ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தனியார் திருமண மஹாலில் நடைபெற்ற திராவிட முன்னேற்ற கழகத்தின் முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இந்நிகழ்ச்சிக்கு உயர்கல்வித்துறை மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் தலைமை தாங்கினார் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரும் மாவட்ட கழக செயலாளர் காதர் பாட்ஷா முன்னிலை வகித்தார். கீழக்கரை நகர செயலாளர் பஷீர் அகமது வரவேற்புரையாற்றினார் அதனைத் தொடர்ந்து பேசிய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் பேரனாக அவருடன் பேசியதுண்டு பழகியதுண்டு காணொளி காட்சி மூலம் பல்வேறு நிகழ்ச்சிகளை கண்டு களித்த துண்டு ஆனால் நான் தந்தை பெரியார்.பேரறிஞர் அண்ணா அவர்களுடன். பேசியதோ பழகியதோ கிடையாது ஆனால் இங்கு வந்திருக்கும் கழகம் முன்னோடிகளோ பெரியாருடனும் பேரறிஞர் அண்ணாவுடனும் பல்வேறு நிகழ்வுகளில் பங்கு பெற்றவர்கள் வந்திருக்கிறீர்கள் அதனால் நான் உங்களை பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் என்னை பல்வேறு மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்துவதற்கும் தங்களுடைய குடும்ப உறவுகளின் பல்வேறு விழாக்களுக்கும் அழைக்கின்றனர் அவர்களிடம் எல்லாம் நான் சொல்லிக் கொள்வது ஒன்றை ஒன்று மட்டும் தான் என்னை எந்த விழாவிற்கு வேண்டுமென்றால் அழையுங்கள் நான் கட்டாயம் வருவேன் ஆனால் ஒவ்வொரு மாவட்டத்திலும் நம்முடைய கழகம் முன்னோடிகளை சந்தித்து அவர்களுக்கு பொற்கிழி வழங்க வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் ஆசை தற்சமயம் தொடர்ச்சியாக ஒவ்வொரு மாவட்டத்திலும் செயல்பட்டு பொற்கிழிகளை வழங்கி வருகிறேன் இது மட்டுமில்லாமல் திமுக சார்பில் பல்வேறு மருத்துவ உதவிகளையும் செய்து வருகிறோம் என்றார் இந்நிகழ்ச்சியில் ஆயிரத்து இரண்டு நபர்களுக்கு பொற்கிழிகள் வழங்கப்பட்டன மேலும் இதில் மாநில மாணவர் அணி தலைவர் ராஜீவ்காந்தி கீழக்கரை நகர்மன்ற தலைவர் செஹானாஸ் ஆபிதா நகர் மன்ற துணைத் தலைவர் ஹமீது சுல்தான் அயலக அணி மாவட்ட தலைவர் முஹம்மது அனிபா அயலக அணி மாவட்டத் துணை அமைப்பாளர் இப்திகார் ஹசன் மற்றும் கீழக்கரை நகர மன்ற உறுப்பினர்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
Category:
மாநில செய்திகள்
நாய் முகமூடி அணிந்து நகர்மன்ற கூட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் வார்டு கவுன்சிலர்; தென்காசியில் பரபரப்பு..
written by Abubakker Sithik
நாய் முகமூடி அணிந்து கொண்டு நகராட்சி கூட்டத்தில் பங்கேற்ற வார்டு கவுன்சிலர்; தென்காசியில் பரபரப்பு..
தென்காசியில் வெறிநாய் தொந்தரவை கட்டுப்படுத்த வலியுறுத்தி நாய் முகமூடி அணிந்தும், நாய்போன்று குரைத்து கொண்டும் நகர்மன்ற தலைவரிடம் கவுன்சிலர் மனு அளித்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. தென்காசி நகராட்சி கூட்ட அரங்கில் நகர்மன்ற தலைவர் ஆர்.சாதிர் தலைமையில் நகர்மன்ற அவசர கூட்டம் நடைபெற்றது. இதில் நகர்மன்ற துணைத்தலைவர் கே.என்.எல். சுப்பையா, நகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன் மற்றும் வார்டு கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மன்ற பொருள்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
தொடர்ந்து, தென்காசி சுற்றுவட்டார பகுதிகளான கொடிமரம், மவுண்ட் ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெறிநாய்கள் தொந்தரவு அதிகரித்து வருவதை சுட்டிக்காட்டும் வகையில், தென்காசி 20 வது வார்டு காங்கிரஸ் கவுன்சிலர் M.A.ரஃபீக் நாய் முகமூடி அணிந்து நகர் மன்ற கூட்டத்தில் பங்கேற்று நகர் மன்ற தலைவர் ஆர். சாதிரிடம் கோரிக்கை மனு அளித்தார். சிரித்த நிலையில், நகர்மன்ற தலைவர் ஆர்.சாதிர் மனுவை பெற்றுக் கொண்டார். இச்சம்பவம் தென்காசி பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கிறித்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் திருச்சபை பணியாளர்கள்இயற்கை மரணம் அடைந்தால் ரூ.20,000 உதவித்தொகை.! விளக்கம் தருகிறார் ஜெபசிங்..
by Askar
written by Askar
கிறித்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் திருச்சபை பணியாளர்கள்இயற்கை மரணம் அடைந்தால் ரூ.20,000 உதவித்தொகை.! விளக்கம் தருகிறார் ஜெபசிங்..
இது சம்பந்தமாக தமிழ்நாடு திருச்சபை பணியாளர்கள் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் நல சங்கம் (டாஸ்) மாநில செயலாளர் ஜெபசிங் விளக்கம் அளிக்கிறார்!
தமிழகத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் பணியாற்றும் உபதேசியார்கள், வேதியர்கள், சீஷப்பிள்ளைகள், பாடகர்கள், கல்லறை பணியாளர்கள், கிறிஸ்துவ அநாதை இல்லங்கள், தொழு நோயாளியர் மறுவாழ்வு இல்லங்களின் பணியாளர்கள் போன்றோர்களின் சமூக, பொருளாதார மற்றும் கல்வி மேம்பாட்டிற்காக கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் அரசால் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நல வாரியத்தில் உறுப்பினராக சேருவதற்கான விண்ணப்பப் படிவங்களை அனைத்து மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகங்கள், மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகங்கள் மூலம் பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பத்துடன் பணிச் சான்று. ஆதார் அட்டை நகல். குடும்ப உறுப்பினர்களின் ஆதார் அட்டை நகல். பாஸ்போர்ட் புகைப்படம் 2. குடும்ப அட்டை நகல். வங்கி கணக்கு புத்தகம் நகல் ஆகியவற்றை இணைத்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலன் அலுவலகத்தில் கொடுக்கப்பட வேண்டும்
மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரால் விண்ணப்ப படிவங்கள் சரிபார்க்கப்பட்டு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும்.மேலும் இவ்வாரியத்தில் பதிவு செய்யும் உறுப்பினர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் ஏனைய அமைப்பு சாரா வாரியங்கள் மூலம் வழங்கப்பட்டு வரும் நலத்திட்டங்கள் போன்றே வழங்கப்படும்.
மேற்படி இவ்வாரியத்தில் பதிவு செய்துள்ள உறுப்பினர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு கல்வி உதவித்தொகை 10ஆம் வகுப்பு முதல் ஐடிஐ, பாலிடெக்னிக் படிப்பு, தொழிற் கல்வி படிப்பு வரையும், விபத்தினால் மரணம் ஏற்பட்டால் உதவித்தொகையாக ரூ.1,00,000 வழங்கப்படும். விபத்தினால் ஊனம் ஏற்பட்டால் ஊனத்தின் தன்மைக்கேற்ப உதவித்தொகையாக ரூ.10,000 முதல் ரூ.1,00,000 வரையும், இயற்கை மரணம் உதவித்தொகையாக ரூ.20,000, ஈமச்சடங்கு உதவித்தொகையாக ரூ.5,000 வழங்கப்படும் .
