 25 ஆயிரம் வழங்கப்பட்டது. இம்முகாம்பில் 250 நபர்களுக்கு மேல் கலந்துகொண்டு பயனடைந்தனர். மேல் சிகிச்சைக்காக 15 பேர் பரிந்துரை செய்யப்பட்டனர்.
தமுமுக மாநில துணை பொது செயலாளர் எஸ்.சலிமுல்லா கான், மதிமுக மாவட்ட மீனவர் அணி செயலர் பேட்ரிக், தமுமுக மாவட்ட தலைவர் இப்ராஹிம், தமுமுக மாவட்ட செயலர் அப்துல் ரஹீம், மமக மாவட்ட செயலர் ஆசிக் சுல்தான், பனைக்குளம் பரகத்துல்லா, தமுமுக மாவட்ட துணைச் செயலர் சுலைமான், மமக மாவட்ட துணை செயலர்கள் பிஸ்மி சேக், ஜாகீர் பாபு, இஸ்லாமிய பிரசார பேரவை மாவட்ட பொருளாளர் பிஸ்மில்லா கான், மாவட்ட துணைச் செயலர் ஹக்கீம், தொண்டரணி மாவட்ட செயலர் நைனா, மீனவர் அணி மாவட்ட செயலர் ரஜப் ரஹ்மான், பாம்பன் கிளை தலைவர் சாகுல் ஹமீது, தமுமுக கிளை செயலர் முஹமது சர்புதீன், பரக்கத் அலி, இஸ்லாமிய மாணவர் இயக்க கிளை செயலர் முஹமது ஃபாசில், ராமநாதபுரம் நகர் தலைவர் முஹமது தாஜுதீன், தமுமுக நகர் செயலர் முஹமது தமீம், மமக நகர் செயலர் செய்யது அக்பர், நகர் பொருளாளர் மைதீன் கனி, இஸ்லாமிய பிரசார பேரவை நகர் செயலர் முஹமது சபி, தங்கச்சிமடம் கிளை தலைவர் நூருல் ஜமீர் மமக செயலர் இலியாஸ் தமுமுக செயலர் ஆசிர் ரஹ்மான், பொருளாளர் செய்யது இஸ்மாயில், பனைக்குளம் ஹாஜா,
ஆகியோர் கலந்து கொண்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரம் செப்.10- இராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே பூமாலை வலசை கிராமத்தில் வரம் தரும் செல்லி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா நடந்தது. இதனை முன்னிட்டு விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், யாக பூஜைகளுடன் கும்பாபிஷேகம் நேற்று மாலை தொடங்கியது. இதன் தொடர்ச்சியாக இன்று காலை அம்மன் பாடல்களுடன் யாக பூஜைகள் நடந்தன. இதன் பின்னர் கடங்கள் புறப்பாடாகி கோபுரம் சென்றடைந்தன. இதன் பின்னர் கருட பகவான் வானில் வட்டமிட பூஜிக்கப்பட்ட புனித நீர் கோபுர கலசத்தில் ஊற்றப்பட்டு மஹா கும்பாபிஷேகம் மற்றும் தீபாரதனை நடந்தது. பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து அம்மனுக்கு மஞ்சள் காப்பு, பால், தயிர், மோர் உள்ளிட்ட திரவிய அபிஷேகம் நடந்தன. இதில் மண்டபம், பிரப்பன் வலசை, உச்சிப்புளி, ரெகுநாதபுரம், வட்டார பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அறங்காவலர் கோட்டை வேல், கோயில் குழு தலைவர் முனியசாமி, செயலர் ரவி(எ) சுப்ரமணியன், பொருளாளர் கோட்டைச்சாமி, பூசாரி கோட்டைச்சாமி மற்றும் வீர சைவ ஆண்டி பண்டார சமூகத்தார் ஏற்பாடு செய்தனர்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரம். செப்.10 – இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாசிம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரி 31 வது பட்டமளிப்பு விழா நடந்தது. கல்லூரி தாளாளர் ரஹ்மத்துன்னிஷா அப்துர் ரஹ்மான் முன்னிலை வகித்தார். கல்லூரி செயலாளர் காலித் புஹாரி பட்டமளிப்பு நிகழ்வை துவக்கி வைத்தார். கல்லூரி முதல்வர் சுமையா வரவேற்று ஆண்டறிக்கை வாசித்தார்.
இளநிலைப்பிரிவில் 587, முதுநிலைப்பிரிவில் 83, ஆய்வியல் நிறைஞர் பிரிவில் 7 பேர் என 677 மாணவிகளுக்கு பட்டம், 63 மாணவிகளுக்கு வெள்ளிப் பதக்கங்களை தமிழக அரசின் சிறுபான்மை ஆணையத் தலைவர் எஸ். பீட்டர் அல்போன்ஸ் வழங்கினார். பீட்டர் அல்போன்ஸ் பேசுகையில், கல்வி கற்றல் என்பது வாழ்க்கையின் முடிவு அல்ல. அதுவே ஆரம்பம். சிறுபான்மை பெண்களின் கல்விக்காகவே பி எஸ் அப்துர் ரஹ்மான் கல்வி நிறுவனத்தை நிறுவினார். இக்கால செயற்கை தொழில்நுட்பம் சார்ந்த கல்வியை மனித மாண்புகளுக்கு ஏற்ற வகையில்
மாணவிகள் பயில வேண்டும் என்றார். மதுரை கிரசென்ட் பெண்கள் கல்வி நிறுவனங்களின் தாளாளர் ஷெரிபா அஜீஸ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். கல்லூரியின் தொழில்முனைவோர் இயக்குநர் ரோஸி பெர்ணான்டோ, தேர்வு நெறியாளர் முத்து மாரீஸ்வரி, பல்வேறு பாடப்பிரிவுகளின் துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவிகள், அலுவலகப் பணியாளர்கள், பெற்றோர் கலந்து கொண்டனர்.
சீதக்காதி அறக்கட்டளை துணை பொது மேலாளர் ஷேக் தாவூத் கான், உள்தர உத்திரவாதக் குழுவினர் ஏற்பாடுகளை செய்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ராமநாதபுரம் முஹமது சதக் ஹமீது மகளிர் கல்லூரி முதல் பட்டமளிப்பு விழா: 220 மாணவியருக்கு பட்டம்..
இராமநாதபுரம், செப். இராமநாதபுரம் முஹமது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதல் பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் இன்று நடத்தது. அராபிக் துறை தலைவர் எம். ரெய்ஹானத்தில் அதவியா இறைவணக்கம் செலுத்தினார். கல்லூரி முதல்வர் முனைவர் எம் மீரா வரவேற்நார். முஹமது சதக் அறக்கட்டளை இயக்குநர் அல்ஹாஜ் எஸ்.எம்.ஏ.ஜெ.ஹபீப் முஹமது சதக்கத்துல்லா முன்னிலை வகித்தார். அழகப்பா பல்கலை தர வரிசை பட்டியலில் இடம் பிடித்த 14 மாணவிகளுக்கு பதக்கம் உள்பட 220 மாணவிகளுக்கு முனைவர் ஜெயந்த ஸ்ரீ பாலகிருஷ்ணன், காரைக்குடி அழகப்பா பல்கலை கல்லூரி மேம்பாட்டு கவுன்சில் இயக்குனர் முனைவர் வி. சிவக்குமார் ஆகியோர் பட்டம் வழங்கினர்.
