மாநில செய்திகள்
திண்டுக்கலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு (SC,ST,BC) ஒதுக்கப்பட்டுள்ள இட ஒதுக்கீட்டை தனியார்துறைகளிலும் அமுல்படுத்த சட்டத்திருத்தம் கொண்டுவர அரசு நடவடிக்கை எடுத்திடவேண்டி இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சி சார்பாக திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் பெ.சண்முகம் கலந்துகொண்டு சிறப்புறை ஆற்றினார் ஆர்ப்பாட்டத்தில் தாழ்த்தப்பட்ட மக்களின் மாவட்ட பொறுப்பாளர்களும் தோழர்களும் கலந்துகொண்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
முகம்மது சதக் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் உலக வாக்காளர் தினம் மற்றும் சமூக அறிவியல் மாணவர் கூட்டமைப்பு தொடக்க விழா..
இராமநாதபுரம் முகம்மது சதக் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் உலக வாக்காளர் தினம் மற்றும் சமூக அறிவியல் மாணவர் கூட்டமைப்பு தொடக்க விழா பள்ளி முதல்வர் திரு.நந்தகோபால் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
முதல்வர் தனது தலைமையுரையில் 18 வயது புர்த்தியடைந்த ஒவ்வொரு குடிமகனுக்கும் வாக்குரிமை கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. தங்களது வாக்குக்களை பணத்தை பெற்றுக்கொண்டு வாக்களிப்பது நம் தேசத்திற்கு செய்யும் துரோகம் ஆகும் என தெரிவித்தார். மாணவர் வாக்காளர் தின சிறப்புகள் பற்றி கலைநிகழ்ச்சி மூலம் வெளிப்படுத்தி காட்டினர். பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தின் தேர்வுகளில் சமூக அறிவியல் பாடத்தில் இருந்து தான் அதிக மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்படுகின்றன. எனவே மாணவர்கள் தான் பள்ளியில் படிக்கும் பொழுதே திறம்பட படித்தால் பிற்காலத்திற்கு பல போட்டி தேர்வுகளுக்கு பயனள்ளதாக அமையும். மேலும் இன்றைய ஆராய்ச்சிகள் அனைத்தும் சமூக அறிவியல் பாடபிரிவுகளின் மூலமாக உருவாகிறது என தெரிவித்தார்.
மாணவர் கூட்டமைப்பு தலைவராக திரு. அகமது பர்கத் சுல்த்தான்ää துணை தலைவராக முஜிரா, செயலாளராக ரீமா துணை செயலாளராக பாத்திமா குசைன் தேர்வுசெய்யப்பட்டனர். நன்றியுரை பள்ளி மாணவி நேகா சிரிநிதா வழங்கினார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் 70 வது குடியரசு தினவிழா மற்றும் 31வது விளையாட்டு விழா..
தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் 26.01.2019 அன்று காலை 9 மணியளவில் 70 வது குடியரசு தினவிழா மற்றும் 31வது விளையாட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. இறைவணக்கத்துடன் தொடங்கிய இவ்விழாவில் கல்லூரி முதல்வர் முனைவர் எஸ்.சுமையா அவர்கள் வரவேற்புரையாற்றினார். முனைவர் ஸ்ரீமதி கேசன் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி விண்வெளி கிட்ஸ் சென்னை அவர்கள் மாணவிகளின் திறமைகளை ஊக்குவிக்கும் விதமாக சிறப்புரையாற்றினார்.
இதனை தொடர்ந்து மாணவர்களின் அணிவகுப்பு மற்றும் யோகா பலவிதமான விளையாட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. விளையாட்டு விழாவிற்கான ஆண்டறிக்கையை முனைவர் மலர்விழி உடற்கல்வி இயக்குநர் அவர்கள் வாசித்தார். பலதுறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் 2000க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.
இறுதியாக எம்.பவித்திரலெட்சுமி மூன்றாமாண்டு வணிகவியல் மாணவி நன்றியுரை வழங்க விழா இனிதே நிறைவுற்றது. ஓவர்ஆல் விருதினை மரியம் அணியினரும் தனிநபர் விருதினை எம்.பவித்திரலெட்சுமி மூன்றாமாண்டு வணிகவியல் துறை அணியினருக்கு வழங்கப்பட்டது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை சீதக்காதி அறக்கட்டளை துணைப்பொது மேலாளர் ஜனாப் சேக் தாவூத்கான் அவர்களும் உடற்கல்வி பேராசிரியை மலர்விழிää கலா அவர்களும் செய்திருந்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சிறப்பாக பணிபுரிந்த தூத்துக்குடி மாவட்ட காவல் துறையினருக்கு தமிழக அரசின் பதக்கம்..
