வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா வள்ளிமலை கிரிவகப் பாதையில் உள்ள மலைபுள் புதரில் எலும்பு கூடான நிலையில் பெண் சடலம் கிடப்பதாக அப்பகுதியில் ஆடு மேய்த்து கொண்டு இருந்தவர்கள் மேல்பாடி காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர்.விரைந்து சென்ற காவல்துறையினர் எலும்புக்கூடாக இருந்த 45 – வயது மதிக்கதக்க பெண் சடலத்தை கைப்பற்றி விசாரணை செய்துவருகின்றனர். பரிசோதனை முடிவில்தான் பெண் எப்படி? இறந்தார் என்பது குறித்து தெரியவரும்.
Category:
செய்திகள்
மதுரை அரசு ராஜாஜி மருத்துவ மனையில் உள்ள கொரோனா பிரிவில் உள்ள ரூ.7 லட்சம் மதிப்பிலான கம்ப்யூட்டர், எல்.இ.டி. திரை போன்ற பொருட்களை திருடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.மதுரை அரசு ராஜா ஜி மருத்துவமனையில் உள்ள கொரோனா சிறப்பு பிரிவு வளாகத்தில் இருந்த ஏழு லட்ச ரூபாய் மதிப்பிலான கம்ப்யூட்டர் மற்றும் எல்இடி திரை, மின்சாதன பொருட்கள் திருடப்பட்டது இது குறித்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை முதல்வர் ரத்தினவேல் தல்லாகுளம் காவல்நிலையத்தில் புகார் செய்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து திருடியவர்கள் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
வேலூர் அரசு பொறியியல் கல்லூரியில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைபுகார் குழு அமைப்பு
by mohan
written by mohan
வேலூர் தொரப்பாடியில் அரசு பொறியியல் கல்லூரி இயங்கிவருகிறது.இதுகுறித்து வேலூர் அரசு பொறியியல் கல்லூரி முதல்வர் முனைவர் மா.அருளரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:வேலூர் அரசு பொறியியல் கல்லூரியில் 2013-ல் ஏற்படுத்த பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டப்படி இந்த கல்லூரியில் உட்புகார் குழு உறுப்பினர்களாக இக்கல்லூரி மின்னணு மற்றும் தொடர்பியல்துறை பேராசிரியை டாக்டர் ரகிலா பிலால், கல்லுரி பொருளாளர் மற்றும் முதல்வரின் நேர்முக உதவியாளர் லதா.வேலுார் வழக்கறிஞர் முகமது அக்பர் பாஷா, வேலூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலக்குழு உறுப்பினர் தேசி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்து உள்ளார்,
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தை அடுத்த ஜெ.ஜெ.நகரில் 10 ஆண்டுகளாக மின் இணைப்பு இல்லாமல் குடியிருந்துவந்த காட்டுநாயக்கர் சமுதாயத்தவருக்கு நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் நடவடிக்கையால் செவ்வாய்கிழமை மின் இணைப்பு வழங்கப்பட்டது.நிலையூர் ஒம்சக்தி நகரை அருகே ஜே ஜே நகர் உள்ளது. இப்பகுதியில் 50க்கும் மேற்பட்ட காட்டு நாயக்கர் சமுதாயத்தினர் சுமார் 10 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். இப்பகுதி ரயில்வே நிர்வாகத்திற்கு சொந்தமானது எனக்கூறி வருவாய்துறையினர் பட்டா வழங்காததால், மாநகராட்சியினரும் வீட்டுவரியும் வசூலிக்கவில்லை.
இதனால் இப்பகுதியில் மின் இணைப்பு வழங்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் இப்பகுதியினர் புதிய அரசு பொறுப்பேற்றவுடன் மாவட்ட ஆட்சியரிடம் மின் இணைப்பு வழஹ்க கோரிக்கை விடுத்திருந்தனர். இது குறித்து தகவலறிந்த நிதி அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் மாவட்ட ஆட்சியர் அனீஸ்சேகருடன் கலந்து ஆலோசித்து, மின்வாரிய அதிகாரிகளுக்கு இப்பகுதி மக்களுக்கு மின்இணைப்பு வழங்க உத்தரவிட்டார். அதன் பேரில் கடந்த சில நாள்களாக இப்பகுதியில் மின் இணைப்பு வழங்க பணி நடைபெற்று முதற்கட்டமாக 6 வீடுகளுக்கு செவ்வாய்கிழமை மின் இணைப்பு வழங்கப்பட்டது. இதனை மதுரை அரசரடி மின்வாரிய செயற்பொறியாளர் பிரகாஷ் பாபு மின் இணைப்பை தொடங்கி வைத்தார். இதையடுத்து மகிழ்ச்சியடைந்த இப்பகுதி மக்கள் மின்வாரியதுறையினருக்கு சால்வை அணிவித்து, மின் இணைப்பு வழங்கிய தமிழக அரசுக்கும், நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனுக்கும் தங்களது நன்றிகளைத் தெரிவித்தனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
டெல்லியில் பெண் காவலர் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து தவ்ஹீத் ஜமாத் ஆர்ப்பாட்டம்..
