மாசிடோனியோ மெலோனி (Macedonio Melloni) ஏப்ரல் 11, 1798ல் பர்மாவில் பிறந்தார். 1824 ஆம் ஆண்டில், உள்ளூர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். ஆனால் 1831 புரட்சியில் பங்கேற்ற பின்னர் பிரான்சுக்கு தப்பிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. 1839 ஆம் ஆண்டில் அவர் நேபிள்ஸுக்குச் சென்று விரைவில் வெசுவியஸ் ஆய்வகத்தின் இயக்குநராக நியமிக்கப்பட்டார். 1845 ஆம் ஆண்டில், அவர் ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆஃப் சயின்ஸின் வெளிநாட்டு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.முக்கியமாக கதிரியக்க வெப்பத்தில் அவர் கண்டுபிடித்ததைக் இயற்பியலாளராக மெல்லோனியின் நற்பெயர் கொண்டுள்ளது. இது தெர்மோபில்டையரின் உதவியுடன் தயாரிக்கப்படுகிறது. இது தெர்மோபைல் மற்றும் கால்வனோமீட்டரின் கலவையாகும். 1831 ஆம் ஆண்டில், தாமஸ் ஜோஹன் சீபெக்கால் தெர்மோஎலக்ட்ரிசிட்டி கண்டுபிடிக்கப்பட்ட உடனேயே, அவரும் லியோபோல்டோ நோபிலியும் பல்வேறு கருவிகளால் பரவும் கறுப்பு-உடல் கதிர்வீச்சின் சிறப்பியல்புகளுடன் (நவீன மொழியில்) குறிப்பாக சம்பந்தப்பட்ட சோதனைகளில் கருவியைப் பயன்படுத்தினர்.கதிரியக்க வெப்பத்தை ஒளியைப் போலவே பிரதிபலிக்கவும், ஒளிவிலகவும், துருவப்படுத்தவும் முடியும் என்பதைக் காண்பிப்பதற்காக, தெர்மோபைல்கள், கவசங்கள் மற்றும் லோகாடெல்லியின் விளக்கு மற்றும் லெஸ்லியின் கனசதுரம் போன்ற ஒளி மற்றும் வெப்ப மூலங்களுடன் பொருத்தப்பட்ட ஆப்டிகல் பெஞ்சைப் பயன்படுத்தினார். பாறைகளின் காந்தவியல், மின்னியல் தூண்டல் மற்றும் புகைப்படம் எடுத்தல் ஆகியவற்றையும் ஆய்வு செய்தார்.அகச்சிவப்புக் கதிர்வீச்சு அல்லது வெப்பக் கதிர்வீச்சு பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டவர். வெப்ப மின்னிரட்டையின் அமைப்பின் வடிவத்தை மாற்றி அமைத்தவர். பாறை உப்பைப் பயன்படுத்தி வில்லைகளை உருவாக்கியவர். இதன் மூலம் கண்ணுறு ஒளி போல வெப்பக் கதிர்களையும் குவிக்கவும் பிரதிபலிக்கவும் இயலும் என்பதை மெய்ப்பித்தார். வெப்ப மின்னிரட்டையின் அமைப்பின் வடிவத்தை மாற்றி அமைத்த இத்தாலிய இயற்பியலாளர், மாசிடோனியோ மெலோனி ஆகஸ்ட் 11, 1854ல் தனது 56வது வயதில், போர்டிசியில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
செய்திகள்
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த வீரளூர் கிராமத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் ஊராட்சி மன்ற தலைவர் சான்பாஷா தலைமையில் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பிலும் மற்றும் கியூரி இல்லம் இணைந்து நடத்தும் 18 வயதிற்கு மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு கொரோனா தடுப்பு ஊசி போடும் சிறப்பு முகாம் நடைபெற்றது இம்முகாம் கலசபாக்கம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கௌதம்ராம் உத்தரவின் பேரில் மருத்துவ அலுவலர் டாக்டர் தேன்மொழி தலைமையிலான மருத்துவ குழுவினர் மருந்தாளர் சரவணன் செவிலியர்கள் மீனா கற்பகவல்லி சென்னம்மாள் பொதுமக்களை பரிசோதனை செய்து தடுப்பூசி வழங்கினார் இம்முகாமில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று குத்துவிளக்கு ஏற்றி முகாமை துவக்கி வைத்தார் திருவண்ணாமலை மாவட்ட மாற்றுத்திறனாளி நல சங்கத்தின் அலுவலர் ஜோதிலிங்கம் உடன் மாவட்ட மாற்றுத் திறனாளிகளின் துணை உதவி அலுவலர் முனுசாமி மற்றும் கியூரி அமைப்பின் நிறுவனர், தலைவர் தாமஸ் செயலாளர் சேவியர் பங்கேற்று பொதுமக்களிடம் ஆலோசனைகளை வழங்கினார் அப்போது அவர் கூறுகையில் ; மாற்றுத்திறனாளிகள் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் தடுப்பு ஊசி செலுத்தி கொள்வதால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது மூன்றாம் அலையில் இருந்து நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள மாற்றுத்திறனாளிகள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி அணியவேண்டும் மாற்றுத் திறனாளிகளுக்காக நடக்க முடியாமலும் வீட்டில் இருப்பவர்களை வீட்டிற்கே வந்து தடுப்பூசி செலுத்தவார்கள் மருத்துவ குழுவினர் மருத்துவர் அலுவலர் தேன்மொழி கூறுகையில் கர்ப்பிணி தாய்மார்கள் பாலூட்டும் தாய்மார்களும் மாற்றுத்திறனாளிகளும் எவ்வித அச்சமும் இன்றி ஆர்வமுடன் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ள வேண்டும் மாற்றுத்திறனாளிகள் நடக்க முடியாமல் இருந்தால் அவர்களின் வீட்டிற்கே சென்று தடுப்பூசி செலுத்த மருத்துவ குழுவினர் ஆகிய நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தினார் இதுவரை வீரளூர் கிராமத்தில் 800 நபர்களுக்கும், 50க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் ஆர்வமுடன் தாமாக முன்வந்து தடுப்பு ஊசி செலுத்தி கொண்டனர்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
புளியங்குடி அரசு மருத்துவமனை தரம் உயர்த்தப்பட வேண்டும்; எஸ்டிபிஐ கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்..