மேலும் திருமண உதவித்தொகையாக ஆண்களுக்கு ரூ.3,000, பெண்களுக்கு ரூ.5,000 வழங்கப்படும். மகப்பேறு உதவித்தொகையாக ரூ.6,000, கருச்சிதைவு அல்லது கருக்கலைப்பு உதவித்தொகையாக ரூ.3,000, கண் கண்ணாடி உதவித்தொகையாக ரூ.500, முதியோர் ஓய்வூதியமாக (மாதந்தோறும்) ரூ.1,000 நலத்திட்ட உதவியாக வழங்கப்படும் என டாஸ் மாநில செயலாளர் சகோ.ஜெபசிங் தெரிவித்துள்ளார். மேலும் விபரங்கள் தேவைப்படின் கீழ்கண்ட தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்பு எண்.☎️ 8144069997
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
விருதுநகர் பட்டாசு ஆலையில் பயங்கரம்; பட்டாசு வெடி விபத்து-10 பேர் பேர் உயிரிழப்பு..
by Askar
written by Askar
விருதுநகர் பட்டாசு ஆலையில் பயங்கரம்; பட்டாசு வெடி விபத்து-10 பேர் பேர் உயிரிழப்பு..
விருதுநகர் மாவட்டம் ஆலங்குளம் அருகே பட்டாசு ஆலையில் இன்று (பிப்.17) பிற்பகல் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பெண்கள் உள்பட 10 பேர் உயிரிழந்தனர். 8 பேர் காயமடைந்தனர்.
சிவகாசி கார்னேசன் பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ். இவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை ஒன்று ஆலங்குளம் அருகே உள்ள ராமுத்தேவன்பட்டியில் உள்ளது. நாக்பூரில் உள்ள மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறையின் அனுமதி பெற்று இயங்கும் இந்த பட்டாசு ஆலையில் 74 அறைகளில் பேன்ஸி ரக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இங்கு சுமார் 150-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், இன்று காலை வழக்கம்போல் பட்டாசு தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். பிற்பகலில் ஓர் அறையில் பேன்ஸி ரக பட்டாசுகளுக்கு மருந்து வைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது, உராய்வு ஏற்பட்டு திடீரென வெடி விபத்து ஏற்பட்டது.
இதில், அந்த அறை முழுவதும் இடிந்து விழுந்தது. அதோடு, தீப்பொறி மற்ற அறைகளுக்கும் வெடித்துச் சிதறியதால் அடுத்தடுத்த இருந்த 4 அறைகளிலும் வெடி விபத்து ஏற்பட்டு கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.
இந்த விபத்தில், அந்த 4 கட்டிடங்களிலும் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டிருந்த அப்பகுதியைச் சேர்ந்த ரமேஷ், கருப்பசாமி, அபயாஜ், முத்து, அம்பிகா, முருகஜோதி, சாந்தா உள்பட 10 பேர் உயிரிழந்தனர்.
தகவலறிந்த சாத்தூர், சிவகாசி, வெம்பக்கோட்டை தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மீட்பு பணிகளில் ஈடுட்டனர். ஜேசிபி இயந்திரம் மூலம் இடிபாடுகளில் சிக்கியிருந்த உடல்கள் மீட்கப்பட்டன. மேலும், 8 பேர் பலத்த தீக்காயம் அடைந்தனர்.
காயமடைந்த அனைவரும் மீட்கப்பட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து ஆலங்குளம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இரட்டைகுளம் உபரிநீர் கால்வாய் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்..
written by Abubakker Sithik
இரட்டை குளம் கால்வாய் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்..
தென்காசி மாவட்டம் இரட்டை குளம் உபரிநீர் கால்வாய் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற கோரி சுரண்டையில் தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க மாநிலத் துணைத் தலைவர் கண்ணையா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான இரட்டை குளம் உபரி நீர் கால்வாய் திட்டத்தை நிறைவேற்றினால் சுரண்டையின் கீழ் பகுதியில் இருந்து ஊத்துமலை வரை உள்ள முப்பதுக்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் பயன்பெறுவார்கள். தேர்தல் அறிக்கையில் கூறியுள்ள படி வருகிற நிதியாண்டிலேயே நிதி ஒதுக்கி இரட்டை குளம் உபரிநீர் கால்வாய் திட்டத்தை தொடங்க வேண்டும் எனவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் காட்டு பன்றிகள் விவசாய விளை பொருட்களை நாசப்படுத்தி வருகிறது. எனவே காட்டு பன்றிகளை வனவிலங்கு பாதுகாப்பு பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் கோஷமிட்டனர்.
மேலும் இரட்டைகுளம் உபரிநீர் கால்வாய் திட்டத்திற்க்கு தமிழக அரசு நிதி ஒதுக்காத பட்சத்தில் தொடர் போராட்டம் மற்றும் தேர்தல் புறக்கணிப்பு போன்ற நடவடிக்கையில் விவசாயிகள் சங்கம் ஈடுபடும் என தெரிவித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மதிமுக மாவட்ட செயலாளர் ராம உதயசூரியன், மாவட்ட பொருளாளர் வழக்கறிஞர் சுப்பையா, ஒன்றிய செயலாளர் மருதசாமி பாண்டியன், ஊராட்சி தலைவர் ஸ்நாபக அந்தோணி என்ற பதிவர், குத்தாலிங்கம், அந்தோணி சவரிமுத்து, மைக்கேல் ராஜ், செல்வராஜ், அருணாசலம், திருமலை ஆண்டி உள்ளிட்ட ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
மேலும் இது குறித்து தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் கூறுகையில், கடந்த பத்தாண்டு கால அதிமுக ஆட்சியில் இரட்டை குளம் கால்வாய் திட்டம் தொடர்பாக எந்தவித நடவடிக்கையும் அதிமுக அரசு எடுக்கவில்லை. ஆனால் தற்போதைய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் நிதி நெருக்கடியிலும் தேர்தல் அறிக்கையில் கூறியுள்ள படி மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட 80 சதவீத கோரிக்கைகளை நிறைவேற்றி உள்ளார். அதிமுக ஆட்சியில் கிடப்பில் போடப்பட்ட ஜம்பு நதி மேல்மட்ட கால்வாய் திட்டப் பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. சட்டமன்ற தொகுதிகளில் முன்னுரிமை அடிப்படையில் செயல்படுத்த வேண்டிய பத்து முக்கிய கோரிக்கைகளில் ஒன்றாக இரட்டை குளம் கால்வாய் திட்டம் என கோரிக்கை வைத்துள்ளேன்.
மேலும் இரட்டை குளம் கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற தனியாகவும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பொதுப் பணித்துறை மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனிடம் கோரிக்கை மனு வழங்கினேன். அதைத் தொடர்ந்து திட்டத்தை நிறைவேற்ற ரூபாய் 64 கோடி திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டது. வருகிற நிதியாண்டில் தமிழக முதல்வர் கண்டிப்பாக இரட்டை குளம் உபரி நீர் கால்வாய் திட்டத்திற்கு நிதி ஒதுக்குவார் என நம்பிக்கை தெரிவித்தார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதில்மேல் பூனை போல, தேமுதிகவின் தற்போதைய நிலை!- குழப்பத்தில் பிரேமலதா விஜயகாந்த்..
by Askar
written by Askar
பாஜக உடன் கூட்டணி வேண்டாம் என திடீரென தேமுதிக மாவட்ட செயலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும் இதனால் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அதிர்ச்சி அடைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக அல்லது பாஜகவுடன் தேமுதிக கூட்டணி அமைக்கும் என்றும் இரு தரப்பிடமும் ரகசிய பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
14 தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா தொகுதி கொடுக்கும் அணியுடன் மட்டுமே கூட்டணி என்று பிரேமலதா அறிவித்திருந்தாலும் மூன்று தொகுதிகள் கொடுக்க மட்டுமே பாஜக மற்றும் அதிமுக கூறியுள்ளதால் எந்த கூட்டணியில் சேர்வது என்ற குழப்பத்தில் பிரேமலதா இருப்பதாக தெரிகிறது.