பட்டம் பெறும் பட்டதாரி மாணவிகள் நேர்மறை சிந்தனை, நிலையான உறுதியான தன்னம்பிக்கையுடன்்சமுதாயத்திற்கு முன் மாதிரியாக செயல்பட வேண்டும் என முனைவர் ஜெயந்த ஸ்ரீ பாலகிருஷ்ணன் எடுத்துரைத்தார். முஹமது சதக் கல்வி நிறுவன முதல்வர்கள் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். முஹம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் அனைத்துத் துறை தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் கலந்துகொண்டனர். கல்லூரியின் உள்தர உறுதிப்பிரிவின் (IQAC) ஒருங்கிணைப்பாளரும் கணினி அறிவியல் துறையின் உதவிப் பேராசிரியருமான கே. அனிதா ஒருங்கிணைத்தார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தென்காசி மாவட்டத்தில் சிறப்பு கல்விக் கடன் முகாம்; மாவட்ட ஆட்சியர் தகவல்..
தென்காசி மாவட்டத்தில் மாபெரும் சிறப்பு கல்விக் கடன் முகாம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் துரை. இரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார். இது குறித்த செய்திக்குறிப்பில் தென்காசி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி இணைந்து நடத்தும் மாபெரும் சிறப்புக் கல்விக் கடன் முகாம் 12-09-2023 முதல் 16-09-2023 வரை 5 நாட்கள், நேரம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட இடங்களில் நடைபெறும்.
மேற்கண்ட விபரப்படி நடைபெறும் சிறப்புக் கல்விக் கடன் முகாமில் தென்காசி மாவட்டத்தில் உள்ள ஊரகம் மற்றும் நகர்ப்புற பகுதிகளில் உள்ள அனைத்து கலை பொறியியல், மருத்துவம், செவிலியர் மற்றும் சட்டக் கல்லூரி படிப்புக்கான கல்விக் கடன் எதிர்நோக்கி காத்திருக்கும் மாணவ, மாணவியர் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளவும். ரூபாய் 4 லட்சம் முதல் 7.50 இலட்சம் வரை பிணை தேவையில்லை. ஆனால் மூன்றாம் நபர் உத்திரவாதம் வேண்டும். கல்விக் கடன் பெற விரும்பும் மாணவ, மாணவியர் அனைவரும் www.vidyalakshmi.co.in என்ற இணையத்தளத்தில் தங்களுடைய விண்ணப்பத்தை தேவைப்படும் ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்து முகாம் நடைபெறும் நாளன்று விண்ணப்பத்தின் நகல் மற்றும் ஆவணங்களுடன் கலந்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேனேஜ்மென்ட் கோட்டா (நிர்வாக ஒதுக்கீடு)-வில் சேரும் அனைத்து மாணவ, மாணவியர்களுக்கு கட்டாயம் சொத்து பிணையம் அவசியம். மேலும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய இயலாத மாணவ, மாணவியரும் கீழ்க்கண்ட ஆவணங்களுடன் முகாமில் கலந்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தேவைப்படும் ஆவணங்கள்: ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், பான் கார்டு நகல், பள்ளி மாற்றுச் சான்றிதழ் நகல்,10, 11, 12ஆம் வகுப்பு மற்றும் இளநிலை பட்டப்படிப்பின் மதிப்பெண் சான்றிதழ்கள் நகல், வருமான சான்றிதழ் நகல், ஜாதி சான்றிதழ் நகல், இருப்பிடச் சான்றிதழ் நகல், முதல் பட்டதாரியாக இருப்பின் அதற்கான சான்று மற்றும் கலந்தாய்வு மூலமாக பெறப்பட்ட சேர்க்கைக்கான ஆணை கல்லூரி சேர்க்கை கடிதம், கட்டண விபரங்களுக்கான பட்டியலுடன் முகாம் நடைபெறும் இடத்திற்கு பெற்றோருடன் கலந்து கொண்டு பயன் பெறவும். இம்முகாமில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் கலந்து கொண்டு விண்ணப்பங்களை பெற்று தகுதியான மாணவர்களுக்கு கல்விக் கடன் வழங்க மாவட்ட நிர்வாகத்தால் மாவட்ட முன்னோடி வங்கி மூலம் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சித் தலைவர் துரை. இரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தென்காசியில் கலைஞர் அகாடமி; திமுக தெற்கு மாவட்ட செயலாளர் ஜெயபாலன் பேச்சு..
தென்காசி தெற்கு மாவட்ட திமுக அலுவலகம் கல்லூரி மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் பயன்பெறும் வகையில் கலைஞர் அகாடமியாக கல்வி சேவை ஆற்ற உள்ளதாக தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வே. ஜெயபாலன் தெரிவித்துள்ளார். தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் தென்காசி சிவந்தி நகர் பகுதியில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது. செயற்குழு கூட்டத்திற்கு முன்னாள் வடக்கு மாவட்ட செயலாளரும், தலைமை செயற்குழு உறுப்பினருமான செல்லத்துரை தலைமை தாங்கினார். தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் ஜெயபாலன் சிறப்புரை ஆற்றினார். செயற்குழு உறுப்பினர் ஆறுமுகசாமி தொகுப்புரை ஆற்றினார். தென்காசி தெற்கு மாவட்டச் செயலாளர் வே. ஜெயபாலன் செயற்குழுக் கூட்டத்தில் பேசியதாவது, தெற்கு மாவட்ட திமுக அலுவலகமானது காலை 9 மணி முதல் 11 மணி வரை செயல்படும் என்றும், விரைவில் இது கல்லூரி மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் பயன்பெறும் வகையில் நான்கு ஆசிரியர்களை கொண்டு கலைஞர் அகாடமியாக கல்வி சேவை ஆற்றும். கடந்த ஐந்தாம் தேதி 1500 பேருக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கைகளினால் வழங்கப்பட்ட மூத்த முன்னோடிகளுக்கான பொற்கிழி தகுதியானவர்களுக்கு விடுபட்டிருந்தால் அவர்களை தேர்வு செய்து வருகின்ற செப்டம்பர் மாதம் 17ஆம் தேதியன்று தெற்கு மாவட்ட அலுவலகத்தில் வைத்து வழங்கப்படும் என செயற்குழு கூட்டத்தில் மாவட்ட செயலாளர் வே. ஜெயபாலன் பேசினார்.