புளியங்குடி அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல முக்கிய தீர்மானங்கள் புளியங்குடி நகர எஸ்டிபிஐ கட்சி கூட்டத்தில் நிறை வேற்றப்பட்டது. தென்காசி மாவட்டம் புளியங்குடி நகர எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் நகர மற்றும் கிளை நிர்வாகிகள் கூட்டம் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நகரத் தலைவர் தமீம் அன்சாரி தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக எஸ்டிபிஐ கட்சியின் தென்காசி மாவட்டச் செயலாளர் இம்ரான் கான் கலந்து கொண்டார். புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகத்திற்கு அவர் வாழ்த்துக்களைத் தெரிவித்ததோடு, கட்சியை இன்னும் வலுவாக்குவது குறித்த ஆலோசனைகளையும் வழங்கினார். இந்த நிகழ்வில் துணைத் தலைவர் ஜார்ஜ், துணைச் செயலாளர் அகமது,பொருளாளர் நஸீர், நகரச் செயற்குழு உறுப்பினர் ஜெய்னுல் ஆப்தீன், மேற்கு கிளைத் தலைவர் ஷேக் முகம்மது, துணைச் செயலாளர் திவான் ஒலி, கிழக்கு கிளைத் தலைவர் நவாஸ் கான், துணைத் தலைவர் சதாம் உசேன்,துணைச் செயலாளர் அப்துல் ரஹீம்,தெற்குக் கிளைத் தலைவர் டேவிட், செயலாளர் மணி, உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: புளியங்குடி பகுதியில் சாலை போடப்படாத தெருக்களுக்கு உடனடியாக சாலைகள் அமைத்து தர வேண்டும், இப்பகுதியில் வாழ்கின்ற மக்கள் தங்களின் மருத்துவத் தேவைக்கு தென்காசி மற்றும் திருநெல்வேலி பகுதியில் உள்ள மருத்துவமனையை நாட வேண்டிய சூழ்நிலை உள்ளது. இந்நிலையை மாற்றி புளியங்குடி அரசு மருத்துவமனையின் தரத்தினை உயர்த்திட வேண்டும். வருகின்ற 2021 உள்ளாட்சித் தேர்தலில் புளியங்குடி நகராட்சிக்கு உட்பட்ட அதிகமான வார்டுகளில் போட்டியிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இறுதியாக நகரச் செயலாளர் அப்பாஸ் நன்றி கூறினார்.
செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கூடங்குளம் ராதாபுரம் இருக்கன்துறை போன்ற சுற்று வட்டார பகுதிகளில் இயங்கி வரும் கல்குவாரிகளை மூட வேண்டும், தொழிலாளர்களுக்கு விரோதமான 4 தொகுப்பு சட்டங்களை ரத்து செய்ய வேண்டும், கொரோனா கால நிவாரணமாக 7500 ரூபாய் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்களும் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை மாவட்டம் வள்ளியூர் பழைய பேருந்து நிலையத்தில் அனைத்து தொழிற்சங்கங்கள் , விவசாய சங்கங்கள் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் தொழிலாளர்களுக்கு விரோதமான 4 தொகுப்பு சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் , கொரோனா கால நிவாரணமாக 7500 ரூபாய் வழங்க வேண்டும் , புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் , பெட்ரோல் , டீசல், கேஸ் விலையை கட்டுப்படுத்த வேண்டும் , கூடங்குளம் பகுதிகளில் இயங்கும் கல்குவரிகளை ,மூட வேண்டும் போன்ற 17 அம்ச கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இந்த மனித சங்கிலி போராட்டத்தில் 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தென்காசி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பணிபுரிய வாய்ப்பு..தென்காசி மாட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு கொரோனா தடுப்பு பணிக்காக 6 மாத காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக 11, மருந்தாளுனர்கள், 11, ஆய்வக நுட்புனர்கள் மற்றும் 11,நுண்கதிர் வீச்சாளர்கள் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்காக அரசு அங்கீகாரம் பெற்ற அல்லது அரசால் அங்கீகாரம் வழங்கப்பட்ட தனியார் கல்லூரிகளில் படித்த கல்விச் சான்றுகளுடன் விண்ணப்பிக்க வேண்டும்.1. ஃபார்மசிஸ்ட் பணிக்கு கல்வித்தகுதி Diploma in Pharmacy படித்திருக்க வேண்டும். தமிழ்நாடு பார்மஸி கவுன்சிலில் பதிவு செய்து தொடர்ந்து புதுப்பித்திருக்க வேண்டும்.2. லேப் டெக்னீசியன் கிரேடு 2 பணிக்கு கல்வித்தகுதி King institute of Preventive அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இரண்டு வருட ஆய்வக நுட்புணர் படிப்பு முடித்திருக்க வேண்டும்.3. ரேடியோகிராஃபர் பணிக்கு கல்வித்தகுதி அரசு நடத்தும் கல்வி நிலையத்தில் அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இரண்டு வருட Diploma course in Radio Diagnosis Technology படித்திருக்க வேண்டும். மேலும் இதற்கான விண்ணப்ப படிவங்கள் தென்காசி, இணை இயக்குநர் நலப்பணிகள் அலுவலகத்தில் 09.08.2021 முதல் காலை 11.00 to 5.00 மணி வரை வழங்கப்பட்டு வருகிறது. விண்ணப்பதாரர்கள் மேற்படி அலுவலகத்தில் விண்ணப்ப படிவங்களை நேரடியாக பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 17.08.2021 மாலை 5.00 மணிக்குள் இணை இயக்குநர் நலப்பணிகள் அலுவலகம், அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை வளாகம், தென்காசி என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபாலிலோ சமர்ப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பதாரர்களுக்கு 24.08.2021 அன்று காலை 10.00 மணிக்கு தென்காசி, இணை இயக்குநர் நலப்பணிகள் அலுவலகம், அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை வளாகத்தில் வைத்து நேர்முகத் தேர்வு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. உரிய தகுதி உடையவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே எத்திலோடு ஊராட்சி, எ.ஆவாரம்பட்டியைச் சேர்ந்த முருகன் மகன் சந்தோஷ் வயது 18, பிச்சை மகன் பாண்டி வயது 22, நிலக்கோட்டையில் உள்ள தனியார் கம்பெனி கூலி வேலை செய்து வருகிறார்கள். இருவரும் நேற்று இரவு சுமார் 9 மணி அளவில் வேலையை முடித்து விட்டு தனது ஊருக்கு நிலக்கோட்டையில் இருந்து எ.ஆவாரம்பட்டி நோக்கி மதுரை ரோட்டில் தங்களது ஒரே மோட்டார் சைக்கிளில் 2 பேர்களும் கரியாம்பட்டி பிரிவு அருகே சென்றபோது அப்பகுதியில் ஒருவர் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது இருட்டு என்பதால் எதிர்பாராவிதமாக மோட்டார் சைக்கிள் சைக்கிள் மீது மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசி எறியப்பட்டு பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இதை அறிந்த நிலக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு முருகன் தலைமையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வாணி மற்றும் போலீசார் விரைந்து சென்று 2 பேர்கள் உடலையும் மீட்டு நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலமாக கொண்டு வரப்பட்டது. இதை அறிந்த எ.ஆவாரம்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் நிலக்கோட்டை அரசு மருந்து வமனைக்கு வந்தனர். அப்போது அங்கு நிறுத்தப்பட்டு இருந்த ஆம்புலன்ஸ் வண்டியை கையால் ஆத்திரத்தில் தாக்கியதாக கூறப்படுகிறது. இதன் 2 பேர்களின் உடலை பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இச்சம்பவம் இப்பகுதியில் பெரும் சோகத்தை ஆழ்த்தியுள்ளது. விபத்தில் இறந்து போன பாண்டி என்பவருக்கு பேச்சியம்மாள் என்ற மனைவி 7 மாத கர்ப்பிணியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
காஞ்சி லிங்கேஸ்வரர் திருக்கோயிலில் கொரோனா தொற்று ஒழிய வேண்டி சிறப்பு வழிபாடுகள் நடை பெற்றன.
