மாவட்ட செய்திகள்
மதுரை மாவட்ட ஆன்லைன் ஆட்டோ ஓட்டுநர்கள் தொழிற்சங்கத்தின் சார்பாக ஆலோசனை மற்றும் செயற்குழு கூட்டம்…
மதுரை வில்லபுரம் குடியிருப்போர் நலசங்க வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட மதுரை தெற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சிங்காரவேலன், மதுரை மத்திய வட்டார போக்குவரத்து அலுவலர் சித்ரா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு ஆட்டோ ஓட்டுநர்களுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள். ஒரு ஓட்டுநர் அரசு சொல்ல கூடிய அனைத்து விதிமுறைகளையும் பின்பற்ற வேண்டும் என்றும் மேலும் ஆட்டோ ஓட்டுனர்கள் மக்களிடம் மனிதநேயத்துடன் நடந்து கொள்ள வேண்டும் சாலையில் விபத்து ஏற்பட்டால் உடனே அவர்களுக்கு முதலுதவி செய்து அருகில் உள்ள மருத்துவமனையில் கொண்டு போய் சேர்ப்பது ஒரு உயிரை காப்பாற்ற நினைப்பது மனித நேயத்தின் உச்சமான செயல் ஆகவே மனிதநேயத்துடன் நடந்து கொள்ள வேண்டும் குறிப்பாக பள்ளி குழந்தைகளை தங்களது ஆட்டோவில் ஏற்றி செல்ல வேண்டாம் என்ற பொது தகவல்களையும் பதிவு செய்தார்கள். இது போன்ற பல்வேறு ஆட்டோ ஓட்டுநர்களை ஊக்கப்படுத்தும் விதமான தகவல்களை கூறினார்கள்..
இக்கூட்டத்தை தலைமை தாங்கியவர்கள் தொழிற்சங்கத்தின் தலைவர் பி எம் முருகன் மற்றும் செயலாளர் எஸ் ராஜா முகமது மற்றும் ஒருங்கிணைப்பாளர் எஸ் சையது ஹனிபா ஆகியோர் தலைமை தாங்கினார்கள் கூட்டத்திற்கு சங்கத்தின் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டார்கள்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை திருநகரில் ,வீட்டில் டீ தயாரித்த போது சேலையில் தீ பிடித்து மூதாட்டி பலி.. .
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே திருநகர் மகாலட்சுமி காலனியை சேர்ந்தவர் கலாவதி(வயது 74 .) இவர், வீட்டில் டீ போட்டுக் கொண்டிருந்தார் அப்போது, எதிர்பாராதவிதமாக சேலையில் தீப்பிடித்தது. இதில் தீயில் கருகி உயிருக்கு போராடினார். அருகில் இருந்தவர்கள் அவர்கள் முதலுதவி செய்து சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கலாவதி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து, மகன் கோபிநாத் திருநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து மூதாட்டி கலாவதியின் சாவுக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திருப்பரங்குன்றத்தில்,ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற தனியார் ஹோட்டல் வாட்ச்மேன் ரயில் மோதி சம்பவ இடத்தில் பலி-ரயில்வே காவல்துறையினர் சம்பவம் குறித்து விசாரணை..
மதுரை பைக்கரா பகுதியில் வசிப்பவர் மாய தேவர் மகன் மணிமாறன் (52) இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். மணிமாறனுக்கு இரண்டு மகள்கள் உள்ளன. திருப்பரங்குன்றம் திலிருந்து திருநகர் நோக்கி செல்லும் சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் மணிமாறன் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக வாட்ச்மேன் பணியில் இருந்து உள்ளார்.
இன்று அதிகாலை 5 மணி அளவில் பைக்கராவில் இருந்து திருப்பரங்குன்றம் செல்லும் அரசு பேருந்தில் ஏறி திருப்பரங்குன்றத்தில் இறங்கி தண்டவாளத்தை கடந்து தனது ஹோட்டலுக்கு பணிக்கு செல்ல முயன்ற போது ரயில் மோதி மணிமாறன் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இது குறித்து அப்பகுதி மக்கள் மதுரை ரயில்வே போலீசாருக்கு தகவல் அளித்தனர். இத்தகவல் அறிந்து விரைந்து வந்த மதுரை ரயில்வே சரக காவல்துறையினர் மற்றும் மதுரை திருப்பரங்குன்றம் காவல்துறையினர் மணிமாறனின் உடலை கைப்பற்றி ஆம்புலன்ஸ் மூலம் பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து மதுரை ரயில்வே காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வேலைக்குச் செல்ல தண்டவாளத்தை கடந்த வாட்ச்மேன் உயிரிழந்த சம்பவம் திருப்பரங்குன்றம் பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
17 வயது சிறுமிக்கு பிறந்த ஆண் குழந்தை 8 லட்சத்திற்கு விற்பனை – 5 பேர் கைது., 4 பேருக்கு போலீசார் வலை…
மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த பேரையூர் அருகே உள்ள சந்தையூர் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி பத்தாம் வகுப்பு முடித்து வீட்டில் இருந்த நிலையில் அப்பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவரிடம் பழகி முறை தவறிய உறவிலிருந்துள்ளார். இதனால் கர்ப்பம் அடைந்த 17 வயது சிறுமி கடந்த ஏழாம் தேதி பிரசவத்திற்காக பேரையூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்த நிலையில் தாயும் சேயும் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு 20 நாட்கள் சிகிச்சையில் இருந்த சிறுமியும் குழந்தையும் யாரிடமும் சொல்லாமல் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வந்து விட்டனர். இத்தகவல் சந்தையூர் கிராம செவிலியர் காந்திமதிக்கு தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து காந்திமதி நேரடியாக சிறுமியின் வீட்டிற்கு சென்று விசாரித்துள்ளார். மேலும்., குழந்தையை பார்க்க வேண்டும் என கூறியதற்கு குழந்தை தன் தாயுடன் வெளியில் சென்றுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும்., செவிலியர் கேட்கும் கேள்விகளுக்கு முன்னுக்குப் பின் முரணாக தகவல் தெரிவித்ததால் சந்தேகம் அடைந்த செவிலியர் காந்திமதி பேரையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரை தொடர்ந்து மாவட்ட எஸ்பி சிவபிரசாத் உத்தரவின் பேரில் பேரையூர் காவல் ஆய்வாளர் மதனகலா தலைமையிலான போலீசார் சிறுமியின் தாய் மாரியம்மாளிடம் (45) விசாரித்த போது குழந்தையை தனது உறவினரான மெய்யனூத்தம் பட்டியை சேர்ந்த சுந்தரலிங்கம் (48)என்பவரிடம் விற்பதற்காக கொடுத்ததாக தெரிவித்துள்ளார்.
