Home செய்திகள் தனியார் பொறியியல் கல்லூரியில் சுயநிதி பிரிவில் உள்ள பேராசிரியர் 8 பேரை நீக்கியதை கண்டித்து ஆர்ப்பாட்டம்.

தனியார் பொறியியல் கல்லூரியில் சுயநிதி பிரிவில் உள்ள பேராசிரியர் 8 பேரை நீக்கியதை கண்டித்து ஆர்ப்பாட்டம்.

by mohan

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அருகே உள்ள தியாகராஜா பொறியியல் கல்லூரி உள்ளது. இங்கு சுயநிதி பிரிவில் பணிபுரியும் 8 பேராசிரியர்களை கல்லூரி நிர்வாகம் பணி நீக்கம் செய்ததை கண்டித்து மூட்டா மற்றும்டானசெக் அமைப்பை சேர்ந்தவர்கள்கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்.கடந்த மூன்று ஆண்டுகளில் 44 பேர் கல்லூரியில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.தற்போது எவ்வித முன்னறிவிப்புமின்றி 8 பேரை பணி நீக்கம் செய்து அவர்களுக்கு மூன்று மாத சம்பளம் மட்டும் நிவாரணமாக அளிக்கப்பட்டுள்ளது இதனை வன்மையாக கண்டித்து மூட்டா மற்றும் டான்செக் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.கல்லூரி நிர்வாகம் பணிநீக்கம் செய்யப்பட்ட 8 பேரையும் உடனடியாக பணியில் சேர்க்க வேண்டும் என்றும் கடந்த ஆண்டுகளில் பணியிலிருந்து நீக்கப்பட்ட அவர்களுக்கு நிவாரண உதவித் தொகை வழங்க வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com