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த தொற்றுக் காரணமாக ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பாதிக்கப் படுவோர் எண்ணிக்கையும் உயிரிழப்போர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இந்நிலையில், கொரோனா தொற்று ஒழிய வேண்டி, உலக நன்மைக்காகவும் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த காஞ்சி ஸ்ரீ ஞானாம்பிகை சமேத ரிணமோசன லிங்கேஸ்வரர் திருக்கோயில் சிறப்பு வழிபாடு கள் அருள்வாக்கு செம்மல் முல்லை அம்மா தலைமையில்கொரோனா வைரஸ் முடிந்து பள்ளிகள்திறக்க, மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மேலும்இக்கோவிலில் அமாவாசை தோறும் மிளகாய் வற்றல் கொண்டு நடத்தப்படும் நிகும்பலா யாகம் சிறப்பு வாய்ந்தது. இந்த யாகத்தில் கலந்துகொண்டு மனமுருக அம்பாள் பிரார்த்தித்தால் சத்ரு உபாதைகள் நீங்கி சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம். இத்தகைய சிறப்பு வாய்ந்த கோவிலில் ஆடை அமாவாசையை முன்னிட்டு நிகும்பலாயாகம் நடைபெற்றது. 10க்கும் மேற்பட்டோர் தீச்சட்டி ஏந்தி வழிபட்டனர் பின்னர் அன்னதான நிகழ்வு நடைபெற்றது நிகழ்ச்சியின் அனைத்து ஏற்பாடுகளும் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் அருணகிரி, கோயில் ஊழியர்கள் கிராமப்புற பொதுமக்கள் சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திருமங்கலம் அருகே சிறுமியிடம் ஆபாச வார்த்தைகள் பேசியவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த குராயூரை சேர்ந்த சிறுமி பத்தாம் வகுப்பு மாணவியிடம் ஆபாச வார்த்தைகள் பேசி சில்மிஷத்தில் ஈடுபட்ட முருகன் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதியப்பட்டு போலீசார் தேடி வருகின்றனர். குராயூர் பகுதியில் கணவனை இழந்த பென் டீக்கடை நடத்தி வருகிறார். மகள் சிறுமி பத்தாம் வகுப்பு பயிலும் மாணவி இவர் தனது தாயார் வெளியே சென்றபோது டீ கடையில் வியாபாரம் செய்துள்ளார். அப்பொழுது குராயூர் பகுதியை சேர்ந்த கருப்பையா மகன் முருகன் இவன் மதுபோதையில் தனியாக இருந்த சிறுமியிடம் ஆபாச வார்த்தைகளில் பேசி மாணவியை தொந்தரவு செய்துள்ளான் இச்சம்பவம் குறித்து சிறுமி தனது தாயாரிடம் கூறியுள்ளார். ஆத்திரமடைந்த தாயார் அருகில் உள்ள திருமங்கலம்அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசாரிடம் தனது மகளுடன் நேரில் வந்து புகார் செய்துள்ளார். புகாரின் அடிப்படையில் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் மாணவியிடம் ஆபாச வார்த்தை பேசிய முருகன் என்பவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான முருகனை தீவிரமாக போலீசார் தேடி வருகின்றனர் .