இனைத்தொடர்ந்து., போலீசார் சுந்தரலிங்கத்திடம் விசாரித்த போது குழந்தையை விற்கச் சொல்லி உசிலம்பட்டியை சேர்ந்த வழக்கறிஞர் தாமரைச்செல்வன் என்பவரிடம் கொடுத்ததாகவும் அவர் ஈரோடு மாவட்டம் பெரிய புலியூத்தை சேர்ந்த கார்த்திக் (28) என்பவரிடம் குழந்தையை விற்கச் சொல்லிக் கொடுத்ததாகவும்., குழந்தையை பெற்றுக் கொண்ட கார்த்திக் பெங்களூரைச் சேர்ந்த கார்த்திக்கேயன் (50) சீனிவாசன் (38) ஆகியோரிடம் கொடுக்க அவர்கள் இருவரும் பெங்களூர் பகுதியைச் சேர்ந்த தேஜஸ்வரி (36) என்பவரிடம் ரூபாய் 8 லட்சத்து 28 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்தது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் தேஜஸ்வரிக்கு ஏற்கனவே பெண் குழந்தை உள்ளதாகவும் ஆண் குழந்தை இல்லாததால் குழந்தையை விலைக்கு வாங்கியதாகவும் தெரிவித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து போலீசார் தேஜஸ்வரி உட்பட அனைவரையும் பேரையூர் காவல் நிலையத்திற்கு வரச் சொல்லி விசாரணை நடத்தி மாரியம்மாள், கார்த்திக்கேயன் சுந்தரலிங்கம், சீனிவாசன், தேஜஸ்வரி ஆகிய 5 பேரை கைது செய்த நிலையில் சம்பவத்தில் செவிலியர் ஒருவருக்கும் தொடர்பு உள்ளதாக போலீசார் விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து., தலைமறைவாக உள்ள வழக்கறிஞர் தாமரைச்செல்வன், கார்த்திக், செவிலியர் உட்பட மேலும் 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
குழந்தை காணாமல் போனது தொடர்பாக நேற்று முன்தினம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில்., சம்பந்தப்பட்ட வழக்கில் துரிதமாக செயல்பட்டு 24 மணி நேரத்தில் குற்றவாளிகளை கைது செய்த பேரையூர் காவல் நிலைய போலீசாரை மாவட்ட எஸ்பி சிவப்பிரசாத் பாராட்டி உள்ளார்.
தகாத உறவால் சிறுமிக்கு பிறந்த ஆண் குழந்தை பிறந்து 20 நாட்களே ஆன நிலையில் ஒவ்வொருவர் கைக்கு மாறி., மாறி பல கிலோமீட்டர் தூரம் கொண்டு செல்லப்பட்டு விலைக்கு விற்கப்பட்ட சம்பவம் பேரையூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரம், ஆக.29 – இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் வடக்கு கடற்கரை மேற்கு தெரு பகுதியில் வேக வைத்த நிலையில் 242 கிலோ, உயிரற்ற நிலையில் 325 கிலோ கடல் அட்டைகளை வன உயிரின தடுப்பு பிரிவு, ராமநாதபுரம், மண்டபம் கடலோர கண்காணிப்பு படையினர் கைப்பற்றினர்.
இது தொடர்பாக மண்டபம் இபுராஹிம் ஷா, பூமரைக்காயர், காதர், ஆகியோரை தேடி வருகின்றனர். சேது ரஸ்தா கடற்பகுதியில் பதப்படுத்திய நிலையில் 722 கிலோ கடல் அட்டைகளை பறிமுதல் செய்து இது தொடர்பாக அன்வர் சாதிக் என்பவரை தேடி வருகின்றனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரம், ஆக.29 – மேஜர் தயான் சந்த் பிறந்த நாள் ஆக.29 நாள் இந்திய விளையாட்டு தினமாக நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது, இதையொட்டி தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டு அரங்கில் தயான் சந்த் உருவப்படத்திற்கு விளையாட்டு வீரர்கள் மாலை அணிவித்து, மலர் தூவி கேக் வெட்டி கொண்டாடப்பட்டது இதில் ஹாக்கி, 100 மீட்டர் ஓட்டம், சதுரங்கம், கேரம், நடை போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம் வழங்கப்பட்டது, தேசிய ஹாக்கி விளையாட்டு வீரரும், சுங்க இலாகா ஆய்வாளர் சத்யராஜ், காவல் ஆய்வாளர் சரவணக்குமார், ராமநாதபுரம் மாவட்ட ஹாக்கி சங்கம் செயலாளர் கிழவன் சேதுபதி, ஹாக்கி பயிற்றுனர் மணிகண்டன் கலந்து கொண்டனர். மாவட்ட விளையாட்டு அலுவலர் தினேஷ் குமார் ஏற்பாடு செய்தார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் “கலைஞரின் பன்முக திறமை” என்னும் தலைப்பில் கட்டுரை போட்டி நடந்தது. கலைஞர் நூற்றாண்டு நிகழ்வினை முன்னிட்டு திருநெல்வேலி அரசு அருங்காட்சியகம் சார்பாக 100 நிகழ்வுகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அவற்றில் ஒன்றாக கல்லூரி மாணவ மாணவிகளுக்கான கட்டுரை போட்டி நடத்தப்பட்டது. இப்போட்டியில் கலைஞரின் பன்முக திறமை என்கிற தலைப்பில் மாணவ மாணவிகள் கட்டுரை எழுதினார்கள். இப்போட்டியினை நெல்லை மாவட்ட காப்பாட்சியர் சிவ சத்திய வள்ளி துவங்கி வைத்தார்.
