மாவட்ட செய்திகள்
உலக எழுத்தறிவு தினம்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள சக்கரவர்த்தி வித்யாலயா பள்ளியில் உலக எழுத்தறிவு தினம் கடைபிடிக்கப்பட்டது. யூனெஸ்கோ நிறுவனத்தின் கோட்பாட்டின் படி பள்ளியில் படிக்கும் மாணவச் செல்வங்களுக்கு அதன் நோக்கம் மற்றும் செயல்பாடுகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. எழுத்துக்களை அடையாளப்படுத்துதல் ,வாசித்தல் திறன் மற்றும் வண்ணம் தீட்டி தனக்கு பிடித்த படங்களை வரைதல் என்ற பயிற்சிகள் கொடுக்கப்பட்டது.பள்ளி தாளாளர் வேல்முருகன் நிகழ்ச்சி ஏற்பாடு செய்தார் .
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திமுக தெற்கு மாவட்ட வழக்கறிஞர் அணி சார்பில் தென்காசி காவல் நிலையத்தில் பரபரப்பு புகார்..
திமுக தெற்கு மாவட்ட வழக்கறிஞர் அணி சார்பில் தென்காசி காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் மனு ஒன்றை அளிக்கப்பட்டுள்ளது. அந்த புகார் மனுவில் தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு கொலை மிரட்டல் விடுத்த சாமியாரை உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என திமுக வழக்கறிஞர் அணி சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. உத்திரப்பிரதேசம் மாநிலம் அயோத்தியை சேர்ந்த அயோத்திராம் காட்டின் ஆச்சார்யா பீடத்தின் தபஸ்வி சாவனியின் மஹந்த் ஜெகத்குரு சாமியார் பரமஹன்ஸ ஆச்சார்யா மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுத்திட, தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வே. ஜெயபாலன் அறிவுறுத்தலின் பேரில் தென்காசி காவல் நிலையத்தில், காவல் ஆய்வாளர் கே.எஸ். பாலமுருகனிடம் தென்காசி தெற்கு மாவட்ட வழக்கறிஞர் அணி சார்பில் அந்த சாமியாரை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று புகார் மனு ஒன்றை அளித்தனர். இந்நிகழ்வில், தென்காசி தெற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி அமைப்பாளர் எஸ். தங்கராஜ் பாண்டியன் தலைமையில், மாவட்ட வழக்கறிஞர் அணி துணைத் தலைவர் ஜாபர் ஹனீப், மாவட்ட துணை அமைப்பாளர்கள் ரகுமான் சதாத், காளிராஜ் மற்றும் கழக வழக்கறிஞர்கள் முத்து குமாரசாமி, ராஜா, கதிரவன், சொக்கலிங்கம், சண்முக மணிகண்டன் மற்றும் பொன் லட்சுமணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சோழவந்தானில் அரிமா சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது கூட்டத்திற்கு எம் வி எம் கலைவாணி பள்ளி தாளாளரும் தொழிலதிபருமான கவுன்சிலர் டாக்டர் மருதுபாண்டியன் தலைமை தாங்கினார் செயலாளர் மகேந்திரன் பொருளாளர் ஜெய்கணேஷ் முன்னிலை வகித்தனர் சங்க வளர்ச்சி பணிகள் குறித்து டாக்டர் சசிகுமார் இன்ஜினியர் செல்ல பாண்டியன் பிரேமா செல்ல பாண்டியன் ஆகியோர்சிறப்புரை ஆற்றி பேசினார்கள் உறுப்பினர்கள்கண்ணன் ஜவகர் தங்கராஜ் காந்தன் பாஸ்கரன் முத்துலிங்கம்.டிஜேஆறுமுகம் செழியன் நூலகர் ஆறுமுகம் மற்றும் புதிய உறுப்பினர் தன்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர் தொடர்ந்து புதிய உறுப்பினர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
கூட்டத்தில்பள்ளி கல்லூரி மாணவ மாணவியருக்கு பரிசுகள் வழங்குவது, அரிமா சங்க கட்டிடத்தை புதுப்பிப்பது, அரிமா சங்க உறுப்பினர்கள் குடும்பத்துடன் சுற்றுலா செல்வது, மாதம் தோறும் மருத்துவ முகாம் கண் சிகிச்சை முகாம் உள்ளிட்டவைகள் நடத்துவது குறித்து தீர்மானங்கள் முன்மொழியப்பட்டன, அரிமா சங்கத் தலைவர் டாக்டர் மருது பாண்டியனிடம் வைக்கப்பட்ட சோழவந்தான் பகுதி பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று சோழவந்தான் பேருந்து நிறுத்தங்களில் அரசு அனுமதி பெற்று நிழற்குடை அமைக்க ஆவண செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
.செய்தியா
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
உசிலம்பட்டியில் பள்ளிக்குழந்தைகள் இணைந்து உலகத் தலைவர்களைப் போல் மாதிரி ஜி.20 மாநாடு..
இந்தியாவில் வரும் 9 10 ஆகிய தேதிகளில் புதுடில்லியில் ஜி 20 மாநாடு நடைபெற உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு நாடு இம்மாநாட்டினை தலைமையேற்று நடத்துவது வழக்கம். இந்த ஆண்டு ஜி 20 மாநாடு இந்தியாவின் தலைமையில் நடக்க உள்ளது.
இதில்; ஜி 20ல் சேர்ந்த நாடுகள் கலந்து கொள்ள உள்ளனர். உலக பொருளாதாரம் காலநிலை மற்றும் இயற்கை சீற்றங்கள் போன்றவை கலந்து ஆலோசிக்கப்படும் இம்மாநாட்டின் பயன்களை பற்றியும் மாநாடு நடைபெறும் நடைமுறை பற்றியும் எடுத்துரைக்க வளரும் பள்ளிக்குழந்தைகள் தெரிந்து கொள்ள ஏதுவாக பள்ளி மாணவ மாணவியர் பங்கேற்ற மாதிரி ஜி20 மாநாடு பள்ளி நிர்வாகத்தால் உசிலம்பட்டியில் நடத்தப்பட்டது.
