திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஒன்றிய தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு மற்றும் செயற்குழு கூட்டம் மாநில தலைவர் தியாகராஜன் வழிகாட்டுதலின்படி செங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது கூட்டத்திற்கு திருவண்ணாமலை மாவட்ட தலைவர் முருகன் தலைமை தாங்கினார் மாவட்ட செயலாளர் எழிலன் செங்கம் ஒன்றிய செயலாளர் காசி ஆகியோர் முன்னிலை வைத்தனர் செங்கம் ஒன்றிய தலைவர் வெங்கடேசன் வரவேற்றார் நிர்வாகிகள் தேர்வில் செங்கம் வட்ட கிளை தலைவராக வெங்கடேசன் செயலாளர் காசி பொருளாளர் மகேஸ்வரன் துணைத் தலைவர் செந்தில்குமார் அமைப்பு செயலாளர் மணி ஒருங்கிணைப்பாளர் புரட்சி அரசன் செய்தி தொடர்பாளர் நாகராஜன் ஆகியோர் மீண்டும் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டனர் பின்னர் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்தினை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமல்படுத்த வேண்டும் 01.06.2009-க்குப்பின் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டினை களைதல் வேண்டும் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு அறிவியல் பாடத்திற்கு 25 மதிப்பெண் வழங்குவது போல் அனைத்து பாடத்திற்கும் 10 சதவீத அகமதிப்பீட்டு மதிப்பெண் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது முடிவில் செங்கம் வட்ட பொருளாளர் மகேஸ்வரன் நன்றி கூறினார்
Category:
மாவட்ட செய்திகள்
அதிக தோல்விகளையும் புறக்கணிப்புகளையும் சந்தித்த, அலிபாபா குழுமத்தின் செயல் தலைவர், ஜாக் மா பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 10, 1964).
by ஆசிரியர்
written by ஆசிரியர்
ஜாக் மா (Jack Ma) செப்டம்பர் 10, 1964ல் சீனாவில் சிஜியாங் மாநிலத்தில் அங்சூவில் பிறந்தார். இளம் அகவையிலேயே ஆங்கிலம் கற்க மிகுந்த ஆர்வம் காட்டிய மா அடுத்திருந்த தங்குவிடுதியிலிருந்த வெளிநாட்டவருடன் உரையாட 45 நிமிடங்கள் மிதிவண்டியில் செல்வார். கட்டணமில்லா சுற்றுலா வழிகாட்டியாக தனது ஆங்கிலத் திறனை வளர்த்துக் கொண்டார். பின்னர் அங்சூ ஆசிரியக் கல்லூரியில்(நார்மல் பல்கலைக்கழகம்) பயின்றார். 1988ல் ஆங்கிலத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். படிக்கும்போதே மாணவர் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து அங்சூ டியான்சி பல்கலைக்கழகத்தில் ஆங்கிலம் மற்றும் பன்னாட்டு வணிக விரிவுரையாளராகப் பணியாற்றினார். ஜாக் மா கல்வியில் சிறந்த மாணவராக இருக்கவில்லை. ஒருமுறை சார்லி ரோஸ் என்பவர் எடுத்த பேட்டியின் போது, ஜாக் மா நான் ஆரம்ப பள்ளித் தேர்வில் 2 முறை தோல்வியடைந்தேன், நடுநிலைப் பள்ளித் தேர்வில் 3 முறை தோல்வியடைந்தேன், கல்லூரி நுழைவுத் தேர்வில் 2 முறை தோல்வியடைந்தேன் பிறகுதான் பட்டம் பெற்றேன்” என்று தெரிவித்தார்.
ஜாக் மா கல்வி கற்றலில் மிகுந்த போராட்டத்தை சந்தித்தார். குறிப்பாக இளமை காலத்தில் பள்ளிப் படிப்பில் மீண்டும் மீண்டும் தோல்வியடைந்தார். எனினும், அவர் தனக்கு தீவிர ஆர்வமிருக்கும் (passionate) விஷயங்களில் சிறந்து விளங்கினார். உதாரணத்திற்கு ஆங்கிலத்தை கற்றுக்கொண்டிருந்தார். கல்லூரி நுழைவுத் தேர்வில் கணிதத்தில் 120 மதிப்பெண்ணுக்கு 1 மதிப்பெண் மட்டுமே எடுத்தவர். தேர்வில் தோல்வியடைவது என்பது ஒரு வகை, ஆனால் நுழைவுத் தேர்வில் கணிதத்தில் 1 சதவீதம் மட்டுமே எடுப்பது என்பது தோல்வியையைவிட வேறுவிதமான வீழ்ச்சி. அந்த நாட்களில் ஜாக் மா கணித பாடத்தில் (mathematics) மிகவும் போராடினார். நான் கணக்கில் சிறந்தவனல்ல, மேலாண்மை கற்றவனுமில்லை, இன்றும் என்னால் கணக்கியல் அறிக்கைகளை படிக்க இயலாது என்று ஒருமுறை கூறினார். பில்லியனர் (billionaire) ஆவதற்கு கணக்கில் சிறந்தவராக இருக்கவேண்டும் என்பதை மாற்றியவர்.
இன்னும் சுவாரசியமான விஷயம் என்னவென்றால், உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனத்தை நிறுவிய ஜாக் மா (jack Ma) இளமைப்பருவத்தில் கணினி என்ன வார்த்தையை கூட கேட்காதவர். 1980 ஆண்டில் Hangzhou Normal பல்கலைக்கழகத்தில் பயின்று அவர் ஆங்கிலத்தில் பட்டம் பெற்றார். நான் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் 10 முறை விண்ணப்பித்தேன், விண்ணப்பித்த 10 முறையும் நிராகரிக்கப்பட்டேன். ஆனால் என்றாவது ஒரு நாள் நான் அங்கு மாணவர்களுக்கு கற்றுக்கொடுப்பேன் என்று எனக்குள் கூறிக்கொள்வேன்”. இந்த புறக்கணிப்புகள் ஒருபோதிலும் அவரை பின்னடையச் செய்ததில்லை. ஜாக் மா பட்டம் பெற்றப் பின் 30 வெவ்வேறு வேலைகளுக்கு விண்ணப்பித்தார், விண்ணப்பித்த 30 வேலைக்கும் நிராகரிக்கப்பட்டார். அவர் ஒருமுறை போலீஸ் அதிகாரி வேலைக்கும் அணுகினார், “நீங்கள் சிறந்தவர் இல்லை (You’re no good) ” என்று காரணம் கூறப்பட்டு அதிலும் புறக்கணிக்கப்பட்டார்.
KFC-யில் நிறுவனத்தில் வேலைக்கு விண்ணப்பித்த 24 பேரில் 23 பேர் தேர்தெடுக்கப்பட்டனர். ஒரே ஒருவர் மட்டுமே நிராகரிக்கப்பட்டார். அந்த ஒருவர் ஜாக் மா ஆவார். அவர் நிராகரிக்கப்பட்டதற்கான காரணம் உயரம் குறைவானவர் மற்றும் நல்ல தோற்றப் பொலிவு கொண்டிருக்காதவர் என்பதற்காக. இந்த புறக்கணிப்புகள் யாவும் அவரின் தன்னம்பிக்கையையும், உறுதியையும் ஒருபோதும் குறைத்ததில்லை. மா முதலில் தமது அமெரிக்க நண்பர்களின் உதவியுடன் சீன நிறுவனங்களுக்கு வலைத்தளங்கள் உருவாக்கலானார். 1995ல் மா சீன யெல்லோப்பேஜசு என்ற இணையதளத்தை நிறுவினார். இதுவே சீனாவின் முதல் இணையவழி நிறுவனமாக பரவலாக நம்பப்படுகிறது. 1998 முதல் 1999 வரை சீன பன்னாட்டு மின்னணுவியல் வணிக மையம் என்ற தகவல்தொழினுட்ப நிறுவனத்தின் தலைவராக பொறுப்பேற்றார். இது அரசுத்துறையில் வெளிநாட்டு வணிகம் மற்றும் பொருளியல் ஒத்துழைப்பு அமைச்சரகத்தின் கீழ் இயங்கியது.