போட்டியில் தட்சிணமாற சங்க கல்லூரி, தூய சவேரியார் கல்வியியல் கல்லூரி, சதக்கத்துல்லா அப்பா கல்லூரி, ம.தி.தா கல்லூரி, போப் கல்லூரி என பத்துக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இருந்து எண்பதுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நெல்லை அரசு அருங்காட்சியகம் சார்பில் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்பட்டது.
செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
விக்கிரமங்கலத்தில் பூட்டிய வீட்டில் அழுகிய நிலையில் வாலிபர் பிணம் கொலையா தற்கொலையா எனபோலீசார் விசாரணை ..
சோழவந்தான் ஆக 29
சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட குளத்துப்பட்டி பிரிவில் பூட்டிய வீட்டில் துர்நாற்றம் வீசுவதாக விக்கிரமங்கலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது இதன் பேரில் சப் இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பூட்டியிருந்த வீட்டை கிராம நிர்வாக அலுவலர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் முன்னிலையில் இரண்டு மரக்கதவுகள் மற்றும் கிரில் இரும்பு கேட்டைஉடைத்து பார்த்தனர் அங்கு கட்டில் மெத்தையில் அழுகிய நிலையில் இழந்திறதி வயது 48 என்பவர் இறந்து கிடந்தார் இவருக்கு கடந்த 2000 ஆண்டு சுகன்யா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது சில மாதங்களில் கருத்து வேறுபாடு காரணமாக சுகன்யா இளம்பிரிதியை பிரிந்து சென்று விட்டார்.
இந்த நிலையில் இளம் பிரதி அப்பா அய்யர சாமி மற்றும் தாயார் இருவரும் சென்னையில் வேலை பார்த்து வந்துள்ளார்கள் சிறிது காலத்தில்அப்பா இறந்துவிட்ட நிலையில் அம்மா ஓய்வு பெற்று இளம்பிருதியுடன் இருந்து வந்துள்ளார்கடந்த ஆறு மாதத்திற்கு முன்பாக இளம்பிரதி அம்மாவும் இறந்து விட்டநிலையில் இளம்பிருதி மட்டும் வீட்டில் தனியாக இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் இவருடைய உறவினர் இவருக்கு உதவி செய்து வந்ததாக தெரிகிறது.
இதனைத் தொடர்ந்து கடந்த ஐந்து நாட்களாக இளம்பிரதி வெளியே வரவில்லை என்றும் பூட்டிய வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது இதன் பேரில் போலீசார் வீட்டின்பூட்டை உடைத்து அழுகிய நிலையில் கிடந்த பிணத்தை உடல் கூறு ஆய்வுக்காக நடவடிக்கை எடுத்து வருகின்றனர் இளம்பிரதி இறந்து கிடந்ததில் இவரா தற்கொலை செய்து கொண்டாரா இல்லை இவருடைய சொத்துக்காக யாரும் திட்டம் போட்டு தற்கொலைக்கு தூண்டி விட்டனரா இல்லை இவருக்கு உறவினர்கள் உணவில் விஷம் கொடுத்தார்களா என்று அங்கு கூடியிருந்த கிராம மக்கள் பேசிக் கொண்டனர் இதுகுறித்து பல கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் திருமணம் நடந்து பிரிந்து சென்ற சுகன்யா என்பவர் விக்கிரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததாக போலீசார் தெரிவித்தனர்..
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மாநாட்டிற்கு வந்த தொண்டர்களுக்கு உணவு வழங்காத முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் நீட் குறித்து பேச தகுதி இல்லை – மாணிக் தாகூர் எம்பி பேட்டி..
மத நல்லிணக்கத்தை வலியுறுத்திய மாமனிதன் திரைப்படத்திற்கு தேசிய விருது வழங்காமல் அவமானம் செய்துள்ளது மத்திய அரசு மாணிக் தாகூர் பேச்சு. மறைந்த முன்னாள் அமைச்சர் கக்கன் வாழ்க்கை வரலாறு குறித்த கக்கன் என்ற திரைப்படம் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது தமிழகத்தின் பல்வேறு திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் மதுரை திருப்பரங்குன்றம் அருகே ஆர்வி பட்டியில் உள்ள திரையரங்கில் கக்கன் திரைப்படத்தை தனது கட்சி நிர்வாகிகளுடன் காண்பதற்காக மாலை 6 மணி காட்சிக்காக டிக்கெட்டுகள் அனைத்தையும் விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக் தாகூர் முன்பதிவு செய்து திரைப்படத்தை கண்டு ரசித்தார் படம் முழுவதும் பார்த்த பின்பு செய்தியாளர்களை சந்தித்த மாணிக் தாகூர் எம்பி திரைப்படம் கக்கன் அவர்களின் வாழ்வில் சொல்லப்படாத உண்மைகளை மையமாக வைத்து தியாக்கத்தையும்., நேர்மையையும் கொண்டு படம் இயக்கப்பட்டுள்ளது.. மிகப்பெரிய அளவில் வெற்றி பெற வேண்டும்., வரலாற்று ஆவணமாக இருக்க வேண்டும்.
நீட் தேர்வு குறித்து அதிமுக பேசுவது போல் தற்போது சீமானும் நீட் தேர்வு மற்றும் கோடநாடு குறித்து பேசி வருவது குறித்த கேள்விக்கு நீட் தேர்வை பொறுத்தவரை மத்திய அரசு நீட் தேர்வுக்கு விடை சொல்ல வேண்டும் என்றால் மத்தியில் ஆட்சி மாற்றம். ராகுல்காந்தி பிரதமர் ஆனால் நீட் நிறுத்தப்படும் என்றார்.
நீட்தேர்வை வைத்து சீமான் போன்றவர்கள் விளம்பரத்திற்காக கொச்சைபடுத்துவது கொடநாடு பற்றி பேசுவது நியாயமாக இருக்காது. நீட் என்பது ஒன்றிய அரசு முடிவு செய்ய வேண்டியது., தமிழகத்தில் நீட் வேண்டாம் என்று ஒன்றிய அரசு எப்போது முடிவு செய்கிறதோ அப்போது நீட் தமிழகத்திற்கு வராது. பாஜக அரசு இருக்கும் வரை நீட் தேர்வு பிரச்சனை முடிவுக்கு வராது. அதற்கு முற்று புள்ளி வைக்க ராகுல் காந்தி பிரதமர் ஆக வேண்டும்., ராகுல்காந்தி பிரதமர் ஆனால் நீட் விலக்கப்படும்.
