சென்னை கோடம்பாக்கம்- தாம்பரம் ரெயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை (ஞாயிற்றுக்கிழமை) சென்னை கடற்கரையில் இருந்து காலை 10.30 மணி முதல் மதியம் 2.30 மணி வரை தாம்பரம் செல்லும் மின்சார ரெயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. அதே போல, தாம்பரத்தில் இருந்து காலை 10.05 மணி முதல் மாலை 4.30 மணி வரை சென்னை கடற்கரை வரும் மின்சார ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது.சென்னை கடற்கரையில் இருந்து காலை 11 மணி முதல் மதியம் 2.15 மணி வரை செங்கல்பட்டு செல்லும் மின்சார ரெயில்கள் நாளை ரத்து செய்யப்படுகிறது. அதே போல, செங்கல்பட்டில் இருந்து காலை 9.40 மணி முதல் மதியம் 1 மணி வரை சென்னை கடற்கரை வரும் மின்சார ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது.சென்னை கடற்கரையில் இருந்து மதியம் 1 மணிக்கு புறப்பட்டு, அரக்கோணம் செல்லும் மின்சார ரெயில்கள் நாளை ரத்து செய்யப்படுகிறது. அதே தேதியில் காஞ்சீபுரத்தில் இருந்து காலை 9.30 மணிக்கு புறப்பட்டு, சென்னை கடற்கரை வரும் மின்சார ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது. திருமால்பூரில் இருந்து காலை 11.05 மணிக்கு புறப்பட்டு, சென்னை கடற்கரை செல்லும் மின்சார ரெயில் 25-ந் தேதி ரத்து செய்யப்படுகிறது. மொத்தம் 44 மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.மின்சார ரெயில்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் குறைந்த எண்ணிக்கையிலேயே இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பராமரிப்பு பணி காரணமாக கடந்த 2 வாரங்களாக ஞாயிற்றுக்கிழமைகளில் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுவதால் ரெயில் பயணிகள் மிகுந்த சிரமப்படுகின்றனர்.
Category:
மாநில செய்திகள்
இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!
பகுதி -2
கப்ளிசேட்
அப்பாஸிய பேரரசு -20
(கி.பி 750-1258)
சலாவுதீன் அய்யூபி அவர்களின் எதிரியான இங்கிலாந்து மன்னர் ரிச்சர்ட் ,ரம்லாவில் நோயுற்று ஒரு மாளிகையில் தங்கி இருந்தார்.
அவர் இருக்கும் பகுதிகளில் போர் பதற்றம் இருந்ததால், அவருக்கு மருத்துவர்களை அழைத்து வந்து சிகிச்சை அளிக்க முடியவில்லை.
ஆகவே மாறுவேடம் பூண்டு சலாவுதீன் அய்யூபி அவர்கள்
ரம்லா சென்று நோயுற்று இருந்த இங்கிலாந்து மன்னரை சந்தித்து உதவிகள் புரிந்தார்.
தன்னுடன் அழைத்து வந்திருந்த மருத்துவர்கள் மூலம் அவருக்கு சிறப்பு சிகிச்சையும் செய்து அவரை அவரது நாட்டிற்கு தப்பிச்செல்வும் உதவி புரிந்தார்.இந்த செயல் உலக வரலாற்றில் அதிசயமானதாகும்.
சலாவுதீன் அய்யூபி அவர்களின் படையில் ஏராளமான ஹாபிழ்கள்
(குர்ஆனை மனனமிட்டவர்கள்)
இருந்தனர்.
ஆகவே அய்யூபி அவர்கள் தனது வெற்றி ஆயுத பலத்தாலோ,
ஆட்களின் பலத்தாலோ இல்லை .
மாறாக குர்ஆனை ஓதும் நல்ல மனிதர்களால்தான்
சாத்தியமாகிறது என்பதையே எப்போதும் கூறுவார்.
ஜெருசலேம் மஸ்ஜிதுல் அக்ஸா இவரால் மீட்கப்பட்டு பாதுகாக்கப்பட்டது.
இவர் எகிப்தில் சிறப்பாக ஆட்சி செய்தபோது சிரியா டமாஸ்கசில் நூர்தீன் ஜங்கி மரணமடைந்தார்.
அவரது இளவயது மகன் மாலிக் சாலிஹ் பதவி ஏற்றார்.
சிறு வயதாக இருந்ததால் அமைச்சர்களால் ஏமாற்றப்பட்டார்.
இதனை கண்ட அய்யூபி அவர்கள் அமைச்சர்களை எச்சரித்தார்.
பல நிர்வாக உதவிகளையும் செய்தார்.
நூர்தீன் சங்கி அவர்களின் கனவில் ஒருநாள் பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹிவ ஸல்லம் அவர்கள் தோன்றி,
மதினாவில் தனது ரவ்லாவை
(அடக்க இடம்) சுற்றி
இரண்டு நபர்கள் தவறாக ஏதோ
செய்கிறார்கள்
அதை தடுத்து நிறுத்தவும் என கூறினார்கள்.
மேலும் அந்த இரண்டு நபர்களின் உருவமும் நூர்தீன் ஜங்கி அவர்களுக்கு காட்டப்பட்டது.
நூர்தீன் ஜங்கிக்கு மீண்டும் இரண்டு நாட்கள் தொடர்ந்து கனவின் மூலம் அந்த இருவரின் உருவமும் காட்டப்பட்டது.
ஏதோ விபரீதம் நடக்கிறது என்பதை உணர்ந்த நூர்தீன் ஜங்கி அவர்கள் உடனடியாக மதினாவிற்கு கிளம்பினார் .
தனது வீரர்களுடன் கிளம்பிய சிரியா டமாஸ்கசின் ஆட்சியாளரான நூர்தீன் ஜங்கி,
அதி விரைவாக மதினா நகரை வந்தடைந்தார்.
மதினா சென்றடைந்ததும் மதினாவில் வசிக்கும் ஆண்கள் அனைவரையும் மஸ்ஜிதுல் நபவி பள்ளிவாசலில் கூட்ட சொல்லி கவர்னருக்கு உத்தரவிட்டார்.
எல்லோரும் பள்ளிவாசலில் கூடிவிட இவர் கனவில் பார்த்த அந்த இருவர் அந்தக்கூட்டத்தில் இல்லை.
எல்லோரும் வந்துவிட்டார்களா என வினவப்பட,
இருவர் மட்டும் வரவில்லை என கூறப்படுகிறது.
அவர்களின் வீட்டிற்கே நேரடியாக சென்ற பாதுஷா அவர்கள், அவர்கள் இருவரும் மிகுந்த வணக்க சாலிகளாக இருப்பதை பார்த்தார்கள்.
பாதுஷா எதிர்பார்த்த உருவமும் இல்லை.
பாதுஷா அந்த வீட்டை சுற்றி வந்து ஏதோ சந்தேகப்பட்டவராக,
தரையில் விரித்திருந்த கம்பளத்தை உயர்த்திப்பார்க்க
அங்கிருந்து ஒரு சுரங்கப்பாதை பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹிவ ஸல்லம் அவர்களின் ரவ்லாவை
(அடக்கஇடம்)நோக்கி தோண்டப்பட்டு இருந்தது.
உடனடியாக அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டபோது
மதினாவின் புகழை குறைக்க பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹிவ ஸல்லம் அவர்களின் உடலை எடுத்து செல்ல,
சுரங்கம் தோண்டியதை அந்த மாறுவேடத்தில் இருந்த இரண்டு யூதர்களும் ஒப்புக்கொண்டனர்.
அவர்களின் மாறுவேடம் கலைக்கப்பட்ட போது
நூர்தீன் ஜங்கி அவர்கள் கனவில் பார்த்த அதே உருவமாக இருந்தனர்.
அவர்கள் தண்டிக்கப்பட்டதுடன்
ரவ்லாவை
(அடக்க இடம்)
சுற்றி பூமியில் தாமிர
கலவைகளால் பூசப்பட்டு குழிகள் தோண்ட முடியாதவாறு அடைக்கப்பட்டது.
*(இந்த தகவலை உலமாக்கள் உறுதிப்படுத்த வேண்டும்)*
நூர்தீன் ஜங்கியின் மகன் மாலிக் சாலிஹ்
வாரிசுகள் இல்லாமல் மரணமடைந்தார்.