இதன்படி மதுரை மாவட்டம் உசிலம்பட்டியிலுள்ள அரசு உதவி பெறும் பள்ளியான நாடார் சரஸ்வதி தொடக்கப்பள்ளியில் மாணவ மாணவியர் 20 நாட்டின் தலைவர்களாக உருவகப்படுத்தி அந்நாட்டின் செயல்பாடுகள் மற்றும் பொருளாதார கொள்கைகள்பற்றி எடுத்துரைப்பது போல் ஜி20 மாநாட்டின் பயன்களை பள்ளி மாணவ மாணவியருக்கு விளக்கிக் காட்டினர். பள்ளி தலைமை ஆசிரியர் மதன் பிரபு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் எந்த நாட்டில் எதைப் பற்றி பேச வேண்டும் என்பது பற்றி எழுதிக் கொடுத்து மாணவர்களுக்கு பயிற்சி அளித்துள்ளார்.இந்நிகழ்ச்சியினை பள்ளி மாணவ மாணவியர்கள் அனைவரும் கண்டுகளித்தனர்.இம் மாதிரி மாநாட்டினால் சிறு வயதிலிருந்தே உலக நிகழ்வுகளை கற்று தெரிந்து கொள்ள வேண்டுமெனற ஆசையை தூண்டுவதாக பள்ளிக்குழந்தைகள் தெரிவித்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
முளைச்சு மூனு இலை விடல. அப்பாவின் காசு இருக்குற திமிரில் இவர் சனாதனத்தை ஒழிக்க போகிறேன் என பேசுகிறார் -அண்ணாமலை
என் மண் என் மக்கள் என்ற பெயரில் தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை தமிழகம் முழுவதும் பாதயாத்திரை மேற்கொண்டு மக்களை சந்தித்து வருகின்றார்.இதன் ஒரு பகுதியாக 26வது நாள் பயணமாக இன்று மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மதுரை ரோட்டிலுள்ள கொங்கபட்டி பிரிவிலிருந்து தனது பாதயாத்திரையை துவங்கியுள்ளார்.வழிநெடுகிலும் கட்சித்தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பெண்கள் அவருக்கு மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர்.பின்னர் உசிலம்பட்டி பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள முத்துராமலிங்கத்தேவர் மூக்கையாத்தேவர் சிலைகளுக்கு மாலை அணிவித்தார்.
பின்னர் முருகன் கோவில் முன்பு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசியதாவது :-
ஆங்கிலேயர்கள் போய்விட்டார்கள் அதற்கு பதிலாக திமுகவினர் வந்துவிட்டார்கள். ஆங்கிலேயன் கூட ஊழல் பண்ணல.நம்ம பணத்தை சுரண்டி அவன் நாட்டுக்கு கொண்டு போனான்.ஆனால் திமுக இருக்கிறதே நம் பணத்தை ஊழல் பண்ணி தன் குடும்ப சொத்தாக மாற்றுகின்றனர்.நாம் அனைவரும் வெகுண்டெழ வேண்டிய நேரம் இது. முளைச்சு மூனு இலை விடல. நடிச்சது ஆறே படம். அதுவும் ஓடல.தாத்தா அப்பாவின் காசில் கொழுத்து போய் திமிரில் இவர் சனாதனத்தை ஒழிக்க போகிறார் என்று பேசுகின்றார். அய்யா முத்துராமலிங்கம் இருந்திருந்தால் நடப்பதே வேறு. சுயமரியாதையை விட்டுக் கொடுக்காத மக்கள் வாழ்ந்த மண்ணில் நாம் வாழ்கிறோம். எனப் பேசினார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தென்காசியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் பொதுக்குழு கூட்டம்; ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம்..
தென்காசியில் ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு கண்டனம் தெரிவித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தென்காசியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் பொதுக்குழு கூட்டம் தேசியத் தலைவர் பேராசிரியர் காதர் மொகிதீன் தலைமையில் நடைபெற்றது. மாநில பொதுச்செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முஹம்மது அபூபக்கர், மாநில துணைச் செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோதர் மைதீன், மாநில அமைப்பு செயலாளர் நெல்லை அப்துல் மஜீத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் இந்தியா கூட்டணி சார்பில் பிரச்சார குழுவில் இடம் பெற்றுள்ள தேசிய தலைவர் பேராசிரியர் காதர் மொஹைதீன் சாகிபுக்கு வாழ்த்து தெரிவிப்பது, ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற ஒன்றிய அரசை கண்டிப்பதோடு இத்திட்டத்தை உடனடியாக கைவிடவேண்டும் என்றும், வரும் செப் 15 அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு நீண்ட காலம் சிறையில் வாடிக் கொண்டிருக்கும் இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய முதல்வருக்கு வேண்டுகோள் வைப்பது என்றும், தென்காசி மாவட்டத்திற்கு ஹாக்கா கமிட்டியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இந்த கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். அதன்படி தென்காசி மாவட்ட தலைவராக தலைவர் தென்காசி அப்துல் அஜீஸ், மாவட்டச் செயலாளர் பாம்புக்கோவில் சந்தை செய்யது பட்டாணி, மாவட்டப் பொருளாளர் கடையநல்லூர் செய்யது மசூது, மாவட்ட முதன்மை துணைத் தலைவர்களாக புளியங்குடி அப்துல் வஹாப், மாவட்ட துணைத் தலைவர் முதலியார்பட்டி அப்துல் காதர், கடையநல்லூர் அக்பர் அலி, புளியங்குடி கலீல் ரஹ்மான், துணைச் செயலாளர்களாக கடையநல்லூர் ஹைதர் அலி, புளியங்குடி அப்துல், இரவணசமுத்திரம் முஹம்மது இக்பால், தென்காசி ஜலாலுதீன், கடையநல்லூர் அய்யூப்கான், ஒருங்கிணைப்பு ஆலோசனைக்குழு கௌரவ ஆலோசகர் விடி.