இச்செயற்குழு கூட்டத்தில் தென்காசி மாவட்ட திமுக சார்பில் கடந்த ஐந்தாம் தேதி நடைபெற்ற மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சிக்கும் மாவட்ட செயல் இளைஞரணி வீரர்கள் கூட்டத்திற்கும் அனுமதி பெற்று தந்த பேரிடர் மேலாண்மை மற்றும் வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரனுக்கு நன்றி தெரிவித்தும், இருபெரும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தென்காசி தெற்கு மாவட்ட திமுக புதிய அலுவலகத்தை திறந்து வைத்து 70 அடி உயர கொடிக்கம்பத்தில் திமுக கொடியினை ஏற்றி தென்காசி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றியும் பாராட்டும் தெரிவித்தும், நிகழ்ச்சிகள் நடைபெற முழு ஒத்துழைப்பு அளித்த அனைத்து நிர்வாகிகளுக்கும், இளைஞரணி அமைப்பாளர்களுக்கும் நன்றி தெரிவித்தும், தென்காசி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அரசு கொறடாவுமான கதிரவனின் மனைவி மல்லிகா கதிரவனுக்கு பாவேந்தர் விருது வழங்க பரிந்துரை செய்த முதல்வருக்கும், பொதுச் செயலாளர் துரை முருகனுக்கும் நன்றி தெரிவித்தும், வருகின்ற செப்டம்பர் 17ஆம் தேதி கழகத்தின் முப்பெரும் விழாவினை சிறப்பாக கொண்டாடிடவும், வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் சிறப்பான வெற்றி பெற பாடுபடுவோம் எனவும், விருப்பமில்லாமல் செயல்பட்டு வரும் பாக முகவர்களை மாற்றுவது உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நிகழ்ச்சியில் செயற்குழு உறுப்பினர்கள் ஜேசுராஜன், ஷேக்தாவூத், ராஜேஸ்வரன், சாமிதுரை, மாவட்ட பொருளாளர் ஷெரிப், மாநில விவசாய அணி இணை அமைப்பாளர் செல்லப்பா, கடையநல்லூர் நகர்மன்ற தலைவர் மூப்பன் ஹபீபுர்ரகுமான், ஆலங்குளம் ஒன்றியக் குழுத்தலைவி எம்.திவ்யா மணிகண்டன், மாவட்ட துணை செயலாளர் கென்னடி, கனிமொழி, தென்காசி மாவட்ட மருத்துவ அணி தலைவர் டாக்டர் மாரிமுத்து, அமைப்பாளர் டாக்டர் அன்பரசன், தொண்டரணி அமைப்பாளர் இசக்கி பாண்டியன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ஜேகே. ரமேஷ், தகவல் தொழில் நுட்ப அணி அமைப்பாளர் நாகராஜ், தென்காசி சுப்பிரமணியன், செங்கோட்டை நகர செயலாளர் வெங்கடேசன், திமுக பேரூர் செயலாளர்கள் மேலகரம் சுடலை, குற்றாலம் குட்டி, முன்னாள் பேரூர் கழகச் செயலாளர் சாம்பவர் வடகரை மாறன், குற்றாலம் சுரேஷ், ஒன்றிய செயலாளர்கள் அழகு சுந்தரம், வழக்கறிஞர் அணி வேல்சாமி ரகுமான் சாதத், முத்துக் குமாரசாமி, சீனித்துரை, ரவிசங்கர் மகேஷ் மாயவன், பெரிய துரை, தென்காசி 1வது வார்டு செயலாளர் ராமராஜ், மாவட்ட பொறியாளர் அணி தலைவர் தங்கப்பாண்டியன், தொண்டரணி இசக்கிதுரை, தென்காசி நகர பொருளாளர் ஷேக் பரீத், நகர துணைச் செயலாளர் ராம்துரை, குத்துக்கல் வலசை கிளைச் செயலாளர் காசி கிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இறுதியில் தென்காசி தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் டி.ஆர். கிருஷ்ணராஜா நன்றி கூறினார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரையில் 200 கிலோ கஞ்சாவை பொட்டலங்களாக கடத்திய இருவர் கைது – லாரி பறிமுதல்..
மதுரை- திருநெல்வேலி நான்கு வழி சாலை, சீனிவாச காலனி காலனி பகுதியில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரின் தனிப்படை வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது சரக்கு லாரியில் 200 கிலோ கஞ்சாவை பொட்டலங்களாக கடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது – கஞ்சாவை கடத்திவந்த மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் செக்கான் கோவில்பட்டியை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் விஜயகுமார், வயது 45 லாரி ஓட்டுனரான திருப்பத்தூர் வாணியம்பாடியை சேர்ந்த முகமது பாசில் மகன் சமில் அகமது வயது 26 ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
200 கிலோ கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சரக்குலாரி மற்றும. செல்போன் பறிமுதல் செய்து தனிப்படை காவல்துறையினர் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஒன்றிய தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு மற்றும் செயற்குழு கூட்டம் மாநில தலைவர் தியாகராஜன் வழிகாட்டுதலின்படி செங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது கூட்டத்திற்கு திருவண்ணாமலை மாவட்ட தலைவர் முருகன் தலைமை தாங்கினார் மாவட்ட செயலாளர் எழிலன் செங்கம் ஒன்றிய செயலாளர் காசி ஆகியோர் முன்னிலை வைத்தனர் செங்கம் ஒன்றிய தலைவர் வெங்கடேசன் வரவேற்றார் நிர்வாகிகள் தேர்வில் செங்கம் வட்ட கிளை தலைவராக வெங்கடேசன் செயலாளர் காசி பொருளாளர் மகேஸ்வரன் துணைத் தலைவர் செந்தில்குமார் அமைப்பு செயலாளர் மணி ஒருங்கிணைப்பாளர் புரட்சி அரசன் செய்தி தொடர்பாளர் நாகராஜன் ஆகியோர் மீண்டும் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டனர் பின்னர் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்தினை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமல்படுத்த வேண்டும் 01.06.2009-க்குப்பின் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டினை களைதல் வேண்டும் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு அறிவியல் பாடத்திற்கு 25 மதிப்பெண் வழங்குவது போல் அனைத்து பாடத்திற்கும் 10 சதவீத அகமதிப்பீட்டு மதிப்பெண் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது முடிவில் செங்கம் வட்ட பொருளாளர் மகேஸ்வரன் நன்றி கூறினார்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
அதிக தோல்விகளையும் புறக்கணிப்புகளையும் சந்தித்த, அலிபாபா குழுமத்தின் செயல் தலைவர், ஜாக் மா பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 10, 1964).
ஜாக் மா (Jack Ma) செப்டம்பர் 10, 1964ல் சீனாவில் சிஜியாங் மாநிலத்தில் அங்சூவில் பிறந்தார். இளம் அகவையிலேயே ஆங்கிலம் கற்க மிகுந்த ஆர்வம் காட்டிய மா அடுத்திருந்த தங்குவிடுதியிலிருந்த வெளிநாட்டவருடன் உரையாட 45 நிமிடங்கள் மிதிவண்டியில் செல்வார். கட்டணமில்லா சுற்றுலா வழிகாட்டியாக தனது ஆங்கிலத் திறனை வளர்த்துக் கொண்டார். பின்னர் அங்சூ ஆசிரியக் கல்லூரியில்(நார்மல் பல்கலைக்கழகம்) பயின்றார். 1988ல் ஆங்கிலத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். படிக்கும்போதே மாணவர் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து அங்சூ டியான்சி பல்கலைக்கழகத்தில் ஆங்கிலம் மற்றும் பன்னாட்டு வணிக விரிவுரையாளராகப் பணியாற்றினார். ஜாக் மா கல்வியில் சிறந்த மாணவராக இருக்கவில்லை. ஒருமுறை சார்லி ரோஸ் என்பவர் எடுத்த பேட்டியின் போது, ஜாக் மா நான் ஆரம்ப பள்ளித் தேர்வில் 2 முறை தோல்வியடைந்தேன், நடுநிலைப் பள்ளித் தேர்வில் 3 முறை தோல்வியடைந்தேன், கல்லூரி நுழைவுத் தேர்வில் 2 முறை தோல்வியடைந்தேன் பிறகுதான் பட்டம் பெற்றேன்” என்று தெரிவித்தார்.