அதானிக்கும் அம்பானிக்கும் வேலை செய்யும் மோடி அரசு மீது கேஸ் சிலிண்டர் விலை உயர்வு போன்ற வற்றால் மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். அதனால் தான் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் அண்ணாமலை போட்டியிடவில்லை.
நீட் தேர்வு தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதற்கு முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் கண்டனம் தெரிவித்தது குறித்த செய்தியாளர் கேள்விக்கு பதில் அளித்த மாணிக் தாகூர் உதயகுமாரை பொறுத்தவரை அதிமுக மாநாட்டிற்கு வந்த தொண்டர்களுக்கு சாப்பாடு போட முடியாத ஒருவர் அவர் மீது எடப்பாடி பழனிச்சாமி கடும் கோபத்தில் உள்ளார். மதுரைக்கு மாநாட்டிற்கு வந்தவர்களுக்கு ஒழுங்கா சாப்பாடு போட முடியாமல் கெட்டுப்போன புளியோதரை போட்ட புண்ணியவான் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் முதலில் அவர் அதை சரி செய்யட்டும். நீட் பிரச்சனையைப் பொறுத்தவரை தமிழக மக்களுக்கு தெரியும் அதிமுக அரசு நாடக மடியது என்று. அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒற்றுமையாக இருக்கிறோம் இந்தியா கூட்டணி வெற்றி பெற்று பிரதமர் ராகுல் காந்தி வரும்போது நீட் விலக்கப்படும் என்றார்.
காவேரி விவகாரத்தில் தமிழக அரசு உரிய பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்ற குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு, காவேரி விவகாரத்தில் தமிழக அரசு உறுதியாக உள்ளது எந்த இடத்திலும் தங்களது உரிமைகளை விட்டுக் கொடுக்கவில்லை இதை அரசியல் செய்வது பாஜகவும் பொம்மையும் தான். கர்நாடகாவில் தண்ணீர் திறந்து விடப்பட்டதை நிறுத்தியவர்கள் போராட்டத்திற்கு ஏவி விட்டது பொம்மைதான். பொம்மையும் அண்ணாமலையும் தான் காவிரி பிரச்சனைக்கு துரோகிகள் தவிர வேற யாரும் இல்லை.
தொடர்ந்து இந்திய சினிமாக்களுக்கு தேசிய விருது வழங்கிய நிலையில் மாமனிதன் திரைப்படத்திற்கு விருது வழங்காததற்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை விடுத்தது தொடர்பான கேள்விக்கு மாமனிதன் படத்திற்கு தேசிய விருது வழங்காதது மிகப்பெரிய துரோகம் மத நல்லிணத்தை மையப்படுத்திய படம் 52 நாடுகளில் 52 விருதுகளைப் பெற்று தேசிய விருதுக்கு முழு தகுதி பெற்ற படத்திற்கு விருது கொடுக்காமல் காஷ்மீர் பைல்ஸ் என்று பிரிவினை வாத படத்திற்கு விருது கொடுத்திருக்கிறது இந்த அரசு தேசிய விருதை அவமானப்படுத்தும் விதமாக உள்ளது. மாமனிதன் படத்திற்கு விருது வழங்காதது கண்டிக்கத்தக்கது வேதனை அளிக்கிறது.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை மதிமுக மாநாடு அரசியல் திருப்புமுனையாக அமையும் பொதுச்செயலாளர் வைகோ..
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தடைந்து மதுரை விமான நிலையத்தில் இருந்து வலையங்குளம் கருப்பசாமி கோயில் எதிரே உள்ள மாநாட்டுத் திடலை பார்வையிட்டார்.
செப்டம்பர் 15ல் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த தினத்தை முன்னிட்டு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலையங்குளம் பகுதியில் உள்ள மாநாட்டு திடலை பார்வையிட்டார். மாநாடு அமைவிடம் மாநாட்டு தொண்டர்கள் அமருமிடம் மற்றும் வாகனம் நிற்கும் இடம் ஆகவே பகுதிகளை பார்வையிட்டு மாநாடு பந்தல் அமைப்பாளர் சிவா புதூர் பூமிநாதன் எம் எல் ஏ .மதுரை வடக்கு மாவட்ட செயலாளர் மாரநாடு. மாநகர் மாவட்ட செயலாளர் முனியசாமி மாநில இளைஞரணி செயலாளர் பி ஜி பாண்டியன். தொண்டரணி செயலர் பாஸ்கர சேதுபதி மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்து மாநாட்டுக்கான ஏற்பாடுகளை செய்யும் வழிமுறைகள் குறித்து ஆலோசனை வழங்கினார்.
மாநாட்டு பகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் வைகோ மதிமுகம் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அதை நடத்துவதற்கு பந்தல் கலை திலகம் என்று நான் பெயர் சூட்டிய வந்து சிவா அவர்கள் பொறுப்பேற்று இருக்கின்றார்கள் இங்கே தலைவர் பூமிநாதன் தலைமையிலே எல்லோரும் ஒன்றாக இணைந்து செயல்படுகிறார்கள் ஆக இந்த மாநாட்டுக்கு லட்சக்கணக்கான மக்கள் வருவார்கள் இந்த மாநாடு மறுமலர்ச்சி திமுகவினுடைய திருப்புமுனை மாநாடாக அமையும் என வைகோ கூறினார்..
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பூலித்தேவன் 308 வது பிறந்த நாள் விழா; தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் ஆலோசனைக் கூட்டம்..
இந்திய விடுதலைக்காக வெள்ளையனை எதிர்த்து முதன் முதலில் போரிட்ட மாமன்னர் பூலித்தேவன் 308 வது பிறந்தநாள் விழா குறித்த ஆலோசனை கூட்டம் தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக மாவட்ட அலுவலகத்தில் வைத்து நடந்தது. இந்த கூட்டத்திற்கு தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரும் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான செ. கிருஷ்ணமுரளி (எ) குட்டியப்பா தலைமை தாங்கினார். அதிமுக மாநில மகளிரணி துணை செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வி.எம். ராஜலட்சுமி, மாவட்ட கழக துணை செயலாளர் பொய்கை சோ. மாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனா். மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை செயலாளர் முனைவர் சிவ. ஆனந்த் அனைவரையும் வரவேற்று பேசினார்.