அவரது மனைவி அமைச்சர் இஜ்ஜுதீனை மணமுடித்தார்.அவர் மம்லூக்கியராக இருந்ததால் மம்லூக்கிய அரசு ஏற்பட்டது.
சலாவுதீன் அய்யூபியோடு
சிலுவைப்படை வீரர்களின் மோதல் ஏற்பட்டது.
சிலுவை போர்களின்
நிலைகள் என்ன??
வரலாறு படைக்க வரலாற்றை தொடர்ந்து வாசிப்போம்..!
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தென்காசியில் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்..
written by Abubakker Sithik
தென்காசியில் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்..
தென்காசியில் ஒன்றிய அரசை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாடாளுமன்ற பொதுத் தேர்தலை நேர்மையாக நடத்த வேண்டும், 100 விழுக்காடு ஒப்புகை சீட்டுகளை எண்ணித்தான் தேர்தல் முடிவை அறிவிக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. மேலும் வாக்குப்பதிவு இயந்திரங்களில் நம்பிக்கை இல்லை எனவும், மக்களை ஏமாற்றும் வகையில் பாஜக அரசு செயல்பட்டு வருவதாகவும் கூறி தமிழகம் முழுவதும் பிப்.23 அன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அந்த வகையில், தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், தெற்கு மாவட்ட செயலாளர் செல்வம் தலைமையில் ஒன்றிய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்களை மட்டும் வைத்து தேர்தலை நடத்தக் கூடாது. மாறாக, அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்களோடும் ஒப்புகைச் சீட்டைப் பெறும் இயந்திரமும் இணைக்கப்பட வேண்டும். இந்திய தேர்தல் ஆணையம் நேர்மையான முறையில் தேர்தலை நடத்த வேண்டும். வாக்காளர் தான் விரும்பிய சின்னத்தில் வாக்களித்த பின்னர், தான் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் வகையில் வாக்குச்சீட்டு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப் பட்டது. இதில், 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பாகிஸ்தான் பாராளுமன்றம் மற்றும் பஞ்சாப் உள்ளிட்ட 5 மாகாண சட்டசபைகளுக்கும் பொதுத்தேர்தல் கடந்த 8-ம் தேதி நடந்தது. இதில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.
பஞ்சாப் மாகாண சட்டசபைக்கு நடந்த தேர்தலில் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றது. பாகிஸ்தான் மக்கள் கட்சி மற்றும் சுயேட்சைகள் மரியம் நவாஸ் ஷெரீபுக்கு ஆதரவு தந்தனர்.பஞ்சாப் மாகாண சட்டசபையானது முதலில் கூட்டத்தொடரை தொடங்க உள்ளது. பஞ்சாப் சட்டசபையை வெள்ளிக்கிழமை கூட்டும்படி கவர்னர் பலிகுர் ரகுமான் அழைப்பு விடுத்திருந்தார்.மூன்று முறை பிரதமராக பதவி வகித்த நவாஸ் ஷெரீப் மகள் மரியம் நவாஸ் பஞ்சாப் மாகாணத்தின் முதல் பெண் முதல் மந்திரியாக தேர்வு செய்யப்பட்டார்.இந்நிலையில், பஞ்சாப் மாகாண முதல் மந்திரியாக மரியம் நவாஸ் இன்று பதவியேற்றார். இதன்மூலம் பஞ்சாப் மாகாணத்தின் முதல் பெண் முதல் மந்திரி என்ற பெருமையை பெற்றார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
நிலக்கோட்டையில் ஓடும்போதே ஒடிந்த ஸ்டேரிங்க்! அரசு பேருந்தின் அவல நிலை-பயத்தில் பயணிகள்! கலக்கத்தில் ஓட்டுநர்கள்..
by Askar
written by Askar
நிலக்கோட்டையில் ஓடும்போதே ஒடிந்த ஸ்டேரிங்க்! அரசு பேருந்தின் அவல நிலை-பயத்தில் பயணிகள்! கலக்கத்தில் ஓட்டுநர்கள்..
நிலக்கோட்டையில் இருந்து காமலாபுரம், சின்னாளபட்டி வழியாக திண்டுக்கல்லுக்கு செல்லக்கூடிய அரசு பேருந்து இன்று (வியாழக்கிழமை) மாலை நிலக்கோட்டை பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டு செம்பட்டி சாலையில் சென்று கொண்டிருந்தது.
அப்போது வளைவு ஒன்று வந்துள்ளது அது சமயம் ஸ்டேரிங்க்கை ஓட்டுநர் திருப்பி உள்ளார்.
திடீரென ஸ்டேரிங்க் உடைந்து பேருந்து தாறுமாறாக ஓடி அங்கிருந்து ரைஸ் மில் ஒன்றில் மோதியது.
ஓட்டுநர் சமயோசிதமாக செயல்பட்டு பிரேக் பிடித்துள்ளார்.
இல்லை என்றால் பெரிய அளவில் விபத்து ஏற்பட்டு இருக்கும் என நடுக்கத்துடன் பயணி ஒருவர் கூறியுள்ளார்.
இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக பயணிகளும் சாலை ஓரத்தில் நடமாடிய மக்களும் உயிர் பிழைத்தனர்.
இனியும் காலம் தாழ்த்தாமல் அரசு பேருந்துகளை சரியாக பராமரித்து உரிய முறையில் இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் அனைத்து மகளிர் காவல் நிலையம் காவல் ஆய்வாளர் கற்பகம் சென்னை கோட்டூர்புரம் காவல் நிலையத்திற்கு குற்றப்பிரிவு காவல் ஆய்வாளராக பணி மாறுதல் பெற்றுள்ளது. அதனை தொடர்ந்து மேட்டுப்பாளையத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல் ஆய்வாளர் கற்பகத்திற்கு நம்ம மேட்டுப்பாளையம் சமூக நலக்குழு சார்பாகவும் சிஐடியு பொது தொழிலாளர் சங்கத்தின் சார்பாகவும் நேரில் சென்று கௌரவித்து வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர். சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் காவல் நிலைய காவலர்கள் உடன் இருந்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பேருந்துகள் மீது கடும் நடவடிக்கை; தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு..
by Askar
written by Askar
அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பேருந்துகள் மீது கடும் நடவடிக்கை; தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு..
அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பேருந்துகளின் உரிமத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பது உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் தனியார் பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதிக கட்டண வசூல் தொடர்பாக அடிக்கடி சோதனைகள் நடத்திட வேண்டும். மேலும், சம்பந்தப்பட்ட பேருந்து நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வகை செய்யும் அரசாணையை அமல்படுத்த அனைத்து வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கும் உத்தரவிட வேண்டும், எனக்கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
இந்த வழக்குகள் தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பேருந்துகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. அபராதம் மட்டும் விதிக்கப்படுகிறது. இதனால், தனியார் பேருந்து நிறுவனங்கள் தொடர்ந்து, அதிக கட்டணம் வசூலிப்பதாக தெரிவிக்கப்பட்டது.