ஜாக் மா கல்வி கற்றலில் மிகுந்த போராட்டத்தை சந்தித்தார். குறிப்பாக இளமை காலத்தில் பள்ளிப் படிப்பில் மீண்டும் மீண்டும் தோல்வியடைந்தார். எனினும், அவர் தனக்கு தீவிர ஆர்வமிருக்கும் (passionate) விஷயங்களில் சிறந்து விளங்கினார். உதாரணத்திற்கு ஆங்கிலத்தை கற்றுக்கொண்டிருந்தார். கல்லூரி நுழைவுத் தேர்வில் கணிதத்தில் 120 மதிப்பெண்ணுக்கு 1 மதிப்பெண் மட்டுமே எடுத்தவர். தேர்வில் தோல்வியடைவது என்பது ஒரு வகை, ஆனால் நுழைவுத் தேர்வில் கணிதத்தில் 1 சதவீதம் மட்டுமே எடுப்பது என்பது தோல்வியையைவிட வேறுவிதமான வீழ்ச்சி. அந்த நாட்களில் ஜாக் மா கணித பாடத்தில் (mathematics) மிகவும் போராடினார். நான் கணக்கில் சிறந்தவனல்ல, மேலாண்மை கற்றவனுமில்லை, இன்றும் என்னால் கணக்கியல் அறிக்கைகளை படிக்க இயலாது என்று ஒருமுறை கூறினார். பில்லியனர் (billionaire) ஆவதற்கு கணக்கில் சிறந்தவராக இருக்கவேண்டும் என்பதை மாற்றியவர்.
இன்னும் சுவாரசியமான விஷயம் என்னவென்றால், உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனத்தை நிறுவிய ஜாக் மா (jack Ma) இளமைப்பருவத்தில் கணினி என்ன வார்த்தையை கூட கேட்காதவர். 1980 ஆண்டில் Hangzhou Normal பல்கலைக்கழகத்தில் பயின்று அவர் ஆங்கிலத்தில் பட்டம் பெற்றார். நான் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் 10 முறை விண்ணப்பித்தேன், விண்ணப்பித்த 10 முறையும் நிராகரிக்கப்பட்டேன். ஆனால் என்றாவது ஒரு நாள் நான் அங்கு மாணவர்களுக்கு கற்றுக்கொடுப்பேன் என்று எனக்குள் கூறிக்கொள்வேன்”. இந்த புறக்கணிப்புகள் ஒருபோதிலும் அவரை பின்னடையச் செய்ததில்லை. ஜாக் மா பட்டம் பெற்றப் பின் 30 வெவ்வேறு வேலைகளுக்கு விண்ணப்பித்தார், விண்ணப்பித்த 30 வேலைக்கும் நிராகரிக்கப்பட்டார். அவர் ஒருமுறை போலீஸ் அதிகாரி வேலைக்கும் அணுகினார், “நீங்கள் சிறந்தவர் இல்லை (You’re no good) ” என்று காரணம் கூறப்பட்டு அதிலும் புறக்கணிக்கப்பட்டார்.
KFC-யில் நிறுவனத்தில் வேலைக்கு விண்ணப்பித்த 24 பேரில் 23 பேர் தேர்தெடுக்கப்பட்டனர். ஒரே ஒருவர் மட்டுமே நிராகரிக்கப்பட்டார். அந்த ஒருவர் ஜாக் மா ஆவார். அவர் நிராகரிக்கப்பட்டதற்கான காரணம் உயரம் குறைவானவர் மற்றும் நல்ல தோற்றப் பொலிவு கொண்டிருக்காதவர் என்பதற்காக. இந்த புறக்கணிப்புகள் யாவும் அவரின் தன்னம்பிக்கையையும், உறுதியையும் ஒருபோதும் குறைத்ததில்லை. மா முதலில் தமது அமெரிக்க நண்பர்களின் உதவியுடன் சீன நிறுவனங்களுக்கு வலைத்தளங்கள் உருவாக்கலானார். 1995ல் மா சீன யெல்லோப்பேஜசு என்ற இணையதளத்தை நிறுவினார். இதுவே சீனாவின் முதல் இணையவழி நிறுவனமாக பரவலாக நம்பப்படுகிறது. 1998 முதல் 1999 வரை சீன பன்னாட்டு மின்னணுவியல் வணிக மையம் என்ற தகவல்தொழினுட்ப நிறுவனத்தின் தலைவராக பொறுப்பேற்றார். இது அரசுத்துறையில் வெளிநாட்டு வணிகம் மற்றும் பொருளியல் ஒத்துழைப்பு அமைச்சரகத்தின் கீழ் இயங்கியது.
1999ல் சொந்தமாக அலிபாபாவை நிறுவினார். சீனாவில் இயங்கிய வணிகரிடை சந்தைக்கடையான இது 240 நாடுகளிலும் ஆட்சிப்பகுதிகளிலும் இருந்த 79 மில்லியன் உறுப்பினர்களைக் கொண்டதாக தற்போது வளர்ந்துள்ளது. செப்டம்பர் 2014ல் தனது பங்குகளை விற்பனை செய்து $20 பில்லியன் பணமெழுப்ப ஆரம்ப பொது விடுப்புகள் அறிக்கையை வெளியிட்டது. மா தற்போது அலிபாபா குழுமத்தின் செயல் தலைவராக உள்ளார். இக்குழுமத்தில் Alibaba.com, டாவோபாவோ சந்தையிடம், இட்டிமால், இடாவோ, அலிபாபா மேகக் கணிமை, யுகுசுவான், 1688.com, Aliexpress.com, அலிப்பே என்ற முதன்மையான ஒன்பது நிறுவனங்கள் உள்ளடங்கியுள்ளன.
நவம்பர் 2012ல் அலிபாபாவின் இணைய பரிவர்த்தனைகள் ஒரு டிரில்லியன் யுவானாக இருந்தது. இதனால் மா “டிரில்லியன் ஹூ” எனப்படுகிறார். சீனமொழியில் “டிரில்லியன் யுவான் மார்கிசு” எனப் பொருள்படும். ஜாக் மா சாங் யிங்கை மணந்துள்ளார்.இவர்களுக்கு ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனர். ஜாக் மா சீன தொழில் முனைவர் ஆவார். இவர் புகழ்பெற்ற இணையவழி வணிகத்தளங்களின் குழுமமான அலிபாபா குழுமத்தின் செயல் தலைவராவார். ஃபோர்ப்ஸ் இதழின் முகப்புப் பக்கத்தில் இடம் பெற்ற முதல் சீன நாட்டில் வாழும் சீனராவார்.