காவல்துறையில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு தமிழகஅரசின் சார்பில் வருடா வருடம் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் மாவட்ட வாரியாக வழங்கப்படுவது வழக்கம் அதே போல இவ்வாண்டும் பதக்கம், நற்சான்றிதழ் வழங்கப்பட்டது. அதே போல் இவ்வாண்டும் தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றி வரும் காவல்துறைையினருக்கு , தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா பரிந்துரையின் பேரில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்துரி வழங்கினார்,
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சட்ட விரோத மது விற்பனையை தடுக்க துண்டு பிரசுரம் : தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு சார்பாக பொது மக்களுக்கு துண்டு பிரசுரம் விநியோகம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்: S.P. முரளி ரம்பா துவக்கி வைத்தார்..
தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி குரூஸ்பர்னாந்து சிலை முன்பு JUNIOR CHAMBER INTERNATIONAL சார்பாக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது
முகாமை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளிரம்பா துவக்கி வைத்து பாதுகாப்பு குறித்த சிறப்புரை உரையாற்றினார். பின்னர் வாகனங்களுக்கு முகப்பு விளக்குகளில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டும் சாலை பாதுகாப்பு குறித்த துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்தார்.
இந்த சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாமை ஜூனியர் சேம்பர் இன்டர்நேஷனல் தூத்துக்குடி ஹெர்குலேனியம் சார்பாக அதன் தலைவர் மகேஷ், விழாவின் அமைப்பாளர் செல்ல கணேசன் செயலாளர் மணிகண்டன் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.
மேலும் இதன் சங்க உறுப்பினர்கள், பொதுமக்கள், நகர காவல் துணை கண்காணிப்பாளர் திரு. பிரகாஷ் மத்திய பாகம்காவல் ஆய்வாளர் ரேனியஸ் ஜேசுபாதம், காவல் துறை போக்குவரத்து ஆய்வாளர் சிசில், சார்பு ஆய்வாளர் மயிலேறும் பெருமாள், மத்திய பாகம் சார்பு ஆய்வாளர் சுந்தரம், தனிப்பிரிவு சார்பு ஆய்வாளர் பேச்சிமுத்து மற்றும் காவல்துறையினர் கலந்து கொண்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ஆசிரியர்கள் பள்ளிக்கு வராததால் மாணவர்கள் திரும்பிச் சென்றனர் வீட்டுக்கு மாணவர்களிடையே பரபரப்பு ஏற்பட்டு வருகிறது இதனால் பள்ளி மாணவர்களுடைய படுத்தி மேல ஆர்வம் குறைந்து உள்ளதாகவும் பெற்றோர்கள் குற்றம் சாட்டுகின்றனர். எப்போது ஆசிரியர் திரும்பி பள்ளிக்கு சென்று குழந்தைகளுக்கு பாடம் நடத்துவார் என்பதுதான் எங்களுடைய கவலை என்கின்றனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை தெப்பக்குளம் பகுதியில் போக்குவரத்து நெரிசலை தடுக்க நடவடிக்கை ..
இன்று மதுரை மாநகர் வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல்களை குறைப்பதற்காகவும் மற்றும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காகவும் தெப்பக்குளத்தை சுற்றியுள்ள பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அனைத்து வாகனங்களையும் மதுரை மாநகர் தெப்பக்குளம் போக்குவரத்து காவல் துறையினரால் அப்புறப்படுத்தப்பட்டது. தொடர்ந்து தெப்பக்குளத்தின் நான்கு பக்கங்களிலும் வாகனங்களை நிறுத்தாமல் இருக்க 50 அறிவிப்பு பதாகைகள் வைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றது.
மேலும் இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு என்று தனித்தனியே நிறுத்தும் இடங்கள் ஒதுக்கப்பட்டு அதற்கான அறிவிப்பு பதாகைகளும் வைக்கப்பட உள்ளன. பொதுமக்கள் தங்களது வாகனங்களை அதற்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் மட்டுமே நிறுத்த வேண்டும் என மதுரை மாநகர் போக்குவரத்து காவல்துறை சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.
செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திருச்சி- சமயபுரத்தில் இயங்கி வரும் வங்கி ஒன்றில் லாக்கரை உடைத்து கொள்ளை..
திருச்சி – சமயபுரம் நம்பர் 1 டோல்கேட் பகுதியில் பஞ்சாப் நேஷனல் வங்கி செயல்பட்டு வருகிறது. சனி மற்றும் ஞாயிற்று கிழமை விடுமுறையைத் தொடர்ந்து வங்கிப் பணியாளர்கள் இன்று (28/01/2019) வங்கிக்கு வந்தனர். உள்ளே சென்றபோது சுவர் உடைக்கப்பட்டிருந்ததை கண்டு போலீசாருக்கு தகவல் கொடுத்ததின் அடிப்படையில் போலீசார் அங்கு வந்து பார்த்தபோது 5 லாக்கர்கள் உடைக்கப்பட்டிருந்தது. உடைக்கப்பட்ட லாக்கர்கள் ஐந்தும் வாடிக்கையாளர்களின் லாக்கர்கள்.
வங்கியின் முக்கிய லாக்கர் உடைக்கப்படவில்லை. லாக்கர்களை உடைக்க பயன்படுத்திய வெல்டிங் மெஷின், கேஸ் சிலிண்டர் உள்ளிட்ட உபகரணங்களை கொள்ளையர்கள் அங்கேயே விட்டுச் சென்றுவிட்டதால் போலீசார் அவைகளை கைப்பற்றினர். இதைஅறித்த வாடிக்கையாளர்கள் தங்கள் லாக்கர்கள் உடைக்கப்பட்டுள்ளதா என்ற சந்தேகத்தில் வங்கி முன்பு குவிந்தனர். இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்தி:- ஃபக்ருதீன், திண்டுக்கல்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமேஸ்வரத்தைச்சேர்ந்த ஜேம்ஸ் என்பவரது விசைப்படகில் இராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளியைச் சேர்ந்த சுப்ரமணி மகன் முருகேசன் 47, ஆறுமுகம் மகன் நவீன் 35, சேதுபதி மகன் ஆனந்த் 42, ஏரகாடு பகுதியைச் சேர்ந்த நம்புராஜன் செந்தில்பாண்டி 37 ஆகியோர் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து இன்று (28.01.2019) அதிகாலை தொழிலுக்கு சென்றனர். மீன் பிடிக்க வலை விரித்தபோது கப்பலில் ரோந்து வந்த இலங்கை கடற்படை அந்த விசைப்படகை சுற்றி வளைத்து 4 மீனவர்களையும் சிறை பிடித்தது. நான்கு மீனவர்களை விசைப்படகுடன் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தி:- முருகன், இராமநாதபுரம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கச்சத்தீவு திருவிழாவுக்கு நாட்டுப் படகுகளில் செல்ல அனுமதி கோரி அதிகாரிகளிடம் மீனவர்கள் மனு….
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ், காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா, மீன்துறை துணை இயக்குநர் காத்தவராயன் ஆகியோரிடம் பாரம்பரிய மீனவர்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சே.சின்னதம்பி கொடுத்த மனு :
கடந்த பல ஆண்டுகளுக்கு மேலாக கச்சத்தீவு திருவிழாவிற்கு பாரம்பரிய மீனவர்கள் தங்கள் குடும்பங்களுடன் நாட்டுப் படகில் சென்று வந்தனர். இலங்கை உள்நாட்டு போர் காலத்திலும் எங்களது வழிபாட்டு உரிமையை காக்க நாட்டுப் படகுகளில் சென்று வந்தோம். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக வர்த்தக ரீதியாக விசைப்படகுகளில்பயணிகளை அழைத்துச் சென்றதால், நாட்டுப்படகுகளில் கச்சத்தீவு திருவிழாவிற்கு செல்ல தடை விதித்தனர்.