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில்வளர்ச்சி திட்டப்பணிகளைமாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டார்.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில், வளர்ச்சி திட்டப்பணிகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர், பார்வையிட்டார்.வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம், குட்லாடம்பட்டி ஊராட்சியில் உள்ள சமத்துவபுரத்தில்; ரூபாய் 30 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடத்தையும், ஜல் ஜீவன் மின் திட்டத்தின் கீழ், ரூபாய் 18.96 இலட்சம் மதிப்பீட்டில் 115 வீடுகளுக்கு குடிநீர் வழங்கும் திட்டப்பணிகளையும், ஊராட்சி பொதுநிதியின கீழ் ரூபாய் 9.50 இலட்சம் மதிப்பீட்டில் சமத்துவபுரம் சாலை மேம்படுத்தும் பணியினையும், குட்லாடம்பட்டி ஊராட்சி தாடக நாச்சிபுரத்தில் ஜல் ஜீவன் மின் திட்டத்தின் கீழ் ரூபாய் 7 இலட்சம் 70 வீடுகளுக்கு குடிநீர் வழங்கும் திட்டப்பணிகளையும், ஊராட்சி பொதுநிதியின் கீழ் ரூபாய் 5.50 இலட்சம் மதிப்பீட்டில் 3,7 மற்றும் 8 ஆகிய தெருக்களை மேம்படுத்தும் பணியினையும் மற்றும் ஆண்டிப்பட்டியில மியாவாக்கி காடு வளர்ப்பு திட்டத்தின் கீழ் 1.72 இலட்சம் மதிப்பீட்டில் 200 மரக்கன்றுகள் நடும் பணியினையும், மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டார்.முன்னதாக, குட்லாடம்பட்டி அருவியில் வாகன நிறுத்துமிடம் ஏற்படுத்தவும், தடுப்பு சுவர் அமைக்கவும், கண்காணிப்பு கோபுரத்திலிருந்து அருவிக்கு செல்லும் பாதையில் பழுதடைந்துள்ள மரப்பாலத்தினை சரிசெய்யவும், நுழைவு வாயிலுக்கு அருகில் புகைப்படம் எடுக்கும் இடத்தினை அமைக்கவும். நுழைவு சீட்டு வழங்கும் இடம் அமைக்கவும், சுற்றுச்சூழல் பாதிக்காத வண்ணம் சுற்றுலாவை மேம்படுத்தவும், நடைபாதைகளில் பாறைகளை வெட்டி வைத்து பாதை அமைக்கவும் உள்ளிட்ட வளர்ச்சி திட்டப்பணிகளை சுற்றுலாத்துறை மேற்கொள்ள அறிவுறுத்தினார்.இந்த ஆய்வில், மாவட்ட சுற்றுலா அலுவலர்சிவராஜன்,வாடிப்பட்டி வட்டாட்சியர்நவநீதன்வாடிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர்கள்ரத்தின கலாவதி,பாண்டியன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வரும் நோயாளிகளுக்கு காலதாமதமின்றி பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்ஆணையாளர் உத்தரவு:
மதுரை மாநகராட்சி மண்டலம் எண்.4க்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப் பட்டுள்ள வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து, ஆணையாளர் மரு.கா.ப.கார்த்திகேயன், ஆய்வு மேற்கொண்டார்.
மதுரை மாநகராட்சி மண்டலம் எண்.4 தெற்கு வெளி வீதியில் உள்ள ஈ.வெ.ரா.மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் மராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதை ஆய்வு மேற்கொண்டு, பள்ளி வளாகத்தை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்குமாறும், சோலை யழகுபுரத்தில் உள்ள மாநகராட்சி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு, பரிசோதனைக்கு வரும் நோயாளிகளுக்கு கால தாமத மின்றி விரைவில் சிகிச்சை மேற்கொண்டு அனுப்புமாறும், மருத்துவமனை வளாகத்தை சுத்தமாக வைத்துக் கொள்ளுமாறும் மருத்துவ அலுவலரிடம் கூறினார்.தொடர்ந்து, சோலையழகுபுரம் முனியாண்டி கோவில் தெருவில் ரூ.5.15 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் சின்டெக்ஸ் தொட்டி மற்றும் மின்மோட்டார் பயன்பாடு குறித்தும், சோலையழகுபுரம் சித்தி விநாயகர் கோவில் தெருவில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள சின்டெக்ஸ் தொட்டியில் குடிநீர் விநியோகம் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். மேலும், மேற்கு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து வார்டு எண்.89ல் ரூ.12.30 லட்சம் மதிப்பீட்டில் சோலையழகுபுரம் பழனியாண்டவர் கிழக்கு தெருவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பேவர் பிளாக் சாலையினையும், சோலையழகுபுரம் திருப்பதி நகர் 2வது தெருவில் ரூ.11 லட்;சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பேவர் சாலையினையும், சோலையழகுபுரம் குறுக்குத்தெருக்களில் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப் பட்டுள்ள பேவர் பிளாக் சாலைகளின் தரத்தையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், அவனியாபுரம் எம்.எம்.சி. காலனியில் ரூ.7.30 லட்சம் மதிப்பீட்டில் தார்சாலைகளில் பேட்ஜ் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதையும், தொடர்ந்து எம்.எம்.சி.காலனியில் ரூ.49 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு செயல்பட்டு வரும் நுண்ணுயிர் உரக்கூடத்தினை ஆய்வு மேற்கொண்டு மட்கும் குப்பைகளை உடனுக்குடன் உரமாக்கி குறுகிய காலத்திற்குள் அதனை அகற்றுமாறு சம்பந்தப்பட்ட அலுவலருக்கு உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின்போது, உதவி செயற்பொறியாளர்மனோகரன், மக்கள் தொடர்பு அலுவலர்மகேஸ்வரன், உதவிப்பொறியாளர்தியாகராஜன், சுகாதார அலுவலர்வீரன் உட்பட மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பொதுத் துறையை தனியார் மயமாக்குவதை எதிர்த்து அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் சார்பாக ஆர்ப்பாட்டம்.
மதுரை தெற்குவாசல் பகுதியில், அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில், பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்குவதை கண்டித்து, தொழிலாளர்களின் கோரிக்கைகளாக பத்து அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரியும், ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் ,50-க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.மேலும், தொழிலாளருக்கு விரோதமான சட்டத்திருத்தத்தை திரும்பப் பெறவும், வேளாண் சட்டத்தை திரும்பப் பெறவும், தனியார்மயமாக்கும் மின்சாரச் சட்டம் 2020 கைவிடக் கோரியும், ரயில்வே, இன்சூரன்ஸ், வங்கிகள், அரசு போக்குவரத்து, பாதுகாப்பு துறை, விமான போக்குவரத்து, நிலக்கரி சுரங்கம், பெட்ரோலிய நிறுவனங்கள் போன்ற அரசு நிறுவனங்களை தனியாருக்கு விற்பதை கைவிட கோரியும், மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இதில், ஏழு தொழிற்சங்க அமைப்புகள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ரயில்வே நிலையத்தில் ஆமை வேகத்தில் நடைபெறும் நடைமேடை பணி ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான பயணிகள் செய்வதால் நோய் தொற்று பரவும் அபாயம் .