by mohan
written by mohan
டெல்லியில் பெண் காவலர் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் கடையநல்லூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ஆண்கள், பெண்கள்,பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். டெல்லியில் கடந்த வாரம் ராபியா என்கிற பெண் போலீசார் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும், உண்மை குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய கோரியும் கடையநல்லூர் மணிக்கூண்டு அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் மாநில செயலாளர் செங்கோட்டை பைசல் மற்றும் மாநில மேலாண்மை குழு உறுப்பினர் அப்துந்நாசர் முன்னிலையில் மாவட்ட தலைவர் அப்துல் ஸலாம் தலைமையில் நடைபெற்றது.இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் அப்துல் பாசித்,மாவட்ட பொருளாளர் ஜலாலுதீன்,மாவட்ட துணைத்தலைவர் செய்யது மசூத் சாகிப், மாவட்ட துணை செயலாளர்கள் வல்லம் அஹ்மத்,பீர் முஹம்மது, பொட்டல் புதூர் சாதிக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில மேலாண்மை குழு தலைவர் எம்.எஸ்.சுலைமான் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். அதில் அவர் பேசுகையில், இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாக உலக அளவில் எடுக்கப்பட்ட புள்ளி விவரங்கள் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில் ஒன்றிய அரசு பெண்களுக்கான பாதுகாப்பை முன்னெடுக்க தவறிவிட்டது. பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. டெல்லியில் நடைபெற்ற இந்த சம்பவம் உலக அரங்கில் இந்தியாவிற்கு தலைகுனிவை ஏற்படுத்தி உள்ளது. காவல்துறையில் பணியாற்றிய பெண் போலீசாருக்கு ஏற்பட்ட இந்த பாதிப்பு என்றால் மற்ற அரசு ஊழியர்களாக இருக்கும் பெண்களின் நிலை என்னவாகும் என்ற அச்சம் எழுந்துள்ளது. 21 வயதான இப்பெண் மனித மிருகங்களால் 50க்கும் மேற்பட்ட இடங்களில் பெண் போலீசாரின் உடல் சிதைக்கப்பட்டு கற்பழித்து படுகொலை செய்யப்பட்டு உள்ளார். இந்த சம்பவம் வெளி வராத வகையில் மூடி மறைக்கும் வேலையே அரங்கேற்றப்பட்டுள்ளது. டெல்லியின் பாதுகாப்புத்துறை ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது என்கிற போது இந்த குற்றவாளிகள் இதுவரை கைது செய்து தண்டிக்கப்படாமல் இருப்பது ஒன்றிய அரசு பெண்களுக்கு பாதுகாப்பளிக்க தவறிவிட்டது என குற்றம் சாட்டினார். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தொண்டரனி பொறுப்பாளர் புகாரி, மாணவரணி பொருப்பாளர் அலாவுதீன் மற்றும் தென்காசி மாவட்டம் கடையநல்லூர், ரஹ்மானியாபுரம், மக்காநகர் ,மதினா நகர், தவ்ஹீத் நகர், இக்பால் நகர், மாவடிக்கால், திரிகூடபுரம், புளியங்குடி, வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில், தென்காசி, அச்சன்புதூர், வடகரை, செங்கோட்டை, வாவா நகரம்,வீராணம், மாலிக்நகர், பொட்டல்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஆண்கள், பெண்கள் குழந்தைகள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இறுதியில் மாவட்ட துணைச் செயலாளர் வல்லம் அஹ்மத் நன்றி கூறினார்.
செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி சார்பாக மறைந்த மூக்கையாத் தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது
by mohan
written by mohan
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பீகே மூக்கையா தேவரின் 42 ஆவது நினைவு தினம் நடைபெற்றது இதில் பல்வேறு கட்சியினர் மூக்கையா தேவரின் நினைவிடத்தில் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் இதில் அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி சார்பாக மாவட்ட பொது செயலாளர் ஐ ராஜா தலைமையில் மாநில துணைத்தலைவர் கர்ணன் முன்னிலையில் மாநிலச் செயலாளர் பாஸ்கர பாண்டி மாவட்ட கவுன்சிலர் காசி ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் மணிகண்டன் மாவட்ட செயலாளர் ஆதிசேடன் வடிவேல் இளைஞரணி அசோக் எவரஸ்ட் பால்சாமி ஒன்றிய செயலாளர் ராமகிருஷ்ணன் மற்றும் கட்சி நிர்வாகிகள் மறைந்த பீகே மூக்கையா தேவரின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார் இதில் அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
உசிலை சிந்தனியா
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தமிழ்தேசிய பார்வர்ட் பிளாக் கட்சியின் சார்பாக மறைந்த மூக்கையாத்தேவர் 42 வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
by mohan
written by mohan
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பி கே மூக்கையா தேவரின் 42 ஆவது நினைவு தினம் நடைபெற்றது, இதில் பல்வேறு கட்சியினர் மூக்கையாத் தேவர் நினைவிடத்தில் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர், இதன் ஒரு பகுதியாக தமிழ் தேசிய பார்வர்டு பிளாக் கட்சியின் நிறுவனத்தலைவர் சங்கிலி தலைமையில் மறைந்த மூக்கையா தேவர் நினைவிடத்தில் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் உடன் மாநில இளைஞரணி செயலாளர் அலெக்ஸ்,மாநில சிறுபான்மை அணி தலைவர் ரபீக்பாய், மதுரை புறநகர் மாவட்ட பொதுச் செயலாளர் மருதுஜி, மற்றும் தமிழ் தேசிய பார்வர்டு பிளாக் கட்சி நிர்வாகிகள் சேதுராமன், மது, நடராஜன், சங்கர், விஜயகுமார், விக்கி தேவர், மதன், தங்கம், மற்றும் பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.