அப்போது அரசு தரப்பில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தீவிர சோதனைகளில் ஈடுபடுவதோடு, பேருந்து நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. மேலும், சோதனையை தீவிரப்படுத்தி நடவடிக்கை எடுக்க போக்குவரத்துத் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதிக கட்டணம் வசூலிக்கும் பேருந்துகளுக்கு விதிக்கப்படும் அபராதத்தை 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பேருந்துகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக ஏற்கெனவே, பல வழக்குகளில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வெறும் அபராதம் மட்டும் விதிப்பதால் தீர்வு ஏற்படப் போவதில்லை. தனியார் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என கண்காணிக்க அடிக்கடி சோதனைகள் நடத்த வேண்டும். தொடர் குற்றத்தில் ஈடுபடும் தனியார் பேருந்துகளுக்கான உரிமத்தை சஸ்பெண்ட் செய்ய சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளதால், உரிமத்தை சஸ்பெண்ட் செய்வது உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திருவண்ணாமலை மாவட்ட சாரண, சாரணியர் இயக்கத்தின் சார்பில் சாரண தந்தை பேடன் பவல்166 வது பிறந்த நாளை முன்னிட்டு மெகா பேரணி..
by Askar
written by Askar
உலக சாரண, சாரணிய இயக்கத்தை தோற்றுவித்த சாரண தந்தை பேடன் பவல் பிறந்த நாள் ஆண்டுதோறும் சிந்தனை நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி அறிவுறுத்தலன்படி திருவண்ணாமலை மாவட்ட சாரண, சாரணியர் இயக்கத்தின் சார்பில் சாரணதந்தை 166 வது பிறந்த நாளை முன்னிட்டு மெகா பேரணி மற்றும் சாரண சாரணிய ஆசிரியர்களுக்கான ஒரு நாள் பயிற்சி நடைபெற்றது . மாவட்ட பயிற்சி மையத்தில் இருந்து தொடங்கிய பேரணிக்கு மாவட்ட கல்வி அலுவலர் காளிதாஸ் தலைமை தாங்கி பேரணியை கொடி அசைத்து தொடக்கி வைத்தார். மாவட்ட செயலர் பியூலா கரோலின் அனைவரையும் வரவேற்று பேசினார் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் கார்த்திகேயன்,மாவட்ட தலைவர் தொழிலதிபர் துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். 500க்கும் மேற்பட்ட சாரண சாரணிய மாணவர்கள் பங்கு பெற்ற பிரம்மாண்ட பேரணி மாவட்ட பயிற்சி தொடங்கி மத்திய பேருந்து நிலையம் , வேங்கிகால் வழியாக சென்று ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபம் வரை பேரணி நிறைவடைந்தது.
பின்னர் மாவட்ட செயலர் பியூலா கரோலின் தலைமையில் சாரண சாரணிய ஆசிரியர்களுக்கு ஒரு நாள் பயிற்சி வகுப்பு நடைபெற்றது . பயிற்சிகள் பள்ளியில் படை தொடங்குவது குறித்தும் செயல்பாடுகளை குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
நிகழ்வின்போது மாவட்ட தலைவர் தொழில் அதிபர் துரை, மாவட்ட ஆணையர் ரேஞ்சர் அருட் சகோதரி ஜோதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர் நிகழ்ச்சியின் முன்னதாக, அண்மையில் மறைந்த மூத்த பயிற்சி ஆணையர் சீனிவாச வரதன், முன்னாள் மாவட்ட தலைவர் பவுன் குமார் ஆகியோருக்கு மௌன அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.
நிகழ்வில் மாவட்ட நிர்வாக குழு ஆல்வின், சுதாகர், அருண்குமார், கலைவாணி, ரமா காவியா, ஜானகி, மன்சூர் அலி, அசோகன், ஜெகன் மற்றும் சாரண சாரணிய ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என்றும் வாக்குப்பதிவில் தில்லு முல்லு நடைபெறாமல் கண்காணிக்க வேண்டும் என்றும் அனைத்து கட்சியினர் வலியுறுத்தல்..
by Askar
written by Askar
சென்னை விமான நிலையத்துக்கு எதிரே உள்ள ‘டிரைடண்ட்’ நட்சத்திர ஓட்டலில் தங்கிய இந்திய தேர்தல் கமிஷனர்கள் இன்று காலையில் அதே ஓட்டலில் தேர்தல் தொடர்பாக ஆய்வு கூட்டத்தை நடத்தினார்கள்.முதலில் அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அளவிலான அரசியல் கட்சிகளை தனித்தனியாக அழைத்து ஆலோசனை மேற்கொண்டனர்.இதில் தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், பாரதிய ஜனதா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, தே.மு.தி.க., ஆம் ஆத்மி கட்சி, தேசிய மக்கள் கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி ஆகிய 10 கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு கருத்துக்களை தெரிவித்தனர்.ஒவ்வொரு கட்சியிலும் 2 பேர் சென்று தேர்தல் கமிஷனர் ராஜீவ்குமாரிடம் தங்களது கருத்துக்களை முன் வைத்து அதை மனுவாகவும் கொடுத்தனர்.முக்கியமான கோரிக்கையாக தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என்றும் வாக்குப்பதிவில் தில்லு முல்லு நடைபெறாமல் கண்காணிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்கள்.பதட்டம் நிறைந்த வாக்கு சாவடிகளில் துணை ராணுவப் படையை நிறுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு அம்சங்களை வலியுறுத்தினார்கள்.இன்றைய இந்த கூட்டத்தில் தி.மு.க. சார்பில் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, என்.ஆர்.இளங்கோ எம்.பி. கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை எடுத்து கூறினார்கள்.அ.தி.மு.க.வில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் இன்ப துரை கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.பாரதிய ஜனதா கட்சியில் மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன், முன்னாள் டி.ஜி.பி. பாலச்சந்திரன் கலந்து கொண்டனர். காங்கிரஸ் கட்சியில் வக்கீல் பிரிவு தலைவர் சந்திர மோகன், ஆம் ஆத்மி கட்சியில் மாநில பொதுச் செயலாளர் ஜோசப் ராஜா, ஸ்டெல்லா மேரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியில் ஆறுமுக நயினார், சம்பத், தேசிய மக்கள் கட்சி யில் மாநில தலைவர் சீனிவாசன், செயலாளர் கார்த்திக் ஆகியோர் கலந்து கொண்டனர்.இதேபோல் ஒவ்வொரு கட்சியில் இருந்தும் 2 பேர் வீதம் தலைமை தேர்தல் ஆணையரை சந்தித்து தங்களது கருத்துக்களை கோரிக்கை மனுவாக வழங்கினார்கள். ஒவ்வொரு கட்சி பிரதிநிதிகளும் 9 நிமிட நேரம் பேசுவதற்கு நேரம் ஒதுக்கி கொடுக்கப்பட்டிருந்தது. காலை 10 மணிக்கு தொடங்கிய இந்த ஆலோசனை கூட்டம் பகல் 11.39 மணி வரை நடந்தது.ஒவ்வொரு அரசியல் கட்சி பிரதிநிதிகள் சொன்ன கருத்துக்கள் அனைத்தும் அங்கு வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. இதன் பிறகு இந்திய தேர்தல் கமிஷனர் ராஜீவ்குமார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதாசாகுவுடன் கலந்தாலோசனை மேற்கொண்டார்.பின்னர் உணவு இடைவேளைக்கு பிறகு மதியம் மீண்டும் தேர்தல் கமிஷனர்கள் ஆலோசனை கூட்டம் நடத்தினார்கள். இந்த கூட்டத்தில் அனைத்து மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் சூப்பிரண்டுகள் கலந்து கொண்டனர்.ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்தல் ஏற்பாடுகள் எந்த அளவில் தயார் நிலையில் உள்ளது என்பதை தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ்குமார் ஆய்வு மேற்கொண்டார். ஒவ்வொரு மாவட்டத்திலும் வாக்காளர் பட்டியல் விவரங்கள், மின்னணு எந்திரங்கள் கையிருப்பு, பதட்டமான வாக்குச்சாவடிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.இதைத் தொடர்ந்து நாளையும் தேர்தல் ஆணையர்கள் சென்னையில் தங்கியிருந்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர்.நாளை காலையில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களின் தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் தேர்தல் ஆணையர்கள் கலந்தாலோசனை நடத்துகிறார்கள்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை இதற்காக தான் மாற்றினேன்!- பல நாள் ரகசியத்தை உடைத்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..