1999ல் சொந்தமாக அலிபாபாவை நிறுவினார். சீனாவில் இயங்கிய வணிகரிடை சந்தைக்கடையான இது 240 நாடுகளிலும் ஆட்சிப்பகுதிகளிலும் இருந்த 79 மில்லியன் உறுப்பினர்களைக் கொண்டதாக தற்போது வளர்ந்துள்ளது. செப்டம்பர் 2014ல் தனது பங்குகளை விற்பனை செய்து $20 பில்லியன் பணமெழுப்ப ஆரம்ப பொது விடுப்புகள் அறிக்கையை வெளியிட்டது. மா தற்போது அலிபாபா குழுமத்தின் செயல் தலைவராக உள்ளார். இக்குழுமத்தில் Alibaba.com, டாவோபாவோ சந்தையிடம், இட்டிமால், இடாவோ, அலிபாபா மேகக் கணிமை, யுகுசுவான், 1688.com, Aliexpress.com, அலிப்பே என்ற முதன்மையான ஒன்பது நிறுவனங்கள் உள்ளடங்கியுள்ளன.
நவம்பர் 2012ல் அலிபாபாவின் இணைய பரிவர்த்தனைகள் ஒரு டிரில்லியன் யுவானாக இருந்தது. இதனால் மா “டிரில்லியன் ஹூ” எனப்படுகிறார். சீனமொழியில் “டிரில்லியன் யுவான் மார்கிசு” எனப் பொருள்படும். ஜாக் மா சாங் யிங்கை மணந்துள்ளார்.இவர்களுக்கு ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனர். ஜாக் மா சீன தொழில் முனைவர் ஆவார். இவர் புகழ்பெற்ற இணையவழி வணிகத்தளங்களின் குழுமமான அலிபாபா குழுமத்தின் செயல் தலைவராவார். ஃபோர்ப்ஸ் இதழின் முகப்புப் பக்கத்தில் இடம் பெற்ற முதல் சீன நாட்டில் வாழும் சீனராவார்.
Source By: Wikipedia, Tamilentrepreneur.
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மின்காந்த அலைகளின் துகள்தன்மையை விளக்கும் காம்டன் விளைவு கண்டுபிடிக்கப்பட்டதற்கு நோபல் பரிசு வென்ற, ஆர்தர் ஹோலி காம்டன் பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 10, 1892).
by ஆசிரியர்
written by ஆசிரியர்
ஆர்தர் ஹோலி காம்டன் (Arthur Holly Compton) செப்டம்பர் 10, 1892ல் உவூற்றர், ஒகியோ, அமெரிக்காவில் பிறந்தார். தனது ஆரம்பக்கல்வியை முடித்த பிறகு, கல்லூரியில் பயின்று 1913 இல் இளங்கலை அறிவியல் பட்டம் பெற்றார், அவர் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டப்படிப்பை 1914 இல் பெற்றார். 1916ல் முனைவர் பட்டம் பெற்றார். பிரின்ஸ்டனில் அவரது ஆரம்ப நாட்களில், காம்டன் பூமியின் சுழற்சியை நிரூபிக்க ஒரு நேர்த்தியான முறையைத் திட்டமிட்டார். ஆனால் அவர் விரைவில் எக்ஸ்-ரேஸ் துறையில் தனது ஆய்வைத் தொடங்கினார். அவர் எலக்ட்ரான்கள் மற்றும் அணுக்களின் ஏற்பாட்டைப் படிப்பதற்கான ஒரு கருவியாக படிகங்களிலிருந்து எக்ஸ்-ரே பிரதிபலிப்பு தீவிரத்தின் கோட்பாட்டை உருவாக்கியது. மேலும் 1918 ஆம் ஆண்டில் அவர் எக்ஸ்-ரே சிதறலை ஆய்வு செய்தார்.
1922 ஆம் ஆண்டில், எக்ஸ்ரே கதிர்வீச்சின் அதிகரிப்பு கண்டுபிடிக்கப்பட்டதற்கு, இலவச எலக்ட்ரான்கள் (Free Electron) மூலம் நிகழும் கதிர்வீச்சின் சிதறல் காரணமாக, சிதறிய குவாண்டா அசல் கற்றைக் கோட்டை விட குறைவான ஆற்றலைக் கொண்டிருப்பதை இது குறிக்கிறது. இந்த விளைவை, இப்போது “காம்டன் விளைவு” என அழைக்கப்படும். இது மின்காந்த கதிர்வீச்சின் துகள் கருத்தை தெளிவாக விளக்குகிறது. அதன் பிறகு சி.டி.ஆர்.வில்சன், அவரது கிளவுட் சேம்பரில் மறுபடியும் எலக்ட்ரான்களின் தடங்கள் இருப்பதைக் காட்ட முடியும். இந்த நிகழ்வின் யதார்த்தத்தின் மற்றொரு நிரூபணம் தற்செயலான முறை (காம்டன் மற்றும் ஏ.வி. சைமன் ஆகியோரால் உருவாக்கப்பட்டது. மேலும் ஜெர்மனியில் டபிள்யூ.போடே மற்றும் ஹெச்.ஜெய்கர் ஆகியோரால் உருவாக்கப்பட்டது.
காம்ப்டன் சிதறலும், எக்ஸ்ரே பொருளால் சிதறடிக்கப்படும்போது, எக்ஸ்ரேயை விட அலைநீளம் நீளமான பக்கத்திற்கு மாற்றப்படும் ஒரு நிகழ்வு உள்ளது. கூடுதலாக நிகழ்வு எக்ஸ்ரே போன்ற அதே அலைநீளத்தைக் கொண்டிருக்கும். 1923 ஆம் ஆண்டில் ஏ.எச். காம்ப்டன் ஒரு ஃபோட்டான் கருதுகோளை பயன்படுத்தி பொறிமுறையைக் கண்டுபிடித்து அதன் வலுவான சோதனை அடிப்படையில் கொடுத்தார். அதாவது, எக்ஸ்ரேயின் ஃபோட்டான் பொருளில் உள்ள எலக்ட்ரானுடன் மோதுகையில், எலக்ட்ரான் ஃபோட்டானின் ஆற்றலின் ஒரு பகுதியைப் பெற்று அணுவிலிருந்து வெளியேறுகிறது (எலக்ட்ரான் மீண்டும்) மற்றும் ஃபோட்டான் குறைந்து வரும் ஆற்றலால் குறைகிறது (அலைநீளம் அதிகரிக்கிறது). எக்ஸ்-கதிர்கள் ஒரு பொருளில் நிகழ்ந்தால், தாம்சன் சிதறல் அலைநீளத்தின் மாற்றத்துடன் சேர்ந்து காம்ப்டன் சிதறலுக்கும் கூடுதலாக நிகழ்கிறது. ஆனால் அலைநீளம் நீளமாகும்போது, தாம்சன் சிதறல் பெரிதாகிறது.