அதனை தொடா்ந்து மாவட்ட கழக செயலாளர் செ.கிருஷ்ணமுரளி பேசுகையில், உலகமே எதிர்நோக்கிய கழக வீரவரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு சிறப்பாக நடைபெற்றமைக்கு மாநாடு ஏற்பாடு செய்த கழக பொதுச் செயலாளர் எடப்பாடியார் அதற்காக உழைத்த தலைமை கழக நிர்வாகிகள் முதல் வீறுகொண்டு எழுந்து வந்து கடைக்கோடி தொண்டர்கள் வரை அனைவருக்கும் நன்றி கூறினார். கழக எழுச்சி மாநாடு அன்று மறைந்த குருவிகுளம் வடக்கு ஒன்றிய செயலாளர் வாசுதேவன் மறைவுக்கு 2 நிமிட மெளன அஞ்சலி செலுத்தினர். அடுத்ததாக சந்திராயன் 3 விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்தும் நெற்கட்டும் செவலில் உள்ள மாமன்னர் பூலித்தேவன் அரண்மனையில் அமைந்துள்ள அன்னாரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திட கழக பொதுச் செயலாளர் ஆணைக்கினங்க தலைமை கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், மாநில நிர்வாகிகள் வருகை தர உள்ளனர். கழக நிர்வாகிகள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும். அதோடு அனைவரும் தங்களுடைய சொந்த வாகனங்களில் அனுமதி சீட்டு பெற்று தான் செல்ல வேண்டும் காவல் துறை அறிவித்துள்ளனர். எனவே அனைவரும் விதிமுறைகளை பின்பற்றி இந்திய சுதந்திர போராட்டத்திற்கு வித்திட்ட மாமன்னர் பூலித்தேவன் பிறந்த நாளை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போற்றி புகழ்வோம் என்று தெரிவித்தார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட அண்ணா தொழிற்சங்க மண்டல முன்னாள் செயலாளர் கந்தசாமி பாண்டியன், பொருளாளர் ஆத்மாநாதன் மாவட்ட விவசாய அணி செயலாளர் பரமகுருநாதன், ஒன்றிய செயலாளர்கள் துரைப் பாண்டியன், வல்லம் எஸ்.ஆர் ராமசந்திரன், ஆய்க்குடி கே.செல்லப்பன், செல்வராஜ், ஜெயகுமார் மகாராஜன், அதிமுக நகர செயலாளா்கள் எம்.கே முருகன், ஆறுமுகம், பரமேஸ்வர பாண்டியன், பேரூர் கழக செயலாளர்கள் டாக்டர் சுசீகரன், சேவக பாண்டியன், முத்துகுட்டி, கார்த்திக் ரவி, பொதுக்குழு உறுப்பினர் காளிராஜ், சங்கரன் கோவில் நகர அம்மா பேரவை செயலாளர், செளந்தர்(எ) ஷாகுல் ஹமீது, உள்ளாட்சி பிரதிநிதிகள் சங்கர சுப்பிரமணியன், சத்யகலா, மாவட்ட சிறுபான்மை பிரிவு துணை தலைவர் ஞானராஜ், ஒன்றிய நிர்வாகிகள் இடைகால் செல்லப்பா, முத்து வேல்சாமி, செந்தில் குமார், ராஜ்குமார், குருசேவ், டாக்டர் திலீபன் சந்திரன், கழக பேச்சாளா் தீக்கனல் லெட்சுமணன், மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளா் சண்முகையா அனைவருக்கும் நன்றி கூறினார்.
செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சந்திராயன் 3 வெற்றியை கொண்டாடும் வகையில் யோகாசனம்; பள்ளி மாணவிகள் அசத்தல்..
தென்காசி மாவட்டம் இரவணசமுத்திரம் பகுதியில் இந்திய விஞ்ஞானிகளின் சந்திராயன் 3 வெற்றியை கொண்டாடும் வகையில், பள்ளி மாணவிகள் யோகா செய்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர். நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய இஸ்ரோ அனுப்பிய சந்திராயன் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கியது. இந்த வெற்றியின் மூலம் நிலவின் தென் துருவத்தை தொட்ட முதல் நாடு என்ற சாதனையை நமது இந்தியா பெற்றுள்ளது. இந்த சாதனையை போற்றும் இரவணசமுத்திரம் பகுதியில் பள்ளி மாணவிகளின் யோகா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தென்காசி மாவட்டம் கடையம் அருகே இரவணசமுத்திரம் கிராமத்தை சேர்ந்த மளிகை கடை ஊழியரின் மகள்கள் குற்றாலம் செய்யது பள்ளி குழுமத்தில் ஷாஜிதா ஜைனப் 5 ஆம் வகுப்பும், மிஸ்பா நூருல் ஹபிபா 12 ஆம் வகுப்பும் பயின்று வருகின்றனர். இவ்விருவரும் உள்ளூரில் வைத்து நிலவில் லேண்டர் தரையிறங்கும் காட்சி போல் இந்திய வரைபடத்துடன் வடிவமைத்து கைகளில் தேசிய கொடி ஏந்தி பல்வேறு யோகாசனம் மூலம் சந்திரயான் 3 வெற்றிக்காக பாடுபட்ட விஞ்ஞானிகளின் கடின உழைப்பாலும், திறமையாலும் உலகில் எந்த நாடும் அடைய முடியாத நிலவின் தென் துருவத்தை அடைந்துள்ளதை போற்றும் வகையில் இந்த நிகழ்வில் ஈடுப்பட்டனர். இதில் யோகா ஆசிரியர் குற்றாலம் குரு கண்ணன், பெற்றோர், பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்த சகோதரிகள் யோகாவில் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றும், யோகா, ஸ்கேட்டிங் மூலம் பல சமூக விழிப்புணர்வுகளை ஏற்படுத்தியும் வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ஆசிரியர் தகுதி தேர்வு: இலவச பயிற்சி செப்.2ல் தொடக்கம் – ராமநாதபுரம் கலெக்டர் தகவல்..