பாஜக கூட்டணியில் இணைந்தால், தேர்தலில் வெற்றி பெற்றாலும் பெறாவிட்டாலும் ராஜ்யசபா தொகுதி எம்பி மூலம் மந்திரி பதவி கிடைக்கும் வாய்ப்பு இருப்பதால் பிரேமலதாவிற்கு பாஜக கூட்டணியில் சேரவே விருப்பம் அதிகம் என்று கூறப்படுகிறது.
இருப்பினும் கட்சியில் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் பிரேமலதா குழப்பத்தில் இருப்பதாக கூறப்படுகிறது..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரையில் காயம்பட்ட கண்ணாடிவிரியன் பாம்புக்கு அறுவை சிகிச்சை; நெகிழ்ச்சியை ஏற்படுத்திய சமூக ஆர்வலர்கள்..
by Askar
written by Askar
மதுரையில் காயம்பட்ட கண்ணாடிவிரியன் பாம்புக்கு அறுவை சிகிச்சை; நெகிழ்ச்சியை ஏற்படுத்திய சமூக ஆர்வலர்கள்..
மதுரை மாநகர் பகுதிக்குட்பட்ட திருநகர் அருகில் ஜோசப் நகர் பகுதியில் உள்ள வீட்டில் வேலியில் சிக்கி வயிற்று பகுதியில் காயமடைந்த பாம்பை வீட்டின் உரிமையாளர் வாசுதேவன் என்பவர் மீட்டு
பாம்புபிடி வீரர் ஆர்வலர் சகா என்பவரின் உதவியுடன் வேலியில் சிக்கிய 4 அடி நீளம் கொண்ட கண்ணாடி விரியன் பாம்பின் வயிற்றுப் பகுதியில் ஏற்பட்ட காயத்தை மதுரை பழங்காநத்தம் கால்நடை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்து (12 தையல் போட்டு) பின்னர் பத்திரமாக அடர்வணப் பகுதியில் கொண்டு சென்று விடப்பட்டது தொடர்ந்து காயமுற்ற பாம்பை மீட்டு மருத்துவ சிகிச்சை அளித்து காப்பாற்றப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சோழவந்தான் பகுதிகளில், MP ஆ. ராசாவை கண்டித்து வெள்ளாளர் வேளாளர் உறவின் முறைசங்கம் சார்பில் சுவரொட்டிகள்..
by Askar
written by Askar
சோழவந்தான் பகுதிகளில், MP ஆ. ராசாவை கண்டித்து வெள்ளாளர் வேளாளர் உறவின் முறைசங்கம் சார்பில் சுவரொட்டிகள்..
முன்னாள் மத்திய அமைச்சரும் நீலகிரி தொகுதி திமுக எம் பியு மான.ஆராசா சில தினங்களுக்கு முன்பு முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் மற்றும் சுதந்திரப் போராட்ட தியாகி செக்கிழுத்த செம்மல் வ உ சிதம்பரம் பிள்ளை ஆகியோர்களை பற்றி அவதூறாக பேசியதாகவும் இதற்காக அவர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் திமுக தலைமை ஆ ராசாவை கண்டிக்க வேண்டும் எனவும் தமிழகம் முழுவதும் அதிமுக மற்றும் வெள்ளாளர் வேளாளர் உறவின்முறை சங்கத்தினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர் இந்த நிலையில் சோழவந்தான் அனைத்து வெள்ளாளர் வேளாளர் உறவுமுறை சங்கம் சார்பில் சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ ராசாவை கண்டித்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது
இதில் கண்டிக்கிறோம் கண்டிக்கிறோம் வன்மையாக கண்டிக்கிறோம் தேசியத் தலைவர் இந்திய சுதந்திரத்திற்காக தனது சொத்து அனைத்தையும் அர்ப்பணித்த தமிழர் தந்தை ஐயா வ.உ சிதம்பரம் பிள்ளை அவர்களை வரலாற்றுப் பிழை பேசிய தேசத் துரோகி ஆ ராசாவை வன்மையாக எச்சரிக்கிறோம் போராடத் தூண்டாதே இவன் அனைத்து வெள்ளாளர் வேளாளர் உறவின்முறை சங்கம் சோழவந்தான் என்று
என்ற போஸ்டர் சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுப்பகுதி கிராமப் பகுதிகள் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளது.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சுய ஒழுக்கம் குறித்து விழிப்புணர்வு வழங்கிய வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை..
by Askar
written by Askar
சுய ஒழுக்கம் குறித்து விழிப்புணர்வு வழங்கிய வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை..
மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் நிறுவனர் வழிகாட்டி மணிகண்டன் சேதுபதி மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு சுய ஒழுக்கம் குறித்து விழிப்புணர்வு வழங்கி பேசினார்.
அதில், மாணவர்கள் சுய ஒழுக்கத்தை கடைபிடிப்பது தான் பொதுநலனுக்கும் இயற்கை சுற்றுச்சூழல் நலனுக்கும் செய்யக்கூடிய சிறந்த சேவையாகும். கல்வியிலும் ஒழுக்கத்திலும் சிறந்தவர்கள் சாதனையாளர்கள் ஆவீர்கள் என்றார்.
மேலும் அப்துல் ரகுமான் மற்றும் வினித் ஆகிய ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் சாலையில் கிடைத்த பணத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த நற்செயலை வாழ்த்தி அவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் நாராயணன், சமூக ஆர்வலர் இல.அமுதன், ஆசிரியர்கள், மாணவர்கள் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தமிழ்நாட்டில் 3 ஆண்டுகளில் 60,567 பேருக்கு அரசு வேலைவாய்ப்பா?-வெள்ளை அறிக்கை வெளியிட பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்..
by Askar
written by Askar
தமிழ்நாட்டில் 3 ஆண்டுகளில் 60,567 பேருக்கு அரசு வேலைவாய்ப்பா?-வெள்ளை அறிக்கை வெளியிட பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்..
தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இதுவரை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் உள்ளிட்ட பல்வேறு அரசுத் தேர்வாணைய முகமைகள் மூலமாக 27,858 பேருக்கு வேலை வழங்கப் பட்டிருப்பதாகவும், மொத்தமாக 60 ஆயிரத்து 567 இளைஞர்களுக்கு அரசுப் பணி வழங்கப்பட்டுள்ளது என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். சென்னையில் நேற்று நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பேசும் போது முதலமைச்சர் தெரிவித்த இந்த எண்ணிக்கை மிகவும் குறைவு தான் என்றாலும் கூட, உண்மையாகவே இவ்வளவு பேருக்கு அரசு வேலை வழங்கப்பட்டிருந்தால் மகிழ்ச்சி தான். ஆனால், முதலமைச்சர் வெளியிட்ட புள்ளி விவரங்களில் உள்ள முரண்பாடுகள் தான் ஐயத்தை ஏற்படுத்துகின்றன.
சென்னையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ஆம் நாள் டி.என்.பி.எஸ்.சி நான்காம் தொகுதி பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிப் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ’’திமுகவின் இரண்டாண்டு ஆட்சியில் 12 ஆயிரத்து 576 பேருக்கு அரசுப் பணி வழங்கப் பட்டிருக்கிறது. தற்போது 10 ஆயிரத்து 205 நபர்களுக்கு அரசுப் பணி வழங்கப்பட்டுள்ளது’’ என்று குறிப்பிட்டிருந்தார். அதன்பிறகு அரசுப் பணிக்கு இன்னும் எவரும் தேர்ந்தெடுக்கப்படவில்லை. டி.என்.பி.எஸ்.சி தொகுதி 2 பணிகளுக்கான எழுத்துத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டாலும் பிற நடைமுறைகள் இன்னும் நிறைவடைய வில்லை. பிற பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 1598 பேருக்கு இப்போது தான் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. அப்படியானால், எங்கிருந்து 60 ஆயிரம் பேருக்கு அரசு வேலைகள் வழங்கப்பட்டன? என்பது குறித்து தமிழக அரசு விளக்க வேண்டும்.