Source By: Wikipedia, Tamilentrepreneur.
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மின்காந்த அலைகளின் துகள்தன்மையை விளக்கும் காம்டன் விளைவு கண்டுபிடிக்கப்பட்டதற்கு நோபல் பரிசு வென்ற, ஆர்தர் ஹோலி காம்டன் பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 10, 1892).
ஆர்தர் ஹோலி காம்டன் (Arthur Holly Compton) செப்டம்பர் 10, 1892ல் உவூற்றர், ஒகியோ, அமெரிக்காவில் பிறந்தார். தனது ஆரம்பக்கல்வியை முடித்த பிறகு, கல்லூரியில் பயின்று 1913 இல் இளங்கலை அறிவியல் பட்டம் பெற்றார், அவர் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டப்படிப்பை 1914 இல் பெற்றார். 1916ல் முனைவர் பட்டம் பெற்றார். பிரின்ஸ்டனில் அவரது ஆரம்ப நாட்களில், காம்டன் பூமியின் சுழற்சியை நிரூபிக்க ஒரு நேர்த்தியான முறையைத் திட்டமிட்டார். ஆனால் அவர் விரைவில் எக்ஸ்-ரேஸ் துறையில் தனது ஆய்வைத் தொடங்கினார். அவர் எலக்ட்ரான்கள் மற்றும் அணுக்களின் ஏற்பாட்டைப் படிப்பதற்கான ஒரு கருவியாக படிகங்களிலிருந்து எக்ஸ்-ரே பிரதிபலிப்பு தீவிரத்தின் கோட்பாட்டை உருவாக்கியது. மேலும் 1918 ஆம் ஆண்டில் அவர் எக்ஸ்-ரே சிதறலை ஆய்வு செய்தார்.
1922 ஆம் ஆண்டில், எக்ஸ்ரே கதிர்வீச்சின் அதிகரிப்பு கண்டுபிடிக்கப்பட்டதற்கு, இலவச எலக்ட்ரான்கள் (Free Electron) மூலம் நிகழும் கதிர்வீச்சின் சிதறல் காரணமாக, சிதறிய குவாண்டா அசல் கற்றைக் கோட்டை விட குறைவான ஆற்றலைக் கொண்டிருப்பதை இது குறிக்கிறது. இந்த விளைவை, இப்போது “காம்டன் விளைவு” என அழைக்கப்படும். இது மின்காந்த கதிர்வீச்சின் துகள் கருத்தை தெளிவாக விளக்குகிறது. அதன் பிறகு சி.டி.ஆர்.வில்சன், அவரது கிளவுட் சேம்பரில் மறுபடியும் எலக்ட்ரான்களின் தடங்கள் இருப்பதைக் காட்ட முடியும். இந்த நிகழ்வின் யதார்த்தத்தின் மற்றொரு நிரூபணம் தற்செயலான முறை (காம்டன் மற்றும் ஏ.வி. சைமன் ஆகியோரால் உருவாக்கப்பட்டது. மேலும் ஜெர்மனியில் டபிள்யூ.போடே மற்றும் ஹெச்.ஜெய்கர் ஆகியோரால் உருவாக்கப்பட்டது.
காம்ப்டன் சிதறலும், எக்ஸ்ரே பொருளால் சிதறடிக்கப்படும்போது, எக்ஸ்ரேயை விட அலைநீளம் நீளமான பக்கத்திற்கு மாற்றப்படும் ஒரு நிகழ்வு உள்ளது. கூடுதலாக நிகழ்வு எக்ஸ்ரே போன்ற அதே அலைநீளத்தைக் கொண்டிருக்கும். 1923 ஆம் ஆண்டில் ஏ.எச். காம்ப்டன் ஒரு ஃபோட்டான் கருதுகோளை பயன்படுத்தி பொறிமுறையைக் கண்டுபிடித்து அதன் வலுவான சோதனை அடிப்படையில் கொடுத்தார். அதாவது, எக்ஸ்ரேயின் ஃபோட்டான் பொருளில் உள்ள எலக்ட்ரானுடன் மோதுகையில், எலக்ட்ரான் ஃபோட்டானின் ஆற்றலின் ஒரு பகுதியைப் பெற்று அணுவிலிருந்து வெளியேறுகிறது (எலக்ட்ரான் மீண்டும்) மற்றும் ஃபோட்டான் குறைந்து வரும் ஆற்றலால் குறைகிறது (அலைநீளம் அதிகரிக்கிறது). எக்ஸ்-கதிர்கள் ஒரு பொருளில் நிகழ்ந்தால், தாம்சன் சிதறல் அலைநீளத்தின் மாற்றத்துடன் சேர்ந்து காம்ப்டன் சிதறலுக்கும் கூடுதலாக நிகழ்கிறது. ஆனால் அலைநீளம் நீளமாகும்போது, தாம்சன் சிதறல் பெரிதாகிறது.
காம்ப்டன் இரண்டாம் உலகப் போரின்போது முதலாவது அணுக்கரு ஆயுதங்களைத் தயாரிப்பதில் ஈடுபட்ட மன்காட்டன் குழுவில் பெரும் பங்காற்றினார். 1942ல் இவர் உலோகவியல் ஆய்வுகூடத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். யுரேனியத்தை புளூட்டோனியமாக மாற்றும் அணுக்கரு உலைகள் தயாரிப்பில் இவ்வாய்வுகூடம் முக்கிய பங்களிப்பு செய்தது. காம்ப்டன் 1945ல் ஜப்பானுக்கு எதிராக அணுகுண்டு பயன்படுத்துவதற்கு ஒப்புதல் அளிக்கும் குழுவில் இருந்தார். 1945 முதல் 1953 வரை செயிண்ட் லூயிஸில் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் செயலாளராக பணியாற்றினார். மின்காந்த அலைகளின் துகள்தன்மையை விளக்கும் இவருடைய கண்டுபிடிப்பான காம்ப்டன் விளைவிற்காக 1927ல் இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றார். மட்டூச்சி பதக்கம்(1930), பிராங்கிளின் பதக்கம்1940), இயூசு பதக்கம்(1940), போன்ற பதக்கங்களை பெற்றார்.