எஸ்.ஆர் முஹம்மது இஸ்மாயில், செய்யது சுலைமான், முஹம்மது இஸ்மாயில், பாம்புக்கோவில் செய்யது இப்ராஹிம், முஹைதீன் ஹஜ்ரத், நெல்லை அப்துல் மஜீத், முஸ்லிம் மாணவர் பேரவை அணி அமைப்பாளர் பொட்டல் புதூர் ரிபாய், முஸ்லீம் யூக் லீக் அணி அமைப்பாளர் கடையநல்லூர் செய்யது அபுதாகிர், இந்திய யூனியன் விமன்ஸ் லீக் அணி அமைப்பாளர் இரவண சமுத்திரம் சபுராள் பேகம், தகவல் தொழில் நுட்ப அணி அமைப்பாளர் புளியங்குடி அப்துல் அஜீஸ், சுதந்திர தொழிலாளர் யூனியன் அணி அமைப்பாளர் கடையநல்லூர் முகம்மது மைதீன், வர்த்தக அணி அமைப்பளர் தென்காசி அஹமது மீரான், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் நெல்லை அப்துல் மஜீத், செய்யது சுலைமான், செய்யது மசூது, அபுபக்கர், அப்துல் ரஹ்மான், விடிஎஸ்ஆர் முஹம்மது இஸ்மாயில், முதலியார் பட்டி அப்துல் காதர், புளியங்குடி அப்துல் வஹாப், கடையநல்லூர் முஹம்மது துராப்ஷா, கடையநல்லூர் முஹம்மது கோயா, புளியங்குடி முஹம்மது அல் அமீன், நல்லாசிரியர் செய்யது மசூது, கடையநல்லூர் ஆசிரியர் முஸ்தபா, கடையநல்லூர் பேட்டை ஜபருல்லாஹ், கடையநல்லூர் ஹைதர் அலி, தென்காசி முகம்மது அலி புளியங்குடி ஜாகிர் அப்பாஸ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரையில் நடைபெற்ற உணவு திருவிழா., பஸ்தாவில் புட்டு – இட்லியில் பர்கர் – வேப்பிலை அல்லவா – பாரம்பரிய பழைய உணவுகள் முதல் நவீன உணவுகள் வரை தயார் செய்து அசத்தல்…
செஃப் கோஸ் கிரேசி என்ற தலைப்பில் நடைபெற்ற உணவு திருவிழாவில் முதல் ஆளாக உணவை ருசீத்த இயக்குனர் அமீர். மதுரை தூத்துக்குடி செல்லும் சுற்றுசாலையில் அமைந்துள்ள தனியார் நட்சத்திர விடுதியில் செஃப் போஸ் கிரேசி என்ற தலைப்பில் இன்று 07.09.2023 முதல் செப்டம்பர் 17.09.2023 ஆம் தேதி வரை உணவுத் திருவிழா பத்து நாட்கள் நடைபெறுகிறது.
இந்த உணவு திருவிழாவானது நேற்று இரவு 8.00 மணிக்கு தொடங்கியது. 25க்கும் மேற்பட்ட சமையற் கலைஞர்களைக் கொண்டு 65 வகையான தென் இந்தியா., வட இந்தியா உட்பட இத்தாலி., சைனீஸ் உள்ளிட்ட பன்னாட்டு உணவு வகைகளை சமைத்து வைத்திருந்தனர்.
சுதந்திரப் போராட்ட தியாகி வ.உ. சிதம்பரத்தின் 152வது பிறந்த நாளை முன்னிட்டு. அவரை கௌரவ படுத்துவதற்காகவே இந்த உணவு திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த உணவு திருவிழாவில் வ.உ.சிதம்பரத்தில் மகன் வழி பேத்தியுமான திருமதி. செல்வி முருகானந்தம் தனது குடும்பத்தினருடன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட வ உ சிதம்பரனார் பேத்தி செல்வி முருகானந்தத்திற்கு அமிக்கா ஹோட்டல் பொது மேலாளர் பால் அதிசயராஜ் சால்வை அணிவித்து வரவேற்றார். வ உ சிதம்பரத்தின் பேத்தியான செல்வி முருகானந்தம் உணவு திருவிழாவை தொடங்கி வைத்தார், இந்த உணவுத் திருவிழாவில் வேப்பிலை அல்வா., வாழை இலையில் அல்வா., பாஸ்தாவில் புட்டு., இட்லியில் பர்கர்., கவுனி அரிசி கஞ்சி. முளைகட்டிய பயிர்கள்.நவதானிய கஞ்சி பச்சை காய்கறிகள்., பழங்கள்., இத்தாலி கான்டினெண்டல் உள்ளிட்ட உணவு வகைகளை இந்திய உணவுகள் செய்முறையிலும்., வெளிநாட்டு உணவுகளை இந்திய முறைப்படியும் ஒப்பிட்டு செய்திருந்தனர். இனிப்புகள் வகையில் உள்ளூர் முதல் வெளியூர் வரை சாக்லேட்டுகள்., கேக்குகள்.,கடலை மிட்டாய். கமரக்கட்டு முதல் மாஸ்மெல்லோ என நூற்றுக்கணக்கான வகையிலும் செய்து காட்சிப்படுத்திருந்தது அங்கே வந்திருந்தவர்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
மேலும் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் செஃப் கோர்ஸ் கிரேசி என்ற தலைப்பிற்கு இணையாக சமையல் கலைஞர்கள் பல்வேறு வேடங்கள் அணிந்து சமைத்த உணவை வாடிக்கையாளர்களுக்கு பரிமாறவும் செய்தனர். இந்த நிகழ்ச்சியில் ஓட்டலில் தங்கி இருந்த நடிகரும் பிரபல இயக்குனருமான அமீர் கலந்து கொண்டு முதல் நபராக உணவை ரசித்து உண்டார்.
மேலும் உணவுத் திருவிழாவில் கலந்து கொள்ள வரும் வாடிக்கையாளர்கள் விரும்பினால் சமையல் கலைஞர்கள் அவர்களுக்கு எளிமையாக கேக் தயாரிக்கும் முறையை சொல்லி கேக் தயாரிக்க பயிற்சி அளிக்கின்றனர்.
முதன்மை சமையல்கலைஞர் கோபி விருமாண்டி கூறுகையில் இந்த உணவுத் திருவிழாவின் நோக்கமே சத்தான உணவுகளை சாப்பிடுவதும் பாரம்பரியமான நமது உணவு கலாச்சாரத்தை அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் செய்வதற்காகவே இந்த உணவுத் திருவிழா அமிக்ஹா ஹோட்டலில் நடைபெறுகிறது எனக் கூறினார்.