காம்ப்டன் இரண்டாம் உலகப் போரின்போது முதலாவது அணுக்கரு ஆயுதங்களைத் தயாரிப்பதில் ஈடுபட்ட மன்காட்டன் குழுவில் பெரும் பங்காற்றினார். 1942ல் இவர் உலோகவியல் ஆய்வுகூடத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். யுரேனியத்தை புளூட்டோனியமாக மாற்றும் அணுக்கரு உலைகள் தயாரிப்பில் இவ்வாய்வுகூடம் முக்கிய பங்களிப்பு செய்தது. காம்ப்டன் 1945ல் ஜப்பானுக்கு எதிராக அணுகுண்டு பயன்படுத்துவதற்கு ஒப்புதல் அளிக்கும் குழுவில் இருந்தார். 1945 முதல் 1953 வரை செயிண்ட் லூயிஸில் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் செயலாளராக பணியாற்றினார். மின்காந்த அலைகளின் துகள்தன்மையை விளக்கும் இவருடைய கண்டுபிடிப்பான காம்ப்டன் விளைவிற்காக 1927ல் இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றார். மட்டூச்சி பதக்கம்(1930), பிராங்கிளின் பதக்கம்1940), இயூசு பதக்கம்(1940), போன்ற பதக்கங்களை பெற்றார்.
நோபல் பரிசு வென்ற, அமெரிக்க இயற்பியலாளர் ஆர்தர் ஹோலி காம்டன் மார்ச் 15, 1962ல், பெருக்கலி, கலிபோர்நியா, அமெரிக்காவில் இவ்வுலகை விட்டு பிரிந்தார். சந்திரனில் உள்ள காம்ப்டன் பள்ளம் காம்ப்டன் மற்றும் அவரது சகோதரர் கார்லுக்காக பெயரிடப்பட்டது. செயின்ட் லூயிஸில் உள்ள வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் ஆராய்ச்சி கட்டிடம் அவரது நினைவாக பெயரிடப்பட்டது. நாசாவின் காம்ப்டன் காமா ரே ஆய்வகம் காம்ப்டனின் நினைவாக பெயரிடப்பட்டது. காம்ப்டன் விளைவு காமா கதிர் கண்டறிதல் கருவிகளுக்கு மையமாக உள்ளது.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மாணவர்கள் நாட்டையும் சமுதாயத்தையும் முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்ல உறுதிகொள்ள வேண்டும்: வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேச்சு:
by ஆசிரியர்
written by ஆசிரியர்
மதுரை: நாடார் மஹாஜன சங்கம் வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில் 33வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள கங்காராம் துரைராஜ் கலையரங்கில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு, வந்தவர்களை கல்லூரி முதல்வர் முனைவர் இராஜேந்திரன் வரவேற்புரையாற்றிட, கல்லூரியின் செயலாளர்& தாளாளர் சுந்தர் தொடங்கி வைத்தார். சிறப்பு விருந்தினராக, தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத்துறை மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன், கலந்துகொண்டு, “கல்வி மற்றும் தொழில் மூலம் மாணவர்கள் முன்னேற்றமடைய இச்சமூகம் சிறப்பாக செயலாற்றி வருகிறது. இன்றைய இளைய தலைமுறையினர் தம் சொந்த உழைப்பின் மூலம் உலக அளவில் முன்னேற்றமடைய வேண்டும். இக்கல்வி நிறுவனமானது கிராமப்புற மாணவர்கள் கல்வி பெற ஊக்குவித்து மேம்படுத்துவதென்பது பாராட்டுதலுக்குரியது என்றும், கடந்த ஆண்டுகளில் டிசிஎஸ் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் கல்லூரி வளாக நேர்காணல் மூலம் வேலைவாய்ப்புக்களை வழங்கியும், விளையாட்டுப்போட்டிகளிலும் பங்கேற்கச்செய்ய ஊக்குவித்து வருவருதென்பது பெருமைக்குரியது என்றும் கூறினார். மாணவர்கள் பட்டம் பெறுவது மட்டும் நிலையான ஆரம்பமோ முடிவோ அல்ல. ஒவ்வொரு மாணவனும் தம் சமுதாயத்தில் தோல்வியைக் கண்டு சோர்ந்து விடாது சமாளித்து வாழ்வில் புதிய தனித்திறமைகளை வளர்த்து மேம்பட வேண்டும். இதில், ஆசிரியர்களின் தியாகமும் பணியும் சிறப்புக்குரியதாக உள்ளது. மாணவர்கள் நாட்டையும் சமூகத்தையும் முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்ல உறுதிகொள்ள வேண்டும்” என்றும் கூறி பட்டம் பெற வந்துள்ள மாணவர்கள் மற்றும் அவர்தம் பெற்றோர்களையும் வாழ்த்தி சிறப்புரையாற்றினார்.
இளநிலை மற்றும் முதுநிலை பாடப்பிரிவுகளில், மாணவர்கள் 543, மாணவிகள் 362 என மொத்தம் 905 பட்டதாரிகளுக்குப் பட்டம் வழங்கினார்.
முன்னதாக, கல்லூரியில் நவீனமயமாக்கப்பட்ட கணினி அறிவியல் துறை ஆய்வகத்தை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன், நவீனமயமாக்கப்பட்ட வேதியியல் துறை ஆய்வகத்தை திண்டுக்கல், சோலை நாடார் நினைவு மேல்நிலைப் பள்ளியின் தாளாளர் முருகேசன், நிர்வாகிகள் அறையை விருதுநகர், இதயம் குழுமத்தின் சேர்மன் ‘இதயம்’ முத்து, முதல்வர் அறையை விருதுநகர் ச.வெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னிக் கல்லூரியின் புரவலர் குறள் அரசன் மற்றும் செந்தில்குமார் நாடார் விடுதியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள சமையற் கூடத்தை பெங்களுர், ரமேஷ் எக்ஸ்போர்ட்ஸ் பி. லிட்.-ன் சேர்மன் ரமேஷ்ராஜா திறந்து வைத்தனர்.
இப்பட்டமளிப்பு விழாவில், கல்லூரியின் துணைத் தலைவர் பொன்னுச்சாமி, பொருளாளர் நல்லதம்பி, நாடார் மஹாஜன சங்கம் பொதுச் செயலாளர் கரிக்கோல்ராஜ், துணை முதல்வர் முனைவர் செல்வமலர், சுயநிதிப்பிரிவு இயக்குநர் முனைவர் ஸ்ரீதர் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு சிறப்பு செய்தனர். பட்டமளிப்பு விழா ஒருங்கிணைப்பாளர் முனைவர் மாதவன் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஜெகநாதன் ஆகியோர் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
விருதுநகர் மாவட்டத்தில், பயிற்சி முடிந்த துணை தாசில்தார்களுக்கு பணியிடம் ஒதுக்கீடு… ஆட்சியர் உத்தரவு…..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் துணை தாசில்தார்களுக்கு காவல்துறை பயிற்சிகள் நடைபெற்று முடிந்தது. பயிற்சிகள் முடிந்த நிலையில், துணை தாசில்தார்களுக்கு பணியிடங்களை ஒதுக்கி மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, அருப்புக்கோட்டை ஆர்.டி.ஓ. அலுவலக தலைமை உதவியாளர் இந்திரா, ஆட்சியர் அலுவலக சமூக பாதுகாப்பு திட்ட துணை தாசில்தாராகவும், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலகத்தில் பணிபுரிந்த சோனையன், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலக பறக்கும்படை துணை தாசில்தாராகவும், வத்திராயிருப்பு மண்டல துணை தாசில்தார் சசிகுமார் அதே பணியிடத்திலும், திருவில்லிபுத்தூர் மண்டல துணை தாசில்தார் ரவிக்குமார் அதே பணியிடத்திலும், வத்திராயிருப்பு வட்ட வழங்கல் அலுவலர் கலைச்செல்வி அதே பணியிடத்திலும், ஆட்சியர் அலுவலக ஜே பிரிவு தலைமை உதவியாளர் பால்ராஜ், திருச்சுழி வட்ட வழங்கல் அலுவலராகவும், திருவில்லிபுத்தூர் துணை தாசில்தார் ராஜேந்திரன் அதே பணியிடத்திலும், விருதுநகர் தாலுகா மண்டல துணை தாசில்தார் முத்துசங்கரன், திருவில்லிபுத்தூர் வட்ட வழங்கல் அலுவலராகவும், திருவில்லிபுத்தூர் வட்ட வழங்கல் அலுவலர் பாலகிருஷ்ணன், மாவட்ட ஆய அலுவலக கண்காணிப்பாளராகவும், திருச்சுழி வட்ட வழங்கல் அலுவலர் தேவமிர்தம், அருப்புக்கோட்டை ஆர்.டி.ஓ. அலுவலக தலைமை உதவியாளராகவும் நியமித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம் நீங்களும் வாங்க … மாரிமுத்து இறந்தது திரையுலகத்திற்கு பெரிய பேரதிர்ச்சி-மதுரை விமான நிலையத்தில் நடிகர் வடிவேலு பேட்டி…
by ஆசிரியர்
written by ஆசிரியர்
அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம் நீங்களும் வாங்க என கூறிய வடிவேல் . கண்ணும் கண்ணும் படத்தில் தான் அடித்து கேட்டாலும் சொல்லாதீர்கள்,கிணற்றைக் காணோம் என்ற நகைச்சுவையை இயக்குனர் மாரிமுத்து தான் உருவாக்கினார், அவர் இறந்தது திரையுலகத்திற்கு பெரிய பேரதிர்ச்சி-மதுரை விமான நிலையத்தில் நடிகர் வடிவேலு பேட்டி.