முதலமைச்சர் அவர்கள் குறிப்பிட்ட புள்ளிவிவரங்களின் அடிப்படையில் பார்த்தால் கடந்த 3 ஆண்டுகளில் 24,879 பேருக்கு மட்டும் தான் அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது. இது எந்த வகையிலும் போதுமானது அல்ல. தமிழ்நாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்றுள்ளனர். ஆனால், ஓய்வு பெற்றவர்களின் எண்ணிக்கையில் பாதிக்கும் குறைவாக 24,879 பேருக்கு மட்டுமே அரசு வேலை வழங்கப்பட்டிருக்கிறது. ஒப்பீட்டளவில் தமிழக அரசு பொறுப்பேற்ற போது இருந்ததை விட இப்போது அரசு பணியாளர்களின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது.
திமுக ஆட்சிக்கு வந்தால் அரசுத் துறைகளில் காலியாக கிடக்கும் மூன்றரை லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும்; 2 லட்சம் புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டு நிரப்பப்படும் என்று திமுகவின் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. அதன்படி ஐந்தாண்டுகளில் ஐந்தரை லட்சம் பேருக்கு வேலை, ஐந்தாண்டுகளில் ஏற்படும் காலியிடங்களை நிரப்ப ஒரு லட்சம் பேருக்கு வேலை என மொத்தம் ஆறரை லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்கப்பட வேண்டும். திமுக ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில் இதுவரை மூன்றரை லட்சம் பேருக்காவது அரசு வேலை வழங்கப் பட்டிருக்க வேண்டும். ஆனால், அதில் 10% அளவுக்குக் கூட அரசு வேலை வழங்கப்படவில்லை.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அரசுத்துறைகளில் புதிதாக ஏற்பட்ட காலிப்பணியிடங்கள் கூட இன்னும் நிரப்பப்படவில்லை. எந்தத் துறையிலும் புதிய பணியிடங்களும் உருவாக்கப்படவில்லை. தமிழ்நாட்டில் அரசு வேலைவாய்ப்பகங்களில் பதிவு செய்து 70 லட்சம் பேர், பதிவு செய்யாமல் 60 லட்சம் பேர் என மொத்தம் 1.30 கோடி பேர் அரசு வேலைகளுக்காக காத்திருக்கும் நிலையில், அரசு வேலைகளை வழங்குவதி அரசு காட்டும் அலட்சியம் கண்டிக்கத்தக்கது.
தமிழ்நாட்டில் இன்னும் இரு ஆண்டுகள் மட்டுமே திமுக ஆட்சியின் பதவிக்காலம் இருக்கும் நிலையில், அக்காலத்தில் 50 ஆயிரம் பேருக்கு அரசு வேலைகள் வழங்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்திருக்கிறார். இன்னும் 50 ஆயிரம் பேருக்கு அரசு வேலைகள் வழங்கப்படுவதாக வைத்துக் கொண்டால் கூட, ஒட்டுமொத்தமாக அரசு வேலை பெற்றவர்களின் எண்ணிக்கை 80 ஆயிரத்திற்கும் குறைவாகவே இருக்கும். இதற்கும், திமுக அளித்த வாக்குறுதிக்கும் இடையிலான வித்தியாசம் மலைக்கும், மடுவுக்கும் இடையிலான வேறுபாடு ஆகும். இது தமிழ்நாட்டில் படித்து விட்டு, அரசு வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்களை நம்ப வைத்து ஏமாற்றுவதற்கு ஒப்பானது ஆகும்.
தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்ததற்கு பிந்தைய 3 ஆண்டுகளில் இதுவரை எந்தெந்த துறைகளில், எந்தெந்த நிலைகளில் எத்தனை பேருக்கு நிரந்தர வேலை வழங்கப்பட்டுள்ளது என்பது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். மூன்றரை லட்சம் காலியிடங்கள் நிரப்பப்படும்; 2 லட்சம் புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டு நிரப்பப்படும்; தற்காலிக ஊழியர்களுக்கு பணி நிலைப்பு வழங்கப்படும் என்பன உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போகிறது? என்பது குறித்தும் தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சிங்கப்பூர், மற்றும் டெல்லியில் சர்வ தேச சாதனை படைத்த மதுரை மேலூர் பள்ளி மாணவ,மாணவியரை, பாராட்டி வாழ்த்து தெரிவித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
by Askar
written by Askar
சிங்கப்பூர், மற்றும் டெல்லியில் சர்வ தேச சாதனை படைத்த மதுரை மேலூர் பள்ளி மாணவ,மாணவியரை, பாராட்டி வாழ்த்து தெரிவித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
நாளை சிவகங்கை இராமநாதபுரம் மாவட்ட நிகழ்வில் பங்கு பெற சென்னையிலிருந்து விமானம் மூலம் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மதுரை விமான நிலைம் வந்தடைந்தார்.
மதுரை விமான நிலையத்தில் உயர் கல்வித் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் மற்றும் தளபதி எம்எல்ஏ தமிழரசி எம்எல்ஏ முன்னாள் எம்எல்ஏ முத்துராமலிங்கம் தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் மற்றும் நிர்வாகிகள் வரவேற்றனர்.
.அப்போது சிங்கப்பூரில் நடைபெற்ற சர்வதேச ஒற்றை சிலம்பம் மற்றும் இரட்டை சிலம்பம் போட்டிகளில்,
மதுரை மேலூர் மௌன்ட் லிட்ரா ஜீ சீனியார் பள்ளி மாணவி நித்திகா (வயது 10) 5ம் வகுப்பு படித்து வருகிறார்.சிங்கப்பூரில் நடைபெற்ற சர்வதேச சிலம்ப போட்டியில் ஒற்றை சிலம்பம் மற்றும் இரட்டை சிலம்பம் போட்டிகளில் உலக சாதனை படைத்து தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை வென்றார்.
இதே பள்ளியை சேர்ந்த 5ம் வகுப்பு பயிலும் மாணவர் இன்பென்ட் ஆல்வின் சுதன் (வயது 10) கிக் பாக் லிங் பயின்று டெல்லியில் நடைபெற்ற சர்வதேச சிக் பாக்ஸிங் போட்டியில் பங்கு பெற்று வெள்ளிப்பதக்கம் வென்றார்.
இரண்டு மாணவர் களையும் மதுரை விமான நிலையத்தில் சந்தித்த தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதிஸ்டாலின் சிறுமி நித்திகா மற்றும் இன்பென்ட் ஆல்வின் சுதன் ஆகிய இருவரையும் பாராட்டி மென்மேலும் சாதனை படைக்க வாழ்துக்களை தெரிவித்தார். மேலும் அவர்களுக்கு தேவையான அரசின் உதவிகளை உதவிட உறுதியளித்தார்.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
வ.உ.சிதம்பரனாரை பற்றி அவதூறு பேசியதாக ஆ.ராசாவை கண்டித்து விரைவில் கண்டன ஆர்ப்பாட்டம்..
by Askar
written by Askar
வ.உ.சிதம்பரனாரை பற்றி அவதூறு பேசியதாக ஆ.ராசாவை கண்டித்து விரைவில் கண்டன ஆர்ப்பாட்டம்..