மதுரை ரயில் நிலையம் நான்காவது நடைபாதையிலிருந்து மேல வருவதற்கோ அல்லது மேலிருந்து கீழே வருவதற்கு வழி இல்லாமல் ஒரு நபர் மட்டும் வருமளவுக்கு வழி வைத்திருக்கிறார்கள். மேலும் படிக்கட்டுகளில் வலதுபுறம் இரும்பு கம்பிகள், இரும்பு குழாய்களும் வைத்திருப்பதால் பொதுமக்களுக்கு ஆபத்து விளைவிக்கக் கூடியதாக இருக்கிறது. எனவே விபத்து ஏற்படும் முன்பு, அங்கு உள்ள இரும்பு கம்பிகளும் மற்ற பொருள்களும் அகற்ற வேண்டும் என்று ஒரே சமயத்தில் குறுகலான பாதையில் நூற்றுக்கணக்கான பயணிகள் நடை மேடை ஏறும் படிக்கட்டுகளில் சென்று வருவதால் சமூக இடைவெளி கேள்விக்குறியாகிறது இதனால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது என பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர் உடனடியாக மதுரை ரயில்வே நிர்வாகம் கோரிக்கை விடுக்கின்றனர் மேலும்.(அங்கு கட்டுமான பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது)
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை சிம்மக்கலில் வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் ஓவியப்போட்டிக்கான சான்றிதழ் மற்றும் பரிசளிப்பு விழா நடைபெற்றது.மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கிய அறக்கட்டளை நிறுவனர் வழிகாட்டி மணிகண்டன் பேசியதாவது:
முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல்கலாம் அவர்களின் ஆறாம் ஆண்டு நினைவு நாளான 2021 ஜூலை-27ம் தேதி வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் வாட்ஸ்அப் மூலமாக ஓவியப்போட்டி நடத்தப்பட்டது.மதுரை மாநகராட்சி பள்ளிகளில் ஆறாவது முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகள் டாக்டர் அப்துல்கலாமின் உயரிய நோக்கங்களை வண்ண ஓவியங்களாக வரைந்து அனுப்ப வேண்டும் என்று கேட்டுக்கொண்டோம்.இதில் மாணவ மாணவிகள் நூற்றி இருபது பேர் பங்கேற்றனர்.அவர்களில் ஒவ்வொரு வகுப்பிலும் சிறந்த மூன்று ஓவியங்கள் தேர்வு செய்து மொத்தம் பன்னிரண்டு பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.இவர்கள் அனைவருக்கும் 08.08.2021ல் சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளும் வழங்கப்பட்டது.இதில் மாணவ மாணவிகளுக்கு சேமிப்பையும் பசுமையையும் ஊக்கப்படுத்தும் வகையில் விதை உண்டியல்கள் பரிசளிக்கப்பட்டது.விதை உண்டியலில் சேமிப்பு நிறைந்து உடைக்கும் போது அதை மண் தொட்டியில் கலந்தால் மரக்கன்றாக வளர்க்கலாம் என மாணவ மாணவிகளிடம் தெரிவித்தார்.இந்த நிகழ்ச்சியில் கலாம் சமூகநல அறக்கட்டளையின் நிறுவனர் மாயகிருஷ்ணன், கலாம் வழியில் நண்பர்கள் நிறுவனர் செந்தில்குமார், ஊக்குவிக்கும் கலாம் வல்லரசு நிறுவனர் .கார்த்திக், சிம்மக்கல் முதியோர் இல்ல மேலாளர் கிரேசயஸ், யாதவா கல்லூரி பேராசிரியர் சுந்தர், சமூக ஆர்வலர் .கிரி மற்றும் பெற்றோர்கள், ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தென்காசி மாவட்ட காவல்துறையினர் பொதுமக்களிடையே கொரோனா மூன்றாம் அலை குறித்தும்,பாதுகாப்புடன் இருப்பதன் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.மேலும் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து தேவையான தீர்வுகளையும் வழங்கி வருகின்றனர். தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் IPS உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் காவல் துறையினர் பொதுமக்களிடம் கொரோனா மூன்றாவது அலை பரவ துவங்கியுள்ளதால் பொது மக்கள் முக கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைப்பிடித்தும் எவ்வாறு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பது குறித்து துண்டுப் பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். மேலும் மாலை நேரங்களில் காவல் துறையினர் தங்கள் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நடந்தே சென்று அப்பகுதியில் உள்ள சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் நபர்களை எச்சரித்தும், பொது மக்களிடம் அவர்களின் குறைகளை நேரில் கேட்டும் தீர்வு வழங்கி வருகின்றனர்.
செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தமிழக முன்னாள் முதலமைச்சர்,திமுக தலைவருமான, கருணாநிதி மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, திருவேடகத்தில் உள்ள தர்காவில் பாத்தியா ஓதப்பட்டு ஆதரவற்றவர்களுக்கு சேலை,வேட்டி மற்றும் பிரியாணி வழங்கப்பட்டது.இதில், கலந்துகொண்ட வெங்கடேசன் எம்.எல்.ஏ. கருணாநிதி திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தார். இதைத் தொடர்ந்து, தர்காவில் பார்த்தியா ஓதப்பட்டது. இங்குள்ள ஆதரவற்றவர்களுக்கு வேட்டி,சேலை மற்றும் பிரியாணி பொட்டலங்கள் வழங்கினார்.
இதில், சிபிஆர் சரவணன், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் ராஜா என்ற பெரியகருப்பன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வெற்றிச்செல்வன்,அண்ணாதுரை, ஒன்றிய பொறுப்புக் குழு உறுப்பினர்கள் ராஜா நீலமேகம், ஊத்துக்குளி ராஜாராம் மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் செல்லப்பாண்டி,ஊராட்சி மன்றத் தலைவர் பழனியம்மாள், வார்டு கவுன்சிலர் லிங்கராணி மாவட்ட பிரதிநிதி கண்ணன், பொதும்பு ஊராட்சி மன்ற தலைவர் தனசேகரன், திருவேடகம் நிர்வாகிகள் செல்வராஜ், முத்துவேல், மேலக்கால் ஒன்றிய கவுன்சிலர் சுப்ரமணி, சோழவந்தான் தொழில் நுட்ப அணி நகர அமைப்பாளர் பார்த்திபன், மகளிர் அணி நகர அமைப்பாளர் சசிகலா தேவி, சக்கரவர்த்தி, தூத்துக்குடி சண்முகம் உட்பட திமுகவினர் பலர் கலந்து கொண்டனர். இப்பகுதியில் உள்ள கிராம மக்கள் வெங்கடேசன் எம்.எல்.ஏ. விடம் குறைகளை எடுத்துக் கூறினார்கள்.இதைக் கனிவுடன் கேட்டு ,வெங்கடேசன் எம்எல்ஏ உடனே நடவடிக்கை எடுக்க அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
உலகில் பயன்படுத்தப்படும் திரவ எரிபொருள் ராக்கெட்டைக் கண்டுபிடித்த, ராக்கெட் அறிவியலின் முன்னோடி இராபர்ட் ஹட்சின்ஸ் கோடார்ட் நினைவு தினம் இன்று (ஆகஸ்ட் 10,1945).
