18
இராமநாதபுரம், செப்.9- இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை கைராத்துல் ஜலாலியா மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவியருக்கு தமிழக அரசு பள்ளிக் கல்வி துறை சார்பில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கிழக்கு தெரு ஜமாத் தலைவர் சேகு அபுபக்கர் தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் அபுதாஹீர் வரவேற்றார்.
பள்ளி தாளாளர் முகமது சுகைபு முன்னிலை வகித்தார். கீழக்கரை நகர் மன்ற துணைத் தலைவர் ஹமீது சுல்தான் கலந்து கொண்டார். திமுக அயலக அணி மாவட்ட தலைவர் முஹமது ஹனிபா, 17 வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் பயாஸ், திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் நயிம், பள்ளி முன்னாள் தாளாளர் கரீம்,சமூக ஆர்வலர் அஜிகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
You must be logged in to post a comment.