கடந்த சில தினங்களுக்கு முன்பு பாராளுமன்ற உறுப்பினரான ஆ.ராசா கூட்டம் ஒன்றிய செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார் குறித்து கருத்து வெளியிட்டார். இது வெள்ளாளர் சமுதாயத்திடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆ.ராசா தேச விடுதலைக்காக பாடுபட்ட தியாகி சிதம்பரனார் பற்றி பேசியது தவறு என்று தெரிவித்து ஆங்காங்கே கூட்டங்கள் நடைபெற்றது. பழனி அடிவாரம் பாளையம் தனியார் மண்டபத்தில் வெள்ளிக்கிழமை பழனி நகர, ஒன்றிய வேளாளர், வெள்ளாளர் அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு என்ற பெயரில் 13 சங்கங்களின் நிர்வாகிகள் ஒன்றிணைந்து ஆலோசனை கூட்டம் நடத்தினர். கூட்டத்தில் வ.உ.சிதம்பரனார் குறித்து அவதூறு பேசிய ராசாவை கண்டித்து விரைவில் பேருந்து நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பழனி வ.உ.சி. பேருந்து நிலையம் அருகே சிதம்பரனாரின் முழு உருவசிலை அமைக்க வேண்டும் என்றும் கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் சரவணப்பொய்கை கந்தவிலாஸ் பாஸ்கரன், ஆர்விஎஸ் மஹால் ஆனந்தன், அரிசி ஆலை சுப்பிரமணியன், ஆடலூர் ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தென்காசி மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் முகாம்; நலத்திட்ட உதவிகள் வழங்கல்..
written by Abubakker Sithik
தென்காசி மாவட்டத்தில் இ.சி.ஈ.அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் முகாம் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் 1886 பயனாளிகளுக்கு ரூ. 3 கோடியே 77 ஆயிரத்து 475 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் வழங்கினார்.
தென்காசி மாவட்டத்தில் இ.சி.ஈ.அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 16.02.2024 அன்று நடைபெற்ற “மக்களுடன் முதல்வர்” முகாமில் 1886 பயனாளிகளுக்கு ரூ.3 கோடியே 77 ஆயிரத்து 475 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தலைமையில் வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ்.எம்.குமார், தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பழனிநாடார், சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ஈ.ராஜா, வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் மரு.சதன் திருமலைக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பின்னர் மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பேசியதாவது, தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க, “மக்களுடன் முதல்வர் முகாம் தென்காசி மாவட்டத்தில் 22.12.2023 முதல் 06.01.2024 வரை 7 கட்டங்களாக 55 முகாம்கள் நடைபெற்றது. இம்முகாமில் சுமார் 3022 மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட மனுக்களில் 3012 மனுக்கள் தீர்வு காணப்பட்டு இன்றைய தினம் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர், மக்கள் நலனை மனதில் வைத்து செயல்படுத்தப்பட்டு வரும் அரசு நலத்திட்டங்கள் விரைவாக எளிய முறையில் சென்றடைய வேண்டுமென்ற நோக்கத்தில் இத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். எனவே, பொதுமக்கள் அரசின் அனைத்து திட்டங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் மூலம் 196 பயனாளிகளுக்கு உட்பிரிவு பட்டா மாற்றத்திற்கான ஆணைகளையும், 257 பயனாளிகளுக்கு உட்பிரிவு அல்லாத பட்டா மாற்றத்திற்கான ஆணைகளையும், 3 பயனாளிகளுக்கு நத்தம் அடங்கல் ஆணைகளையும், 24 பயனாளிகளுக்கு நத்தம் தனிப்பட்டா மாற்றத்திற்கான ஆணைகளையும், 17 பயனாளிகளுக்கு நத்தம் கூட்டுப்பட்டா மாற்றத்திற்கான ஆணைகளையும், 49 பயனாளிகளுக்கு சாதிச் சான்றிதழ்களையும், 4 பயனாளிகளுக்கு பிறப்பிடச் சான்றிதழ்களையும், 10 பயனாளிகளுக்கு வருமானச் சான்றிதழ்களையும், 14 பயனாளிகளுக்கு வாரிசுச் சான்றிதழ்களையும், 3 பயனாளிகளுக்கு ஆதரவற்ற விதவைச் சான்றிதழ்களையும், 1 பயனாளிக்கு முதல் பட்டதாரிச் சான்றினையும், இந்திராகாந்தி தேசிய முதியோர் ஓய்வூதிய திட்டத்தின் மூலம் 15 பயனாளிகளுக்கு ரூ.2,16,000 முதியோர் ஓய்வூதியத் தொகைகளையும், 7 பயனாளிகளுக்கு ரூ.1,00,800 விதவை உதவித் தொகைகளையும், 1 பயனாளிக்கு ரூ. 14,400 முதிர்கன்னி உதவித்தொகையும், தொழிலாளர் நலத்துறை மூலம் 3 பயனாளிகளுக்கு ரூ.43,200 முதியோர் உதவித் தொகைகளையும், 1 பயனாளிக்கு 12,000 கல்வி உதவித் தொகையையும் வருவாய் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் வழங்கினார்.
மேலும், மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை, முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் 12 பயனாளிகளுக்கு மருத்துவக் காப்பீட்டு அட்டைகளையும், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை மாவட்ட தொழில் மையம் மூலம் பிரதம மந்திரி வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் 42 பயனாளிகளுக்கு ரூ. 1,44,039,71 உதவிகளையும், வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலை உருவாக்கும் திட்டத்தின் கீழ் 9 பயனாளிகளுக்கு ரூ.63,08,593 உதவிகளையும், பிரதம மந்திரியின் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனம் முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் 13 பயனாளிகளுக்கு ரூ 16,84,770 உதவிகளும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மூலம் 5 பயனாளிகளுக்கு தாட்கோ கடனுதவியினையும், 2 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் 71 பயனாளிகளுக்கு ரூ 68,16,781 மதிப்பிலான இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களையும், 6 பயனாளிகளுக்கு ரூ.48,000 மதிப்பிலான மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரங்களையும், 1 பயனாளிக்கு ரூ.22,000 மதிப்பிலான திறன் பேசியினையும், 12 பயனாளிகளுக்கு ரூ 33,360, மதிப்பிலான காதொலி கருவிகளும், 3 பயனாளிகளுக்கு ரூ.31,600 மதிப்பிலான சக்கர நாற்காலிகளும், எரிசக்தித்துறை மூலம் 488 பயனாளிகளுக்கு மின் இணைப்பு பெயர் மாற்றங்களும், 2 பயனாளிக்கு மின் அளவிட மாற்றங்களும், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மூலம் 451 பயனாளிகளுக்கு குடிநீர் இணைப்பு (வீட்டுவரி பெயர் மாற்றம். நகராட்சி) பெயர் மாற்றங்களும், 145 பயனாளிகளுக்கு குடிநீர் இணைப்பு (வீட்டு வரி பெயர் மாற்றம், பேரூராட்சி.) பெயர் மாற்றங்களும் என மொத்தம் 1886 பயனாளிகளுக்கு 3,00,77,475 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், தென்காசி வருவாய் கோட்டாட்சியர் லாவண்யா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ஷேக் அப்துல் காதர், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் சு.தமிழ்செல்வி போஸ், மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவர் தி.உதயகிருஷ்ணன், தென்காசி நகர்மன்ற தலைவர் ஆர்.சாதிர், தென்காசி நகர்மன்ற துணைத் தலைவர் கே.எல்.என்.சுப்பையா, தென்காசி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் ஷேக் அப்துல்லா, தென்காசி ஊராட்சி ஒன்றியக்குழு துணைத் தலைவர் கனகராஜ் முத்துப்பாண்டியன், தென்காசி வட்டாட்சியர் பட்டமுத்து, செங்கோட்டை வட்டாட்சியர் மணிகண்டன், கடையநல்லூர் வட்டாட்சியர் சுடலைமணி, சங்கரன் கோவில் வட்டாட்சியர் பரமசிவன், சிவகிரி வட்டாட்சியர் ரவிக்குமார், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா.இளவரசி, மாவட்ட மேலாளர் (மின்ஆளுமை) துர்கா, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) ரா. ராமசுப்பிரமணியன் அலுவலக பொது மேலாளர் ஹரிஹரன் மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள் பொது மக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ஜிஎஸ்எல்வி எஃப் 14 ராக்கெட் மூலம் இன்சாட் 3 டிஎஸ் செயற்கைக்கோள் இன்று (பிப்.,17) விண்ணில் பாய்கிறது..
by Askar
written by Askar
இஸ்ரோ’ எனப்படும், இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம், வானிலை நிலவரம், இயற்கை பேரிடரை முன்கூட்டியே கண்டறிவது உள்ளிட்ட ஆய்வுகளுக்கு பயன்படக்கூடிய, ‘இன்சாட் – 3டிஎஸ்’ செயற்கை கோளை வடிவமைத்துள்ளது. இதன் எடை, 2,274 கிலோ.