by Askar
written by Askar
சென்னை நந்தம்பாக்கத்தில் தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாட்டை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனை நிதித்துறையில் இருந்து தகவல் தொழில்நுட்ப துறைக்கு மாற்றியது ஏன் என்பது தொடர்பாக விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;
அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனை நான் பாராட்டுகிறேன். மூன்று தலைமுறையாக நாட்டுக்கு தொண்டாற்றி வரும் குடும்பத்துக்கு சொந்தக்காரர் அமைச்சர் பி.டி.ஆர்.இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவனங்களில் ஒன்றான திருச்சி என்ஐடியிலும், உலகின் தலைசிறந்த கல்வி நிறுவனமான எம்ஐடியிலும் படித்தவர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன். பல ஆண்டுகள் வெளிநாடுகளில் படித்து, வேலை பார்த்திருந்தாலும், அங்கேயே தங்கிவிடாமல் தமிழ்நாட்டுக்கு திரும்ப வந்து, இங்கேயே தொழில் வர்த்தகம் என்று ஒதுங்கி விடாமல் அவரின் தாத்தா, அப்பா மாதிரி அரசியலில் பங்கெடுத்து தன்னுடைய அறிவாற்றலை தமிழ்நாட்டு மக்களுக்கு கொடுத்துக்கொண்டு இருப்பவர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்.திமுக ஆட்சியில் முதல் 2 ஆண்டுகள் நிதி அமைச்சராக மிக சிறப்பாக செயல்பட்டு பல மாற்றங்களுக்கு வித்திட்டார் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன். அவரை நான் ஐடி துறைக்கு மாற்றினேன். அவரை மாற்றியதற்கு காரணம், நிதித்துறையை போன்று ஐடி துறைக்கும் பல மாற்றங்கள் தேவைப்பட்டது.அவரின் தலைமையில் தகவல் தொழில்நுட்ப துறை மூலமாக தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியும், தமிழ்நாட்டு இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பும் அதிகமாகும். நான் கொடுத்த பொறுப்பை அவர் சிறப்பாக செயல்படுத்துகிறார் என்பதற்கு இந்த மாநாடே சிறந்த உதாரணம். அவரின் பணி மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கட்டுமான பொருட்களின் அதிகப்படியான விலை உயர்வை கண்டித்து பழனி நகர பொறியாளர்கள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்..
by Askar
written by Askar
கட்டுமான பொருட்களின் அதிகப்படியான விலை உயர்வை கண்டித்து பழனி நகர பொறியாளர்கள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்..
தமிழகம் முழுவதும் கட்டுமான பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரிக்கப்படுகிறது.
முன் விற்பனை செய்ததில் இருந்து தற்போது வரை எம்.சாண்ட் ஒரு யூனிட் 2700 இல் இருந்து 4000 ருபாயாகவும்,பி.சாண்ட் 3700 இல் இருந்து 5000 ருபாயாகவும் , மேலும் ஜல்லி,கிரசர் மண் ,வெட்மிக்ஸ் ,டஸ்ட் உள்ளிட்ட பொருட்கள் 50% முதல் 100% வரை கட்டுமான பொருட்கள் விலை கடுமையாக விலை உயர்ந்து உள்ளதை கண்டிக்கும் விதமாக பழனி நகர பொறியாளர் சங்கத்தினர் பழனி பேருந்து நிலையம் மயில் ரவுண்டானா முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய ,மாநில அரசுகளை கடுமையான விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 50 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
பழநி- ரியாஸ்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சென்னையில் தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை:- பல்வேறு அரசியல் கட்சிகள் பங்கேற்பு..
by Askar
written by Askar
சென்னையில் தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை:- பல்வேறு அரசியல் கட்சிகள் பங்கேற்பு..
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் சென்னையில் உள்ள மாநில தேர்தல் ஆணையத்தில் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
தமிழகத்தில் மக்களவை தேர்தல் நடத்துவது தொடர்பாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் ஆலோசனை நடத்தி வருகிறார். அ
வர் அங்கீகரிக்கப்பட்ட தேசிய, மாநில கட்சிகளின் பிரதிநிதிகளுடன் இன்று மக்களவை தேர்தல் தொடர்பான ஆலோசனை நடத்துகிறார். அதன்படி, திமுக, அதிமுக, தேமுதிக, பாஜக, ஆம் ஆத்மி, பகுஜன் சமாஜ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் மற்றும் தேசிய மக்கள் கட்சி ஆகிய 10 அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
ஒவ்வொரு கட்சிக்கும் 10 நிமிடம் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த குறிப்பிட்ட நேரத்தில் கட்சிகளின் பிரதிநிதிகளிடம் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மக்களவைத் தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்துவார். தேர்தல் தேதி, வாக்குச்சாவடி, நடத்த விதிமுறைகள் பாதுகாப்பு உள்ளிட்டவை ஆலோசனையில் முக்கிய அம்சமாக இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் உடன் துணை ஆணையர் தர்மேந்திர சர்மா, நிதேஷ் நியாஸ், அஜய் பாது ஆகியோரும் ஆலோசனையின்போது உடன் உள்ளனர்.
நாளையும் மக்களவைத் தேர்தல் தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் ஆலோசனை நடத்தவிருக்கிறார். நாளை தென்மாநில தேர்தல் அதிகாரிகள், அமலாக்கத் துறை, சுங்கத்துறை உள்ளிட்ட துறை அதிகாரிகளுடன் தேர்தல் ஆணையர் நாளை ஆலோசனை நடத்தவுள்ளார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
போராட்டத்தில் உயிரிழந்த விவசாயி குடும்பத்திற்கு ரூ 1 கோடி இழப்பீடு!-அரசு வேலை அறிவித்த பஞ்சாப் முதல்வர்..
by Askar
written by Askar
போராட்டத்தில் உயிரிழந்த விவசாயி குடும்பத்திற்கு ரூ 1 கோடி இழப்பீடு!-அரசு வேலை அறிவித்த பஞ்சாப் முதல்வர்..
விவசாயிகளின் போராட்டத்தில் உயிரிழந்த விவசாயி குடும்பத்திற்கு 1 கோடி ரூபாய் நிவாரணம் மற்றும் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் பஞ்சாப் மாநில அரசு அறிவித்துள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் ஆம் ஆத்மி அரசின் இந்த அறிவிப்புக்கு வரவேற்பு அதிகரித்துள்ள நிலையில், விவசாயியை சுட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் முதலமைச்சர் பகவந்த் மான் அறிவித்துள்ளார்.
விவசாயிகளின் போராட்டத்தினால் வட இந்திய மாநிலங்களில் நிலைமை பதற்றமாக உள்ள நிலையில், பஞ்சாப்-ஹரியானா எல்லையில் சுப்கரன் சிங் என்ற 21 வயது விவசாயி ஒருவர் தலையில் காயம் ஏற்பட்டு உயிரிழந்தார். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது.
இரு தரப்புக்குமான தள்ளு முள்ளுவில் காவல்துறையினருக்கும் காயங்கள் ஏற்பட்டுள்ளன. சுமார் 30 போலீசார் காயம் அடைந்தனர். விவசாயி இறந்ததை அடுத்து, டெல்லி சலோ போராட்டத்தை 2 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக விவசாயிகள் அறிவித்தனர்.
இந்த சூழ்நிலையில், பஞ்சாப் மாநில விவசாயியின் மரணத்திற்கு வருத்தம் தெரிவித்த பஞ்சாப் மாநில முதலமைச்சர் பகவத் மான் சிங், விவசாயியின் குடும்பத்திற்கு இழப்பீடு அறிவித்துள்ளார்.
விவசாயிகளின் போராட்டத்தில் உயிரிழந்த விவசாயி குடும்பத்திற்கு 1 கோடி ரூபாய் நிவாரணம் மற்றும் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த விவசாயியின் பிரேத பரிசோதனைக்கு பிறகு சம்பந்தப்பட்டவர்களின் மீது வழக்கு பதிவு செய்யப்படும். அவரது மரணத்திற்கு காரணமான அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று முதலமைச்சர் பகவத் மான் உறுதியளித்தார்
அரசியல் சாராத சம்யுக்தா கிசான் மோர்ச்சா அமைப்பு மற்றும் கிசான் மஸ்தூர் மோர்ச்சா ஆகியவை ‘டெல்லி சலோ’ அணிவகுப்பை முன்னெடுத்தன. பயிர்களுக்கு MSP சட்டப்பூர்வ உத்தரவாதம் மற்றும் விவசாயக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை ஏற்க வேண்டும் என்று விவசாயிகள் அரசிடம் கேட்கின்றனர்
போராட்டங்களுக்கு மத்தியில், இன்று கருப்பு வெள்ளி என்று சோக தினமாக அனுசரிக்கப்படும் என்று பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் திகாத் அறிவித்ததை அடுத்து, தலைநகர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
செய்யாறு சிப்காட் விரிவாக்கம்: முதல்வரிடம் மனு அளிக்க வந்த 19 பெண்கள் உள்ளிட்ட 21 விவசாயிகள் கைது! – எஸ்டிபிஐ கட்சி கடும் கண்டனம்..
by Askar
written by Askar
இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே சிப்காட் தொழிற்பேட்டை 3-வது அலகு விரி வாக்கத்துக்காக, மேல்மா உட்பட 11 கிராமங்களில் 3,174 ஏக்கர் விவசாய நிலங்களை கைப்பற்ற தமிழக அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, மேல்மா சிப்காட் எதிர்ப்பு விவசாயிகள் இயக்கம் சார்பில் மேல்மா கூட்டுச்சாலையில் 225 நாட்களுக்கும் மேலாக அறவழியில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகின்றது.