உசிலை சிந்தனியா
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
முகூர்த்த நாள் என்பதால் கோவில்களில் கட்டுக்கடங்காத கூட்டம்.நோய்த் தொற்று பரவும் அபாயம்
by mohan
written by mohan
அறுபடை வீடுகளான முதல் படைவீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் இன்று முகூர்த்த நாள் என்பதால் அதிக அளவு திருமணங்கள் நடைபெற்று வருகிறது திருமணத்துக்கு வந்த உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கவசம் அணியாமலும் சமூக இடைவெளியை பின்பற்றாமல் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்கள் ஒரே இடத்தில் கூட்டம் கூட்டமாய் இருப்பதால் நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது காவல்துறை ஒலிபெருக்கி மூலமாக சமூக இடைவெளியை பின்பற்றுங்கள் முக கவசம் அணிந்து வாருங்கள் என அறிவிப்பு செய்தாலும் அதை உதாசீனம் செய்யும் வகையில் பொதுமக்கள் நடந்து கொள்கிறார்கள் என குற்றச்சாட்டு எழுந்து உள்ளது இதனால் கொரொண நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர் மக்கள் விழிப்புடன் இல்லை என்றால் கொரொண நோய் தொற்று ஒழிக்க முடியாது என வேதனையுடன் தெரிவித்தனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரையில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரிடம் சுமார் 12 லட்சம் ரூபாய் திருட்டு.!! எச்சரிக்கையாய் இருக்க வங்கி நிர்வாகம் வேண்டுகோள்
by mohan
written by mohan
மதுரை பழங்காநத்தம் அக்ரஹாரம் தெரு பகுதியை சேர்ந்தவர் நாராயணன் இவருக்கு வயது 70,இவர் தலைமை ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்று தன்னுடைய மனைவியுடன் வசித்து வருகிறார்,இந்த நிலையில் வீட்டின் தொலைபேசி எண்ணுக்கு அழைத்து மர்மநபர் வங்கி மேலாளர் பேசுவதாக கூறி தங்களுடைய வங்கி விவரங்களை கேட்டுள்ளார், நாராயணனும் வங்கி அதிகாரிகள் என நினைத்து அனைத்து தகவலையும் தெரிவித்த நிலையில் வங்கியில் இருந்து சுமார் 12 லட்சம் ரூபாய் எடுக்கப்பட்டுள்ளதாக குறுந்தகவல் வந்துள்ளது, அதனை கண்டு அதிர்ச்சி அடைந்த நாராயணன் மதுரை மாநகர சைபர் கிரைம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகிறார்கள். வங்கி அதிகாரி நம்மிடம் தெரிவிக்கையில். வங்கியிலிருந்து வாடிக்கையாளர்களுக்கு தினசரி குறுந்தகவல் மூலமாகவும் வங்கியில் அறிவிப்பு பலகை மூலமாக மற்றவர்களிடம் தங்களது ஏடிஎம் கார்டில் உள்ள எண்களையும் மற்றும் ரகசிய குறியீட்டு எண்ணையும் யாருக்கும் பகிர வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுத்து உள்ளோம் மேலும் தொலைபேசி மூலமாக அதிக அளவில் மோசடி நடைபெற இருப்பதால் வங்கியில் இருந்து யாராவது கூப்பிட்டால் இணைப்பை துண்டித்து நானே தாக இருந்தாலும் வங்கியில் நேரடியாக வந்து பார்த்துக் கொள்கிறோம் என பலமுறை வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை செய்து வருகிறோம் என தெரிவித்தார் வாடிக்கையாளர்கள் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டுமென வாடிக்கையாளருக்கு கேட்டுக்கொண்டுள்ளார் எந்த ஒரு வங்கியும் அதிகாரிகளும் தொலைபேசி வாயிலாக ஏடிஎம் கார்டு மாற்றம் செய்வதற்கு தொலைபேசி மூலமாக அழைக்க மாட்டார்கள் எனவும் இதுபோன்று தொலைபேசி அழைப்பு வந்தால் இணைப்பை உடனடியாகத் துண்டித்து விடுங்கள் என எச்சரிக்கை விடுத்துள்ளார்
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பொது மக்களின் பயன்பாட்டிற்காக 3கி.மீ தூரம் கண்மாய்கரை பாதையை தன் சொந்த செலவில் சீரமைத்த உசிலம்பட்டி எம்.எல்.ஏ
by mohan
written by mohan
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்டது பன்னியான் கிராமம்.இக்கிராமத்தில் சுமார் 800க்கும் மேற்ப்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.செக்காணத்திலிருந்து பன்னியான் கிராமத்திற்கு சாலை வசதி இருந்த போதும் இக்கிராம மக்களின் பெரும்பாலனோர் தோட்டம் மற்றும் மற்ற கிராமங்களுக்கு செல்வதற்கு கிராம கண்மாய் கரை பாதையையே உபயோகப் படுத்தி வந்தனர்.நாளடைவில் இப்பாதை சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்து முட்புதர்கள் படர்ந்து கிராம மக்கள் பயன்படுத்த முடியாத அளவுக்கு இருந்துள்ளது
.மேலும் கண்மாய்க்குள் இறங்கி பாதையாகப் பயன்படுத்தி வந்தாலும் மழைக்காலங்களில் கண்மாய்க்குள் இறங்கிச் செல்ல முடியாது என்பதால் பொது மக்களின் போக்குவரத்திற்கு பிரதானமாக உள்ள இந்த கண்மாய் கரைப் பாதையை சீரமைக்க கோரி செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலத்தில் மனு அளித்துள்ளனர்.ஆனால் மனுவை பரிசீலித்த அதிகாரிகள் ஊராட்சியில் நிதிப்பற்றாக்குறை நிலவுவதால் இவ்வேலையை உடனடியாகச் செய்ய முடியாது எனக் கைவிரித்துள்ளனர்.இத்தகவல் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பனுக்குத் தெரிவிக்கப்பட அவர் உடனடியாக ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளை தொடர்பு கொண்டார்.அவர்கள் தங்கள் நிலைமையை எடுத்துக் கூற அய்யப்பன் தனது சொந்த செலவிலேயே கண்மாய்கரைப் பாதையை சீரமைக்க முடிவு செய்தார்.இதன்படி சுமார் 3 கி.மீ நீளமுள்ள கிராமமக்கள் பயன்படுத்தும் பன்னியான் கண்மாய் கரைப்பாதை சீரமைககப்பட்டு வருகின்றன. சீமைக்கருவேல மரங்கள் வெட்டப்பட்டு முட்புதற்கள் அகற்றப்பட்டு பாதையை சீரமைக்கும் பணி தற்போது நடைபெற்றது.இப்பாதை சீரமைப்பிற்காக ஆகும் செலவு ரூ5 லட்சத்தை தனது சொந்த செலவில் வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.கிராம மக்களின் தேவையறிந்து மக்களின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றிக் கொடுத்த உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பனின் செயல் அப்பகுதி மக்களிடையே பெரிதும் பாராட்டைப் பெற்றுள்ளது.