நோபல் பரிசு வென்ற, அமெரிக்க இயற்பியலாளர் ஆர்தர் ஹோலி காம்டன் மார்ச் 15, 1962ல், பெருக்கலி, கலிபோர்நியா, அமெரிக்காவில் இவ்வுலகை விட்டு பிரிந்தார். சந்திரனில் உள்ள காம்ப்டன் பள்ளம் காம்ப்டன் மற்றும் அவரது சகோதரர் கார்லுக்காக பெயரிடப்பட்டது. செயின்ட் லூயிஸில் உள்ள வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் ஆராய்ச்சி கட்டிடம் அவரது நினைவாக பெயரிடப்பட்டது. நாசாவின் காம்ப்டன் காமா ரே ஆய்வகம் காம்ப்டனின் நினைவாக பெயரிடப்பட்டது. காம்ப்டன் விளைவு காமா கதிர் கண்டறிதல் கருவிகளுக்கு மையமாக உள்ளது.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மாணவர்கள் நாட்டையும் சமுதாயத்தையும் முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்ல உறுதிகொள்ள வேண்டும்: வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேச்சு:
மதுரை: நாடார் மஹாஜன சங்கம் வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில் 33வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள கங்காராம் துரைராஜ் கலையரங்கில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு, வந்தவர்களை கல்லூரி முதல்வர் முனைவர் இராஜேந்திரன் வரவேற்புரையாற்றிட, கல்லூரியின் செயலாளர்& தாளாளர் சுந்தர் தொடங்கி வைத்தார். சிறப்பு விருந்தினராக, தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத்துறை மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன், கலந்துகொண்டு, “கல்வி மற்றும் தொழில் மூலம் மாணவர்கள் முன்னேற்றமடைய இச்சமூகம் சிறப்பாக செயலாற்றி வருகிறது. இன்றைய இளைய தலைமுறையினர் தம் சொந்த உழைப்பின் மூலம் உலக அளவில் முன்னேற்றமடைய வேண்டும். இக்கல்வி நிறுவனமானது கிராமப்புற மாணவர்கள் கல்வி பெற ஊக்குவித்து மேம்படுத்துவதென்பது பாராட்டுதலுக்குரியது என்றும், கடந்த ஆண்டுகளில் டிசிஎஸ் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் கல்லூரி வளாக நேர்காணல் மூலம் வேலைவாய்ப்புக்களை வழங்கியும், விளையாட்டுப்போட்டிகளிலும் பங்கேற்கச்செய்ய ஊக்குவித்து வருவருதென்பது பெருமைக்குரியது என்றும் கூறினார். மாணவர்கள் பட்டம் பெறுவது மட்டும் நிலையான ஆரம்பமோ முடிவோ அல்ல. ஒவ்வொரு மாணவனும் தம் சமுதாயத்தில் தோல்வியைக் கண்டு சோர்ந்து விடாது சமாளித்து வாழ்வில் புதிய தனித்திறமைகளை வளர்த்து மேம்பட வேண்டும். இதில், ஆசிரியர்களின் தியாகமும் பணியும் சிறப்புக்குரியதாக உள்ளது. மாணவர்கள் நாட்டையும் சமூகத்தையும் முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்ல உறுதிகொள்ள வேண்டும்” என்றும் கூறி பட்டம் பெற வந்துள்ள மாணவர்கள் மற்றும் அவர்தம் பெற்றோர்களையும் வாழ்த்தி சிறப்புரையாற்றினார்.
இளநிலை மற்றும் முதுநிலை பாடப்பிரிவுகளில், மாணவர்கள் 543, மாணவிகள் 362 என மொத்தம் 905 பட்டதாரிகளுக்குப் பட்டம் வழங்கினார்.
முன்னதாக, கல்லூரியில் நவீனமயமாக்கப்பட்ட கணினி அறிவியல் துறை ஆய்வகத்தை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன், நவீனமயமாக்கப்பட்ட வேதியியல் துறை ஆய்வகத்தை திண்டுக்கல், சோலை நாடார் நினைவு மேல்நிலைப் பள்ளியின் தாளாளர் முருகேசன், நிர்வாகிகள் அறையை விருதுநகர், இதயம் குழுமத்தின் சேர்மன் ‘இதயம்’ முத்து, முதல்வர் அறையை விருதுநகர் ச.வெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னிக் கல்லூரியின் புரவலர் குறள் அரசன் மற்றும் செந்தில்குமார் நாடார் விடுதியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள சமையற் கூடத்தை பெங்களுர், ரமேஷ் எக்ஸ்போர்ட்ஸ் பி. லிட்.-ன் சேர்மன் ரமேஷ்ராஜா திறந்து வைத்தனர்.
இப்பட்டமளிப்பு விழாவில், கல்லூரியின் துணைத் தலைவர் பொன்னுச்சாமி, பொருளாளர் நல்லதம்பி, நாடார் மஹாஜன சங்கம் பொதுச் செயலாளர் கரிக்கோல்ராஜ், துணை முதல்வர் முனைவர் செல்வமலர், சுயநிதிப்பிரிவு இயக்குநர் முனைவர் ஸ்ரீதர் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு சிறப்பு செய்தனர். பட்டமளிப்பு விழா ஒருங்கிணைப்பாளர் முனைவர் மாதவன் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஜெகநாதன் ஆகியோர் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
விருதுநகர் மாவட்டத்தில், பயிற்சி முடிந்த துணை தாசில்தார்களுக்கு பணியிடம் ஒதுக்கீடு… ஆட்சியர் உத்தரவு…..
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் துணை தாசில்தார்களுக்கு காவல்துறை பயிற்சிகள் நடைபெற்று முடிந்தது. பயிற்சிகள் முடிந்த நிலையில், துணை தாசில்தார்களுக்கு பணியிடங்களை ஒதுக்கி மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, அருப்புக்கோட்டை ஆர்.டி.ஓ. அலுவலக தலைமை உதவியாளர் இந்திரா, ஆட்சியர் அலுவலக சமூக பாதுகாப்பு திட்ட துணை தாசில்தாராகவும், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலகத்தில் பணிபுரிந்த சோனையன், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலக பறக்கும்படை துணை தாசில்தாராகவும், வத்திராயிருப்பு மண்டல துணை தாசில்தார் சசிகுமார் அதே பணியிடத்திலும், திருவில்லிபுத்தூர் மண்டல துணை தாசில்தார் ரவிக்குமார் அதே பணியிடத்திலும், வத்திராயிருப்பு வட்ட வழங்கல் அலுவலர் கலைச்செல்வி அதே பணியிடத்திலும், ஆட்சியர் அலுவலக ஜே பிரிவு தலைமை உதவியாளர் பால்ராஜ், திருச்சுழி வட்ட வழங்கல் அலுவலராகவும், திருவில்லிபுத்தூர் துணை தாசில்தார் ராஜேந்திரன் அதே பணியிடத்திலும், விருதுநகர் தாலுகா மண்டல துணை தாசில்தார் முத்துசங்கரன், திருவில்லிபுத்தூர் வட்ட வழங்கல் அலுவலராகவும், திருவில்லிபுத்தூர் வட்ட வழங்கல் அலுவலர் பாலகிருஷ்ணன், மாவட்ட ஆய அலுவலக கண்காணிப்பாளராகவும், திருச்சுழி வட்ட வழங்கல் அலுவலர் தேவமிர்தம், அருப்புக்கோட்டை ஆர்.டி.ஓ. அலுவலக தலைமை உதவியாளராகவும் நியமித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம் நீங்களும் வாங்க … மாரிமுத்து இறந்தது திரையுலகத்திற்கு பெரிய பேரதிர்ச்சி-மதுரை விமான நிலையத்தில் நடிகர் வடிவேலு பேட்டி…
அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம் நீங்களும் வாங்க என கூறிய வடிவேல் . கண்ணும் கண்ணும் படத்தில் தான் அடித்து கேட்டாலும் சொல்லாதீர்கள்,கிணற்றைக் காணோம் என்ற நகைச்சுவையை இயக்குனர் மாரிமுத்து தான் உருவாக்கினார், அவர் இறந்தது திரையுலகத்திற்கு பெரிய பேரதிர்ச்சி-மதுரை விமான நிலையத்தில் நடிகர் வடிவேலு பேட்டி.