செய்யாறு சிப்காட் தொழிற்பேட்டை விரிவாக்கத்திற்காக விவசாயிகள் விளைநிலம் கையகப்படுத்தப்பட்டால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என விவசாயிகளும், பொதுமக்களும் அச்சம் தெரிவிக்கின்றனர். தமிழக அரசு இந்த திட்டத்தை கைவிட வலியுறுத்தி ஜனநாயக அறவழியில் தொடர்ச்சியாக அவர்கள் போராடி வருகின்றனர்.
இந்நிலையில், மேல்மா சிப்காட் தொழிற்பேட்டை விரிவாக்கத்திற்காக விளைநிலங்கள் கையகப்படுத்தப்படுவதற்கு எதிராக, அதனை ரத்து செய்ய வலியுறுத்தி, தமிழக முதல்வரை சந்தித்து கோரிக்கை மனு கொடுப்பதற்காக, சென்னை தலைமைச் செயலகம் நோக்கி வந்த மேல்மா சிப்காட் எதிர்ப்பு விவசாயிகள் இயக்கத்தை சேர்ந்த 19 பெண்கள் உட்பட 21 விவசாயிகளை காவல்துறை கைது செய்துள்ளது. வாக்களித்து தேர்வு செய்த முதல்வரை சந்தித்து முறையிட வந்தவர்களை, பெண்கள் என்றும் பாராமல் கைது செய்தது வன்மையான கண்டனத்துக்குரியது.
ஏற்கனவே மேல்மா சிப்காட் தொழிற்பேட்டை எதிர்ப்பு போராட்டம் தொடர்பாக ஏழு விவசாயிகள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பல்வேறு கண்டனங்களுக்கு பிறகே அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். இந்நிலையில் தற்போது முதல்வரை சந்தித்து கோரிக்கை மனு அளிக்க தலைமைச் செயலகம் நோக்கிச் சென்றவர்கள் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளது அடக்கு முறையின் உச்சமாகும்.
வடமாநிலங்களில் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி, தலைநகர் டெல்லியை நோக்கிச் செல்லும் விவசாயிகள் மீது ஒன்றிய பாஜக அரசு அடக்கு முறையை கையாண்டு வருவது போன்று, இங்கே தலைநகர் சென்னையில் உள்ள முதல்வரை சந்தித்து மனு அளிக்க வந்த பெண்கள் உள்ளிட்ட விவசாயிகள் மீது தமிழக காவல்துறையின் மூலம் திமுக அரசு அடக்கு முறையை ஏவி வருகின்றது.
ஆட்சிக்கு வருவதற்கு முன்னர், “விவசாய உற்பத்தி பாதிக்கப்படும் வகையில், விவசாயிகள் ஒப்புதல் இல்லாமல், விளைநிலங்களை வேறு பயன்பாட்டிற்கு மாற்றுவதை தடுத்திட நடவடிக்கைகள் மேற்கொண்டு விளைநிலங்கள் பாதுகாக்கப்படும்” தேர்தல் அறிக்கையில் கூறிவிட்டு, ஆட்சியமைத்த பிறகு அதற்கு நேர்மாறான வகையிலேயே திமுக அரசு செயல்பட்டு வருகின்றது. கடந்த ஆட்சியில் விளைநிலங்களை பாதிக்கும் எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு எதிராக குரல்கொடுத்து விட்டு, தற்போது பரந்தூர் விமான நிலையம், செய்யாறு சிப்காட் விரிவாக்கம் உள்ளிட்ட பல திட்டங்களுக்காக விவசாய விளை நிலங்களை பறிக்கும் இரட்டை நிலை ஏற்புடையதல்ல.
சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வேளாண் பட்ஜெட் குறித்து உரையாற்றிய தமிழக முதல்வர் அவர்கள், “திமுக அரசு உழவர் பெருமக்களை உயிராக நினைக்கிறது” என பெருமிதம் கொண்டார். ஆனால் உண்மையில் இந்த அரசு அவ்வாறு நடந்துகொள்கிறதா? என்கிற கேள்வி எழுகிறது. முதல்வரின் வார்த்தைகளில் இருந்து சொல்வதென்றால், “பசிப்பிணி போக்கும் மருத்துவர்களாம் வேளாண் பெருமக்களது கோரிக்கைகளுக்குச் செவிமடுக்கக்கூட மனமில்லாத வகையில் திமுக அரசு உள்ளது.
ஆகவே, செய்யாறு சிப்காட் தொழிற்பேட்டை விரிவாக்க விவகாரத்தில் மக்களின் உணர்வுகளை மதித்து, விவசாயத்தை பாதிக்கும் இந்த திட்டத்தை வேறு பகுதிக்கு மாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், கைது செய்யப்பட்டவர்கள் மீதான வழக்குகளை திரும்பப்பெற வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மனு கொடுக்க சென்ற 21 விவசாயிகள் கைது – திமுக அரசுக்கு சீமான் கடும் கண்டனம்..
by Askar
written by Askar
மனு கொடுக்க சென்ற 21 விவசாயிகள் கைது – திமுக அரசுக்கு சீமான் கடும் கண்டனம்..
மேல்மா சிப்காட் ஆலைக்காக வேளாண் நிலங்கள் கையகப்படுத்தப்படுவதற்கு எதிராக தமிழ்நாடு முதலமைச்சரிடம் கோரிக்கை மனு கொடுப்பதற்காக சென்னை தலைமைச்செயலகத்தை நோக்கி சென்ற 19 பெண்கள், 2 ஆண்கள் உட்பட 21 விவசாயிகளை காவல்துறை மூலம் திமுக அரசு கைது செய்துள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது. அறவழியில் அமைதியான முறையில் மனு அளிக்க சென்ற விவசாயிகள் பெருமளவில் பெண்கள் என்றும் பாராமல் அடக்குமுறையை ஏவி கைது செய்வதென்பதுகொடுங்கோன்மையாகும்.
திருவண்ணாமலை மாவட்டம் மேல்மா கிராமத்தைச் சுற்றி அமைந்துள்ள தேத்துரை, குரும்பூர், வீரம்பாக்கம், நெடுங்கள், இளநீர் குன்றம், நர்மாபள்ளம், வட ஆளப்பிறந்தான் மற்றும் அத்தி ஆகிய 9 ஊராட்சிகளுக்கு உட்பட்ட ஏறத்தாழ 3174 ஏக்கர் வேளாண் விளைநிலங்களை தமிழ்நாடு அரசின் தொழில் முன்னேற்றக் கழகம் (சிப்காட்) சார்பில் புதிதாக தொழில் வளாகம் அமைப்பதற்காக வலுக்கட்டாயமாக கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆறு மாதத்திற்கும் மேலாக அறவழியில் போராடி வந்த விவசாயிகளைக் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திமுக அரசு கைது செய்து சிறையிலடைத்தது. மேலும், போராடிய அப்பாவி விவசாயிகளில் எழுவர் மீது சிறிதும் மனச்சான்றின்றி திமுக அரசு குண்டர் சட்டத்தையும் தொடுத்து வதைத்தது. தற்போது தங்களது தாய்நிலத்தைத் தற்காக்க அமைதியான முறையில் தலைமைச்செயலகத்தை நோக்கி மனு அளிக்க சென்ற விவசாயிகளையும் கைது செய்துள்ளது எதேச்சதிகாரப்போக்கின் உச்சமாகும்.