மதுரையைச் சேர்ந்த ரூபன் உணவுத் திருவிழாவில் கலந்து கொண்டார் அவர் கூறுகையில் தென்னிந்திய உணவுகளை மேற்கத்திய சமையல் சேர்த்து சுவையான முறையில் தயாரித்து வழங்கியது வித்தியாசமாக இருந்தது. கனடாவில் இருந்து வந்த சுற்றுலா பயணி ஜெஃப்ரி கூறுகையில் இங்குள்ள சமையல் வித்தியாசமாக சுவை மற்றும் அருமையாக இருந்தது எனக் கூறினார். கேரளாவைச் சேர்ந்த ராஜேஷ் கூறுகையில் வித்தியாசமான உணவு வகைகள் அருமையாக இருந்தது குறிப்பாக கூற வேண்டும் என்றால் நீம் அல்வா சிறப்பாக மிகவும் சுவையாகவும் இருக்கிறது.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
உதயநிதி பங்கேற்ற கூட்டத்தை சிறப்பாக நடத்திய தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர்; நன்றி தெரிவித்த நிர்வாகிகள்..
தமிழக அமைச்சர் உதயநிதி பங்கேற்ற கூட்டத்தை சிறப்பாக நடத்திய தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளருக்கு இளைஞரணி நிர்வாகிகள் நன்றி தெரிவித்தனர். தென்காசி மாவட்டத்தில் திமுக இளைஞரணி செயலாளரும், தமிழக அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பங்கேற்ற இளைஞரணி செயல் வீரர்கள் கூட்டத்தை சிறப்பாக நடத்திய தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெயபாலனை மாவட்ட இளைஞரணியினர் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். தென்காசி ஒருங்கிணைந்த மாவட்ட திமுக இளைஞரணி செயல் வீரர்கள் கூட்டம் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தலைமையில் தென்காசியில் நடைபெற்றது. தென்காசி மாவட்ட செயலாளர்கள் (தெற்கு) ஜெயபாலன், ராஜா எம்.எல்.ஏ. (வடக்கு) ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் திமுக இளைஞரணி செயலாளரும், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கி பேசினார். இக்கூட்டத்தை மாநாடு போல் பிரமாண்டமாக நடத்திட இளைஞரணியினரை ஒருங்கிணைத்த தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வே. ஜெயபாலனை இளைஞரணி நிர்வாகிகள் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கிருஷ்ணராஜா தலைமையில், துணை அமைப்பாளர்கள் சுப்பிரமணியன், முகம்மது அப்துல் ரகீம், கிருஷ்ணராஜ், ஐவேந்திரன், சிவகுமார் ஆகியோர் மாவட்ட பொறுப்பாளருக்கு பொன்னாடை அணிவித்து நன்றி தெரிவித்தனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பூலாங்குளம் அரசு பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கல்..
பூலாங்குளம் அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டது. தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம், பூலாங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது. கீழப்பாவூர் யூனியன் சேர்மன் சீ.காவேரி சீனித்துரை தலைமை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் திரவியக்கனி குணரத்தினம் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியை ஜூலியா டெய்சி மேரி வரவேற்றார். முன்னாள் அமைச்சர் டாக்டர் பூங்கோதை ஆலடி அருணா, பூலாங்குளம் அரசு பள்ளியில் ஆகியோர் பங்கேற்று 138 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கி பேசினர்.
இவ்விழாவில் கீழப்பாவூர் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் சிவன் பாண்டியன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர், ஜெ.கே. ரமேஷ், மாவட்ட பிரதிநிதிகள் சீ. பொன்செல்வன், முத்துராஜ், பொறியாளர் அணி துணை அமைச்சர் தளபதி சிவராஜன், பெத்தநாடார்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஜெயராணி கலைச்செல்வன், துணைத்தலைவர் ஜெயராணி அந்தோணிராஜ், ஒன்றிய கவுன்சிலர் நாகராஜன், தென்காசி யூனியன் துணை சேர்மன் கனகராஜ் முத்துபாண்டியன், சாம்பவர் வடகரை கோ.மாறன், இளைஞரணி கோமு, நிர்வாகிகள் தளபதி முருகேசன், தங்கச்சாமி, முயல், சீதாராமன், செந்தில், காளிமுத்து, மாரிமுத்து, மோகன், இளைஞரணி துணை அமைப்பாளர் சிவகுமார், சச்சின், ஜெயக்குமார், ஓவிய ஆசிரியர் ராமர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இலங்கைக்கு கடத்த வீட்டில் பதுக்கிய ரூ. 20 கோடி மதிப்பிலான ஐஸ் போதை பொருள் பறிமுதல்: இருவர் கைது..
இராமநாதபுரம், செப்.8- இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே வேதாளை கடற்கரை வழியாக இலங்கைக்கு ஐஸ் எனும் போதைப பொருள் கடத்த இருப்பதாக மத்திய உளவுத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் வேதாளை எம்ஜிஆர் நகரில் உள்ள வீடு ஒன்றில் மண்டபம் போலீசார் சோதனை நடத்தினர். அந்த வீட்டிற்குள் பதுக்கி வைத்திருந்த 6 கிலோ மெத்தம்பேட்டமைன் எனும் ஐஸ் போதை பொருளை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வீட்டின் உரிமையாளரான சூடை வலை குச்சு பகுதியைச் சேர்ந்த சேதுராஜா மகன் நாககுமார் 20 மற்றும் நாகு மகன் சக்திவேல் 23 ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
பறிமுதல் செய்யப்பட்ட ஐஸ் எனும் மெத்தம்பேட்டமைன் போதை பொருளின் சர்வதேச மதிப்பு ரூ.20 கோடி இருக்கலாம் என போலீசார் தெரிவிக்கின்றனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நகராட்சியில் இலவச கண் ஆலோசனை முகாம் நடந்தது. முகாமில் பொதுமக்கள் பலர் கண் பரிசோதனை செய்து பயனடைந்தனர். அல்ஷிபா ஆயுஷ் மருத்துவமனை மற்றும் நாகர்கோவில் பெஜான்சிங் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் ஆலோசனை முகாமினை கடையநல்லூர் நகராட்சி சேர்மன் மூப்பன் ஹபீப் துவக்கி வைத்தார். முகாம் காலை 10.00 முதல் மதியம் 1.00 மணி வரை நடைபெற்றது. இம்முகாமில் பொது மக்கள் பலர் பரிசோதனை செய்து தேவையான சிகிச்சையினை பெற்று பயனடைந்தனர். இந்த ஆலோசனை முகாமில் சுகாதார ஆய்வாளர் பிச்சையா பாஸ்கர், சுகாதார அலுவலர் சிவா மற்றும் அல் ஷிபா ஆயூஷ் மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள் பலர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு தேவையான மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டனர். முகாமில் திமுக நகர தகவல் தொழில் நுட்ப பிரிவு சார்பில் ஜாஹிர் உசேன் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
வலிமை மிக்க அணுக்கரு விசையை உருவாக்கும் மெசான் (pi meson) என்ற துகளைக் கண்டு பிடித்தத, நோபல் பரிசு பெற்ற ஹிடேகி யுகாவா நினைவு தினம் இன்று (செப்டம்பர் 08,1981).