விமான மூலம் சென்னை செல்வதற்காக நடிகர் வடிவேலு மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். இதனைத் தொடர்ந்து மாரிமுத்து இறப்பு குறித்து செய்தியாளரிடம் பகிர்ந்து கொண்டார், அப்போது அவர் கூறுகையில், நடிகர் மாரிமுத்து எல்லாரும் விட்டும் சென்று விடுவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை, நேத்து தான் எனது தம்பியின் 13வது நாள் காரியம் என் தம்பியின் மறைவிற்காக எங்கள் குடும்பத்தின் அனைவரும் வீட்டில் சாமி கும்பிட்டுக் கொண்டிருந்தோம், அப்போதுதான் மாரிமுத்து இறந்த செய்தி கேள்விப்பட்டேன், நான் கூட நாடகத்தின் இறுதி கட்சியில் ஏதும் சாவது போல் நடித்து இருப்பார் என்று இன்று முதலில் நான் நம்பவில்லை கடைசியில் பார்த்தால் குரல் பின்னணி கொடுக்கும் போது மாரடைப்பால் இறந்து இருக்கிறார் என்று கேள்விப்பட்டவுடன் மிகவும் கஷ்டமாகிவிட்டது.
இப்படி எல்லாம் நடக்கிறது என்று ஒன்றும் புரியவில்லை, என் கூட ராஜ்கிரன் அலுவலகத்தில் இருந்து ராஜ்கிரனோடு நானும் அவரும் நெருங்கிய பழகிய ஆள் மாரிமுத்து, அவருடைய படம் தான் கண்ணும் கண்ணும் அந்தப் படத்தில் தான் அடித்து கேட்டாலும் சொல்லாதீர்கள் என்ற வசனம் வரும் அந்த நகைச்சுவையை அவர் தான் உருவாக்கினார், அதே படத்தில் கிணற்றைக் காணோம் என்ற நகைச்சுவையும் அவர்தான் உருவாக்கினார், மிகப்பெரிய சிந்தனையாளர் மனது விட்டு சிரிப்பார்.
தற்போது கூட மனைவி மற்றும் பிள்ளைகளோடு தனியார் தொலைக்காட்சிக்கு சிரித்து பேட்டி கொடுத்திருந்தார், நான் அப்போது கூட பார்த்து ரசித்துக் கொண்டிருந்தேன், இவர் இறந்தது பெரிய உலகத்திற்கு பெரிய பேரதிர்ச்சியாக அமைந்திருக்கிறது. அவருடைய மறைவுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
மாரிமுத்துவின் குடும்பத்தாருக்கு இந்த நேரத்தில் மிகவும் தைரியமாக இருக்க வேண்டும் உங்களுக்கு ஆறுதல் சொல்ல எங்கள் யாராலும் முடியாது. அந்த மன தைரியம் வருவதற்கு நான் ஆண்டவரிடம் வேண்டிக் கொள்கிறேன்.
*நடிகர் விஜய் அரசியல் வருவது குறித்த கேள்விக்கு*
வரலாம், திறந்த கதவு தானே உள்ளது, எல்லோருமே வரலாம்.. நீங்களும் வரலாம் என்று தெரிவித்தார்.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பரமக்குடி இமானுவேல் சேகரன் நினைவேந்தல்: செப்.11ல் போக்குவரத்து மாற்றம் – எஸ்பி உத்தரவு..
இராமநாதபுரம், செப்.9- இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகரில் 11.9.2023 அன்று இமானுவேல் சேகரன் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் பொருட்டும் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும் அஞ்சலி செலுத்த வருவோரின் பாதுகாப்பு, நலன் கருதி அஞ்சலி செலுத்த வருபவர்கள் மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தல்களை கடைபிடித்து காவல்துறைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெ.தங்கதுரை கேட்டுக்கொண்டுள்ளார்.
ராமநாதபுரம் மற்றும் பிற மாவட்டங்களிலிருந்து அஞ்சலி செலுத்த வருவோர் சொந்த வாகனங்களில் மட்டுமே வர அனுமதிக்கப்படுகிறது. வாடகை வாகனங்கள், திறந்த வெளி வாகனங்கள், இரு சக்கர வாகனங்கள், டிராக்டர், சரக்கு வாகனம், சைக்கிள் போன்ற வாகனங்களில் வர அனுமதி இல்லை,
மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற்று அஞ்சலி செலுத்த வரும் தலைவர்கள் அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் மட்டுமே வந்து செல்ல வேண்டும். பிற மாவட்டங்களிலிருந்து சொந்த வாகனங்களில் வருவோர் அந்தந்த மாவட்டங்களில் உரிய அனுமதி பெற்று வர வேண்டும்.சொந்த வாகனங்களில் செல்வோர் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே நினைவிடம் வந்து செல்ல வேண்டும். வாகனங்களில் ஒலிபெருக்கி பயன்படுத்தக்கூடாது. வாகனங்களின் மேற்கூரையில் கண்டிப்பாக பயணம் செய்யக்கூடாது. திறந்த நிலையில் உள்ள வாகனங்களில் பயணம் செய்யக்கூடாது. வரும் வழித்தடங்களில் பட்டாசு வெடிப்பதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். காவல்துறையினரால் வரையறுக்கப்பட்ட அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே சென்றுவரவேண்டும். எக்காரணம் கொண்டும் தடைசெய்யப்பட்ட வழித்தடங்களில் செல்லக்கூடாது. வாகனங்களில் வரும்போது கோஷம் எழுப்பாமலும், பிரச்னைகளை தூண்டும்
வகையில் வாசகங்கள் எழுதப்பட்ட பேனர் பயன்படுத்தக்கூடாது. வாகனங்களில் வரும்பொழுது வரும் வழியில் போக்குவரத்து இடையூறு செய்யும் வகையில் வாகனங்களை கண்ட இடங்களில் நிறுத்தக்கூடாது.ஒலிபெருக்கி வைத்தல், வெடி போடுதல், சமுதாய கொடி ஏற்றுதல், கலை நிகழ்ச்சிகள் நடத்துதல், விளையாட்டு போட்டிகள் நடத்துதல், ஜோதி ஓட்டம், முளைப்பாரி எடுத்தல், பால்குடம் எடுத்தல், அலங்கார ஊர்தி அணிவகுப்பு, மாட்டு வண்டியில் வருதல் அனுமதி இல்லை. உயர் நீதிமன்ற உத்தரவுப்படி ப்ளக்ஸ் போர்டுகள், பேனர்கள் வைப்பதை தவிர்க்க வேண்டும்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் 161 வழித்தடங்கள் தடை செய்யப்பட்ட வழித்தடங்களாக அறியப்பட்டுள்ளன. அவ்வழித்தடங்களில் அஞ்சலி செலுத்த வருவோரின் வாகனங்கள் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளன. 137 பகுதிகள் பதற்றம் நிறைந்த பகுதிகளாவும் அறியப்பட்டுள்ளன. மாவட்டம் முழுவதும் 42 காவல் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு, அனைத்திலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டள்ளன. பரமக்குடி நகரில் பாதுகாப்பு பணியை கண்காணிக்கவும், விதிகளை மீறுவோர்மீது நடவடிக்கை எடுக்கும் பொருட்டும் 115 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பரமக்குடி நகர் முழுவதும் ஆளில்லா விமானம் மூலம் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.