விமான மூலம் சென்னை செல்வதற்காக நடிகர் வடிவேலு மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். இதனைத் தொடர்ந்து மாரிமுத்து இறப்பு குறித்து செய்தியாளரிடம் பகிர்ந்து கொண்டார், அப்போது அவர் கூறுகையில், நடிகர் மாரிமுத்து எல்லாரும் விட்டும் சென்று விடுவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை, நேத்து தான் எனது தம்பியின் 13வது நாள் காரியம் என் தம்பியின் மறைவிற்காக எங்கள் குடும்பத்தின் அனைவரும் வீட்டில் சாமி கும்பிட்டுக் கொண்டிருந்தோம், அப்போதுதான் மாரிமுத்து இறந்த செய்தி கேள்விப்பட்டேன், நான் கூட நாடகத்தின் இறுதி கட்சியில் ஏதும் சாவது போல் நடித்து இருப்பார் என்று இன்று முதலில் நான் நம்பவில்லை கடைசியில் பார்த்தால் குரல் பின்னணி கொடுக்கும் போது மாரடைப்பால் இறந்து இருக்கிறார் என்று கேள்விப்பட்டவுடன் மிகவும் கஷ்டமாகிவிட்டது.
இப்படி எல்லாம் நடக்கிறது என்று ஒன்றும் புரியவில்லை, என் கூட ராஜ்கிரன் அலுவலகத்தில் இருந்து ராஜ்கிரனோடு நானும் அவரும் நெருங்கிய பழகிய ஆள் மாரிமுத்து, அவருடைய படம் தான் கண்ணும் கண்ணும் அந்தப் படத்தில் தான் அடித்து கேட்டாலும் சொல்லாதீர்கள் என்ற வசனம் வரும் அந்த நகைச்சுவையை அவர் தான் உருவாக்கினார், அதே படத்தில் கிணற்றைக் காணோம் என்ற நகைச்சுவையும் அவர்தான் உருவாக்கினார், மிகப்பெரிய சிந்தனையாளர் மனது விட்டு சிரிப்பார்.
தற்போது கூட மனைவி மற்றும் பிள்ளைகளோடு தனியார் தொலைக்காட்சிக்கு சிரித்து பேட்டி கொடுத்திருந்தார், நான் அப்போது கூட பார்த்து ரசித்துக் கொண்டிருந்தேன், இவர் இறந்தது பெரிய உலகத்திற்கு பெரிய பேரதிர்ச்சியாக அமைந்திருக்கிறது. அவருடைய மறைவுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
மாரிமுத்துவின் குடும்பத்தாருக்கு இந்த நேரத்தில் மிகவும் தைரியமாக இருக்க வேண்டும் உங்களுக்கு ஆறுதல் சொல்ல எங்கள் யாராலும் முடியாது. அந்த மன தைரியம் வருவதற்கு நான் ஆண்டவரிடம் வேண்டிக் கொள்கிறேன்.
*நடிகர் விஜய் அரசியல் வருவது குறித்த கேள்விக்கு*
வரலாம், திறந்த கதவு தானே உள்ளது, எல்லோருமே வரலாம்.. நீங்களும் வரலாம் என்று தெரிவித்தார்.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பரமக்குடி இமானுவேல் சேகரன் நினைவேந்தல்: செப்.11ல் போக்குவரத்து மாற்றம் – எஸ்பி உத்தரவு..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
இராமநாதபுரம், செப்.9- இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகரில் 11.9.2023 அன்று இமானுவேல் சேகரன் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் பொருட்டும் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும் அஞ்சலி செலுத்த வருவோரின் பாதுகாப்பு, நலன் கருதி அஞ்சலி செலுத்த வருபவர்கள் மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தல்களை கடைபிடித்து காவல்துறைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெ.தங்கதுரை கேட்டுக்கொண்டுள்ளார்.
ராமநாதபுரம் மற்றும் பிற மாவட்டங்களிலிருந்து அஞ்சலி செலுத்த வருவோர் சொந்த வாகனங்களில் மட்டுமே வர அனுமதிக்கப்படுகிறது. வாடகை வாகனங்கள், திறந்த வெளி வாகனங்கள், இரு சக்கர வாகனங்கள், டிராக்டர், சரக்கு வாகனம், சைக்கிள் போன்ற வாகனங்களில் வர அனுமதி இல்லை,
மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற்று அஞ்சலி செலுத்த வரும் தலைவர்கள் அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் மட்டுமே வந்து செல்ல வேண்டும். பிற மாவட்டங்களிலிருந்து சொந்த வாகனங்களில் வருவோர் அந்தந்த மாவட்டங்களில் உரிய அனுமதி பெற்று வர வேண்டும்.சொந்த வாகனங்களில் செல்வோர் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே நினைவிடம் வந்து செல்ல வேண்டும். வாகனங்களில் ஒலிபெருக்கி பயன்படுத்தக்கூடாது. வாகனங்களின் மேற்கூரையில் கண்டிப்பாக பயணம் செய்யக்கூடாது. திறந்த நிலையில் உள்ள வாகனங்களில் பயணம் செய்யக்கூடாது. வரும் வழித்தடங்களில் பட்டாசு வெடிப்பதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். காவல்துறையினரால் வரையறுக்கப்பட்ட அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே சென்றுவரவேண்டும். எக்காரணம் கொண்டும் தடைசெய்யப்பட்ட வழித்தடங்களில் செல்லக்கூடாது. வாகனங்களில் வரும்போது கோஷம் எழுப்பாமலும், பிரச்னைகளை தூண்டும்
வகையில் வாசகங்கள் எழுதப்பட்ட பேனர் பயன்படுத்தக்கூடாது. வாகனங்களில் வரும்பொழுது வரும் வழியில் போக்குவரத்து இடையூறு செய்யும் வகையில் வாகனங்களை கண்ட இடங்களில் நிறுத்தக்கூடாது.ஒலிபெருக்கி வைத்தல், வெடி போடுதல், சமுதாய கொடி ஏற்றுதல், கலை நிகழ்ச்சிகள் நடத்துதல், விளையாட்டு போட்டிகள் நடத்துதல், ஜோதி ஓட்டம், முளைப்பாரி எடுத்தல், பால்குடம் எடுத்தல், அலங்கார ஊர்தி அணிவகுப்பு, மாட்டு வண்டியில் வருதல் அனுமதி இல்லை. உயர் நீதிமன்ற உத்தரவுப்படி ப்ளக்ஸ் போர்டுகள், பேனர்கள் வைப்பதை தவிர்க்க வேண்டும்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் 161 வழித்தடங்கள் தடை செய்யப்பட்ட வழித்தடங்களாக அறியப்பட்டுள்ளன. அவ்வழித்தடங்களில் அஞ்சலி செலுத்த வருவோரின் வாகனங்கள் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளன. 137 பகுதிகள் பதற்றம் நிறைந்த பகுதிகளாவும் அறியப்பட்டுள்ளன. மாவட்டம் முழுவதும் 42 காவல் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு, அனைத்திலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டள்ளன. பரமக்குடி நகரில் பாதுகாப்பு பணியை கண்காணிக்கவும், விதிகளை மீறுவோர்மீது நடவடிக்கை எடுக்கும் பொருட்டும் 115 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பரமக்குடி நகர் முழுவதும் ஆளில்லா விமானம் மூலம் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.