ஹிடேகி யுகாவா (Hideki Yukawa) ஜனவரி 23, 1907ல் ஜப்பானில் டோக்கியோ பெருநகரில் பிறந்தார். இவருடைய தந்தை ‘டகுஜி ஒகாவா’ என்பவராவார். தான் பிறந்த ஊரிலேயே இளமைக் கல்வியைப் பெற்ற இவர், கியோடோ என்ற இடத்தில் அமைந்திருந்த கியோட்டோ இம்பீரியல் பல்கலைக் கழகத்தில் சேர்ந்து படித்துப் பட்டம் பெற்றார். 1929-லிருந்து நான்கு ஆண்டுகள் விரிவுரையாளராகப் பணிபுரிந்தார். பட்டதாரியான இவர் கோட்பாட்டு இயற்பியலில் ஆர்வம் செலுத்தினார். குறிப்பாக ஆதாரத் துகளைக் (Elementary particles) கண்டறிவதில் அதிக ஆர்வம் செலுத்தினார். 1932ல் ‘சுமிகோ’ என்ற பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் பிறந்தனர். 1932-39 க்கு இடைப்பட்ட கலத்தில் விரிவுரையாளராகவும், பிறகு ஒசாக்கா பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியராகவும் பணியாற்றினார். அங்கு ஆய்வுகளில் ஈடுபட்ட ஹிடேகி 1935ல் ஆதாரத் துகள்களுக்கிடையே ஏற்படும் உள்வினைகள் என்பது பற்றி இவருடைய ஆய்வறிக்கையை வெளியிட்டார்.
அறிக்கையில் அணுக்கரு விசைக்கான புதிய புலக் கொள்கையை உருவாக்கியிருந்தார். அதில் மெசான் என்ற பொருளின் வெளிப்பாட்டைக் குறிப்பிட்டார். 1937ல் அமெரிக்க இயற்பியலாளர்கள் காஸ்மிக் கதிர்களில் இருந்து வெளிப்படும் ஒரு வகை மெசான் என்ற துகளைக் கண்டு பிடித்தது இவருடைய ஆய்வுக்கு ஊக்கமூட்டுவதாக இருந்தது. எனவே, மெசான் கொள்கையை விரிவாக்குவதில் இவருடைய சொந்தக் கருத்துகளின் அடிப்படையில் தீவிரமாக ஈடுபட்டார். 1938ல் இவருக்கு முனைவர் பட்டம் கிடைத்தது. 1947லிருந்து ஆதாரத் துகள்களின் பொதுக் கொள்கை அடிப்படையில் தீவிரமான ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். 1948ல் அமெரிக்காவிலும் 1949 முதல் அமெரிக்காவிலுள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்திலும் வருகை தரும் பேராசிரியராக செயல்பட்டார்.
யுகாவா வலுவான அணுசக்தியின் வரம்பிலிருந்து (அணுக்கருவின் ஆரத்திலிருந்து), சுமார் 100 MeV / c2 நிறை கொண்ட ஒரு துகள் இருப்பதைக் கணித்தார். ஆரம்பத்தில் 1936 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர், மியூயான் (ஆரம்பத்தில் “மு மீசன்” என்று அழைக்கப்பட்டது) இந்த துகள் என்று கருதப்பட்டது. ஏனெனில் இது 106 MeV / c2 நிறை கொண்டது. இருப்பினும், பின்னர் மேற்கொள்ளப்பட்ட சோதனைகள், மியூயான் வலுவான அணுசக்தி தொடர்புகளில் பங்கேற்கவில்லை என்பதைக் காட்டியது. நவீன சொற்களில், இது மியூனை ஒரு லெப்டனாக ஆக்குகிறது. ஆனால் ஒரு மீசன் அல்ல. இருப்பினும், வானியற்பியலாளர்களின் சில சமூகங்கள் தொடர்ந்து மியூனை “மு-மேசன்” என்று அழைக்கின்றன.
1947 ஆம் ஆண்டில், இங்கிலாந்தில் உள்ள பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தில் சிசில் பவல், சீசர் லேட்ஸ், கியூசெப் ஒச்சியாலினி மற்றும் பலர் இணைந்து முதல் உண்மையான மீசன்கள், சார்ஜ் செய்யப்பட்ட பியோன்கள் கண்டுபிடிக்கப்பட்டன. துகள் முடுக்கிகளின் வருகை இன்னும் வரவில்லை என்பதால், உயர் ஆற்றல் கொண்ட துணைத் துகள்கள் வளிமண்டல அண்ட கதிர்களிலிருந்து மட்டுமே பெறப்படுகின்றன. புகைப்படத் தகடுகளின் வளர்ச்சியின் பின்னர், குழம்புகளின் நுண்ணிய பரிசோதனையானது சார்ஜ் செய்யப்பட்ட துணைஅணு துகள்களின் தடங்களை வெளிப்படுத்தியது. பியோன்கள் முதலில் அவற்றின் அசாதாரணமான “இரட்டை மீசன்” தடங்களால் அடையாளம் காணப்பட்டன. அவை அவற்றின் சிதைவால் ஒரு புட்டேடிவ் மீசனாக விடப்பட்டன. துகள் ஒரு மியூயானாக அடையாளம் காணப்பட்டது. இது பொதுவாக நவீன துகள் இயற்பியலில் மீசன் என வகைப்படுத்தப்படவில்லை.
