Home செய்திகள் தென்காசி மாவட்டத்தில் நாளை வட்டார கல்வி அலுவலர் தேர்வு; மாவட்ட ஆட்சியர் தகவல்..

தென்காசி மாவட்டத்தில் நாளை வட்டார கல்வி அலுவலர் தேர்வு; மாவட்ட ஆட்சியர் தகவல்..

by ஆசிரியர்

தென்காசி மாவட்டத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் 2023ஆம் ஆண்டு வட்டாரக் கல்வி அலுவலர் தேர்வு நாளை நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் துரை. இரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார். இது குறித்த செய்திக்குறிப்பில் தென்காசி மாவட்டத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் 2023ஆம் ஆண்டு வட்டாரக் கல்வி அலுவலர் தேர்வு 10.09.2023 (ஞாயிற்றுக் கிழமை) அன்று நடைபெறுகிறது. இத்தேர்வுக்காக தென்காசியில் உள்ள இ.சி.ஈ. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, மஞ்சம்மாள் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மற்றும் புனித மிக்கேல் மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆகிய மூன்று இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இம்மையங்களில் மொத்தம் 974 தேர்வர்கள் தேர்வு எழுதுகின்றனர். தேர்வெழுத வருகை தரும் தேர்வர்கள் அனைவரும் காலை 8.30 மணிக்கு தேர்வு மையங்களுக்கு கண்டிப்பாக வருகை தர வேண்டும். தேர்வர்கள் அனைவரும் தீவிர பரிசோதனைக்கு பிறகே தேர்வு மையங்களின் உள்ளே அனுமதிக்கப்படுவர். காலை 9.30 மணிக்கு பின்னர் வரும் தேர்வர்கள் எவரும் தேர்வு மையத்திற்கு கண்டிப்பாக அனுமதிக்கப்பட மாட்டார்கள். தேர்வர்கள் கைபேசி, மடிக்கணினி, கைக்கணினி மற்றும் கால்குலேட்டர்கள் போன்ற உபகரணங்களை தேர்வு மையங்களின் உள்ளே கொண்டு செல்ல அனுமதி கிடையாது. தேர்வில் முறைகேடுகளில் ஈடுபட்டால் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வுகளை தொடர்ந்து மூன்றாண்டுகளுக்கு எழுத தடை விதிக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் துரை. இரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com