உசிலை சிந்தனியா
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
வலிமை மிக்க அணுக்கரு விசையை உருவாக்கும் மெசான் (pi meson) என்ற துகளைக் கண்டு பிடித்தத, நோபல் பரிசு பெற்ற ஹிடேகி யுகாவா நினைவு தினம் இன்று (செப்டம்பர் 08,1981).
by mohan
written by mohan
ஹிடேகி யுகாவா (Hideki Yukawa) ஜனவரி 23, 1907ல் ஜப்பானில் டோக்கியோ பெருநகரில் பிறந்தார். இவருடைய தந்தை ‘டகுஜி ஒகாவா’ என்பவராவார். தான் பிறந்த ஊரிலேயே இளமைக் கல்வியைப் பெற்ற இவர், கியோடோ என்ற இடத்தில் அமைந்திருந்த கியோட்டோ இம்பீரியல் பல்கலைக் கழகத்தில் சேர்ந்து படித்துப் பட்டம் பெற்றார். 1929-லிருந்து நான்கு ஆண்டுகள் விரிவுரையாளராகப் பணிபுரிந்தார். பட்டதாரியான இவர் கோட்பாட்டு இயற்பியலில் ஆர்வம் செலுத்தினார். குறிப்பாக ஆதாரத் துகளைக் (Elementary particles) கண்டறிவதில் அதிக ஆர்வம் செலுத்தினார். 1932ல் ‘சுமிகோ’ என்ற பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் பிறந்தனர். 1932-39 க்கு இடைப்பட்ட கலத்தில் விரிவுரையாளராகவும், பிறகு ஒசாக்கா பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியராகவும் பணியாற்றினார். அங்கு ஆய்வுகளில் ஈடுபட்ட ஹிடேகி 1935ல் ஆதாரத் துகள்களுக்கிடையே ஏற்படும் உள்வினைகள் என்பது பற்றி இவருடைய ஆய்வறிக்கையை வெளியிட்டார்.அறிக்கையில் அணுக்கரு விசைக்கான புதிய புலக் கொள்கையை உருவாக்கியிருந்தார். அதில் மெசான் என்ற பொருளின் வெளிப்பாட்டைக் குறிப்பிட்டார். 1937ல் அமெரிக்க இயற்பியலாளர்கள் காஸ்மிக் கதிர்களில் இருந்து வெளிப்படும் ஒரு வகை மெசான் என்ற துகளைக் கண்டு பிடித்தது இவருடைய ஆய்வுக்கு ஊக்கமூட்டுவதாக இருந்தது. எனவே, மெசான் கொள்கையை விரிவாக்குவதில் இவருடைய சொந்தக் கருத்துகளின் அடிப்படையில் தீவிரமாக ஈடுபட்டார். 1938ல் இவருக்கு முனைவர் பட்டம் கிடைத்தது. 1947லிருந்து ஆதாரத் துகள்களின் பொதுக் கொள்கை அடிப்படையில் தீவிரமான ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். 1948ல் அமெரிக்காவிலும் 1949 முதல் அமெரிக்காவிலுள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்திலும் வருகை தரும் பேராசிரியராக செயல்பட்டார்.யுகாவா வலுவான அணுசக்தியின் வரம்பிலிருந்து (அணுக்கருவின் ஆரத்திலிருந்து), சுமார் 100 MeV / c2 நிறை கொண்ட ஒரு துகள் இருப்பதைக் கணித்தார். ஆரம்பத்தில் 1936 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர், மியூயான் (ஆரம்பத்தில் “மு மீசன்” என்று அழைக்கப்பட்டது) இந்த துகள் என்று கருதப்பட்டது. ஏனெனில் இது 106 MeV / c2 நிறை கொண்டது. இருப்பினும், பின்னர் மேற்கொள்ளப்பட்ட சோதனைகள், மியூயான் வலுவான அணுசக்தி தொடர்புகளில் பங்கேற்கவில்லை என்பதைக் காட்டியது. நவீன சொற்களில், இது மியூனை ஒரு லெப்டனாக ஆக்குகிறது. ஆனால் ஒரு மீசன் அல்ல. இருப்பினும், வானியற்பியலாளர்களின் சில சமூகங்கள் தொடர்ந்து மியூனை “மு-மேசன்” என்று அழைக்கின்றன.1947 ஆம் ஆண்டில், இங்கிலாந்தில் உள்ள பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தில் சிசில் பவல், சீசர் லேட்ஸ், கியூசெப் ஒச்சியாலினி மற்றும் பலர் இணைந்து முதல் உண்மையான மீசன்கள், சார்ஜ் செய்யப்பட்ட பியோன்கள் கண்டுபிடிக்கப்பட்டன. துகள் முடுக்கிகளின் வருகை இன்னும் வரவில்லை என்பதால், உயர் ஆற்றல் கொண்ட துணைத் துகள்கள் வளிமண்டல அண்ட கதிர்களிலிருந்து மட்டுமே பெறப்படுகின்றன. புகைப்படத் தகடுகளின் வளர்ச்சியின் பின்னர், குழம்புகளின் நுண்ணிய பரிசோதனையானது சார்ஜ் செய்யப்பட்ட துணைஅணு துகள்களின் தடங்களை வெளிப்படுத்தியது. பியோன்கள் முதலில் அவற்றின் அசாதாரணமான “இரட்டை மீசன்” தடங்களால் அடையாளம் காணப்பட்டன. அவை அவற்றின் சிதைவால் ஒரு புட்டேடிவ் மீசனாக விடப்பட்டன. துகள் ஒரு மியூயானாக அடையாளம் காணப்பட்டது. இது பொதுவாக நவீன துகள் இயற்பியலில் மீசன் என வகைப்படுத்தப்படவில்லை.