இராமநாதபுரம், ஆக.29- இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் பா.விஷ்ணு சந்திரன் செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது:.
தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வுகளான (TET) தாள் – 1 மற்றும் தாள் – 1 தேர்வை எழுத உள்ள கல்வியியல் பட்டப்படிப்பு (B.Ed) மற்றும் பட்டயப்படிப்பு (D.TEd) முடித்தோருக்கு இந்த இரு தேர்வுகளுக்குமான பாடத்திட்டத்தில் தமிழ், ஆங்கிலம், குழந்தை வளர்ச்சி மற்றும் கற்பித்தல் போன்ற பாடத்திட்டங்கள் பொதுவாகவுள்ளதால் இப்பாடங்களுக்கு ஒருங்கிணைந்த இலவச பயிற்சி வகுப்புகள் இராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற உள்ளது.
இத்தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் சிறந்த பயிற்றுநர்களை கொண்டு இராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் அனுபவம் மிக்க ஆசிரியர்களைக் கொண்டு 02.09-2023- முதல் ஒவ்வொரு வார இறுதி நாட்களில் நடத்தப்படவுள்ளது. ஆசிரியர் தகுதி தேர்வுக்கு தயாராகும் வேலைநாடுநர்கள் தன்னார்வ பயிலும் வட்டத்தில் செயல்படும் போட்டித் தேர்வுகளுக்கான நூலக வசதியை பயன்படுத்தி கொண்டு தங்களை தயார் தேர்வுக்கு செய்து கொள்ளலாம்.
இந்த இலவச பயிற்சி வகுப்பில் பங்கேற்க ஆர்வம், விருப்பம் உள்ளோர் தங்கள் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், சுய விவரங்களுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
இப்பயிற்சி வகுப்புகள் தொடர்பாக இராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது 04567 – 230 160 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு தங்களை பதிவு செய்து கொண்டு இப்பயிற்சி வகுப்பில் பங்கேற்று பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் பா.விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தென்காசி மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்; விரைந்து வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும்; தென்காசி எம்எல்ஏ வலியுறுத்தல்..
தென்காசி மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் விரைந்து வழங்க வேண்டும் என தென்காசி எம்எல்ஏ பழனிநாடார் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து தென்காசி ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில், தென்காசி மாவட்டத்தில் கடந்த ஆண்டு பருவமழையும் போதுமான அளவு இல்லை மற்றும் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை பொய்த்து போனதால் விவசாயிகள் கடுமையான நஷ்டம் அடைந்துள்ளனர். மேலும் தென்மேற்கு பருவமழை சரிவர பெய்யாததால் குற்றாலத்தில் தண்ணீர் வரத்து இல்லாமல் குளம் குட்டைகள் தண்ணீரின்றி வறண்டு போய் உள்ளது. மேலும் விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள நெல் பயிர், காய்கறி உள்ளிட்ட விளைபொருட்கள் தண்ணீரின்றி வெயிலின் தாக்கம் அதிகரித்ததாலும் வறண்டு கருகி வருவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். இதனால் நெல் நாற்றுகளை ஆடு, மாடுகளாவது மேயட்டும் என்ற எண்ணத்திற்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். ஆதலால், தாங்கள் தென்காசி மாவட்ட விவசாய பெருமக்களின் சிரமத்தை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று தென்காசி மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வறட்சி நிவாரண தொகையை விரைவாக பெற்றுத்தர வேண்டும். வரும் காலங்களில் வறட்சி ஏற்படாத வண்ணம் தென்காசி மாவட்டத்தில் உள்ள இரட்டைகுளம், ஊத்துமலை கால்வாய்களை விரைவாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தென்காசி எம்எல்ஏ பழனிநாடார் வலியுறுத்தியுள்ளார்.
செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
நியூட்ரினோ அலைவுகளைக் கண்டுபிடித்த, நோபல் பரிசு பெற்ற ஆர்தர் புரூஸ் மெக்டொனால்ட் பிறந்த தினம் இன்று (ஆகஸ்ட் 29, 1943).
ஆர்தர் புரூஸ் மெக்டொனால்ட் (Arthur Bruce McDonald) ஆகஸ்ட் 29, 1943ல் சிட்னி, நோவா ஸ்கொட்டியாவில் பிறந்தார். நோவா ஸ்கொட்டியாவில் உள்ள டல்ஹெளசி பல்கலைக்கழகத்தில் 1964ல் இளநிலை இயற்பியல் (B.Sc) மற்றும் 1965 ஆம் ஆண்டில் முதுநிலை இயற்பியல்( M.Sc) பயின்றார். பின்னர் 1969ல் கலிபோர்னியா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியிலிருந்து இயற்பியலில் தனது ஆராய்ச்சியை (Ph.D) முடித்தார் . மெக்டொனால்ட் ஒரு உயர்நிலைப் பள்ளி கணித ஆசிரியரையும், டல்ஹெளசியில் உள்ள அவரது முதல் ஆண்டு இயற்பியல் பேராசிரியரையும் இயற்பியல் துறையில் செல்வதற்கான உத்வேகம் என்று குறிப்பிட்டார். மெக்டொனால்ட் 1969 முதல் 1982 வரை ஒட்டாவாவின் வடமேற்கே உள்ள சாக் ரிவர் அணுசக்தி ஆய்வகங்களில் ஆராய்ச்சி அதிகாரியாக பணியாற்றினார். 1982 முதல் 1989 வரை பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பேராசிரியரானார். பிரின்ஸ்டனை விட்டு குயின்ஸ் பல்கலைக்கழகத்தில் 1989 முதல் 2013 வரை பேராசிரியரானார்.