மக்களாட்சி தேசத்தில் அறவழியில் போராடுவதும், அமைதி வழியில் மனு அளிப்பதும் அரசியலைப்பு வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளாகும். அதனைக்கூட அனுமதிக்க மறுப்பதென்பது பெருங்கொடுமையாகும். டெல்லியில் வாழ்வாதார உரிமைகள் கேட்டு போராடும் விவசாயிகளைச் சொந்த நாட்டு குடிமக்கள் என்றும் பாராமல் ரப்பர் குண்டுகள் மூலம் துளைத்து அறவழிப்போராட்டத்தை அடக்கி ஒடுக்கும் பாசிச பாஜக அரசினை நோக்கி யார் தீவிரவாதிகள் உழவர்களா? அரசாங்கமா? என்று கேள்வி எழுப்பிய தமிழ்நாடு முதலமைச்சர் ஐயா ஸ்டாலின் அவர்கள், தம்மிடம் மனு அளிக்க வந்த விவசாயிகளைச் சந்திக்கக்கூட அனுமதி மறுத்து, அடக்குமுறைகளை ஏவி கைது செய்துள்ளது ஏன்? இப்போது தீவிரவாதிகள் யார்? திமுக அரசா? அல்லது மேல்மா விவசாயிகளா? இதற்கு பெயர்தான் உரிமைகள் மீட்க குரல் கொடுக்கும் திராவிட மாடலா? விளைநிலங்களை அழித்துவிட்டு, வேளாண்மைக்கு தனி நிதிநிலை அறிக்கை தருவதால் விளையும் பயன் என்ன? வெற்றுத்தாள்களில் விதைகள் முளைக்காது; எந்த எந்திர தொழிற்சாலையும் உணவை உற்பத்தி செய்யாது என்ற உண்மையை ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் உணரப்போவது எப்போது?
ஆகவே, திமுக அரசு அறவழியில் போராடும் மக்கள் மீது அதிகார அடக்குமுறையை கட்டவிழ்க்கும் கொடுங்கோன்மை போக்கினை இனியேனும் கைவிட வேண்டுமெனவும், மேல்மா வேளாண் பெருங்குடிமக்களின் கோரிக்கைக்குச் செவிசாய்த்து விளைநிலங்கள் கையகப்படுத்துவதை உடனடியாகக் கைவிட வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். இல்லையேல், நாம் தமிழர் கட்சி மீண்டும் மேல்மா விவசாயிகளோடு இணைத்து மாபெரும் அறப்போராட்டங்களை முன்னெடுக்கும் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!
பகுதி -2
கப்ளிசேட்
அப்பாஸிய பேரரசு -19
( கி.பி 750-1258)
அப்போதைய இஸ்லாமிய ஆட்சிப்பீடம் மூன்று தலைமைகளை பிரதானமாக கொண்டு இருந்தது.
பாக்தாத்தை தலைநகராக கொண்டு அப்பாஸிய மன்னர்களும்,
ஸ்பெயின் கொரடோவாவை தலைமை இடமாக கொண்டு உமைய்யாக்களும்,
எகிப்தை தலைமை இடமாக கொண்டு பாத்திமியாக்களும் ஆட்சி புரிந்தனர்.
பாத்திமிய அரசு வீழ்ந்த பிறகு சலாவுதீன் அய்யூபி அவர்கள் எகிப்தை கைப்பற்றினார்.
சலாவுதீன் அய்யூபி அவர்கள் ஈராக்கில் நஜுமுத்தீன் அய்யூபி என்பவரது மகனாக பிறந்தார்.
பிறகு டமாஸ்கசில் வளர்ந்தார்.
எகிப்தில் ஆட்சியை பிடித்தார்.
அஸ்பன்,நூபியா,
ஏமன் வரை வெற்றி பெற்ற அய்யூபி அவர்களை, சிலுவைப்போர் வீரர்களை எதிர்க்க டமாஸ்கசிற்கு நூர்தீன் ஜங்கி அவர்கள் அழைத்த போது,
இந்த பகுதிகளின் வெற்றி மற்றும் ஆட்சிகளை நிறுவ வேண்டிய கட்டாயத்தில் இருந்ததால் சலாவுதீன் அய்யூபி அவர்களால்
போகமுடியவில்லை.
அதனை கடிதமாக நூர்தீன் ஜங்கி அவர்களுக்கு சலாவுதீன் அய்யூபி அவர்கள் தெரிவிக்க, அதனை ஏற்றுக் கொண்டார் நூர்தீன் ஜங்கி.
சலாவுதீன் அய்யூபி அவர்கள் அலெப்பே சென்றுவிட்டபோது
சிலுவை வீரர்கள் எகிப்தை முற்றுகையிட்டனர். திரும்பி வந்து சலாவுதீன் அய்யூபி அவர்கள் எகிப்தை மீட்டெடுத்தார்.
சியாக்களின் தூண்டுதலால் சலாவுதீன் அய்யூபியை கொலை செய்ய ஒரு கும்பல் முயற்சித்து தோல்வி அடைந்தது.
எகிப்தின் மன்னராக பதவி ஏற்ற சலாவுதீன் அய்யூபி அவர்களின் அமைச்சராக பஹாவுத்தீன் என்பவர் நியமிக்கப்பட்டார்.
பஹாவுத்தீன் அவர்கள் முறையற்ற வரிகளை நீக்கினார்.
ஏராளமான பாடசாலைகள் அமைக்கப்பட்டன.
அறிஞர்கள் கவுரவிக்கப்பட்டனர்.
சலாவுதீன் அய்யூபி அவர்கள் தனது மகன்கள் அஜீஸ் மற்றும் அப்சால் மூவரும் அலெக்சாந்திரியா சென்று ஹதீஸ் கலை வல்லுநர் சலபி இமாமிடம் ஹதீஸ் பாடம் கற்றனர்.
சட்டமேதை ஈசா அவர்களை சிலுவைப்போர் வீரர்கள் கைது செய்தபோது, அவர்களுக்கு 6 லட்சம் தீனார்கள் இழப்பீடாக கொடுத்து அவர்களை சலாவுதீன் அய்யூபி அவர்கள் மீட்டார்கள்.
அல் அஸ்கர் பல்கலைகழகத்தில் இருந்த இஸ்மாயிலியா கோட்பாடுகளை நீக்கி
சுன்னத்து வல் ஜமாத் கொள்கைகளை போதிக்க ஏற்பாடு செய்தார்.
சிலுவை வீரர்கள் எகிப்திய வணிகர்களை தாக்கி கொள்ளையிட்டு அவர்களை சிறைபிடித்து கொண்டனர்.
அவர்களை மீட்க ஹித்தீனில் நடந்த போரில் சிலுவைப்படை வீரர்களை தோற்கடித்தார்.
அவர்களிடம் மிகக்குறைவான இழப்பீடுகளை பெற்றுக் கொண்டு
அவர்களை விடுதலை செய்தார்.
இழப்பீடு செலுத்த முடியாதவர்களுக்கு தன் சொந்தப் பணத்திலிருந்து இழப்பீடு செலுத்தி அவர்களை விடுதலை செய்ய வைத்தார்.
போரில் கிடைத்த குழந்தையை எந்த இழப்பீடுகளும் இல்லாமல் கருணையோடு அதன் தாயிடத்தில் ஒப்படைத்தார்.
சலாவுதீன் அய்யூபி அவர்கள் செய்த ஒரு செயல் உலக வரலாற்றில் எந்த மன்னரும் செய்யாத விந்தையானது.
என்ன செயல்?
வரலாறு படைக்க வரலாற்றை தொடர்ந்து வாசிப்போம்..!
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பெங்களூரு – நாகர்கோவில் ரெயில் திண்டுக்கல் வரை மட்டுமே இயக்கம்..
சேலம் கோட்ட ரெயில்வே சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது;
திருநெல்வேலி-மேலப்பாளையம் ரெயில் பாதையை இரட்டிப்பாக்கும் பணி நடக்கிறது.
இதனால் நாகர்கோவில் கோவை முன்பதிவற்ற ரெயில் இயக்கம் நாளை (23-ந் தேதி) முதல் 28-ந் தேதி வரை நாகர்கோவில்-திண்டுக்கல் இடையே ரத்து செய்யப்படுகிறது.
மறு மார்க்கத்தில் கோவையில் இருந்து இயக்கப்படும் ரெயில் திண்டுக்கல் வரை மட்டுமே இயக்கப்படும்.