இந்நிலையில் கச்சத்தீவு ஒப்பந்தத்தை நிலைநாட்டவும், பாரம்பரிய மீனவர்களின் வழிபாட்டு உரிமையை மீட்கும் பொருட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம். நாட்டுப்படகுகளில் பாரம்பரிய மீனவர்கள் தங்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் கச்சத்தீவு திருவிழாவுக்கு செல்லலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், மீன்பிடி விசைப்படகுகளில் வர்த்தகரீதியாக பயணிகளை ஏற்றிச் செல்ல நீதிமன்றம் தடை விதித்துள்ளது. நீதிமன்றம் உத்தரவுப்படி மார்ச்15, 16 தேதிகளில் நடைபெறும் கச்சத்தீவு திருவிழாவிற்கு பாரம்பரிய மீனவர்கள் கலந்துகொள்ள 20 நாட்டுப் படகுகளில் தலா 23 பேர் வீதம் 460 பேருக்கு அனுமதி, பாதுகாப்பு தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
செய்தி:- முருகன், இராமநாதபுரம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையை அடுத்த அம்மூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கடந்த ஒருவார காலமாக ஆசிரியர்கள் வகுப்பிற்கு வரததை கண்டித்து தொடக்க பள்ளி மானவ மாணவியர்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுப்படு வருகின்றனர்.
குடியாத்தம் அடுத்த சங்கராபுரம் பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பூட்டிச் என்பதால் நுழைவாயில் முன்பு அமர்ந்து மாணவர்கள் போராட்டம் அவர்களுக்கு ஆதரவாக அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர் அரசு தரப்பில் இன்று பணிக்கு அனுப்பிய ஆசிரியர்கள் பணிக்கு செல்ல முடியாமல் அவதி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ராணிப்பேட்டை திருவலம் அருகே ரூ 1.5 கோடி மதிப்பில் ரயில்வே சிமெண்ட் பாலம் அமைக்கும் பணி துவக்கம் . வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை முகுந்தராயபுரம் ரயில் நிலையம் அருகே சீக ராஜபுரம் ஹவுசிங் போர்டு அருகில் சென்னை – பெங்களூரு ரயில் பாதையில் சிறிய ரயில் பாலம் உள்ளது. தற்போது அது இரும்பு கர்டர் பாலமாக உள்ளது.
தென்னக ரயில்வே இந்த பாதையில் ரயில்வேகத்தை அதிகரிக்க உள்ளது.. அதனால் இரும்பு கர்டர் அகற்றப்பட்டு ரூ 1.5 கோடி மதிப்பில் சிமெண்ட் கர்டர் அமைக்கும் பணி நேற்று துவங்கியது. இந்த பணி முடிந்த பிறகு ரயிலின் வேகம் அதிகரிக்கும் பணி 2 மாதத்தில் முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. பணி செய்யும்போது ரயில் போக்குவரத்து 8 மணி நேரத்திற்கு நிறுத்தப்படும் என தென்னக ரயில்வே ரயில்வே அறிவித்து உள்ளது.
வேலூரிலிருந்து கே.எம்.வாரியார்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
நடப்பு கல்வி ஆண்டில் நடந்த ஹாக்கி போட்டிகளில் தமிழகத்தில் முதலிடம் பிடித்த ராமநாதபுரம் ஹாக்கி வீரர்கள் மற்றும் பயிற்றுனர்களுக்கும் மாவட்ட ஹாக்கி சங்கம் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. நடப்பு கல்வி ஆண்டில் நடந்த தேசிய, மாநில அளவிலான ஹாக்கி போட்டிகளில் 7 கோப்பைகள், தங்கம், வெள்ளி, பதக்கங்களை ராம நாதபுரம் ஹாக்கி வீரர்கள் குவித்து மாவட்டத்திற்கு பெருமை சேர்த்தனர். இவர்களை ஹாக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு தலைவர் செல்லத்துரை அப்துல்லா, இராமநாதபுரம் ராஜா குமரன் சேதுபதி ஆகியோர் பாராட்டினார்.