இவ்வாண்டு பாதுகாப்பு பணிக்கு என திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு, 22 செக்டார்களாகப் பிரிக்கப்பட்டு 25 காவல் கண்காணிப்பாளர்கள், 31 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், 71 காவல் துணை கண்காணிப்பாளர்கள், 124 காவல் ஆய்வாளர்கள், 372 சார்பு ஆய்வாளர்கள், 3 844 காவல் ஆளிநர்கள், தமிழ்நாடு சிறப்புக் காவல் படையைச் சேர்ந்த 720 காவலர்கள், 340 போக்குவரத்துக் காவலர்கள், இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 38 காவல் ஆய்வாளர்கள், 248 சார்பு ஆய்வாளர்கள், 972 தாலுகா காவல் ஆளிநர்கள் மற்றும் 291 இராமநாதபுரம் ஆயுதப்படை காவல் ஆளிநர்கள் உட்பட 6,526 காவல் அதிகாரிகள், ஆளிநர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். 35 வழித்தடங்களில் 4 சக்கர வாகனங்களிலும், 57 வழித்தடங்களில் இரு சக்கர வாகனங்களிலும் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபடஉள்ளனர்.
மாவட்டத்தின் முக்கிய பகுதிகளில் சார்ஆட்சியர், கோட்டாட்சியர் பதவியில் 5 நிர்வாகத்துறை நடுவர்கள், வட்டாட்சியர், துணை வட்டாட்சியர் பதவியில் 56 நிர்வாகத்துறை நடுவர்கள், வருவாய்த்துறை சார்பில் நியமிக்கப்பட்டுள்னர். மாவட்டத்தில் இருந்து எந்த ஒரு அரசு, தனியார் பேருந்துகள் பரமக்குடி நகர் பகுதிக்குள் நுழைய அனுமதியில்லை. ராமநாதபுரத்தில் இருந்து மதுரை செல்லும் அரசு, தனியார் பயணிகள் பேருந்துகளை ராமநாதபுரம், தேவிபட்டினம், ஆர்.எஎஸ்.மங்கலம், திருவாடானை, சருகனி, காளையார்கோவில், சிவகங்கை, பூவந்தி வழியாக மாற்றுப்பாதையில் மதுரைக்கு இயக்க வேண்டும் மதுரையில் இருந்து ராமேஸ்வரம் வரும் அரசு, தனியார் பேருந்துகள் இதே மார்க்கத்தில் இயக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.
பரமக்குடிக்கு அனுமதியின்றி வரும் 4 சக்கரம், இரண்டு சக்கர வாகனங்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வழக்கு பதிவு செய்து வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். உத்தரவு படி பொதுமக்கள், சமுதாய அமைப்பினர் காவல்துறைக்கு ஒத்துழைப்பு தருமாறு ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெ.தங்கதுரை கேட்டு கொண்டுள்ளார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கணக்கப்பிள்ளை வலசை ஊராட்சியில் மகளிர் கூட்டமைப்பின் தொழில் தொகுப்புகள் மூன்றாம் ஆண்டு துவக்க விழா..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
தென்காசி மாவட்டம், கணக்கப்பிள்ளை வலசை ஊராட்சியில் மகளிர் கூட்டமைப்பின் தொழில் தொகுப்புகள் மூன்றாம் ஆண்டு துவக்க விழா நிகழ்ச்சி நடந்தது. தென்காசி மாவட்டம், தென்காசி ஊராட்சி ஒன்றியம், கணக்கப்பிள்ளை வலசை ஊராட்சியில் ஊராட்சி அளவிலான மகளிர் கூட்டமைப்பு கடந்த 7 ஆண்டுகளாக தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்தச் சங்கத்தில் கணக்கப்பிள்ளை வலசை ஊராட்சிக்கு உட்பட்ட கணக்கப்பிள்ளை வலசை, க.மீனாட்சிபுரம், க.தேன் பொத்தை, க.இராஜபுரம் காலனி, க.திருமலாபுரம் ஆகிய குக்கிரமங்களைச் சார்ந்த பெண்கள் உறுப்பினர்களாகவும், கணக்கப்பிள்ளை வலசை இந்திரா காலனி பகுதியைச் சார்ந்த காளியம்மாள் பேச்சிமுத்து கணக்காளராகவும் செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில், கணக்கப்பிள்ளை வலசை ஊராட்சி அளவிலான கூட்டமைப்பின் சார்பில் கணக்கப்பிள்ளை வலசை பகுதியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வரும் மதிமகள் தையல் அழகு மற்றும் பாத்திர வாடகை நிலையத்தின் மூன்றாவது ஆண்டு துவக்க விழா நேற்று நடைபெற்றது. கணக்கப்பிள்ளை வலசை ஊராட்சி அளவிலான குழு கூட்டமைப்பு மற்றும் கிராம வறுமை ஒழிப்பு சங்க கூட்ட அரங்கில் நடைபெற்ற மூன்றாவது ஆண்டு துவக்க விழா நிகழ்ச்சிக்கு தென்காசி மாவட்ட உதவி திட்ட அலுவலர் சிவக்குமார் தலைமை தாங்கினார். தென்காசி வட்டார இயக்க மேலாளர் எஸ். சுரேஷ் முன்னிலை வகித்தார். கணக்கப்பிள்ளை வலசை ஊராட்சி அளவிலான குழு கூட்டமைப்பின் கணக்காளர் காளியம்மாள் பேச்சிமுத்து அனைவரையும் வரவேற்று பேசினார்.