பெங்களூரு-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 27-ந் தேதி வரை திண்டுக்கல்-நாகர்கோவில் வரை ரத்து செய்யப்படுகிறது.
மறுமார்க்கத்தில் நாளை முதல் வருகிற 27-ந் தேதி வரை திண்டுக்கல்லில் இருந்து புறப்பட்டு பெங்களூருக்கு சென்றடையும்.
ஈரோடு-செங்கோட்டை முன்பதிவற்ற எக்ஸ்பிரஸ் ரெயில் நாளை முதல் வருகிற 27-ந் தேதி வரை வாஞ்சி மணியாச்சி-செங்கோட்டை இடையே ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கத்தில் இயக்கப்படும் ரெயில் வாஞ்சி மணியாச்சி புறப்பட்டு ஈரோட்டை அடையும்.
நாளை (23-ந் தேதி) தாதரில் புறப்பட்டு நெல்லையை அடையும் தாதர் எக்ஸ்பிரஸ் ரெயிலின் இயக்கம் மதுரை-நெல்லை இடையே ரத்து செய்யப்படுகிறதது.
மறு மார்க்கத்தில் வருகிற 28-ந் தேதி நெல்லையில் புறப்பட வேண்டிய தாதர் எக்ஸ்பிரஸ் ரெயில் மதுரையில் இருந்து புறப்படும்.
நாளை (23-ந் தேதி) இயக்கப்படும் ஸ்ரீமாதா வைஷ்ணோ தேவி கத்ரா-நெல்லை வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் திருச்சி-நெல்லை இடையே ரத்து செய்யப்படுகிறது.
வருகிற 24-ந் தேதி தாதரில் இருந்து நெல்லை செல்லும் தாதர் எக்ஸ்பிரஸ் விருதுநகர்-நெல்லை இடையே ரத்து செய்யப்படும்.
மறு மார்க்கத்தில் வருகிற 26-ந் தேதி நெல்லையில் புறப்பட வேண்டிய தாதர் எக்ஸ்பிரஸ் விருதுநகரில் புறப்படும்.
வருகிற 25-ந் தேதி நெல்லையில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு புறப்பட வேண்டிய சிறப்பு ரெயில் ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மனித – விலங்கு மோதலைத் தடுக்க சிறப்புப் படை அமைக்க வேண்டும்!-பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை..
by Askar
written by Askar
மனித – விலங்கு மோதலைத் தடுக்க சிறப்புப் படை அமைக்க வேண்டும்!-
பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை..
தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் ஒரு மாதத்தில் யானை தாக்கி 5 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாடு முழுவதும் கடந்த 3 ஆண்டுகளில் 152 பேர் யானைகளால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர். நாளுக்கு நாள் மனித & விலங்குகள் மோதல் அதிகரித்து வரும் நிலையில், அவற்றைத் தடுப்பதற்கான ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை தமிழக அரசு இதுவரை மேற்கொள்ளவில்லை என்பது வருத்தமளிக்கிறது.
தமிழ்நாட்டில், அதிலும் குறிப்பாக மேற்குத் தொடர்ச்சி மலையோரம் அமைந்துள்ள மாவட்டங்களில் மனித & விலங்குகள் மோதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. மனித & விலங்குகள் மோதலுக்கு வனப்பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடு, வனப்பகுதிகளை மனிதர்கள் ஆக்கிரமிப்பு செய்து விவசாயம் செய்தல், யானைகள் வலம் வரும் பகுதிகள் மனிதர்களால் அழிக்கப்படுதல் உள்ளிட்ட பல காரணங்கள் கூறப்படுகின்றன. கடந்த காலங்களில் இழைக்கப்பட்ட இந்தத் தவறுகளை சரி செய்வதற்கான நடவடிக்கைகள் மத்திய, மாநில அரசுகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் போதிலும், அவற்றின் மூலம் இதுவரை எதிர்பார்த்த பயன்கள் கிடைக்கவில்லை, இனி கிடைக்குமா? என்பதும் தெரியவில்லை.
மனித & விலங்குகள் மோதலால் உயிரிழப்புகள் மட்டுமின்றி, பொருள் இழப்புகளும் மிக அதிகமாக ஏற்படுகின்றன. ஜனவரி 17 ஆம் நாள் முதல் பிப்ரவரி 19 வரையிலான 32 நாட்களில் மட்டும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் யானைகள் தாக்கி மூன்று பெண்கள், 2 ஆண்கள் என 5 பேர் இறந்துள்ளனர். தமிழ்நாடு முழுவதும் கடந்த 2019 முதல் 2022 வரையிலான 3 ஆண்டுகளில் இந்தியா முழுவதும் புலிகள் மற்றும் யானைகள் தாக்கி 1700 பேர் உயிரிழந்திருப்பதாகவும், தமிழ்நாட்டில் யானைகள் தாக்குதலில் மட்டும் 152 பேர் கொல்லப்பட்டிருப்பதாகவும் மத்திய அரசால் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்புகள் தெரிவிக்கின்றன.
மற்றொருபுறம் வன விலங்குகள் தாக்குதலில் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் வேளாண் விளைபொருட்கள் சேதமடைந்துள்ளன. விலங்குகள் தாக்குதலில் கொல்லப்படுவோரின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று அண்மையில் தமிழக அரசு அறிவித்தது. ஆனாலும், விலங்குகளால் கொல்லப்படும் உயிர்களுக்கும், சேதமடையும் பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படுவதில்லை. சில பகுதிகளில் முதல்கட்ட இழப்பீட்டை மட்டும் வழங்கும் தமிழக அரசு, மீதத் தொகையை வழங்கவில்லை.
வன விலங்குகளால் மக்களும், பயிர்களும் அழிக்கப்பட்ட பிறகு நடவடிக்கை எடுக்கப்பட்ட பிறகு, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வழங்குவதை விட, வன விலங்குகளால் மனிதர்களும், பயிர்களும் தாக்கப்படுவதை தடுப்பது தான் சிறந்தத் தீர்வாக இருக்கும். யானைகள் உள்ளிட்ட வன விலங்குகள் வனத்தை விட்டு வெளியே வருவதை உடனடியாக தடுப்பது என்பது உடனடியாக சாத்தியமில்லை.
மாறாக, வனத்தை விட்டு யானைகள் உள்ளிட்ட விலங்குகள் வெளியே வருவதை கண்காணித்து, அவற்றை மீண்டும் வனத்திற்குள் அனுப்பி வைப்பது தான் பயனளிக்கும் தீர்வாக இருக்கும். அதற்காக தனிப்படைகள் அமைக்க வேண்டியது கட்டாயம் ஆகும். ஆனால், ஆக்கப்பூர்வமான இந்தத் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து தமிழக அரசு இன்னும் சிந்திக்கக் கூட இல்லை என்பது தான் உண்மை.
ஆந்திரம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களிலும் மனித& விலங்கு மோதல் பெரும் சிக்கலாக உருவெடுத்து வருகிறது. அதை சமாளிப்பதற்காக அந்த மாநிலங்களில் ஒவ்வொரு சரகத்திலும் வனச்சரக அலுவலர் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அப்படைகளுக்கு போதிய எண்ணிக்கையில் வனக்காவலர்கள் ஒதுக்கப்பட்டிருப்பதுடன், வாகனம் உள்ளிட்ட அனைத்துக் கட்டமைப்பு வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன. அப்படைகள் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவதால் ஆந்திரம், கர்நாடகத்தில் மனித & வன விலங்குகள் மோதல் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்திருக்கின்றன.
அதேபோல், இந்த வனச்சரகத்தின் பரப்பளவு குறைக்கப்பட்டு புதிய சரகங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. உதவி சார் ஆய்வாளர் நிலையிலான வனக்காப்பாளர் 2500 ஹெக்டர் முதல் 5000 ஹெக்டர் வரை பரப்பளவு கொண்ட ஒரு வனக் காவல் சுற்று பகுதியை கண்காணிப்பதும், காவல் ஆய்வாளர் நிலையிலான வனச்சரக அலுவலர் 30,000 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட வனச்சரகத்தை கண்காணிப்பதும் சாத்தியமற்றவை. வனக்காவல் சுற்றுப்பகுதியின் பரப்பளவை 1000 ஹெக்டேராகவும், வனச்சரகத்தின் பரப்பளவை 5000 ஹெக்டேராகவும் குறைப்பதன் மூலம் வனப்பகுதிகளை சிறப்பாக நிர்வகிக்க முடியும்.