இதை சுமந்து கொண்டு, ஜி.எஸ்.எல்.வி., எப்14 ராக்கெட், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து இன்று (பிப்.,17) மாலை, 5:30 மணிக்கு விண்ணில் பாய்கிறது. இது, ஜி.எஸ்.எல்.வி., வகையில், 16வது ராக்கெட்.
ஏவுதளத்தில் ராக்கெட் தயாராக உள்ள நிலையில், அதற்கான கவுண்டவுன் நேற்று துவங்கியது. இறுதிகட்ட பணிகளில், இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!
பகுதி -2
கப்ளிசேட்
அப்பாஸிய பேரரசு -13
(கி.பி 750-1258)
பாக்தாத் நகரை தலைநகராக கொண்டு அப்பாஸிய பேரரசு செயல்பட்டாலும்,
சில பிரதேசங்களில்
சிற்றரசுகள் தோன்ற ஆரம்பித்தன.
பரந்து விரிந்த சாம்ராஜ்யத்தை கட்டுப்படுத்த அப்பாஸிய மன்னர்களால் இயலவில்லை.
ஒரு சூழலில் சிற்றரசுகளை அங்கீகரித்து, அவர்களுக்கு பாராட்டுக்களும், பட்டங்களும், கொடுத்த கூத்துக்கள் எல்லாம் நடந்தது.
இருப்பினும் இதுபோன்ற சிற்றரசுகள் குறிப்பிட்ட பிரதேசங்களில் மட்டுமே ஆட்சி செலுத்தியதால் இவைகள் அப்பாஸிய
அரசாட்சியின் கீழே இருந்தன.
இதில் புவைஹி சிற்றரசு கி.பி 944முதல்1057 வரை சீராஜ் நகரை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தது.
அபுசுஜா புவைஹி என்பவர் பாரசீகத்தின் தைலமி என்ற மலைபிரதேசத்தில் தனது குடும்பத்துடன்
குடியேறினார்.
அங்கு சமனைட் சிற்றசின் ஆட்சி நடைபெற்றது.
அது சியாக்கொள்கை
ஆதிக்கம் செலுத்தியது.
அவரின் மூன்று மகன்கள் அஹ்மது,அலி,
ஹஸன் மிகுந்த வீரமும்,துணிச்சலும்
பெற்றவர்களாக இருந்தனர்.
இவர்கள் சமனைட் சிற்றரசின் மன்னனை தோற்கடித்து அப்பகுதியை கைப்பற்றினர்.
பின்னர் அடுத்தடுத்து முன்னேறி இஸ்பஹான்,சீராஜ்,
கிரிமான் பகுதிகளை வென்றனர்.
பாக்தாத்திலிருந்த
அப்பாஸிய கலீபா முஸ்தகமி மிகவும் வலுகுன்றி இருந்தார்.
இவர்கள் பாக்தாத் மீது படை எடுத்து அப்பாஸிய பேரரசின் துருக்கிய படைத்தளபதியை துறத்திவிட்டு நகரை இவர்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார்கள்.
இதனை அங்கிகரித்த அப்பாஸிய மன்னர்,
அஹ்மதிற்கு “முகைஜுத் தௌலா”
அலி அவர்களுக்கு
“இமாமுத்தௌலா”
ஹஸன் அவர்களுக்கு
“ருக்னுத் தௌலா”
என்ற பட்டங்களை வாரி வழங்கினார்.
அஹ்மது “அல்சுல்தான்”
“அமீருல் உம்ரா”
என்ற பட்டங்களையும்
சூடிக் கொண்டார்.
குத்பா பிரசங்கத்தில்
கலீபாக்களின் பெயர்களுக்குப்பிறகு
அஹமதின் பெயரும் வாசிக்கப்பட்டது.
இவர்களின் பெயர்களில் நாணயங்களை வெளியிட்டனர்.
சியா கொள்கையின் தாக்கத்தால் முஹர்ரம் 10 ம்நாளை தேசியதுக்க தினமாக
அறிவித்தனர்.
புவைஹிக்களின் கொள்கைகளை பிடிக்காமல் இவர்களின் ஆட்சியை அகற்ற அப்பாஸிய மன்னர் முயற்சித்தார்.
இதனை அறிந்த அஹ்மது அப்பாஸிய மன்னரின் கண்ணை குருடாக்கினார்.
அப்பாஸிய அடுத்த மன்னராக முஹத்ததீ என்பவரை நியமித்தனர்.
இறுதியில் அஹ்மது மரணமடைந்தார்.
அவரின் மகன் பக்தியார் புவைஹி அரசின் மன்னராக பதவி ஏற்றார்.
இவர் காஸ்பியன் கடல் முதல் பாரசீக வளைகுடா வரையிலும்,
இஸ்பஹான் முதல் சிரியாவரையிலும்
பரந்த நிலப்பரப்புகளை கைப்பற்றினார்.
இவைகளை வேடிக்கைபார்த்துக்
கொண்டு ஏற்றுக்கொண்ட
அப்பாஸிய பேரரசர்
அறிவித்த ஒரு அறிவிப்பு எல்லோரையும்
ஆச்சரியப்படுத்தியது
வரலாறு படைக்க வரலாற்றை தொடர்ந்து வாசிப்போம்..!
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ராமநாதபுரம் நகர்மன்ற கூட்டம் ! கவுன்சிலர்கள் சரமாரி கேள்வி !! கமிஷ்னர் அமைதி !!!