ஜப்பானில் இருந்த அறிவார்ந்த கழகங்கள் இவருடைய திறமையை உணர்ந்தன. குறிப்பாக ஜப்பான் பல்கலைக் கழகம், இயற்பியல் கழகம், ஜப்பான் அறிவியல் குழு ஆகியவை இவரைத் தங்கள் உறுப்பினராக ஏற்றுக் கொண்டன. ஒசாக்கா பல்கலைக்கழகம் இவரை வருகை தந்து பாடம் பயிற்றுவிக்கும் பேராசிரியராக அமர்த்திக்கொண்டது. கியோட்டோ பல்கலைக்கழகம் அடிப்படை அறிவியல் ஆய்வு நிறுவனத்தின் இயக்குநராக, இவருடைய பெயரிடப்பட்ட யுகாவா கூடத்தில் அமைந்துள்ள அதற்கான அலுவலகத்தில் இருந்து செயல்பட்டார். அமெரிக்க இயற்பியல் கழகம், அமெரிக்க தேசிய அறிவியல் கழகம் ஆகியவை இவரை தங்கள் கழகத்தின் அயல்நாட்டு உறுப்பினராகத் தேர்ந்தெடுத்தன. 1940ல் ஜப்பான் கழகத்தின் இம்பீரியல் பரிசு 1943-ல் பண்பட்டை அலங்கரிக்கும் தகுதிப் பரிசு (Decoration of culturalment) ஆகியவை இவருக்கு வழங்கப்பட்டன.யுகாவா பல ஆய்வுக் கட்டுரைகளை எழுதி வெளியிட்டதோடு சில நூல்களையும் எழுதியுள்ளார். அவற்றுள் ‘துகள்கற்றை எந்திரவியலுக்கான முன்னுரை’ (Introduction to Quantum Mechanics) 1946, ‘ஆதாரத் துகள் கோட்பாட்டுக்கான முன்னுரை’ (Introductioan to the Theory of Elementary Particles-1948) ஆகிய இரண்டு நூல்களை ஜப்பானிய மொழியில் எழுதி வெளியிட்டார். ‘கோட்பாட்டு இயற்பியல் முன்னேற்றங்கள்’ என்ற தலைப்பில் வெளிவந்த ஆங்கிலப் பருவ இதழின் ஆசிரியராக இருந்தும் செயல்பட்டார். பாரிஸ் பல்கலைக் கழகம், எடின்பர்க் ராயல் கழகம், இந்திய அறிவியல் கழகம், அனைத்துலக தத்துவ மற்றும் அறிவியல் கழகம், பான்டிபிசியா அறிவியல் கழகம் ஆகியவை இவரை தங்களது அயல் நாட்டு உறுப்பினராக தேர்ந்தெடுத்துக் கொண்டன.எல்லாவற்றுக்கும் மேலாக ‘கியோட்டோ நகர் மதிப்பியல் குடிமகன்’ (Honarary citizen of the city of Kyoto, Japan) என்ற சிறப்பு இவருக்கு வழங்கப்பட்டது. இவரைச் சிறப்பிக்கும் வகையில் இவருடைய உருவம் பொறித்த அஞ்சல் வில்லைகள் வெளியிடப்பட்டன. யுகாவா அணுக்கருவினுள் ஏற்படும் வலிமை மிக்க அணுக்கரு விசையை உருவாக்கும், எலக்ட்ரானை விட பல மடங்கு கனமான ஆதாரத் துகளைக் கண்டறிந்தவர். 1949ல் இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற கோட்பாட்டு இயற்பியலாளர். முதன் முதலில் ஜப்பானுக்கு நோபல் பரிசைப் பெற்றுத்தந்த ஹிடேகி யுகாவா செப்டம்பர் 8,1981ல் தனது 74வது அகவையில் ஜப்பான், கியோட்டோ என்ற ஊரில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
எழுத்தறிவின் முக்கியத்துவத்தை உணர்த்தும் அனைத்துலக எழுத்தறிவு தினம் இன்று (செப்டம்பர் 8)
by mohan
written by mohan
அனைத்துலக எழுத்தறிவு நாள் உலகெங்கும் செப்டம்பர் 8ம் நாளன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளை யுனெஸ்கோ நிறுவனம் நவம்பர் 17, 1965ல் உலக எழுத்தறிவு நாளாகப் பிரகடனம் செய்தது. இது 1966ம் ஆண்டு தொடக்கம் கொண்டாடப்படுக்கிறது. எழுத்தறிவின் முக்கியத்துவத்தை தனிப்பட்ட மக்களுக்கும், சமூகத்துக்கும், அமைப்புக்களுக்கும் அறியவைப்பது இதன் முக்கிய நோக்கம் ஆகும். உலகில் சுமார் 781 மில்லியன் வயது வந்தோர் அடிப்படை எழுத்தறிவு அற்றவர்களாக இருக்கிறார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. இவர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் பெண்கள் ஆவர். அத்துடன், சுமார் 103 மில்லியன் சிறார்கள் பாடசாலை வசதிகள் அற்ற நிலையில் உள்ளார்கள். இதனால் இவர்கள் அடிப்படைக் கல்வியான எழுத, வாசிக்க, எண்ணத் தெரியாதவர்களாக இருக்கிறார்கள்.