அதனைத் தொடர்ந்து வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் சரோஜா, மாரியம்மாள், சௌந்தர்யா, கற்பக சீதா, ஆகியோர் ஒன்றிய, மாநில அரசுகள் மூலம் மகளிர் முன்னேற்றத்திற்காக செயல்படுத்தப்படும் திட்டங்களையும், அதனை மகளிர் சுய உதவிக் குழுக்கள் பெரும் வழிமுறைகளையும் விரிவாகவும் விளக்கமாகவும் எடுத்துக் கூறினார்கள். இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பின் உறுப்பினர்கள் தமிழ்ச் செல்வி, அம்பிகா, மணி, அன்னலட்சுமி, பிரசன்னா, சாந்தி, சந்தனமாரி, மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பின் செயலாளர் சுசிலா அனைவருக்கும் நன்றி கூறினார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த விண்ணவாம்பட்டு பகுதியில் அமைந்துள்ள அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அலுவலகத்தில் அதிமுக-வில் மாற்றுக் கட்சியினர் நூற்றுக்கும் மேற்ப்பட்டவர்கள் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது இந்இந்நிகழ்ச்சி கலச பாக்கத்தின் முன்னாள் எம்எல்ஏ-வும் அதிமுக கிழக்கு ஒன்றிய செயலாளருமான பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது சிறப்பு அழைப்பாளராக அதிமுக வடக்கு மாவட்ட செயலாளர் தூசி கே மோகன் பங்கேற்று சிறப்புரையாற்றினார் பின்னர் மாற்றுக் கட்சியிலிருந்து நூற்றுக்கு மேற்பட்டவர்கள் அதிமுகவில் இணைந்த நிர்வாகிகளுக்கு சால்வை அனுவித்து இனிப்புகளை வழங்கி அனைவரையும் வரவேற்றார் இந்நிகழ்ச்சியில் கழக எம்ஜிஆர் அணி துணை செயலாளர் ஜாகிர் உசேன் அதிமுக ஒன்றிய செயலாளர் பொய்யாமொழி, வழக்கறிஞர் ரமேஷ், மூர்த்தி ,அன்பழகன், பேரூராட்சி செயலாளர் வக்கீல் ராதா மாவட்ட பிரதிநிதி கீழ்பாலூர் ஏழுமலை உள்ளிட்ட அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகளும் தொண்டர்களும் மற்றும் மூத்த முன்னோடிகளும் பலர் கலந்து கொண்டனர்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரம், செப்.9- இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி, ஜூனியர் ரெட் கிராஸ் சார்பில் சித்தார்கோட்டை முஹமதியா மேல் நிலைப்பள்ளியில் உலக முதலுதவி தின கருத்தரங்கு நடந்தது. தாளாளர் ஹாஜா மொயினுதீன் தலைமை வகித்தார்.
தலைமை ஆசிரியர் ஜவஹர் அலி வரவேற்றார். உதவி தலைமை ஆசிரியர்கள் ஷாஜகான் தலைமை, சுரேஷ் குமார் முன்னிலை வகித்தனர். ஜூனியர் ரெட் கிராஸ் முதலுதவி மாநில பயிற்றுநர் அலெக்ஸ் முதலுதவி குறித்து மாணவ, மாணவியருக்கு செயல்விளக்கம் அளித்தார். ரெட் கிராஸ் சொசைட்ட மாவட்ட செயலாளர் ரமேஷ், பொருளாளர் குணசேகரன், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் ஜீவா, ராஜன், ரெட் கிராஸ் பயிற்றுநர் ஜீவா ஆகியோர் பேசினர். உடற்கல்வி ஆசிரியர் அஜீஸ் கனி ஏற்பாடு செய்தார். 350 மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
அலங்காநல்லூரில் ராகுல்காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை மேற்கொண்ட நடை பயணத்தின் முதலாம் ஆண்டு வெற்றி விழிப்புணர்வு பேரணி ..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
அலங்காநல்லூர்,செப்.09- அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல்காந்தி அவர்கள் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ‘பாரத் ஜோடோ யாத்ரா’ (பாரதமே ஒன்றிணைவோம்) என்ற பெயரில் மேற்கொண்ட நடைபயணத்தின் முதலாம் ஆண்டு வெற்றி விழிப்புணர்வு பேரணி, மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கேட்டுக் கடையிலிருந்து அம்பேத்கர் பேருந்து நிலையம் வரை அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாவட்டத் தலைவர் ஆலத்தூர் ரவிச்சந்திரன் தலைமையிலும், வட்டாரத் தலைவர் சுப்பாராயலு ஏற்பாட்டில் நடைபெற்றது. நடைபயணத்தின் போது, ராகுல்காந்தி, சோனியாகாந்தி, பிரியங்காகாந்தி, வாழ்க வாழ்க என, கோஷம் போட்ட நிர்வாகிகள் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்க தயாராகி விட்டனர்.
வரும் 2024- ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியாவின் பிரதமராக ராகுல் காந்தி வருவார் என, கோஷம் போட்டனர். தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிராக கோஷம் போட்டனர்.
காங்கிரஸ் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட எண்ணற்ற திட்டங்களை கிடப்பில் போட்டுவிட்டது இந்த பாஜக அரசு, நீட் தேர்வு மாணவ மாணவிகள் அதிக அளவில் தற்கொலை செய்து கொள்கின்றனர். ஆகையால், இந்த நீட் தேர்வு நமது தமிழ்நாட்டுக்கு தேவையில்லை என்று தெரிவித்தும் தமிழக அரசு எத்தனையோ முறை ரத்து செய்யச் சொல்லியும் செய்யவில்லை சிலிண்டர் விலை பெட்ரோல் டீசல் மற்றும் அத்தியாசிய பொருள்களின் விலையையும் ஏற்றி விட்டதாக கூறி பாஜக அரசுக்கு எதிராக ஒன்றிய அரசே பதவி விலகு பதவி விலகு என கோஷம் எழுப்பினர்.
இதில், வட்டாரத் தலைவர்கள் காந்திஜி, சண்முகசுந்தரம், பழனிவேல், குருநாதன், சிவராமன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் ஜெயமணி,திலகராஜ், முருகன், துணை அமைப்பு மாவட்டத் தலைவர்கள் செல்லப்பா, சரவணன், சோனைமுத்து, மனித உரிமை மாவட்டத் தலைவர் சரந்தாங்கிமுத்து, நகரத் தலைவர்கள் வைரமணி, சசிகுமார்,முத்துப்பாண்டி, முருகானந்தம், வழக்கறிஞர்கள் பிரிவு மேலூர் துரைப்பாண்டி, வாடிப்பட்டி சண்முகசுந்தரம், நிவாஸ், இளைஞர் காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ராமசுந்தரம், மற்றும் ஆறுமுகம், நிர்வாகிகள் முன்னால் வட்டாரத் தலைவர் மலைக்கனி,மலை ராஜன்,திரவியம், பிரசன்னா, தவமணி, சதசிவம், சையது, முத்தன், கண்ணுச்சாமி, திருமேனி, விஜயா, சவுந்தரராஜன், கண்ணன், கௌதம், பாலமுருகன், சாமிநாதன், பாலமுருகன், வீராச்சாமி, ராமச்சந்திரன், மாயகிருஷ்ணன், தர்மர், லெட்சுமணன், செல்லமணி, மேலூர் சோமசுந்தரம், சக்திவேல், செல்லத்துரை உள்ளிட்ட அகில இந்திய காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை, அலங்காநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் கீதா, தலைமையில் உதவிய ஆய்வாளர் அண்ணாதுரை, சரஸ்வதி, செய்திருந்தனர்.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை ஆரப்பாளையம் டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனை நடத்திய தேசிய கண்தான விழிப்புணர்வு பேரணி..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
மதுரை ஆரப்பாளையம் பகுதியில் உலக தரம் வாய்ந்த டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனை மற்றும் அண்ணா ஆப்டோமெட்ரி கல்லுரி இணைந்து நடத்திய தேசிய கண்தான விழிப்புணர்வு பேரணியானது மருத்துவமனை வளாகத்தில் தொடங்கி பைபாஸ் சாலை வரை நடைபெற்றது.
இவ்விழாவில் தலைமை விருந்தினராக டாக்டர். பத்திரிநாராயணன் தலைமை மருத்துவ அதிகாரி பங்குபெற்று பேரணியை கொடி அசைத்து துவக்கி வைத்தார் மற்றும் இந்நிகழ்வில் , மண்டல பொது மேலாளர் ஸ்ரீனிவாசன், கிளை மேலாளர் இராஜபாண்டியன், டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனை ஊழியர்கள், அண்ணா ஆப்டோமெட்ரி கல்லுரி மாணவர்கள் 150 நபர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டு தேசிய கண்தான விழிப்புணர்வு பேரணியை சிறப்பித்தனர்….