இராபர்ட் ஹட்சின்ஸ் கோடார்ட் (Robert Hutchings Goddard) அக்டோபர் 5, 1882ல் மாசசூசெட்ஸில் உள்ள வோர்செஸ்டரில் நஹூம் டான்ஃபோர்ட் கோடார்ட் மற்றும் ஃபென்னி லூயிஸ் ஹோய்ட் ஆகியோருக்குப் பிறந்தார். ராபர்ட் அவர்களின் ஒரே குழந்தை. ஒரு இளைய மகன், ரிச்சர்ட் ஹென்றி, முதுகெலும்பு குறைபாட்டுடன் பிறந்தார், அவரது முதல் பிறந்தநாளுக்கு முன்பு இறந்தார். நஹூம் உற்பத்தியாளரக பல பயனுள்ள கருவிகளைக் கண்டுபிடித்தார். கோடார்ட் பிறந்த சிறிது நேரத்திலேயே, குடும்பம் பாஸ்டனுக்கு குடிபெயர்ந்தது. இயற்கையைப் பற்றிய ஆர்வத்துடன், அவர் தனது தந்தையிடமிருந்து ஒரு தொலைநோக்கியைப் பயன்படுத்தி வானத்தைப் மற்றும் பறவைகள் பறப்பதைக் கவனித்தார். 1880களில் அமெரிக்க நகரங்களின் மின்மயமாக்கலுடன், இளம் கோடார்ட் அறிவியலில்-குறிப்பாக பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தில் ஆர்வம் காட்டினார். குடும்பத்தின் கம்பளத்தில் நிலையான மின்சாரத்தை எவ்வாறு உருவாக்குவது என்பதை அவரது தந்தை அவருக்குக் காட்டியபோது, ஐந்து வயது குழந்தையின் கற்பனை தூண்டப்பட்டது.
வொர்செஸ்டர் பாலிடெக்னில் 1908ல் இயற்பியலில் இளநிலைப் பட்டம் பெற்றார். படிப்பிற்குப் பின், அங்கேயே ஓராண்டு காலம் பயிற்றுநராகப் பணியாற்றினார். பின், வொர்செஸ்டர் நகரிலேயே க்ளார்க் பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் முதுகலைப் பட்டம் பயின்று 1910ல் முதுகலைப் பட்டம் பெற்றார். 1911இல் தனது அறிவியல் முனைவர் பட்டத்தையும் பெற்றார். ஓராண்டு காலம் க்ளார்க் பல்கலைக்கழகத்தில் பணியாற்றியபின், 1912இல் தொடர் ஆய்வுகளுக்காக பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தின் பால்மர் இயற்பியல் ஆய்வுக்கூடத்தில் சேர்ந்தார். சரளை நடைப்பயணத்தில் கால்களைத் துடைப்பதன் மூலம் ஒரு பேட்டரியிலிருந்து துத்தநாகம் வசூலிக்கப்படுமானால் அவர் உயரத்திற்கு முன்னேற முடியும் என்று நம்பி ராபர்ட் பரிசோதனை செய்தார். ஆனால், துத்தநாகத்தைப் பிடித்துக் கொண்டால், அவர் வழக்கத்தை விட உயரமுடியாது. அவர் ரசாயனங்களை பரிசோதித்து, வீட்டில் ஒரு புகை மேகத்தையும் வெடிப்பையும் உருவாக்கினார். கோடார்ட் தனது தாயின் எச்சரிக்கையின் பின்னர் சோதனைகளை நிறுத்தினார்.
இந்த ஆர்வங்கள் 16 வயதில் ஒன்றிணைந்தன. கோடார்ட் அலுமினியத்திலிருந்து ஒரு பலூனைக் கட்ட முயற்சித்தபோது, தனது வீட்டுப் பட்டறையில் மூல உலோகத்தை வடிவமைத்து, அதை ஹைட்ரஜனில் நிரப்பினார். ஏறக்குறைய ஐந்து வார முறையான, ஆவணப்படுத்தப்பட்ட முயற்சிகளுக்குப் பிறகு, அவர் இறுதியாக திட்டத்தை கைவிட்டார் அலுமினியம் மிகவும் கனமானது. எவ்வாறாயினும், இந்த தோல்வியின் படிப்பினை கோடார்ட்டின் வளர்ந்து வரும் உறுதியையும் தன்னுடைய படைப்பின் மீதான நம்பிக்கையையும் தடுக்கவில்லை. 1910 ஆம் ஆண்டுகளில் சுமார் பல தசாப்தங்களில், வானொலி ஒரு புதிய தொழில்நுட்பமாகும், இது புதுமைக்கு வளமானது. 1912 ஆம் ஆண்டில், பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் போது, கோடார்ட் மின்கடத்திகளில் ரேடியோ அலைகளின் தாக்கங்களை ஆராய்ந்தார்.
ரேடியோ-அதிர்வெண் சக்தியை உருவாக்குவதற்காக, அவர் ஒரு பீம் விலகலுடன் ஒரு வெற்றிடக் குழாயைக் கண்டுபிடித்தார். இது கேத்தோடு-ரே ஆஸிலேட்டர் குழாய் போல இயங்குகிறது. லீ டி ஃபாரெஸ்ட்டுக்கு முந்தைய இந்த குழாயின் காப்புரிமை, ஆர்தர் ஏ. காலின்ஸுக்கு இடையிலான வழக்கில் மையமாக மாறியது. அதன் சிறிய நிறுவனம் ரேடியோ டிரான்ஸ்மிட்டர் குழாய்களை உருவாக்கியது. மேலும் வெற்றிட குழாய் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது தொடர்பாக AT&T மற்றும் RCA. கோடார்ட் வழக்கு கைவிடப்பட்டபோது கொலின்ஸிடமிருந்து ஒரு ஆலோசகர் கட்டணத்தை மட்டுமே ஏற்றுக்கொண்டார். இறுதியில் இரண்டு பெரிய நிறுவனங்களும் நாட்டின் வளர்ந்து வரும் மின்னணுத் தொழிலுக்கு டி ஃபாரஸ்ட் காப்புரிமையை சுதந்திரமாகப் பயன்படுத்த அனுமதித்தன.