ஜப்பானில் இருந்த அறிவார்ந்த கழகங்கள் இவருடைய திறமையை உணர்ந்தன. குறிப்பாக ஜப்பான் பல்கலைக் கழகம், இயற்பியல் கழகம், ஜப்பான் அறிவியல் குழு ஆகியவை இவரைத் தங்கள் உறுப்பினராக ஏற்றுக் கொண்டன. ஒசாக்கா பல்கலைக்கழகம் இவரை வருகை தந்து பாடம் பயிற்றுவிக்கும் பேராசிரியராக அமர்த்திக்கொண்டது. கியோட்டோ பல்கலைக்கழகம் அடிப்படை அறிவியல் ஆய்வு நிறுவனத்தின் இயக்குநராக, இவருடைய பெயரிடப்பட்ட யுகாவா கூடத்தில் அமைந்துள்ள அதற்கான அலுவலகத்தில் இருந்து செயல்பட்டார். அமெரிக்க இயற்பியல் கழகம், அமெரிக்க தேசிய அறிவியல் கழகம் ஆகியவை இவரை தங்கள் கழகத்தின் அயல்நாட்டு உறுப்பினராகத் தேர்ந்தெடுத்தன. 1940ல் ஜப்பான் கழகத்தின் இம்பீரியல் பரிசு 1943-ல் பண்பட்டை அலங்கரிக்கும் தகுதிப் பரிசு (Decoration of culturalment) ஆகியவை இவருக்கு வழங்கப்பட்டன.
யுகாவா பல ஆய்வுக் கட்டுரைகளை எழுதி வெளியிட்டதோடு சில நூல்களையும் எழுதியுள்ளார். அவற்றுள் ‘துகள்கற்றை எந்திரவியலுக்கான முன்னுரை’ (Introduction to Quantum Mechanics) 1946, ‘ஆதாரத் துகள் கோட்பாட்டுக்கான முன்னுரை’ (Introductioan to the Theory of Elementary Particles-1948) ஆகிய இரண்டு நூல்களை ஜப்பானிய மொழியில் எழுதி வெளியிட்டார். ‘கோட்பாட்டு இயற்பியல் முன்னேற்றங்கள்’ என்ற தலைப்பில் வெளிவந்த ஆங்கிலப் பருவ இதழின் ஆசிரியராக இருந்தும் செயல்பட்டார். பாரிஸ் பல்கலைக் கழகம், எடின்பர்க் ராயல் கழகம், இந்திய அறிவியல் கழகம், அனைத்துலக தத்துவ மற்றும் அறிவியல் கழகம், பான்டிபிசியா அறிவியல் கழகம் ஆகியவை இவரை தங்களது அயல் நாட்டு உறுப்பினராக தேர்ந்தெடுத்துக் கொண்டன.
எல்லாவற்றுக்கும் மேலாக ‘கியோட்டோ நகர் மதிப்பியல் குடிமகன்’ (Honarary citizen of the city of Kyoto, Japan) என்ற சிறப்பு இவருக்கு வழங்கப்பட்டது. இவரைச் சிறப்பிக்கும் வகையில் இவருடைய உருவம் பொறித்த அஞ்சல் வில்லைகள் வெளியிடப்பட்டன. யுகாவா அணுக்கருவினுள் ஏற்படும் வலிமை மிக்க அணுக்கரு விசையை உருவாக்கும், எலக்ட்ரானை விட பல மடங்கு கனமான ஆதாரத் துகளைக் கண்டறிந்தவர். 1949ல் இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற கோட்பாட்டு இயற்பியலாளர். முதன் முதலில் ஜப்பானுக்கு நோபல் பரிசைப் பெற்றுத்தந்த ஹிடேகி யுகாவா செப்டம்பர் 8,1981ல் தனது 74வது அகவையில் ஜப்பான், கியோட்டோ என்ற ஊரில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சோழவந்தான் அரசு மருத்துவமனையில் கூடுதல் பணியாளர்கள் நியமிக்க பொதுமக்கள் கோரிக்கை..
மதுரை மாவட்டம் சோழவந்தான் அரசு பொது மருத்துவமனையில் நோயாளிகளின் எண்ணிக்கை தினசரி அதிகரித்து கொண்டே வரும் சூழ்நிலையில் தற்போது மழைக்காலம் தொடங்கியுள்ளதால் சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து தினசரி காலையில் 1000க்கும் மேற்பட்ட புற நோயாளிகள் வந்து செல்கின்றனர் அவ்வாறு வரும் நோயாளிகள் சீட்டு.பதிந்து அதன் பின்பு மருத்துவரை சந்திக்க வேண்டிய சூழ்நிலையில் போதிய பணியாளர்கள் இல்லாததால் நோயாளிகள் பதிவு செய்யும் இடத்தில் தினசரி கூட்டம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது மேலும் பெண்கள் மற்றும் வயதானவர்கள் நிற்க முடியாமல் மருத்துவமனை படிக்கட்டுகளில் அமர்ந்து ஓய்வெடுக்க வேண்டியஅவல நிலையும் உள்ளது ஆகையால் நோயாளிகள் மற்றும் வயதானவர்களின் உடல் நிலையை கருத்தில் கொண்டு சீட்டு பதியும் இடத்தில் கூடுதல் பணியாளர்களை நியமித்து நோயாளிகள் சிரமப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்…
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை ரயில் நிலையத்தில் ரயிலில் தவறவிட்ட 26 1/2 பவுன் தங்க நகைகளை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த போலீசார்..
மதுரையில் செங்கோட்டை- மயிலாடுதுரை பயணிகள் இரயிலில் சங்கரன்கோவிலிருந்து மதுரைக்கு பயணம் செய்து வந்த கே.புதூரை சேர்ந்த மாரியம்மாள் என்பவர் தான் பயணத்தின்போது கொண்டு வந்திருந்த கட்டைப்பை அதனுள் இருந்த மணிபர்ஸிலிருந்த தங்க டாலர் செயின், தங்க அட்டியல், தங்க கொடி செயின் உள்ளிட்ட மொத்தம் இருப்பது ஆறரை (26 1/2) பவுன் தங்க நகைகளை இரயிலில் தனது இருக்கையில் மறந்து வைத்துவிட்டு இறங்கி சென்றுள்ளார். தொடர்ந்து இரயில் நிலையத்தைவிட்டு வெளியில் சென்ற பின்னரே தான் வைத்திருந்த கட்டப்பையை ரயிலில் தவறவிட்டதை உணர்ந்த அவர் உடனே மதுரை இருப்புப்பாதை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தன் அடிப்படையில் சார்பு ஆய்வாளர் தலைமையில் குழு தவறவிட்ட கட்டப்பையுடன் தங்க நகைகளையும் மீட்டு மாரியம்மாள் இடம் ஒப்படைத்துள்ளனர். ரயிலில் தவறவிட்ட தங்க நகைகளை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்த போலீசருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ஒரே நாடு, ஒரே தேர்தல் வேண்டும் என்று கூறியவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி…
திருவில்லிபுத்தூரில், பாஜக தலைவர் அண்ணாமலை பேச்சு…..