மேலும் ராமநாதபுரத்தில் சர்வதேச தரம் வாய்ந்த ஹாக்கி மைதானத்தை அமைத்து கொடுத்த மாவட்ட முன்னாள் ஆட்சியர் நந்தகுமார், உடற்கல்வி ஆசிரியர்கள், நன்கொடையாளர்கள், வீரர்களை பயிற்றுவித்த ஹாக்கி பயிற்றுநர் தினேஷ் குமார், ஹாக்கி வீரர்கள் அதிசய ராஜா பி.சதீஷ், ப்பி.முரளிகிருஷ்ணன், ஆர்.பாலாஜி, ஜி.அர்ஜுன், ஆர்.ஹரிஹரன், ஏ. கிரி பிரசாத், எம். ஆனந்த், எஸ்.மணிபாரதி, என். ஷாகுல் அசாருதீன், எஸ். அன்பரசன், வி.அருண்குமார், ட்டி.அபிஷேக், ஆர்.மனோஜ் குமார், எம்.அஜிஸ் ரஹ்மான், கே. சந்தோஷ் கே.சபரிநாதன், வி.முத்து அபிஷேக் ஆகியோருக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர்கள் பகீரத நாச்சியப்பன், ரமேஷ் பாபு, ரமேஷ், தாமரை செல்வன், பயிற்றுநர் தினேஷ் குமார் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
செய்தி:- முருகன், இராமநாதபுரம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சி எம்ஜிஆர் 102வது பிறந்தநாள் விழாவில் குளறுபடி ..
தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சி சார்பாக எம்ஜிஆர் 102வது பிறந்தநாள் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது நிகழ்ச்சியில் வரவேற்பு சாம்ராஜ் ஒன்றிய கழக செயலாளர், தலைமை டிகே ராஜேந்திரன் மாவட்ட கழக செயலாளர் , பழனியப்பன் கழக தலைமை நிலைய செயலாளர், சேகர் தலைமை கழக பேச்சாளர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
கடைசியாக முன்னாள் அமைச்சர் பழனியப்பன் பேசிய பிறகு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியின் மக்களுக்கு இலவசமாக கட்சி துண்டு சேலைகள் பழனியப்பன் வழங்கினார் இதில் இலவச சேலைக்கு மேடையில் ஏரி மக்கள் தள்ளுமுள்ளு நெரிசல் ஏற்பட்டது. இதனால் பழனியப்பன் சிலைகளை அப்படியே மேடையில் விட்டுவிட்டு கீழே இறங்கி கிளம்பிவிட்டார் இதில் கட்சி மக்கள் மேடையில் ஒருத்தருக்கு ஒருவருக்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டு பிறகு பாப்பாரப்பட்டி போலீசார் வந்து கூட்டத்தைக் கலைத்தனர்.
செய்தி:- சிங்காரவேலு, தர்மபுரி
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை தோப்பூரில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்…
தோப்பூரில் ரூ. 1,264 கோடியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் என மத்திய அரசு தெரிவித்தது. அதில் 750 படுக்கை வசதி, 100 எம்.பி.பி.எஸ் கல்வி இடங்கள் உள்பட பல்வேறு வசதிகள் வழங்கப்படும் என தெரிவித்திருந்தது.
இந்த மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்ள பிரதமருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அவர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மதிமுக, தந்தை பெரியார் திராவிடர் கழக அமைப்புகள், மே 17 இயக்கம் உள்ளிட்டவை கருப்புக் கொடி ஏந்தியும் சாலை மறியல் போராட்டம் நடத்தியும் எதிர்ப்பை தெரிவித்தன. வைகோ தலைமையில் கருப்பு பலூன்களும் பறக்க விடப்பட்டன.
எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டு விழா மதுரை மண்டேலா நகரில் இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடி மதுரைக்கு வந்தார். பிரதமர் மோடிக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர்.
விழாவில் மத்திய அமைச்சர்கள் ஜே பி நட்டா, பியூஸ் கோயல், பொன் ராதாகிருஷ்ணன், நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை மற்றும் தமிழக அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
செய்தி:- கனகராஜ், மதுரை
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
நெல்லை மாவட்டம் வீரசிகாமணி ஊராட்சியில் குடியரசு தினவிழா மற்றும் கிராம சபை கூட்டம்..
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றியம் வீரசிகாமணி ஊராட்சியில் குடியரசு தினத்தை முன்னிட்டு கிராமசபைக் கூட்டம் வடநத்தம்பட்டி என்ற கிராமத்தில் சிறப்பாக நடைபெற்றது.
ஊராட்சி செயலர் திரு.லட்சுமணன் கூட்டத்தை நெறிப்படுத்தினார். பற்றாளர் திரு.