மெக்டொனால்ட் 2013 ஆம் ஆண்டில் கனடாவின் கிங்ஸ்டனில் உள்ள குயின்ஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் எமரிட்டஸ் ஆனார். அவர் SNOLAB நிலத்தடி ஆய்வகத்தில் நியூட்ரினோஸ் மற்றும் டார்க் மேட்டரில் அடிப்படை ஆராய்ச்சியில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். தத்துவார்த்த இயற்பியலுக்கான சுற்றளவு நிறுவனத்தின் குழுவின் உறுப்பினராகவும் உள்ளார். மெக்டொனால்ட் 2004ல் ஜெனீவாவில் உள்ள ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனத்தில் (CERN) வருகை தரும் விஞ்ஞானியாக இருந்தார். நியூட்ரினோக்களுக்கு நிறை இருக்கிறதா இல்லையா என்பதை இயற்பியலாளர்கள் ஆராய்ந்து வருகின்றனர். 1960களின் பிற்பகுதியிலிருந்து, நியூட்ரினோக்கள் வெகுஜனத்தைக் கொண்டிருக்கக்கூடும் என்று சோதனைகள் சுட்டிக்காட்டுகின்றன. சூரியனின் தத்துவார்த்த மாதிரிகள் நியூட்ரினோக்கள் அதிக எண்ணிக்கையில் தயாரிக்கப்பட வேண்டும் என்று கணிக்கின்றன.
பூமியில் உள்ள நியூட்ரினோ கண்டுபிடிப்பாளர்கள் நியூட்ரினோக்களின் எண்ணிக்கையை விட மீண்டும் மீண்டும் குறைவாகவே பார்த்திருக்கிறார்கள். நியூட்ரினோக்கள் மூன்று வகைகளில் (எலக்ட்ரான், மியூயான் மற்றும் டவ் நியூட்ரினோக்கள்) வருவதாலும், சூரிய நியூட்ரினோ கண்டுபிடிப்பாளர்கள் முதன்மையாக எலக்ட்ரான் நியூட்ரினோக்களுக்கு மட்டுமே உணர்திறன் கொண்டிருக்கின்றன. பல ஆண்டுகளாக விருப்பமான விளக்கம் என்னவென்றால், அந்த “காணாமல் போன” நியூட்ரினோக்கள் மாறிவிட்டன. கண்டுபிடிப்பாளர்களுக்கு சிறிய அல்லது உணர்திறன் இல்லாத ஒரு வகையில் ஊசலாடுகின்றன. ஒரு நியூட்ரினோ ஊசலாடுகிறது என்றால், குவாண்டம் இயக்கவியலின் விதிகளின்படி, அதற்கு ஒரு நிறை இருக்க வேண்டும். மெக்டொனால்டின் கூட்டுப்பணியாளர் ஹெர்ப் சென் 1984 ஆம் ஆண்டில், இர்வின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில், சூரிய நியூட்ரினோக்களுக்கான கண்டறிதலாக கனமான நீரைப் பயன்படுத்துவதன் நன்மைகளை பரிந்துரைத்தார்.
முந்தைய கண்டுபிடிப்பாளர்களைப் போலல்லாமல், கனமான நீரைப் பயன்படுத்துவது. இரண்டு எதிர்வினைகளுக்கு உணர்திறன் செய்யும் கண்டுபிடிப்பான், ஒரு எதிர்வினை அனைத்து நியூட்ரினோ சுவைகளுக்கும் உணர்திறன், மற்றொன்று எலக்ட்ரான் நியூட்ரினோவுக்கு மட்டுமே உணர்திறன். எனவே, அத்தகைய கண்டுபிடிப்பான் நியூட்ரினோ அலைவுகளை நேரடியாக அளவிட முடியும். சென், மெக்டொனால்ட் மற்றும் கூட்டுப்பணியாளர்கள் 1984 ஆம் ஆண்டில் இந்த யோசனையைப் பயன்படுத்த சட்பரி நியூட்ரினோ ஆய்வகத்தை (SNO) உருவாக்கினர்.
SNOக்கு வெளியே கனமான நீரைப் பயன்படுத்தி ஒரு கண்டறிதல் வசதியாக இருக்க ஒரு சுரங்கத்தில் 6,800 அடி (2,100 மீ) நிலத்தடியில் அமைந்துள்ள 1000 டன் வேண்டும். சென் லுகேமியாவால் நவம்பர் 1987ல் இறந்தார். மெக்டொனால்ட் தலைமையிலான சட்பரி நியூட்ரினோ ஆய்வகம், சூரியனில் இருந்து எலக்ட்ரான் நியூட்ரினோக்கள் நேரடியாக மியூயான் மற்றும் டவ் நியூட்ரினோக்களில் ஊசலாடுகிறது என்று அவதானித்தது. மெக்டொனால்ட் 2007ல் பெஞ்சமின் பிராங்க்ளின் பதக்கம், 2015ல் நியூட்ரினோ அலைவுகளைக் கண்டுபிடிப்பதற்கும், நியூட்ரினோக்கள் நிறை கொண்டிருப்பதை நிரூபிப்பதற்கும் இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றார்.
நியூட்ரினோ (Neutrino) என்பது அணுவின் அடிப்படைத் துகள்களுள் ஒன்றாகும். இவை மென்மிகள் எனப்படும் அடிப்படைத்துகள் குடும்பத்தில் அடங்குகின்றன. அணுக்கருவில் உள்ள மின்மம் அற்ற பிறிதொரு துகள் நியூட்ரான் போன்று நியூட்ரினோக்களும் மின்மத்தன்மை அற்றவை. மின்காந்தப்புல விசையால் எதிர்மின்னி அல்லது நேர்மின்னி போன்றவை மாற்றங்களுக்கு உள்ளாகின்றன. ஆனால் நியூட்ரினோக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படுவதில்லை. அதனால் மின்னேற்றத்தைக் கொண்டிருப்பதில்லை. செப்டம்பர் 2011ல் ஒளியைவிட நுண்நொதுமிகள் விரைவாகப் பயணம் செய்யக்கூடியவை என்று அறியப்பட்டது. இந்த ஆய்வின் முடிவுகளுக்கு பல எதிர்ப்புகளும் எழுந்தன. இது மெய்யானால் ஐன்ஸ்டைனின் சார்புக் கோட்பாட்டைப் பற்றிய விளக்கம் வேறுபடக்கூடும்.