திருவில்லிபுத்தூர் : ஒரே நாடு, ஒரே தேர்தல் வேண்டும் என்று தனது, நெஞ்சுக்கு நீதி புத்தகத்தில் எழுதியிருப்பவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி என்று, திருவில்லிபுத்தூர் பத்திரிகையாளர் சந்திப்பில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசினார்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மற்றும் திருவில்லிபுத்தூர் பகுதிகளில், பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை, என் மண் என் மக்கள் என்ற தலைப்பில் நடை பயணத்தில் ஈடுபட்டார். முன்னதாக திருவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோவிலில் அண்ணாமலை சுவாமி தரிசனம் செய்தார். பின்னர், ஸ்ரீசடகோபராமானுஜ ஜீயரை சந்தித்து ஆசி பெற்றார். இதனையடுத்து நடைபயணத்தை துவக்கிய அண்ணாமலை, செய்தியாளர்கள் சந்திப்பில் பேசும்போது, தற்போது தமிழகத்தில் சனாதனத்திற்கு எதிராக குரல் எழுந்துள்ளது. சனாதனத்தை ஒழிப்பதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதியாக இருந்தால் தான் தமிழகத்திலும், இந்தியாவிலும் மாற்றம் வரும். சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்றால் தமிழக அரசின் முத்திரை சின்னமாக உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் கோபுரத்தை முதலில் மாற்ற வேண்டும். முதல்வர் ஸ்டாலின் அதற்கு ஒத்துக்கொள்வாரா, முடிந்தால் அரசு முத்திரையை மாற்றிப் பாருங்கள்.
கோவில்களுக்கு செல்பவர்களை கேலி செய்யும் உதயநிதி ஸ்டாலின், அவரது குடும்பத்தில் இருப்பவர்கள் கோவில்களுக்கு செல்வதை மட்டும் ஏன் கூற மறுக்கிறார். இதே திருவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோவிலில், முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் திருப்பாவையின் 30 பாடல்களை பாடினார். இது தான் சனாதனம். அனைத்து மக்களையும், அனைத்து மதங்களையும் அரவணைத்து செல்வது தான் சனாதனம். ஆனால் இவர்கள் பிரித்தாளும் சூழ்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஆண்டு, பெருமை மிகுந்த கிருஸ்தவன் என்று கூறிய உதயநிதி ஸ்டாலினுக்கு சனாதன தர்மத்தை பேச தகுதியில்லை. இந்து மதத்தை மட்டுமல்ல இஸ்லாம், கிறிஸ்தவ மதங்களை வேரறுப்போம் என்று உதயநிதி கூறியிருந்தாலும் அதனை கண்டிக்கும் முதல் குரல், கண்டன குரல் என்னிடமிருந்து வரும். ஜனாதிபதி தேர்தலில் பட்டியல் இனத்தை சேர்ந்த ராம்நாத் கோவிந்தை இவர்கள் ஆதரிக்கவில்லை. தற்போது பழங்குடி இனத்தைச் சேர்ந்த திரவுபதி முர்முவையும் இவர்கள் ஆதரிக்கவில்லை. ஆனால் எல்லோரும் சமம் என்று பேசி வருகின்றனர். வரும் 18ம் தேதி சிறப்பு பாராளுமன்ற கூட்டத் தொடர் நடக்க இருக்கிறது. அதில் பாரதம் என்ற பெயர் மாற்றம் வருகிறதா, ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற அறிவிப்பு வரப்போகிறதா என்று எதுவும் தெரியாது. ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து ஆராய்வதற்கு மத்திய அரசு ஒரு குழுவை அமைத்திருக்கிறது. இதனை பாஜக கட்சி வரவேற்கிறது. முன்னாள் முதல்வர் கருணாநிதியே, தான் எழுதிய நெஞ்சுக்கு நீதி புத்தகத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல் வேண்டும் என்று எழுதியுள்ளார். இதனை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும், திமுக கட்சியினரும் புரிந்துகொள்ள வேண்டும்.
தேர்தல் நேரத்தில், எங்கள் கட்சியில் 90 சதவீதம் இந்துக்கள் என்று கூறி ஒட்டுகளை வாங்கி விட்டு, தேர்தல் முடிந்த பின்பு சனாதன தர்மத்தை ஒழிப்போம் என்று கூறுவது தான் திமுகவின் கொள்கை.
உதயநிதி ஸ்டாலினுக்கு சவால் விடுகிறேன், வரும் 2024 பாராளுமன்ற தேர்தல், 2026 சட்டப்பேரவை தேர்தல்களை சனாதன தர்மத்திற்கான தேர்தலாக வைத்து கொள்வோம். நீங்கள் சனாதன தர்மத்தை ஒழிப்போம் என்று வாக்குறுதி அளியுங்கள். நாங்கள் சனாதன தர்மத்தை காப்பாற்றுவோம் என்று வாக்குறுதி அளிக்கிறோம். மக்கள் யாருக்கு வாக்களிக்கிறார்கள் என்று பார்ப்போம் என்று அண்ணாமலை பேசினார். நடை பயணத்தில், புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி, பாஜக மாவட்ட தலைவர் ராஜா, முன்னாள் எம்.எல்.ஏ. கோபால்சாமி உட்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
உசிலம்பட்டியில் தமிழக அரசின் வரும்முன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்…காசநோயாளிகளுக்கான நடமாடும் இலவச எக்ஸ்ரோ வண்டி…
உசிலம்பட்டியில் தமிழக அரசின் வரும்முன் காப்போம் திட்ட மருத்துவமுகாம் நiடைபெற்றது. இதில் காசநோயாளிகளுக்கான நடமாடும் இலவச எக்ஸ்ரோ வண்டியை எம்எல்ஏ அய்யப்பன் துவங்கி வைத்தார்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேரையூர் ரோட்டில் அமைந்துள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் தமிழக அரசின் வரும் முன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் காசநோய் குறித்து விழிப்புணர்வு பொதுமக்களுக்கு அளிக்கப்பட்டது.
