Home செய்திகள் உலக முதலுதவி தின கருத்தரங்கு : மாணவ, மாணவியர் பங்கேற்பு..

உலக முதலுதவி தின கருத்தரங்கு : மாணவ, மாணவியர் பங்கேற்பு..

by ஆசிரியர்

இராமநாதபுரம், செப்.9- இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி, ஜூனியர் ரெட் கிராஸ் சார்பில் சித்தார்கோட்டை முஹமதியா மேல் நிலைப்பள்ளியில் உலக முதலுதவி தின கருத்தரங்கு நடந்தது. தாளாளர் ஹாஜா மொயினுதீன் தலைமை வகித்தார். 

தலைமை ஆசிரியர் ஜவஹர் அலி வரவேற்றார். உதவி தலைமை ஆசிரியர்கள் ஷாஜகான் தலைமை, சுரேஷ் குமார் முன்னிலை வகித்தனர். ஜூனியர் ரெட் கிராஸ் முதலுதவி மாநில பயிற்றுநர் அலெக்ஸ் முதலுதவி குறித்து மாணவ, மாணவியருக்கு செயல்விளக்கம் அளித்தார். ரெட் கிராஸ் சொசைட்ட மாவட்ட செயலாளர் ரமேஷ், பொருளாளர் குணசேகரன், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் ஜீவா, ராஜன், ரெட் கிராஸ் பயிற்றுநர் ஜீவா ஆகியோர் பேசினர். உடற்கல்வி ஆசிரியர் அஜீஸ் கனி ஏற்பாடு செய்தார். 350 மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com