ராமநாதபுரம், செப்.9- ராமநாதபுரம் மாவட்ட பள்ளிக்கல்வித் துறை சார்பில் மண்டபம் குறு வட்டார அளவிலான தடகளம், குழு போட்டிகள் ராமேஸ்வரம் அரசு மேல்நிலைப்பள்ளி சார்பில் நடந்தன.
14, 17, 19 வயது பிரிவினருக்கான தடகள போட்டிகளில் மண்டபம் முகாம் அரசு மேல்நிலைப்பள்ளி
மாணவர்கள் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் பெற்றனர். 17, 19 வயது ஆடவர் கைப்பந்து ஆட்டத்தில் மண்டபம் முகாம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் முதல் இடம் பெற்று மாவட்ட போட்டி தேர்வாகினர். 14 வயதிற்குட்பட்ட ஆடவர் கோ- கோ போட்டியில் மண்டபம் முகாம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் இரண்டாம் இடம் பிடித்தனர். 51 புள்ளிகளுடன் மண்டபம் அரசு மேல்நிலைப்பள்ளி முதலிடம் பிடித்து மாவட்ட போட்டிக்கு தகுதி பெற்ற மாணவர்கள், நன்கு பயிற்சி அளித்த மண்டபம் முகாம் அரசு மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள் ரமேஷ், ஜெயசூர்யா ஆகியோரை ராமநாதபுரம் முதன்மை கல்வி அலுவலர் ரேணுகா, மாவட்ட கல்வி அலுவலர் சுதாகர், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் வசந்தி, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் தினேஷ் குமார், மண்டபம் முகாம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மகேஸ்வரன், மண்டபம் பேரூராட்சி தலைவர் ராஜா, பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் பூபதி, பள்ளி மேலாண் குழு தலைவர் சம்பத் ராஜா, சமூக ஆர்வலர் சத்தியேந்திரன். பாராட்டினர். ராமேஸ்வரம் அரசு மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி இயக்குனர் சசிகுமார், உடற்கல்வி ஆசிரியர் லட்சுமணன், ராஜா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் நெடுஞ்செழியன், பனைக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் சந்திரசேகர், ராமேஸ்வரம் விவேகானந்தா மெட்ரிக் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் முனியசாமி, உடற்கல்வி ஆசிரியர் ஜெரோம் வில்லியம், ஜெயக்குமார், உடற்கல்விஆசிரியர் இருதயராஜ், முத்து முருகன், கோபிலட்சுமி, அருள்ஜோன், லூர்து மேரி, கஜேந்திரன், ஜான் கிறிஸ்டோபர் தாஸ், ஆரோக்கிய லிமா, ரூபியா ஆரோக்கிய சசிரேகா, செர்லி ஜெயப்பிரியா, ஜெயசூர்யா, இளங்கோவன், ஜேசுராஜா முரளீஸ்வரன், சுரேஷ் சுபா, தமிழ்செல்வி கவிதா, மகேஷ்வரி ஆனந்த பாண்டியன், மருது, நவீன் குமார் அருள் இனிகோ, முத்தமிழ்செல்வி ஆகியோர் நடுவர்களாக பணியாற்றினர்.
You must be logged in to post a comment.