21
இராமநாதபுரம், ஆக.29 – இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் வடக்கு கடற்கரை மேற்கு தெரு பகுதியில் வேக வைத்த நிலையில் 242 கிலோ, உயிரற்ற நிலையில் 325 கிலோ கடல் அட்டைகளை வன உயிரின தடுப்பு பிரிவு, ராமநாதபுரம், மண்டபம் கடலோர கண்காணிப்பு படையினர் கைப்பற்றினர். இது தொடர்பாக மண்டபம் இபுராஹிம் ஷா, பூமரைக்காயர், காதர், ஆகியோரை தேடி வருகின்றனர். சேது ரஸ்தா கடற்பகுதியில் பதப்படுத்திய நிலையில் 722 கிலோ கடல் அட்டைகளை பறிமுதல் செய்து இது தொடர்பாக அன்வர் சாதிக் என்பவரை தேடி வருகின்றனர்.
You must be logged in to post a comment.