by Baker BAker
written by Baker BAker
ராமநாதபுரம் நகராட்சி கூட்ட அரங்கில் நகர் மன்ற சாதாரண கூட்டம் நகர் மன்ற தலைவர் ஆர் கே கார்மேகம் தலைமையில் நகராட்சி கமிஷனர் நஜிதா பர்வீன் முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில் 10 வது வார்டு திமுக கவுன்சிலர் காளீஸ்வரன் கூறுகையில் பாதாள சாக்கடையில் மேல்பகுதி மூடி இல்லாததால் இரவு நேரத்தில் ஏராளமான பொதுமக்கள் விபத்துக்குள்ளாகி வருகின்றனர். மேலும் பாதாசாக்கடை கழிவுநீரை அகற்றச் சொல்லியும் மூடிகள் அமைக்க சொல்லியும் பலமுறை நகராட்சி அலுவலகத்திற்கு அழைந்தும் எந்தவித பயனும் இல்லை என்ற கேள்வி எழுப்பினார். மேல்பகுதி மூடி இல்லாததால் இப்பொழுது செயல்படுத்த முடியாது என்று நகர்மன்ற தலைவர் பதில் அளித்தார் கமிஷனர் அமைதியாக வேடிக்கை பார்த்தார். வார்டுகளில் குப்பைகள் எடுப்பதற்கு பணியாளர்கள் முறையாக வருவதில்லை என்று சில கவுன்சிலர்கள் கோரிக்கை வைத்தனர் அதற்கு நகராட்சி அதிகாரி தினமும் அனுப்புகிறோம் என்று பதில் அளித்தார்.எத்தனை பணியாளர்கள் அனுப்புகின்றீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது. 80க்கு மேற்பட்ட பணியாளர்கள் என்று கூறியதால் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. கவுன்சிலர்கள் எழுந்து அதிகாரிய நோக்கி எங்கள் வார்டில் நான்கு பணியாளர்கள் மட்டுமே வந்துள்ளார் என்றும் சில வார்டுகளில் பணியாளர்கள் குறைவாகவே வருகின்றனர் என்றும் பதில் அளித்தனர். வார்டு கவுன்சிலர்கள் கேட்ட கேள்விக்கு நகராட்சி கமிஷனர் நஜிதா பர்வீன் எவ்வித பதிலும் அளிக்காமல் அமைதி காத்தார். கவுன்சிலர்களும் தங்கள் வார்டுக்குள்ள பிரச்சனைகளை கூச்சல் குழப்பத்துடன் நகர் மன்ற தலைவரிடம் கூறினார். மேலும் வார்டுகளில் இருக்கக்கூடிய குறைகளை கூறினால் செய்து தருவதாக ஒவ்வொரு முறையும் கூறியும் இன்று வரை நடக்கவில்லை. எங்கள் வார்டுகளில் கழிவுநீர் பிரச்சனைகள் சாலை வசதிகள் குப்பை பிரச்சனைகள் கழிவுநீர் பிரச்சனை போன்றவற்றை கூறினாலும் நிவர்த்தி செய்யாமல் கூட்டத்தை கடந்து செல்வதாக கவுன்சிலர்கள் கூறினர். நகராட்சியில் ஆட்கள் பற்றாக்குறையாக உள்ளது என்றும் பல்வேறு பிரச்சனைகளை கூறியும் அடுத்த கூட்டத்திற்கு பார்ப்போம் என்று காலம் தாழ்த்துவதால் கவுன்சிலர்கள் மிகவும் வருத்தம் அடைந்தனர் மேலும் பொதுமக்கள் குடிக்கின்ற குடிநீரில் கழிவு நீர் கலந்து சுகாதார கேடு ஏற்பட்டு தண்ணீரை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. மேலும் பாதாள சாக்கடை தண்ணீர் கிணற்றிலும் இறங்குவதால் துர்நாற்றம் ஏற்பட்டு அந்த தண்ணீர் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது என்றார்கள்.. கவுன்சிலரின் கோரிக்கைகளும் கவுன்சிலர்கள் கூறிய குறைகளையும் நகராட்சி கமிஷனர் கண்டுகொள்ளாமல் கடந்து சென்றார். சில கவுன்சிலர்கள் கூட்டத்தில் பேசினாலும் எந்த பலன் இல்லை என்று உணர்ந்து டீயில் மிச்சரை போட்டு சாப்பிட்டுக் கொண்டு இருந்தனர். அதனைத் தொடர்ந்து ஒரு மனதாக பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் நகராட்சி கூட்டம் முடிந்தவுடன் பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்திற்கு கூட்டமாக வந்து கையில் கழிவுநீர் கலந்த தண்ணீரை காண்பித்து முற்றுகையிட்டனர். அப்போது செய்தியாளரிடம் கூறிய பொதுமக்கள் எங்கள் வார்டில் சுமார் 2000 பேர் வசித்து வருகின்றனர் இதில் சத்திரதெரு இந்திரா நகர், கிழக்கு தெரு, வாணி பட்டினம் ரோடு, பகுதிகளில் உள்ள பைப்புகளில் ஆறு மாதங்களுக்கு மேல் காவிரி கூட்டு குடிநீர் வருவதில்லை குடம் தண்ணீர் 12 ரூபாய்க்கு வாங்கி பயன்படுத்தும் நிலையில் உள்ளோம். மேலும் பாதாள சாக்கடை கழிவுநீர் கிணற்றுக்குள் இறங்கி துர்நாற்றம் வீசுவதாகும் தண்ணீர் பாட்டில்களுடன் பொதுமக்கள் ராமநாதபுரம் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இப்பகுதியில் உள்ள தண்ணீர் கழிவு நீர் கலந்து வருகிறது கிணற்றில் கழிவு நீர் கலப்பதால் புழக்கத்திற்கு கூட பயன் அடைய முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது இது பற்றி பலமுறை நகராட்சியில் மனு கொடுத்தும் எந்த விதமான செயல்பாடும் இல்லாததால் வரும் திங்கட்கிழமைக்குள் சரி செய்யாவிட்டால் சென்னை ரோட்டில் அமர்ந்து மிகப் பெரிய மறியலில் ஈடுபடுவோம் என்றனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
5 ஆண்டுகளில் 150 வெற்றிகள் நூல் வெளியீட்டு விழா; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஐந்தாண்டுகள், 150 வெற்றிகள் நூல் வெளியீட்டு விழா மதுரை தொழில் வர்த்தக சபையில் நடைபெற்றது..
by Askar
written by Askar
5 ஆண்டுகளில் 150 வெற்றிகள் நூல் வெளியீட்டு விழா; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஐந்தாண்டுகள், 150 வெற்றிகள் நூல் வெளியீட்டு விழா மதுரை தொழில் வர்த்தக சபையில் நடைபெற்றது..
அதில் கலந்து கொண்ட அமைச்சர் மூர்த்தி பேசியதாவது :
மக்களால் தேர்வு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், பொறுப்பில் இருக்கும் போது மக்களுக்காக என்னென்ன செய்திருக்கிறோம் என்பதை, மக்களின் கோரிக்கைகளை எவ்வளவு பூர்த்தி செய்திருக்கிறோம் என்பதை வைத்தே, நம்மை மக்கள் தீர்மானிக்கிறார்கள். தேர்தல் நெருங்கும் நேரத்தில் இதுபோல் புத்தங்கம் அச்சிட்டு வெளியிட்டுள்ளது சிறப்பு வாய்ந்ததாகும்.
புத்தகம் எழுதுவது மட்டுமின்றி பேச்சிலும் சிறந்தவர் வெங்கடேசன். அந்த செயல்பாடுகளில் ‘அவருக்கு நிகர் அவர் தான் எங்களை போன்றவர்கள் எல்லாம் களப்பணிகளில் மட்டுமே ஈடுபடுவோம்.
எவ்வித எதிர்பார்ப்புமின்றி பணி செய்வதில் மட்டும் கவனம் செலுத்தம் மார்க்சிஸ்ட் கட்சியினர் முன்பு, வெங்கடேசனின் ஐந்தாண்டு சாதனை குறித்த புத்தகம் வெளியிடப்பட நான், அதை பெறுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
மறைந்த கலைஞர் கருணாநிதி நான் திமுகவில் இல்லை என்றால் கம்யூனிஸ்ட் கட்சிக்காரனாக இருந்திருப்பேன் என, சொல்லும் அளவுக்கு மார்க்சிஸ்ட் கட்சியினரின் உழைப்பு.
இன்னும் சில நாட்களில் தேர்தல் பணி துவங்க உள்ள நிலையில், கூட்டணி ஓரிரு நாட்களில் இறுதி செய்யப்பட உள்ளது. தொடர்ந்து, இம்முறையும் தலைமை சொல்லும்படி செயல்படுவோம் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
புத்தகத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் வெளியிட வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி பெற்று கொண்டார்
நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், மேயர் இந்திராணி பொன்வசந்த், துணை மேயர் காமராஜ், மதுரை தெற்கு எம்எல்ஏ பூமிநாதன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கீழமான்குண்டு கிராமத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகாம் !