1912 வாக்கில், அவர் தனது ஓய்வு நேரத்தில், கால்குலஸைப் பயன்படுத்தி, கணிதத்தை உருவாக்கினார். ராக்கெட்டின் எடை மற்றும் உந்துசக்தியின் எடை மற்றும் திசைவேகம் ஆகியவற்றைக் வெளியேற்ற வாயுக்களின் கருத்தில் கொண்டு செங்குத்து விமானத்தில் ஒரு ராக்கெட்டின் நிலை மற்றும் வேகத்தை கணக்கிட அனுமதித்தது. இதன் விளைவாக, ரஷ்யாவில் ஒரு தசாப்தத்திற்கு முன்னர் வெளியிடப்பட்ட சியோல்கோவ்ஸ்கி ராக்கெட் சமன்பாட்டை அவர் சுயாதீனமாக உருவாக்கினார். செங்குத்து விமானத்திற்காக அவர் ஈர்ப்பு மற்றும் ஏரோடைனமிக் இழுவின் விளைவுகளை உள்ளடக்கியது. அவரது முதல் குறிக்கோள் வளிமண்டலத்தைப் படிப்பதற்காக ஒலிக்கும் ராக்கெட்டை உருவாக்குவதாகும். இத்தகைய விசாரணை வானிலை ஆய்வுக்கு உதவுவது மட்டுமல்லாமல், திறமையான விண்வெளி ஏவுதள வாகனங்களை வடிவமைக்க வெப்பநிலை, அடர்த்தி மற்றும் காற்றின் வேகத்தை தீர்மானிக்க வேண்டியது அவசியம்.
பெரும்பாலான விஞ்ஞானிகள், குறிப்பாக அமெரிக்காவில், அத்தகைய இலக்கை ஒரு யதார்த்தமான அல்லது நடைமுறை விஞ்ஞான நோக்கமாக கருதவில்லை என்பதால், விண்வெளியில் விமானங்களுக்கான வாகனத்தை உருவாக்குவதே தனது இறுதி குறிக்கோள் என்பதை ஒப்புக்கொள்ள அவர் மிகவும் தயக்கம் காட்டினார். இதுபோன்ற யோசனைகளை தீவிரமாக பரிசீலிக்க பொதுமக்கள் இன்னும் தயாராக உள்ளனர். பின்னர், 1933 ஆம் ஆண்டில், கோடார்ட் “விண்வெளிப் பயணத்தின் சாதனை, சோதனை மூலம் சோதனை மற்றும் படிப்படியாக, ஒரு நாள் நாம் வெற்றிபெறும் வரை, அதைத் தடுக்க நாம் அனுமதிக்கக் கூடாது” என்று கூறினார்.
இன்றைய ராக்கெட் அறிவியல் பங்களிப்பாளர்களில் இவர் மிக முக்கியமானவர். ராக்கெட் அறிவியலின் முன்னோடியாகவும் கருதப்படுகிறார். இன்றைய உலகில் பயன்படுத்தப்படும் திரவ எரிபொருள் ராக்கெட்டைக் (Liquid Fueled Rockets) கண்டுபிடித்த பெருமைக்குரியவர் இவர். இவரது ஆராய்ச்சியின் பகுதியாக, 1926 மார்ச் 16 அன்று இவரது குழுவினர் செலுத்திய ராக்கெட்டே வெற்றிகரமாக செலுத்தப்பட்ட முதல் திரவ எரிபொருள் ராக்கெட்டாகும். காடர்ட் மற்றும் அவரது குழுவினர் 1926க்கும் 1941க்கும் இடையிலாக மொத்தம் 34 ராக்கெட்டுகளை செலுத்தியுள்ளனர். அவற்றில் சில அதிக உயரமாக 2.6 கி.மீ (1.6 மைல்) -க்கும், அதிக வேகமாக 885 கி.மீ/மணிக்கும் (550 மைல்) பறக்கக்கூடியனவாக இருந்தன. ராக்கெட் அறிவியலின் முன்னோடி இராபர்ட் ஹட்சின்ஸ் கோடார்ட் ஆகஸ்ட் 10,1945ல்ல் தனது 62வது அகவையில், பால்டிமோர், மேரிலாந்துஅமெரிக்காவில் இவ்வுலகை விட்டு பிரிந்தார். மேரிலாந்து மாநிலத்தின் கிரீன்பெல்ட் நகரத்திலுள்ள நாசாவின் மிகப் பெரிய மற்றும் மிக முக்கியமான விண்வெளி ஆராய்ச்சிக்கூடமான காடர்ட் விண்வெளி ஊர்தி மையம் (The Goddard Space Flight Center GSFC), ராபர்ட் காடர்ட்டின் நினைவாக அவரின் பெயரிலேயே இயங்குகிறது.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
நிலக்கோட்டை அருகே காற்றில் பறந்த தமிழக அரசின் உத்தரவு ஆடி அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு திதி கொடுக்க ஆயிரக்கணக்கில் பக்தர்கள் அணைப்பட்டி வைகை ஆற்றில் குவிந்ததனர்.