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரையில் வீட்டின் முன் நிறுத்தி வைத்திருந்த விலை உயர்ந்த சைக்கிளை திருடிய மர்ம நபரை போலீசார் கைது செய்து விசாரணை..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
மதுரை எஸ் எஸ் காலனி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அலமேலு தெருவை சேர்ந்த கணேசன்(வயது 40) என்பவரது வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விலை உயர்ந்த பேட்டரியால் இயங்கக்கூடிய சைக்கிள் மர்ம நபரால் திருடப்பட்டது என மதுரை எஸ் எஸ் காலனி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்ததன் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது கணேசன் வீட்டில் பொருத்தி வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமரா வில் சைக்கிளை மர்ம நபர் திருடிச் செல்வது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தது. அதனை தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் கணேசன் வீட்டின் முன் இருந்த சைக்கிளை திருடி சென்றது தேனி மாவட்டம் பங்களா மேடு பகுதியைச் சேர்ந்த செய்யது அபுதாஹீர் (வயது 31) என்பது தெரியவர அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மத்திய அரசு சுங்க வரி கட்டணத்தை உயர்த்தியதை கண்டித்து மதுரை எலியார்பத்தி சுங்க சாவடியை முற்றுகையிட்ட தேமுதிக கட்சியினர்..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் ஆணைக்கிணங்க சுங்க சாவடியில் தொடர்ந்து கட்டணத்தை உயர்த்தி வரும் மத்திய அரசை கண்டித்து மதுரை தேமுதிக மாநகர தெற்கு மாவட்டம் சார்பாக மதுரை எலியார்ப்பத்தி பகுதியில் உள்ள சுங்க சாவடியை மாநகர் தெற்கு மாவட்டம் சார்பாக மாவட்ட கழக செயலாளர் முத்துப்பட்டி பா.மணிகண்டன் உயர் மட்ட குழு உறுப்பினர் பாலன் தலைமையில் மத்திய அரசை கண்டித்து கண்டன கோசங்கள் எழுப்பி 100க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது மேலும் முற்றுகை போராட்டத்தில் அவைத் தலைவர் ராமர், பொருளாளர் சரவணன்,
மாவட்ட துணைச் செயலாளர்கள் எஸ்வின். பாபு, மாணிக்கவாசகம், சின்னதாய், பொதுக்குழு உறுப்பினர் பார்த்திபன், ஜெயராமன், பகுதி கழகச் செயலாளர் மோகன், தனபால், பத்மநாபன், மாரியப்பன், லெட்சுமணன், இப்ராகிம், ஆகியோர் கலந்து கொண்டனர்….
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சாத்தூர் தனியார் மருத்துவமனையில், செவிலியருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த டாக்டர் கைது……
by ஆசிரியர்
written by ஆசிரியர்
சாத்தூர் :விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள ஒத்தையால் பகுதியைச் சேர்ந்தவர் நாகலட்சுமி (23). இவர் சாத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்த்து வருகிறார். அதே மருத்துவமனையில், ஆந்திரா மாநிலம் கர்னூல் மாவட்டம் ஜம்பாலா பகுதியைச் சேர்ந்த ரகுவீர் (39) என்பவர் குழந்தைகள் நலப்பிரிவில் சிறப்பு டாக்டராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் செவிலியர் நாகலட்சுமிக்கு, டாக்டர் ரகுவீர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மேலும் நாகலட்சுமியை தாக்கியுள்ளார். இது குறித்து செவிலியர் நாகலட்சுமி, மருத்துவமனை நிர்வாகி டாக்டர் கிருஷ்ணவேணியிடம் புகார் கூறினார். அதற்கு மருத்துவமனை நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே நாகலட்சுமி இது குறித்து சாத்தூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார், செவிலியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த டாக்டர் ரகுவீரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை: மதுரை மண்டலத்தில் டாஸ்மாக் கடைகளில் கூடுதலாக மதுவை விலக்கிவிட்ட எட்டு பேர் தற்காலிக பணிவிறக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண்மை இயக்குநர் எஸ். விசாகன், தலைமையில் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு, மதுரை மாவட்டத்தில், 15 மதுபானக்கடைகள் ஆய்வு செய்யப்பட்டதில், 6 கடைகளில், மதுபானக் கடைகளில் கூடுதலாக மதுவை விற்பனை செய்ததாக, 6 விற்பனையாளர்கள் பணி இடை நீக்கம் செய்யப்பட்டனர்.
இரண்டாவது நாளாக, 15 மதுபானக் கடைகளில், சோதனை செய்யப்பட்டு, கண்ணன், முருகேசன் ஆகிய இருவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். மதுபாட்டிலுக்கு, கூடுதலாக ரூ. 10 வசூலிக்கப்பட்டு வந்தது, ஆய்வின் போது தெரிய வந்தது. டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் ச.விசாகன், இரண்டாவது நாளாக இன்று ஆய்வு மேற்கொண்டார்.
நேற்று மேற்கோண்ட ஆய்வில், அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதலாக விலைக்கு மது பாட்டில் விற்பனை செய்த 6 நபர்கள் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்னர்.
இன்று மேலாண்மை இயக்குனர், மேற்கொண்ட ஆய்வில், அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதல் விலைக்கு மது பாட்டில் விற்பனை செய்த இரண்டு நபர்கள் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டனர் மேலும், 11 கடை பணியாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
முத்துராமலிங்கத்தேவர் அய்யாவை சின்ன வட்டத்துக்குள் அடைக்க கூடாது.-அண்ணாமலை
by ஆசிரியர்
written by ஆசிரியர்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பெருங்காமநல்லூரில் ஆங்கிலேயலரை எதிர்த்து துப்பாக்கூூட்டில் வீரமரணம் அடைந்த தியாகிகளின் நினைவிடத்தில் தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.பின் நினைவிடத்தில் அவரின் நினைவாக மரக்கன்று நட்டு வைத்தார்.பெருங்காமநல்லூர் தியாகிகள் சங்கத்தின் சார்பில் அண்ணாமலைக்கு புத்தகம் பரிசாக வழங்கப்பட்டது.
பின்பு செய்தியாளர்களிடம் பேசுகையில் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் ஆங்கிலேயரை கண்டு அனைவரும் அஞ்சி நடுங்கிய காலத்தில் அவர்களை வீரத்துடன் எதிர்த்து போரிட்ட வீரத்தியாகிகளின் நினைவிடத்தில் என் பாதம் பட வேண்டுமென்றே இங்கே வந்தேன். தென்னிந்தியாவில் நடந்த பெரிய அளவில் பேசப்படவில்லை.மக்களுக்கு தெரியவில்லை. இவர்களின் தியாகத்தைப்பற்றி சம்மந்தப்பட்ட அமைச்சர்களிடம் எடுத்துக்கூறி நினைவிடத்தில் தேசிய சின்னம் அமைக்க ஏற்பாடு செய்யப்படும்.
காலம் காலமாக நாம் பாரதம் என்றும் இந்தியா என்றும் பயன்படுத்தி வந்துள்ளோம். இந்தியா என்பது ஆங்கிலேயர்கள் கொடுத்தது. பண்டைக்கால மக்கள் பாரதம் பாரத் என்றும் பயன்படுத்தி வந்துள்ளனர்.பண்டைய இலக்கியங்களிலிருந்து பாரதம் என்றே பயன்படுத்தப்பட்;டு வந்துள்ளது. அதனால் ஜி20 மாநாட்டில் பிரதமருக்கு முன் பாரத் என வைக்கப்பட்டத்தில் தவறில்லை.