அக்டோபர் 2011ம் ஆய்வு நடத்தப்பட்டு நுண்நொதுமிகளே வேகம் கூடியவை என்று மீண்டும் நிறுவப்பட்டது. எனினும் பிறிதொரு குழுவினர் நவம்பர் 2011ல் இதே ஆய்வைச் செய்து இதில் வழு உண்டு என வாதாடினர். எனினும், 2012 பிப்ரவரியில் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில், மேற்குறிப்பிட்ட பரிசோதனையின் போது நியூட்ரினோக்களின் வெளியேற்றம் மற்றும் வரவு நேரங்களை அளவிடும் அணுக் கடிகாரத்துடன் தளர்வாகப் பொருத்தப்பட்ட இழை ஒளியிய வடம் ஒன்றினால் இந்த வழு ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்பட்டது. இதே பரிசோதனை இதே ஆய்வுக்கூடத்தில் 2012 மார்ச் மாதத்தில் மீண்டும் பரிசோதிக்கப்பட்டதில் நியூட்ரினோக்களினதும் ஒளியினதும் வேகங்களில் வேறுபாடுகள் இல்லை எனக் கண்டுபிடிக்கப்பட்டது.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரம், ஆக.28 – இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரம் செயல்படும் தொலைபேசி எண்ணுடன் கூடிய கட்டுப்பாட்டு அறையை கலெக்டர் விஷ்ணு சந்திரன் துவக்கி வைத்தார்.
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் மக்கள் தங்கள் குறைகள் மற்றும் கோரிக்கைகளை தெரிவிக்க ஏதுவாக 83001 75888 என்ற எண்ணை அறிமுகப்படுத்தினார்.
அவர் கூறுகையில், ராமநாதபுரம் மாவட்ட மக்கள் தங்கள் கோரிக்கைகள், குறைகளை தெரிவிக்க வசதியாக ஒவ்வொரு திங்கட்கிழமையும் நடைபெறும் மக்கள் குறை தீர் நாள் முகாம்களில் மனுக்களை அளித்து பயன்பெற்று வருகின்றனர். இதனை தொடர்ந்து மக்களிடம் பெறப்படும் மனுக்கள் பதிவுக்கான தாமதத்தை குறைக்கும் வகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக தரை தளத்தில் செயல்பட்டு வரும் கட்டுப்பாட்டு அறையில் CALL YOUR COLLECTOR 83001 75888 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு மக்கள் தங்கள் குறைகளை தெரிவிக்கலாம். அவ்வாறு தெரிவிக்கப்படும் மக்களின் குறைகள் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு தெரிவிக்கப்பட்டு மனுதாரருக்கு உரிய பதில் தாமதமின்றி கிடைக்க அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இக்கட்டுப்பாட்டு அறையில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு 1098, பேரிடர் மேலாண்மை 1077, சமூக நலன், மகளிர் உரிமைத்துறை 181, தேர்தல் தொடர்பான புகார் தெரிவிக்க 1950 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு பயன் பெறலாம். இவ்வாறு அவர் கூறினார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
அருப்புக்கோட்டை அருகே, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் மீது போக்சோ வழக்கு…..
அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகேயுள்ள கல்லூரணி பகுதியைச் சேர்ந்த கணவன், மனைவி இருவரும் கூலி வேலை பார்த்து வருகின்றனர். இவர்களின் 8 வயது மகள் அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வருகிறார். கணவன், மனைவி இருவரும் வேலைக்குச் சென்ற போது அந்த சிறுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது சிறுமியின் உறவினரான முனியசாமி (32) என்பவர், சிறுமிக்கு பிஸ்கட் மற்றும் சாக்லெட் வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனையறிந்த சிறுமியின் பெற்றோர் இது குறித்து, அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முனியசாமி மீது போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரம், ஆக.28-ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி வட்டாரம் கொக்காடியைச் சேர்ந்தவர் முனியசாமி. இவர் கொக்காடி கிராமத்தில் புதிய கடை போடுவதற்கான அனுமதி கோரி அவத்தாண்டை ஊராட்சி செயலாளர் ஐயம்பெருமாளை கடந்த சில நாட்களுக்கு முன் அணுகினார். ரூ.3 ஆயிரம் கொடுத்தால் புதிய ரசீது தருவதாக அய்யம்பெருமாள் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த முனியசாமி ,இது குறித்து ராமநாதபுரம் லஞ்சம் ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். இதனையடுத்து ரசாயன பொடி தடவிய ரூபாய் நோட்டுகளை அய்யம்பெருமாளிடம் முனியசாமி இன்று மாலை கொடுத்தார். அப்போது மறைந்திருந்த டிஎஸ்பி ராமச்சந்திரன், இன்ஸ்பெக்டர்கள் ராஜேஸ்வரி, குமரேசன் உள்ளிட்ட லஞ்சம் ஒழிப்பு போலீசார் அய்யம்பெருமாளை (44) கையும், களவுமான பிடித்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை அய்யம்பெருமாளிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மேல்பெண்ணாத்தூர் அரசு பள்ளியில் வாசிப்புத் திறன் மன்றம் தொடக்க விழா..
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல்பெண்ணாத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் வாசிப்பு திறன் மன்றம் தொடக்க விழா பொறுப்பு தலைமை ஆசிரியர் வேல்முருகன் தலைமையில் நடைபெற்றது.
பள்ளி மேலாண்மை குழு தலைவர் அலமேலு முன்னிலை வகித்தார் முன்னதாக வாசிப்புத் திறன் மன்ற பொறுப்பாசிரியர் அரசு வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக ஊராட்சி மன்ற துணைத் தலைவர் விசாலாட்சி வெங்கடேசன் மாணவர்களுக்கு ஊக்குவிக்கும் வகையில் புத்தக வாசிப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி பேசினார்.
மேலும் புத்தகங்களை வாசிப்போம் மனிதர்களை நேசிப்போம் என்ற தலைப்பில் பேச்சு போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு புத்தக பரிசுகள் வழங்கப்பட்டது.
இதில் ஆசிரியர்கள் நாராயணன், மகேஸ்வரி, உள்ளீட்ட ஆசிரியர்கள் வாழ்த்துரை வழங்கினர். முடிவில் ஆசிரியர் சங்கீதா நன்றி கூறினார்.
You must be logged in to post a comment.