மேலும் தமிழக அரசு சார்பில் காசநோய்த்து துறையின் சார்பாக நடமாடும் நுண் கதிர் எக்ஸ்ரே வாகனத்தை உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன் தொடங்கி வைத்து ஆய்வு மேற்கொண்டார்.இந்த வாகனம் கிராமம் கிராமாகச் சென்று காசநோயாளிகளைக் கண்டறிந்து கிராமத்திலேயே வாகனத்தில் எக்ஸ்ரோ இலவசமாக எக்ஸ்ரே எடுக்கப்பட்டு காசநோய் தாக்கம் இருப்பின் நோயானிகள் உசிலம்பட்டி அரசு காசநோய் மருத்துவமணையில் அனுமதிக்கப்படுவார்கள் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.மேலும் இந்த மருத்துவமுகாமில் கர்ப்பிணி பெண்கள் புற நோயாளிகள் அனைவருக்கும் இலவசமாக மருத்துவம் எக்ஸ்ரே ஆகியவை எடுக்கப்பட்டது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மத்திய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் மறியல்: 992 பேர் கைதாகி விடுதலை..
ராமநாதபுரம், செப்.7 – விலைவாசி உயர்வு கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசு, வேலை வாய்ப்பு உருவாக்காத மத்திய அரசுக்கு எதிராக ராமநாதபுரம் மாவட்டத்தில் 7 இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ரயில் மறியல், மத்திய அரசு அலுவலகங்கள் முன் மறியல் போராடினர்.
இது தொடர்பாக மாவட்டம் முழுவதும் 390 பெண்கள் உள்பட 992 பேர் கைதாகி விடுவிக்கப்பட்டனர். ராமநாதபுரம் தலைமை தபால் நிலையம் முன் மறியலுக்கு முயன்ற மார்க்சிஸ்ட் மாவட்ட செயலர் காசிநாதரை, மாவட்ட செயற்குழு உறுப்பினர் குருவேல், தாலுகா செயலர் செல்வராஜ், மாவட்ட குழு உறுப்பினர்கள் வெங்கடேஷ், கல்யாணசுந்தரம் உள்பட 39 ஆண்கள், 20 பெண்கள் என 59 பேர் கைதாகினர்.
பரமக்குடி ரயில் ஸ்டேஷனில் ரயில் மறியலுக்கு மாநிலக் குழு உறுப்பினர் பாஸ்கரன், தாலுகா செயலர் ராஜா, மாவட்ட குழு உறுப்பினர் தட்சிணாமூர்த்தி, முரளி உள்பட 192 ஆண்கள், 133 பெண்கள் உள்பட 326 பேர் கைதாகினர்.
சாயல்குடியில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கண்ணகி, தாலுகா செயலர் முத்துசாமி தலைமையில், சிவன் பெருமாள், நவநீதகிருஷ்ணன், பிரான்சிஸ் உட்பட பலர் கைதாகினர்.
ராமேஸ்வரம் தபால் நிலையம் முன் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கருணாகரன், தாலுகா செயலர் சிவா, மாவட்ட குழு உறுப்பினர்கள் ஆரோக்ய நிர்மலா, ஜஸ்டின், ராமச்சந்திர பாபு உள்பட 180 ஆண்கள் 125 பெண்கள் என 305 பேர் கைதாகினர். முதுகுளத்தூரில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கலையரசன், தாலுகா செயலர் முருகன், மாவட்ட குழு உறுப்பினர் கணேசன் உட்பட 75 ஆண்கள், 51 பெண்கள் என 126 பேர் மறியல் செய்து கைதாகினார். கைது செய்யப்பட்ட அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரம், செப்.7- இராமநாதபுரம் மாவட்டத்தில் செப்.9 முதல் 2 மாத காலத்திற்கு 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படுகிறது என கலெக்டர் விஷ்ணு சந்திரன் தனது உத்தரவில் தெரிவித்துள்ளார். பரமக்குடியில் செப்.11 ல் தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினம், பசும்பொன்னால் அக்.28-அக்.30 வரை தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜையை முன்னிட்டு சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் விதமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் செப்.9 முதல் அக். 31 வரை 144 தடை உத்தரவு பிறப்பித்து ஆட்சியர் விஷ்ணு சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
இதனால் வெளி மாவட்ட வாடகை வாகனங்கள் ராமநாதபுரம் மாவட்டத்தில் நுழைய தடை விதிக்கப்படுகிறது. பாதுகாப்பு அச்சுறுத்தல் அல்லது கலவரத்தின் அவசர நிலைகளில், குற்றவியல் நடைமுறைச் சட்ட பிரிவு 144 தடை உத்தரவு அமலாக்கப்படுகிறது. பிரிவு 144 அமல்படுத்தப்படுப்பட்ட பகுதியில் 5 அல்லது அதற்கு மேற்பட்டோர் பொது இடத்தில் கூடுவது சட்ட விரோதமாக கருதப்படுகிறது என உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரையில் பகுதிகளில் சிவப்பு மற்றும் வெள்ளை விளக்குடன் ஓளியுடன் சுற்றித் திரிந்த மர்ம பொருளால் பொதுமக்கள் பீதி..
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஆர்.வி பட்டி பசுமலை பெருங்குடி அவனியாபுரம் பகுதிகளில் மாலை 6:30 மணி முதல் சிவப்பு மற்றும் வெள்ளை விளக்கு உடன் ஒளிர்ந்த மர்ம பொருள் வானில் சுற்றி திரிந்தது. இது குறித்து சந்தேகம் அடைந்த பொதுமக்கள் மர்ம பொருள் குறித்து ஆங்காங்கே தகவல் தெரிவித்தனர். இரவு 9 மணி வரை பசுமலை மற்றும் ஹார்விப்பட்டி பகுதியில் சுற்றி திரிந்தது.
வானில் சிவப்பு மற்றும் வெள்ளை ஒளி உடன் ஒளிர்ந்த மர்ம பொருளால் பொதுமக்கள் பீதி அடைந்தனர் யாரேனும் அனுமதியில்லாமல் டோன்ட் கேமரா உள்ளிட்ட தொடர்ந்து பறக்க விட்டு பொதுமக்கள் இடையே இதையே ஏற்படுத்த முயற்சி செய்தார்களா என தெரியவில்லை. இதனால் திருப்பரங்குன்றம் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் பரபரப்பாக காணப்பட்டது..
செய்தியாளர் வி காளமேகம்
You must be logged in to post a comment.