யுனெஸ்கோவின் “அனைவருக்கும் கல்வி பற்றிய உலக அறிக்கை (2006)” அறிக்கையின்படி, தெற்கு மற்றும் மேற்கு ஆசியாப் பகுதிகளிலேயே மிகக் குறைந்த வீதமானோர் (வயது வந்தோரில்) (58.6%) படிப்பறிவில்லாமல் உள்ளனர். அதற்கு அடுத்த படியாக உள்ள பகுதிகள் ஆப்பிரிக்கா (59.7%), அரபு நாடுகள் (62.7%). தனிப்பட்ட நாடுகளை எடுத்துக் கொண்டால் மிகக் குறைந்த எழுத்தறிவில்லாதோர் புர்கினா பாசோ (12.8%), நைஜர் (14.4%), மாலி (19%). அறிக்கையின் படி எழுத்தறிவின்மைக்கும் நாடுகளின் வறுமைக்கும் உள்ள நெருங்கிய தொடர்பை அறிக்கை எடுத்துக்காட்டுகிறது. எந்த மொழியிலும் இலகுவான வசனங்களை எழுதவும் படிக்கவும் தெரியாமையே எழுத்தறிவின்மையாகும் என ஐநாவின் சாசனம் எழுத்தறிவின்மையை வரையறுக்கிறது.
கல்விக்கு அடிப்படையாக விளங்குவது எழுத்தறிவு. இது ஒவ்வொருவரின் அடிப்படை உரிமை. எழுத்தறிவு பெற்றால்தான், ஜனநாயகத்தில் உரிமைகளை நிலை நாட்ட முடியும். சமூக மற்றும் மனித முன்னேற்றத்துக்கு இது அவசியம். எனவே எழுத்தறிவு பெறுவது ஒருவரின் கடமை, அவசியம், கட்டாயம். ஏதாவது ஒரு மொழியில், புரிதலுடன் சரியாக பேசவும், எழுதவும் தெரிந்தவரே எழுத்தறிவு பெற்றவர். மற்றபடி, எழுத்தறிவு பெற்றவராக கருத, குறிப்பிட்ட வகுப்பு வரை படித்திருக்க வேண்டும் என எந்த அளவும் தீர்மானிக்கப்படவில்லை. எழுத்தறிவு மூலம், அமைதி மற்றும் ஜனநாயகத்தை நிலை நிறுத்த முடியும். இது இன, மொழி, வயது, சமூக பாகுபாடின்றி அனைவருக்கும் கிடைக்க வேண்டும்.
2011 சென்சஸ் கணக்கின் படி, இந்தியாவின் எழுத்தறிவு, 74 சதவீதமாக உள்ளது. இதில் ஆண்கள் 82.14 சதவீதம், பெண்கள் 65.46 சதவீதம். இது 2001ம் ஆண்டு கணக்கெடுப்பை விட 9.2 சதவீதம் அதிகம். தமிழக எழுத்தறிவு சதவீதம், 80.4 சதவீதமாக உள்ளது. இது 2001ம் ஆண்டு கணக்கெடுப்பை விட 6.9 சதவீதம் அதிகம். எழுத்தறிவில் கேரளா முதலிடத்திலும், பீகார் கடைசி இடத்திலும் உள்ளது. நாட்டில் எழுத்தறிவு சதவீதம் ஓரளவுக்கு அதிகரித்திருப்பது வரவேற்கத்தக்க விஷயம்.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஆவரம்பட்டி சோழராஜபுரம் தெரு பகுதியில் வசித்து வருபவர் தனலட்சுமி (வயது 56). இவர் நேற்று அப்பகுதியில் நடைபெற்ற கொரோணா தடுப்பூசி முகாமில் தடுப்பூசி போட்டுக்கொண்டார்.வீட்டிற்கு சென்ற சிறிது நேரத்தில் வாந்தி மயக்கம் ஏற்பட்டதன் விளைவாக அருகில் இருந்த உறவினர்கள் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கிருந்து தனியார் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார்.இதுகுறித்து உறவினர்கள் கூறும்போது, சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தம் காரணமாக சிகிச்சை பெற்று மாத்திரை உண்டு வரும் நிலையில் கொரோணா பரிசோதனை முகாமில் எவ்வித பரிசோதனையும் செய்யாமல் ஒரு தடுப்பு ஊசி செலுத்தி அதன் விளைவாக தான் உயிரிழப்பு நிகழ்ந்ததாக உறவினர்கள் குற்றச்சாட்டு வைக்கின்றனர்மேலும் இதனை கவனத்தில் கொண்டு தடுப்பு முகாமில் உரிய பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் எனவும் இறந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு நிவாரண நிதி வழங்க வேண்டும் உறவினர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராஜபாளையத்தில் ஊர்காவல்படை காலிப் பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு நடைபெற்றது 69 பேர் பங்கேற்பு .