இவ்வாண்டு பாதுகாப்பு பணிக்கு என திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு, 22 செக்டார்களாகப் பிரிக்கப்பட்டு 25 காவல் கண்காணிப்பாளர்கள், 31 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், 71 காவல் துணை கண்காணிப்பாளர்கள், 124 காவல் ஆய்வாளர்கள், 372 சார்பு ஆய்வாளர்கள், 3 844 காவல் ஆளிநர்கள், தமிழ்நாடு சிறப்புக் காவல் படையைச் சேர்ந்த 720 காவலர்கள், 340 போக்குவரத்துக் காவலர்கள், இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 38 காவல் ஆய்வாளர்கள், 248 சார்பு ஆய்வாளர்கள், 972 தாலுகா காவல் ஆளிநர்கள் மற்றும் 291 இராமநாதபுரம் ஆயுதப்படை காவல் ஆளிநர்கள் உட்பட 6,526 காவல் அதிகாரிகள், ஆளிநர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். 35 வழித்தடங்களில் 4 சக்கர வாகனங்களிலும், 57 வழித்தடங்களில் இரு சக்கர வாகனங்களிலும் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபடஉள்ளனர்.
மாவட்டத்தின் முக்கிய பகுதிகளில் சார்ஆட்சியர், கோட்டாட்சியர் பதவியில் 5 நிர்வாகத்துறை நடுவர்கள், வட்டாட்சியர், துணை வட்டாட்சியர் பதவியில் 56 நிர்வாகத்துறை நடுவர்கள், வருவாய்த்துறை சார்பில் நியமிக்கப்பட்டுள்னர். மாவட்டத்தில் இருந்து எந்த ஒரு அரசு, தனியார் பேருந்துகள் பரமக்குடி நகர் பகுதிக்குள் நுழைய அனுமதியில்லை. ராமநாதபுரத்தில் இருந்து மதுரை செல்லும் அரசு, தனியார் பயணிகள் பேருந்துகளை ராமநாதபுரம், தேவிபட்டினம், ஆர்.எஎஸ்.மங்கலம், திருவாடானை, சருகனி, காளையார்கோவில், சிவகங்கை, பூவந்தி வழியாக மாற்றுப்பாதையில் மதுரைக்கு இயக்க வேண்டும் மதுரையில் இருந்து ராமேஸ்வரம் வரும் அரசு, தனியார் பேருந்துகள் இதே மார்க்கத்தில் இயக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.
பரமக்குடிக்கு அனுமதியின்றி வரும் 4 சக்கரம், இரண்டு சக்கர வாகனங்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வழக்கு பதிவு செய்து வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். உத்தரவு படி பொதுமக்கள், சமுதாய அமைப்பினர் காவல்துறைக்கு ஒத்துழைப்பு தருமாறு ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெ.தங்கதுரை கேட்டு கொண்டுள்ளார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கணக்கப்பிள்ளை வலசை ஊராட்சியில் மகளிர் கூட்டமைப்பின் தொழில் தொகுப்புகள் மூன்றாம் ஆண்டு துவக்க விழா..
தென்காசி மாவட்டம், கணக்கப்பிள்ளை வலசை ஊராட்சியில் மகளிர் கூட்டமைப்பின் தொழில் தொகுப்புகள் மூன்றாம் ஆண்டு துவக்க விழா நிகழ்ச்சி நடந்தது. தென்காசி மாவட்டம், தென்காசி ஊராட்சி ஒன்றியம், கணக்கப்பிள்ளை வலசை ஊராட்சியில் ஊராட்சி அளவிலான மகளிர் கூட்டமைப்பு கடந்த 7 ஆண்டுகளாக தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்தச் சங்கத்தில் கணக்கப்பிள்ளை வலசை ஊராட்சிக்கு உட்பட்ட கணக்கப்பிள்ளை வலசை, க.மீனாட்சிபுரம், க.தேன் பொத்தை, க.இராஜபுரம் காலனி, க.திருமலாபுரம் ஆகிய குக்கிரமங்களைச் சார்ந்த பெண்கள் உறுப்பினர்களாகவும், கணக்கப்பிள்ளை வலசை இந்திரா காலனி பகுதியைச் சார்ந்த காளியம்மாள் பேச்சிமுத்து கணக்காளராகவும் செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில், கணக்கப்பிள்ளை வலசை ஊராட்சி அளவிலான கூட்டமைப்பின் சார்பில் கணக்கப்பிள்ளை வலசை பகுதியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வரும் மதிமகள் தையல் அழகு மற்றும் பாத்திர வாடகை நிலையத்தின் மூன்றாவது ஆண்டு துவக்க விழா நேற்று நடைபெற்றது. கணக்கப்பிள்ளை வலசை ஊராட்சி அளவிலான குழு கூட்டமைப்பு மற்றும் கிராம வறுமை ஒழிப்பு சங்க கூட்ட அரங்கில் நடைபெற்ற மூன்றாவது ஆண்டு துவக்க விழா நிகழ்ச்சிக்கு தென்காசி மாவட்ட உதவி திட்ட அலுவலர் சிவக்குமார் தலைமை தாங்கினார். தென்காசி வட்டார இயக்க மேலாளர் எஸ். சுரேஷ் முன்னிலை வகித்தார். கணக்கப்பிள்ளை வலசை ஊராட்சி அளவிலான குழு கூட்டமைப்பின் கணக்காளர் காளியம்மாள் பேச்சிமுத்து அனைவரையும் வரவேற்று பேசினார்.
அதனைத் தொடர்ந்து வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் சரோஜா, மாரியம்மாள், சௌந்தர்யா, கற்பக சீதா, ஆகியோர் ஒன்றிய, மாநில அரசுகள் மூலம் மகளிர் முன்னேற்றத்திற்காக செயல்படுத்தப்படும் திட்டங்களையும், அதனை மகளிர் சுய உதவிக் குழுக்கள் பெரும் வழிமுறைகளையும் விரிவாகவும் விளக்கமாகவும் எடுத்துக் கூறினார்கள். இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பின் உறுப்பினர்கள் தமிழ்ச் செல்வி, அம்பிகா, மணி, அன்னலட்சுமி, பிரசன்னா, சாந்தி, சந்தனமாரி, மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பின் செயலாளர் சுசிலா அனைவருக்கும் நன்றி கூறினார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.