திண்டுக்கல் மாவட்டம், அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோவிலில் ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியரின் உத்தரவை மீறி ஏராளமான பக்தர்கள் குவிந்து, முன்னோருக்கு தர்ப்பணம் அளிக்க கோவிலைச் சுற்றி வைகை ஆற்றில் ஆயிரக்கணக்கில் குவிந்தனர்.பொதுமக்கள் முன்னோர்களுக்கு திதி கொடுக்க வர வேண்டாம் என்ற எச்சரிக்கையையும் மீறி வந்தவர்களை தடுக்க காவல் துறையினர் தவறியதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.தற்போது, கொரோனா தொற்று காரணமாக, தமிழக அரசின் பரிந்துரைப்படி அணைப்பட்டி வீர ஆஞ்சநேயர் கோவில் சார்பாக 8-தேதி இரவு வரை சேவார்த்திகள் தரிசனம் கிடையாது’ என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பையும் பொருட்படுத்தாமல் திண்டுக்கல், வத்தலக்குண்டு, நிலக்கோட்டை, சோழவந்தான், உசிலம்பட்டி, விருவீடு மற்றும் மதுரை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் இன்று தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் தர வைகை ஆற்றில் குவிந்தனர். கோவில் தரிசனம் ரத்து செய்யப்பட்டு மூடப்பட்ட நிலையில் கோவிலை சுற்றி ஏராளமான பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய குவிந்து, வைகை ஆற்றில் நீராடி முன்னோர்களுக்கு திதி கொடுத்து வருகின்றனர். யாரும் முக கவசம் அணியாமலும் சமூக இடைவெளியை பின்பற்றாமல் மூன்றாம் அலை குறித்த தமிழக அரசின் உத்தரவையும் மதிக்காமல் ஏராளமானோர் குவிந்ததால் கொரோனா நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.படவிளக்கம் அணைப்பட்டி வைகையாற்றில் குவிந்த பொதுமக்களை படத்தில் காணலாம்
நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கீழக்கரையின் தனித்துவத்தை வெளி உலகுக்கு அடையாளம் காட்டும் “MATRiX MEDIA” யூட்யுப் சேனல்…
கீழக்கரையில் எத்தனையோ சமூக வலைதளங்கள், யூட்யுப் சேனல்கள் இருந்தாலும், கீழக்கரை மற்றும் மக்களின் தனித்துவத்தை வெளி உலகுக்கு கொண்டு வருவதில் சமீப காலமாக MATRiX MEDIA சார்பாக செயல்பட்டு வரும் யூட்யுப் சேனல் முக்கிய பங்கு வகித்து வருகிறது.
கீழக்கரை செய்திகள், முக்கிய நிகழ்வுகள், தனி மனித திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக பாடல் நிகழ்வுகள் போன்றவற்றை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்கள். இவர்களின் செயல்பாட்டை நாமும் பாராட்டுவோம். MATRiX MEDIA யூட்யுப் சேனலை ஊக்கப்டுத்த நீங்களும் விருப்பத்தை கீழ்கண்ட லிங்கில் பதிவிடலாம்.
https://www.youtube.com/user/matrixrahman
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கீழக்கரை நகரில் கொரனா தடுப்பூசி செலுத்துவதற்காக ஜமாஅத் மூலமாகவும், சமூக நல அமைப்புகள், மக்கள் நலச் சங்கங்கள், மற்றும் தனிநபர் ஏற்பாடுகளின் பேரிலும் ஊரில் பல இடங்களில் கொரனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
இதில் சுமார் 8 ஆயிரம் நபர்கள் வரை முதல் டோஸ் செலுத்தியுள்ளனர். இன்னும் இதுவரை தடுப்பூசி செலுத்தாத நபர்கள் மற்றும் 2ம் கட்ட தடுப்பூசி செலுத்துபவர்களுக்காகவும் கீழக்கரை நகராட்சியில் இன்று முதல் (09.08.2021) அலுவலக நாட்களில் தினந்தோறும் காலை 10.30 மணி முதல் மதியம் 01.00 மணி வரை தடுப்பூசி போடப்படுகிறது.
இதற்கென கீழக்கரை நகராட்சி அலுவலக மேல் மாடியை நிர்வாகம் ஒதுக்கியுள்ளது. வயதானோர் மேல்மாடி வரை செல்ல சிரமம் உள்ளதாக நகராட்சி ஆணையரிடம் கேட்டதற்கு” கீழே தடுப்பூசி செலுத்த ஆண்களுக்கு பெண்களுக்கு என தனித்தனி இடம் ஏற்பாடு செய்து தர உள்ளோம்” என்றார். இந் நிகழ்ச்சிக்கு நகர் முக்கிய பிரமுகர்கள் மற்றும் கீழக்கரை வர்த்தக சங்கத்தினர் வந்திருந்தனர்.
இனி, தடுப்பூசி செலுத்த விரும்புவோர் கீழக்கரை நகராட்சிக்கு சென்று தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம். முன்னதாக இதுகுறித்து ஆட்டோவில் விளம்பரம் செய்யப்பட்டது.
தகவல்:- மக்கள் டீம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கொரோனோ மூன்றாம் அலை விழிப்புணர்வு, முக கவசம், மற்றும் சானிடைசர் வழங்கும் விழா!
நிலக்கோட்டை ஒன்றிய பேரூர் திராவிட முன்னேற்றக் கழகம்,மற்றும் “விக்டரி” அறக்கட்டளை இணைந்து நடத்திய கோரோனோ மூன்றாம் அலை விழிப்புணர்வு, முக கவசம், மற்றும் சானிடைசர் வழங்கும் விழா! நிலக்கோட்டை நால்ரோடு அருகில்நிலக்கோட்டை தெற்கு ஒன்றிய கழக செயலாளர் ம.மணிகண்டன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது,
நிலக்கோட்டை வட்டாட்சியர் டி.தனுஷ் கோடி பொதுமக்களுக்கு முக கவசம் அணிவதன் அவசியத்தை எடுத்துக்கூறி கவசத்தை வழங்கினார்.நிலக்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளர் மற்றும், நிலக்கோட்டை காவல் உதவி ஆய்வாளர் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டி முக கவசம் மற்றும் சானிடைசர் வழங்கினார்கள்.இவ்விழாவில் நிலக்கோட்டை பேரூர் கழகச் செயலாளர் ப.கதிரேசன் ,பேரூர் துணைச் செயலாளர்கள் ஜோசப் கோவில் பிள்ளை, முருகேசன், மணி ராஜா,ஒன்றிய பொருளாளர் காளிமுத்து,ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர் காதர்முகைதீன்,கழக பொறுப்பாளர்கள் செந்தில்குமார்,பாஸ்கரன், சிவனேசன், பேரூர் இளைஞரணி துணை அமைப்பாளர் நியாஸ்,பேரூர் மாணவரணி துணை அமைப்பாளர் கார்த்திக் பாண்டியன்.மற்றும் பொதுமக்கள், கழக உடன்பிறப்புகள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்,விழாவின் சிறப்பு அழைப்பாளராக மூத்த பத்திரிகையாளர் ஜெ.அஸ்கர் கலந்து கொண்டு சிறப்பித்தார்.விக்டரி அறக்கட்டளை நிறுவனர் முஹமது மீரா நன்றியுரை ஆற்றினார்.
You must be logged in to post a comment.