முத்துராமலிங்கத்தேவர் அய்யாவை சின்ன வட்டத்துக்குள் அடைக்க கூடாது.அவர் ஒரு தேசியச்தலைவர். தன் சொத்துக்களையே ஏழைகளுக்கு கொடுத்தவர்.அவர் போல் யாரும் வாழ்ந்ததில்லை வாழப்போவதும் இல்லை.அவருக்கு இந்திய அளவில் பெயர் இருக்குமாறு ஏதாவது செய்ய ஆசை.மதுரை விமானநிலையத்திற்கு அவர் பெயர் வைக்க வேண்டுமென்பது நியாயமான கோரிக்கைதான். ஆனால் அதையும் தாண்டி ஏதாவது பெரிதாக செய்ய வேண்டும் என்பது என் ஆசை எனக்கூறினார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரம், செப்.9- இராமநாதபுரம் மாவட்டத்தில் அடர்த்தி குறைந்த காடுகளை பசுமையாக்கும் திட்டத்தில் விதைகள் தூவும் பணி தொடக்க விழா இன்று நடந்தது. உச்சிப்புளியில் உள்ள இந்திய கடற்படை ஐஎன்எஸ் பருந்து ஹெலிகாப்டர் மூலம் விதைகள் தூவும் பணியை இந்திய கடற்படை தமிழ்நாடு, புதுச்சேரி சரக கமாண்டர் ரவிக்குமார் டிங்ரா தொடங்கி வைத்தார்.
இதில் ராமநாதபுரம் மாவட்ட கடற்கரை பகுதிகளில் ராமேஸ்வரம் பகுதிக்கு உட்பட்ட வனத்துறை பராமரிப்பில் உள்ள பாம்பன், தங்கச்சிமடம் பகுதிகளில் அடர்த்தி குறைந்த காடுகளில் பசுமையாக்கிடும் வகையில் மாவட்டத்தின் பூர்வீக மர விதைகள் வேம்பு, புளி, நாவல், புங்கன் என 5 லட்சம் விதைகள் ஹெலிகாப்டர் மூலம் தூவப்படுகிறது. வனத்துறை மூலம் கண்டறியப்பட்ட இதர பகுதிகளில் மழைக்காலம் துவங்கியதும் விதைகள் தூவப்பட்டு மரங்கள் வளர்க்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர். மாதா அமிர்தானந்தமாயி நிர்வாக அலுவலர் சுவாமி ராமகிருஷ்ணா புரி, மாவட்ட வன அலுவலர் ஹேமலதா, ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் கோபு உட்பட பலர் பங்கேற்றனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
குறு வட்டார விளையாட்டு போட்டிகள்: மண்டபம் முகாம் அரசு மேல்நிலைப் பள்ளி முதலிடம்….
by ஆசிரியர்
written by ஆசிரியர்
ராமநாதபுரம், செப்.9- ராமநாதபுரம் மாவட்ட பள்ளிக்கல்வித் துறை சார்பில் மண்டபம் குறு வட்டார அளவிலான தடகளம், குழு போட்டிகள் ராமேஸ்வரம் அரசு மேல்நிலைப்பள்ளி சார்பில் நடந்தன.
14, 17, 19 வயது பிரிவினருக்கான தடகள போட்டிகளில் மண்டபம் முகாம் அரசு மேல்நிலைப்பள்ளி
மாணவர்கள் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் பெற்றனர். 17, 19 வயது ஆடவர் கைப்பந்து ஆட்டத்தில் மண்டபம் முகாம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் முதல் இடம் பெற்று மாவட்ட போட்டி தேர்வாகினர். 14 வயதிற்குட்பட்ட ஆடவர் கோ- கோ போட்டியில் மண்டபம் முகாம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் இரண்டாம் இடம் பிடித்தனர். 51 புள்ளிகளுடன் மண்டபம் அரசு மேல்நிலைப்பள்ளி முதலிடம் பிடித்து மாவட்ட போட்டிக்கு தகுதி பெற்ற மாணவர்கள், நன்கு பயிற்சி அளித்த மண்டபம் முகாம் அரசு மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள் ரமேஷ், ஜெயசூர்யா ஆகியோரை ராமநாதபுரம் முதன்மை கல்வி அலுவலர் ரேணுகா, மாவட்ட கல்வி அலுவலர் சுதாகர், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் வசந்தி, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் தினேஷ் குமார், மண்டபம் முகாம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மகேஸ்வரன், மண்டபம் பேரூராட்சி தலைவர் ராஜா, பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் பூபதி, பள்ளி மேலாண் குழு தலைவர் சம்பத் ராஜா, சமூக ஆர்வலர் சத்தியேந்திரன். பாராட்டினர்.
ராமேஸ்வரம் அரசு மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி இயக்குனர் சசிகுமார், உடற்கல்வி ஆசிரியர் லட்சுமணன், ராஜா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் நெடுஞ்செழியன், பனைக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் சந்திரசேகர், ராமேஸ்வரம் விவேகானந்தா மெட்ரிக் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் முனியசாமி, உடற்கல்வி ஆசிரியர் ஜெரோம் வில்லியம், ஜெயக்குமார், உடற்கல்விஆசிரியர் இருதயராஜ், முத்து முருகன், கோபிலட்சுமி, அருள்ஜோன், லூர்து மேரி, கஜேந்திரன், ஜான் கிறிஸ்டோபர் தாஸ், ஆரோக்கிய லிமா, ரூபியா ஆரோக்கிய சசிரேகா, செர்லி ஜெயப்பிரியா, ஜெயசூர்யா, இளங்கோவன், ஜேசுராஜா முரளீஸ்வரன், சுரேஷ் சுபா, தமிழ்செல்வி கவிதா, மகேஷ்வரி ஆனந்த பாண்டியன், மருது, நவீன் குமார் அருள் இனிகோ, முத்தமிழ்செல்வி ஆகியோர் நடுவர்களாக பணியாற்றினர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தென்காசி மாவட்டத்தில் நாளை வட்டார கல்வி அலுவலர் தேர்வு; மாவட்ட ஆட்சியர் தகவல்..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
தென்காசி மாவட்டத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் 2023ஆம் ஆண்டு வட்டாரக் கல்வி அலுவலர் தேர்வு நாளை நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் துரை. இரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார். இது குறித்த செய்திக்குறிப்பில் தென்காசி மாவட்டத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் 2023ஆம் ஆண்டு வட்டாரக் கல்வி அலுவலர் தேர்வு 10.09.2023 (ஞாயிற்றுக் கிழமை) அன்று நடைபெறுகிறது. இத்தேர்வுக்காக தென்காசியில் உள்ள இ.சி.ஈ. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, மஞ்சம்மாள் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மற்றும் புனித மிக்கேல் மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆகிய மூன்று இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இம்மையங்களில் மொத்தம் 974 தேர்வர்கள் தேர்வு எழுதுகின்றனர். தேர்வெழுத வருகை தரும் தேர்வர்கள் அனைவரும் காலை 8.30 மணிக்கு தேர்வு மையங்களுக்கு கண்டிப்பாக வருகை தர வேண்டும். தேர்வர்கள் அனைவரும் தீவிர பரிசோதனைக்கு பிறகே தேர்வு மையங்களின் உள்ளே அனுமதிக்கப்படுவர். காலை 9.30 மணிக்கு பின்னர் வரும் தேர்வர்கள் எவரும் தேர்வு மையத்திற்கு கண்டிப்பாக அனுமதிக்கப்பட மாட்டார்கள். தேர்வர்கள் கைபேசி, மடிக்கணினி, கைக்கணினி மற்றும் கால்குலேட்டர்கள் போன்ற உபகரணங்களை தேர்வு மையங்களின் உள்ளே கொண்டு செல்ல அனுமதி கிடையாது. தேர்வில் முறைகேடுகளில் ஈடுபட்டால் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வுகளை தொடர்ந்து மூன்றாண்டுகளுக்கு எழுத தடை விதிக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் துரை. இரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.