V.ஆறுமுகச்சாமி கிராம நிர்வாக அலுவலர் திரு.குருசாமி மற்றும் ஊரின் முக்கிய பிரமுகர்கள் மற்றும் பிற துறை அலுவலர்கள் கலந்து சிறப்பித்தனர்.
இக்கூட்டத்தில் ஊராட்சி செயலர் லட்சுமணன் ஊராட்சியின் வரவு செலவு அறிக்கையை வாசித்தார்.
பொதுமக்களின் அடிப்படையான மிக முக்கிய விஷயங்கள், கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
1.பிளாஸ்டிக் பயன்பாட்டு தடை.
2.குடிநீர் சிக்கனமாக பயன்படுத்துதல்
3.டெங்கு தடுப்பு நடவடிக்கைகள்
4.ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம்
5.பொது சுகாதாரம்
6.தேசிய ஊரக வேலை உறுதி திட்டம்.
7.மகளிர் திட்டம்.
8.பொதுமக்களின் இதர கோரிக்கைகள்.
9.வீரசிகாமணி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்றுவரும் பல்வேறு திட்டப்பணிகள்..
இவைகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
முன்னதாக நாட்டின் 70-வது குடியரசு தின விழாவை முன்னிட்டு ஊராட்சி அலுவலகத்தில் தேசியக்கொடி ஏற்றப்பட்டு இனிப்புகள் வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர்:- அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் கடந்த வாரம் தனியார் மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட இராஜேந்திரன் மனைவி கீர்த்தனா என்ற பெண் அறுவை சிகிச்சையின் போது அதிக உதிரப்போக்கு காரணமாக உயிரிழந்தார்.
அதற்கு நீதி வேண்டி உறவினர்கள் தனியார் மருத்துவமனையை முற்றுகையிட்டு தர்னாப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
செய்தி:- ராஜா, நிலக்கோட்டை
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
உலக சாதனை புரிந்த இராமநாதபுரம் தஸ்தகீர் கல்லூரி மாணவிகள்.. வில் மெடல்ஸ் அமைப்பு அங்கீகாரம்..
சாதனைகள் புரிவது பல விதம், அதிலும் தனித்தன்மையுடன் சாதனை புரிவது மிகவும் கடினமான விசயமாகும். அவ்வரிசையில் இராமநாதபுரம் தஸ்தகீர் கல்லூரியைச் சார்ந்த மாணவிகள் த.மோனிஷா மற்றும் ரா.மித்ரா என்ற இரு மாணவிகள் இணைந்து காகிதத்தால் பல வண்ணங்களில் 3000 வகையான வடிவங்களை வடிவமைத்து சாதனை புரிந்துள்ளனர். இச்சாதனைக்காக கடந்த20/112018 முதல் 11/01/2019 வரை கடும் முயற்சியுடன் 26/012019 அன்று இச்சாதனையை நிறைவேற்றியுள்ளனர். இவர்களுடைய சாதனைக்கு அங்கீகாரம் அளிக்கும் வண்ணம் வில் மெடல்ஸ் நிறுவனம், அம்மாணவிகளுக்கு அங்கீகார பத்திரம் வழங்கினர்.
இச்சாதனையை பற்றி அம்மாணவிகள் கூறிய பொழுது, ‘இச்சாதனையை புரிய நாங்கள் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக ஆயத்த பணிகளை செய்து வந்தோம். இதற்கான முழு ஒத்துழைப்பையும், ஆதரவையும், வழி காட்டுதலையும் வில் மெடல் நிர்வாகிகளான கலைவாணி, தஹ்மிதா பானு மற்றும் அஃப்ரின் வஜிஹா ஆகியோர் சிறப்பாக செய்தனர்.
மேலும் இத்தருணத்தில் எங்களுக்கு பொருளாதாரம் மட்டுமல்லாமல் அனைத்து வகையான உதவிகளையும் செய்த பேராசிரியர் டாக்டர்.கார்த்திகேயன், வங்கி மேலாளர் கார்த்திகேயன், கீழக்கரை கிளாசிஃபைடு எஸ்.கே.வி.ஜெய்னுலாப்தீன் மற்றும் ரோட்டரி ஹால் உறுப்பினர் அனைவருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம் என சாதனை மாணவிகள் தெரிவித்தனர்.
You must be logged in to post a comment.