by mohan
written by mohan
விருதுநகர் மாவட்டம் ஊர்க்காவல் படை காலியாக உள்ள படைத்தளபதி படைப்பிரிவு தளபதி உதவி படைப்பிரிவு தளபதி பிரிவு தலைவர் பிரிவு உதவி தலைவர் உள்ளிட்ட 56 காலி இடங்களுக்கு பதவி உயர்வு தேர்வு நடைபெற்றது உலக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மனோகரன் காவல் கண்காணிப்பாளர் குத்தாலிங்கம் .துணை காவல் கண்காணிப்பாளர் ஆயுதப்படை சிவகுமார் ஊர்க்காவல் படை தளபதி ராம்குமார் வட்டார தளபதி அருள் செல்வி ஆகியோர் மேற்பார்வையில் எழுத்துத் தேர்வு நடைபெற்றது.எழுத்துத்தேர்வு இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளி வைத்து நடைபெற்றது இந்த தேர்வில் 69 பேர் கலந்து கொண்டனர் இதில் 47 பேர் தேர்ச்சி பெற்று பதவி உயர்வு பெற்றனர் தேர்வு ஏற்பாடுகளை சார்பு ஆய்வாளர் லாவண்யா மற்றும் ஊர்க்காவல் படை வீரர்கள் கம்பெனி கமாண்டராக கண்ணன் கருப்பசாமி உள்ளிட்ட சிறப்பாக செய்திருந்தனர்…
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் சகாயம் அவர்களின் வழிகாட்டுதலுடன் இயங்க கூடிய நேர்மை ஐ.ஏ.எஸ் பயிற்சி மையத்தில் இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்கியுள்ளன.
by mohan
written by mohan
மதுரை தெற்குவாசல் பகுதியில் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம்அவர்களின் வழிகாட்டுதலின்படி இயங்கி வரும் நேர்மை ஐ.ஏ.எஸ் அகாடமி பயிற்சி மையத்தில், குரூப்-2 மற்றும் குரூப் 4-தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டதுஇந்த நிறுவனம் கடந்த எட்டு வருடமாக இலவச பயிற்சியை தொடங்கி சிறப்பாக சேவையாற்றி வருகிறது தற்போது 80 மாணவர்கள் இலவசமாக பயிற்சி பெற்று வருகின்றனர் தற்போது டிஎன்பிஎஸ்சி மற்றும் யுபிஎஸ்சிகான இலவச பயிற்சிகள் அளித்து வருகின்றனர் இனிவரும் காலங்களில் வரவிருக்கும் தேர்வுக்கான பயிற்சிகள் அளிக்கவிருப்பதாகவும் தெரிவித்தனர் மேலும் தங்களுடைய நேர்மை ஜ.ஏ.எஸ் அகடாமியில் இலவச நூலகம் செயல்பட்டு வருவதாகவும் போட்டி தேர்வில் பங்குபெறும் மாணவ மாணவியர்கள் காலை 6 மணியிலிருந்து 9 மணிவரை இலவசமாக பயன்படுத்திகொள்ளலாம் என்று தெரிவித்தனர் மேலும் தங்களிடம் படித்த மாணவ மாணவியர்கள் அளிக்கும் சிறு நன்கொடையின் மூலம் செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர்இந்நிகழ்வில் நிர்வாக இயக்குனர் சுஜாதா பார்த்தசாரதி மக்கள் பாதை ஒருங்கிணைப்பாளர் நாகஜோதி மற்றும் கார்த்திக் சுந்தரம் சிறப்பு பயிற்சியாளர் குணசேகரன் ஆகியோர் கலந்து கொண்டனர். இத்தேர்வுக்கான பயிற்சியில் மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் ஆதரவற்றோர்களுக்குமுன்னுரிமைவழங்கப்படுகின்றன..