by Baker BAker
written by Baker BAker
ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி வேளாண்மைதுறை சார்பில் கீழமான்குண்டு கிராமத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ்நெற்பயிரில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை பண்ணைப்பள்ளி மூன்றாம் கட்ட பயிற்சி நடத்தப்பட்டது. பண்ணை பள்ளி பயிற்சிக்கு சுப்ரமணியன், வேளாண்மை இணை இயக்குனர் (ஓய்வு) விருதுநகர் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த முறையில் பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதான் அவசியம் ,உழவியல் முறைகள் , கோடையில் ஆழமாக உழவு செய்வதால் , மண்ணிற்குள் இருக்கும் தீமை செய்யும் பூச்சிகளின் முட்டைகள், புழுக்கள், கூட்டுப்புழுக்கள் நூற்புழுக்கள் வெளிக் கொணரப்பட்டு அவை சூரிய வெப்பத்தினாலும், பறவைகளால் கொத்தித்தின்றும் அளிக்கின்றது என்று விவரித்து பேசினார், மேலும் வரப்புகளில் பயறு வகைகள் வளர்த்து நன்மை செய்யும் பூச்சிகளின் எண்ணிக்கையை அதிகரித்து, தீமை செய்யும் பூச்சிகளின் சேதத்தை குறைக்க வேண்டும் என்றும் பயிர் சுழற்சி முறையைக் கடைப்பிடிப்பதால் பூச்சிக தாக்குதல் குறைவாக இருக்கும் என்றும் நெல் பயிரை அறுவடை செய்யும் போது தரை பரப்பை ஒட்டி அறுத்து பின்பு நீக்கிவிடவேண்டும் என்றும் வயல்களிலும், வரப்புகளிலும் காணப்படும் களைகளை நீக்கி சுத்தமாக வைத்திருக்கவேண்டும் என்றும் பின்னர் நெற்பயிரில் உர மேலாண்மை பற்றியும் விரிவான விளக்கம் அளித்தார். இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை வட்டார தொழில்நுட்ப மேலாளர் பானுமதி ,வட்டார உதவி தொழில்நுட்ப மேலாளர் பவித்ரன் மற்றும் உதவி வேளாண் அலுவலர் சண்முகநாதன் ஆகியோர் செய்திருந்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ஆற்றங்கரை அருகே இலங்கைக்கு கடத்த முயன்ற பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகள் பறிமுதல் ! ஒருவர் கைது !!
by Baker BAker
written by Baker BAker
ராமநாதபுரம் மாவட்டம் ஆற்றங்கரை கடற்கரை அருகே அம்மன் கோயில் குடியிருப்பு பகுதியில் உள்ள தோப்பில் இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.5 லட்சம் மதிப்பிலான 250 கிலோ பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகளை மெரைன் போலீசார் பறிமுதல் செய்யத்துடன், தோப்பின் உரிமையாளர் கைது செய்யப்பட்டார். ராமநாதபுரம் மாவட்டம் இலங்கைக்கு மிக அருகே இருப்பதால் தனுஷ்கோடி கடல் வழியாக இலங்கைக்கு சமீபகாலமாக கடல் அட்டை, கஞ்சா, ஏலக்காய், அழகு சாதன பொருட்கள், பூச்சிக்கொல்லி மருந்து உள்ளிட்டவைகள் அதிக அளவு கடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று காலை பனைக்குளம் அடுத்த ஆற்றங்கரை அம்மன் கோயில் பகுதியில் உள்ள ஒரு தோப்பில் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் பதப்படுத்தி வருவதாக மெரன் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் ஆற்றங்கரை மெரைன் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் தாரிக் தலைமையிலான மெரைன் போலீசார் அப்பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அம்மன் கோயில் குடியிருப்பு பகுதியில் இருந்த தோப்பு ஒன்றில் தடை செய்யப்பட்ட சுமார் 250 கிலோ பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகள் இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து கடல் அட்டைகளை பறிமுதல் செய்த மரைன் போலீசார் அந்த தோப்பின் உரிமையாளரான ஜகாருதீன் என்பவரை கைது செய்து கடல் அட்டை கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட ஒரு இருசக்கர வாகனம் மற்றும் பதப்படுத்த பயன்படுத்தப்பட்ட தளவாட பொருட்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.பறிமுதல் செய்யப்பட்ட பதப்படுத்தப்பட்ட அட்டையின் மதிப்பு சுமார் 5 லட்ச ரூபாய் இருக்கலாம் என மெரைன் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டை மற்றும் இருசக்கர வாகனம், கைது செய்யப்பட்ட நபர் உள்ளிட்ட அனைத்தையும் மேலதிக விசாரணைக்காக ராமநாதபுரம் வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மக்களுடன் முதல்வர் திட்டத்தில் 3,900 பேருக்கு ரூ.4 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவி: அமைச்சர் ராஜகண்ணப்பன் வழங்கினார்..
by Askar
written by Askar
மக்களுடன் முதல்வர் திட்டத்தில் 3,900 பேருக்கு ரூ.4 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவி: அமைச்சர் ராஜகண்ணப்பன் வழங்கினார்..
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில்
மக்களுடன் முதல்வர் திட்டத்தில் 3,900 பயனாளிகளுக்கு ரூ.4 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கி, அரசின் பல்வேறு துறைகள் சார்பில் ரூ.20 கோடி மதிப்பில் மேற்கொண்ட 89 புதிய திட்டப் பணிகளை பிற்படுத்தப்பட்டோர் நலம், உயர்கல்வித்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் திறந்து வைத்தார்.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் வருவாய், பேரிடர் மேலாண் துறை சார்பில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்குதல், முடிவுற்ற பணிகளை திறந்து வைக்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது. மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் தலைமை வகித்தார். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசுகையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் திட்டம் 18 இடங்களில் துவங்கப்பட்டு மக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.வரப்பெற்ற 4,386 மனுக்கள் மீது துறை ரீதியாக ஆய்வு செய்து 3,090 மனுக்களுக்கு உரிய நடவடிக்கை எடுத்து 13 துறைகள் மூலம் ரூ.4 கோடியே 25 ஆயிரம் மதிப்பில் 3090 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் இன்று வழங்கப்பட்டன. எஞ்சிய மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்து தீர்வு காண விண்ணப்பதாரர்களிடம் உரிய ஆவணங்கள் இணைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனடிப்படையில் அவர்களுக்கு உரிய நலத்திட்டங்கள் வழங்கப்படும் என
தெரிவித்தார்.
ஊரக வளர்ச்சித்துறை சார்பில் ரூ.7.48 கோடி மதிப்பில் முடிக்கப்பட்ட 44 திட்டப்பணிகள், பொதுப்பணித்துறை சார்பில் ரூ.1.77 கோடி மதிப்பில் புதிதாக 3 கால்நடை மருந்தகம், ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புதிதாக கட்டப்பட்ட சித்த மருத்துவ பிரிவு சிகிச்சை மையம், ராமேஸ்வரத்தில் ரூ.7.64 கோடி மதிப்பில் புதிய துணை மின் நிலையம், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ரூ.2.29 கோடி மதிப்பில் 39 புதிய மின் மாற்றிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன்
இன்று திறந்து வைத்தார்.
அரசின் பல்வேறு துறைகள் சார்பில் 3,900 பயனாளிகளுக்கு ரூ.4 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை பிற்படுத்தப்பட்டோர் நலம் உயர்கல்வித் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் வழங்கினார்.
ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி, சட்டமன்ற உறுப்பினர்கள் காதர்பாட்சா முத்துராமலிங்கம் ராமநாதபுரம்), முருகேசன் (பரமக்குடி), கருமாணிக்கம் (திருவாடானை) மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு, பரமக்குடி சார் ஆட்சியர் அபிலாஷா கெளர், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் குருதிவேல்மாறன், திட்ட இயக்குநர் மாவட்ட இயக்க மேலாண் அலுவலர் ஸையித் சுலைமான், மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் உதிசைவீரன், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் வேலுச்சாமி, பரமக்குடி நகர்மன்ற தலைவர் சேது கருணாநிதி, சமூகப் பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் மாரிச்செல்வி, பரமக்குடி வட்டாட்சியர் சாந்தி, பரமக்குடி நகராட்சி ஆணையர் (பொ) கண்ணன், வட்ட வழங்கல் வட்டாட்சியர் ஸ்ரீதரன் மாணிக்கம், பரமக்குடி நகர்மன்ற துணைத்தலைவர் குணசேகரன் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
You must be logged in to post a comment.