Home செய்திகள் ராமநாதபுரம் மாவட்டத்தில் செப்.9 முதல் அக்.31 வரை 144 தடை உத்தரவு..

ராமநாதபுரம் மாவட்டத்தில் செப்.9 முதல் அக்.31 வரை 144 தடை உத்தரவு..

by ஆசிரியர்

இராமநாதபுரம், செப்.7- இராமநாதபுரம் மாவட்டத்தில் செப்.9 முதல் 2 மாத காலத்திற்கு 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படுகிறது என கலெக்டர் விஷ்ணு சந்திரன் தனது உத்தரவில் தெரிவித்துள்ளார். பரமக்குடியில் செப்.11 ல் தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினம், பசும்பொன்னால் அக்.28-அக்.30 வரை தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜையை முன்னிட்டு சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் விதமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் செப்.9 முதல் அக். 31 வரை 144 தடை உத்தரவு பிறப்பித்து ஆட்சியர் விஷ்ணு சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

இதனால்  வெளி மாவட்ட வாடகை வாகனங்கள் ராமநாதபுரம் மாவட்டத்தில் நுழைய தடை விதிக்கப்படுகிறது. பாதுகாப்பு அச்சுறுத்தல் அல்லது கலவரத்தின் அவசர நிலைகளில், குற்றவியல் நடைமுறைச் சட்ட பிரிவு 144 தடை உத்தரவு அமலாக்கப்படுகிறது. பிரிவு 144 அமல்படுத்தப்படுப்பட்ட பகுதியில் 5 அல்லது அதற்கு மேற்பட்டோர் பொது இடத்தில் கூடுவது சட்ட விரோதமாக கருதப்படுகிறது என உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com