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இனிமேல் குடிக்க மாட்டோம் என பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தால் ஜாமீன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நிபந்தனை.
by mohan
written by mohan
திருச்சியைச் சேர்ந்த சிவா, கார்த்திக் ஆகிய இருவரும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தனர். அதில், “நண்பர்கள் சுரேஷ், பாண்டியன் உள்ளிட்டோருடன் சேர்ந்து மது அருந்திய நிலையில், வாய் தகராறு ஏற்படவே பீர் பாட்டிலால் சுரேஷை தாக்கியதாக எங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது பொய்யாக பதிவு செய்யப்பட்ட வழக்கு. கணக்கு காண்பிக்கும் நோக்கில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.ஆகவே இந்த வழக்கில் ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி புகழேந்தி, மது அருந்தியதன் காரணமாகவே இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளது. ஆகவே மனுதாரர்கள் இருவரும் இனிமேல் குடிக்க மாட்டோம் என பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தால், ஜாமீன் வழங்குவதாக கூறி வழக்கை திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்தார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இந்து ஆலயங்களை திறக்கக்கோரி தமிழக முதல்வருக்கு அஞ்சல் அட்டை அனுப்பி நூதன முறையில் ஆர்ப்பாட்டம்.
by mohan
written by mohan
மதுரை தலைமை தபால் நிலையம் முன்பாக இந்து ஆலய பாதுகாப்பு இயக்கத்தினர், அதன் மாநில செய்தி தொடர்பாளர் சுந்தரவடிவேல் தலைமையில், 100-க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவை காரணம் காட்டி வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் இந்து அறநிலையத்துறைக்கு கீழ் உள்ள அனைத்து கோயில்களையும் மூடி, பக்தர்களை அனுமதிக்க மறுக்கும் தமிழக அரசைக் கண்டித்து கோஷங்களை எழுப்பியும், தினந்தோறும் இந்து ஆலயங்களை திறக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து, அஞ்சல் அட்டைகளை தமிழக முதல்வருக்கு தபால் பெட்டிகளில் போட்டு நூதனமுறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தனியார் பொறியியல் கல்லூரியில் சுயநிதி பிரிவில் உள்ள பேராசிரியர் 8 பேரை நீக்கியதை கண்டித்து ஆர்ப்பாட்டம்.
by mohan
written by mohan
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அருகே உள்ள தியாகராஜா பொறியியல் கல்லூரி உள்ளது. இங்கு சுயநிதி பிரிவில் பணிபுரியும் 8 பேராசிரியர்களை கல்லூரி நிர்வாகம் பணி நீக்கம் செய்ததை கண்டித்து மூட்டா மற்றும்டானசெக் அமைப்பை சேர்ந்தவர்கள்கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்.கடந்த மூன்று ஆண்டுகளில் 44 பேர் கல்லூரியில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.தற்போது எவ்வித முன்னறிவிப்புமின்றி 8 பேரை பணி நீக்கம் செய்து அவர்களுக்கு மூன்று மாத சம்பளம் மட்டும் நிவாரணமாக அளிக்கப்பட்டுள்ளது இதனை வன்மையாக கண்டித்து மூட்டா மற்றும் டான்செக் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.கல்லூரி நிர்வாகம் பணிநீக்கம் செய்யப்பட்ட 8 பேரையும் உடனடியாக பணியில் சேர்க்க வேண்டும் என்றும் கடந்த ஆண்டுகளில் பணியிலிருந்து நீக்கப்பட்ட அவர்களுக்கு நிவாரண உதவித் தொகை வழங்க வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை எஸ்டிபிஐ கட்சியின் சார்பாக டெல்லி பெண் சபியாவுக்கு நீதி கேட்டு ராமநாதபுரம் தொகுதி பொருளாளர் தலைமையில் கீழக்கரைமேற்கு நகரும் கிழக்கு நகரும் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டம் கீழக்கரை ஜும்மா பள்ளி அருகில் நடைபெற்றது.
கிழக்குநகர் பொருளாளர் தொகுப்புரை நிகழ்த்தினார். மேற்குநகர் துணை தலைவர் அனைவரையும் வரவேற்றார் இதில் pfi நகர் தலைவர் நதீர் கண்டன கோஷம் நிகழ்த்தினார். மாவட்ட செயலாளர் ஜாபீரா மற்றும் பஹ்மீதா கண்டன கோஷம் நிகழ்த்தினர். நகர் தலைவர் பைசல் கருத்துரை நகர் நிகழ்த்தினார். மாவட்டபொது செயலாளர் ஜெமீல் சிறப்புரை ஆற்றினார்.
இந்நிகழ்வில் pfi மாவட்ட செயலாளர் செய்யது இப்ராஹீம் மற்றும் டிவிஷன் தலைவர் ஹமீது சாலிஹ் மற்றும் sdpi மாவட்ட செயலாளர் நஜிமுதீன் நகர் செயலாளர் கீழைஅஸ்ரப் துணை தலைவர்கள் அபுதாஹிர், ஹாஜா அலாவுதீன் மற்றும் மாவட்ட தொகுதி நகர் கிளைகளின் நிர்வாகிகளும் பெண்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை மாற்றி பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த கோரி ஆர்ப்பாட்டம்.
by mohan
written by mohan
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அரசு ஊழியர்களின் ஓய்வூதியம் தொடர்பாக நிதியமைச்சர் தெரிவித்த கருத்தினை கண்டித்தும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அரசு ஊழியர்களுக்கு அமல்படுத்த வலியுறுத்தியும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்திற்குமாவட்டஒருங்கிணைப்பாளர்கள் ஆசிரியர் சரவணன் மற்றும் பிரேமா ஆனந்தி இருவரும் கூட்டாக தலைமை ஏற்றனர். மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெயராஜா ராஜேஸ்வரன் கோரிக்கை விளக்க உரையாற்றினார்.தோழமை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் சோ.நடராஜன், சோலையன், மாரியப்பன், மனோகரன் ஆசிரியர் . காளிராஜ் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.ஆர்ப்பாட்டத்தில் 20 பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் திரளாக பங்கேற்றனர்..
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.