எனவே, தமிழக வனத்துறையில் வன விலங்குகள் ஊருக்குள் நுழைவதை கண்காணித்து காட்டுக்குள் மீண்டும் அனுபுவதற்கான தனிப்படைகளை அமைக்க வேண்டும்; வனப் பகுதிகளின் பரப்பளவை குறைக்க வேண்டும். கோடைக்காலத்தில் வனத்தில் ஏற்படும் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக விலங்குகள் ஊர்களுக்குள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதால், எந்தெந்த வனப்பகுதிகளில் எல்லாம் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் என்பதை முன்கூட்டியே கணித்து அங்கெல்லாம் விலங்குகளுக்கு தற்காலிக தண்ணீர் தொட்டிகளை திறக்க வேண்டும். இந்த நடவடிக்கைகளின் மூலம் தமிழ்நாட்டில் மனித & விலங்கு மோதல் நிகழாமல் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் வரத்து அதிகரிப்பால் பூண்டு விலை குறைந்தது;கிலோ ₹150 முதல் ₹250 வரை விற்பனை..
by Askar
written by Askar
வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் வரத்து அதிகரிப்பால் பூண்டு விலை குறைந்தது;கிலோ ₹150 முதல் ₹250 வரை விற்பனை..
வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் வரத்து அதிகரிப்பால் பூண்டு விலை குறைந்து கிலோ ₹150 முதல் ₹250 வரை விற்பனை செய்யப்படுகிறது. வேலூர் நேதாஜி காய்கறி மொத்த வியாபாரிகளுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து தக்காளி, வெங்காயம், இஞ்சி, பூண்டு, வெண்டை, கத்தரிக்காய், முட்டைகோஸ், கேரட், பீட்ரூட், காலிபிளவர் என காய்கறிகள் வருகின்றன. தக்காளியை பொறுத்தவரை ஓசூர், கிருஷ்ணகிரி, வி.கோட்டா, பலமநேர், கோலார் பகுதிகளில் இருந்து வருகிறது. கேரட், பீட்ரூட் போன்றவை கேரள மாநிலம் மற்றும் நீலகிரி, கோவை மாவட்டங்களில் இருந்து வருகிறது. வெங்காயம், இஞ்சி, பூண்டு போன்றவை வெளிமாநிலங்களில் இருந்து வருகிறது. அதேபோல் பிற காய்கறிகளும் வேலூர் மார்க்கெட்டுக்கு வருகின்றன.இந்த நிலையில் காய்கறிகள் வரத்து சீராக உள்ளதால், தக்காளி, கத்தரிக்காய், வெண்டைக்காய், பச்சை மிளகாய், பீன்ஸ், அவரை போன்ற பல்வேறு காய்கறிகள் விலையில் பெரிய அளவில் மாற்றம் இல்லை. கடந்த மாதம் முதல் பூண்டு விலை கிடு கிடு என உயர்ந்து கிலோ ₹450 வரை விற்பனை செய்யப்பட்டது. இது பொதுமக்களை அதிர்ச்சி அடைய செய்தது. இதையடுத்து கடந்த சில நாட்களாக பூண்டு வரத்து அதிகரித்துள்ளதால் விலை சரிந்து உள்ளது. தற்போது கிலோ ₹150 முதல் ₹250 வரை விற்பனை செய்யப்படுகிறது.
இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது:வேலூர் மார்க்கெட்டிற்கு எப்போதும் பூண்டு மத்தியபிரதேச மாநிலத்தில் இருந்து தான் வரும். ஆனால் அங்கு விளைச்சல் பாதிப்பு காரணமாக வரத்து குறைந்தது. இதனால் விலை கிடு கிடு என உயர்ந்தது. தற்போது விளைச்சல் அதிகரித்துள்ளதால் பூண்டு வரத்தும் அதிகமாகி உள்ளது. இதனால் விலை குறைந்து வருகிறது. தற்போது ₹150 முதல் ₹250 வரை விற்பனை செய்யப்படுகிறது. இன்னும் வரும் நாட்களில் மேலும் குறைய வாய்ப்பு உள்ளது. வரத்து தொடர்ந்து அதிகமாக வந்து கொண்டு உள்ளதால் ₹100க்கு கீழ் பூண்டு விலை விற்பனைக்கு வரும். இவ்வாறு அவர்கள் கூறினர்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ராமேஸ்வரம் மீனவர்கள் தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் ! இலங்கை சிறையில் உள்ள 5 மீனவர்களை விடுதலை செய்யும் வரை தொடர்வதாக அறிவிப்பு !!
by Baker BAker
written by Baker BAker
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடம் தனியார் மஹாலில் வலசை பேருந்து நிறுத்தத்தில் சனிக்கிழமை முதல் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளதாக விசைப்படகு மீனவ சங்கத் தலைவர் சேசு ராஜா நடைபெற்ற மீனவர் ஆலோசனை கூட்டத்தில் தகவல். இது குறித்து அவர் தெரிவித்திருப்பது வயிற்று பிழைப்புக்காக மீன் பிடிக்கச் செல்லும் ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படை அண்மையில் கைது செய்து படகு ஓட்டுனருக்கு ஆறு மாத சிறை தண்டனையும் இரண்டாவது முறையாக எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி ஒரு மீனவர்களுக்கு ஒரு வருட தண்டனையும் மற்றும் ஒரு மீனவருக்கு இரண்டு வருட தண்டனையும் இலங்கை நீதிமன்றம் வழங்கி உள்ளது. இந்தத் தீர்ப்பை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் பிப்ரவரி 17 முதல் மீன் பிடிக்க கடலுக்கு செல்லாமல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு படகுகளில் கருப்பு கொடி கட்டி மத்திய மாநில அரசுகள் கவனத்தை ஈர்க்கும் வகையில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும் மேலும் 3500 பேர் கலந்து கொள்ளும் கட்ச தீவு திருப்பயணத்தையும் மீனவர்கள் செல்லாமல் ரத்து செய்துள்ளதாகவும் இந்த சூழ்நிலையில் இலங்கை அரசாங்கம் மனிதாபிமான அடிப்படை இல்லாமல் பிப்ரவரி 22ஆம் தேதி காலை 11 மணியளவில் ஊர்க்காவல் துறை நீதிமன்றத்தில் மீண்டும் ஒரு விசைப்படகு ஓட்டுனருக்கு ஆறு மாத கால சிறை தண்டனை விதித்துள்ளது. மீனவர்கள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர். வயிற்றுப் பிழைப்புக்காக மீன்பிடிக்கச் செல்லும் மீனவனுக்கு இது போன்ற கொடூர தண்டனை எந்த நாட்டிலும் இல்லை எனவே உடனடியாக மத்திய அரசாங்கம் தலையிட்டு சிறையில் உள்ள மீனவர்களை விடுதலை செய்து தர வேண்டும் என்றனர். அதேபோல இலங்கை அரசு எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக கூறி கைது செய்யப்படும் விசைப்படகு ஓட்டுனர்களுக்கு ஆறு மாத சிறை தண்டனையும் இரண்டாவது முறையாக எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்படும் மீனவர்களுக்கு ஒரு வருடம் மற்றும் இரண்டு வருட சிறை தண்டனை வழங்குகிறது இந்த புதிய சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி வருகிற சனிக்கிழமை யிலிருந்து மீனவர்களை மீட்டுக் கொண்டு வரும் வரை தொடர் உண்ணாவிரத போராட்டம் தங்கச்சிமடம் வலசை பேருந்து நிறுத்தத்தில் நடத்த உள்ளதாக ராமேஸ்வரம் விசைப்படகு மீனவ சங்கத் தலைவர் ஜேசுராஜா தங்கச்சி மடத்தில் பிப்ரவரி 22ஆம் தேதி மாலை 6:00 மணி அளவில் நடைபெற்ற மீனவர் ஆலோசனைக் கூட்டத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி தெரிவித்துள்ளார்.
You must be logged in to post a comment.